Quantcast
Channel: வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்
Viewing all 110 articles
Browse latest View live

வில்லங்க ரூபம்!

$
0
0
(ஹி...ஹி இந்த வவ்வால் அடங்கவே மாட்டான் போல இருக்கே..அவ்வ்வ்)

லோகநாயகரின் வில்லங்க ரூபம் திரைப்படத்தினை பார்க்கும் வரையில் படம் பற்றி பதிவெழுத வேண்டாம் என நினைத்திருந்தேன், ஆனால் லோகநாயகர் மும்பையில் உட்கார்ந்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை எனக்கு சோதனை வந்தால் மதச்சார்பற்ற ஒரு மாநிலம், அல்லது ஒரு நாட்டினை தேடிப்போவேன் என ஒரு டகால்ட்டி பேட்டிக்கொடுத்து சும்மா கிடந்த என்னை உசுப்பிவிட்டார் எனவே தான் இப்பதிவு.

பதிவினுள் செல்லும்முன் கவனிக்கவும்,

நான் இப்பதிவில் லோகநாயகரின் செயல்பாட்டினை நடு நிலையுடனே அலசவுள்ளேன் ,அப்படியும் முன் ஜென்ம விரோதம்,வாய்க்கா வரப்பு தகராறு என கற்பிதம் செய்துக்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்காமல் ,மனமகிழ்வு தரும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட செல்லலாம், நன்றி!

திறந்த மனதுடன் விமர்சனங்களை எதிர்க்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும்.

# லோகநாயகரின் திரைப்படத்திற்கு தடை விதித்திருக்க  கூடாது என்பதே  எனது கருத்தும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுறுத்தி விடுகிறேன், இல்லை எனில் அரைகுறையாக படித்துவிட்டு சிலர் பொங்கல் வைக்க கிளம்பிவிடுவார்கள் :-))

உட்ப்பிரிவு-1:

இந்தளவுக்கு படம் வெளியிடுவதில் சிக்கலாக முதல் காரணமும் லோகநாயகரே ஆவார் என்பதையும் பதிவு செய்கிறேன்.

இனி மேற்கொண்டுப்பார்ப்போம்.

# திரைப்படம் தயாரித்து முடிந்ததும் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை  முதலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியிடம் லோகநாயகரே விற்றுள்ளார்.

//Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

அது ஏன்?

ஏன் எனில் படம் வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் வந்தால் ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்பதாலேயே,எனவே முன்னரே படத்திற்கு எதிர்ப்பு வரும் என கணித்தே லோகநாயகர் செயல்பட்டுள்ளது தெளிவாகிறது.

இப்பொழுது தமிழ்நாட்டினை மதச்சார்பு மாநிலம் என பேசும் லோகநாயகர் ,சேட்டிலைட்ஸ் உரிமம் விற்க தேடிப்போனப்போது மதச்சார்பு தன்மை எல்லாம் தெரியாமல் இருந்தாரா?

இல்லை இவர் நாத்திகம் பேசுகிறேன் என சொல்லிக்கொண்டாலும் மதச்சார்ப்பற்று உண்மையில் இருந்துள்ளாரா?

ஹேராம், உன்னைப்போல் ஒருவன், தசாவாதாரம் போன்ற படங்களை மதச்சார்ப்பற்றவர் ஏன் எடுத்திருக்க வேண்டும், தனது வணிக நோக்கத்திற்காக மதம் சார்ந்தே படங்களை எடுத்து லாபம் பார்த்தவர் , எதிர்ப்பு என்றதும் ,மதச்சார்பற்ற மாநிலம் தேடுகிறேன் என்பது முரண்நகையாகும்.

ஹே ராம் , இஸ்லாமியர்களை பெருமைப்படுத்தியது என சிலர் மேம்போக்காக சொல்லலாம், ஆனால் அதன் அடிப்படை கதை , தனக்கு கெடுதல் செய்த இஸ்லாமிய சமூகத்தினை மன்னித்து நன்மை செய்யும் சகிப்பு தன்மையுள்ள இந்து என்பதே ஆகும்.

அதாவது பெரும்பான்மை இந்துக்கள் சகிப்பு தன்மையுடன் இஸ்லாமியர்கள் செய்யும் தவறை பொறுத்துப்போகிறார்கள் என சொல்லியிருப்பார்.

உன்னைப்போல் ஒருவனில் இன்னும் கொஞ்சம் தீவிரமாக போய் , பெரும்பான்மை உள்ள சமூகத்தில் சிறும்பான்மையினர் அடங்கியிருக்க வேண்டும், ஏதேனும் வன்முறை செய்தால் பெரும்பான்மை பதிலடி கொடுத்தால் தாங்க மாட்டீர்கள் என்ற செய்தியினை திரைப்படமாக்கியிருப்பார்.

தசாவதாரம் படத்தில் பயோவார் என்ற கதைக்கு வைணவ பின்னணியே தேவையில்லை, ஆரம்பத்தில் வரும் சிலை மூழ்கடிப்பு எல்லாம் இல்லாமலே அக்கதையை சொல்ல முடியும், ஆரம்பக்காட்சிகளை கட் செய்துவிட்டு படம் பார்த்தாலும் பயோ வார் கதை தெளிவாக புரியும்.

ஆனால் தேவையில்லாமல் சைவ-வைணவ பிரச்சினையை எடுத்துக்கொண்டிருப்பார், அறிவியல் ரீதியான பயோ வார் படத்திற்கு எதற்கு வைணவ முலாம்?

இப்படி மதம் சார்ந்து படைப்புகளை உருவாக்கி ,பணம் சம்பாதித்தவர், பணம்  பண்ண துடிப்பவர், இவர் எப்படி மதச்சார்புள்ள மாநிலம் என தமிழகத்தினை குற்றம் சொல்ல முடியும்?

மதம் மட்டுமல்ல ஜாதியத்தினையும் வணிக நோக்கிற்காக அவ்வப்போது பயன்ப்படுத்திக்கொள்பவரே லோகநாயகர், தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் எல்லாம் தேவரின புகழ்ப்பாடி வியாபாரமாக்கியிருப்பார்.

லோகநாயகருக்கு தமிழகத்தில் நிலவும் ஜாதிய பிரச்சினைகள்,சண்டைகள் தெரியாதா? அப்படி தெரிந்தும் இது போல படமெடுக்க காரணம் ,சர்ச்சைகளை பயன்ப்படுத்தி படத்தினை ஓட வைக்கவே என சின்ன குழந்தையும் சொல்லும், அப்படிப்பட்டவர் என்னமோ நாத்திகன்,நடுநிலையானவன் ,ஆனால் தமிழ்நாடு மத வெறியுடன் உள்ள மதச்சார்பு மாநிலமாகிவிட்டது என சொல்வதெல்லாம் உலக மகா காமெடி.

இவர் நாத்திகம் பேசுவதெல்லாம் சுயலாபத்திற்காக தான், தன் மீதுள்ள பிராமண சாயம் போகவும், தன்னை சாம்பார் நடிகர் என சொல்லிவிடாமல் இருக்கவுமே புரட்சிகர நாத்திக வேடம் போட்டுள்ளார். ஆனால் அடிப்படையில் உண்மையான நாத்திக உணர்வில்லாமையால் அவ்வப்போது அவரது மதவாத சுய ரூபம் திரைப்படங்களில் வெளியாகிவிடுவது வழக்கம்.

(அமீர்கான் தான் முன்மாதிரி போல)

# சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் வரையில் டிடிஎச் இல் வெளியிடும் எண்ணமே இல்லை , ஆனால் பின்னர் விநியோக முறையில் சரியான விலைக்கு விற்க முடியவில்லை என்றதும் , டிடிஎச் இல் வெளியிடும் திட்டம் தீட்டியுள்ளார், ஆனால் அதனை சேட்டிலைட்ஸ் உரிமம் விற்ற தொலைக்காட்சி நிறுவனத்திடம் உரியமுறையில் தெரிவிக்கவில்லை,

ஏன் சேட்டிலைட்ஸ் உரிமம் பெற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும்?

ஏன் எனில் சேட்டிலைட்ஸ் உரிமம் என விற்றால் அதிலேயே டிடிஎச் , வீடியோ ஆன் டிமாண்ட்  முறையில் வெளியிடும் அனைத்து உரிமங்களும் அடங்கிவிடும், எனவே சேட்டிலைட்ஸ் உரிம ஒப்பந்தம் போடும் போடுதே "Basic satellites rights" எனக்குறிப்பிட்டு விட வேண்டும் ,பின்னர் sub-clause ஒன்றில் டிடிஎச், வீடியோ ஆன் டிமாண்ட் இன்ன பிற உரிமங்கள் அளிக்கப்படவில்லை என ஒப்பந்தம் தயாரிக்கப்பட வேண்டும் , அப்படி ஒப்பந்தம் செய்யாமல் விற்கப்படும் சேட்டிலைட்ஸ் உரிமத்துடன் அனைத்து வகையான தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமங்களும் வாங்குபவருக்கு சேர்ந்து விடும்.

T.V. Rights என ஒப்பந்தம் போட்டுவிட்டால் , டிவிடி உரிமமும் சேர்ந்துவிடும், எனவே ஒப்பந்தங்களில் பயன்ப்படுத்தும் வார்த்தைகள் கவனமாக கையாளப்பட வேண்டும்.

நெகட்டிவ் ரைட்ஸ் என எழுதி கொடுத்துவிட்டால் படத்தின் அனைத்து உரிமங்களும் போய்விடும், பைனான்சியரிடம் நிதி உதவிப்பெரும் போது இப்படி நெகட்டிவ் ரைட்ஸை எழுதி வாங்கிக்கொண்டு தான் பணமே கொடுப்பது வழக்கம்.

நாயகன் படம் அக்காலக்கட்டத்தில் சுமார் 1.25 கோடிக்கு தயாரிக்கப்பட்டு சரியாக விலைப்போகாத சூழலில் ஜீவி நெகட்டிவ் ரைட்ஸ் என அனைத்து உரிமையும் வாங்கியதோடு அல்லாமல், விருது கிடைத்தாலும் எனக்கே தான் என நிபந்தனை விதித்து முக்தா சீனிவாசனிடம் இருந்து நாயகனை வாங்கினார்.

படம் விலையாகாத சூழலில் தயாரிப்பாளர் எப்படியெல்லாம் அடங்கிப்போக வேண்டியுள்ளது என்பதற்கு இது உதாரணம், ஆனால் அந்த தயாரிப்பாளரை தான் கஞ்சன் என 25 ஆண்டுகளுக்கு பிறகு மனசாட்சியேயில்லாமல் குதறினார் லோகநாயகர்.

சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் போது சரியாக முன் திட்டமிடவில்லை, உரிம விவகாரத்தில் ஒரு புரொபெஷனல் அப்ரோச் இல்லாமலே செயல்பட்டுள்ளது தெரிகிறது.ஆனாலும் முதலில் டிடிஎச் இல் வெளியிட டாடா ஸ்கையுடன் பேச்சு வார்த்தை போதே அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனைக்கண்டுக்கொள்ளாமல் லோகநாயகர் தொடர்ந்துள்ளார்.

பின்னர் எதிர் தரப்பு தொலைக்காட்சியையும் டிடிஎச் ஒளிப்பரப்பு திட்டத்தில் சேர்த்துக்கொள்ளவே , தங்கள் அதிருப்தியை சொல்லி டிடிஎச் இல் முன்னரே வெளியிடப்படும் என ஏன் சொல்லவில்லை, டிடிஎச் இல் வெளியாகும் படத்திற்கு சேட்டிலைட்ஸ் உரிமமாக பெரும் தொகை எதற்கு என கேட்டுள்ளார்கள், இதை விட அதிக தொகைக்கு என்னால் விற்க முடியும் என முன்னர் செய்த ஒப்பந்தத்தினை நீக்கிவிட்டு ,பின்னர் விஜய் தொலைக்காட்சியிடம் விற்றுள்ளார்.

சேட்டிலைட்ஸ் உரிம இழுப்பறிப்பற்றி  ஜீவியிலும் செய்தி வந்துள்ளது.

சிலர் நினைக்கலாம் சேட்டிலைட்ஸ் உரிமம் தனி, டிடிஎச் உரிமம் தனி என்பது புரியாமலா ஆளும் தரப்பு சேனல் இருக்கும் என, ஆனால் டிராய் வழிக்காட்டுதலிலேயே சேட்டிலைட்ஸ் சேனலின் ஒரு அங்கமாக தான் டிடிஎச் வருகிறது. எனவே ஒப்பந்தம் செய்யும் போது சப்-கிளாஸ் போட்டு தெளிவாக சொல்லப்பட வேண்டும்.

மேலும் சேட்டிலைட்ஸ் சேனலின் விதி முறைகள் தான் டிடிஎச் ஒளிப்பரப்புக்கும் பொருந்தும், சேட்டிலைட்ஸ் ஒளிபரப்பு என்றால் அது டிடிஎச் ஒளிபரப்பும் தான் என சொல்லி  டிடிஎச் ஒளிபரப்பிற்கு கேளிக்கை வரியாக 30 சதவீதம் தமிழக அரசு விதித்தற்கு எதிராக ஒரு வழக்கினை போட்டு தடையாணை வாங்கியிருக்கிறார்கள், அந்த வழக்கின் பின்னணியில் உள்ளது கேடி பிரதர்ஸ் ஆகும்.

ஏன் எனில் தமிழ்நாட்டில் டிடிஎச் ஒளிபரப்பிற்கு அதிக வரி விதித்தால் பாதிக்கப்பட போவது அவர்களே, தமிழ்நாட்டில் சுமார் 80% டிடிஎச் மார்க்கெட்டினை வைத்துள்ளார்கள்.

செய்தி:1

The Jayalalitha government’s imposition of 30 per cent entertainment tax surpasses that of the state of Uttar Pradesh (25%), and is aimed at directly hurting the Kalanithi Maran-promoted Sun Group. Other DTH operators do not have a wide presence in Tamil Nadu, which accounts for approximately seven per cent of the subscriber universe.

http://www.indiantelevision.com/headlines/y2k11/sep/sep164.php


செய்தி-2:

//Allowing a batch of petitions filed by DTH service providers Bharti, Dish TV India Ltd, Reliance, Sun Direct and Tata Sky Network, a Division Bench of the Madras High court has held that the 30 per cent entertainment tax imposed on DTH (Direct-to-Home) services in Tamilnadu is unconstitutional.//

//” The Hon.Court further held that the tax on DTH was violative of Article 14 of the Constitution of India since there was no difference in the nature of DTH Services and Cable Network.//

http://spectralhues.com/television/2012/10/9252/


மேலும் அரசு கேபிள் டீவி வருவதற்கு எதிரான வேலைகளை தில்லியில் கேடி பிரதர்ஸ் செய்வதாகவும் ஒரு கடுப்புண்டு,எனவே இந்நிலையில் அவர்களுடன் டிடிஎச் ஒளிபரப்பில் கூட்டு சேர்ந்தது எரிகிற கொள்ளியில் எண்ணை வார்க்கும் செயலாக போய்விட்டது.

சேட்டிலைட்ஸ் உரிம விற்பனையில் செய்த குழப்படிகளே பின்னர் பிரச்சினை வளரக்காரணமாக அமைந்து விட்டது,இதனை கணிக்க தவறிவிட்டார்  என்றே சொல்ல வேண்டும்.

ஆளுங்கட்சி தரப்பிற்கு சேட்டிலைட்ஸ் உரிமத்தினை தானாக தேடிப்போய் விற்றதே எதிர்ப்பினை சமாளிக்க தான், அப்படி இருக்கும் போது அந்த டீலை அவர் கடைசி வரையில் தொடர்ந்திருக்க வேண்டும்,ஆனால் டிடிஎச் மூலம்ம் கூடுதல் வருமானம் வரும் என்றதும் திசை மாறிவிட்டார், அப்படியே டிடிஎச் இல் வெளியிட விரும்பினாலும் அதனை உரிய முறையில் எடுத்து சொல்லி இருக்கலாம், அல்லது எதிர் தரப்பு சேனலுடன் கூட்டு சேராமல் இருந்திருக்கலாம் ஆனால் இரண்டையும் செய்ய தவறிவிட்டார்.

இதற்கு காரணம் நாம் என்ன செய்தாலும் ஆட்சேபணை தெரிவிக்க மாட்டார்கள் என ஓவர் காண்பிடென்ஸ் எனலாம். பாலுக்கும் காவல் ,பூனைக்கும் நண்பன் என இரண்டு தரப்பிலும் வியாபாரம் செய்ய ஆசைப்பட்டார் ஆனால் அதுவே எதிராக திரும்பிவிட்டது.

 வழக்கமாக ஆடியோ வெளியீட்டினை ஒளிப்பரப்புவதால் பெரிதாக விளம்பர வருவாய் வருவதுதில்லை எனவே பெரும்பாலான படங்களின் ஆடியோ வெளியீட்டினை சேனலின் அரங்கத்திலேயே நடத்தி முடித்துவிடுவதுண்டு.
ஆனால் நல்ல விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதால்  படத்தின் ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டிலேயே மூன்று இடத்தில் நடத்தி நேரடி ஒளிபரப்பும் செய்துக்கொண்டார், சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் வாங்கிய படம் என்பதால் நேரடி ஒளிப்பரப்பினை அதிக செலவு செய்து ஆளுங்கட்சி தரப்பு சேனல் செய்துள்ளது,இந்நிலையில் டிடிஎச் ஒளிப்பரப்பினைப்பற்றி முன்னரே தெரிவிக்காமல் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை வாங்கியதால் இழப்பு என்ற மனக்கசப்பும் வெளியாக , உரிமம் கைமாறியது , இது படத்தினை விளம்பரப்படுத்த தங்களைப்பயன்ப்படுத்திக்கொண்டு காரியம் முடிந்ததும் கழற்றிவிடப்பட்டதாக நினைக்க வைத்தது.

நம்மோடு வியாபாரம் செய்ய வந்ததே எதிர்ப்பை சமாளிக்க தானே, படம் வெளியிடும் வரையில் நெருக்கமாக இருப்பது போல காட்டிக்கொண்டு கடைசியில் நழுவியதை சந்தர்ப்பவாதமாக ஆளும்தரப்பு கருதிய வேளையில், மார்க்கப்பந்துக்களுக்கு படத்தினை போட்டுக்காட்டி இன்னொரு தவறினை செய்து விட்டார் லோகநாயகர்.

அரேபிய சித்தாந்தப்படி புதிதாக முளைத்துள்ள இயக்கங்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஏதேனும் பிரச்சினை சிக்குமா என ஆர்வத்துடன் அலையும் வேளையில் ,படம் போட்டுக்காட்டியது "பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தார் "போன்ற வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அப்படிப்போட்டுக்காட்டவில்லை எனில் மார்க்கப்பந்துக்கள் கடைசி வரையில் எங்களுக்கு படத்தினைப்போட்டுக்காட்டு என்ற கோஷத்துடன் தான் போராடியிருப்பார்கள், தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கோஷமே எழுந்திருக்காது,அதனை அரசும் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்காது, அந்நிலையில் தடை விதிக்க வலுவான காரணங்களும் சொல்ல இயலாது.

படத்தை போட்டுக்காட்டு என பிரச்சினை நடைப்பெற்று கொண்டே இருக்கும் வேளையில் படத்தினை வெளியிட்டு இருக்கலாம், படம் வந்த பின்னர் எதிர்ப்பு காட்டினாலும், ஒரு பேச்சுவார்த்தை நடத்தி சில காட்சிகள் நீக்குகிறேன் என சொல்லி சமாளித்திருக்கலாம், படமே வெளியாகிடுச்சு,நாமளும் எதிர்ப்பை காட்டினோம்,நாம சொன்னதால் சிலக்காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கு எனவே நாமே வெற்றிப்பெற்றோம் என மார்க்கப்பந்துக்களும் மனத்திருப்தி அடைந்து இருப்பார்கள்.

இதற்கு வாய்ப்பிருக்கா என நினைக்கலாம், துப்பாக்கி படத்திற்கு எப்படி எதிர்ப்பு கிளம்பியது எப்படி முடிவுற்றது என்பதே நல்ல முன்னுதாரணம் ஆகும்.

ஆனால் அப்படி எல்லாம் ஏன் செய்யவில்லை? மார்க்கப்பந்துக்களுக்கு போட்டுக்காட்டினால் புரிந்துக்கொண்டு சமாதானமாக போய்விடுவார்கள் என எப்படி நினைத்தார்?  அவர்கள் போராடுவதே தங்களின் இருப்பை ஊடகத்திலும், மக்களிடமும் நிலை நிறுத்தத்தானே, எனவே என்ன தான் விளக்கினாலும் ஏற்றுக்கொள்ளப்போவதேயில்லை என்பது நன்கு தெரிந்த ஒன்று.

இந்நிலையில் சென்சார் பெற்ற படத்தினை மதவாத இயக்கங்களுக்கு போட்டுக்காட்டி அபிப்பிராயம் பெருவது அவசியமேயில்லை,ஆனால் அப்படி செய்து தவறான முன்னுதாரணத்தினை உருவாக்கிவிட்டார்.

குஸ்கா பிரியாணி சாப்பிட போனவங்களுக்கு லெக் பீஸ் அதுவும் ஆட்டு லெக் பீஸுடன்  பிரியாணி போட்டா சும்மா இருப்பாங்களா, இன்னும் அதிக வீரியத்துடன் படத்தினை தடை செய் என கிளம்பிவிட்டார்கள் ,ஏற்கனவே தங்களை சுயலாபத்திற்காக பயன்ப்படுத்திக்கொண்டு கழற்றிவிட்டதாக கடுப்பில் இருக்கும் ஆளும் தரப்பு,சேட்டிலைட்ஸ் உரிமம் எங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது எனவே டிடிஎச் இல் வெளியிட கூடாது என நேரடியாக தடை விதிக்க கூட வாய்ப்பிருந்தும் செய்யவில்லை ஏனெனில்  அப்படி செய்தால் நேரடியான மோதலாக போய்விடும் என்பதால் ஆளும் தரப்பு காத்திருந்தது இவ்வேளையில் மார்க்கப்பந்துக்களின் புகார் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது எனலாம் எனவே கிடைச்ச கேப்பில் கெடா வெட்டிவிட்டார்கள்.

# தனது இத்தனை ஆண்டுகால உழைப்பையும் முதலீடாக இப்படத்தில் போட்டுள்ளேன், படம் வரவில்லை எனில் எனது சொத்துக்கள் அனைத்தும் போய்விடும் எனவும் சொல்கிறார் ஆனால் அதில் உண்மை இருக்கிறதா என்றால் இல்லை என்றே விவரம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

(பிவிபி சினிமா தயாரிப்பில் பங்குபெற்றதை காணலாம்)

படத்தின் தயாரிப்பாளராக முதலில் இருந்தது பிவிபி சினிமாஸ் என்ற நிறுவனமே, அவர்களிடம் சுமார் 50 கோடி பணம் பெற்று படத்தயாரிப்பு நடந்து வரும் போது பட்ஜெட் அதிகமாகிவிட்டது 100 கோடி ஆகும் என சொன்னதால் , இப்படத்துக்கு 100 கோடி செலவிடுவது வியாபார ரீதியாக ரிஸ்க் என மேற்கொண்டு பணம் தரவில்லை, எனவே லோகநாயகரே தயாரிப்பாளராக பொறுப்பில் எடுத்து முடித்தார் என சொல்கிறார்.

ஆனால் மேற்கொண்டு பெரிதாக பணமே முதலீடு செய்யாமல் 50 கோடியில் தான் படம் எடுத்துள்ளார் , 95 கோடி என சொல்வது எப்படி எனில் லோகநாயகரின் நடிப்பு,கதை,வசனம்,திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றிற்கு சம்பளம் என ஒரு பெருந்தொகையை சேர்த்து சொல்வதாகும்,இதற்கெல்லாம் சுமார் 40 கோடியை கணக்கில் சேர்க்கிறார். எனவே படத்தின் உண்மையான தயாரிப்பு செலவென்பது சுமார் 50-60 கோடிக்குள் மட்டுமே, 50 கோடி ரூபாய் பிவிபி மூலம் வந்துவிட்டது ,மேற்கொண்டு சில கோடிகள் செலவு செய்துவிட்டு மொத்த உழைப்பும் கொட்டியுள்ளேன்,கடன் வாங்கியுள்ளேன் என சொல்வதெல்லாம் கிடைத்த வாய்ப்பினை பயன்ப்படுத்தி அனுதாப அலையை உருவாக்கவே எனலாம்.

தற்போது தமிழகத்தில் வெளியாகாத சூழலில் கூட படத்திற்கு செலவிடப்பட்ட தொகையில் 90% சதவீதத்துக்கு குறையாமல் திரும்ப எடுத்துவிட்டார் (அதிகமாக எடுத்திருக்கவும் வாய்ப்புள்ளது படத்தின் உண்மையான பட்ஜெட் தெரியாத நிலையில் குறைவாக 90% எனக்கொள்வோம்)

எப்படி எனப்பார்க்கலாம்.

இந்தி விநியோக உரிமையை ஏக்தா கபூரின் Balaji Motion Pictures வாங்கியாகிவிட்டது , மிக குறைவான தொகை என சொன்னாலும் ஒரு பத்து கோடிக்கு கூடவா வியாபாரம் ஆகி இருக்காது?

அதே போல தெலுகு விநியோக உரிமையை தாசரி நாரயண ராவ் வாங்கியுள்ளார், அதன் மூலமும் ஒரு 10 கோடி கிடைக்கும் என வைக்கலாம்.

கேரளா,கர்நாடகா விநியோகத்தின் மூலம் 10 கோடி எனலாம்.

அமெரிக்க விநியோக விற்பனை -10 கோடி

யு.கே மற்றும் ஐரோப்பிய உரிமை- 10 கோடி

மலேசியா,சிங்கப்பூர்,அரபு தேசம்- 10 கோடி

சேட்டிலைட்ஸ் உரிமை- 12 கோடி

ஆடியோ உரிமை குறைந்த பட்சம் என்றாலும் -1 கோடி

மொத்தமாக சுமார் 73 கோடிக்கு தமிழகம் தவிர்த்து விற்பனை ஆகிவிட்டது.

மிகக்குறைவான தொகையையே கணக்கில் வைத்து சொன்னது இது, இதை விட குறைவான விலைக்கு தான் மேற்சொன்ன ஏரியாக்கள் விலை போகும் என்றால், உலகநாயகன் ,அயல்நாடுகளில் பெரிய மார்க்கெட் இருக்கு என இத்தனை காலமாக சொன்னதெல்லாமே பொய் என்றாகிவிடும்.

தமிழகத்தில் வெளியாகாத சூழலிலும் இவ்வளவு வருமானம் வர வாய்ப்புள்ள நிலையில் எனது சொத்துக்கள் அனைத்தும் இழந்துவிடுவேன் , நான் வெளிநாட்டுக்கு போய் விடுவேன் என்பதெல்லாம் மிகையான நடிப்பே என்பேன்.

தமிழக வெளியீட்டுக்கு பின்னர் கிடைக்கும் வருவாய் முழுக்க லாபமாகவே கருதப்படும்.

எனவே இத்தனை வருட சம்பாத்தியம் அத்தனையும் பணயம் வைத்துள்ளேன், இழந்துவிடுவேன் என சொல்வதில் உண்மையில்லை.

பின்னர் இப்படி எல்லாம் ஏன் பேசுகிறார் என்றால் ,வருங்காலத்தில் உதவும் என்பதும் மேலும் படம் சுமாராக இருப்பதாக பேச்சு நிலவுவதால் படம் சரியாக வசூலாகவில்லை என்றால் யாரும் திரும்பப்பணம் கேட்காமல் இருக்கவுமே, அப்படிக்கேட்டால் எதிர்ப்பால் சரியாக ஓடவில்லை, எனக்கு நஷ்டம் நான் எப்படி திரும்ப பணம் கொடுப்பேன் என சொல்லிவிடலாம் :-))

டிடிஎச் ,எதிர்ப்பு ,தடை என அமோகமாக விளம்பரம் கிடைத்தும் ,அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் 44 திரையரங்குகளில் இருந்து சுமார் 3.4 கோடி அளவுக்கு தான் வசூலாகியுள்ளது, வார நாட்களில் வசூல் இன்னும் குறையும், மேலும் நாட்கள் செல்ல செல்ல குறையவே செய்யும், ஒரு வாரம் தாண்டி ஓடுவதே அமெரிக்கா போன்ற நாடுகளில் அபூர்வம் ,எனவே 10 நாட்கள் ஓடுவதாக வைத்துக்கொண்டாலும் , சுமார் 10 கோடி வசூலாவது கூட கடினமே, இது விநியோக செலவினை தான் ஈடுகட்டும், மேற்கொண்டு தியேட்டர் வாடகை, விளம்பர செலவு ஆகியவை எடுக்க இயலாது, விநியோகஸ்தரை பொறுத்த வரையில் நட்டம் என்ற நிலையினை தான் உருவாக்கும் சூழல் உள்ளது.

வெளிநாட்டு உரிமம் வாங்கியவர்களுக்கு பெரும்பாலும் திரையிடல் மூலம் போட்ட பணத்தினை எடுத்தால் போதும் என்ற நிலையே நிலவும், அவர்கள் லாபத்தினை டிவிடி வெளியிட்டு சரிக்கட்டிக்கொள்வார்கள்,அதனால் தான் வெளிநாட்டிலிருந்து வரும் டிவிடிக்குறித்து நம்ம தயாரிப்பாளர்கள் கண்டுக்கொள்வதேயில்லை, அதனைக்கேள்விக்கேட்டால் வெளிநாட்டு உரிமம் விலைப்போகாது!

உண்மையில் எதிர்ப்பு நிலவியதால் தான் வெளியான இடங்களில் இந்த அளவுக்கு ஆவது படம் ஓடுகிறது, எதிர்ப்பு, தடை ஆகியவை மிக நல்ல விளம்பரமாக அமைந்து விட்டது,அதற்கு தானே ஆசைப்பட்டார் லோகநாயகர் !

# அரசியல் ரீதியாவும்,மத ரீதியாகவும் தான் வஞ்சிக்கப்படுவதாகவும், தனக்கு ஆதரவாக திரையுலகமும், தமிழக மக்களும் திரள வேண்டும், கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு மதச்சார்புள்ள மாநிலமாக ,அரசியல் பழிவாங்கும் மாநிலமாக மாறிவிட்டதாக இப்பொழுது கூப்பாடு போடும் லோகநாயகர், இதற்கு முன்னர் எப்பொழுதாவது சக கலைஞர்களுக்கு இதே போன்ற பாதிப்பு வந்தப்போது குரலெழுப்பியுள்ளாரா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

லோகநாயகரைப்பொறுத்த வரையில் மதம்,ஜாதியம் ஆகியவை படைப்புக்கு மூலப்பொருள்,சர்ச்சைகள் ,தடை எனில் விளம்பரம் என ஜெகஜோதியாக கல்லா கட்டும் வணிகர்.

தனிப்பட்ட முறையில் மூத்த திரைக்கலைஞன் இவ்வாறு பாதிக்கப்படக்கூடாது என்றே அவருக்கு ஆதரவாக நினைக்கிறேன்,ஆனால் லோகநாயகர் மற்றவர்களுக்காக இவ்வாறு நினைப்பதில்லை என்பது மனதில் உறுத்தலாக நிழலாடுகிறது.

#உதாரணமாக வைகைப்புயல் வடிவேலின் நிலையை பார்ப்போம், அவர் என்ன சினிமா மார்க்கெட் இழந்தா வீட்டில் இருக்கிறார், தேர்தல் பிரச்சாரம் செய்தார், அது அவரது உரிமை, அவர் பாதிக்கப்பட்டப்போது தனக்கு அரசியல்ரீதியாக ஒரு ஆதரவு வேண்டும் என அப்போதைய ஆளுங்கட்சியிடம் உதவிக்கு சென்றார் ,அவரை பயன்ப்ப்படுத்திக்கொண்டார்கள், தேர்தல் முடிந்ததும் அவரும் தனது வேலையைப்பார்ப்பேன் என்றார்,ஆனால் ஏன் திரையுலகில் ஒருவரும் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லை, சில நாட்களுக்கு முன்னர் வடிவேலின் கால்ஷீட்டிற்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள், கதை விவாதத்தின் போதே வடிவேலுவை மனதில் வைத்தே சீன் பிடித்த இயக்குனர்கள் எல்லாம் திடீர் என  அவரை மறந்து போனது ஏன்?

ஆட்சியாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்தவரை பயன்ப்படுத்தி ஆளும்தரப்பை கோபப்படுத்தி விடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதை தானே, ஏன் லோகநாயகரே அவரது படத்தில் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லையே ,அப்போ எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள், பழிவாங்கல்கள் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்தது எப்படி?

வடிவேலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனிப்பட்ட விரோதமாக கருதி அவரது அலுவலகத்தை அடித்து நொறுக்கியது கேப்டனின் ஆட்கள் தானே, அதனால் தானே அரசியல் அடைக்கலம் தேடி போய், இப்போது பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அதே கேப்டன் இப்பொழுது கருத்து சுதந்திரம் ,அரசியல் பழிவாங்கல் என சொல்லி லோகநாயகருக்கு ஆதரவாக பேசுவது எந்த வகையில் சேர்த்தி?

#நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இடைஞ்சல்கள் வந்தப்போது லோகநாயகர் குரல் எழுப்பினாரா? இல்லையே ஆனால் அதனை கிண்டல் செய்து உன்னைப்போல் ஒருவனில் ஒரு காட்சி மட்டும் வைத்துக்கொண்டார்?

ஒரு நடிகர் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுகுவது அப்பொழுது காமெடியாக பட்டது ஆனால் இப்பொழுது அதே வேலையைத்தானே லோகநாயகர் செய்கிறார் :-))

காவலன் படம் வெளியிட பல சிக்கல்கள் உருவான போதும் முனை ஒடிந்த மன்மதன் அம்பாக கழக அரசியல் சக்தியிடம்  அல்லவா முடங்கி கிடந்தார் :-))

அவ்வளவு ஏன் வெகு சமீபத்தில் டொக்டர் விஜயின் துப்பாக்கிக்கு மார்க்கப்பந்துக்கள் பிரச்சினை கொடுத்தார்கள் ,அப்போதாவது வாயை தொறந்தாரா என்றால் இல்லை, அப்போ எல்லாம் தமிழ்நாட்டில் மதவாதமே இல்லை, தலைவர் படத்துக்கு எதிர்ப்புன்னா தான் மதவாதம் கண்ணுக்கே தெரியும் :-))

அப்பொழுதெல்லாம் அரசியல் பழிவாங்கல் ,படைப்பாளியின் சுதந்திரம் பாதிக்கப்படுவது கண்ணுக்கே தெரியாமல் போன மாயம் என்னவோ?

# நான் கடவுள் படத்திற்கு முதலில் அஜித்தினை ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது, ஆனால் ஆறுமாதமாகியும் படத்தயாரிப்பு துவங்கவேயில்லை, பின்னர் இந்த பாத்திரத்துக்கு நீங்க சரிப்பட்டு வர மாட்டிங்கன்னு சொல்லிவிட்டு கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கினார்கள், இதெல்லாம் அனைவருக்குமே நன்கு தெரியும், ஆனால் இதே போல பிரமிட் சாய்மீரா "மர்மயோகி"என்ற படம் தயாரிக்க லோகநாயகரிடம் 14 கோடி அட்வான்ஸ் கொடுத்தது ,படம் எடுக்க இயலவில்லை என்றப்போது அட்வான்ஸ் கொடுத்தால் படம் எடுக்கணும் ,இல்லைனா திரும்ப கொடுக்க முடியாது என சட்டம் பேசினார்.

அப்படி எனில் அஜித்திடம் கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கியதை பற்றி ஏன் லோகநாயகர் கவலையே படவில்லை ஏதேனும் குரல் கொடுத்தாரா அப்போது இல்லையே? ஏன் எனில் நான் கடவுள் படத்தினை ஆரம்பத்தில் தயாரித்தது தேனப்பன், லோகநாயகரின் முன்னால் நிர்வாகி,நண்பர் எனவே மிரட்டியதை அறிந்தும் கண்டுக்காமல் இருந்தார்,அதுவே தனக்கு என்றால் சட்டப்படி பேசுவார் :-))

தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சூசு :-))

அப்படியிருப்பினும் இச்சூழலில் அஜித் ,லோகநாயகருக்கு ஆதரவாக குரல் கொடுத்து தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார்.

அதே போலவே லோகநாயகரின் சந்தர்ப்பவாதங்களை புறந்தள்ளிவிட்டு அவருக்கு ஆதரவாக தான் நடுநிலையான தமிழக மக்களும் பேசிவருகிறார்கள், ஆனால் அவற்றை எல்லாம் சற்றும் கணக்கில் கொள்ளாமல் தமிழகமே மதவெறிக்கொண்டுள்ளது, வசிக்க தகுதியற்று போய்விட்டது என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்கும் வகையில் லோகநாயகர் பேட்டிக்கொடுத்துள்ளது, அவரது சுயநலத்தினையே காட்டுகிறது.

ஹி...ஹி எவ்வளவு தான் எங்களை கேவலப்படுத்தினாலும் நாங்க எல்லாம் உயிருக்கு உயிரான ரசிகர்கள் , எப்படியும் படம் பார்த்தே தீருவோம் எனவே தமிழ்நாட்டில் படம் ஓடவில்லை என்றாலும் பக்கத்து மாநிலத்துக்கு போயாவது பார்ப்போம் ஏன்னா நாங்க தமிழர்கள் ,தீவிர சினிமா அடிமைகள் :-))

ஹி...ஹி இம்புட்டு பேசினாலும் நானும் படம் பார்ப்பேனில்ல,ஏன்னா நானும் தமிழனாச்சே :-))

கொசுறு:

புதுவையில் படம் பார்க்கலாம்னு திட்டம் போட்டு சென்றேன்,அங்கு ரத்னா தியேட்டரில் பெரிய பேனர் எல்லாம் வச்சிருந்தாங்க, ஆனால் படம் தான் ஓடவில்லை அவ்வ் :-((

ரத்னா தியேட்டர்:


பேனர்.


அறிவிப்பு:


இப்படி ஒரு அறிவிப்பை வைத்துவிட்டு போஸ்டரே ஒட்டாமல் சமர் படத்தை வெற்றிகரமாக 20 ஆவது நாளாக ஓட்டிக்கிட்டு இருக்காங்க,அவ்வ்.

சமர் படத்தை பார்க்கலாம்னு நினைச்சா சப்பை திரிஷா கண்ணு முன்னால வரவே ,ரிஸ்க் எடுக்க மனமில்லாமல் நீராகாரம் சாப்பிட அருகில் இருந்த "நீராகார அங்காடி"யில் அடைக்கலமானேன் ,

(ஹி...ஹி டுபோர்க்ரூபம்!)

எறும்பு கடிச்சாப்போலவே இருக்கவே அடுத்த ஆட்டம் இது!

-----------------

பின் குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

இந்து ,தினமலர், விக்கி,கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-------------------------


கற்றது தமிழ்-5

$
0
0
(அய்யோடா என்னையும் தமிழில் அர்ச்சனை செய்யும் கோவிலுக்கு போக சொல்லிடுவானோ...அவ்வ்)

தமிழென நினைத்து  பேச்சிலும்,எழுத்திலும் பல வட மொழி,பிறமொழிச் சொற்களைப் நாம் பயன்படுத்தி வருகின்றோம்,அவற்றில் பல தமிழாகவே மாறிவிட்ட சூழலில் அச்சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது மிகவும் கடினமாகும்,அதே வேளையில் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களும் உள்ளன,அவற்றை  அடையாளங்காணும் சிறு முயற்சியே இத்தொடர்.

இப்பதிவில் நாம் அதிகம் பயன்ப்படுத்தும் மேலும் சில வடமொழி ,பிறமொழி சொற்களையும்,அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் காணலாம்.

#அகதி:

ஒரு சொல்லின் முன் "அ"சேர்ப்பதால் எதிர் மறை பொருளை உருவாக்கலாம், இம்முறை வடமொழி,தமிழ் என இரண்டிலும் நடைமுறையில் உள்ளது.

கதி(gati) என்ற வடமொழிச் சொல்லுக்கு ,

நிலை,
இடம்,
இலக்கு,
நுழைவு,
சரணடைதல்,
புகலிடம்,
நேரம்,
வேகம்,
இயக்கம்,
நகர்தல்.

என்றெல்லாம் பொருள் உண்டு.

சொல்லுக்கு முன் "அ" சேர்த்தால் இவற்றிற்கு எதிரான பொருள் கொண்ட சொற்களை உருவாக்கலாம்.

அகதி என்ற சொல்லினை கொண்டு ,
யாருமற்றவன்,வறியவன்,நாடோடி,பற்றில்லாமல்,புகலிடம் இல்லாமல் இருப்பவர்களையும் குறிக்கலாம்.

மேலும் அகதி என்பதற்கு  திரும்புதல் என்று ஒரு பொருளும் இருப்பதால்,புலம் திரும்பியவர் என்றும் சொல்லலாம்.

அகதி என்பதற்கு தமிழ் இணைச்சொற்கள்: நாடோடி ,நாடற்றவர் ,புலம் திரும்பியோர் என்பதை கொள்ளலாம்.

புலம்பெயர்ந்தவர்கள் என்பது பொதுவாக 'migrated"என்பதையே குறிக்கும்.

#அகாலம்- 

காலம் என்ற வடமொழிச்சொல்லுக்கு நேரம் என்று பொருள், எதிர்மறையாக "அகாலம்"என்கிறார்கள்  இதற்கு இணையான தமிழ்ச்சொல் "நேரமற்ற நேரம்",வேளையற்ற வேளையில் எனலாம்.

அகாலநேரம் என்பது ,நடு சென்டர் என்பது போல இருமுறை நேரத்தினை சொல்வது.

#அங்குலம் : 

வட மொழிச்சொல், அங்குஷ்டம் என்றால் வட மொழியில் கட்டைவிரல் , ,எனவே ஒரு கட்டைவிரல் தடிமன் உள்ள அளவை அங்குலம் என்பார்கள்.
இணையான தமிழ்ச்சொல்: விரற்கடை அளவு.

#அஜாக்கிரதை

ஜாக்கிரதை என்ற வட மொழிச்சொல்லின் எதிர்ச்சொல்,

இணையான தமிழ்ச்சொல் : கவனமின்மை,விழிப்பின்மை.

# அசுத்தம்-

சுத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்,

இணையான தமிழ்ச்சொல்: அழுக்கு,தூய்மையின்மை.

#அநியாயம்:

நியாயம் என்ற வடச்சொல்லின் எதிர்ப்பதம்.

இணையான தமிழ்ச்சொல்:முறையின்மை,நடுவின்மை.

#அபத்தம்:

பத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்.

பத்தம் என்றால் நேர்மை, உண்மை, எனப்பொருள். சுத்தபத்தமாக கடவுளை வணங்க வேண்டும் என்றால் ,தூய்மையாக ,நேர்மையாக ஒன்றி வணங்குதலை குறிக்கும்.

இணையான தமிழ்ச்சொல்: பொய்,தவறு.

#இலவசம்:

labhasa என்ற வட மொழி சொல்லுக்கு , பிச்சையாக, தானமாக கேட்டுப்பெறுதல் என்ற பொருள் ஆகும்.  தமிழில் அனைத்து மெய்யெழுத்துக்களையும் சொல்லின் முதல் எழுத்தாக பயன்ப்படுத்தக்கூடாது என்பதால், உயிர் எழுத்து "இ"சேர்த்து இலவசம் என முழுமையாக தமிழில் எழுதப்படுகிறது.

உ.ம்: லட்சுமணன் = இலட்சுமணன், ராமன் = இராமன்.

தமிழில் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ,பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களும் வரலாம், அதுவல்லாமல், மெய் எழுத்துக்களில் ,க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங ஆகிய பத்து மெய்யெழுத்துக்கள் மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரலாம்.

இலவசம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்:விலையின்மை,விலையில்லா என்பதாகும்.

ஹி...ஹி முந்தைய முத்தமிழ் வித்தவர் ஆட்சியில் கொடுத்த இலவசப்பொருட்களை இப்பொழுது விலையில்லா பொருட்கள் என சொல்கிறார்கள். சரியாத்தான் மாற்று சொல் கண்டுப்பிடித்து இருக்காங்க :-))

# கோயில் அல்லது கோவில்:

பலரும் ஆலயத்தினை கோயில் அல்லது கோவில் என எழுதி,பேசி வருவதுண்டு, இரண்டில் எது சரியான தமிழ்ச்சொல் என குழப்பம் வருவது இயல்பே.

தமிழ் இலக்கண புணர்ச்சி விதிகளின் படி, நிலை மொழி இறுதியிலும்,வரு மொழி முதலிலும் உயிர் எழுத்து இருக்குமானால் , இரு சொற்கள் இணையும் போது ஒற்றெழுத்து மிகும், என்கிறது, இதனை உடம்படுமெய் - உடன் படுத்தும் - இணைக்கும் மெய் எழுத்து என்கிறார்கள்.

மேலும் நன்னூல் இலக்கணப்படி,

இ,ஈ,ஐ ஆகிய உயிர் எழுத்துக்கள் இருப்பின் யகர ஒற்று "ய்"மிகும்.

ஏனைய உயிர் எழுத்துக்கள் இருப்பின் "வகர"மெய் "வ்"மிகும்

ஏ எனும் உயிர் எழுத்து இருப்பின் இவ்விரு மெய்யும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

கோவில் = கோ +வ்+இல்

கோ என்ற சொல்லில் "ஓ"எனும் உயிர் எழுத்து ஒலிக்கிறது அதற்கு வகர மெய்"வ்"உடம்படுமெய் ஆக மிகலாம்.

எனவே கோவில் என்பதே சரியானது.

கோயில் =கோ+ய்+இல்

எனப்பிரித்தால் யகர ஒற்று "ய்"மிகுவதை காணலாம், இது உடம்படுமெய் என்ற விதிப்படி சரி,ஆனால் நன்னூல் விதிப்படி தவறு என்கிறார்கள்.

அதே சமயத்தில் இலக்கியங்களில் கோயில் என்ற சொல்லும் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது,எனவே நடைமுறையில் கோயில் என்று சொல்வதும் பிழையில்லை.


மேலும் சில ஒலி ஓசையில் ஒத்து குழப்பும் சொற்கள்.

முருக்கு- முறுக்கு:

முருக்கு என்றால் அழித்தல்.

முறுக்கு என்றால் திரித்தல் , வீட்டில் சுடுவது முறுக்கு,  ஒரு வேளை வீட்டில் சுட்ட முறுக்கு உங்கள் பல்லை அழிக்குமானால் அதனை "முருக்கு"எனலாம் :-))

ஆனால் முருங்கை மரம் என்பதற்கு "ரு"தான் பயன்ப்படுத்த வேண்டும்.

#ஒரு-ஒறு:

ஒரு என்பது எண்ணிக்கை ஒன்றை குறிக்கும்.

ஒரு ரூபாய், ஒருவன்,ஒருவள்.

ஒறு என்பது தண்டனையை குறிக்கும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

என்ற குறளில் வரும் ஒறுத்தல் "தண்டிப்பதையே"குறிப்பதை காணலாம்.

#முன்னாள்-முன்னால்-முந்நாள்

இன்றைய நாள் - இன்னாள், அதற்கு முன்னர் வந்த நாள் முன்னாள்,அல்லது முந்தைய காலம்.

ex.minister என சொல்ல முன்னாள் ,முன்னால் என எதனை பயன்ப்படுத்துவது எனக் குழப்பம் வரும்.

முன்னால் அமைச்சர்  என்றால் இந்த ஆட்சிக்காலத்துக்கு முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அல்லது இப்போதைய அமைச்சருக்கு முன்னர் அமைச்சராக இருந்தவரை மட்டுமே குறிக்கும்.
முன்னால் என்றால் in front of, previous என்ற பதம் இங்கு நாள் கணக்கில் வராது.ஒரு வரிசைக்கிரமத்தில் சொல்வதாகும்.

உ.ம்.
#முன்னால் நிற்கும் பேருந்தில் ஏறவும்.

#முன்னால் நிற்கிறேன்.

அதையே முன்னாள் நிற்கிறேன் என்றால் முதல் நாள் நிக்கிறேன் ஒரு வேளை முதல் நாளில் இருந்து நின்றால் அப்படி சொல்லலாமோ :-))

ஆனால் எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்து இப்போ பதவியில் இல்லை என்றால் என்ன செய்வது, எனவே முன்னாள் அமைச்சர் என எழுதுவதே சரியானது.

முந்நாள் என சொல்வது மூன்று +நாள் என சொல்வதாகும்,

மூன்று நாள் =முந்நாள்.

# அல்லு-அள்ளு:

அல் - துன்பம்,தீமை,இரவு,இருள்.

அல்ல- இல்லை

அல்லல் ,அல்லவை,

சிலர் அல்லும் பகலும் வெறும்* தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிஷ்டம் இல்லை என்பார்.

இங்கு அல் என்பது இரவை குறிக்கிறது.

*வெரும்- வெருப்பு- அச்சம்,பயம்,மிரட்சி.கோவம்,சினம் எனவும் சில இடங்களில் பொருள் கொள்ளலாம்.

வெறும் - வெற்று-வெற்றிடம்- ஒன்றுமில்லாமல்.

வெறுப்பு- dislike -hate,பகைமை, விருப்பமின்மை.

அள்ளு- அள்ளுதல், ஒன்றை அப்படியே வாரி எடுப்பது. மண் அள்ளுதல், தானியம் அள்ளுதல்.

ஹி...ஹி தெலுகுல அல்லுனா மாப்பிள்ளை என்கிறார்கள்(தெலுகு தெரிந்தவர்கள் சரியானு சொல்லுங்க), "அல்லுடு மஜாக்கானு"சிரஞ்சீவி ஒரு படம் கூட நடித்துள்ளார், ஒரு வேளை மாப்பிள்ளைகள் மாமனாரை வரதட்சணை,சீர் எனக்கேட்டு துன்புறுத்துவதால் மாப்பிள்ளையை "அல்லு"னு சொல்லுறாங்களா?

உதித்நாரயணன் போன்று மூக்கால் பாடுபவர்களுக்கு  எல்லாமே அல்லு அல்லு ...தல்லு ...தல்லு தான் :-))

#ஆனி-ஆணி:

ஆனி என்பது தமிழ்நாட்காட்டியில் உள்ள தமிழ் மாதமாகும்.

ஆணி என்பது வடிவேலு சொல்லும் "ஆணியே புடுங்க வேண்டாம்'இரும்பு ஆணி :-))

ஆணி என்ற சொல்லுக்கு இரும்பு ஆணி, வலிமை, இன்றியமையாத(முக்கியமான) என்ற பொருள்கள் உண்டு.

மரத்தின் ஆணி வேர்.

ஆணித்தரமாக கருத்தினை *கூறுதல்.

ஆணி என்பதற்கு இங்கு அழுத்தமாக ,வலிமையாக கருத்தினை சொன்னதாக பொருள்.

கூரு- கூர்- sharpness,கூரு கெட்டவன் என்றால் மொக்கையான மூளைத்திறன் உள்ளவர்னு சொல்றாங்க போல.

*கூறு,கூறல் - சொல்,சொல்லுதல்.

 ஒலிக்குறிப்பில் குழப்பும் மற்ற சொற்களை பிறகு பார்க்கலாம்.



மேலும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்.

#அதிகம், வடமொழி , தமிழ் -மிகுதி,கூடுதல்.

#அதிசயம், வடமொழி, தமிழ் -புதுமை,வியப்பு.

#அஸ்திபாரம்:கடைக்கால்

#அலுவா- கோதுமை தேம்பாகு.

#அவகாசம்-ஒழிவு,ஓய்வு.

#அவசரம்-விரைவு, பரபரப்பு,பதைப்பு.

#அவசியம்- முதன்மை,கட்டாயம்,இன்றியமையாத

#ஆதிக்கம்-உரிமை,முதன்மை,மேன்மை,தலைமை.

#இதம்,ஹிதம்- இனிமை,நன்மை,அன்பு,அறம்.

#இருதயம்,ஹிருதயம்-நெஞ்சம்,அன்பு,உள்ளம்.

#கட்சி-பக்கம்,சார்பு.

#எதார்த்தம்-உண்மை,உறுதி

# கஷ்டம்- வருத்தம்,துன்பம்

#நிசி -இரவு

#தாமசம்,தாமதம்-தாழ்த்துதல்,அட்டி,மயல்.

#துரிதம்-விரைவு

#நிர்ப்பந்தம்-தொல்லை,நெருக்கடி,வலுக்கட்டாயம்,இடர்.

#நிரூபித்தல்- மெய்ப்பித்தல்,நிலைப்பெறுத்தல்.

# வாந்தி பேதி,- கக்கல்,கழிசல்
----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதி,தமிழ் ஆட்சி சொல்லகராதி, தமிழ் அகரமுதலி,http://spokensanskrit.de/,கூகிள்,விக்கி, இணைய தளங்கள்,நன்றி!


விஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை!

$
0
0

(ஹி...ஹி விஷேஷரூபம் இது)

விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமிதமாக லோகநாயகர் சொன்னப்பொழுது ரொம்ப மிகையாக விதந்தோம்புகிறாரோ என நினைத்தேன், ஆனால் அத்தகைய புரிதல் கொண்டவர்களால் மட்டுமே படத்தினை சரியாக  என்ன மாதிரியான படமென(genre) புரிந்துக்கொள்ள முடியும் என்பது படம் பார்க்கும் போது தான் தெரிந்தது, பலரும் பலவகையான விமர்சனங்களை வைத்துவிட்டார்கள்,ஆனால் அவர்கள் யாருக்கும் லோகநாயகர் வரையறுத்த முன் தகுதிகள் இல்லையென நினைக்கிறேன்,யாருமே இதுவரையில் சரியாக இது என்ன வகையான படம் என்றே சொல்லாமல் , மேம்போக்கா ஆக்‌ஷன் திரில்லர், ஸ்பை மூவி என எழுதி ஆங்காங்கே,ஆப்கான்,அமெரிக்கா,RAW,FBI, என துப்பிவிட்டு சென்றுள்ளார்கள்.

உண்மையில் விஷ்வரூபம் ,அமெரிக்க ராம்போ, பிரிட்டீஷ் ஜேம்ஸ் பான்ட் டைப் உளவாளிப்படங்களை ஸ்பூஃப்(Spoof) செய்து எடுக்கப்பட்ட நகைச்சுவைப்படமாகும்,ஆனால் சரியான முறையில் ஸ்பூஃபிங் காட்சிகளை சித்தரிக்கத்தவறிவிட்டார், இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் "ஹாட் ஷாட்ஸ், ஜானி இங்க்லீஷ் "போன்ற உலகத்தர ஸ்பூஃப் படமாக வந்திருக்கும் :-))

படமாக்கலின் போது இயக்குனர் லோகநாயகருக்கு ஸ்பூஃபிங் டைப்பில் எடுப்பதா, இல்லை சீரியஸான ஆக்‌ஷன் திரில்லர் வகையில் எடுப்பதா என மனக்குழப்பம் இருந்திருக்கும் போல ,படம் நெடுக அக்குழப்பம் பலக்காட்சிகளில் தெரிகிறது.

ஒரு காட்சியினை சீரியசாக எடுத்துவிட்டு அடுத்தக்காட்சியினை ஸ்பூஃப் செய்துள்ளார்,சில கிரேஸித்தனமான கிச்சு கிச்சு மூட்டும் வசனங்கள் ஆங்காங்கே தூவியுள்ளார் அவ்வளவே. இதனால் படம் பார்ப்பவர்கள் ஸ்பூஃப் அல்லது சீரியஸ் ஆக்‌ஷன் படமா என வகைப்பிரிக்க தெரியாமல் ,திரைப்படத்துடன் ஒன்றவியலாமல் போய்விட்டது.ஒரு நடிகராக தனது பணியினை சிறப்பாக செய்துள்ளார் ,ஆனால் ஒரு படைப்பாளியாக ,கதை, திரைக்கதை,இயக்கம்,வசனம் என கோட்டை விட்டுவிட்டார் எனலாம்.

இரண்டுங்கெட்டான் வகையில் படம் இருப்பதால் நாமும் நடுவாந்திரமாக படத்தினை அலசுவோம், யாரும் ஸ்பூஃப் படத்தில் ஏன் லாஜிக் பார்க்கிறாய் என்றெல்லாம் கேட்கப்படாது :-))

ஏன் எனில் படம் பார்க்கும் பாமர ரசிகனைப்பார்த்து உனக்கு உலக அரசியல் தெரியுமா, பொது அறிவு இருக்கான்னு ஒரு படைப்பாளி கேள்விக்குள்ளாக்கும் போது ,என்னைப்போல எந்த ஒரு பாமர ரசிகனும்,திருப்பி அதெல்லாம் கேள்விக்கேட்டவருக்கும் இருக்கான்னு உரசிப்பார்க்கவே செய்வான்!

படம் பார்க்கும் போது ஒரு கேள்வி என்னுள் எழுந்ததை ஏனோ தவிர்க்கவே முடியவில்லை, இந்திய அரசு ஸ்தாபனமான RAW(Research and Analysis Wing)இன் உளவாளியான நாயகன் அமெரிக்காவிற்கு உதவ ஆஃப்கான் போகிறார், தலிபான்களை அழிக்க உதவுகிறார்,சரி போகட்டும் ஏதோ நேசக்கரம் நீட்டுதல் எனலாம்,அப்புறம் அதன் தொடர்ச்சியாக நியுயார்க்கில் வைக்க இருக்கும் டர்ட்டிபாமை எடுக்க அமெரிக்க அரசுக்கோ, அதன் உளவு நிறுவனங்களுக்கோ தெரியாமல் ஏன் முயல வேண்டும்,இன்ன மாதிரி திட்டம்னு சொன்னா அவங்க பார்த்துக்க மாட்டாங்களா, அதைவிட்டுவிட்டு இந்திய அரசு பணத்தின் செலவில் ரா ஏஜண்ட் ராப்பகலா மாங்கு மாங்கு என நியுயார்க்கில் உழைக்க வேண்டிய அளவுக்கு  ராவுக்கு  அமெரிக்க விசுவாசம் இருக்குமா?

ரா என்பது இந்தியாவுக்காக வேலை செய்யும் அரசு உளவு நிறுவனமா இல்லை ,அமெரிக்காவிற்காக வேலை செய்யும் BPO Type உளவு நிறுவனமா?

(அமெரிக்க விஸ்வாசரூபம்)

ஹாலிவுட் ஹீரோக்கள் கூட அவங்க நாட்டு தேசப்பற்றினை விளக்கும் படத்தில் நடிக்கும் போது தான் பின்னணியில் அமெரிக்க கொடியுடன் போஸ்டர் போட்டுக்குவாங்க,லோகநாயகர்  இந்திய அரசின் உளவாளியாக நடிக்கும் போது அமெரிக்க கொடிப்பின்னணியுடன் போஸ்டர் டிசைன் செய்ய என்ன தேவையோ?அப்போத்தான் கதை அமெரிக்காவில் நடக்குதுனு மக்களுக்கு புரியும் என்றால்,பாதிக்கதை ஆப்கானில் நடக்குது,எனவே ஆப்கான் கொடிப்பின்னணியிலும் ஒரு போஸ்டர் டிசைன் செய்திருக்க வேண்டாமோ :-))

அமெரிக்கர்களுக்கு பிடிச்சமாதிரி ஸ்டோரி போர்ட்,போர்ட்ஃபோலியோ ஆல்பம் தயார் செய்யணும் என ஆசைப்பட்டால் இப்படித்தான்  அமெரிக்க கொடிப்போட்டு,ரா வை அமெரிக்காவிற்கு வேலை செய்ய வைத்து ஆக வேண்டும் :-))

லோகநாயகருக்கு ஹாலிவுட் ஆசை பெருக்கெடுத்துவிட்டதால், ஒரு படத்தினை 95 கோடியில்??!! எடுத்து அமெரிக்காவுக்கு  ஒரே அடியாக  சமர்ப்பணம் என சொல்லிட்டாரோனு நினைக்க தோன்றுகிறது.

ஸ்டார்ட் மியுஜிக்.....

இவன் யார் என்று தெரிகிறதா,

ஹாலிவுட் ஆசை புரிகிறதா,

தடைகளை தாண்டியே ஹாலிவுட் செல்வான் :-))

ஓஹ்ஹஹ.. ஹோ...ஹோஹோ,,,ஓ....

OPIUM WAR:

விஷ்வரூபம் திரைப்படம் தனது கதைக்களமாக  ஆஃப்கான், "தலிபான் தீவிரவாதம்-அமெரிக்கா"என எடுத்துக்கொண்டாலும் ,அதன் உண்மையான அரசியலையோ,பின் புலத்தையொ சற்றும் தொட்டுக்கூட பார்க்கவில்லை, வெறுமனே தலிபான் பயங்கரவாதம் அதை தடுத்து உலகப்போலீஸ் அமெரிக்காவையே காப்பாற்றும் இந்திய சூப்பர் ஹீரோவை!!??ப்பற்றிய படமாக அமைந்துள்ளது எனலாம்.

இந்த அண்டர் கவர் ஏஜண்ட்/போலீஸ் கதை எல்லாம் எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் காலம் தொட்ட பழமையான கதையாகும், ஒவ்வொரு ஹீரோவும் ஏதேனும் அண்டர் கவர் ஆபரேஷன் படத்தில் ஒரு முறையாவது நடித்திருப்பார்கள், முன்னர் லோகநாயகரே காக்கி சட்டை, விக்ரம் படங்களில் இதே வேலையை செய்துள்ளார், இன்னும் சொல்லப்போனால் விக்ரம் படத்தில் சலாமியாவில் செய்த சாகசத்தை ஆப்கன் - அமெரிக்கா கூட தொட்டுக்கொள்ள ஊறுகாயாக தலிபான் என திருப்பி சுட்ட தோசை தான் விஷ்வரூபம் :-))

ஆப்கனில் நடக்கும் ஆயுத போரட்டங்களின் உண்மையான பின்னணி என்னவெனப்பார்ப்போம்.

பொதுவாக அறியப்படுவது என்னவெனில் ஆஃப்கனை சோவியத் ஆக்ரமித்து இருந்தது ,அவர்களை விரட்ட அமெரிக்கா முஜாகிதின்களை வளர்த்து சண்டையிட்டது, சோவியத் வெளியேறிய பின் அமெரிக்கா, ஆஃப்கானை கைக்குள் வைத்துக்கொண்டதால் இன்றும் ஆயுதப்போராட்டம் தொடர்கிறது என்பதாகும்.

மேம்போக்காக இச்சம்பவங்கள் சரி என்றாலும் இதன் அடிப்படைக்காரணம் வேறு ஒன்றாகும்,

சரி சோவியத் வெளியேறிய பின் அமெரிக்காவிற்கு ஆஃப்கானில் என்ன வேலை? அங்கே இருக்க என்னக் காரணம்?

வளைகுடா நாடுகள் போன்று எண்ணெய் வளமும் இல்லையே ,பின் ஏன்?

எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்து செல்லும் வழித்தடத்தில் உள்ளது என்பார்கள்?

அது உண்மையா என்றால் இல்லை, ஏன் எனில் அமெரிக்காவிற்கு எண்ணெயோ,எரிவாயுவோ ஆப்கான் வழியாக கொண்டு செல்ல முடியாது, தேவையும் இல்லை.

ஆஃப்கான் வழியாக கொண்டு செல்லப்படும் எரிவாயு ,எண்ணெய் என்பது இரானில் இருந்து வருவது மட்டுமே,இரான் அமெரிக்காவிற்கு விற்க விரும்புவதும் இல்லை அப்படியே செய்ய வேண்டுமானாலும் பெர்சியான் வளைகுடா மூலமே நிகழும் பின்னர் எப்படி ஆஃப்கான் எண்ணெய் எடுத்து செல்ல முக்கியம் என அமெரிக்கா கருத வேண்டும்?

ஆஃப்கான் வழியாக இரானின் எரிவாயு/எண்ணெய் எடுத்து செல்லப்பட வேண்டும் எனில் அது சோவியத்,சீனா,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சாத்தியம் ஆகும். ஆக மற்ற நாடுகளுக்காக பில்லியன் கணக்கில் டாலர்களை செலவு செய்து சண்டைப்போட அமெரிக்கா ஒன்றும் கேணையல்ல :-))

இன்னும் சொல்லப்போனால் சோவியத்,சீனா எல்லாம் அமெரிக்காவின் நட்பு வட்டமேயில்லை,இந்தியாவோ கழுவும் மீனில் நழுவும் மீன், நெருக்கம் எனப்பார்த்தாலும் சோவியத் பக்கமே,மேலும் இரானுடன் எண்ணெய் வர்த்தகம் இந்தியா செய்யக்கூடாது என அமெரிக்க அன்பாக மிரட்டுவதும் வழக்கம், ஏன் எனில்  இரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்துவிட்டு ,அணு தொழில்நுட்பம் இந்தியா அளித்துவிடும் என்ற அச்சமேயாகும்.

எனவே  ஆஃப்கானில் தலிபான்கள் இருந்தாலே இரானின் எண்ணெய் வர்த்தக வழி தடைப்படும் என்ற நிலையில், அமெரிக்கா எண்ணெய் வர்த்தக வழிக்காக பெரும் சண்டையிடுகிறது என்பதில் வலுவான காரணங்களேயில்லை.உண்மையில் அங்கிருந்து கொண்டு இரானின் எண்ணெய் வளம் வியாபாரம் ஆகாமால் தடுக்கும் வேலையை தான் அமெரிக்கா செய்கிறது.

பின் ஏன் என்றால் ,போதைப்பொருள் வருமானமாகும், எண்ணெய்ப்பணம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிய வருமானம் அளிக்கக்கூடியது ஓபியம் மூலம் வரும் வருமானம்.

கொஞ்சம் விரிவாக பார்ப்போம்,

1950 களுக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய போதை உற்பத்தி மையம் தென்கிழக்கு ஆசிய நாடுகளான, வியட்நாம், பர்மா,தாய்லாந்து,லாவோஸ் ஆகியனவாகும், இப்பிரதேசத்தினை கோல்டன் டிரையாங்கில் என்பார்கள். வியட்நாம்,லாவோசில் அமெரிக்கா போர்ப்புரிய ஒருக்காரணமே இப்போதை மருந்து வியாபாரப்பணம் என சொல்கிறார்கள்.

CIA பின்னிருந்து போதை மாபியாக்களை கட்டுப்படுத்தியது, உலகம் முழுக்க எவ்வளவு போதை மருந்து சப்ளை ஆக வேண்டும் என்பதையே நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கியது என பல போர் மற்றும் போதைமருந்து ஆய்வு எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள்.

இதனை லேசாக டான்களைப்பற்றிய எனது பழையப்பதிவில் சொல்லியிருப்பேன். CIA தனது சொந்தக்கட்டுப்பாட்டில் கார்கோ விமான சேவையையே நடத்தி ,போதைப்பொருளை கோல்டன் டிரையாங்கிளில் இருந்து கொண்டு சென்றது என்றால் ,போதைமருந்து வியாபாரத்தின் வருமான அளவை ,முக்கியத்துவத்தினை புரிந்துக்கொள்ளலாம்.

இப்போ ஆஃப்கான் எப்படி போதை வணிகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது எனப்பார்ப்போம், கோல்டன் டிரையாங்கிலை அமெரிக்கா கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போல, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சோவியத் யூனியன் கேஜிபி மூலம் கோல்டன் கிரெசெண்ட் எனப்படும் இரான்,ஆப்கான்,பாகிஸ்தான் பகுதிகளை கையகப்படுத்தி, போதை மருந்து வியாபாரத்தினை கட்டுக்குள் வைத்திருந்தது.

Hezb-i-Islami என்ற முஜாகிதின் இயக்கதின் தலைவர் "Gulbuddin Hekmatyar"மூலம் சோவியத் தனது செயல்ப்பாடுகளை செய்து வந்தது,எனவே அவர்களை ரெட் ஆர்மி என்பார்கள். ஆப்கானின் முக்கியமான ஓப்பியம் விளைச்சல் பகுதியான Helmand Valleyரெட் ஆர்மியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

என்ன கொடுமைய்யா இது பெரிய பெரிய நாடுகள் எல்லாம் போதை மருந்துக்கா அரசியல் செய்தன என நினைக்கலாம், ஆனால் உண்மை இது தான், அப்பெரிய நாடுகளின் உளவுத்துறைகளுக்கு பல்வேறு ராணுவ நடவடிக்கைகள்,இன்ன பிற அரசியல் வேலைகள் செய்ய ஆயுதம்,பணம் தேவை எனவே இத்தகைய வேலைகளை செய்துவந்துள்ளன. உளவுத்துறைகள் மட்டுமே செய்துவிட முடியுமா, அந்நாட்டு தலைவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாங்களா எனக்கேட்டால் ,அதெல்லாம் சர்வதேச ரகசியம் :-))



ஏதோ ஒரு அரசியல், ஆனால் 1950களில் கோல்டன் கிரெசெண்ட் சோவியத் கட்டுப்பாட்டுப்பகுதி, கோல்டன் டிரையாங்கில் அமெரிக்க கட்டுப்பாட்டுப்பகுதி எனப்புரிந்துக்கொண்டால் போதும்.

கோல்டன் டிரையாங்கில் பகுதியில் அமெரிக்காவிற்கு பலப்பிரச்சினைகள் மண்டையிடிக்கொடுத்த நிலையில் மாற்று இடம் தேடிய சூழலில் வியட்நாம் சண்டைக்கு பிறகு கோல்டன் டிரையாங்கிளில் அமெரிக்க கட்டுப்பாடு பெரிதும் தளர்ந்தப்போன சூழலில் ,அவர்கள் கண்ணை உறுத்தியது தான் சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த ஆஃப்கனை உள்ளடக்கிய கோல்டன் கிரசென்ட் பகுதி, நாம இந்த அல்லோகல்ல படுகிறோம் பங்காளி சோவியத் சத்தம் போடாமல் ஜமாய்க்கிறானே என்ற கடுப்பில் ஆஃப்கானில் அரசியலை துவங்கியது.

1960 -70 காலக்கட்டத்தில் ஆஃப்கன் முஜாகிதினில் தனக்கு என ஒரு பிரிவினை உருவாக்கிக்கொண்டு சோவியத்தினை எதிர்க்க வைத்தது. Mullah Nasim Akhundzada என்பவர் தலைமையில் ஹெமாண்ட் வேலி குழு என ஒன்று உருவாகி ரெட் ஆர்மியை விரட்டியடித்தது. அப்போ போராளியாக உருவாக்கப்பட்டவர் தான் முகமது ஓமர் , சோவியத் சிதைவுண்டப்பின் தானே வெளியேறிவிடவே, ஷேக் நஜிமுல்லா தலைமையில் ஒரு அரசை உருவாக்கி அமர்த்தியது அமெரிக்கா.

இடைப்பட்டக்காலத்தில் ஓமர் குண்டடிப்பட்டு ,பாகிஸ்தான் எல்லையில் சிகிச்சைப்பெற்று ,பின்னர் அங்கேயுள்ள மதாரசாவில் மார்க்கக்கல்வி பயின்று அங்கேயே மார்க்கப்பணியில் ஈடுபட்டார், அதனால் தான் முல்லா என அழைக்கப்பட்டார்.

அக்காலக்கட்டத்தில் ஆப்கானில் ஆட்சிப்புரிந்த ஷேக் நஜிமுல்லா ஷா, மக்களை சரியாக கவனிக்கவில்லை, ஊழல் பெருகி,பொருளாதாரம் சரிந்து அன்றாட வாழ்வு பெரும் சிக்கலாகிய சூழலில் ,மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப்போராட துவங்கினர் , அட இவனுங்க எதாவது செய்வானுங்கன்னு பார்த்தால் இன்னும் மோசமாக்கிட்டாங்களேனு முல்லாவாகிவிட்ட ஓமர் மீண்டும் ஆஃப்கானுக்கு வந்து சுமார் 60 நபர்களுடன் தலிபான் என்ற அமைப்பை உருவாக்குகினார். தலிபான் என்றால் பஷ்தூனில் "மாணவன்"என்று பெயர்.

பின்னர்ப்படிப்படியாக போராடி ,ஷேக் நஜிமுல்லாவை தொறத்திவிட்டு ,முல்லா முகமது ஓமர் ஆட்சியையே பிடித்து விடுகிறார், ஆனால் அதிபர் என சொல்லாமல் "ஸ்பிரிச்சுவல் ஹெட்"ஆக  Commander of the Faithful of the Islamic Emirate of Afghanistanஎன ஆட்சியும் செய்தார்.

அக்காலத்தில் பாகிஸ்தான்,ஈரான்,சவுதி,ஐக்கிய அரபிய எமிரேட்ஸ், இன்னும் சில நாடுகள், முல்லா முகமது ஓமரை  ஒரு அதிபராக அங்கிகரித்தன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி.814 நேபாளில் இருந்து காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது ஆப்கானில் அதிபராக இருந்தது முல்லா ஓமர் தான்.



அப்போது பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை ஆப்கானுக்கு அனுப்பி பேச்சுவார்த்தைக்கு தாலிபன்களை மீடியேட்டராகக்கொண்டு நடத்திய பேரத்திற்கு பின் இந்திய சிறையில் இருந்த Maulana Masood Azhar, Sheikh Omar and Mushtaq Zargar என்ற மூன்று பயங்கரவாதிகளை விடுதலை செய்த பின்னர் விமானம் மற்றும் பயணிகள் மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தின் போது ரூபின் கத்யால் என்ற இந்தியப்பயணி விமானக்கடத்தல்கார்களால் குத்திக்கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

ஒசாம பின்லேடனுக்கே ஆஃப்கானில் அடைக்கலம் கொடுத்து, அல்கைதா மற்றும் தலிபான்கள் பெரிய அளவில் போராட பின் புலமே முல்லா ஓமர் தான், அவர் தான் ஆப்கானில் கிங்க்,ஓசாமா அல்ல அதனால் தான் ஓசாமா பிடிபட்ட பின்னரும் முல்லா ஓமரால் இன்னும் தப்பிப்பிழைக்க முடிகிறது.ஆனால் திரைப்படத்தில் ஓசாமாவின் ஒரு அல்லக்கை ரேஞ்சில் ஓமரைக் காட்டியிருப்பார்கள்.

அமெரிக்க நேட்டோ கூட்டுப்படையினர் தலிபான்களை தலைமறைவாக தொறத்தும் முன் வரையில் ஓபியம் உற்பத்தி மற்றும் வியாபாரத்தினை தலிபான்கள் கையில் வைத்திருந்தார்கள், 10 சதவீத விற்பனை வரி செலுத்திவிட்டு யார் வேண்டுமானாலும் ஓபியம் பயிரிடலாம், பின்னர் அவை அறுவடை செய்யப்பட்டு , எல்லைக்கடந்து கொண்டு செல்வது, வியாபாரம் எல்லாம் தலிபான்கள் மூலம் நடக்கும்.

இப்பணம் கொண்டே ஆயுதங்கள் வாங்கப்பட்டு போரிட்டார்கள். ஆஃப்கானில் மட்டும் சுமார் 2-3 பில்லியன் டாலர் மதிப்பில் ஓபியம் உற்பத்தியாகும்,ஆனால் அதன் சர்வதேச மதிப்பு சுமார் 180 பில்லியன் டாலர்கள். வழக்கம் போல உற்பத்தி செய்பவனுக்கு மிக குறைவான லாபமே.

ஓபியம்:




Papaver somniferum எனப்படும் பாப்பி (கசகசா செடி)செடியின் முதிராத காயின் மீது சில வெட்டுக்களை கீறிவிட்டால் வடியும் பால் போன்ற திரவத்தினை lachryma papaveris- பாப்பியின் கண்ணீர் என்பார்கள்,இதனை உலரவைத்தால் கிடைப்பது பழுப்பு நிற ஓபியம் ஆகும்.

இம்முறையில் ஒரு ஏக்கருக்கு சுமார் 4-5 கிலோ ஓப்பியம் மட்டுமே கிடைக்கும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஓபியம் மிக தரமானது.

இதன் பின்னர் பாப்பி பாட், தண்டு என அனைத்தையும் அமிலத்தில் கறைத்தும் ஓபியம் உற்பத்தி செய்யப்படும், இதனை பல முறை சுத்திகரித்தால் மட்டுமே சுமார் 50%  வீரியமுள்ள தூய ஓப்பியம் கிடைக்கும், பலரும் பல வகையில் ஓப்பியம் தயாரிப்பதாலும், பல வகை தரத்தில் ஓபியம் கிடைக்கும், ஆனால் சந்தையில் நுகர்வோருக்கு பெரும்பாலும் கலப்பட ஓபியம் தான் கிடைக்கும்,அதில் சுமார் 10% ஓபியம் மற்றதெல்லாம் தாவரக்கழிவு, விலங்குகளின் சாணியாகும் :-))

இன்றைய தேதியில் ஆஃப்கானில் இருந்து உலகத்தேவைக்கான அளவில் 80-90% ஓபீயம் கிடைக்கிறது என ஐக்கியநாடுகளின் போதை மருந்து மற்றும் குற்றவியல் அலுவலகம் அறிவித்துள்ளது.


(ஓபியம் பயணிக்கும் பாதை)

ஓப்பியம் என்பது பல மார்பைன் வகை போதைப்பொருள் மற்றும் மருந்து தயாரிக்க மூலப்பொருளாகும், அதன் வடிவம், தூய்மை அதிகரிக்க அதிகரிக்க விலை மிக உயரும்.

ஒரு கிலோ ஓப்பியத்தில் இருந்து 10 % ஹெராயின் உற்பத்தி செய்யலாம், 10%= 100 கிராம், ஒரு கிலோ ஓப்பியத்தின் விலையே சுமார் 1000-1500 டாலர்களே

ஆனால் ஒரு கிராம் 50% தூய  ஹெராயின் விலை சுமார் 150 டாலர்கள்,

அப்படி எனில் 100 கிராம் ஹெராயின் விலை 150,000 டாலர்கள்,ஒரு கிலோ ஒப்பியத்தின் மதிப்பை விட 100 மடங்கு கூடுதலாகிவிடுகிறது.எனவே பெட்ரோலிய, ஆயுத வியாபாரங்களுக்கு அடுத்து அதிக லாபம் தரக்கூடிய ஒரு வியாபாரம் ,அதுவும் மிக குறைவான விலைக்கு வாங்கி ,சர்வதேச சந்தையில் 100 மடங்கு விலையில் விற்கலாம்.

அமெரிக்க நேட்டோ படைகள் பெருமளவு ஆஃப்கானை கைப்பற்றிய பின்னரும் எப்படி இவ்வளவு உற்பத்தியாக முடியும் என்றால்  மேற்சொன்னக்காரணமே, அமெரிக்காவின் ஆசையே அதானே அப்புறம் உற்பத்தியாகாமல் என்ன செய்யும்?

(நேட்டோ டாங்க் ஓபியம் வயலில் ரோந்து செல்கிறது)

அமெரிக்கா ஆஃப்கானில் நுழைந்தவுடன் ஓப்பியம் பயிரிட்டவர்களை அழைத்து உங்கள் ஓபியம் பயிரை அழிக்க மாட்டோம், இன்னும் நிறைய பயிரிடுங்கள், நாங்கள் பாதுகாப்புக்கொடுக்கிறோம் என சொல்லியிருக்கிறது.மேலும் அடிக்கடி வானொலி மூலம் ஓப்பியம் பயிரிடுங்கள் வளமாக வாழுங்கள் என வயலும் வாழ்வும் நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்கள் :-))

தலிபான்கள் கையில் இருந்த ஓபியம் வியாபாரம் இப்பொழுது அமெரிக்க ஆதரவுடன் நடக்கிறது, இதனால் 2001 இல் இருந்ததை விட 5 மடங்கு அதிக ஓபியம் ஆப்கானில் உற்பத்தியாகின்றதாம்,இதனையும் சொல்வது ஐக்கியநாடுகளின் அறிக்கை :-))

அமெரிக்க நுழைவுக்கு பின்னர் ஓபியம் உற்பத்தி அதிகம் ஆகி இருப்பதை வைத்து தான் சர்வதேச ஊடகங்கள் அமெரிக்காவின் பின்னணியில்லாமல் இது சாத்தியமில்லை என ஆய்வு செய்து எழுதியுள்ளன.

இப்பொழுது தலிபான்கள் அமெரிக்க ஆதரவு ஓபியம் வியாபாரத்திற்கு பத்வா விதித்து அழிக்கிறார்கள், அவர்களுக்கு வரிக்கட்டும் ஓப்பியம் விவசாயிகளை காப்பாற்றுகிறார்கள் அதே போல அமெரிக்கா செய்கிறது. இப்படித்தான் அங்கு சண்டை முடிவில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

//"Respected people of Helmand. The soldiers of ISAF and the Afghan national army do not destroy poppy fields," it said. "They know that many people of Afghanistan have no choice but to grow poppy. ISAF and the Afghan national army do not want to stop people from earning their livelihoods."

The message was drafted by British officers and carried on two local stations in Afghanistan's largest province. It infuriated senior Afghan officials - including the president, Hamid Karzai - who demanded an explanation. The Afghan government has been under intense western pressure to rein in the burgeoning drugs trade. Opium cultivation soared 59% last year, earning local traffickers £1.2bn. The spike was concentrated in Helmand.//

link:

http://www.guardian.co.uk/world/2007/apr/27/afghanistan.declanwalsh


2001 இல் தலிபான்கள் விரட்டப்பட்டு ,ஹமீத் கர்சாய் தலைமையில் ஒரு அரசினை நேட்டோ படைகள் மூலம் அமெரிக்கா நிறுவியது, அப்பொழுது 2001 இல் தலிபான்கள் முந்தைய காலத்தில் அறுவடை செய்து வைத்திருந்த சுமார் 4500 டன்கள் ஓப்பியம் நேட்டோ படைகள் வசம் சிக்கியது,பெயருக்கு கொஞ்சம் அழித்துவிட்டு பெரும்பகுதியை நேட்டோ ராணுவம் அமுக்கிவிட்டது என புலனாய்வுப்பத்திரிக்கைள் தெரிவிக்கின்றன. எனவே மேற்கொண்டு ஓப்பியம் விளைந்தால் நேட்டோ ராணுவமே பலனடையும் என தலிபான்கள் 2001ஆம் ஆண்டில் ஓப்பியத்துக்கு தடை விதித்ததால் ஓப்பியம் உற்பத்தி வெகுவாக ஆப்கானில் குறைந்தது.

படம்:

ஆனால் அதன் பின்னர் ஆண்டு தோறும் ஓப்பியம் உற்பத்தி அதிகரிக்கவே செய்தது, காரணம் அமெரிக்க நேட்டோ படை பல குழுக்களை உருவாக்கி ஓப்பியம் பயிரிட ஊக்குவித்ததே.ஒரு பக்கம் அமெரிக்க ராணுவம் போதைப்பொருட்களுக்கு எதிராக போராடி வருவதாக செய்திகள் பரப்பி வந்தாலும் , உற்பத்தி என்னமோ குறையவேயில்லை என்பதை நியுயார்க் டைம்ஸ் மோப்பம் பிடித்து போதைமருந்து வியாபாரத்தின் பின்னால் ஹமித் ஹர்சாயின் சகோதரர் "அஹ்மத் வாலி ஹர்சாய்"மற்றும் அவருக்கு பின்னால் CIA உள்ளதாகவும் கட்டுரை வெளியிட்டது.

செய்தி:

//KABUL, Afghanistan — Ahmed Wali Karzai, the brother of the Afghan president and a suspected player in the country’s booming illegal opium trade, gets regular payments from the Central Intelligence Agency, and has for much of the past eight years, according to current and former American officials.//

http://www.nytimes.com/2009/10/28/world/asia/28intel.html?_r=2&

ஆப்கானில் இருந்து சரக்கு யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் வெளியில் கொண்டு சேர்க்க வேண்டிய வேலை அஹ்மத் ஹர்சாயுடையது இதற்காக சிஐஏ சம்பளமும் அவருக்கு கொடுத்துள்ளது ,என நியுயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

படத்திலும் தவ்பீக் என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம் எளிய விவசாயின் அன்பளிப்பு என ஓபியம் கொடுக்கும், ஆப்கானில் விவசாயம் என்றால் ஓபியம் பயிரிடுதலே,மேலும் ஓபிய வியாபாரி தான் பணம் கொடுக்கிறார் என ஓமர் பேசும் காட்சியும் உண்டு,ஆனால் கொஞ்சம் மிகையாக அல்லா கொடுக்கிறது தான் இந்த தவ்பீக் கொடுப்பது என ஒரு வசனம் வேறு பேசுவார், என்ன கொடுமை சார் இது ,இப்படி சொல்வது போதை பொருள் விற்பது அல்லாவின் ஆசியுடன் செய்வதாக ஆகாதா? மேலும் அல்லாவுக்கு இணை வைத்து தவ்பீக்கை உயர்வாக சொல்வது போலவும் இருக்கே :-))



தவ்பீக் விருந்து கொடுக்கும் வீட்டுக்கு செல்லும் வழியில் சில் அவுட்டில் ரோஜா தோட்டம் போல காட்டியிருப்பது ஓபியம் வயல்களே, ஓப்பியம் செடி தொலைவில் இருந்து பார்க்க ரோஜா போலவே இருக்கும். ஓபியம் வயலை தெளிவாக படம் எடுக்க வாய்ப்பில்லை என்பதால் ரோஜா தோட்டத்தினை சில் அவுட்டில் காட்டியிருக்கவும் வாய்ப்புள்ளது.

ஆப்கானில் அமைதியற்ற சூழல் நிலவ உண்மையான காரணம் என்னவென இப்பொழுது புரிந்திருக்கும், இவ்வுண்மையை பற்றி திரைப்படம் சிறிதும் பேசாமல் ,ஆஃப்கானில் ஓபிய வியாபாரத்தினை தலிபான்கள் மட்டுமே செய்வதாக காட்டியிருப்பார்.

# லோகநாயகர் அறிமுகக்காட்சியில் கதக் ஆடுவதை அனேகம் பேர் சிலாகித்து என்ன நளினம் என விதந்தொம்பிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஒரு திரைப்பட நடனமாக எளிமையாக ஆடுவதாக நடித்திருக்கிறார் என்று மட்டுமே சொல்லலாம், அதுவும் நாட்டியம் சொல்லித்தரும் குருவும் கேமராப்பார்த்து அபிநயம் பிடிப்பார், பின்னால் ஆடுபவர்களும் கேமிராவை நோக்கி தான் ஆடுவார்கள், அப்படினா குரு என்ன அபிநயம் காட்டினார்னு மாணவிகள் எப்படி முதுகைப்பார்த்து  கற்றுக்கொள்வார்கள்?.

ரொம்ப சினிமாத்தனமான கேமிராக்கோணம் அது, வழக்கமா ஹீரோ ஆடியன்ஸ் பார்த்து "மெசேஜ் சொல்ல",.பஞ்ச் டயலாக் சொல்ல பயன்ப்படுத்தும் கேமிராக்கோணம் இது. இப்படிக்காட்டினால் தான் ஆடும் அழகான பொண்ணுங்க முகமும்,ஹீரோ முகமும் ஆடியன்ஸ் ஒரே சமயத்தில் பார்க்க முடியும்,ஆனால் உலகத்தரமான படத்தில இப்படிலாம் ஆர்ட்டிபிசியலா மசாலப்படங்களை போலவே கேமிராக்கோணங்களை வைக்கலாமா :-))

இதை விட இன்னொன்று என்னனா, நாயகர் ஒரு அபிநயம் முடிச்சு சிருங்கார பாவம் காட்டிட்டு இருப்பார், பின்னணி நாட்டியத்தாரகைகள் பூ எடுத்து போட்டு ,ஒரு சுத்து சுத்தி வேற என்னமோ ஆடிட்டு இருப்பாங்க , குரு ஆடுறாப்போல ஆட வேணாமோ :-))

# ஒரு பிரைவேட் டிடெக்டிக் பின்னாடி வர்ரான்னு தெரியுது,ஆனால் அதே வேர்ஹவுஸ் வரைக்கும் ஏன் போகனும் ,அம்மாம் பெரிய ஒளவாளிக்கு தெரிய வேண்டாமோ, அதை விட காமெடி, மாமா பின்னடியே தடியன் வரான்  என்ன செய்யன்னு அப்பாவியாக்கேட்பார், முட்டாள் ஓடுனு வேற இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பார் சேகர் கபூர், இம்புட்டு தத்தியாவா ரா ஏஜண்ட் இருப்பார், அப்பாவி வேடம் தான் போட்டு இருக்காரே ஒழிய கதைப்படி உண்மையில் அப்பாவியில்லை தானே ,ஒரு வேளை பாத்திரத்தோட ஒன்றிப்போய் விஷ்வநாத்தாக இருக்கும் போது முழுக்க தத்தியா இருக்கணும்னு நினைச்சுட்டாரா?

# நிருபமா(பூஜா)வின் ஆண் நண்பன் தீபக்குடன் வந்து நாயகரை விசாரணை செய்யும் காட்சியில் , ஃபரூக் என்பவருக்கு அழைப்பு விடுத்து அவர்கள் வரும் வரையில் ரா ஏஜண்ட் தேமே என இருப்பது ஏனோ?  இடைப்பட்டக்காலத்தில் ஏதேனும் செய்து தப்பியிருக்கலாம்.

ஃபரூக் குழுவினர் வந்தால் ஏதேனும் உண்மைக்கண்டுப்பிடிக்கலாம் என சும்மா இருந்தார் என்றால், அவர்கள் இருப்பிடம் எல்லாம் முன்னரே தெரியும் எனவே அங்கேயே போய் முன்னரே பிடித்து விசாரித்து இருக்கலாமே?

ஒரு வேளை வந்த குழு ,கண்டதும் சுட்டுக்கதையை முடித்து இருந்தால் என்னாவது? நமக்கு தெரியும் இது தமிழ்ப்படம், ஹீரோவை அப்படிலாம் பொட்டுனு கொன்றுட மாட்டாங்கன்னு ஆனால் உண்மையான சம்பவம் எனில் ,தீவிரவாத குழுவிடம் மாட்டினால் ,கதம்,கதம் தானே :-))

தமிழ் சினிமாவில் என்றில்லை உலக அளவில் எல்லா ஆக்‌ஷன் படங்களிலும் ,மற்றவர்களை பொட்டுனு போட்டு தள்ளும் வில்லன் ஹீரோவை மட்டும் கொல்லாமல் கட்டி வைத்து தனது சொந்தக்கதை,எதிர்கால திட்டம் என விலாவாரியாக  உலகத்து கதையை எல்லாம் பேசிட்டு, அப்பவும் கொல்லாமல் , 24 மணிநேரத்தில் ஏதேனும் ஒரு நேரத்தில் வெடிக்கிறமாதிரி ஒரு சின்ன வெடிக்குண்டை,அதுவும் நல்லா டைம் தெரியிறாப்போல டைமருடன் செட் செய்து காலுக்கு அடியில் வச்சுட்டு ,கையை,காலை கட்டிப்போட்டுவிட்டு ,குட் பை சொல்லிட்டு போவது தான் வழக்கமாக இருக்கிறது :-))

அப்படிக்கட்டிப்போடும் போது தனியாக்கட்டிப்போடவே மாட்டாங்க கூட ஒரு பொண்ணையும் சேர்த்து கட்டிப்போடுவாங்க, போற வரைக்கும் பேச்சுத்தொணைக்கு போல :-))

ஹீரோ  வழக்கம் போல குண்டு வெடிக்க ஒக்கே ஒக்க செகண்ட் இருக்கும் போது ,குண்டை செயலிழக்க செய்து தப்பிச்சென்று, டேக் ஆஃப் ஆகும் விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ தாவிப்பிடிச்சு சண்டைப்போட்டு வில்லனை கொன்றொழிப்பார் :-))

அதைப்போலவே இப்படத்திலும் கட்டிப்போட்டு அடிச்சப்பிறகு ,ஹீரோ நமாஸ் செய்யணும் எனக்கேட்டதும் ,பண்பான மார்க்கப்பந்துவான வில்லன் கட்டவிழ்க்க ,அப்புறம் என்ன ஹீரோ விஸ்வரூபம் எடுப்பதை தவிர வேறென்ன செய்வார் :-))

ஆனாலும் சண்டைக்காட்சி கிரிஸ்ப்பா, யாரு அடிச்சாலும்,சுட்டாலும் ஹீரோ மேல படாத போல நன்றாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வில்லன் ஜேம்சை சுடும் முன்னர் உன் கடைசி ஆசை என்னனு அன்பா கேட்பார், ஜேம்ஸ் ஒரு தம் அடிச்சுக்கிறேன் என சொன்னதும் பெர்மிஷன் கிராண்டட் ஆகும், ஜேம்ஸ் "எம்.ஐ.6"கொடுத்த ஸ்பெஷல் ஃபில்டர் சிகரட்டை பத்த வச்சு ஒரு பஃப் இழுத்துட்டு வில்லன் குருப் மேல சிகரெட்டை போட்டதும் வெடிச்சிறும்,அப்புறம் என்ன ஜேம்ஸ் பாண்ட் எஸ்கேப் தான் :-))

கொல்வதற்கு முன் ஹீரோவின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைக்கும் மெல்லிதயம் படைத்த நல்ல வில்லன்கள் இருக்கும் வரையில் ஹீரோவை யாராலும் ஒன்னியும் பண்ணிக்க முடியாது என்பது உலகப்பட நியதி :-))

#
படத்தில் ஆப்கானியர்களை கூட ஒழுங்காக சித்தரிக்கவில்லை,ஆப்கானியர்கள் அரேபியர்கள் அல்லர், அவர்கள் பஷ்தூன் இனக்குழுவினர்,அவர்களின் கலாச்சாரமே வேறு அனைவரும் ,தாடியுடன், மீசையும் வளர்ப்பார்கள்,ஆனால் படத்தில் அனைவரும் மீசையை மழித்துவிட்டு தாடியுடன் ,அரேபிய வகாபியப் பாணியில் இருப்பார்கள்.



ஓசாம பின் லேடன், முல்லா முகமது ஓமர் ஆகியோரின் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும் ,தாடி ,மீசை தான் அவர்கள் கலாச்சாரம் என்பது.


இரானில் பதின்மர் ஷியா குழு வகையினர் ,அவர்களும் மீசை,தாடியுடன் தான் இருப்பார்கள், இன்னும் சொல்லப்போனால் அரசுப்பணி புரிய மீசை அவசியம் அங்கே.

 ஓமர் தமிழ்நாட்டில் இருந்தேன் என சொல்வதே அவர் தமிழ்ப்பேசுவதை ஜஸ்டிபை செய்ய என்றார்கள்,ஆனால் அவர் கூட இருக்கும் சலிம் என்ற பாத்திரமும் தமிழ் பேசும், போதாதற்கு அமெரிக்காவில் இருக்கும் ஜிகாதிகளும் தமிழ் பேசுறாங்க, ஃபாரூக் என்பவர் ஒப்பன்மவனேனு எல்லாம் லோக்கல் ஸ்லாங்கில் பேசி சிரிக்க வைக்கிறார் :-))

# ஒரு போஸ்டரைக்காட்டி இவரு பெரிய ஜிகாதி ,5,00,000 பரிசுனு ஒரு டயலாக் சொன்னதும்,தலிபான்கள் முதல்மரியாதை கொடுத்து நாயகரை குழுவில் சேர்த்துக்கொள்கிறார்கள், இதற்கு மண்டையில மூளை என்ற வஸ்துவே இல்லாதவர்கள் என  தலிபான்களை சொல்லி இருக்கலாம் ;-))

தலிபான் மற்றும் அல்கயிதாவில் ஊடுருவலை செய்ய  முடியமால் ஆனானப்பட்ட சிஐஏ வே முழிக்க காரணமே அவர்களின் செயல்படும் முறையே, எந்த ஒருவருக்கும் ஒரு நிலைக்கு மேல் அடுத்த நிலையில் யார்,என்ன செய்கிறார்கள் என்றே தெரியாது, முல்லா ஓமர், ஓசாமவின் புகைப்படங்கள் என காட்டப்படுவதே பல காலத்திற்கு முன்னர் எடுத்தவை ,தற்போது முல்லா ஓமர் எப்படி இருப்பார் என தெரியாது, இந்த படமே அவருதான்னும் தெரியாது என சிஐஏ அதிகாரிகளே குழம்பிப்போய் கிடக்கிறார்கள்,அந்த அளவுக்கு ரகசியமான, பாதுகாப்பாக இயங்கக்கூடிய குழு தலிபான்கள்.

ஜிகாதியாக செயல்ப்படும் நபர் ஒரு தனிநபரேயல்ல, அவர் ஏதேனும் ஒரு ஜிகாதி குழுவில் இருந்தேயாக வேண்டும்,எனவே ஒரு ஜிகாதிப்பற்றி குழுவில் இருப்பவருக்கு நன்கு தெரியும், அக்குழுக்களைப்பற்றி தலிபான்,அல்கயிதா போன்றோர்க்கு நன்கு தெரியும்,எனவே ஒரு ஜிகாதியைப்பற்றி எக்குழுவை சேர்ந்தவர் என்பதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

அப்படி இருக்கும் போது ஒரு தனி நபர் ரா தேடும் புகழ்ப்பெற்ற ஜிகாதியாக தனியே உருவாவது இஸ்லாமிய ஜிகாதி செயல்பாட்டில் இல்லை, அப்படியே யாரேனும் எந்த ஜிகாதிக்குழுவுக்கும் அறிமுகமே இல்லாமல் ,தன்னம் தனியே உருவாகி இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்து தங்களுடன் இணைத்து இருப்பார்கள், இப்படி ரா நோட்டீஸ் போட்டப்பிறகு தான் ஆள் யார்னே தெரிகிறது என்றால் நம்பவே மாட்டார்கள்.

அப்படியே திடீர் என முளைத்த ஒரு ஜிகாதி வந்தாலும் கண்காணிப்பில் தான் வைத்திருப்பார்கள்,ஆனால் வந்ததும் என்னமோ "National security guards commando Training"எடுத்து வந்த சிறப்பு அதிகாரிப்போல கூப்பிட்டு எல்லாருக்கும் பயிற்சிக்கொடுக்க வைக்க மாட்டாங்க,அதை விட எல்லா திட்டம் பற்றியும் புதுசா வந்த ஆளுக்கிட்டே எப்படி ஒப்புதல் வாக்குமூலம் போல சொல்லுவாங்க, தலிபான்களின் முக்கிய தலைவருக்கு தவக்களை அளவுக்கு கூட மூளை வேலை செய்யாது என்பது போல படத்தில் காட்டியிருப்பார்.

ஷியாவோ,சன்னியோ,அகமதியாவோ அவர்கள்  இருக்கும் ஊர் ஜமாத்தில் இணைந்திருப்பார்கள், அங்கே குடும்ப விவரமும் இருக்கும், அப்படி செய்யவில்லை என்றால் ,இறந்த பின் புதைக்க இடம் கொடுக்க மாட்டார்கள்,மேலும் திருமணத்தையும் ஜமாத்தில் பதிவு செய்ய முடியாது.
இஸ்லாமிய சமுதாயத்தில் ஜாமாத் முறையில் உள்ள சிறப்பு என்னவென்றால் ஒருவர் எந்த ஊருனு சொன்னாப்போதும் ,அவரோட ஜாமத்தை தொடர்பு கொண்டால் போதும் மொத்த ஜாதகமும் வெளியில் வந்துவிடும்.

அரபி,உருது என எதுவுமே தெரியாத ஒருவர் ,விஸாம் அகமத் காஷ்மீரி, சயீத் காஷ்மீரி பையன் என சொன்னவுடன் உண்மையான தாலிபான்களா இருந்தா வாயப்பொளந்துக்கிட்டு ஒத்துக்க மாட்டாங்க, எந்த ஊரு ஜமாத்துனு கேட்டு மொத்த விவரமும் தெரிஞ்சுக்கிட்டு, உளவாளி இல்லைனு உறுதிப்படுத்திப்படுத்தாமல் கிட்டே சேர்க்கவே மாட்டாங்க, உளவாளினு தெரிஞ்சா  வெட்டி ஊறுகாய் போட்டிட மாட்டாங்க.இது போன்று ஜிகாதி அமைப்புகள் மிக நெருக்கமாக பின்னப்பட்ட வலையாக செயல்ப்படுவதால் தான் சிஐஏ போன்ற உளவு நிறுவனங்களால்,ஊடுருவி தகவல்களையே அறிய முடியமால் சிரமப்படுகின்றன.

#இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதும் ஆப்கானில் நடந்ததை சொன்னேன் ,எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு எனவே தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்க்க தேவையில்லை என்றார், அவர் சொல்வது உண்மை எனில் உயிருடன் இருக்கும் முல்லா ஓமர் கதாப்பாத்திரத்தை எப்படி வில்லனாக சித்தரித்தார்? இந்திய சென்சார் போர்டு விதிப்படி உயிருடன் இருப்பவரைப்பற்றி படம் எடுக்க வேண்டும் எனில் அவரிடம் இருந்து தடையில்லை என சான்று பெற வேண்டும்.

நாயகன் படம் எடுத்த போது, அப்பொழுது உயிருடன் இருந்த வரதா பாயின் கதை என சொன்னதால் சென்சார் போர்டு சான்றளிக்க மறுத்த சம்பவத்தினை ,சமீபத்தில் கூட தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் நினைவு கூர்ந்தார்.
செய்தி:

//After the completion of shooting Kamal Haasan and Mani Ratnam had a press meet, where they made a statement that the movie was based on Varadaraja Mudaliar’s life. After this, the censor board at Chennai refused to permit the release of the movie, since it was based on a living person. I appealed to the revising committee at Bombay. They said that they would permit us to release the film if I got a letter stating that it was not based on Varadaraja Mudaliar’s life. I asked Kamal Haasan to help me. He simply refused, stating that he was busy shooting another movie. Hence, with great difficulty, I contacted Mathiolli Shanmugam, a writer and good friend of mine, and through him met Varadaraja Mudaliar, who gave us a letter. Only then did the Censor appellate board at Bombay permit us to release the film. To call the movie his “baby” and not be bothered about its release is a reflection on Kamal Haasan’s ‘sincerity’.//

அதனடிப்படையில் பார்த்தால் சென்சார் போர்ட் இப்படத்திற்கும் சான்றளிக்க மறுத்திருக்க வேண்டும், இதன் அடிப்படையில் தான் அரசு வழக்கறிஞர் உயர் நீதி மன்றத்தில் சென்சார் சான்று அளித்ததில் முறைகேடு என வாதிட்டு இருக்க வேண்டும்,ஆனால் மக்களோ சிரித்தார்கள்.

ஒரு வேளை வெளிநாடாகிய ஆப்கனில் ஒருவர் உயிருடன் இருந்தால் என்ன என சென்சார் போர்ட் நினைத்திருக்கலாம், அல்லது முல்லா ஓமருக்காக யாரும் வழக்குப்போட போவதில்லை என நினைத்திருக்கலாம்.

# வேர்ஹவுசில் இருந்து தப்பி வெளியில் ஓடிவரும் பூஜாவுக்கு என ஒரு கார் சாவியுடன் ,திறந்தே காத்து நிற்கிறது ,ஒரு வேளை  உதவி மனப்பான்மையுள்ள தீவிரவாதிகள் போல :-))

#வேர்ஹவுஸ் சண்டைக்காட்சிக்கு பின்னர் ,வீட்டுக்கு வந்து தையல் போட்டு,முடிவெட்டிக்கொண்டிருக்கும் பொழுது அங்கே எப்படி FBI சரியாக வர முடிந்தது,அக்காட்சிக்கு பின்னரே ஓமர் FBI யில் சொல்லலாம் என போன் செய்வதாகவும் காட்சி வருகிறது.

#அதனை தொடர்ந்து வரும் கார் சேசிங் காட்சியின் போது ஓமர் பக்கவாட்டில் ,நாயகர் குழுவினை விரட்டி வருகிறார், மிக முக்கிய புள்ளியான ஓமரே கண் முன்னே வரும் போது அவரை மடக்கி பிடிக்க நினைக்க வேண்டாமா?

பின்னால் FBI  வருகிறது எனலாம், ஆனால் கடைசியில் FBI  இடம் மாட்டிக்கொண்டு ,நான் ஆனானப்பட்ட ரா ஏஜண்ட் என இந்திய பிரதமரையே பேச வச்சு சொல்லும் வேலையை ,ஓமரைப்பிடித்துக்கொடுத்துவிட்டு ,சொல்லி இருக்கலாம், டர்ட்டி பாம் டென்ஷனே இல்லாமல் படம் அங்கேயே முடிந்து இருக்கும்,நமக்கும் தலைவலி மிச்சம் :-))

அல்லது FBI  விரட்டிக்கொண்டு இருக்கும் போதே ஓமர் குழுவினரை விரட்டி ஒரு டபுள் சேஸ் ஆக வைத்து செம ஆக்‌ஷன் சீனாக காட்டியிருக்கலாம்.

அது என்னமோ தெரியலை பரபரப்பான நகரத்தில் சேசிங் நடக்குது ஒரு இடத்தில் கூட டிராபிக் சிக்னல் இல்லை, ரெட் விழலை, ரோட்டில் டிராபிக் நெரிசல் இல்லை, ஃப்ரியா சொய்ங்க்...சொய்ங்க்னு கார் ஓட்டிக்கிட்டுப்போறாங்க :-))


டர்ட்டி பாம்:

# கிளைமாக்சில் சீசியம் டர்ட்டி பாம் என தெரிந்த பின்னும் FBI  சும்மா நாலுப்பேரோட போய் ரவுண்ட் அப் செய்கிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில்., அணு வெடிப்பொருள்,கதிர்வீச்சு சம்பந்தமான புலனாய்வு மற்றும் பாதுகாப்புக்கு என அமெரிக்காவில் தனியே
Department of Energy, Office of Intelligence and Counterintelligenceஎன ஒருத்துறை உள்ளது.அதே போல 16 வகையான புலனாய்வு அமைப்புகள் அமெரிக்காவில் உள்ளன, அங்கே  FBI என்பது நம்ம ஊரு சிபிஐ போல கொஞ்சம் டம்மியான அமைப்பே ஆனால் கடைசி வரை  FBI தவிற வேறு யாரும் எட்டிப்பார்க்காதது போல காட்டியிருப்பார்கள்.

சீசியம்-132 என்பது அறை வெப்ப நிலையில் திரவமாக இருக்கக்கூடிய ஒரு உலோகம், இதன் ஐசோடோப்பான சீசியம்-137 க்கு தான் கதிரியக்க தன்மை உண்டு.

மேலும் அணுநிறை எண் -137, அணு எண்-55 உள்ள சீசியம் ஐசோடோப் ஒரு அணுப்பிளவை உபப்பொருள், அதற்கு அயனியாக்கும் காமா கதிர்வீச்சினை வெளியிடும் தன்மை உண்டே ஒழிய ,நியுட்ரானை வெளியிடும் தன்மையில்லை, அதனால் அணுப்பிளவை வினையினை தொடர்ந்து செய்ய முடியாது,அதாவது சீசியம்-137 கொண்டு அணுகுண்டு செய்ய முடியாது.அதற்கு செயின் ரியாக்‌ஷன் செய்யக்கூடிய யுரேனியம்,புளுட்டோனியம் போன்ற அணுப்பொருட்கள் தேவை.

யுரேனியத்தில் பல ஐசோடோப்புகள் உண்டு, யு-238 என்பது பொதுவாக கிடைக்கக்கூடியது அதற்கு அணுப்பிளவு ,கதிரியக்கம் இல்லை, ஆனால் யு-235 என்ற ஐசோடோப்புக்கு உண்டு, இது 0.75%  அளவே இயற்கையில் உள்ளது, எனவே யு-238 ஐ என்ரிச் செய்து 3-4% யு-235 கொண்டதாக மாற்றியே அணு உலைகள்,மற்றும் அணுகுண்டுகளில் பயன்ப்படுத்துகிறார்கள்.



அவ்வாறு அணுப்பிளவை நடக்கும் போது மட்டுமே சீசியம் -137 உருவாகும், இயற்கையில் ,அவ்வுலோகம் பூமியில் இல்லை. நியுக்ளியார் வெடிப்பின் போது ஏற்படும் Fall out இல் சீசியம் 137 இருக்கும், இதன் அரை ஆயுட்காலம் 30 ஆண்டுகள் ,அது வரையில் அணுகுண்டு வெடித்த இடத்தில் கதிர்வீச்சு இருக்கும்.



மேலும் அணு உலைகளில் பயன்ப்படுத்திய யு-235 அணு எரிப்பொருள் ராட்களில் இருந்து சீசியம்- 137  பிரித்தெடுக்கப்பட்டு ,புற்று நோய்க்கான ரேடியோ தெரபி மற்றும் ஸ்கேனிங் போன்றவற்றிற்கு பயன்ப்படுகிறது.

டர்ட்டி பாம் எனப்படும் சீசியம் -137 கொண்ட பாம் அணுகுண்டு அல்ல,  ஒரு சாதாரண வெடிப்பு பொருள்களான ஆர்.டிஎக்ஸ்,சி-4,டி.என்.டி  என ஏதேனும் ஒன்றினை கொண்ட ஒரு வெடி குண்டே, அதனுடன் சீசியம் குளோரைடு உப்பினை தூளாக இணைத்து தயாரிக்கப்படும் வெடிகுண்டாகும், வெடிப்பொருள் வெடிக்கும் போது காற்றில் சீசியம்-137 துகள்கள் பரவி கதிரியக்கத்தினை உண்டாக்கும். அதன் மூலமே மனிதர்களுக்கு தீங்கு உருவாகும்.

எனவே டர்ட்டி பாம் இருக்கு என தெரிந்தது அந்த இடத்துக்கு FBI  செல்லும் போது கூட "பாம் ஸ்குவாடினை'அழைத்து செல்லாமல் தேமே எனப்போவது போலக்காட்டியிருப்பது FBI  ஐ உள்ளூர் டி-1 போலிஸ் ஸ்டேஷன் போலீஸ் அளவுக்கு காமெடியாக காட்டுகிறது.

நியுக்ளியர் ஆன்காலஜி:

# இதில் இன்னொரு காமெடி நியுக்ளியர் ஆன்காலாஜியில் டாக்டர் பட்டம் பெற்ற நாயகி FBI  அதிகாரியிடம் சீசியம் டர்ட்டி பாம் பற்றி தெரியும் என சொல்ல இரண்டாம் வாய்ப்பாடு சொல்வது போல அணு எண்,நிறை எண்,மெல்டிங் பாயிண்ட் என எல்லாம் சொல்வார், உடனே உங்களுக்கு நிறைய தெரியுது என FBI  ஆபிசர் பம்முவார், ஆனால் நாயகி மூச்சுவிடாமல் சொல்லுவது கதிரியக்கமற்ற சீசியம் 132 பற்றி ,அணு எண் 55, நிறை எண்-132.09 என சொல்வார் ,கொஞ்சம் டயலாக்கையும் கவனிங்க மக்களே :-))

நியுக்ளியர் ஆன்காலஜி படிக்க அடிப்படையில் மருத்துவம் படித்திருக்க வேண்டும், ஆன்காலஜி நர்ஸ் ஆக இருக்க நர்சிங் பட்டம் படித்திருக்க வேண்டும், விலங்குகளுக்கான ஆன்காலஜி படிப்பும் உள்ளது அதற்கு கால்நடை மருத்துவம் படித்திருக்க வேண்டும்.
(வெரி "ஷார்ப்"ஆன்காலஜிஸ்ட்)


ஆனால் படத்தில் நியுக்ளியர் ஆன்காலஜியில் தான் டாக்டர் அவருக்கு  மருத்துவம் தெரியாது என ,காயத்துக்கு தையல் போடும் காட்சியில் லோகநாயகர் சொல்கிறார் :-))

நியுக்ளியர் பிசிக்ஸ் போன்றவை தான் ஆய்வு மருத்துவப்படிப்பு,ஆன்காலஜிக்கு மருத்துவம் படித்திருக்க வேண்டும்.

//You will need a degree in medicine and obtain a license.  In addition, you will likely need to undergo residency training in oncology and a license to practice oncology.  Depending on where you live, you may first need to complete a Bachelor's degree before going into medical school to obtain the degree in medicine.  Students in certain countries may enter medical school directly from high school. //
link:
http://admissionsuccess.com/Types/medicalspecialties/oncologist.htm

நான் கேள்விப்பட்டதை வைத்து சொல்கிறேன்,யாரேனும் மருத்துவர்கள் சரியா எனக்கூறவும். இணையத்திலும் நான் சொன்னது போலவேயுள்ளது.


# ஆஃப்கானில் ஓப்பியம் வியாபாரியின் 'ஓப்பியத்தில்'டிராக்கர் டிவைசை மறைத்து வைக்கிறார், அந்த ஓப்பியம் வியாபாரி அதனை யாருக்கேனும் ஓப்பியம் என வழக்கம் போல அன்பளிப்பாகவோ,அல்லது விற்றோ இருந்தால் என்ன செய்ய? மேலும் அந்த ஓப்பிய வியாபாரி ஓசாமாவை பார்க்க கண்டிப்பாக வருவார் என என்ன நிச்சயம்,அல்லது வரும் போது ஓப்பிய பார்சலை மூட்டைக்கட்டிக்கொண்டு வருவான் எனவும் சொல்ல முடியாதே? அப்படி இருக்கும் போது ஓப்பியத்தில் வைத்து வியாபாரியின் பையில் வைப்பது நேட்டோ படைக்கு இடம் அறிய உதவுகிறது  என காட்டுவது ரொம்ப கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது.

மேலும் இப்பொழுது உள்ள நவீன மின்னணு தொழில்நுட்பத்திற்கு "பழைய கால டிரான்ஸ்ஸிஸ்டர் ரேடியோ"அளவுக்கா டிராக்கர் டிவைஸ் செய்வாங்க, அதுவும் ரெட் "led light"வேற கண்ணை சிமிட்டிக்கிட்டு இருக்கும்:-))

சின்னதா ஒரு பாரசிட்டமால் டேப்லெட் அளவுக்கெல்லாம் டிராக்கர் டிவைஸ் உள்ளதாக பழைய படங்களிளேயே காட்டியாச்சு, இவ்வளவு ஏன் சமீபத்தில் வந்த துப்பாக்கிப்படத்தில் விஜய் ஒரு டிராக்கர் டிவைசை உடம்புக்குள் இஞ்செக்ட் செய்வதாக தமிழ்ப்படத்திலேயே காட்டியாச்சு :-))

அமெரிக்காவை விட அட்வான்ஸ் டெக்னாலஜியை  இந்திய ராணுவ நுண்ணறிவு துறை பயன்ப்படுத்துகிறது என இக்காட்சியின் மூலம் லோகநாயகர் காட்டியதாக நாம் பெருமைப்படலாம் :-))

# ஆஃப்கானில் ரா ஏஜண்ட் வேலை செய்யும் போது அமெரிக்க நேட்டோ படைகளுடன் ஒரு கூட்டு வேலை என்பதாக காட்டிவிட்டு, நியுயார்க்கில் அமெரிக்க அரசுடன் ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் தனியே ஏன் ரா வேலை செய்ய வேண்டும்? இங்கும் ஜாயிண்ட் ஆபரேஷன் என்றல்லவா காட்டியிருக்க வேண்டும்.

அப்படி தனித்தே ஒரு நாட்டின் உளவு அமைப்பு இன்னொரு நாட்டில் ஒரு வேலை செய்தால்  ,அது அந்த நாட்டை காக்க என சொன்னாலும் அதுவும் உளவு வேலையே,அப்படி எல்லாம் ரகசியமாக உளவு வேலை செய்தால் அதுக்கே ஆப்படிப்பாங்க,அந்தளவுக்கு ரகசியமாக உளவு வேலை செய்து அமெரிக்காவை காப்பாற்ற வேண்டிய அவசியம் இந்திய அரசு நிறுவனமான ராவுக்கு ஏன்? மேலும் கொஞ்சம் தவறி ரா ஏஜண்ட் கொல்லப்பட்டோ அல்லது சரியாக கண்டுப்பிடிக்காமல் போய் குண்டு வெடித்திருந்தால் ,பின்னர் நடக்கும் புலன் விசாரணையின் போது ரா தான் அந்த வேலையை செய்தது என்ற பழியோ அல்லது ரா ஏஜண்ட் டபுள் ஏஜண்டாகிட்டார்னோ கதை மாறிவிடும். சொதப்பலாக எடுக்கப்பட்ட தாண்டவம் படத்திலேயே இதை காட்டியிருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் தாண்டவம் படத்தின் கதைக்கும் விஷ்வரூபம் படத்தின் கதைக்கும் பெரிய வித்தியாசமில்லை. தாண்டவத்தில் விக்ரம் இஸ்லாமிய ஜிகாதியாக ஊடுருவி ஒரு ஆபரேஷன் செய்வதாக ஆரம்பத்தில் லேசாக காட்டியிருப்பதை, இங்கே தலிபான் குழுவில் ஊடுருவுவதாக் விலாவாரியாக காட்டியிருக்கிறார்கள், தாண்டவத்தில் குண்டு வெடித்த பின் பழி வாங்குவார், இதில் குண்டு வெடிப்பை தடுப்பார், இரண்டுமே ரா ஏஜண்ட் கதை என ஏகப்பட்ட ஒற்றுமைகள்.

# வேர்ஹவுசில் ஒரு குண்டு, அப்பார்ட்மென்டில் ஒரு குண்டு என வெடித்த பின்னும் FBI எந்த வித தீவிரமும் காட்டாமல் சாவகாசமாக செயல்படுகிறது,  நடுவில் காமெடியான விசாரணைகள் வேறு!. ஓமர் சாவகாசமாக பிரைவேட் ஜெட் பிடிச்சு , போன் செய்து வெடிக்க வைக்கப்பார்ப்பார் :-))

ஆனால் இயல்பில் உடனே தேசமே ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு ,தீவிரமாகிவிடுவார்கள்.

# நைஜீரியன் ,பேரு அப்பாசி, பணம் பரிமாறப்பட்டிருக்கு அப்போ அவன் தான் ஜிகாதி, டர்ட்டி பார்ம் வெடிக்க வைக்க போறான்னு ரொம்ப தீவிரமான நிலையிலும் "wild guess"செய்துக்கொண்டா இருப்பார்கள்,நாயகி அப்போ சந்தேகம் கேட்பதாக காட்டி சமாளித்தாலும், அப்படி செய்வது புலனாய்வு அமைப்புகளின் சரியான செயல்பாடா? பட்டியலில் இருப்பவர்கள் அத்தனைப்பேரையும் அள்ளிக்கிட்டு வந்து விசாரிக்க வேண்டாமா?

அப்பாசியை "மார்க்"செய்த பின்னரும் அவனை அப்படியே போக விட்டு அவன் செய்வதை எல்லாம் வேடிக்கையா பார்ப்பார்கள்,பார்த்தவுடன் கோழி அமுக்குவதை போல அமுக்கி விசாரிக்க வேண்டாமா? ஒரு வேளை வீட்டுக்குள் போனதும் பாம்மை வெடிக்க செய்திருந்தால் என்ன செய்வார்களோ?

மேலும் மிக முக்கியமான "மாஸ்டர் மைண்ட்"ஓமர் நியூயார்க்கில் இருப்பதை FBI க்கு சொல்லி அலர்ட் செய்திருந்தால் யாரும் தப்பிவிடாமல் கண்காணிக்க இயலும்,ஆனால் அப்படி செய்யாமல் இவர்கள் பாட்டுக்கு அப்பாசியை தேடிக்கொன்டு போய்விடுவார்கள்,உண்மையில் அப்பாசி ஜிகாதி இல்லை எனில் ஓமர் வெடிக்க வைத்துவிட்டு கிளம்பிவிட மாட்டாரா?

இரட்டைக்கோபுர வெடிப்புக்கு பின், ஓசாமா பின் லேடன் வேட்டைக்கு பின் ,ஓமர் ஜாலியாக நியுயார்க் வீதிகளில் SUV ல  ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து  சுத்திட்டு ,டர்ட்டி பாம் செட் செய்துவிட்டு ,பிரைவேட் ஜெட் புடிச்சு தப்பிக்கிறார், ஆனால் எந்த பதட்டமும் இல்லாமல் அமெரிக்க அரசு இயந்திரம் செயல்படுகிறது,இப்படிலாமா அசட்டையாக அமெரிக்க உளவுத்துறை செயல்படும், ஆனாலும் ரொம்ப ஓவரா FBI  ஐ ஸ்பூஃப் செய்திருக்கார் லோகநாயகர் :-))


#ஃபாரடே ஷீல்ட்:



மைக்ரோ வேவ் ஓவன் என்பது ஒரு இன்வெர்ட் ஃபேரடே கேஜ் வகையாகும், மைக்ரொ வேவ் ஓவனில் இருந்து கதிர்வீச்சு வெளியில் வராமல் தடுக்கவல்லது, ஆனால் உள்ளே செல்வதை 100% தடுக்காது.

மேலும் ஓவன் மூடி இருக்கும் போது தான் ஃபேரடே ஷீல்ட் ஆக செயல்பட முடியும், முழுவதும் மூடிய நிலையிலேயே 100% கதிர்வீச்சை தடுப்பதில்லை என்பதால், பேஸ் மேக்கர் போன்ற கருவிகள் பொருத்தியவர்கள், மைக்ரோவேவ் ஓவன் செயல்படும் போது அருகில் செல்லக்கூடாது என அறிவுறுத்தல் உண்டு.பொதுவாக மைக்ரோவேவ் ஓவன் செயல்படும் பொழுது ஒரு மீட்டர் தூரம் தள்ளியே இருப்பது உடல் நலத்திற்கு நல்லது என்கிறார்கள்.


அப்படி இருக்கும் போது மைக்ரோ வேவ் ஓவன் மூடியை திறந்த நிலையில் ,டர்ட்டி பாமின் மீது கவிழ்த்துவிட்டு ,அது செல்போன் சிக்னலை தடுக்கிறது ,ஜீனியஸ் என்பதெல்லாம் காதுல பூக்கூடையை வைக்கும் வேலை :-))

நீங்களும் செய்யலாம் ஃபேரடே ஷீல்ட்:

செல்போனை ,அலுமினியம் ஃபாயில் கொண்டு நன்கு சுற்றி வைத்துவிட்டாலே போதும் ,சிக்னல் கிடைக்காது. அலுமினியம் ஃபாயில் எலெக்ட்ரோ மேக்னடிக் சிக்னல்கள் ஊடுருவ அனுமதிக்காது,எதிரொளித்து திருப்பிவிடும்!

ஏற்கனவே சொன்னது போல டர்ட்டி பாம் என்பது அணுகுண்டு அல்ல, அதில் உள்ள வழக்கமான வெடிப்பொருளை வெடிக்காமல் செயலிழக்க செய்ய பாம் ஸ்குவாடாலேயே முடியும் ,என்பதால் FBI  பாம்ஸ்குவாடினை அழைத்து சென்றிருந்தாலே போதும்.

ஆனால் படத்திலோ FBI  என்பது தெண்ட தீவட்டிகளின் கூடாரம் என்பதாக காட்டியிருப்பார்கள் ,அமெரிக்காவில் ரிலீசான படத்தை உண்மையான FBI  காரன் மட்டும்  பார்த்தான் ஃப்ளைட் புடிச்சு வந்து லோகநாயகரை என்க்கவுண்டர் செய்தாலும் செய்யக்கூடும் :-))

# தாலிபான்,FBI.CIA.Raw,டர்ட்டிபாம், சீசியம்,ஆன்காலஜி, என சீரியசாக சொல்லவேண்டிய சப்ஜெக்டினை காமெடியாக தப்பும் ,தவறுமாக சித்தரித்து படம் எடுத்திருப்பதே ஸ்பூஃப் செய்யத்தான் என்பதை  புரிந்துக்கொள்ள உலக அரசியல்,பொது அறிவு தேவை என்பதால் தான் லோகநாயகர் அப்படி சொன்னார் என்பது இப்பொழுது புரிந்து இருக்குமே :-))

# படத்தில் பாராட்ட ஒன்றுமேயில்லையா என நினைக்கலாம், ஆப்கான்,அமெரிக்கா என கொஞ்சம் மாறுப்பட்ட களத்தில் கதையினை காட்டியிருப்பது, ஹாலிவுட்  வார் ஆக்‌ஷன் படங்களை பார்த்தவர்களுக்கு ரொம்ப பழகி இருந்தாலும் மற்றவர்களுக்கு புதுசா தெரிய வாய்ப்புண்டு.

ஹெலிகாப்டர், டாங்க்,துப்பாக்கி ,ராகெட் லாஞ்சர் என காட்டி ஏகப்பட்ட பட்டாசு வெடிக்க நிறைய செலவு செய்திருக்கிறார், அரங்க அமைப்புக்கே நிறைய செலவு செய்து ஓரளவு தத்ரூபமாக காட்டியுள்ளார்.

பல ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகள் தனி ,தனி ஷாட்களாக எடுத்து இணைத்துள்ளார் ,ஏரியல் வியுவில் காட்டினால் செட் போட்டிருப்பது தெரிந்துவிடும் என தவிர்த்து முடிந்த வரையில் செட்டினை அறிய முடியாமல் ,செட்,பின்னணி லேன்ட் ஸ்கேப், ஹெலிகாப்டர் என தனி லேயர்களை கொண்டு கம்போஸிட்டிங் செய்து இயல்பாக காட்ட முயற்சித்து இருப்பது.

ஆப்கான் காட்சிகள்,லேண்ட் ஸ்கேப் என ஜோர்டான்,பெட்ரா ஆகியப்பகுதிகளில் கொஞ்சமே கொஞ்சம் எடுத்து இணைத்துவிட்டு , முழுக்க அப்பகுதி என நம்ப வைத்தது.

சேகர் கபூர் தவிர அனைவருக்கும் ஒட்டு தாடி வாங்கிக்கொடுத்து, ஓரளவுக்கு இயல்பாக காட்டியிருப்பது, ஒட்டுத்தாடி பசையின் பிடுங்களுக்கும் நடுவில் அனைவரும் இயல்பாக நடித்திருப்பது என சொல்லலாம்.

#இந்த படத்துக்கு இரண்டாம் பாகம் வரும்னு வேற மிறட்டுறார்,சோதனை மேல் சோதனை :-))

இப்போது  மார்க்கப்பந்துக்கள் உபயத்தால் கல்லாக்கட்டிட்டார், அடுத்தப்பாகத்தினை கண்டுக்காம விட்டாலே காணாமல் போயிடும்,செய்வார்களா?
-------------------------------


பிற்சேர்க்கை:

IMDB RATING:

படம் வருமுன்னர் டிடிஎச், பின்னர் மார்க்கப்பந்துக்கள் எதிர்ப்பு,தடை என்ற வகையில் விளம்பரம் அள்ளியது போல இப்பொழுது திடீர் என IMDB RATING வைத்து விளம்பரம் கிளப்ப சில விசிலடிச்சான் குஞ்சுகள் திட்டம் போடுவதாக தெரிகிறது, இந்த IMDB RATING பின்னால் உள்ள சூட்சமத்தினைப்பார்ப்போம்.

# IMDB  இணைய தளத்தில் ,ஒரு மெயில் ஐடி கொடுத்து யார் வேண்டுமானாலும் ஒரு பயனர் கணக்கு துவக்கிக்கொண்டு ,பிடிச்ச படத்துக்கு ஓட்டு குத்தலாம்.

# ஒரு மெயில் ஐடி- ஒரு அக்கவுண்ட்- ஒரு ஓட்டு என IMDB வகுத்துள்ளது, எனவே நிறைய மெயில் ஐடி உருவாக்கி,நிறைய கணக்கு துவக்கி ,நிறைய ஓட்டினை யார் வேண்டுமானாலும் போட முடியும்.

# இதனால் படம் வந்ததும் ,நிறைய ஓட்டுக்கள் விழுந்து எளிதில் முதலிடம் வரும் வாய்ப்புள்ளது.

# சில நாட்களுக்கு பின்னர் புதிய வாக்குகள் வரவில்லை எனில் ,ஆரம்பத்தில் இருந்த ரேட்டிங் குறைய ஆரம்பிக்கும்.

உ.ம்: ஆரம்பத்தில் சுமார் 10,000 வாக்குகளுடன், IMDB RATING -9.5 பெற்று ஒரு படம் முதலிடத்தில் இருக்கலாம்,ஆனால் தொடர்ந்து புதிய வாக்குகள் விழவில்லை எனில் ,ரேட்டிங் 9.5 இல் இருந்து சரிந்து 2,3 எனக்கூட முடியும்.

காரணம் IMDB RATING அமைப்பில்  weighed average ஓட்டிங் என்ற முறையை பயன்ப்படுத்துகிறார்கள்.

#  weighed average ஓட்டு என்பது எப்படி எனில் நீண்ட கால ,மற்றும் ரெகுலர் ஓட்டர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் அனைத்து வாக்குகளும் சமமாக கணக்கிடப்பட்டு ரேட்டிங்க் காட்டுவார்கள், சில நாட்களுக்கு பின்னர்  weighed average ஓட்டுக்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய ரேட்டிங்கினை அறிவிப்பார்கள். இதன் மூலம் ஒருப்படம் வெளிவந்ததும் ஆர்வக்கோளாறில் பல கணக்குகள் துவங்கி ஓட்டுப்போட்டவர்களின் ஓட்டுக்களின் மதிப்பு குறைக்கப்படும்.

மேலும் தொடர்ந்து ஓட்டுக்கள் விழுந்துக்கொண்டிருந்தால் மட்டுமே , ரேட்டிங்க் தக்க வைக்கும் வகையில் IMDB RATING இயங்குகிறது.

# ஆல் டைம் பெஸ்ட் மூவிக்களுக்கு இம்முறையுடன், IMDB இணையதள நிர்வாகிகளிடமும் வாக்குகள் பெறப்படும்,அதன் அடிப்படையில் வெயிட்டட் ஆவரேஜ் கணக்கிட்டு ரேட்டிங் கொடுக்கிறார்கள்.

#IMDB RATING முறையில் அனைத்து வாக்குகளும் சம மதிப்பில் இல்லை,எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை வெளியிட மாட்டோம் என IMDB நிர்வாகம் அறிவித்துள்ளது.

எந்திரன் வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டதால் அதன் ரேட்டிங்க் தற்சமயம் குறைவாகவே இருக்கும், தற்போது வெளியான படமென்பதால் விஷ்வரூபத்தின் ரேட்டிங் உயர்வாக இருக்கும், இன்னும் சில நாட்கள் போனதும் ,வெயிட்டட் ஆவெரேஜ் முறையில் ரேட்டிங் குறைந்து விடும் :-))

IMDB RATING செயல்படும் முறைப்பற்றி IMDB இணைய தளத்தில் விளக்கங்கள் உள்ளது.

இங்கு காணலாம்:

http://www.imdb.com/help/show_leaf?votestopfaq
---------------------


பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.larouchepub.com/other/1995/2241_golden_crescent.html

http://www.unodc.org/unodc/en/drug-trafficking/index.html

http://www.un.org/apps/news/story.asp?NewsID=39186

http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/heroin/etc/history.html,

விக்கி,கூகிள்,IMDB. இணைய தளங்கள்,நன்றி!
------------------------------

பரிணாமம் சாத்தியமே- அறிவியல் சான்று.

$
0
0

(ம்ம்..இங்க வச்ச சப்ளாக்கட்டைய காணோமே, யாருப்பா எடுத்தா?)


ஏமக்குறைப்பு நோய் என தமிழில் அழைக்கப்படும் எய்ட்ஸ்(AIDS) நோய் HIV( Human Immunodeficiency Virus) என்ற வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.

HIV வைரசின் முதல் தொற்று தாக்குதல் மேற்கு ஆப்ரிக்க நாடான காங்கோ, கேமரூன் பகுதிகளில் இருந்தே துவங்கியது என அறியப்பட்டுள்ளது, சுமார் 1888 இலேயே முதல் தொற்று தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கணிக்கிறார்கள், ஆனால் 1927 இல் தான் இப்படி ஒரு நோய் உள்ளது என்றும் ,1980 இல் தான் இந்நோய்க்கு காரணம் HIV, வைரஸ் என்றும் கண்டறிந்தார்கள்.

HIV, the Human Immunodeficiency Virus, என்பது மனிதர்களிடம் முதலில் உருவாகவில்லை, ஆப்ரிக்க சிம்பன்சிகளில் ஒரு வகையான Pan troglodytes troglodytes என்ற குரங்கினத்திடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்கிறார்கள்.

சிம்பன்சி வகைக்குரங்கிடம் காணப்படும் வைரஸ் SIVs (simian immunodeficiency viruses) எனப்படும், இது மனிதர்களுக்கு எவ்வித தொற்றும் உண்டாக்காது, மேலும் அக்குரங்குகளுக்கும் எவ்வித நோயையும் உண்டாக்குவதில்லை, ஆனால் காலப்போக்கில் குரங்குகளின் உடலிலேயே வைரஸ்கள் மியுட்டேஷன் அடைந்து மனிதர்களுக்கும் தொற்றும் வண்ணம் மாறியிருக்க வேண்டும் எனவும், அப்படி மாற்றமடைந்த வைரஸ் தொற்று உள்ள குரங்குகளை வேட்டையாடி ,மாமிசம் உண்டப்போது வேட்டையாடியவர்களின் உடலில் இருந்த வெட்டுக்காயங்களில் சிம்பன்சிகுரங்கின் இரத்தம் பட்டு மியூட்டேஷன் அடைந்த SIVs (simian immunodeficiency viruses) மனிதர்களுக்கு தொற்றினை உண்டாக்கி இருக்கிறது.

தொற்று உருவாகும் வழிகள் என கீழ்க்கண்ட காரணங்களை சொல்கிறார்கள் ,

# சிம்பன்சி வகைக்குரங்குகளை வேட்டையாடிய பொழுது வேட்டைக்காரர்கள் உடலில் இருந்த காயம் மூலம் உள்நுழைதல்.

# காங்கோ நாட்டில் அக்காலத்தில் வாய் வழி மூலம் கொடுத்த போலியோ சொட்டு மருந்து சிம்பன்சி வகை குரங்கின் சிறுநீரகத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டுள்ளது,எனவே போலியோ சொட்டு மருந்து மூலம் பரவியது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை போலியோ சொட்டு மருந்து தயாரித்த அமெரிக்காவை சேர்ந்த "the Wistar Institute in Philadelphia"நிறுவனம் மறுத்துவிட்டது , macaque monkey kidney cells மூலமே மருந்து தயாரிக்கப்பட்டது ,அவற்றுக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என சொல்லிவிட்டார்கள்,ஆனாலும் இக்காரணம் இன்றும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

# காங்கோ பெல்ஜியத்தின் காலனியாகவும் கேமரூன் ஜெர்மனியின்  காலனியாகவும் இருந்தது ,அப்பொழுது அங்கு மலிவாக ரத்தம் சேகரிக்கப்பட்டு ,தேவையான நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளது, மேலும் சுத்திகரிக்கப்படாத ஊசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது ,இதனாலும் பரவியிருக்கலாம் என்கிறார்கள்.

# விபச்சாரம்,போதை பொருள் எல்லாம் சகஜமாக உலவிய பகுதி என்பதாலும் எளிதில் பரவியது, அங்கு பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட குறைவாக நிலவியதால் பாலிகேமி எனப்படும் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் என்ற நிலையும் நிலவியுள்ளதும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

# அமெரிக்காவின் சி.ஐ.ஏ நடத்திய பரிசோதனைகள் மூலமே ஹெச்.ஐ.வி வைரஸ் பரவியது என்ற கூற்றும் உள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள்,கருப்பின மக்களை அழிக்க செய்ததாக அமெரிக்காவிலேயே பெரும்பாலான மக்கள் ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார்களாம்.

மனித உடலில் தொற்று உருவாதல்:

ஹெச்.ஐ.வி வைரஸ் மனித உடலில் நுழைந்ததும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை தாக்கும் என அறிவோம்,ஆனால் அவற்றால் வெள்ளை அணுக்களில் எளிதில் நுழைய முடியாது அதற்கு ஒரு நுழைவு வாயில் தேவை ,அவ்வாறு செயல்படுவது CCR5 (C-C chemokine receptor type 5)எனப்படும் ரிசெப்டார்கள் ஆகும்,இது ஒரு கிளைகோ புரோட்டின் ஆகும். இதன் பின்னர் ஹெச்.ஐவி வைரஸ் CD4 (cluster of differentiation 4)  என்ற மற்றொரு கிளைக்கோ புரொட்டின் ரிசெப்டாரை தாக்கி இணையும், இதன் மூலமே மனித செல்லின் டிஎன்.ஏ வை ஹெச்.ஐவி வைரஸ் சென்றடையும். மனித செல்லின் டி.என்.ஏவின் பிரதி எடுக்கும் அமைப்பை வைரசின் ஆர்.என்.ஏ ரிவர்ஸ் டிரான்ஸ்கிரைப்டேஸ் மூலம் ஆர்.என்.ஏ பிரதி எடுக்கப்பயன்ப்படுத்திக்கொள்ளும், அப்பொழுது தான் பல வைரஸ்கள் பெருக முடியும், ஹெச்.ஐ.வி வைரசால் ஒரு உயிருள்ள செல் இல்லாமல் தனித்து வாழ முடியாது.


CD4 (cluster of differentiation 4) இன் வேலை என்னவெனில்  ஏதேனும் நோய் கிருமி உடலில் நுழைந்துவிட்டால் ,அதனை எச்சரித்து நமது நோய் எதிர்ப்பு அமைப்பினை இயக்குவதாகும். இவ்வாறு CD4 (cluster of differentiation 4) அறிவித்ததும் CD8 என்ற இன்னொரு கிளைகோ புரோட்டின் நோய்க்கிருமியை கொல்ல தேவையான ஆண்டிஜனை உற்பத்தி செய்யும். ஹெச்.ஐ.வி வைரஸ் சிடி4 இனை செயல்பட விடாமல் செய்து விடுவதால் ,நோய் எதிர்ப்பு ஆண்டிஜனை சிடி8 உற்பத்தி செய்யாமல் போய்விடுகிறது ,இதனால் தான் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது, இதனையே எயிட்ஸ் என்கிறோம். எயிட்ஸ் என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை செயல்படாமல் செய்யும் ஒரு தொற்று எனவே எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான வியாதிகளும் வந்து இறக்க நேரிடும், நமது நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படாததால் எந்த மருந்தும் வேலை செய்யாமல் போய்விடும்.

(HIV ON HUMAN CELL-ELECTRON MICROSCOP IMAGE)

இயற்கையில் எதிர்ப்பு:

CCR5 (C-C chemokine receptor type 5) டெல்டா-32 என்ற இன்னொரு வகை அல்லீல் ரிசப்டார்கள் சிலருக்கு இருப்பதை கண்டறிந்துள்ளார்கள், ஐரோப்பிய காக்கேசியன் வகை இனக்குழு மக்களில் சுமார் 20 சதவீதம் பேருக்கு இத்தகைய மாற்று அல்லீல் ரிசெப்டார்கள் உள்ளதாம். அவர்கள் இயல்பிலேயே ஹெச்.ஐ.வி தொற்றுக்கு எதிர்ப்பு சக்தியுள்ளவர்கள் என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

டெல்டா-32 வகை அல்லீல் ரெசப்டார்கள் ஹெச்.ஐ.வி வைரசினை நுழைய அனுமதிப்பதில்லையாம், எனவே வைரசால் மனித செல்லுடன் இணைய முடியாமல் அழிந்து விடுகின்றன.

இத்தகைய நோய் எதிர்ப்பு தன்மை உருவாக காரணம் ஆரம்ப நாட்களில் ஐரோப்பிய நாடுகளில் பிளேக் மற்றும் தட்டம்மை நோய்கள் பரவலாக பரவியது ,அப்பொழுது அதற்காக தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டதால் அவை CCR5 (C-C chemokine receptor type 5) ரிசப்டாரில் தற்செயலாக ஒரு மியுட்டேஷன் ஏற்படுத்தி டெல்டா-32 என்ற CCR5 (C-C chemokine receptor type 5) ரிசெப்டார்களை உருவாக்கி இருக்கலாம் என கணிக்கிறார்கள்.

இத்தகைய அல்லில்கள் இருப்பது ஹெச்.ஐவிக்கு முற்றிலும் பாதுகாப்பு எனவும் சொல்லிவிடமுடியாது ஆனால் எளிதில் நோய் தொற்றாமல் செய்கிறது என்கிறார்கள், எச்.ஐவி யால் பாதிக்கப்பட்டு கேன்சர் வந்தவர்களுக்கு டெல்டா-32 அல்லீல் உள்ளவர்களின் எலும்பு மஜ்ஜையினை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை அளித்த பொழுது, ஹெச்.ஐ.வி வைரசின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டுள்ளதாம்,எனவே டெல்டா-32 உள்ளவர்களின் ஸ்டெம் செல் கொண்டு சிகிச்சை அளித்தால் ஹெ.எச்.வியை குணமாக்கலாம் என ஒரு ஆய்வு நடக்கிறது.

வைரசின் பரிணாம வளர்ச்சி:

ஆரம்பத்தில் ஏற்பட்ட வைரஸ் தொற்றுக்களை மனித நோய் எதிர்ப்பு சக்தி முறியடித்துள்ளது,ஆனால் தொடர்ந்து சிம்பன்சி வகைகளை வேட்டையாடும் பொழுது தொற்று ஏற்பட்டுக்கொண்டிருக்கவே, SIVs (simian immunodeficiency viruses) மேலும் மியூட்டேஷன் மூலம் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதர்களை தாக்கும் வைரசாக மாற்றமடைந்துள்ளது என்கிறார்கள்.

மேலும் ஹெச்.ஐ.வியிலேயே இன்னொரு வகை ஹெச்.ஐ.வி-2 என உருவாகி இருப்பதையும் 1999 ஆம் ஆண்டு கண்டுப்பிடித்தார்கள். இவ்வைரஸ் sooty mangabey (the White-collared monkey) என்ற வகை குரங்கின் SIVs (simian immunodeficiency viruses) மூலம் உருவான ஹெச்.ஐ.வி வைரஸ் எனவே இதனை ஹெச்.ஐ.வி-2 என வகைப்படுத்தினார்கள்.

ஹெச்.ஐ.வி-1 வைரஸே மிக அதிக தொற்றினை உருவாக்கியுள்ளது, ஹெச்.ஐ.வி-2 மிக குறைந்த அளவிலேயே தொற்றினை உருவாக்கியுள்ளதாகவும், இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து புது வகை வைரசினையும் உருவாக்கின்றது எனவும் கண்டுப்பிடித்துள்ளார்கள்,இவ்வாறு செய்வதை viral sex"என்கிறார்கள்.

SURVIVAL OF THE FITTEST:

ஹெச்.ஐவி-1 வைரஸ் ஒரே நாளில் பல பில்லியன் எண்ணிக்கையில் பெருக வல்லவை ,இவ்வாறு பல்கி பெருகும் போது ,ஹெச்.ஐ.வியின் மரபியல் பொருளான ஆர்.என்.ஆ வும் பிரதி எடுக்கப்படும், இவ்வாறு அதி வேகமாக ஆர்.என்.ஏ மறு பதிப்பு  செய்கையில் ஆர்.என்.ஏவில் பல பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது,இதனால் பல புதிய வகை ஹெச்.ஐ.வி வைரஸ்கள் உருவாகின்றன ,அவற்றில் மனித உடலில் வாழ தகுதியுள்ளவை பிழைத்து ,மீண்டும் புதிய வைரஸ்களை உருவாக்கும்.

இதனை ஹெச்.ஐ.வி வைரசின் பரிணாம வளர்ச்சி என்கிறார்கள். உலகிலேயே அதி வேகமாக பரிணாம வளர்ச்சி அடையும் வைரசாக ஹெச்.ஐ.வி உள்ளது. இதனாலேயே ஹெச்.ஐ.வி தொற்றுக்கு உரிய மருந்தினை கண்டுப்பிடிக்க முடிவதில்லை.

ஒரு வகை மருந்தினை கொடுத்தால் அதனால் பெரும்பாலான வைரஸ்கள் அழிந்தாலும் சில மட்டும் தப்பிப்பிழைக்கின்றன, அவ்வாறு பிழைக்கும் வைரஸ்கள் அம்மருந்திற்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்கின்றன,பின்னர் சில நாட்களில் பல்கி பெருகி நோயை முற்ற வைக்கின்றன.

இது போன்ற  எதிர்ப்பு சக்தியை பூச்சிகளும் உருவாக்கிக்கொள்ள வல்லவை,இதனாலேயே பூச்சி மருந்துகளுக்கு பல பூச்சிகளும் கட்டுப்படாமல் விவசாயத்தில் பெரும் பாதிப்பு உண்டாகிறது, இவ்வாறு எதிர்ப்பு தன்மையை உருவாக்குவதும் பரிணாம வளர்ச்சியே.

எனவே ஹெச்.ஐவி தாக்கிய நோயாளிக்கு பலவகையான நோய் எதிர்ப்பு மருந்துகளை கூட்டாக கொடுக்க வேண்டும், பின்னர் தொடர்ந்து கண்காணித்து மேலும் சில நோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்து புதிதாக உருவாகிய வைரஸ்களை கட்டுப்படுத்த வேண்டும்,ஆனால் முற்றிலும் அழிக்க முடியாது.

படம்-1



ஒரு வகை மருந்தில் முதல் வகை வைரஸ் மட்டுமே அழிக்கப்படுகிறது ,தப்பிய மற்ற வகை வைரஸ் அப்படியே உள்ளது.

படம்-2



மேலும் சில வகை மருந்தினை கலந்து கொடுக்கப்படும் பொழுது மற்ற வகையும் அழிகிறது ஆனால் சில தப்பி பிழைத்து உள்ளது.

வகைகள்:

இவ்வாறு தொடர்ந்து மனித உடலில் ஹெச்.ஐவி வைரஸ் பரிணாமம் அடைந்து புதிய வகையினை உருவாக்கி வருவதால், எயிட்சை கட்டுப்படுத்த பரிணாம உயிரியியலாலர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது வரையில் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள ஹெச்.ஐ.வி வைரஸ்களின் வகைகள்.



ஹெச்.ஐ.வி வைரஸ் ஒரு பொது மூதாதையரிடம் இருந்து உருவாகி பல்கி பெருகியதை விளக்கும் பரிணாம மரம்:



இக்காலத்தில் ஒரு செல் கொண்ட நுண்ணுயிரான வைரஸ் பல பரிணாம மாற்றங்கள் அடைவதை ஹெச்.ஐவி வைரைஸ் மூலம் தெளிவாக பார்த்தோம், அப்படி இருக்கையில் ஆதிகாலத்தில் முதல் உயிரினமாக ஒரு செல் உயிரி உருவாகி தன்னிச்சையான மியூட்டேஷன் மூலம் பல உயிர்களாக பல்கி பெருகி இருக்க ஏன் முடியாது?

மேலும் வைரஸ் என்பதே உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் இடைப்பட்ட பாலமாக விளங்கும் ஒரு உயிர் அமைப்பாகும், சாதகமற்ற சூழலில் படிகமாக ஆகிவிடும், அப்பொழுது அது உயிரற்றது போன்றதாகும், மீண்டும் சாதகமான சூழலில் உயிர்ப்பெற்று விடும்,எனவே தான் வைரசினை எளிதில் அழிக்க முடியாது என்கிறார்கள்.

பேக்ட்டீரியா, வைரஸ் போன்றவற்றில் பரிணாம மாற்றம் நடைப்பெறுவதை உயிர் தொழி நுட்ப வல்லுனர்கள் ஆய்வங்களில் நிறுவியுள்ளார்கள்,எனவே உயிர்களிடமும் அத்தகைய பரிணாம வளர்ச்சி சாத்தியமேயாகும் என்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதுமானது, பொது அறிவு இல்லாமல் இன்னமும் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு என்பவர்கள் ஹெச்.ஐவி வைரசுடன் வாழ்ந்து பார்த்துவிட்டு ஒரு முடிவு சொல்லவும் :-))

தொடரும்(வவ்வால் நாடினால்)....
----------------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://evolution.berkeley.edu/evolibrary/article/medicine_04

http://www.avert.org/origin-aids-hiv.htm

http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(12)61052-6/fulltext

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
------------------------------

என்ன கொடுமை சார் இது-11

$
0
0

(ஹி...ஹி ஆடைக்கட்டி வந்த நிலவோ?)


வெட்கம் கெட்ட விளம்பர மோகம்!

கராத்தே வீரர் ஷிஹான் ஹீசைனி அடிக்கடி விளம்பரத்துக்காக எதையாவது செய்வார் ,அதுவும் அம்மையார் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் காலங்களில் எல்லாம் தன் மீது கவனத்தினை திருப்ப தவறாமல் ரத்தத்தில் படம் வரைவது, அல்லது கோணங்கி தனமாக  எதையாவது செய்து கவனம் ஈர்க்க முயல்வார், அதன் உச்சக்கட்டமாக்க இப்பொழுது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை செய்துள்ளார், சுமார் 11.5 லிட்டர் மனித இரத்தத்தினை மைனஸ் 27 டிகிரி செல்சியசில் உறைய வைத்து அதனைக்கொண்டு அம்மையாரின் மார்பளவு(BUST)  ஒரு சிலை செதுக்கியுள்ளார் , இதற்கு அவர் நடத்தும் வில்வித்தை பயிற்சி நிலைய மாணவர்களிடம் இருந்து  இரத்தம்  சேகரித்துள்ளார்,மேலும் அவர் ரத்தமும் பயன்ப்படுத்தி இருக்கிறார்.



இதற்காக எட்டு ஆண்டுகளாக அவரது இரத்தத்தினை சேகரித்து வைத்திருந்தாராம், இப்படி செய்வதற்கு பதில் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமாக கொடுத்திருக்கலாம், ஒரு யூனிட் இரத்தம் என்பது சுமார் 200 மிலி என நினைக்கிறேன், எனவே 11.5 லிட்டர் ரத்தமும் சுமார் 57 யூனிட் அளவுக்கு வருகிறது, சாதாரணமாகவே 2 யூனிட் இரத்தம் இருந்தாலே ஒரு மேஜர் ஆபரேஷன் செய்யலாம்,எனவே சுமார் 114 மேஜர் ஆபரேஷன்களை இவர் சிலை வடிக்க பயன்ப்படுத்திய ரத்தித்தின் மூலம் செய்திருக்கலாம்,அத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்,எத்தனையோ பேர் ஆபரேஷன்களுக்கு ரத்தம் கிடைக்காமல் அலைகிறார்கள், இணையம், தொலைக்காட்சி என விளம்பரமெல்லாம் கொடுக்கிறார்கள், ஆனால் ஒரு மனிதன் தனது அல்ப விளம்பர மோகத்திற்காக  விலைமதிப்பில்லா மனித இரத்தத்தினை சிலையாக்கி வீணடித்துள்ளார், இதனையும் தொலைக்காட்சிகள் செய்தியாக்கி மகிழ்கின்றன, இதற்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடையாதா?

என்ன கொடுமை சார் இது!
-------------------

கடலில் கரையும் கண்ணீர் துளிகள்!

இலங்கையில் முள்ளி வாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது ,அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் நக்கீரன் பத்திரிக்கை முதல் பல பத்திரிக்கைகளிலும்,இணைய தளங்களிலும்  வெளியானது,ஆனால் சில  தமிழக அரசியல் தலைவர்கள் இறப்பினை உறுதிப்படுத்தாமல் பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இவ்வாறு செய்வதால் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடரும் என நினைத்தார்களோ என்னமோ,ஆனால் அப்படிப்பேசியது ,நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை   உணரவிடாமல் மக்களை செய்து விட்டது என்பேன்.



சில ஆண்டுகள் கடந்த பின் இப்பொழுது சேனல் நான்கில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் துப்பாக்கியால் துளைக்கப்பட்டு இறந்த காட்சியினை வெளியிட்ட உடன் , தமிழக அரசியல் தலைவர்கள் இது நாள் வரையில்  கேள்வியேப்படாமல் இன்று தான் கேள்விப்பட்டது போல பேசுவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது, இவர்கள் ஈழ மக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது  எல்லாம் கட்டுக்கதையா?

கோரச்சம்பவம் நடந்த அன்றே உண்மையை விளக்கி  பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கும், ஆனால் மொன்னையாக ,தெளிவில்லாமல் பேசி நடந்த கோரச்சம்பவத்தின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்.

ஒரு போராளி ஒரு அதிகார மையத்திற்கு எதிராக போராடினால் அவனை மட்டுமே  எதிரியாக பார்க்க வேண்டும், ஆனால் அவனது குடும்பத்தினரையும் எதிரியாக நினைத்து ஒரு சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் அழித்துவிட்டு ,சர்வதேச அரங்கில் ஒரு நாட்டின் அதிபர் என தலை நிமிர்த்தி ஒரு  மனிதன் நடக்கிறான்,அதனை உலக நாடுகளும் வேடிக்கைப்பார்ப்பதை எல்லாம் பார்த்தால்,மனித குலம் நாகரிமடைந்துவிட்டது, நாம் வாழும் உலகம் ஜனநாயக விதிகளுக்குட்பட்டு இயங்குகிறது என்பதெல்லாம் வெறும் ஏட்டு சுரக்காயாக கற்பிக்கப்படும் சித்தாந்தங்கள் மட்டுமே என்பது தெளிவாகிறது.

மேலும் இராச பக்சே, பாலச்சந்திரன் படுகொலைக்கும் இலங்கை இராணுவத்துக்கும் தொடர்பில்லை என்கிறார் விட்டால் இலங்கைக்கும் ,இலங்கை இராணுவத்துக்குமே தொடர்பில்லை என்று சொன்னாலும் நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்போமாக :-))

நல்ல வேளை சின்னப்பையன் ,அப்பா போன துக்கம் தாங்காமல் ,ஒரு துப்பாக்கிய எடுத்து நெஞ்சில ஐந்து முறை அவனே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டான் என சொல்லாமல் விட்டார்களே என நிம்மதியடையலாம்.


இதில் சேனல் நான்கு பல தவணைகளாக ஆண்டுக்கணக்கில் காணொளிகளை வெளியிட்டு வருவதும் சரியல்ல, ஒரு கோரச்சம்பவத்தினை தங்கள் சேனலின் டி.ஆர்பி ரேட்டிங்க் அதிகரிக்க உதவும் ஒரு நிகழ்ச்சியாக பயன்ப்படுத்துகிறார்கள் ,மேலும் படுகொலைகளை படமெடுத்தவர்களோ நல்ல விலைக்கு பேரம் பேசி கொஞ்சம் கொஞ்சமாக விற்பதாகவும் தெரிகிறது, இதனை போர்க்குற்ற ஆவணமாக கருதி சரியான காலத்தில் முழுமையாக வெளிப்படுத்தினால் தான் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன் தரும், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அஞ்சலியாக அமையும், ஏன் எனில்  சேனல் நான்கின் காணொளிகள் மட்டுமே இப்பொழுது உள்ள ஒரே போர்க்குற்ற ஆவணம், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்த ஆவணப்படங்கள் காட்டப்பட்டுள்ளது, ஆனால் முழுமையாக காட்டாமல் பகுதியாக காட்டுவதால் சரியான தாக்கம் ஏற்படுத்தாமல் போய்விடக்கூடிய அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு சேனல் நான்கு செயல்ப்பட வேண்டும்.

பாலச்சந்திரன் படுகொலை குறித்து, விரிவாகவும் தெளிவாகவும் தனது கருத்துக்களை மூத்த பத்திரிக்கையாளரும் ,வலைப்பதிவருமான திரு. அமுதவன் அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளார்,அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

அமுதவன் பக்கங்கள்: பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்

# இதில் நம்ம ஊர் அரசியல் கட்சிகள் இன்னமும் வழக்கம் போல மேடைக்கச்சேரி மட்டுமே செய்துக்கொண்டுள்ளன. கழகமோ ராஜ்ய சபாவில் பேசி அதன் மூலம் மற்றக்கட்சிகளுக்கு புரிய வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வைப்போம் , ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியாவை ஓட்டளிக்க செய்வோம் என்கிறது, எனக்கு ஒன்னு விளங்கவில்லை  தி.மு.க மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தானே , கூட்டணிக்கட்சியாக மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தி ஒரு முடிவெடுக்க  வைக்க  முடியாதா? அப்படி பேசக்கூட முடியாத நிலையில் என்ன கூட்டணி வேண்டிக்கிடக்கு?

இதில் உட்சபட்ச கொடுமை என்னவெனில் ராஜ்யசபாவில் விவாதம் முடிந்த அன்றே காங்கிரசை சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் (சல்மான் குர்ஷித்) சொல்கிறார் ,இலங்கை எதிரி நாடல்ல, ஜெனிவாவில் என்ன முடிவெடுப்போம் என்பதை இப்பொழுது சொல்ல முடியாது என்கிறார், இதன் மூலமே ராஜ்யசபாவில் தொண்டைக்கிழிய பேசினால் எல்லாம் வேலைக்காவாது என்பது நன்கு புலப்படும்.

தி.முக இப்படி செய்வதற்கு பதில் கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிக்க முயற்சிக்கலாம் :-))

என்ன கொடுமை சார் இது!
--------------

படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம்!

வழக்கமாக மார்க்கப்பந்துக்கள் பரிணாமம் இல்லை ,உலகம்,உயிர்கள் அனைத்தும் அல்லா படைத்தார், விரித்தார் என கதை விடுவது வழக்கமே, ஆனால் அவர்களோடு சோடிப்போட்டுக்கொண்டு சில வைதீக மதப்பற்றாளர்களும் இப்பொழுது பரிணாமம் இல்லைனு கிளம்பி இருக்கிறார்கள்.

இதில் என்ன காமெடி எனில் , மார்க்கப்பந்துக்களை பொறுத்த வரையில் அறிவியல் பார்வைக்கொண்ட நாத்திகர்களும் காஃபீர்கள் தான் , இறை நம்பிக்கைக்கொண்ட வைதீக மதப்பற்றாளர்களும் காஃபீர்கள் தான்,ஆனால் நாத்திகர்கள் முன் வைக்கும் பரிணாமவியல் கோட்ப்பாட்டினை எதிர்க்க மட்டும் மார்க்கப்பந்துக்கள் வைதீகர்களுடன் கைக்குலுக்கிக்கொள்கிறார்கள் :-))

வைதீக மதப்பற்றாளர்கள் பரிணாமத்தினை கேள்விக்குள்ளாக்க ,மார்க்கப்பந்துக்கள் கேட்ட அதே கேள்வியான , பரிணாமத்தில் இடைப்பட்ட உயிரினத்தின் படிமம் இருக்கிறதா எனக்கேட்கிறார்கள், அதாவது மனிதன் குரங்கிலிருந்து உருவானவன் என்றால் மனிதனுக்கும் குரங்குகிற்கும் இடைப்பட்ட வடிவில் ஒரு உயிரினம் இருக்க வேண்டும்,அதன் படிமம் எங்கே என கேட்கிறார்கள்.

இக்கேள்வியை அரேபிய மதத்தினை பின்ப்பற்றுபவர்கள் கேட்கலாம்,ஏன் எனில் அவர்களுக்கு இராமாயணமெல்லாம் தெரியாது, படித்திருக்க மாட்டார்கள்,ஆனால் சதா சர்வகாலமும் ,எம்பெருமான் கிருஸ்ணாவின் சரச சல்லாப லீலைகளை நினைத்து புளகாங்கிதம் அடையும் வைதீகர்கள் அப்படி எல்லாம் கேட்கலாமோ?

பகவான் பெருமாளின் தசாவாதரங்களில் ஒன்றான இராமாவதாரத்தின்  மகிமையை போற்றிப்பாடும் இராமாயணத்திலேயே பரிணாமத்திற்கு ஆதரவான சான்றுகள் உள்ளது, நம்பாதாவர்கள் கீழ்க்கண்ட படத்தினை காணவும்.



அனுமார் மனிதனைப்போல் இருகால்களில் நிற்கிறார், உடலும் மனித உடலை ஒத்துள்ளது ,ஆனால் குரங்கு போல முகமும்,வாலும் உள்ளது,இதன் மூலம் குரங்கிற்கும்,மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் இருந்தது தெளிவாகிறது, அனுமான் படத்தினை பார்த்த பின்னும் பரிணாமத்தினை நம்பாதவர்கள், பகவான் எடுத்த தசாவதாரத்தினையும் நம்பாதாவர்கள் ஆவார்கள் :-))

இராமாயணத்தினை படித்துவிட்டு பரிணாமத்தினையும் எதிர்க்க நினைக்கும் வைதீகர்கள் படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம் என்ற செயலை செய்யலாமா?

என்ன கொடுமை சார் இது!
---------------

மதமெனும் போதை!




புதுவை அண்ணா சாலையில் இராஜா திரையரங்கம் அருகில் இப்புண்ணியமிகு திருக்கோவில் உள்ளது, மாலை வேளையில் பக்த கோடிகள் பெரும் திரளாக வருவது வாடிக்கை. கோபுர தரிசனம் கோடி புண்ணியமாம் எல்லாம் கன்னத்துல போட்டுக்கோங்க!


கோயிலைபார்த்து பரவசமானீர்களா,வாங்க அப்படியே பக்தி பரவசமாகி ஏகாந்தமான பக்தர்களையும் தரிசிப்போம் ..........


பக்தி பெருக்கெடுத்த சில பக்தர்கள், புதுவையின் புகழ்மிகு புண்ணிய தீர்த்தம் அருந்திவிட்டு அம்மனிடம் அடைக்கலமாகிவிட்டார்கள் போலும் :-))

என்ன கொடுமை சார் இது!
----------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி ,

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------

எல்லாமே அரசியல்!

$
0
0

(ஹி...ஹி இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு? )


இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து, உரிய தீர்வு கிடைக்க வேண்டி அரசியல் ரீதியான பல போராட்டங்கள்,கண்டனங்கள் எழுந்துள்ளன, தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ உணர்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றளவில் இதற்கான ஆதரவு எப்பொழுதும் மக்களிடம் உண்டு.

அரசியல் இயக்கங்களை தாண்டி மாணவர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் செய்கின்றனர், அத்தகைய ஒரு வெளிப்பாடாக லயோலா கல்லூரி மாணவர்கள் கடந்த மார்ச் எட்டாம் தேதி காலவரையற்ற சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து பன்னிரெண்டாம் தேதி முடித்துக்கொண்டுள்ளார்கள், லயோலா கல்லூரி மாணவர்கள் அல்லாமல் பிறக்கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுத்துள்ளார்கள், ஆனால் இவையெல்லாம் அரசியல் நாடகங்களின் ஓரங்கமாகவே இருக்கிறதோ என சந்தேகிக்க தூண்டும் அம்சங்கள் பலவும் காணப்படுகின்றன.

மாணவர்களின் சிந்தனை மற்றும் எழுச்சி தேவை ,அது சரியே எனவும் நினைக்கிறேன் ஆனால் அரசியல் சதுரங்கத்தில் அவர்கள் அறிந்தோ,அறியாமலோ பகடையாக்கப்படுகிறார்களோ என நினைக்கவும் வேண்டியதாகிறது. நாட்டில் எல்லாமே அரசியல் தானோ என நினைக்கும் போது அயர்ச்சியாகிறது.

யே யப்பா உடனே உணர்ச்சி பொங்க ,நீ எல்லாம் தமிழனா, மாணவர்கள் போராட்டத்தை களங்கப்படுத்துவதும் ஒரு பொழைப்பா, ஏ தமிழ் நண்டே ,உன் நொள்ளைக்கண்ணை வச்சிக்கிட்டு சும்மா இரும் என கொந்தளிக்காதீர்கள் என்னருமை புரட்சி புடலைங்காய்களே, என்ன சொல்ல வருகிறேன் என சற்றே நிதானமாக வாசித்து உள்வாங்கிக்கொண்டு அப்புறமாக தீர்ப்பெழுத பேனா எடுங்களேன்!

(கம்யூனிச பாணியில் பறை முழங்க போராட்டம்)

லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப்பேர் கடந்த எட்டாம் தேதி ஈழ இனப்படுகொலையை கண்டித்து உண்ணாநிலை போராட்டம் என அறிவித்தனர், முதலில் நுங்கம்பாக்கத்தில் உள்ள AICUF(All India Catholic University Federation ) வளாகத்தில் ஆரம்பிக்க சென்றனர்,ஆனால் அவ்விடம் இலங்கை தூதரகத்திற்கு வெகு அருகில் இருப்பதால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம் என காவல் துறை அனுமதி மறுக்கவே, பின்னர் கோயம்பேட்டில் உள்ள ஒரு "தனியார் இடத்தில்"தங்கள் உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கினர்.

இங்கு கவனிக்க வேண்டியது ,காவல் துறை அவ்வளவு எளிதில் உண்ணாநிலை போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்காது, காவல் துறை அனுமதி என சொல்லப்பட்டாலும் அது ஆட்சியாளரின் முடிவை பொறுத்தே என்பதால், அனுமதி கொடுக்கப்பட்டது ஆளுங்கட்சி தலைமையின் விருப்பத்தின் படியே என அறியலாம்.

பல பத்திரிக்கைகளும் கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் என்றே எழுதின ,அது என்ன சிறப்பான தனியார் இடம், உண்ணா நிலைப்போராட்டத்திற்கு என யாராவது கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுகிறார்களா,அல்லது வீட்டை வாடகைக்கு எடுத்து போராட்டம் நடக்கிறதா?

இக்கேள்வி ரொம்ப அவசியாம என நினைக்கலாம்,ஆனால் அவசியம் ஆகிறது.

இப்போ சின்னதா ஒரு பிளாஷ் பேக் அடிப்போம்,

ஆகஸ்ட்,2011 இல் காஞ்சிபுரம் மக்கள் மன்றம் என்ற தன்னார்வ அமைப்பின் உறுப்பினரான செங்கொடி என்பவர், ராஜிவ் கொலைவழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை விலக்ககோரி ,காஞ்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து மாண்டார்.

காஞ்சி மக்கள் மன்றம் என்பது குளோரியா ஜெசி என்பவர் தலைமையின் கீழ் இயங்கும்,கம்யூனிச சித்தாந்தங்கள் அடிப்படையில் இயங்கும் ,கிருத்துவப்பின்னணிக்கொண்ட ஒரு மக்கள் சேவை இயக்கம் ஆகும். இவர்களுக்கு PUCL(PEOPLE'S UNION FOR CIVIL LIBERTIES) மற்றும் Madras Social Service Society (MSSS-இவ்வமைப்பு the official organ for social work in the Archdiocese of Madras-Mylapore), ஆகியவற்றின் ஆதரவும் ,ஒத்துழைப்பும் உண்டு.

அரசியல் ரீதியாக மக்கள் மன்றத்தின் போராட்டங்களுக்கு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் சமீபமாக வேல் முருகனின் தமிழர் வாழ்வுரிமைக்கட்சி, மற்றும் பழ.நெடுமாறன், சேவ் தமிழர் இயக்கம் ,மே-17 இயக்கம், ஆகியன ஆதரவளிப்பதும் ,கூட்டுப்போராட்டங்கள் செய்வதும் வழக்கம்.

காஞ்சி மக்கள் மன்றத்திற்கு சென்னைக்கோயம்பேட்டில் ஒரு அலுவலகம் உள்ளது(உரிமையாளர் அவர்களா அல்லது கம்யூனிச இயக்கமா என தெரியவில்லை), அதற்கு தீக்குளித்து உயிர் நீத்த செங்கொடியின் பெயரை சூட்டி செங்கொடி மன்றம் என அழைக்கப்படுகிறது. லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்திய தனியார் கட்டிடம் தான் இந்த செங்கொடி மன்றம்!

எதற்கு பத்திரிக்கைகள் மீண்டும் ,மீண்டும் சென்னைக்கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் என "சிறப்பாக"தனித்து சொல்ல வேண்டும்? காரணம் என்னவெனில் செங்கொடி மன்றம் என சொல்லப்பட்டால் அவ்வியக்கம்,அதன் சார்புக்கட்சிகளின் நிலை எளிதில் வெளிப்பட்டுவிடும் என்பதாலே.

இப்போராட்டம் லயோலாக்கல்லூரி மாணவர்கள் தானே முன்னெடுத்தார்கள் இதற்கெல்லாம் எப்படி பொறுப்பாவார்கள் எனலாம், லயோலாக்கல்லூரி AICUF இன் ஒரு அங்கம், இது Archdiocese of Madras-Mylapore, ஒரு அங்கம்.இவர்களோடு சென்னை சமூக கூட்டமைப்புக்கும், அதனோடு மக்கள் மன்றதுக்கும் தொடர்பு உள்ளதை பார்த்தோம். மேலும் வைக்கோவிற்கும் கிருத்துவ அமைப்பினருக்கும் இணக்கமான உறவுண்டு, எனவே எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.


அதெல்லாம் சரி ,மாணவர்களின் எழுச்சியான போராட்டத்தில் இவர்கள் தொடர்பு இருந்தால் என்ன ,நல்ல நோக்கத்திற்காக தானே போராடினார்கள் என நினைக்கலாம், ஆனால் இவர்களின் தொடர்பால் மாணவர்களின் போராட்டத்தினை வைத்து ஆளுங்கட்சி ஒரு அரசியல் சதுரங்கம் ஆடியுள்ளதாக நினைக்கிறேன்.

மாணவர்களின் உண்ணாநிலைப்போராட்டத்தினை காவல் துறைக்கொண்டு ஆளுங்கட்சி அடக்கியிருக்கிறது எனவே இப்போராட்டத்தினை ஆளுங்கட்சி விரும்ப வழியில்லை, மேலும் மாணவர்கள் தி.முக.,காங்கிரஸ் கட்சியினரையும் எதிர்த்துள்ளார்கள் எனவே இதில் என்ன அரசியல் இருக்கிறது என நினைக்கலாம். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் பல வெளியில் தெரியாத உள்நீரோட்டங்களே என்பதை புரிந்துக்கொண்டால் உண்மை தெளிவாகும்.

தி.மு.க கூட்டணியினர் டெசோ அமைப்பினை உயிர்ப்பித்து மீண்டும் ஈழ விவகாரத்தில் தங்களை முன்னிலைப்படுத்த ,இழந்த இமேஜை தூக்கி நிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார்கள்,அதன் ஒரு அங்கமாக ஐ.நாவுக்கு மனு,புது தில்லியில் மார்ச்-10 இல் டெசோ கருத்தரங்கு, தமிழகத்தில் மார்ச்-12 இல் வேலை நிறுத்தப்போராட்டம் என பிசியோ பிசியாக தீயாக வேலை செய்ய பார்க்கிறார்கள்.

இந்நிலையில் எட்டாம் தேதி மாணவர்களுக்கு உண்ணாநிலைப்போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படுகிறது, பின்னர் சரியாக பதினோராம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் காவல் துறை கைது செய்கிறது. விடிந்தால் டெசோ பந்த்!

இதில் உள்ள நுண்ணரசியல் என்னவெனில் மறுநாள் நடைப்பெற்ற பந்தினை விட மாணவர்கள் கைது என்ற செய்தி முன்னிலைக்கு வந்துவிட்டது.

மேலும் கல்லூரிகள் இயங்காமல் இருந்தால் பந்துக்கு ஆதரவு மாபெரும் வெற்றி என திமுக சொல்லிக்கொள்ள முடியாது, கல்லூரிகள் மூடப்பட்டுக்கிடந்தால் அது மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு என்றே பார்க்கப்படும் நிலை.

அப்படிப்பார்த்தாலும் ஆளும்தரப்புக்கெட்டப்பெயர் தானே என நினைக்கலாம், எனக்கு ஒரு கண்ணு போனாலும் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகனும் சித்தாந்தம் தான் :-))

மேலும் மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளையும்,அவர்களின் டெசோ எதிர்ப்பு நிலையையும் பார்த்தால் , ஆளும்தரப்பை கோபப்படுத்த விரும்பவில்லை என்பது தெளிவாகும்.

மாணவர்களின் கோரிக்கைகள்:

1)We strongly condemn the US-draft resolution. Do not pass it at UNHRC

2)What took place in Ilangkai [Sri Lanka] is not merely war crimes or violations of human rights, but planned genocide

3)International investigation and referendum are the only solutions for the Tamils. Government of India should propose a resolution to bring in international investigation and to conduct a referendum on independent Tamil Eelam.

4)A proposal should be made to remove the Deputy High Commission of the Sinhala chauvinistic State from the Tamil soil [Tamil Nadu]. India should severe all diplomatic relations with Ilangkai [Sri Lanka].

5)Government of India, accepting the request of the "Tamil Nadu State Government", should implement economic sanctions on Ilangkai [Sri Lanka].

6)On behalf of the "Tamil Nadu State Government", a foreign relations department should be created to assure the security of global Tamils.

7)No Asian country should be a member in the [international] investigation committee.

8)Killing Tamil Nadu fishermen should be stopped immediately.

9)If the Government of India is not finding solution to the question of Eezham Tamils, we will not pay any taxes from Tamil Nadu. We, students, will actively engage in this campaign.

சட்டப்பேரவையில் அம்மையார் கொண்டு வந்த தீர்மானத்தையும்,மாநில அரசையும் முன்னிறுத்த வேண்டியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.அதாவது ஆளுங்கட்சியினரின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு போரட்டமாக கருத வாய்ப்புள்ளது,ஆனால் கைது ,அடக்குமுறை என்பது போலவும் ஒரு தோற்றம்,என்ன அரசியலப்பா இது?


உண்ணா நிலைப்பந்தலில் ,மாணவர்களுடன் "ஜென்டில் மேன்"வைகோ,ஹி...ஹி பளீர்னு பாலிஷ் அடிச்சு ஷீ,டக் இன் கெட்டப்பில் ,ஒரு கார்ப்பரேட் எக்சிகியூட்டிவ் போல இருப்பதால் ஜென்டில்மேன் என சொன்னால் தப்பில்லை தானே.

மாணவர்கள் தான் பாவம் திடீர்னு அவசரமா உண்ணா நிலைக்கு வந்துவிட்டதால் கருப்பு சட்டை வாங்க நேரமில்லை போல எல்வீஸ்னு எழுதிய கருப்பு பனியனை ,உள் பக்கம் வெளிப்பக்கமா வருமாறு திருப்பிப்போட்டு சமாளிச்சு இருக்காங்க!






மாணவர்களுடன் ,நள்ளிரவில் கைது செய்யப்பட்டவர்கள்,

//Activists Mallai sathya and Manimaran from MDMK,  Thirumalai from AISF, Senthil from the Save Tamils Movement, Arun shourie from the Tamil Nadu Makkal Katchi, Ilaya raja from the Tamil Thesiya Maanavar Iyakkam, movie directors Ram, Kalaignan and Gauthaman and few activists from the May 17 movement were among the arrested.//

நள்ளிரவில் கைது செய்யப்படும் பொழுதும் கூட கைதாகியுள்ளவர்கள் யார் எனப்பார்த்தால் மல்லை சத்யா உள்ளிட்ட 200 மதிமுக கட்சியினர் மற்றும் பலர் ,இதன் மூலம் மதிமுகவின் பங்கு என்னவென புரிகிறது. இப்போராட்டக்களத்தில் மதிமுகவினரின் பின்புலம் இருப்பதாலோ என்னவோ புதிய புரட்சி அவதாரம் "நாம் தமிழர்"சீமான் சீனுக்கு வராமலே ஒதுங்கிக்கொண்டுள்ளார்.

(முகமலர்ச்சியுடன் முதல்வர், கூட்டணி மறுமலர்ச்சி காணுமா?)

கம்யூனிஸ்டுகள் ஏற்கனவே அம்மையாருடன் இணக்கமான அரசியலில் உள்ளனர், சமீபத்தில் வைகோவின் மது பான பாதயாத்திரையில் திடீர் சந்திப்பு என அம்மையாருடன் புதிய அரசியல் மலர்ச்சியுடன் மதிமுக,இவை எல்லாம் வரும் நாடாளுமன்றத்தேர்தலை ஒட்டிய புதிய கூட்டணிக்கான அச்சாரங்களாக மாறக்கூடும்.


லயோலா கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தினை துவக்கிய இதரக்கல்லூரிகளில் சென்னை கிருத்துவ கல்லூரி, நெல்லை புனித சேவியர் கல்லூரி, திருச்சி ,புனித ஜோசப் கல்லூரிகள் எல்லாம் AICUF அங்கத்தினரே.


மற்ற கலைக்கல்லூரிகள், சட்டக்கல்லூரிகளும் போராட்டத்தில் கலந்துள்ளன,ஆனாலும் அனைத்தும் ஒருங்கிணைக்க ஒரு அரசியல் இயக்கம் பின்னிருந்துள்ளதை தெளிவாக காணலாம்.ஏன் எனில் இலங்கைக்கு கண்டனம் என கோரிக்கை பதாகைகளுடன் டெசோவை புறக்கணிக்கவும் எனவும் பதாகைப்பிடித்து நிற்கிறார்கள்!

படம்.


ஆளுங்கட்சி , தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் , டெசோ பலூனில் காற்றையிறக்க இரு கோடுகள் தத்துவப்படி டெசோவை சின்னதாக காட்ட மாணவர்கள் போராட்டத்தினை அடக்குவது போல் நடவடிக்கை எடுத்து , பெரிதாக வளர்க்கிறது எனலாம். ஒருக்கட்டத்தில் தனது பேர் கெடாமல் செய்ய மாணவர்கள் கோரிக்கையை "எனது அரசு"ஏற்கிறது என பெருந்தன்மையான அறிக்கையே கூட அம்மையாரிடம் இருந்து வரலாம், அப்படி வந்துவிட்டால் ,மீண்டும் ஈழத்தாய் பட்டம் சூடி மகிழ சீமான் தயாராக இருப்பார் என சொல்லவும் வேண்டுமோ?

டெசோ என்பது வெண்ணைக்கூட வெட்ட உதவாத மொன்னைக்கத்தி என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை,ஆனால் மொன்னைக்கத்தியாக இருந்தாலும் என்னோடதாக்கும் என போராட்டத்தில் குதித்து பெயர் வாங்கப்பார்க்கும் திமுகவின் ஆசையில் ஒரு லோட் மண்ணள்ளி போடும் விதமாக அம்மையார் இராச தந்திரமாக மாணவர்கள் போராட்டத்தினைப் பயன்ப்படுத்திக்கொள்வதாக நினைக்கிறேன்.

லயோலா கல்லூரி மாணவர்களும் சொல்லி வைத்தார்ப்போல 12 தேதியுடன் உண்ணாநிலைப்போராட்டத்தினை நிறுத்திக்கொண்டார்கள், அரசு நிர்பந்தம் என சொல்லலாம்,ஆனால் நிர்பந்தம் வரும் என தெரிந்து தானே சாகும் வரைப்போராட்டம் என குதித்தார்கள்,அரசைப்பற்றி  12 தேதிக்கு அப்புறம் தான் தெரிய வந்ததா? இப்பொழுது நடக்கும்  போராட்டத்தில் மாணவர்கள் எத்தனை சதவீதம் உறுதியாக நிலைப்பார்கள்,என்று மங்கலம்பாடுவார்கள் என சொல்ல முடியாது.

ஆனால் அதற்குள் நம்ம இணைய சேகுவேராக்கள் ஒரு முன் முடிவுடன் என்ன என்னமோ பொங்கிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது இப்போராட்டங்கள் பற்றி கேள்விக்கேட்டுவிட்டாலே போதும் , உடனே அறச்சீற்றம் கொண்டு கண்கள் சிவக்க ,காது மடல் சிலிர்க்க , ஒரு நீண்ட சொற்பொழிவை ஆரம்பிக்கிறார்கள்,ஒரு கணினியும்,இணையமும் இருந்துவிட்டால் என்ன  வேண்டுமானாலும் எழுதுவியா, நீ என்னிக்காவது போராடி இருக்கியா,வலினா என்ன தெரியுமா,இரத்தம் பார்த்து இருக்கியா , யாரும் எதுவும் பேசக்கூடாது பேசினால் உனக்கு தமிழுணர்வு இல்லை, இது மாணவர்களை கொச்சைப்படுத்தும் செயல் என ஏதேச்சதிகாரமா தீர்ப்பு எழுதி தள்ளுகிறார்கள்.

என்னைப்பொறுத்த வரையில் மாணவர்களோ,பொதுமக்களோ தன்னெழுச்சியாக ,சுயநல அரசியலற்று போராட வேண்டும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் காணோம்.

எல்லாமே அரசியல் தானோ?
--------------

பின் குறிப்பு:

# நாம் எந்த அரசியல் கட்சியின் ஆதரவாளனும் அல்ல, செய்திகளில் படிப்பதை வைத்து எனது அவதானிப்பினை வெளிப்படுத்தியுள்ளேன், இதில் பிழையொன்றுமில்லை, அதெல்லாம் முடியாது நீ அந்தக்கட்சி ஆதரவாளன் தான் என ஏதேனும் ஒரு சாயம் பூச ஆசைப்பட்டால் நானென்ன செய்ய, சாயம் பூசி உங்க கொலை வெறியை தணித்துக்கொள்ளவும், ஆனால் பூசுறது தான் பூசுறிங்க நல்ல சேப்பு சாயமா பூசிட்டு போங்க அப்போவாச்சும் கொஞ்சம் கலர் கூடுதா பார்ப்போம் :-))

#படங்கள் மற்றும் தகவல் உதவி,

சேவ் தமிழ், தமிழ் நெட், விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
--------------------------

என்ன கொடுமை சார் இது-12

$
0
0


(இந்த கொடுமைய பத்திலாம் மனித உரிமை கவுன்சிலில் புகார் கொடுக்க முடியாதா,அவ்வ்,ஹி...ஹி)

# இது தப்பா சார்?

(ஓர் அரசு அலுவலகத்தில் ஓர் அதிகாரிக்கும் ஊழியருக்குமிடையே நடைப்பெற்ற கற்பனை உரையாடல்)

அதிகாரி சார் ,கொஞ்சம் நில்லுங்க ,எனக்கு ஒரு டவுட்டு ,அதை உங்களால மட்டும் தான் கிளியர் செய்ய முடியும்..

என்ன கோந்த்சாமி ,காலையிலே உனக்கு டவுட்டா, உன் கடமை உணர்ச்சியை நினைச்சா ,கண்ணு கலங்குது, கேளு..கேளு, உன்னப்போல ஒரு சின்சியர் பெர்சனுக்கு உதவலைனா அப்புறம் என்ன அதிகாரி நான்.

நீங்களே சொல்லுங்க சார், ரேஷன் கடை கெவர்மெண்டு கடைத்தானே?

ஆமாய்யா அதுல என்னா சந்தேகம்?

அப்போ கெவர்மெண்டு கடையில நான் பொருள் வாங்கினா தப்பா சார்?

எவன் சொன்னான்,தப்பேயில்லை.

ஆபிசுக்கு வரும் போதே  வழியில ரேஷன் கடையில வீட்டுக்கா நான் வாங்கின சக்கரைய ஆபீஸுக்கு எடுத்து வந்தா தப்பா சார்?

ச்சே ...ச்சே தப்பேயில்ல ஒனக்கு நல்ல குடும்ப பொறுப்பு இருக்குபா, குட் கீப் இட் அப்!

அந்த சக்கரையில டேஸ்ட் பார்க்க கொஞ்சம் எடுத்து வாயில போட்டுக்கிட்டா தப்பா சார்?

இதுல என்ன தப்பிருக்கு ,நீ காசுக்கொடுத்து வாங்கின சர்க்கரை...நீ கொஞ்சம் வாயில எடுத்து போட்டுக்கிட்டா என்ன ,மூக்கில போட்டுக்கிட்டா என்ன, எல்லாம் உன் இஷ்டம்யா.

அப்புடி சொல்லுங்க சார், உங்களை தவிர இங்கே யாருக்குமே அறிவில்ல சார்.

ஹி...ஹி தாங்க்ஸ் ,ரொம்ப நல்லவன்யா ...அதான் என்னப்பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்க. நீ எதோ வேலை செஞ்சிட்டிருந்த போல ,சின்சியர் கய் ,யூ கேரி ஆன்!

நீங்க உங்க ரூமுக்கு போங்க சார், நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன்.

(குவார்ட்டர் புட்டியை பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கிறார்)

யோவ் என்னய்யா ,வேலையை ஆரம்பிக்கிறேன்னு சொல்லிட்டு ,சரக்க எடுக்கிற? அதுவும் ஆபீஸ் டைம்ல?

சார் சரக்கு கடையை கெவர்மெண்டு தானே நடத்துது?

ஆமாம்...அதுக்குன்னு.

அப்போ சரக்கும் சக்கரைப்போல கெவர்மெண்ட்டு பொருள் தானே...

ம்ம்...ம்ம் அப்படியும் சொல்லலாம்ம்ம்...ஆனா

என்ன நோனா, கெவர்மெண்டு பொருள் தான் சார், நான் வீட்டுக்கு எடுத்து போறதுக்காக வரும் போதே வாங்கிட்டு வந்தேன், காசு கொடுத்து வாங்கின கெவர்மெண்டு பொருளை வச்சிருக்கிறது தப்பா சார்?

ச்சே சே தப்பேயில்ல, ஆமாம் வீட்டுக்கு எடுத்து போகத்தானே ,வச்சிக்க ,வச்சிக்க ....

ஆனால் கொஞ்சமா டேஸ்ட்  பார்க்க வாயில ஊத்திப்பேன்... நீங்களே சொல்லி இருக்கீங்க, நாம காசுக்கொடுத்து வாங்கின பொருளை டேஸ்ட் பார்க்க நாம சாப்பிட்டா தப்பில்லைனு... இப்போ சொல்லுங்க  , இது தப்பா சார்?

ஙே ...நீ டேஸ்ட் பார்க்க ஆசைப்பட்டது இதானா ... சர்க்கரை மேட்டரை சொல்லி சரக்கு மேட்டரை ஓபன் பண்ணி கவுத்துட்டானே ...அவ்வ்.

டேஞ்சரஸ் ஃபெல்லோ இனிமே இவங்கிட்டே உஷாரா இருக்கணும் ,பீ கேர் ஃபுல்!

என்ன சார் என்னமோ சொன்னிங்களே?

நான் என்னைய சொல்லிக்கிட்டேன், வர்ரட்டா!

(ஹி...ஹி ரொம்ப கொடுமையான எதாவது செய்தி சொல்லணும்னு நினைச்சேன் அப்படி எதுவுமே சிக்கலை, அதான் இப்புடி ஒரு மொக்கையை போட்டேன், நம்ம மொக்கையை விட லோகத்திலே பெரிய கொடுமை உண்டுங்களாண்ணா?)

என்ன கொடுமை சார் இது!

--------------------

# வரிவிலக்கு அரசியல்!




சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை அருகேயுள்ள திருக்கழுக்குன்றத்தினை சேர்ந்த பள்ளிமாணவன் "ஹிதேந்திரன்"இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து ,பின்னர் அவரது உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் உடலுறுப்பு தானம் குறித்து ஒரு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

இதனை மையமாக வைத்து மலையாளத்தில்டிராபிக் என்ற படம் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றது,எப்பவுமே நம்ம ஊரு சரக்குக்கு நம்ம ஊரில் மதிப்பிருக்காது,அதே சரக்கு வெளியூருக்கு போயிட்டு வந்தால் மதிப்பு அதிகமாகிடும்,அதே போல "மலையாள "டிராபிக்"படமும்  தமிழில் "சென்னையில் ஒரு நாள்"என்றப்பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படமும் சுமாரா இருக்குனு கேள்வி. இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே, இதுல என்ன கொடுமையா இருக்குனு கேட்கிறிங்களா ? இருக்கு .

தமிழில் பெயர் வைத்து,தமிழ் கலாச்சாரத்துடன் உள்ள தமிழ்ப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு தமிழகத்தில் உண்டு. ஆனால் இந்த வரிவிலக்கு சென்னையில் ஒரு நாள் தமிழ்ப்படத்துக்கு கொடுக்கப்படவில்லை.

படத்தின் தலைப்பு தமிழில் தான் இருக்கு ,கதையும் கலாச்சாரச்சீர்கேடாக இல்லை, உடலுறுப்பு தானம்னு நல்ல செய்தி தான், சரி ரீ மேக் என்பதாலா என்றால் ஏற்கனவே பல ரீமேக் படங்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டிருக்கு.

படத்தை தயாரித்தது ராதிகா ஷரத்குமாரின்"ரேடான் டீவி", ஷரத்குமார் இரட்டை இலையில மூன்றாவது இலையா ஒட்டிக்கிட்டிருக்கிற அரசியல் தலைவர், அப்படி இருந்தும் ஏன் கேளிக்கை வரிச்சலுகை இல்லைனு பார்த்தால், ஹி...ஹி படத்தை வாங்கி வெளியிட்டு இருப்பது சன் பிக்சர்ஸ் ,அப்படிப்போடு அருவாள, ஏற்கனவே கழக குடும்பத்தார் தயாரித்த திரைப்படங்களான ஏழாம் அறிவு, ஓகே.ஓகேவுக்கும் கூட வரிச்சலுகை பிரச்சினை உண்டானது. இப்போ சென்னையில் ஒரு நாளுக்கு.

சன் பிக்சர்ஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏகப்பட்ட தில்லாலங்கடிகள் செய்து அரசியல் துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டிருந்தாலும், அதற்காக இப்பொழுது ,உடலுறுப்பு தானம் எனும் ஒரு நல்ல கருத்தாக்கத்துடன் வந்துள்ள சென்னையில் ஒரு நாள் திரைப்படத்திற்கு கேளிக்கை வரி இல்லாமல் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர், இப்படத்திற்கு அரசியல் செய்யாமல் விரைவில் வரிச்சலுகை கொடுக்கப்பட்டால் கொஞ்சம் கூடுதல் நாட்கள் ஓடும் வாய்ப்புள்ளது.

(இனியா-மலையாள படங்களில் இயல்பான "திறமையை"காட்டுபவர் சென்னையில் ஒரு நாளிலும் நடித்துள்ளார்)

அரசியல் வாழ்க்கை ஒரு வட்டம் மேல இருப்பவர் கீழ வருவதும்,கீழ இருப்பவர் மேல போவதும் இயல்பே, ஆனால் மேலிர்ந்தவர் கீழ வந்ததும் மேல சென்றவர் பழி வாங்காமல் நடந்து கொள்வதே அரசியல் நாகரீகம்.

அரசியல் நாகரீகம் என்ற சொல்லே வழக்கொழிந்து விடுமோ எனும் நிலையில் தமிழகம் உள்ளதை நினைத்தால் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"என அரசியல் நீதி சொன்ன தமிழகமா இது என கேள்வி எழும்புகிறது!

என்ன கொடுமை சார் இது!

------------------

#காவல் துறை உங்கள் நண்பன்!

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் எல்லாம் ஹோலி கொண்டாடி இருக்காங்க, அட இந்தியா முழுக்க கூட கொண்டாடினாங்க அதுக்கின்னா இப்போனு கட்டைய போடாம கொஞ்சம் கவனியும் மக்களே,

ஹி...ஹி  வழக்கமா ஹோலிய சாக்கா வச்சு பயப்புள்ளைங்க ,பொண்ணுங்க மேல சாயம் பூசுறேனுனு தடவுறதுலாம் கூட நடக்கும் ,அதெல்லாம் வாலிப வயசு அப்படித்தான்னு விட்றலாம்.

ஆனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மொராதா பாத் நகரை சேர்ந்த "புத் பஜார் தானா காவல் நிலையத்தில்"பணிப்புரியும் சிலப்போலிசாருக்கும் ஹோலி கொண்டாடினா என்னனு ஆசை வந்திருச்சு ,ஆனாப்பாருங்க அன்னிக்கும் அவங்களுக்கு டியூட்டி ,அதுக்குனு ஹோலி கொண்டாடாம விட்ற முடியுமா,சாமி குத்தமாகிடாது? ஒரு தடவை முடிவு செய்துட்டா எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம்னு உ.பி காவலர்கள் காவல் நிலையத்திலேயே ஹோலி ஹே ஹோலினு கொண்டாடி இருக்காங்க, அடக்கொண்டாட்டம்னா சரக்கு இல்லாமலா, அதுவும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் ஹோலினா வியாபாரிகள் தாராளமா ஸ்பான்ஸ்ர் அள்ளி விட்டிருப்பாங்க, எனவே எல்லாம் இஷ்டத்துக்கு தீர்த்தத்தை பருகிவிட்டு ஆனந்த பரவசமாகி ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்து "சகலகலா வல்லவனா"குத்தாட்டம் எல்லாம் போட்டுள்ளார்கள், சிலர் சரக்கு புட்டியை தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலேனு இந்தியில் பாடி கெரகாட்டம் எல்லாம் ஆடி அசத்தியுள்ளார்கள்.

உ.பி காவலர்கள் ரொம்ப நல்லவய்ங்களா இருப்பாங்க போல நாம மட்டும் தீர்த்தம் சாப்பிட்டு இன்பம் துய்த்தால் போதுமா நாளைய சமுதாயமாம் இளைஞர்களும் இன்பம் துய்க்க வேண்டாமா என கரிசனத்துடன், அவ்வழியே சென்ற பள்ளி மாணவர்களை கூப்பிட்டு சரக்கு கொடுத்து குடிக்க சொல்லி இருக்காங்க, உ.பி மாணவர்கள் உருப்படாதவர்கள் போல சரக்கெல்லாம் குடிக்க மாட்டோம் ,ஆத்தா அடிக்கும்னு அடம்பிடிச்சிருக்காங்க, ச்சே இளைய சமூகத்துக்கே பெருத்த அவமானம்! இதே நம்ம பயப்புள்ளைகளா இருந்தா"மச்சி இன்னொரு குவார்ட்டர் சொல்லேன்னு ஒன்னுமண்ணா கொண்டாட்டத்தில் அய்க்கியமாகி இருப்பாங்க :-))

ஆனாலும் உல்லாச கடமை தவறாத உ.பி. காவலர்கள் அடிச்சு குடிக்க வச்சிருக்காங்க, ச்சே என்ன ஒரு நல்ல மனசு ,நம்ம ஊருலவும் தான் இருக்காங்களே காவலர்கள் ,நான் காசுக்கொடுத்து தீர்த்தம் சாப்பிட்டு வந்தாலும், வழியில நிப்பாட்டி, ஊது ,வாய தொறனு சொல்லி வாயில கூட டார்ச் அடிச்சு டார்ச்சர் செய்றாங்கய்யா அவ்வ்!

காவல் துறை உங்கள் நண்பன்! என தமிழ்நாட்டில் சொல்லி வாயாலே வடை சுடும் நிலையில், நடைமுறையில் செய்துக்காட்டிய உ.பிக்காவலர்களின் நல்ல எண்ணம் புரியாத "பாப்பரசி"மீடியாக்கள் ,காவலர்களின் குத்தாட்டத்தை எல்லாம் காணொளியாக எடுத்து தொலைக்காட்சியில் போட்டுவிட்டதால் , நல்லிதயம் படைத்த கருணை மிகு காவலர்கள் விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.

நல்லதுக்கே காலமில்லையா, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்விளைய சமுதாயம் என சரக்கு ஈந்தோரின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சும் கொடுஞ்சமூகத்தினை தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

அய்யகோ என்ன கொடுமை சார் இது!

செய்தி மூலம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=678169

நன்றி!
------------------------

# அள்ளு அள்ளு ,தள்ளு தள்ளு!




படத்தில் காண்பது ,சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை NH-45C ஆகும். இந்த இடம் பண்ருட்டி அருகே தென்ப்பெண்ணையாற்றின் அருகே இருக்கும் கண்டரக்கோட்டை(கண்டராதித்த சோழன் கோட்டை என்பதன் திரிபு) என்ற ஊருக்கு அருகில் உள்ளது .இன்னும் நான்கு வழியாக்கப்படவில்லை, அதற்கான டென்டர் விட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாச்சு. இப்போது இருப்பது இரட்டைவழிப்பாதை தான் , ஆனால் படத்தில் பார்த்தால் மாட்டுவண்டி போகும் மண்ப்பாதை போல இருக்கேனு நினைக்கலாம் ...ஹி ..ஹி உண்மையில மண்ப்பாதையே தான்.

 இங்கு தென்ப்பெண்ணையாற்றில் அரசு மணல் அள்ளும் மையம் செயல்படுகிறது , ஆற்றில் இருந்து மணல் அள்ளி அருகே கரையோரம் கொட்டி வைத்து பின்னர் லாரிகளில் ஏற்றி அனுப்புவார்கள். இவ்வாறு தினசரி பல நூறு லாரிகள் இரவும் பகலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக மணல் லோடுடன் இப்பகுதியில் சாலையில் ஏறி இறங்குவதால் இப்பகுதியில் சில நூறு மீட்டர்களுக்கு சாலையே காணாமல் போயிடுச்சு, அவ்வப்போது மண்ணள்ளி போட்டு நிரவி விட்டுவிடுகிறார்கள். அப்படியான மண்சாலையைத்தான் படத்தில் பார்த்தீர்கள்.

மழைக்காலத்தில் நிலமை இன்னும் மோசமாகிவிடும், வாகனங்கள் சேற்றில் சிக்கிவிடும், சிறிய ரக கார்கள் சிக்கி நின்றுவிடும்.  இதுக்குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை, எப்பொழுதுமே இவ்விடம் புழுதிப்பறக்கும் மண்சாலையாகவோ அல்லது சேற்றுவயலாகவோ தான் இருக்கிறது.

(மணல் குவாரியில் கர்ம சிரத்தையுடன் மண்ணள்ளுகிறார்கள்)

இங்கு கனரக வாகனங்கள்  இயங்குவது அரசுக்கு நன்கு தெரியும் அப்படி இருக்கும் போது சாலையை அதிக எடை தாங்கும் வகையில் தரமாக போடலாம், அல்லது அளவுக்கு அதிகமாக மணல் லோடு ஏற்றுவதை தடுக்கலாம், ஆனால் எதுவும் செய்வதாக தெரியவில்லை, பெரிய விபத்து எதுவும் ஏற்படும் வரையில் அரசு எந்திரம் கண்டுக்கொள்ளாது என்றே நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன் ,2020 இல் இந்தியா தான் வல்லரசு!

என்ன கொடுமை சார் இது!
----------------

பின்க்குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,தினமலர் இணைய தளங்கள்,நன்றி!
**********************

கச்சத்தீவு-மறைக்கப்பட்ட உண்மைகள்!

$
0
0
(ஹி...ஹி கச்சத்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா )


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப்பு) பல மணற் திட்டுக்களும்,சிறிதும் பெரிதுமான பல தீவுகளும் உள்ளன,அவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் 12 தீவுகள் உள்ளன,

1480 ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட கடற் அடிப்பரப்பில் ஏற்பட்ட நிலவியல் மாற்றத்தால் வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின என்கிறார்கள்.

அத்தீவுகளின் பெயர்கள்:

01 ராமேஸ்வரம்

02 குந்துகால் தீவு

03 புனவாசல் தீவு

04 முயல் தீவு

05 பூமரிச்சான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குருசடி தீவு



இதில் ஓரளவு பெரிய பரப்பினைக்கொண்டதுகச்சத்தீவு ஆகும் ,ராமேஷ்வரத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, பரப்பளவு சுமார்  285 ஏக்கர்(1.15ச.கி.மீ).

இத்தீவானது 1974 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது, 1974 இல் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகாவிற்கும், இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது அன்று முதல் இக்கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு சோதனைக்காலம் துவங்கிவிட்டது.

கச்சத்தீவினை தாரைவார்த்துக்கொடுத்ததின் பின்னால் உள்ள அரசியலையும், நமது தமிழக அரசியல் தலைவர்களின்  செயல்படாத்தன்மையும் விரிவாக காணலாம்.

1974 ஒப்பந்தம்:

பண்டார நாயகா மறைவுக்கு பின்னர் அவரது மனைவி சிரிமாவோ பண்டார நாயகா இலங்கையின் பிரதமராக பதவிக்கு வந்தார், ஆனால் அவருக்கு இலங்கையில் அரசியல் ரீதியாக பல நெருக்கடிகள் ஏற்பட்டதால் தனது அரசியலை வலுவாக்கிக்கொள்ள ஏதேனும் அசாத்திய சாதனை செய்ய விரும்பினார், இதனால் நீண்ட நாட்களாக இலங்கை உரிமைக்கேட்டு வந்த கட்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு ,அப்போதைய இந்திய பிரதமரை அனுகினார்.



பண்டாரநாயகா காலம் தொட்டே நேரு குடும்பத்துடன் நட்புறவு கொண்டிருந்தார்கள்,அதே நட்புடன் இந்திராவும் இருந்ததால் காரியம் சாதிக்க விரும்பினார். அக்காலக்கட்டத்தில் இந்திரா தலைமையிலான அரசுக்கும் ஒரு நெருக்கடி உருவானது,அது என்னவெனில்,மே-18,1974 இல் இந்திராவின் திட்டப்பட்டி ,ராஜஸ்தான் பாலைவனத்தில் போக்ரானில் முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தப்பட்டிருந்து. இதனால் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் மீது கோபம் கொண்டிருந்தன, மேலும் ஐநா சபையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க ஒரு தீர்மானம் கொண்டு வரும் திட்டமும் இருந்தது. எனவே ஐநா சபையில் தனக்கான ஆதரவை திரட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள இந்திரா காந்தி அவர்கள் ஆர்வமாக இருந்த சூழலில், சிரிமாவோ கட்சத்தீவைக்கேட்கவும் விட்டுக்கொடுத்து இலங்கையை வளைத்துவிடலாம் என திட்டமிட்டார்கள்.

பல நாடுகள் இருக்கும் போது இலங்கையால் என்ன பெரிதாக ஐநாவில் உதவிட முடியும் என நினைக்கலாம்,ஆனால் அந்த காலக்கட்டத்தில் ஐநாவின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்புநாடுகளின் தலைமை பொறுப்பினை இலங்கையே வகித்து வந்தது.

ஐநா பாதுகாப்பு அவையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்,அது அல்லாமல் 15 உறுப்பினர்களை தற்காலிகமாக தேர்ந்தெடுப்பார்கள், பின்னர் அவர்களில் ஒரு நாட்டினை அகரவரிசைப்ப்படி ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு அவையின் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்வார்கள், எனவே அக்காலத்தில் இலங்கைக்கு பாதுகாப்பு அவையின் தலைவராக வரும் சூழல் உருவானது.

எனவே இலங்கையை வளைப்பதன் மூலம் ஐநா பாதுகாப்பு அவையில் கொண்டு வரும் தீர்மானத்தினை தகர்க்கலாம் என திட்டம் போட்டு ,கச்சத்தீவினை தாரை வார்க்கும் திட்டத்தினை முன்னெடுத்தார் இந்திராகாந்தி.

இது போன்ற "சூப்பர் திட்டங்களை"எல்லாம் அரசியல்வாதியே போட்டிருப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாது,எல்லாம் அயலக உறவுத்துறை அதிகாரிகளின் கைங்கரியமாகத்தான் இருக்க வேண்டும்.

இத்தனைக்கும், 1971 ஆம் ஆண்டு பங்களாதேச உருவாக்க போரின் போது ,பாகிஸ்தான் விமான படை விமானங்கள் இந்திய வான் வெளியில் பறக்க தடை என்பதால் ,அரபிக்கடலில் சுற்றிக்கொண்டு ,கிழக்கு பாகிஸ்தான் எனப்பட்ட பங்க்ளாதேசத்திற்கு செல்ல வேண்டிய நிலை,அப்பொழது, விமான படை விமானங்களுக்கு எரிப்பொருள் கொடுத்து பாகிஸ்தானுடன் நட்புப்பாராட்டிய நாடு தான் இலங்கை. ஆனாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு நட்புப்பாராட்டி கச்சத்தீவினை கொடுக்க நம்ம ஆட்களே வரிந்துக்கட்டி வேலை செய்தார்கள் என்பதை எந்த வகையில் சேர்க்க?

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் அன்னிய நாட்டிற்கு விட்டுக்கொடுக்க நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமேயில்லை, சட்டமேதை அம்பேத்கார் தொலைநோக்கு பார்வையோடு அப்படி ஒரு கிடுக்கிப்பிடி போட்டு வைத்திருந்தார் எனலாம். அதனைப்பின்னர் விரிவாக காணலாம்.

இந்திய நாட்டின்  ஒரு பகுதி என சொன்னால் தானே கொடுக்க முடியாது என கட்சத்தீவு இந்தியாவின் பகுதியேயில்லை ,இரு நாட்டுக்கும் இடையே பொதுவாக உள்ள ஒரு பகுதி ,யாருக்கு சொந்தம் என தெரியாத "டிஸ்பியுட்டட்"லேண்ட் என இந்தியாவே வலிய தெரிவித்தது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.ஏன் எனில் கட்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதியாகும் அதற்கான ஆதரங்களும் உள்ளன.

இவ்வாறு கடல்ப்பகுதியில் உள்ள பகுதியில் ஒரு இடத்தினையும் உடனே கொடுக்க முடியாது,புதிதாக கடல் எல்லையை வரையறுக்க வேண்டும்.எனவே 1974 இந்தியா-இலங்கை கடல் எல்லை மறுசீரமைப்பு ஒப்பந்தம் என போடப்பட்டது. பின்னர் கச்சத்தீவினை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாகவும், இந்திய மீனவர்களுக்கு என சில  உரிமைகள் அளிக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாகவும் சொல்லி கட்சத்தீவினை தாரை வார்த்துவிட்டார்கள்.

இதில் நடந்த உரிமை மீறல்களை காண்போம்,

இரு நாட்டுக்கடல் எல்லைகள் ஒன்றின் மீது ஒன்றாக பரவும் நிலையில் புதிய கடல் எல்லை வகுக்க வேண்டும் எனில் ,இருநாட்டுக்கும் சம தூரம் வருமாறு கடல் எல்லை வகுக்க வேண்டும்,அப்படி செய்தால் கட்சத்தீவு தானாகவே இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிடும் என்கிறார்கள்,ஆனால் அப்படி செய்யாமல் இலங்கைக்கு அதிகப்படியான கடல் எல்லை வருமாறு எல்லைப்பிரித்து விட்டார்கள்.

மேலும் இந்தியாவின் ஒரு அங்கமான நிலப்பரப்பை வேண்டுமென்றே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனை விரிவாக காண்போம்.

கச்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதி:

வெள்ளையர்களின் காலனியாக இந்தியா இருந்த போதும் இந்தியாவில் பல தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களும்,ஜமீந்தார்களும் இருந்தார்கள்,அவர்களின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பின் உரிமையாளர்கள் அவர்களே, பிரிட்டீஷ் அரசு கூட அல்ல.

தமிழகத்தின் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்ட ஒரு நிலப்பரப்பே கச்சத்தீவு ஆகும், கி.பி 1882 ஆம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் கச்சத்தீவு உட்பட எட்டுத்தீவுகளுக்கு உரிமையாளர்கள் ராமநாதபுர சமஸ்தானமே. இதற்கான ஆவணங்களும், மேலும் பலருடன் இடப்பட்ட குத்தகை ஒப்பந்தங்களும் உள்ளன. வெள்ளையருக்கே கூட தீவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறார் என ஆவணங்கள் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தினை கட்டியதும் ஒரு தமிழரே, 1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

கச்சத்தீவுரிமையை நிலைநாட்டும் பல ஒப்பந்தங்கள்,ஆவண விவரங்கள்:

1. During A.D. 1605, the clan of Ramanathapuram Sethupathy King was established by the Madurai Nayaks, incorporating 69 coastal villages and 7 Islands, of which Katchatheevu Island is one of the Island.

2. A copper plate plaque issued by King Koothan Sethupathy who ruled Ramanathapuram during the years 1622- 1635, depicts that the Sea upto Talaimannar belonged to Sethupathy Kings.

3. Coronation flowers which adorn the Goddess, Malai Valar Kathali Ammai of Rameswaram are grown in Katchatheevu Island. Similarly, cattle’s that are donated to the Temple are cared for in Katchatheevu Island and the Milk and other items needed for pooja are brought only from Katchatheevu island.

4. In the Kingdom of Ramanathapuram, there existed a separate account section to maintain and audit the accounts of Kathatheevu Island.

5. In the plaque issued to Jamindarine Mangaleswari Natchiyar, who took over after the period of Ramanathapuram King Muthuramalinga Sethupathy (who was imprisoned for a long period for having opposed the British), it is clearly mentioned that Katchatheevu Island belonged to Ramanathapuram Zamin.

6. There is a clear document evidencing leasing out Katchatheevu Island to East India Company by Ramanathapuram Sethupathy in the year 1822.

7. In Queen Victoria’s 1858 Proclamation whereby the powers got transferred to British Rule from East India Company, reference is made that Katchatheevu Island belong to Ramanathapuram Zamin.

8. P.P.Peris, who during the years of British Rule in 1936- 40, served as an Assistant Draftsman and later became a Ministerial Secretary after Sri Lanka attained independence, on 08.05.1966, made the following statement, confirming that Katchatheevu Island belonged to Ramanathapuram Kings. He says, “During the years 1936-40, when I served as Assistant Draftsman in the Land Survey Department, I was directed to survey the district boundaries of Ceylon. Therefore, I perused all records, documents, historical evidences and the Queen Victoria’s proclamation, by which 1 found that Katchatheevu Island belonged to King Sethupathy, Therefore I drew the Northern District of Ceylon delineating Katchatheevu Island.” This statement issued by the Ministerial Secretary on 08.05.1966, was widely reported in the then Daily Mirror published from Sri Lanka and thereafter reported in Indian Express in India.

9. There is a Registered Document (Registration No. 510/1880, Book 1, Volume 16) evidencing the fact that on 23.06.1880, eight coastal villages and four Island, including the Katchatheevu Island, belong to the Ramanathapuram Sethupathy’s were given in lease by the District Collector, Madurai jointly to one Abdul Kadar Marakayar and Muthusamy Pillai.

10. By a document dt.04.02.1885 (Registration No. 134/1885), Muthusamy Pillai, has taken the Katchatheevu Island on an annual lease of Rs.15 per annum from the Estate Manager of Ramanathapuram Sethupathy for the purpose of procuring dye roots.

11. Under a pact entered into between the Dutch and Ramanathapuram Seethupathy during the year 1767, a clause was incorporated to permit ail those residing Ramanathapuram Zamin can always visit Katchtheevu Island.

12. Baskara Sethypathy of Ramanathapuram, has assigned a portion of Katchatheevu island to Poet Sundaram.

13. When Zamindari Abolition Act came into force, Katchatheevu Island is mentioned as 285 Acres of Government Poromboke land in Ramanathapuram Village.

14. In the Ramanathpuram Gazetteer, issued by S.A.Viswanathan, Assistant Revenue Officer, Madras (then Tamiinadu was called Madras) on 11.11.1958, in Register No.68, Katchatheevu Island is shown as comprised in Ramanathapuram Village.

15. On 01.07.1913, when few Islands were taken on a 15 year lease by the Government of Madras Presidency from Ramanathapuram Sethupathy, Katchatheevu Island is mentioned by the Secretary to Government, as a territory belonging to Ramanathapuram Zamin and situate on the North East of Ramanathapuram.

16. In the year 1947, one K.M.Mohammed Merasa Marakayar, took the Katchatheevu Island on lease from Ramanathapuram Sethupathy. In the documents which was then executed, Katchatheevu Island was shown as a territory situated between Talaimannar and Danuskodi and belonging to Ramanathapuram Suzerainty.

17. In the Land Document Register issued by the Government, firstly issued in the year 1957 and again reprinted and issued as an updated publication, in the year 1966, at page 107, Katchatheevu Island is mentioned as a uninhabited territory belonging to Danuskodi.

18. Between the years 1913 and 1928, many Islands including the Katchatheevu Island were taken on lease from Ramanathapuram Sethupathy Kings and were again sublet to fishermen.

19. On several occasion the Sethupathy Kings, have themselves directly leased out many islands including the Katchatheevu Island to fishermen. There are records to show that fishermen from Tondi and Nambuthazhai have taken such leases.

20. In all the Indian Land Survey Records issued between the years 1874 and 1956, Katchatheevu Island is depicted as an Indian Territory alone. The Indian Land Survey Department has mentioned Katchatheevu Island as, measuring 285 Acres and 20 cents comprised in Survey No.1250,

மூலம்:  http://katchatheevu.com/katchatheevu-is-ours-concrete-evdiences/

நன்றி!
-------------------------



இந்தியா சுதந்திரமடைந்த போது சமஸ்தானங்கள் அனைத்தும் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது, அவ்வேளையில் ராமநாதபுரம் சமஸ்தானமும் இணைக்கப்பட்டது, அவர்கள் சமஸ்தானம் குறித்த நில ஆவணங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது,எனவே அனைத்து ஆவணங்களும் மத்திய அரசிடம் சிக்கிக்கொண்டதால் யாரும் கேள்விக்கேட்க முடியாது என 1974 இல் துணிகரமாக கச்சத்தீவின் உரிமையாளர் யார் என தெரியாத "டிஸ்பியுட்டட் லேண்ட்"என அறிவித்து இலங்கைக்கு கைமாற்றிவிட்டார்கள்.

இவ்வாறு செய்தால் மட்டுமே இந்தியாவின் நிலப்பரப்பை அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்க முடியும்,அவ்வாறு இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை சட்டமேதை அம்பேத்கர் வடிவமைத்துவிட்டார் என முன்னர் குறிப்பிட்டதை இப்பொழுது விரிவாக காண்போம்.

இந்தியா என்பது முழு தன்னாட்சி பெற்ற ஒரு நாடு ,அதன் செயல்ப்படுத்தும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அன்னிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் நிறைவேற்ற , நிர்வகிக்க என அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஒரு புதிய நிலப்பரப்பினை இந்தியாவுடன் இணைக்க யாருடைய அனுமதியும் பெறத்தேவையில்லை,ஆனால் ஏற்கனவே இந்தியாவுடன் இணைந்த நிலப்பரப்பினை அன்னிய நாடுகளுக்கோ, சக்திகளுக்கோ தன்னிச்சையாக விட்டுக்கொடுக்க முடியாது என அரசியலமைப்பு சட்டத்தினை வரையறுத்துவிட்டார்.

ஆனால் சுதந்திரமடைந்த காலத்தில் சரியாக எல்லைப்பிரிக்காமல் இருந்தது எனவே எல்லைப்பிரச்சினையை தீர்க்க , பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் நிலப்பரிமாற்றம் செய்யலாம் எனவும் வழியும் உருவாக்கி இருந்தார், அதை வைத்தே கட்சத்தீவை தாரைவார்த்தார்கள்.

மேலும் அரசியல் நிர்ணய சட்டத்தினை வடிவமைக்கும் போது பல பரிசீலனைகளை அரசியல் தலைவர்கள் முன் வைத்திருக்க கூடும்,எனவே ஆளுவோருக்கு இப்படி நிலத்தை விட்டுக்கொடுக்க அதிகாரம் இல்லைனு சொல்வதை ஏற்கவில்லை போல எனவே , அதுக்கும் ஒரு ஓட்டையும் போட்டுக்கொடுத்திருக்கார், ஆனால் கொஞ்சம் சிக்கலாக ,எளிதில் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க முடியாத படி தான் செய்திருக்கார் எனலாம்.

இந்தியாவுக்கு சொந்தமான நிலபரப்பினை விட்டுக்கொடுக்க வேண்டும் எனில் அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதனை மாநிலங்கள் அவை,மக்களவை இரண்டிலும் சமர்ப்பித்து வெற்றிப்பெற வேண்டும், அதன் பின்னர் அச்சட்டத்தினை எந்த மாநிலத்தின் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க இருக்கிறார்களோ அம்மாநில சட்டமன்றத்திலும் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்,அதன் பின்னரே நிலப்பரிமாற்றம் செய்யலாம்.

நாடாளுமன்ற இரு அவையிலும் ஒப்புதல் பெறுவதோடு,மாநில சட்டமன்றத்திலும் ஒப்புதல் பெறுவது(rattification at state council) என்பது கடினமான காரியம் எனவே எளிதில் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க முடியாது என நினைத்திருக்கலாம்.

அம்பேத்காருக்கு அப்போவே தெரிஞ்சிருக்கும் போல நம்ம அரசியல்வாதிகள் வருங்காலத்தில் காசுக்கு நாட்டையே வித்தாலும் வித்துடுவாங்கன்னு எனவே முன்னெச்சரிக்கையாக சிக்கலான சட்டத்தை போட்டு வைத்துவிட்டார்.

கச்சத்தீவினை விட்டுக்கொடுக்கும் நிகழ்வில் டிஸ்பியூட்டட் லேண்ட் என அறிவித்து விட்டுக்கொடுக்க மேற்சொன்ன சட்ட சிக்கலே காரணம் ஆகும்.

கச்சத்தீவு குறித்தான ஆவணங்களை வைத்து நமக்கு சொந்தமான நிலம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், முன்னர் அரசு ஒப்பந்தம் மூலம் விட்டுக்கொடுத்த கச்சத்தீவு உடன்படிக்கை செல்லாது என அறிவிக்க இயலும்.

இது முடியுமா என சந்தேகம் வரலாம், ஆனால் இதற்கும் ஒரு முன்னுதாரண சம்பவம் இந்தியாவில் உண்டு.

பெருபாரி வழக்கு:

கி.பி 1947 ,ஆகஸ்ட்-15 இல் இந்தியா சுதந்திரமடைந்ததாக அறிவிக்கப்பட்டப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையே முழுமையாக வரையறுக்கப்படவில்லை, எனவே நன்கு தெளிவான எல்லைகள் கொண்ட பகுதிகளை மட்டும் சரியாக குறிப்பிட்டு பிரித்துக்கொண்டு , மற்றவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

மேலும் பாகிஸ்தான் மேற்கு,கிழக்கு என இரண்டுப்பிரிவாக உருவாகி இருந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு வங்கத்துக்கும் சரியாக எல்லை பிரிக்காத சூழல்.

அப்பொழுது மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக பெருபாரி வட்டம்இருந்தது,இதில் ஒரு பகுதி ,கிழக்கு பாகிஸ்தான் என அறியப்பட்ட பகுதிக்குள் நீட்டிக்கொண்டு இருந்தது,அதே போல சில தனி தீவுகளாக கிழக்கு பாகிஸ்தானின் பகுதிகள் மேற்குவங்கத்தில் இருந்தன. அதாவது மதத்தின் அடிப்படையில் எந்த நாட்டில் சேர்வது என மக்களை முடிவெடுக்க சொல்லி பிரித்ததால் மேற்கு வங்க எல்லைக்குள் அமைந்த சில வட்டங்கள் மட்டும் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைந்துக்கொண்டன,ஆனால் அவர்களுக்கு நிலவியல் ரீதியாக கிழக்கு பாகிஸ்தானுடன் தொடர்பேயில்லை, இவ்வாறு தனித்தீவா ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டின் பகுதி இருப்பதை என்கிளேவ் என்பார்கள்.

இந்த என்கிளேவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானியர் அவர்கள் நாட்டுக்கு செல்ல பெருபாரி வட்டம் வழியாகத்தான் செல்ல வேண்டும்,ஆனால் அது இந்திய நிலப்பரப்பு என்பதால் ,ஒவ்வொரு முறை செல்லவும்,விசா நடைமுறையினைப்பின்ப்பற்ற வேண்டும்.

எனவே பாகிஸ்தான் அரசு பெருபாரி வட்டத்தில் பாதி எங்களுக்கு சொந்தம், எல்லைக்கோட்டினை வரையருக்கும் முன்னரே பெருபாரி வட்டம் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் தான் இப்பிரச்சினை,எனவே பெருபாரியை கொடுங்கள் எனக்கேட்க ஆரம்பித்தார்கள்.

சமாதான பிறா  ச்சே புறா விரும்பியான நேருவுக்கு அண்டை நாட்டுடன் சர்ச்சை வேண்டாம் என ரொம்ப நல்ல மனசு,இத்தனைக்கும் பாகிஸ்தான் காஷ்மீர் சண்டை எல்லாம் போட்டிருந்தது,ஆனாலும் பாகிஸ்தான் நம்ம சகோதர நாடு என பெருபாரியை எடுத்துக்கோங்க என சொல்லி ஒப்பந்தம் போட்டுக்கொடுத்துட்டார்.

(Dr.Bidan chandra roy)


இது நடந்தது 1951 இல்,அப்பொழுது மேற்குவங்கத்தினை ஆண்டதும் காங்கிரஸ் கட்சியே,அதன் முதல்வராக டாக்டர்.பிசி.ராய்என்ற மூத்த காங்கிரஸ் தலைவர் இருந்தார். அவர் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல தலையாட்டி பொம்மையல்ல, அது எப்படி மேற்கு வங்க மாநிலத்துக்கு சொந்தமான நிலத்தினை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கலாம்,இதைப்பற்றி எங்கக்கிட்டே ஒரு வார்த்தை கூட கேட்கலையேனு கடுப்பாகிட்டார், ஒப்பந்தம் எல்லாம் செல்லாது, ரத்து செய்யுங்கள்னு நேருவிடம் சொல்லிப்பார்த்தார், நான் தேசிய தலைவர், நீர் மாநில முதல்வர் எனக்கே அறிவுரையா சொல்லுறீர்னு நேரு கண்டுக்கவேயில்லை போல.

பி.சி.ராயும் விடுவதாக இல்லை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை மத்திய அரசுக்கு எதிராகவே போட்டுவிட்டார், அதற்கு அடிப்படை நாம் முன்னர் பார்த்த அரசியல் நிர்ணய சட்டமே, பெருபாரியை வெறும் ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுத்தது செல்லாது,அப்படி செய்வது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு விரோதம் என்பதே வாதம்.ஒரே கட்சியாக இருந்தாலும் ,மாநில நலனை கருதி அவ்வாறு செய்தார். வழக்கை வாபஸ் பெற வைக்க நேரு தரப்பும் பல முயற்சிகள்  செய்து பார்த்தது, ஆனால் பி.சி.ராய் மசியவேயில்லை, அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கலாம்னாலும் அதுவும் முடியலை,எல்லா எம்.எல்.ஏக்களும் பி.சி.ராய் பக்கமே,போதாக்குறைக்கு மக்களும் பலத்த ஆதரவு,மத்திய அரசுக்கு ஆப்பசைத்த குரங்கு நிலைமை, சொந்த கட்சியையே சமாளிக்க முடியலை,பாகிஸ்தானிடமும் திரும்பி கேட்க முடியலை.

1951 இல் போட்ட வழக்கு ,அப்படி இப்படினு இழுத்து 1960 இல் உட்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்திய அரசின் தலைமைப்பொறுப்பில் உள்ளவருக்கு அதிகாரம் இருக்கு,ஆனால் வெறும் ஒப்பந்தம் மூலமாக எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது, ஏற்கனவே அரசியல் நிர்ணய சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சட்ட திருத்த வழியை தான் பின்ப்பற்றனும் என்பதே தீர்ப்பாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

//the Agreement cannot be implemented by a law
relatable  to Art. 3 and legislation relatable to  Art. 368
would be inevitable.
It follows, therefore, that the Parliament acting under Art.
368  can  makea  law to  give effect and  implement the
Agreement  in  question covering  both Berubari  and the
Enclaves or pass a law amending Art. 3 so as to cover  cases
of  cession of the territory of India and thereafter make  a
law under the amended Art. 3 to implement the Agreement.//


முழு தீர்ப்பையும் காண்க:

http://www.indiacourts.in/IN-RE--THE-BERUBARI-UNION-ANDEXCHANGE-OF-ENCLAVES-Vs.-REFERENCE-UNDER-ARTICLE-143(1)-OFTHE-CONSTITUT_81ff5700-42dc-491f-89ab-d6b539e75ba1

----------------
(Nehru and V.Krishna menon)


நேரு அப்பொழுதும் பிரதமராகத்தான் இருந்தார், ஆனால் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அதனை பி.சி.ராய் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்து தோற்கடிக்க கூடும் என கருதினார்,ஏன் எனில் அப்பொழுது மற்றக்கட்சிகளும் பி.சி.ராய்க்கு தான் ஆதரவு, அப்பொழுது பி.ஜேபியின் முன்னோடியான ஜனசங்கம், மற்றும் சட்ட மேதைகள்,மற்ற சிறிய கட்சிகள் எல்லாம் வழக்கில் தங்களையும் ஒரு வாதியாக சேர்க்க சொல்லி ,மத்திய அரசுக்கு எதிராக வாதாடி வந்தன. இதனால் நேருவுக்கு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்து பெருபாரி பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க தயக்கம்,எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் சொல்லி பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விட்டார்.

அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட நிலப்பரப்பினை சட்ட போராட்டத்தின் மூலம் ஒரு மாநில முதல்வர் நினைத்தால் மீட்க முடியும் என்பதற்கு நல்ல முன்னுதாரணமாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.

இப்படி லட்டு மாதிரி நல்ல முன்னுதாரண சம்பவம் இருந்தும் 1974 இல் கட்சத்தீவை விட்டுக்கொடுத்தப்போது தமிழகத்தினை ஆண்ட தி.முக அரசு என்ன செய்தது, மஞ்சத்துண்டு என்ன செய்தார் எனப்பார்ப்போம்.

கொஞ்சம் விரிவாகவே அக்கால திமுக-காங்கிரஸ் உறவைப்பார்ப்போம்,

அண்ணா அவர்கள் தலைமையில் திமுக இந்தி எதிர்ப்பு என்ற பிரச்சாரத்தை முன் வைத்தே அரசியல் செய்து வந்தது, தமிழைக்காக்க ,தமிழர் உரிமையை நிலைநாட்ட காங்கிரசை விரட்ட வேண்டும் என்று சொல்லி தான் அரசியல் செய்து வந்தார்.

1967 இல் நடந்த பொது தேர்தலிலும் இதுவே கொள்கையாக இருந்தது, காங்கிரசை கடுமையாக எதிர்த்தார்கள், தேர்தலில் வென்று ஆட்சி அமைப்போம் என அண்ணாவுக்கே நம்பிக்கை இல்லை போலும் சட்டமன்றத்திற்கு போட்டியிடாமல் ,நாடாளுமன்றத்துக்கு தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தி எதிர்ப்பு,மாணவர் போராட்டம் ஆகியவற்றோடு, அக்காலக்கட்டத்தில் எம்.ஆர்.ராதா ,எம்ஜிஆரை சுட்ட சம்பவமும் சேர்ந்துக்கொள்ள ,கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆர் போஸ்டரை ஒட்டி அனுதாப அலையை வீச செய்தார்கள், எல்லாம் சேர்ந்து காங்கிரசை வீழ்த்த உதவியது.

மாநில சட்ட சபைக்கும்,நாடாளுமன்றத்திற்கும் நடைப்பெற்ற தேர்தலில் தி.முக அமோக வெற்றி,

சட்ட சபை- 137 இடங்கள்,தனிப்பெரும்பான்மை.

நாடாளுமன்றம்- 25 இடங்கள்.

 இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ,இந்தியா முழுக்க வெறும் 283 இடங்களே வென்றது, ஆட்சி அமைக்க 273 இடங்கள் போதும் என்றாலும், 283 எம்பிக்களை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் எந்த சட்டமும் இயற்ற முடியாது, கிட்டத்தட்ட "மைனாரிட்டி அரசு"நிலை தான்.

இந்நிலையில் தி.மு.க என்ன செய்தது என்றால், யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அவர்களுடனே தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி வைத்துவிட்டார்கள்,காங்கிரசுக்கு தனது 25 எம்பிக்களும்  நிபந்தனை அற்ற ஆதரவு வெளியில் இருந்தே அளிப்பதாக அண்ணா அறிவித்துக்கூட்டணி ஒன்றை உருவாக்கிவிட்டார். பின்னர் 1969 இல் அண்ணா மறைவுக்கு பின்னர் முதல்வரான கலைஞரும் கூட்டணி உறவை அப்படியே தக்க வைத்துக்கொண்டார்.

இப்படிப்பட்ட அரசியல் கொள்கையாளர்களுக்காக எளிமையும்,நேர்மையின் வடிவமான  தமிழக காங்கிரஸ் தலைவரான காமராஜரையே தமிழக மக்கள் தோற்கடித்தார்கள் என்றால் அக்காலத்தில்  காங்கிரஸ் மீது எத்தகைய  வெறுப்புணர்வு திமுகவால் தூண்டி வளர்க்கப்பட்டு வந்தது என உணரலாம்.அதெல்லாம் தேர்தல் முடியும் வரையில் தான் ஆட்சிக்கு வந்ததும்,நட்புறவு :-))

அதன் பின்னர் 1971 இல் மீண்டும் பொது தேர்தல் வந்த போது , கலைஞர் தலைமையிலான திமுகவும்,இந்திராக்காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரசும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. இதற்கிடையில் காங்கிரஸ் இரண்டாக உடைந்து ,காங்கிரஸ்-ஓ, காங்கிரஸ் ஐ என பிரிந்த கதை எல்லாம் நடந்துவிட்டது.எனவே இந்திரா தலைமையிலான காங்கிரஸ் வலிமையிழந்தே இருந்தது ஆனாலும் தி.மு.க விசுவாசமாக முட்டுக்கொடுத்து வந்தது.

1971 பொதுத்தேர்தலிலும் இந்திரா காங்கிரஸ்- திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி,மாநிலத்தில் தி.முக ஆட்சி, தி.முகவுக்கு 28 எம்பிக்கள் வேறு கிடைத்திருந்தார்கள், அமோக செல்வாக்குடன் ஆட்சிக்கு இரண்டாவது முறையாக கலைஞர் வந்தார். வழக்கம் போல மத்தியில் இந்திராவுக்கு நிபந்தனையற்ற ஆதரவும் கொடுத்திருந்தார்.

இப்படியான அதி அற்புத கூட்டணி உறவு இருக்கும் சூழலில் தான் 1974 இல் தமிழகத்திற்கு சொந்தமான கட்சத்தீவை முன்னரே பார்த்த அரசியல் காரணத்திற்காக இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்தார், கூட்டணியில் பசைப்போட்டு ஒட்டியிருந்த கலைஞர் என்ன செய்திருக்கணும்?

சும்மா பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் நாஞ்சில்.மனோகரனை விட்டு கண்டனம் தெரிவித்தார்,  அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக உறுப்பினரான  ராமநாத புரம் எம்பி மற்றும் ஃபார்வர்ட் பிளாக் கட்சி எம்பி.பாரதிய ஜனதாக்கட்சியின் அடல்பிகாரி வாஜ்பாயி எல்லாம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

அடுத்த நாளே, இந்திராகாந்தி,வெளியுறவு துறை அமைச்சர் ஸ்வரன் சிங்குடன் ஆலோசித்து, வெளியுறவு செயலாளர் கேவல் சிங்க் என்பவரை  தமிழகத்துக்கு அனுப்பினார், அவர் என்ன பேசினாரோ கலைஞரின் சுருதி அமுங்கிப்போச்சு :-))

காரணமில்லாமல் ஒன்றும் கலைஞர் அடக்கி வாசிக்கவில்லை, எப்பொழுதுமே ஒரு கொண்டான் கொடுத்தான் கொள்கையை வைத்திருப்பார் மஞ்சத்துண்டு,தான் ஒன்றை விட்டுக்கொடுத்தால் அதற்கு ஒன்றை பெற்று விடுவார்.

 அப்பொழுது கலைஞரின் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன, முக்கியமானது வீராணம் திட்ட ஊழல்ஆகும்,வீராணம் திட்டத்தினை ஒப்பந்தம் எடுத்த சத்தியநாராயண ரெட்டிஎன்பவர் மர்மமான முறையில் தற்கொலை எல்லாம் செய்துக்கொண்டிருந்தார்,எனவே இது  பெரிய அளவில் பிரச்சினைகளை கழகத்திற்கு உருவாக்கியிருந்தது. வீராணம் திட்டம் குறித்து விசாரனைக்கமிஷன் அமைக்க வேண்டும் என தி.முக.வை விட்டுப்பிரிந்து தனிக்கட்சிக்கண்ட எம்ஜிஆர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நேரம், எங்கே மத்திய அரசின் விருப்பத்திற்கு எதிராக பேசினால் ஊழல் குற்றச்சாட்டில் வழக்கோ,இல்லை ஆட்சிக்கலைப்போ வரலாம் என பயந்த கலைஞர் , எனவே வழக்கப்படி  தனது கொண்டான் கொடுத்தான் கொள்கைப்படி கச்ச தீவை விட்டுக்கொடுத்தது பற்றி அதிக அழுத்தம் கொடுக்காமல் சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானம் மட்டும் போட்டுவிட்டு அமைதியாகிவிட்டு,ஊழல் குற்றச்சாட்டினை மத்திய அரசு கிளராமல் பார்த்துக்கொண்டார்.

தீர்க்கமாக எதிர்க்க வேண்டும் என நினைத்திருந்தால் , பி.சிராய் வழியில் ,உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டே கச்சத்தீவை மீட்டிருக்கலாம். அல்லது 28 எம்பிக்கள் உள்ள ஒரு கட்சி நாடாளுமன்றத்தினையே கலக்கியிருக்கலாம், எதிர்க்கட்சியான பிஜேபியும் ஆதரவு தர தயாராக இருந்தது எனலாம், ஏன் எனில் அவர்களை பொறுத்தவரையில் கட்சத்தீவு "வாலித்தீவு"ஆகும். ராமனும்,வாலியும் சண்டையிட்டது கட்சத்தீவில் என ராமாயண அடிப்படையில் நம்புகிறார்கள்.

1976 கட்சத்தீவு ஒப்பந்தம்:

1974 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை,வலைகாய வைக்கும் உரிமை எல்லாம் இருந்தது,ஆனால் அவ்வுரிமை இலங்கைக்கு பிடிக்கவில்லை,எனவே ஒரு திருத்தம் செய்து ,எல்லா உரிமைகளையும் பறிக்க நினைத்து ,புதிய ஒப்பந்தம் போட்டது,நமது இந்திய அரசும் கொடுத்தது தான் கொடுத்தாச்சு முழுசாவே கொடுப்போம்னு ரொம்ப தாரளமாக அள்ளிக்கொடுத்துவிட்டது,இம்முறை சின்ன எதிர்ப்பு கூட மாநில அரசிடம் இருந்து வரவில்லை,ஏன் எனில் அப்பொழுது நாட்டில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வளவு தான் மடங்கிப்போனாலும் விடுவதாகயில்லை,எமர்ஜென்சிக்கு எதிர்ப்புக்காட்டினார்கள் எனக்கூறி தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு செய்யப்பட்டு மிசாவின் கீழ் உடன்ப்பிறப்புகள் எல்லாம் தர்ம அடியும் வாங்கினார்கள்.

இம்புட்டு நடந்தும் 1981 பொது தேர்தலில் மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக்கூவிய தன்மான சிங்கங்கள் தான் கழகத்தினர் :-))

அதுக்கப்புறம் இன்று வரையிலும் கூட காங்கிரஸுடன் கூட்டணி என வண்டியோட்டியும் கட்சத்தீவு கைவிட்டு போனது போனதாகவே தான் இருக்கிறது,அம்புட்டு தான் மஞ்சத்துண்டின் இராச தந்திரம்.

கட்சத்தீவு மீட்பு சாத்தியமா?

1992 இல் ஆட்சிக்கு வந்த அம்மையார் தலைமையிலான அ.தி.முக ஆட்சியின் போது கட்சத்தீவினை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்தார்,ஆனால் ஏனோ உடனே நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, 2008 இல் தான்,மேற்கு வங்க பெருபாரி வழக்கின் அடிப்படையில் உட்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு இன்னும் இழுத்துக்கொண்டுள்ளது, இம்முயற்சி சற்றே காலங்கடந்த ஒன்று என்ற போதிலும் சரியான வகையில் கட்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமான நிலப்பரப்பு என ஆவணங்களை காட்டி வாதாடினால் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வர பெருமளவு வாய்ப்புள்ளது.

சமீபத்தில் கூட வழக்கினை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என உட்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அரசியல் ரீதியாக சாதிக்க முடியாததை சட்டப்போராட்டத்தின் மூலம் சாதிக்க முடிகிறதா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்,நல்ல தீர்ப்பு வர காத்திருப்போம்.
----------------------------

பின்க்குறிப்பு:

# சிற்சில தகவல் &காலப் பிழைகள்(நாள்,வருடம்) இருக்கலாம்,முடிந்த வரையில் சரியான தகவல்களை சேகரித்து அளித்துள்ளேன்,பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டால் திருத்தம் செய்யப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.asiastudies.org/index.php?option=com_content&view=article&id=221&Itemid=79

# http://www.eurasiareview.com/08022010-a-tamil-nadu-perspective-on-india%E2%80%99s-bilateral-agreements-center-state-relations/

# http://katchatheevu.com/

# http://bsubra.wordpress.com/2007/05/10/katcha-theevu-issue-history-indian-naval-strategy/

# http://www.thehindu.com/news/national/jayalalithaa-seeks-early-hearing-on-katchatheevu/article3911978.ece

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!

**********************

வாழ்த்து சொல்லும் நேரம்!

$
0
0

(ஹி...ஹி வாழ்த்தினது சரியா கேட்கலை ,காதுல சொல்லுன்னு கேட்கிறாங்க)


மலையாள புத்தாண்டு "விஷூ"வாழ்த்துக்கள்!

மலையாளம் பேசும் மக்களுக்கு இன்னிக்கு "விஷூ"தினமாம், அதான் புது வருட பிறப்பாம், எனவே நம்ம பக்கத்து மாநில மக்கள்,நம்ம உறவுகள் ஆச்சே , விட்ற முடியுமா எனவே விஷூ வாழ்த்துக்கள் சொல்லி நட்புறவை பேணிக்காப்போம்.

விஷூ வாழ்த்துக்கள்!

*******

ஹிந்து சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஹி...ஹி வைதீக (திராவிட)ஹிந்துக்களுக்கும் இன்னிக்கு புத்தாண்டாம்,14.04.2013 ,ஞாயிறு ,நள்ளிரவு 2.38 AM, க்கு தான் புது வருஷமே "விஜயம்"ஆகுதாம் எனவே அவசரப்பட்டு ஆங்கில வழக்கப்படி நள்ளிரவு 12 .00 மணிக்கே கொண்டாட்டத்தை ஆரம்பிச்சிடாதிங்க மக்களே, மத நல்லிணக்கத்துக்காக அவாளுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லுவோம்.

சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள்!

************

 இன்னிக்கு பொழுது போகாம விடுமுறை தின /பண்டிகை /சித்திரை புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மொக்கை படங்களையும், நிகழ்ச்சிகளையும் பார்த்து போரடிச்சா ,தமிழ்ப்புத்தாண்டு குறித்து நாம் முன்னர் இட்ட இடுகைகளின் சுட்டியை இணைத்துள்ளேன்,படித்து இன்புறவும் :-))

# வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சித்திரை-1 இல் புத்தாண்டு கொண்டாடுவோருக்கு வாழ்த்துகள்

# வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: அஃதே,இஃதே-6.

----------
பின்க்குறிப்பு:

தகவல் மற்றும்படங்கள் உதவி:

இலவச காலண்டர் மற்றும் கூகிள் படங்கள்,நன்றி!
---------------------

அஃதே,இஃதே-7

$
0
0

(ஹி...ஹி, பார்த்து பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன்...)

PlayBackSinger!

தமிழ் திரையிசையில் மென்சோகம் கொண்ட குரலில் காதல் ரசம் சொட்ட பாடக்கூடிய பாடகராக கண்டசாலா விளங்கிவந்தார், அவரது அடியொற்றி அதே வகையில் பாடல்களை பாடி தனக்கென தனிமுத்திரை பதித்தவர் ,பி.பி.ஶ்ரீனிவாஸ் ஆவார், ஆரம்பகாலத்தில் இசையமைப்பாளர்கள் கண்டசாலாவிற்கு மாற்றாக ,அவரை அப்படியே நகல் எடுத்தார்ப்போல பாடவைத்தாலும், பின்னாளில் தனது தனித்துவத்தினை தக்க வைத்துக்கொண்டவர்.

பல நடிகர்களுக்கு பின்னணி பாடியிருந்தாலும் காதல்மன்னன்"சாம்பார்"ஜெமினிக்கு பாடும் போது அட்சசுத்தமாக குரல் பொருந்தும்,காரணம் ஜெமினியின் குரலும் கொஞ்சம் மென்மையாக பெண்மையுடன் இருந்ததாகும்.

டி.எம்.எஸ் போன்றோரின் அசுர ஆதிக்கத்தின் முன் பிபி.எஸின் ஆதிக்கம் செல்லுபடியாகாத சூழலில் அரிதாகவே பாடும் சூழல், ஆனால் அப்படியும் பெரும்பாலான காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்துள்ளார், பிற்காலத்தில் பி.பி.எஸ் குரலின் இளம்  நகலாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் இளமையாக வரவே திரைப்பட வாய்ப்புகள் குறைந்து,ஓரம் கட்டப்பட்டார் என்றே சொல்லலாம். இது தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வரும் ஒரு சங்கதி.




குரல் தளர்ந்து, திரைப்பட வாய்ப்புகள் குறைந்த காலக்கட்டத்தில் "கஸல் பாடல்களில் தனது கவனத்தினை திருப்பினார், பாபர் வம்சாவழியில் ,கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபர் -2 என்பவர் ஆவார், இவரது காலத்தில் பிரிட்டீஷார் இந்தியாவை முழுவதும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்தார்கள், பகதூர் ஷார்-2 வெறும் பொம்மையாக தில்லி செங்கோட்டையில் அமர்ந்தார், அப்படி இருக்கும் காலத்தில் சும்மா இல்லை, உருது,பாரசீக மொழிகளில் நல்ல ஞானமுடையவர்,எனவே அரசவை கவிஞர்களை வைத்து கவியரங்கம், கசல் பாடல்கள் எழுதுவதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார், 1857 இல் சிப்பாய் கலகம் நடந்த போது, பகதூர் ஷா ஜாப்பரை இந்திய அரசராக சிப்பாய்கள் அறிவித்து ,அவரது தலைமையின் கீழே போராடினார்கள். சிப்பாய் கலகம் அடக்கப்பட்டதும் , பகதூர் ஷாவை கைது செய்த பிரிட்டீஷார், கண்களை குருடாக்கி ரங்கூனுக்கு நாடுக்கடத்தி சிறையிலடைத்துவிட்டார்கள் ,அங்கு சிறையிலே காலமானார்.

பகதூர் ஷா ஜாபர்-2 எழுதிய பல கசல் பாடல்கள் சிப்பாய் கலகத்தின் போது அழிக்கப்பட்டுவிட்டது, ஆனாலும் எஞ்சிய பாடல்கள் பின்னாளில் தொகுக்கப்பட்டு பலராலும் பாடப்பெற்றது,அவர் எழுதிய பாடல்களில்  சில அரிய ,அது வரையில் யாரும் பாடியிராத கசல் பாடல்களை சேகரித்து, பி.பி.ஶ்ரீனிவாஸ் பாடி ஒரு கசல் ஆல்பமாக வெளியிட்டார்.

திரையுலகில் புகழின் உச்சியில் இருக்கும் போது என்ன செய்தாலும் ,ஆஹா ,ஓஹோ என தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், லைம் லைட் இழந்த பின் கண்டுக்க ஆளே இருக்காது,காலம் போனப்பின் பாடியதாலோ என்னமோ  கசல் ஆல்பம் வெகுவாக எடுபடவில்லை,மேலும் அப்பொழுது தான் கணினி, சிடி என நுழைய ஆரம்பித்த காலம், ஆடியோ கேசட்டில் போட்டது எடுபடவில்லை,ஆனால் கள்ளத்தனமாக சிடிக்கள் நன்றாகவே போனது, அதனால் அவருக்கு ஒரு பலனும் இல்லை.
அதற்கு பின்னரும் பல காலம் கசல் ஆல்பம் போட முயன்றார், மேலும் அவரே கசல் பாடல்களும் எழுதுவார், எப்பொழுதும் பல வண்ணப்பேனாக்களும் பேப்பருமாக இருந்ததற்கு அதுவும் ஒரு காரணம், மேலும் நிறைய கவிதைகள் என எழுதிக்கொண்டேயிருப்பார், கவிதைகள் ,கசல் பாடல்கள் என எழுதும் போது ஒவ்வொரு "மூட்"கும் ஒரு வண்ணம், இசை அடிக்குறிப்புக்கு ஒரு வண்ணம் என எழுதுவாராம், மேலும் யார் மாட்டினாலும் நியுமராலஜி, பெயர் ஆராய்ச்சி என செய்வாராம்.

கசல் ஆல்பம் போட வேண்டும்,கவிதை நூல் வெளியிட வேண்டும் என சொல்லிக்கொண்டேயிருப்பாராம், ஆனால் மீண்டும் அதெல்லாம் செய்ய வாய்ப்பு கிடைத்ததா என தெரியவில்லை. நேற்று பிரியாவிடைப்பெற்று சென்றுவிட்டார். நல்லதொரு பாடகரை நமது சமூகம் சரியாக அங்கிகரிக்கவில்லையோ என்ற கேள்வி மட்டும் அவரின் பாடல்களை கேட்கும் போது காற்றுவெளியில் தொக்கி நிற்கிறது.



வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார், தமிழ்திரையிசைப்பாடல்கள் ஒலிக்கும் காலம் வரையில் "Play Back Singer"=PBS என தனித்து நிலைத்திருக்கும்.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும்!

(ஒலிப்பதிவு & இசைத்துறையில் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார், அவர் பிபிஎஸுடன் பழகியவர்,அவரோடு முன்னர் பேசியப்போது அறிந்து கொண்டவற்றை பகிர்ந்துள்ளேன், என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் என அடிக்கடி சொல்வார், நடக்காமலே போயிற்று)

----------------------

எப்படி இருந்த சென்னை இப்படி ஆகிடிச்சு!





மேற்கண்ட மேப் பிரிட்டீஷார் ஆண்ட காலத்தில் சென்னை ,மெட்ராசா இருந்த போது  கி.பி 1893  இல் உருவாக்கப்பட்டது. அதில் பார்த்தால் சைதாப்பேட்டைக்கும் நுங்கம்பாக்கத்திற்கும் இடையே "லாங் டேங்"என குறிப்பிட்டு இளநீல வண்ணத்தில் ஒரு பகுதி தெரியும்,அது வேறு ஒன்றும் இல்லை அக்காலத்தில் அப்பகுதியில் இருந்த ஏரி ஆகும்.

ஆம் அக்காலத்தில் அவ்வளவு பெரிய ஏரி சென்னை நகருக்குள்ளே இருந்துள்ளது , இப்போது அந்த இடமெல்லாம் வீடுகளாகி ,தார் சாலைகள் போட்டு வாகனங்கள் ஓடுது :-((

இப்பொழுதும் மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் "லேக் வியூ ரோட்"என இருப்பதற்கு காரணமே அந்த லாங் லேக் தான், இப்போ ரோடு இருக்கு ஏரி இல்லை.

இந்த ஏரிக்கு அடையார் ஆற்றின் மூலம் தண்ணீர் வரத்து நடைபெறும் இடையில் ஒரு வாய்க்கால் ஓடுமாம், அதன் மூலம் தான் லாங்க் டேங்கும் ,அடையாறும் இணைந்திருந்தது,இக்கால்வாய் சைதாப்பேட்டையை இரண்டாக பிரித்துவிடுவதால் சைதாப்பேட்டையின் ஒருப்பகுதியினர் அக்காலத்தில் மவுண்ட் ரோட்டிற்கு  வர முடியாதாம், . இப்படி மக்கள் கஷ்டப்படுகிறார்களே என ஒரு வெள்ளைக்கார பொறியாளர் தனது சொந்த செலவில் ஒரு மரப்பாலம் அமைத்து கொடுத்திருக்கார், அவருக்கு ஒரு மார்பளவு சிலையும் கல்வெட்டும் மக்களே அமைத்திருக்கிறார்கள், அந்த சிலை, சைதாப்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் டீச்சர்ஸ் கல்லூரிக்கு எதிரே உள்ள மின்வாரிய அலுவலக கட்டிடத்தின் ஓரமாக இன்றும் இருக்காம்.

அந்த கால்வாயை எல்லாம் மண்ணள்ளி போட்டு மூடியாச்சு,எனவே மரப்பாலத்துக்கும் வேலையில்லாம போய் யாரோ அடுப்பெரிக்க மரப்பாலத்தினை எடுத்து போயிருக்க கூடும்.

இப்பொழுது சைதையில் அடையாற்றின் மீது உள்ள மறைமலை அடிகள் பாலத்தினை முதலில் கட்டியது, பீட்டர் ஸ்கான் என்ற ஆர்மீனிய வியாபாரியாகும், அவர் சொந்த செலவில் மக்களுக்கு கட்டியுள்ளார், அதுவே பின்னாளில் விரிவாக கட்டப்பட்டு மர்மலாங் பிரிட்ஜ் எனப்பெயரிடப்பட்டு ,அப்புறம் மறைமலை அடிகள் பாலம் என தமிழில் அழைக்கப்படுகிறது.

இந்த ஏரி மட்டும் இல்லை சென்னை முழுக்கவே பல ஏரிகள், குளங்கள் என அக்காலத்தில் இருந்துள்ளன, ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தால் எல்லாம் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டது.

மேலும் நம்ம மக்கள் ஏரிக்கரையில் காலைக்கடன் கழிப்பது, ஏரியில் குப்பைகளை கொட்டுவது என சகலவிதத்திலும் மாசுப்படுத்துவதை தொடர்ந்ததால் ,மழைக்காலங்களில் கொசுக்களின் எண்ணிக்கை பெருகி மலேரியா,காலரா போன்ற நோய்கள் ஆண்டு தோறும் தாக்கவே ,இதற்கு என்ன காரணம் என வெள்ளையர்கள் ஆய்வு செய்து, நகரப்பகுதிக்குள் நிறைய நீர் நிலைகள் இருக்கு அதனால் தான் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது,என சொல்லி பல குளங்களை மண் அள்ளி போட்டு மூடவும் செய்தார்களாம்.

சுதந்திரம் அடைந்த பின் வந்த நம்ம ஆட்சியாளர்களும் எதாவது புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் ஏதேனும் குளத்தினையோ ஏரியையோ தான் தூர்த்து மூடினார்கள். இதனால் நகரப்பகுதிக்கள் நீர் நிலைகள் என்பதேயில்லாமல் போய்விட்டது.

தரமணி,மயிலாப்பூர் பகுதிகளில் பறக்கும் ரயில் போகும் பாதையில் சாக்கடை போல கால்வாய் இருப்பதை காணலாம், அதன் பெயர் தான் பக்கிங் ஹாம் கால்வாய், இந்த கால்வாய் அப்போது  செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் இருந்து , இப்போது உள்ள கல்பாக்கம் அருகில் உள்ள சட்ராஸ் எனப்படும் சதுரங்கப்பட்டினம் வரையில் ஓடியது. இதில் படகுகள்  மூலம் பயணிகள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வார்கள்.

சட்ராஸ் என்ற ஊர் போர்ச்சுக்கீசியர்களின் வியாபார துறைமுகம் ஆகும், வெள்ளையர்  வருமுன்னரே சட்ராசுக்கு போர்ச்சுகீசியர் வந்து வேலைய ஆரம்பிச்சுட்டாங்க, அவங்களை பார்த்து தான் பின்னர் வெள்ளையர் வந்து போட்டிக்கு மெட்ராசை ஆரம்பிச்சாங்க :-))

தெற்கில் பங்கிங்காம் கால்வாய் போல வட மெட்ராசிலும் ஒரு கால்வாய் ஓடியது, Coehrane river or North river என அழைக்கப்பட்டது,அது புலிகாட் ஏரியில் இருந்து ஆரம்பிச்சு , ராய புரம்,பேசின் பிரிட்ஜ்,சென்ட்ரல், தற்போதுள்ள மெடிக்கல் காலேஜ் வழியாக ஓடி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அருகே கூவத்துடன் சேரும், தீவுத்திடல் அருகே பக்கிங் ஹாம் கால்வாயுடன் இணைப்பு உருவாகும்.

இதன் மூலம் புலிகாட்டில் இருந்து சட்ராஸ் வரைக்கும் படகில் பயணிகளும்,பொருட்களும் கொண்டு செல்வார்கள். புலிகாட் பகுதியை ஏன் இப்படி இணைத்தார்கள் என்றால் அங்கு டச்சுக்கோட்டை மற்றும் துறைமுகம் இருந்தது, போர்ச்சுக்கீசியர்களுக்கு அடுத்து ,வந்து வியாபாரம் ஆரம்பித்தார்கள், எல்லாருக்கும் கடசியா வந்த கொள்ளைக்காரன் தான்  வெள்ளைக்காரன்,ஆனால் அவன் தான் ரொம்ப நாளு ஆட்டி வச்சிருக்கான் :-))

இதெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால் ஒருக்காலத்தில் சென்னை நீர் வளத்தோடு சிறந்து விளங்கிச்சு என்பதை நினைவுறுத்தவே.

இப்போ தண்ணீருக்காக வீராணம் ,தெலுங்கு கங்கா, கடல் நீர் குடி நீர் ஆக்குதல் பகீரத பிரயத்தனம் செய்கிறோம்.அக்காலத்தில் கொஞ்சம் பொறுப்புடன் மக்களை கண்டித்து "லாங் டேங்"போன்றவற்றை காத்திருந்தால் சென்னைக்கு குடிநீர் பஞ்சமே வந்திருக்காது.

மேலும் நீர் நிலை என்பது  நிலத்தடி நீர் சேமிப்புக்கு ஒரு இன்றியமையாத அமைப்பாகும். ஒரு அடி நீர் தரைக்கு மேல் நிற்கிறது என்றால் 60 அடி நீர் அதற்கு கீழே சேமிக்கப்பட்டிருக்கும்,என தேசிய நீர்வள ஆய்வுத்துறையின் அறிக்கை சொல்கிறது. இதனால் தான் ஆற்றுப்படுகையில் சிறிது பள்ளம் தோண்டினாலும் நீர் சுரக்கிறது. நிலத்தடி நீர் சேமிக்க நீர் நிலைகள் மிக அவசியம் ,சென்னை நகரிலோ எல்லாம் வீடுகளாகவும், தார் சாலைகளாகவும் ஆகிவிட்டதால் மழைபெய்தால் எல்லாம் கடலுக்கு ஓடிவிடும்,நிலத்தடி நீர் சேகரிப்பு என்பதே இல்லை, இதனால் போர் போட்டாலும் நீர் கிடைக்காது. இருக்கும் கொஞ்ச நஞ்ச நீரையும் உறிஞ்சி விட்டதால், கடல் நீர் உள்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராகிவிட்டது.

அப்பொழுது மெட்ராசப்பட்டினத்தில் பல சிறிய காடுகளும் இருந்துள்ளன.

தற்போது உள்ள ஸிம்சனுக்கு எதிர்ப்புரம் செல்லும் பகுதி(பயன்ப்படுத்தாத தலைமைசெயலகம்) முழுவதும் நரிமேடு என்ற காடாக இருந்துள்ளது.அங்கு நரிகள் அதிகம் உலாவுமாம்.

மேலும் மவுண்ட் ரோட்டிற்கும்,திருவல்லிக்கேணிக்கும் இடையே காடு, தேனாம் பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையில் காடு இருந்துள்ளது.

நந்தனத்தில் தான் விவசாய கல்லூரி முதலில் துவங்கப்பட்டுள்ளது, அதை அங்கிருந்து தூக்கிட்டு அதில் எஞ்சிய பகுதியில் இப்பொழுது கோழிஆராய்ச்சி மையம் உள்ளது. அங்கு வரைக்கும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் விடப்பட்டதாக மேப்பில் இருக்கு, இப்போ ரயிலும் காணோம், காடும் காணோம்.

இப்பொழுது ஐ.ஐடி உள்ள இடம், வன உயிரியல் பூங்காகவா இருந்துள்ளது, இந்தியாவிலேயே முதல் வன உயிரியல் பூங்கா அது தான், பின்னாளில் ஐ.ஐடி,கேன்சர் ஆஸ்பத்திரி எல்லாம் கட்டிட்டு ,வன உயிரியல் பூங்காவை சில்ரன்ஸ் பார்க் ஆக்கிட்டாங்க :-))

அதற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வனஉயிரியல் பூங்கா தான் வண்டலூரில் இருப்பது, போகிறப்போக்கைப்பார்த்தால் வண்டலூரிலும் ஒரு ஐ.டி பார்க் ஆரம்பித்துவிட்டு ,திண்டி வனத்தில் வனயிரியல் பூங்கா திறந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை,இந்தியா வல்லரசாக  தடையாக கேவலம் சில விலங்குகள் இருக்க விடுவோமா :-))

இப்போ இருக்கும் கே.கே.நகர்,அசோக் நகர்,அண்ணா நகர் எல்லாம் அக்காலத்தில் காடுகளே, இதை எல்லாம் சுதந்திரம் அடைந்த பின்னர் நம்ம ஆட்சியாளர்கள் தான் வீடுகளாக்கினர்.

இப்பொழுது பிசியாக இருக்கும் நூறடி ரோடு ஒரு காலத்தில் சென்னை -கொல்கத்தா பைபாஸ் சாலையாகும், பின்னர் அந்த ரோடே நகர சாலையாகிவிடவே, இரும்புலியூர் -மதுரவாயல் பைபாஸ் போட்டாங்க, இப்போ அதுவும் பிசியாகிட்டு இருக்கு,எனவே இப்போ முடிச்சூர் வழியா ஒரு பைபாஸ் சாலை போட்டுக்கிடு இருக்காங்க, கூடுவான்சேரிக்கிட்டே ஏரினா நேரா கொண்டு போய் தடாவில இறக்கிடுவாங்கனு நினைக்கிறேன் :-))

நகர வளர்ச்சி என்றப்பெயரில் நகரத்தின் ஜீவனை அழித்துக்கொண்டிருக்கிறோம்,ஆனாலும் எப்படியாவது ஒரு இடம் சொந்தமாக்கிடனும்னு அனைவருக்கும் ஆசையும் இருக்கு.

நீர் நிலைகளை எல்லாம் அழித்துவிட்டு , தண்ணீர் இல்லைனு தண்ணீர் லாரி பின்னாடி ஓடுகிறோம், காடுகளை எல்லாம் அழித்துவிட்டு ,சுற்று சூழல் காக்க வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள்னு விளம்பரம் செய்கிறோம்.

நவீன பொருளாதார சார் உலகில் சுற்று சூழலை அழிப்பதில் தனி நபர்களை விட அரசே பெரும்பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை.
------------

கன்னி வெடி!

பெண்களின் கண்ணுக்கு பயங்கரமான சக்தி இருக்குனு ,பல கவிஞர்கள் "ரா"வா கவிதை எல்லாம் சொல்லுவாங்க, வாள் எடுத்து போனாலும் முனை உடைஞ்சிருமாம், உன் விழியும் என் வாளும் சந்தித்தால் எனை வெல்லும்னு மண்டிப்போட்டுறுவாங்க:-))

பொண்ணுங்க கண்ணுக்கே அம்புட்டு பவர்னா ,"gun"எடுத்தா, அதுவும் இது மாதிரி இரட்டை கோபுர துப்பாக்கி எடுத்தா, எதிர்க்க எவனுக்கு தெகிரியம் இருக்கும் :-))



மறைஞ்சி நின்னு சுடுற கொடுற வில்லன் கூட்டம் கூட நெஞ்ச நிமித்திக்கிட்டு நேரா வந்து சண்டைப்போடுவான்ல! குண்டு தொளைச்சாளும் இத மாதிரி "குண்டு"தான் தொளைக்கணும் :-))

இணையத்தில் இந்த போஸ்டரை பார்த்த பின்னாலே ராத்திரியானா என் கெனாவுல ஒரே துப்பாக்கி சுடுற சத்தமா கேட்குது, அதான் முடிவு பண்ணிட்டேன் படம் எப்போ வந்தாலும் மொத நாளு மொத ஷோ பார்த்துப்பிடுறதுனு :-))

அடே கோடம்பாக்கம் டைரடக்கருங்களே, ஒலகப்படம் எடுக்கிறேன்னு சேப்பா இருக்க பொண்ணுக்கு வண்டி மசிய எடுத்து பூசி கருப்பாக்கி கண்ணை பதம் பாக்கும் பாவிகளே இனிமேலாச்சும் உங்க கற்பனைய நல்லவிதமா காட்டி,இப்படிலாம் படம் எடுக்க கூடாதா?

அதிரடி ஆக்‌ஷன் சண்டைப்படங்களுக்கு அழகூட்டும் இது மாதிரியான புதிய படைப்புகளை கலை ஆர்வத்துடன் வரவேற்பதில் அடியேனுக்கு என்றுமே அலாதி ஆர்வமுண்டு என்பதாலே இந்த பிட்டை போட்டுள்ளேன் என்பதை அவையடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

-----------------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி ,கூகிள், யூடியூப்,ரூட்ஸ்வெப், இணைய தளங்கள்.

History of the city of Madras,Rao Sahib.C.S.Srinivasachari.M.A

நன்றி!
---------------------------

என்ன கொடுமை சார் இது-13

$
0
0
(ஹி...ஹி முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்)


காகதாளிய நியாயம்!

கூகிள்காரன் ஓசியில பிலாக்னு ஒன்னு கொடுத்தாலும் கொடுத்தான் ஆள் ஆளுக்கு ஒரு பிலாக் ஆரம்பிச்சுட்டு, எதையாவது கிறுக்கி தள்ள ஆரம்பிச்சுட்டாங்க, சில சமயம் நல்லாவும் எழுதி தொலைச்சுடுறாங்க, ஆனால் சிலர் பண்ணுற அலப்பரை இருக்கே அது ஒரு தனிரக பயங்கரமா இருக்கும், தான் ஒரு  திரைவிமர்சனம் எழுதினா மணிரத்னம்,ஷங்கர் வரைக்கும் படிக்குறாங்கல ஆரம்பிச்சு அமெரிக்க சனாதிபதி ஓபாமாவே என் வாசகர்,எனக்கு மெயில் அனுப்பினார் என்பதாக பெரும்பீத்து பீத்துறாங்கய்யா :-))

சரி அதுவாது போகட்டும்னு விடலாம், நேத்து மழை பெஞ்சா கூடா நான் முத்தாநேத்தே மழை வராப்போல இருக்குனு துவித்தர்ல சொன்னேன், பிளஸ்ல சொன்னேன் ,பிலாக்கர்ல சொன்னேன்னு சொல்லிக்கிறாங்க, இதமாரி தான் ஒருப்பதிவர் இருக்கார், அவர் எழுதுறத அவர தவிர நாலுப்பேர் படிச்சாலே அதிசயம், பிரபல திரட்டிகள் கூடக்கண்டுக்காத ஒரு டொக்குப்பதிவு வச்சுக்கிட்டு, எதையாவது எழுதிட்டு ,கொஞ்ச நாள் கழிச்சு நான் சொன்னா மாதிரியே நடந்துப்போச்சுனு ஓவரா பில்டப்பு கொடுக்கிறார்,

கொஞ்ச நாள் முன்ன லோகநாயகர் டிடிஎச் இல் படம் வெளியாகும் முன் வெளியிடுவேன்னு சொன்னதும், அதெல்லாம் சாத்தியமில்லைனு முழ நீளத்துக்கு ஒரு பதிவு போட்டு வெளக்கு வெளக்குனு வெளக்கினார், என்ன எழவு மாயமோ தெரியலை அதே போல டிடிஎச் இல் படம் வெளியாகவில்லை, அப்புறம் படம் வந்து ஒரு வாரத்தில் டிடிஎச் என லோகம் சொன்னார் ,ஆனால் இன்னிவரைக்கும் டிடிஎச் இல் படமே வரலை, உடனே அந்த வெளங்காவெட்டிப்பதிவர் பார்த்தீரா ...நான் அப்பவே சொன்னேன்ல என ஒரு அலப்பரைய கொடுத்தார் :-))

கெரகம் ஏதோ நல்ல நேரம் குத்து மதிப்பா சொன்னது போல நடந்துப்போச்சுனு மக்கள் பொறுத்துக்கொண்டார்கள், பின்னர் உரமானியத்தில் ஊழல் நடக்குதுனு ஒரு பதிவுப்போட்டார், ஒரு மாசம் கழிச்சு, உரமானிய ஊழல் பற்றி அம்மையார் ஒரு அறிக்கை விட்டாங்க, இதுல இன்னொரு கொடுமை என்னனா, அலப்பரைப்பதிவர் சொன்ன மாதிரியே கணக்கும் சொல்லி இருக்கவும், ஆசாமிக்கு உச்சந்தலையில கிர்ருனு ஏறிடுச்சு, நான் அப்பவே சொன்னேன்ல என அதை எடுத்து போட்டு ஒரு பதிவு போட்டு , காலரை தூக்கிவிட்டுக்கிறார்,எல்லாம் நேரம்யானு அப்பாவி பொதுமக்களும் ஏதோ போனாப்போவுதுனு அவர் பதிவை படிச்சு தொலைக்கிறாங்க என்பதை புரிந்துக்கொள்ளாமல் அடுத்த அலப்பரைக்கு அடிப்போட ஆரம்பிச்சுட்டார்.

சுட்டி:

உரமானிய ஊழல்.


அந்த அலப்பரைப்பதிவர் நவக்கிரகங்களுக்கும் நண்பனாகிட்டார் போல எந்த பதிவு போட்டாலும் அதுக்கு பின்விளைவாக இப்போலாம் ஒரு செய்தி மாட்டிக்குது,கச்சத்தீவு பற்றி ஒரு பதிவு போட்டு , கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது, அக்காலத்தில் திமுக பக்கோடா சாப்பிட்டுக்கிட்டு வேடிக்கை பார்த்தது ஏன் ? அப்படினு வில்லங்கமா ஒரு பதிவைப்போட்டார், ஆனாப்பாருங்க பதிவு வந்த சில நாட்களில் டெஷோ கூட்டமைப்பு சார்பாக ,கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போடப்படும்னு அறிவிப்பு வருது.

நீங்களே அந்த செய்தியப்பாருங்க,

//* கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 368வது பிரிவின்படி, பார்லிமென்டின் பரிசீலனைக்கு வைத்து, சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை, அப்படி எந்தவொரு சட்டமும், இதுவரை நிறைவேற்றபடாததால், கச்சத்தீவை இலங்கைக்கு, ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது, அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது.
* எனவே, 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், உச்சநீதி மன்றத்தை டெசோ அமைப்பு அணுகும்//

செய்தி மூலம்:
http://tamil.oneindia.in/news/2013/04/16/tamilnadu-teso-decides-approach-sc-cancel-kac-173503.html

ஹி..ஹி இதான் அந்த அலப்பரையின் தீர்க்க தரிசனப்பதிவு,
கட்சத்தீவு

அடப்பாவிகளா, 1974 இல் விட்டுக்கொடுத்துட்டு 2013 வரைக்கும் சும்மா குந்தியிருந்துட்டு , இப்போ வழக்குப்போடுவோம்னு அறிக்கை வெளியிட்டா, பொங்கலுக்கே பட்டாசு வெடிக்கிறவன், தீபாவளிக்கு சும்மா இருப்பானா அதுக்கு ஏற்றார்ப்போல  லட்டுப்போல செய்தி வந்து மாட்டிக்கிட்டதும், எல்லாம் என்னால தான், எம்பதிவை படிச்சப்பொறவு தான் "டேஷோ"தலிவருக்கு ஞானம் வந்து வழக்கு போட்டிருக்கார்னு டமாரம் அடிச்சுட்டு கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்!

ரொம்ப தாமதம் என்றாலும் 2008 இல் அம்மையார் வழக்கு போட்டாச்சு, அப்போலாம் சும்மா இருந்துட்டு இப்போ வழக்கு போட்டால் ,ஜட்ஜே கேட்பார் "ஏன் மிஸ்டர் 1974 இலே உங்க கட்சி தானே மாநில ஆட்சியில் இருந்துச்சு ,அப்போலாம் ஏன் வழக்குப்போடலைனு :-))

ஏதோ காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இப்படி எதாவது நடந்து தொலைக்குது  அதுக்கெல்லாம் வெட்டிப்பந்தா விடப்படாதுனு சொல்லலாம்னு நானும் பார்க்கிறேன் ,ஆசாமி கண்ணுலவே சிக்க மாட்டேங்கிறப்படி, நீங்களாச்சும் எங்காவது பார்த்தா சொல்லி வையுங்க, அப்பவாவது நல்லப்புத்தி வருதா பார்ப்போம்.

(நீ கலக்கு மாமு ...ALL THE BEST!!!!)

என்ன கொடுமை சார் இது!
--------------------

எல்லாமே அரசியல்-2


(ஓடாது தெரிஞ்ச பின் உஷாரா ஏறி போராட்டம்)

#ஈழப்பிரச்சினைக்காக முதலில் லயோல கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் துவக்கினார்கள், பின்னர் பலக்கல்லூரி மாணவர்களும் துவக்கினார்கள்,இதையெல்லாம் பார்த்த சில வெள்ளந்தியான பதிவர்கள் ,அடடே என்னா ஒரு தமிழுணர்வு ,இது போல யாருக்கும் வருமானு சிலிர்த்துக்கொண்டு பதிவெல்லாம் போட்டார்கள்,ஆனால் அப்பொழுதும் மாற்றுப்பார்வைக்கு பெயர் போன அலப்பரை பதிவர் ,இப்போராட்டங்களின் பின்னால் இருக்கும் அரசியலை புட்டு புட்டு வைத்தார், ஆனால் சில நாட்களுக்கு பின்னர் போராட்டம் நீர்த்துப்போக ஆரம்பித்ததும் சிலிர்த்துக்கொண்டவர்கள் எல்லாம் மனசுக்குள் சலித்துக்கொண்டு , ஐபிஎல் பார்க்க போயிட்டார்கள்.

மாணவர்கள் போராட்டத்தில் திடீர் திருப்பமாக , அதே லயோலா கல்லூரியில் இருந்து ஒரு பிரிவு மாணவர்கள் குழுவாக போய் 61 வயது ஆகியும் நரைகூடி கிழப்பருவம் அடையாத நித்திய இளைஞரான ,இளைஞரணி தலைவர் மு.க.இசுடாலினை(தமிழ்..தமிழ்) சந்தித்து இளைஞர் அணியில் ஐக்கியமாகி ,டெஷொவுக்கு ஆதரவாக போராடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இதில் உள்ள இராச தந்திரம் என்னவெனில் , முதலில் ஈழப்பிரச்சினைக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் மாணவர்கள் சைக்கிள் கேப்பில் டெஷோவை எதிர்க்கிறோம் எனவும் பதாகை பிடித்திருந்தார்கள், மேலும் தொடர்ந்து திமுகவிற்கு எதிரான விமர்சனங்களை வைத்தார்கள்,ஆனால் மறந்தும் ஆளுங்கட்சியை விமர்சிக்கவேயில்லை,இது மக்களிடயே கழகத்தின் இமேஜை டேமேஜ் செய்து வந்தது. இதனை கட்சி ரீதியாக எதிர்க்கொண்டால் எடுபடாது என புரிந்து கொண்டு ,இன்னொரு மாணவர் குழுவை வளைத்துவிட்டார்கள், இனி அவர்கள் மூலம் ஈழப்பிரச்சினைக்கான போராட்டம் ,அதே நேரம் டெஷோவையும் விளம்பரப்படுத்துவார்கள், வழக்கமாக எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை எளிதில் அனுமதி கொடுக்காது,அதுவும் ஆளுங்கட்சிக்கு விருப்பமில்லாத போராட்டம் எனில் அனுமதிக்கிடைப்பது குதிரைக்கொம்பு,

இப்பொழுது கழகத்தின் ஆதரவு மாணவரணிக்கு அனுமதி மறுத்தால், முன்னர் போராடிய மாணவர்களுக்கும் அனுமதி கொடுக்க இயலாது, அனுமதி கொடுத்தால் இரு தரப்புக்கும் கொடுக்க வேண்டும், அப்படிக்கொடுத்தால் கழகத்தின் டெஷோவிற்கு விளம்பரம் கிடைத்துவிடும்,எனவே அனுமதிக்க முடியாது ,அதே போல இனி முதலில் போராடிய மாணவர்கள் குழுவிற்கும் அனுமதி கிடைப்பது கடினம், மாணவர்களும் தடையை மீறி எல்லாம் போராட மாட்டார்கள்,எனவே இப்பொழுது தானாகவே மாணவர்கள் எழுச்சி அடங்கிவிடும், அல்லது இரு தரப்புக்கும் அனுமதிக்கொடுக்கப்படும் இதனால் கழகத்தின் இமேஜ் டேமேஜ் ஆகாமல் காக்கப்பட்டு விடும், இதுவே மஞ்சத்துண்டின் ராசதந்திரம்.

இச்சம்பவங்களே எந்த அளவுக்கு மாணவர்கள் போராட்டத்தின் பின்னால் அரசியல் இருந்து இயக்கியது என்பதனை விளக்கப்போதுமானது.

எல்லாமே அரசியல் தான்!

என்ன கொடுமை சார் இது!
-------------------------------

தனி ஆவர்த்தனம்!

ஆரம்பத்தில் பெரியாரின் திராவிடர் கழகம் திராவிட நாடு என தனி நாடு வேண்டும் என கோஷம் போட்டு வந்தது, பின்னர் தி.கவில் விருந்து பிரிந்த அண்ணதுரை அவர்கள் திமுக கண்டார், அவரும் திராவிட நாடு என முழங்கினார், பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவே ,மொழிவழி பிரிந்து இனவழி ஒன்று கூடுவோம் ,அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றெல்லாம் முழங்கினார்.

ஆனால் இதுக்கெல்லாம் மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக கி.பி 1962 இல் இந்திய அரசியல் சட்டத்தின் 19 ஆம் பிரிவில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள், இதனை பதினாராவது அரசியல் சட்டத்திருத்தம் அல்லது தனிநாடு தடைச்சட்டம் என்றார்கள். மேலும் இதனடிப்படையிலேயே பதவிப்பிரமாணமும் எடுக்க வேண்டும்.

இச்சட்டத்திருத்தத்தின் படி , இந்தியாவில் இயங்கும் எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ தனி நாடு என கோரிக்கை வைத்து இயங்கக்கூடாது, அப்படி செய்தால் தேர்தலில் போட்டியிடத்தடை விதிக்கப்படும், தேவைப்பட்டால் நிரந்தர தடையே விதிக்கப்படும்.

சட்ட திருத்த விவரங்களுக்கு காண்க...

http://indiacode.nic.in/coiweb/amend/amend16.htm

இச்சட்டத்திருத்த மசோதா விவாதத்தின் போது ராஜ்யசபாவில் அண்ணா அவர்கள் தம் கட்டி நீண்ட எதிர் விவாதம் எல்லாம் செய்தார் ஆனாலும் ,சட்டத்திருத்த மசோதா அபார வெற்றிப்பெற்றது, இனிமேல் திராவிட நாடு எனப்பேசினால் தேர்தல் தடை என்ற சூழலில் , தனிநாடுக்கோரிக்கைக்கு மூடுவிழா நடத்திவிட்டு , மத்தியில் கூட்டாச்சி ,மாநிலத்தில் சுயாட்சி என புதிய கோஷம் உருவாக்கிக்கொண்டார், அதாவது ஃபெடரல் கவெர்ண்மெண்ட் அமைப்பில் மாநிலங்களுக்கு அதிக தன்னாட்சி உரிமை கேட்பதாகும்.

இந்த பழைய மேட்டரெல்லாம் எதுக்குனு கேட்கிறிங்களா விடயம் இருக்கு, அண்ணா காலத்திலே ஊத்தி மூடப்பட்ட, ஒரு சமாச்சாரத்தினை பற்றி இப்பவும் ஒரு அரசியல் தலைவர் பேசிக்கிட்டு இருக்கார், அவர் வேறு யாருமல்ல புரட்சிப்போராளி குருமா ச்சே திருமா தான்.அவருக்கு அவ்வாறு பேசுவது அரசியல்சட்டப்படி தடை செய்யப்பட்டது என தெரியுமா என தெரியவில்லை,

சமீபத்தில் நடந்த அம்பேத்கார் பிறந்த நாள் விழாவில் வீர உரையாற்றிய திருமா, நான் நாடாளுமன்றத்திலேயே தனித்தமிழ் நாடு வேண்டும் எனக்குரல் கொடுத்தேன் என சொல்லி இருக்கிறார்.(செய்தி ஜூவியில் வந்துள்ளது)

இவ்வாறு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரின் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் சில முரணான கருத்துக்களையும் சொல்லலாம்,ஆனால் யாரேனும் ஒரு உறுப்பினர் ஆட்சேபம் தெரிவித்தால் அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்படும், மேலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால் ,சபாநாயகர் விரும்பினால் இடைநீக்கமும் செய்யலாம்.சட்ட மன்றமோ,நாடாளுமன்றமோ சபாநாயகருக்கு "வானாளவிய அதிகாரம்"உண்டு என்பது கடந்த கால வரலாறு!

எனவே நாடாளுமன்றத்தில் பேசினேன் என சொல்லிக்கொண்டு மேடைப்போட்டு பேசிக்கொண்டு இருந்தால் ,யாரேனும் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால் தேர்தலில் கலந்துக்கொள்ள தடைவிதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சூனா சாமியின் கவனத்திற்கு  இதெல்லாம் இன்னும் செல்லவில்லை போல ,தெரிந்தால் உடனே பெட்டிஷன் போட்டு அலப்பரையை கொடுக்கலாம்.(ஹி...ஹி ,வருங்காலத்தில் அப்படி நடந்தால் அடியேனின் தீர்க்க தரிசனத்தின் அருமையை  நினைவு கூறவும்)

இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு  நடைப்பெற சாத்தியமுல்ல தெலுங்கானா தனிமாநில கோரிக்கைக்கே  தெலுங்கான மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை, அப்படி இருக்க சட்டத்தின் படி நிறைவேற வாய்ப்பேயில்லாத தனிநாடு பற்றிப்பேசினேன் என பெருமையாக பேசி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்ய நினைக்கும் அரசியல் தலைவர்களை என்னவென்பது?

திருமாவிற்கு அரசியல் சட்ட நிலை என்னனு தெரிஞ்சு பேசினாரா, தெரியாம பேசினாரானு தெரியலை ஆனால் எதைப்பேசினாலும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரையில் அரசியல் கட்சிகளுக்கு வாழ்வுதான் :-))

என்ன கொடுமை சார் இது!
---------------

வாய்ப்பும்,வரமும்:



கருப்பு வெள்ளைக்காலப்படங்களில் வரும் ஜாலியான பாட்டுக்களை டப்பாங்குத்து பாட்டுக்கள் என்பார்கள், கிராமிய இசையின் பின்னணியில் பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்ப வரும் படங்களில் ஜாலியான பாட்டு என்றால் குத்துப்பாட்டு என்பார்கள், ஆனால் இசைனு சொல்லிக்கிறாப்போல எதுவும் இருக்காது, வெறும் டம்முக்கு டிப்பான் டப்பானு ஒரு பீட்ஸ் தான் பாட்டு முழுக்க ஓடும்.

மாமா ...மாமா மாமா ஏமா...ஏமானு ஜாலியான டப்பாங்குத்தாக இருப்பினும், பாட்டின் நடுவில் "தாலிக்கட்டும் முன்னே கை மேனியில் படலாமானு "கலாச்சாரமும் பேசு(பாடு)கிறார்கள் :-))

இப்போலாம் டாடி மம்மி வீட்டில் இல்லைனு நேரா இன்விட்டேஷன் தான் :-))

இந்த பாட்டில உள்ள கவனிக்க தக்க அம்சம் என்னவெனில் ,பாடலுக்கு ஆடும் ஆண் நடிகர் தான்,அவர் பெயர் "கள்ளப்பார்ட் நடராஜன்",அக்கால நாடகங்களில் வில்லனாக நடிப்பவர்களை "கள்ளப்பார்ட்"என்றும் ஹீரோவை "ராஜ பார்ட்"என்றும் சொல்வார்கள்.

நாடக நடிகர்கள் எல்லாருமே நடனம்,இசை என கற்றுக்கொண்டவர்களே, எனவே வில்லன் நடிகராக நாடகத்தில் நடித்தவர் என்றாலும் செமையா "உட்கார்ந்து எழுந்து"என குத்தாட்டம் போட்டிருக்கார். பாட்டின் நடுவில் எம்.ஆர்.ராதாவும் கனவாக ஒரு சில குத்துக்கள் போட்டிருக்கார்.

இப்படிலாம் நடனம் ஆடத்தெரிந்த நாடக நடிகர் பெரிய நடிகராக வந்தாரா என்றுப்பார்த்தால் இல்லை ,கடைசியில் பார்த்தால் தேவர் மகன் படத்தில் ரேவதிக்கு அப்பாவாக "மாயன் பார்த்தால் எங்களுக்கு தான் பிரச்சினை போயிடுங்க தம்பி "என அழுகாச்சி வசனம் பேசி நடித்தவர் இவர் தான் என தெரிய வருகிறது.

திறமை இருக்கும் பலருக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை, ஆனால் திறமை என பெரிதாக இல்லாதவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு ,கிடைத்து பின்னர் திறமையை வளர்த்துக்கொண்டு பெரிய அளவில் வந்துவிடுவதும் நடக்கிறது. வாய்ப்பு கிடைப்பதை விட வரம் கிடைக்க வேண்டும் போல!

இப்போலாம் சினிமாவில ஹீரோவாக ஆகணும் என்றால் ஹீரோவிற்கு மகனாக பிறந்திருக்க வேண்டும், அரசியலில் முதல்வராக /தலைவராக ஆக வேண்டும் என்றால் முதல்வருக்கு மகனாக பிறந்திருக்க வேண்டும் என ஆகிவிட்டது.

என்ன கொடுமை சார் இது!
--------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,ஜீவி,நன்றி!
**********

இளையராஜா இசை ராஜாவா?

$
0
0

(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி)


இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோடி அனந்த நமஷ்காரங்கள், இப்பதிவை படிக்க புகுமுன் அடியேனின் சுய விளக்கத்தினையும் மனதில் இருத்திக்கொண்டு படிக்குமாறு தாழ்மையுடன் தெண்டனிட்டு வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கிறேன், வவ்வாலாகிய நான் பலப்பல லோகாதாய விவகாரங்களையும்  எனக்கே உரித்தான தனித்துவமான முறையில் அலசி ஆய்ந்து மீஉயர் நடையில் கட்டுரைகளை வடித்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு சேவையாற்றி  வருவதை அனைவரும் அறிவீர்கள் என்பதை தன்னடக்கத்துடன் சொல்ல விழைகிறேன், ஆனால் இதுகாறும் இசைக்குறித்து பெரிதாக பிரஸ்தாபித்து எதுவும் எழுதியதில்லை காரணம் அடியேன் இசையில்  ஒரு ஞானசூனியம் என்பதை அறிந்திருப்பதாலேயாகும், ஆனாலும் கேள்வி ஞானம் சற்றுண்டு, நாக்க மூக்கா போன்ற ஸினிமா ஸங்கீத கீர்த்தனைகளை லயித்துக்கேட்கும் பழக்கமுண்டு,மேலும் சில பல ஸங்கீதக்காரர்களுடன் லேசான பரிச்சயமும் உண்டு என்பதால் அவ்வப்போது ஸங்கீத சம்பாஷணைகளில் கலந்துக்கொண்டு ஆமாமாம் நீங்க ஸொல்றது சரிதான், அது ஹரிப்பிரியா ராகமே தான் என சொல்லி ,அடேய் ஸங்கீத ஞானசூன்யமே அது கரகரப்பிரியா என பாராட்டுப்பத்திரங்கள் வாங்கிய அனுபவமுண்டு, அப்படியாப்பட்ட ஸங்கீத பின் புலமுள்ள நீ எப்படி ராசாவின் இசை ஆளுமை பற்றி எழுதக்கிளம்பினாய் என ஏகத்துக்கும் எகிறிக்குதிக்க வேண்டாம், இதற்கெல்லாம் காரணம் , ராசாவின் ரஸிக கண்மணிகளின் அளவுக்கதிமான விதந்தோம்பலேயாகும்.



இளையராஸா ஒரு அதிஅற்புதமான ஸினிமா ஸங்கீதக்காரர் என்பதில் எள்முனையளவேனும் அடியேனுக்கு சந்தேகமில்லை ,ஆனால் அவரன்றி இசையில்லை, இசையின் பிதாமகர் அவரே, இசை மேதை,ஞானி ,அவர் தும்மினாலே ஸப்தஸ்வரங்களும் ஒலிக்கும் என்பது போன்ற மிகையான விதந்தோம்பல்களை சில ரஸிக ஸிகாமணிகள் செய்வதோடு ,அதற்கு ஆதாரம் இதோ என ஆட்டுத்தாடி வைத்த சிலரின் கட்டுரைகளை வேறு சான்றாவணமாக காட்டிக்கொள்கிறார்கள்,அப்படியான ஒரு கட்டுரையை மிக ஸமீபத்தில் இணையத்தில் வாஸிக்க நேரிட்டது, மேற்கத்திய இசையென்றால் மேற்கு திசையை நோக்கி வாஸிப்பது என்ற அளவில் ஞானமுள்ள எனக்கே அக்கட்டுரை தம்புராவில் தவில் வாசித்தார் என்பது போல மிகசெயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஒன்று என உடுப்பி ஓட்டல் உளுத்தம் வடை ஓட்டை போல தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

எனவே இசை ஞானமில்லை என இனியும் வாளாவிருந்தால் நாளைய தமிழ்கூறும் நல்லுலகம் இது போன்ற மொள்ளமாரித்தனங்கள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஸமூகபிரக்ஞையுள்ள வவ்வால் எப்படி சும்மா இருந்தார் என நாக்குமேல பல்லுப்போட்டு நாராசமாக கேட்கும் என்பதால் , கூச்சத்தினை கூறையில் ஏற்றிவிட்டு வெட்கமில்லாமல் கேள்வி ஞானத்தினை வைத்தே ஒரு இசைக்கட்டுடைத்தல் கட்டுரை படைத்துள்ளேன், இதில் உள்ளதெல்லாம் கூகிளாண்டவர் துப்பிய எச்சில்களே ஏதேனும் பிழையிருந்தால் அடியேன் பொறுப்பல்ல,இப்பாலகனை உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக பாவித்து அடியேனின் சண்டப்பிரசண்டங்களை மன்னித்து அருள்வீராக!

இனி மேற்கொண்டு இசைக்கட்டுடைத்தல் சாகித்தியத்தினுள் செல்லலாம்,

மூலப்பதிவு: இளையராஜா


//ஒரு முறை எனது இசை வகுப்பின் ஆசிரியர் மேற்கத்திய இசையின் கூட்டுச்சுரங்கள் [ chord ] பற்றிய பாடத்தில்  'C' மேஜர் ஸ்கேல் பற்றிய பாடத்தை நடத்தினார்.
அப்போது 'C'மேஜர் ஸ்கேலின்... முதல் கார்டு 'C'மேஜர்.
இரண்டாவது கார்டு... 'D'மைனர் [ 'D' minor ].
ஒரு பாடலின்  'ஏற்பாட்டில்' [ arrangements ] இந்த இரண்டு 'கார்டு'களையும் அடுத்தடுத்து இசைப்பது தவறானது என்று சொன்னார்.//

chord or scale or key என எப்படி சொன்னாலும் பொருள் ஒன்றே, எனவே  'C'மேஜர் ஸ்கேலில் முதல் கார்டு "சி"மேஜர் எனவும் அடுத்து வருவது டி மைனர் ஸ்கேல் அதனை வாசிக்க மாட்டர்கள் என்பதே தவறு.

சி மேஜர் ஸ்கேலின் இசைக்குறிப்பு படம்.



இதில் C,D,E என வருவதெல்லாம் கார்டு அல்ல , பிட்ச்,அல்லது நோட் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒரு டோன் ஆகும். இது போல பல டோன்கள் உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஷார்ப்,ஃப்ளாட், மீடியம் என மாறுபட்ட டோன்கள் உண்டு.

கர்நாடக ஸாஸ்திரிய ஸங்கீதத்தில் வரும் ஸ,ரி,க,ம,ப,த,நி  ஸ்வரங்கள் போன்றவை மேற்கத்திய ஸாஸ்திரிய ஸங்கீத "A,B,C,D,E,F,G "எனப்படும் நோட்கள். இராகங்கள் போன்றவை கார்டு/ஸ்கேல்/கீ ஆகியவை.

கார்டு,ஸ்கேல் எல்லாம் ஒன்று என புரியாமல் ,அதில் வரும் நோட்களை கார்டுகளாக பாவித்து "C"மேஜர் கார்டுக்கு அடுத்து "D"மைனர் கார்டு ,"C"மேஜர் ஸ்கேலில் வராது என்கிறார்.

படத்தில் பார்த்தால் ,"C"மேஜர் ஸ்கேலின் நோட்டில் "C"க்கு அடுத்து "D"வருவதை காணலாம் ஆனால் இவை எல்லாம் "நோட்"அல்லது பிட்ச் ஆகும் , கார்டு அல்ல, இயல்பாகவே "C"மேஜர் ஸ்கேலில் "D"மைனர் கார்டு இல்லை ,அங்கு வருவது நோட் ஆகும், ஆனால் என்னமோ "C"மேஜர்  ஸ்கேலின் உள்ளே இருக்கும் பகுதி நோட்கள் "சி மேஜர்"&"டி"மைனர் என்பது போல விதிப்படி வராது என சொல்லி இருக்கிறார் :-))

ஆனால் கார்டு புராகிரஷன் என்பது வேறு ,அதனைக்கொண்டு வந்து ஒரு கார்டு/ஸ்கேலில் அடுத்து வாசிக்கும் நோட்களுடன் குழப்பி , அங்கே "D"மைனர் கார்டு "C"மேஜர் ஸ்கேலில் ,"C"மேஜருக்கு அடுத்து வராது என மெனக்கெட்டு சொல்லியுள்ளார்.

மேஜரோ மைனரோ ஒரு கார்டுக்குள் இருப்பதெல்லாம் நோட்கள், கார்டு அல்ல, கார்டும்,ஸ்கேலும் ஒன்றே.

இப்பொழுது "சி"மேஜர் கார்டு, டி மைனர் கார்டு பற்றியும் ,கார்டு புராகிரஷன் பற்றியும் என்ன சொல்கிறது இசை விதி எனப்பார்ப்போம்.

மேற்கத்திய இசையில் A,B,C,D,E,F,G எனத்தனியே நோட்/டோன்/பிட்ச் உண்டு , இவற்றின் கலவையில் இதே போல வரிசையாக A,B,C,D,E,F,G  என கார்டு/ஸ்கேல்/கீ  உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றுக்கும் மேஜர் கார்டு,மைனர் கார்டு என இரு வகை உண்டு.இந்தக்கார்டுகளை அடுத்தடுத்து "ஹார்மோனியாக"வாசிப்பதே மெலடி எனப்படும் இசை ஆகும்.

மேற்கத்திய இசையில் ஆதாரமாக ,ஸ்திரமான பிட்ச்சில் இருப்பது "C"கார்டு என்பதால் எல்லா வாத்தியத்திலும் "C"கார்டு எளிதாக தெளிவாக வாசிக்க முடியும் எனவே "C"கார்டினை மையமாக வைத்தே இசை விதிகள் இருக்கும்.

இசை விதிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் இசையமைப்பதை எளிதாக்கவே. விதியை பின்ப்பற்றுவது கடினமாக இருப்பதால் தானே இசைக்கற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது பின்னர் எப்படி விதி எளிதாக்கும்னு நினைக்கலாம்.

உதாரணமாக கிரிக்கெட்டின் "ஃபீல்டிங் பொசிஷண்களை"பார்க்கலாம். பாயிண்ட், சில்லி பாயிண்ட், கல்லி, பைன் லெக்,டீப் பைன் லெக், லாங் ஆன்,லாங்க் ஆப்,மிட் ஆன்,மிட் ஆஃப் என பெயர் வைத்து அங்கெல்லாம் ஏன் ஆட்களை நிறுத்த வேண்டும் ,நிறைய இடம் இருக்கே இஷ்டத்துக்கு நிக்க வச்சா என்ன?  காரணம் என்னவெனில் ஒரு பேட்ஸ்மேன் பந்தினை அடித்தால் இயல்பாக இப்படி பெயர் சூட்டப்பட்ட புள்ளிகளின் வழியே அல்லது அருகே தான் செல்லும், பல ஆண்டுகளாக ஆடி, பந்து பயணிக்கும் பாதைகளை கவனித்து பின்னரே "ஃபீல்டிங் பொசிஷன்கள்"தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போ இன்னார் எப்படி அடிப்பாங்கனு தெரியாம எங்கே நிறுத்துவது என யோசிக்காமல் போனதும் "ஸ்டேண்டர்ட் பீல்டிங்"பொசிஷணில் ஆட்களை நிறுத்துவது நேரம் சேமிக்க உதவும், ஆட்டத்தினையும் எளிதாக்குகிறது அல்லவா?

அதே போல எந்த நோட், கார்டு எப்போ வாசிச்சா இனிமையாக இருக்கும்னு பல ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் இசை விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மேஜர் கார்டு, மைனர் கார்டு இடையே உள்ள ஒத்திசைவை வைத்து தொடர்பினை உருவாக்கியுள்ளார்கள். இத்தொடர்பின் அடிப்படையில் கார்டு புராகிரஷனை உருவாக்குவார்கள்.

ஒன்றுக்கொன்று இடையேயுள்ள தொடர்பின் அடிப்படையில் ரிலேட்டிவ் CHORD என்பார்கள். இதனை கணித்து உருவாக்கப்பட்ட விதியை"circle of fifth"என்பார்கள்.

படம்.



வெளிவட்டத்தில் வருவது மேஜர் கார்டு, உள்வட்டத்தில் இருப்பது மைனர் கார்டு.

12 மணி நிலையில் துவக்கமாக அமைவது "c"மேஜர் கார்டு அதில் இருந்து கடிகாரச்சுற்றில் ஒவ்வொரு ரிலேட்டிவ் கீயும் செல்கிறது.  மிக அருகில் இருப்பதே முன்மையான ரிலேட்டிவ் கீ ஆகும்.

இந்த விதிப்படி "C"மேஜருக்கு முதன்மையான ரிலேட்டிவ் கீ 'A"மைனர் ஆகும்.

C மேஜரின் நேரடி மைனர் கீ ஆன "C"மைனர் பேரலல் மைனர் எனப்படும்.

இந்த இரண்டு கீ களும் "C"மேஜருடன் நல்ல ஒத்திசைவு கொடுக்கும் என்பதால் அடுத்தடுத்து வாசிக்கவும் எளிதாக இருக்கும்,இனிமையாகவும் இருக்கும் என்பதால் , C மேஜர்  ஐ, A மைனர் அல்லது "C"மைனர் காம்பினேஷனில் இசையமைப்பது இனிமையான மெலடிக்கு உத்திரவாதம் என எளிமைப்படுத்துவதே இசை விதி.

இது போல ஒவ்வொரு மேஜர் கீக்கும் ரிலேட்டிவ் கீ, பேரலல் கீ "circle of fifth "விதிப்படி கண்டுப்பிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விதி எப்படி செயல்படுகிறது எனில் ,

ஒரு மேஜர் கார்டின் நோட்களை வரிசையாக எழுதினால் , ஒன்றாவது ரூட் நோட்டில் இருந்து ஆறாவதாக உள்ள நோட்டே ரிலேடிவ் மைனர் கீ ஆகும்.

அதே போல ஒரு மைனர் கீ ரீயின் ரிலேட்டிவ் மேஜர் என்னவெனில் மூன்றாவதாக வரும்  நோட் ஆகும்.

"சீ"மேஜரின் நோட்கள்,

C, D, E, F, G, A, B, C

http://en.wikipedia.org/wiki/C_major

இதில் ஆறாவதாக வருவது "A"நோட் ஆகும் இதுவே , C மேஜரின் ரிலேட்டிவ் மைனர் ஆகும்.

ஒரு மேஜர் கீயின் பகுதி நோட்கள் அப்படியே அதன் ரிலேட்டிவ் மைனர் கீ இல் இருக்கும், எனவே அடுத்தடுத்து வாசிக்க எளிதாக இருக்கும், இதனடிப்படையிலேயே "ரிலேட்டிவ்"கீ என்கிறார்கள்.

A மைனரின் பகுதி நோட்கள்.

A, B, C, D, E, F, G, A

சீ மேஜரின் பகுதி நோட்கள் அப்படியே கொஞ்சம் வரீசை மாறி வருவதை காணலாம். மேலும் மூன்றவதாக "C"நோட் உள்ளது.

இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோடி இசை அறிஞர்கள் வாசித்து பார்த்து அதன் ஒத்திசைவு தொடர்புகளை அனுபவ ரீதியாக அலசி உருவாக்கப்பட்டது.

கடிகாரச்சுற்றில் நெருக்கமாக உள்ள மேஜர், மைனர்கள் ஹார்மனியை உருவாக்கும் என்பதால் அதையே பின்ப்பற்றுவது வழமை.

அதற்காக தொலைவாக உள்ள ஒரு மேஜர்,மைனர் கீ காம்பினேஷனில் இசை அமைக்க கூடாது என்றெல்லாம் கட்டாயம் எல்லாம் இல்லை. அமைக்கலாம். அதற்கும் ஒரு பேர் வைத்துள்ளார்கள் "ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ்"(RELATIVE KEY PARADOX).

கடிகாரச்சுற்றின் அடிப்படையில் , C மேஜருக்கு மிக தொலைவாக உள்ள மைனர் கீ "D"மைனர் ஆகும். எனவே காம்பினேஷனில் வாசிக்க விரும்புவதில்லை, ஆனால் வாசிக்கவே மாட்டார்கள்,கூடாது என இல்லை, அப்படி தொலைவான மைனர்களையும் சேர்த்து வாசிப்பதை சில தேவைகளுக்கு பயன்படுத்துவார்கள்.

மேலை சாஸ்திரிய சங்கீதத்தில் அதிகம் முரணாக வாசிக்க மாட்டார்கள் ஆனால் ஜாஸ், பாப் எனப்படும் இசைகளில் இப்படி உட்டாலக்கடியா சேர்த்து இசையமைப்பார்கள் ஏனெனில் அவை பாரம்பரிய இசையல்ல, வழமைக்கு மாறான முறையில் இசைக்கோர்வை செய்வது இயல்பு.

ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால் தேவையான மூட் மற்றும் மெலடி உருவாக்கவே. பாப் ,ராக்,ஜாஸ்,ராக் அன்ட் ரோல் கண்ரி இசைகளில் பாரம்பரிய விதிகளை விட இனிமை,எளிமைக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள்.

திரையிசை எனப்படுவது ஸாஸ்திரிய ஸங்கீதமே அல்ல ,அது விதிகளற்ற கலவையான இசை வடிவம் ஆகும்," fusion of amalgamated contemporary music"எனலாம். அப்படி இருக்கும் போது அதில் விதிக்கு மாறாக இசைகோர்வை செய்வது தான் இயல்பே ஆனால் அப்படி செய்து விட்டதாய் சொல்லி இசை மேதை என ஒருவரை மெச்சுவது உலகமகா காமெடி.

இதில் இன்னொரு காமெடி அப்படி மாற்றி செய்வதையும் ஸாஸ்திரிய இசை ஒரு உபவிதியாக அனுமதிக்கிறது. எனவே புதுமை படைத்தார் ,இசை விதியை திருத்தினார் என்றேல்லாம் கூத்தாடுவதே அபத்தம்.

தொலைவான ரிலேட்டிவ் மைனர் கீகளை ஏன் பயன்ப்படுத்துகிறார்கள் எனப்பார்ப்போம்.

மேலை இசையில் ஒவ்வொரு மேஜர் கார்டு/ஸ்கேல்/கீயும் மகிழ்வான உணர்ச்சியை இசையில் அளிக்க வல்லவை. கடிகாரச்சுற்றில் செல்ல செல்ல மகிழ்ச்சி உணர்வு கூடும் எனலாம்.

அதே போல ஒவ்வொரு மைனர் கீகளும் சோக உணர்வை அளிக்க வல்லவை. கடிகார சுற்றில் செல்ல செல்ல சோகம் கூடும் எனலாம்.

இப்போ C மேஜர், D மைனர் நிலை என்னவென பார்ப்போம்.

C மேஜர் மகிழ்வான கீ, அதற்கு வெகு தொலைவில் அமைந்திருப்பதே "D"மைனர் எனவே மிக சோக உணர்வை தரும்.

C மேஜர் -D மைனர் என அடுத்தடுத்து வாசித்தால் அந்த இசை மகிழ்வா, சோகமா என இனம் காண முடியாது என்பதால் ஸாஸ்திரிய இசையில் பெரும்பாலும் பயன்ப்படுத்துவதில்லை.

ஆனால் பாப் இசை போன்றவற்றில் இப்படி அடிக்கடி தொலைவான ரிலேட்டிவ் மைனர்களை பயன்ப்படுத்தி இசை உணர்வில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்குவார்கள்.

இசை உளவியலில் கூட இதனை பயன்ப்படுத்தி ஆய்வுகள் செய்துள்ளார்கள். தொலைவான ரிலேட்டிவ் மைனர் காம்பினேஷனான C மேஜர்- D மைனர் இல் அமைக்கப்பட்ட இசைக்குறிப்புகளை வாசிக்க சொல்லி கேட்க வைத்து பயனாளர்கள் என்ன உணர்ந்தார்கள் எனக்கேட்டப்பொழுது சிலர் மகிழ்ச்சியான இசை என்றும் சிலர் சோகமான இசை என்றும் சொல்லியுள்ளார்கள்.

மேலும் கேட்பவரின் மூடைப்பொறுத்து ஆரோகணமாகவும்( ஏறுவரிசை),அவரோகணமாகவும்(இறங்கு வரிசை) இசை ஒலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இசைக்குறிப்பின் பிட்ச் மாறாமல் நிலையாகவே இருந்துள்ளது. எனவே தான் இவ்வாறு இசைகோர்வை உருவாக்குவதை "ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ்"என்கிறார்கள்.

ஒரே இசைக்கோர்வை ஏறுவரிசையாகவும் ,இறங்குவரிசையாக உணர செய்யும் இவ்விசையமைப்பை ஆய்வு செய்து வரிசைப்படுத்தியவர்" Roger Shepard," (1964)என்ற ஆய்வாளர் எனவே ஷெப்பர்ட் ஸ்கேல் என்றே அழைக்கப்படுகிறது.

எந்த ஒரு சிந்தசைசரும் இல்லாமல் டாப்ளர் விளைவை உருவாக்குகிறது இம்முறை எனவே ஹாலிவுட் திரைப்படங்களில்  பின்னணி இசையில் சிறப்பு ஒலியை உருவாக்க ஷெப்பர்ட் ஸ்கேல் அடிப்படையில் இசைகோர்வை அமைப்பதுண்டு. பேட்மன் படங்களில் பேட்மென் ஓட்டும் பைக் வேகம்மெடுத்து செல்வதை ஒலியியல் ரீதியாக காட்ட ஷெப்பர்ட் ஸ்கேல் முறையில் இசையமைக்கபடுகிறது.

ஷெப்பர்ட் 1964 இல் வகைப்படுத்தினாலும், இவ்வாறு தொலைவான ரிலேட்டிவ் மைனர் காம்பினேஷனில் இசைக்கோர்வை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் ஜெர்மானிய இசை மேதை "பாக்"(Johann Sebastian Bach,1685-1750) ஆவார். சொல்லப்போனால் பியானோவுக்கு என இசைக்குறிப்பு எழுதிய முதல் இசையமைப்பாளரே அவர் தான், அவரது காலத்தில் தான் பியானோ கண்டுப்பிடிக்கப்பட்டது, ஜெர்மானிய மன்னர் முதல் பியானோவை வாங்கி அதற்கு இசைக்குறிப்பு எழுத சொன்னார், பின்னர் ஒரு சவாலும் விடவே ரிலேட்டிவ் கீ பேராடாக்ஸ் என்ற விதி உருவாகாத காலத்திலேயே தொலைவான மேஜர்-மைனர் கீ காம்பினேஷனில் இசையமைத்து கேட்பவர்களின் மனநிலைக்கு ஏற்ப ஏறுவரிசை அல்லது இறங்குவரிசை பிட்சில் ஒலிப்பது போல செய்துக்காட்டினார்.

பிரபல பாப்,ராக் இசைக்குழுவினர்கள் பாடல்களில் இம்முறை அதிகம் இருக்கும், பாப் மார்லே, பாப் டைலான், பீட்டில்ஸ் பாடல்களில் இத்தகைய ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ் இசையமைப்பு அதிகம் காணக்கிடைக்கும். ரிலேட்டிவ் கீ பேரடாக்சில் இசையமைக்க எளிய கட்டை விரல் விதி , எதிர்க்கடிகார சுற்றில் மைனர் கீ காம்பினேஷன் தேர்வு செய்வதாகும், C மேஜருக்கு , D மைனர் எதிர்க்கடிகார சுற்றில் மிக அன்மை மைனர் ஆகும் எனவே மகிழ்வு ,சோகம் என ஒரே இசைக்கோர்வையில் கேட்பவரின் மனநிலைக்கு ஏற்ப ஒரு ஒலிச்சித்திரத்தினை உருவாக்கும்.

இப்போ நீங்களே சொல்லுங்கப்பா, C மேஜர்- D மைனர் காம்பினேஷனில் அழகிய கண்ணே பாடலை இசையமைத்தது மாபெரும் இசைப்புரட்சியா என?
உதிரிப்பூக்கள் படத்தில் ஒரு தாய் தன் குழந்தைகளுடன் மகிழ்வாக இருப்பதாக காட்ட வேண்டிய சூழலில் தேவையே இல்லாமல் மகிழ்வா சோகமா என இனம்பிரிக்க முடியாமல் இசையமைத்துள்ளார் எனலாம் ஆனால் பொதுவாக அப்பாடல் சோக உணர்வை தூண்டும் வகையில் ஒலிக்கும், ஒரு வேலை சோகத்தினை மனதில் வைத்திருக்கும் நாயகி குழந்தைகளுக்காக மகிழ்வாக இருப்பதாக காட்ட வேண்டும் என இயக்குனர் சூழலை விவரித்து  அவ்வாறு பாடல் அமைத்திருக்கலாம், எனவே சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இனிமையான பாடல் எனலாம் ,ஆனால் இசைப்புரட்சி என்பதெல்லாம் மிகையான ஒன்று.

# மேலும் அந்த ஸங்கீத ஆய்வாளர் கர்நாடக ஸங்கீதத்தினையும் கொத்துக்கறி போட்டுள்ளார்,

//கர்நாடக சங்கீதத்திலும்  'ஸட்ஜமம்'என்கிற முதல் ஸ்வரத்திற்கு,
அதற்கு அடுத்து வருகிற இரண்டாவது ஸ்வரமான  'ரிஷபம்'பகை ஸ்வரம்.//

இது எப்படினு என் மரமண்டைக்கு புரியவில்லை, நம்ம கேள்வி ஞானத்தினை துருவியதில் எனக்கு கிடைத்த விளக்கத்தினைப்பார்ப்போம் ,,

கர்நாடக இசையில் ஏழு ஸ்வரங்கள் உள்ளன,

ஸ,ரி,க,ம,ப,த,நி

இவற்றினை ஸப்தஸ்வரங்கள் என்பார்கள் இவற்றின் கூட்டுக்கலவையில் தான் ராகங்கள் உருவாகின்றன.

இதில் "ஸ" (ஸட்ஷமம்) ,"ப"(பஞ்சமம்) ஆகியவை மாறாத (அச்சல) ஸ்ருதி கொண்டவை. மற்றவை மாறக்கூடிய ஸ்ருதி கொண்டவை அவற்றிற்கு கோமல்(ஃப்ளாட்) ,தீவிரம், மத்திமம் என மூன்று ஸ்ருதிகள் உண்டு , இவற்றை எல்லாம் கூட்டினால் 16 ஸ்ருதி நிலைகள் வரும் ,இதன் அடிப்படையில் தான் 16 கர்நாடக ராகங்கள் உருவாகின, இராகங்கள் பதினாறு உருவான வரலாறு இதுவே.

பின்னர் இந்த 16 ஸ்ருதி நிலைகள் அடிப்படையில் 72 இராகங்கள் உருவாகின அவற்றை 72 மேல கர்த்தா இராகம் என்பார்கள். இதான் கர்நாடக ஸங்கீதத்தின் அடிப்படை இராகங்கள். இம்முறையை உருவாக்கியவர் வேங்கடமஹி எனும் இசை அறிஞர் ஆவார். மேல கர்த்தா ராகங்களில் இருந்து உருவாகும் ராகங்கள் ஜன்ய ராகம் எனப்ப்படும். பல இராகங்கள் இவ்வாறு உருவாகியுள்ளன, ஆதியில் மில்லியன் கணக்கில் இராகங்கள் இருந்துள்ளன இப்பொழுது சுமார் 300 இராகங்களே நிலைத்துள்ளன.

மேலகர்த்தா இராகங்கள் 72 இலும் ஏழு ஸ்வரங்களும் வரும் என்பதால் "சம்பூர்ண இராகங்கள்"என்பார்கள். எல்லா மேலகர்த்தா இராகங்களும் சம்பூர்ண இராகங்கள் ஆனால் எல்லா சம்பூர்ண இராகங்களும் மேலகர்த்தா இராகம் அல்ல.அதாவது குமரிகள் எல்லாம் கிழவிகள் ஆகலாம்,ஆனால் கிழவிகள் எக்காலத்திலும் குமரிகள் ஆக மாட்டார்கள் :-))

இப்போ எதுக்கு இந்த அடிப்படை கர்நாடக ஸங்கீத போதனைகள் என கேட்கிறீர்களா , மேட்டர் இருக்குதுள்ள, கர்நாடக ஸங்கீதம் பயில ஆரம்பிக்கும் போது பால பாடமாக ஆரம்பிப்பது "மாய மாளவ கெளளை"என்ற இராகத்தில் இருந்து தான் , இது ஒரு மேலகர்த்தா இராகம் இதன் சிறப்பு என்னவெனில் இதன் பகுதி ஸ்வரங்கள் அப்படியே ஸ,ரி,க,ம,ப,த,நி"என வருவதே ஆகும்.

எனவே மாய மாலவ கெளளை பயின்றால் ஏழு ஸ்வரங்களும் பழக்கமாகிவிடும் , பின்னர் படிப்படியா மற்ற இராகங்கள் பயில்வது எளிது. இந்த இராகத்தில் "ஸட்ஜமம்"அடுத்து "ரிஷபம்"வருகிறதே பின்னர் எப்படி பகை ஸ்வரமாச்சு?

மாய மாளவ கெளளை மட்டுமில்லை பல மேலக்கர்த்தா இராங்களிலும், அவற்றின் இருந்து உருவான ஜன்ய இராகங்களிலும் "சட்ஜமம், அடுத்து 'ரிஷபம்"வருவகிறது, ஆனால் நம்ம ஆய்வாளார் பகை ஸ்வரம் அடுத்தடுத்து வராது, இராசா தான் பகை ஸ்வரம் எல்லாம் வச்சு இசைப்போடுவார்னு பெருமை பாடுகிறார்.

இதை வேற ஒரு பதிப்பகம் புத்தகமாக போட்டிருக்கு, அதை எடுத்து பதிவா போட்டு ராசானா ராசா தான்னு ஒருத்தர் எசப்பாட்டு பாடுறார், ஜால்ரா அடிக்கிறது தான் அடிக்குறிங்க ஏன் எதுக்குனு ஒரு வெளக்கம் கொடுத்துட்டு அடிங்கப்பா, நீங்கப்பாட்டுக்கு மனசுக்கு தோணினாப்போல ஜால்ரா வாசிச்சிடுறிங்க, இது எப்படினு புரியலையேனு என்ன போல ஞானசூனியங்களுக்கு விளங்காம போயிடுறதால கூகிளை தோண்டி உண்மையை கண்டுப்பிடிச்சு தொலைய வேண்டியிருக்கு அவ்வ்!

# அடுத்த உலகமாக இசை சாதனையாக கீழ்கண்டதை திருவாய் மலர்ந்தருளியுள்ளார்(எழுத்து வடிவில் தான்)

//இதைப்போல 'ஹார்மனி' [ harmony ] பற்றிய பாடத்தில் ஒரு இசையை இயற்றும்போது
ஒரு ஸ்வரத்திலிருந்து அடுத்த ஸ்வரத்திற்கு நகருகையில் ஒரு ஒழுங்கான இயக்கம்  [ Movement ] இருக்க வேண்டும்.
முதல் ஸ்வரத்திலிருந்து, ஏழாவது ஸ்வரத்திற்கு தாவுதல் போன்ற
 'கிரேட் ஜம்ப்' [ great jump ] செய்யக்கூடாது.
அது இனிமையாக இருக்காது என்பது இசைக்கோட்பாடு.
இசை விதியும் கூட.
 ‘செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே’ என்ற  ‘16 வயதினிலே’ படப்பாடலை கேட்கும் போதும், 
‘என்னுள்ளே எங்கோ...ஏங்கும் கீதம்’  என்ற  ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படப்பாடலின் 'ஹம்மிங்'கேட்கும் போதும், 
இந்த விதி இவரால் எவ்வளவு அழகாக மீறப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது.//

ஆனாப்பாருங்க இதப்போல லாங்க் ஜம்ப்,ஷார்ட் ஜம்ப்பெல்லாம் அடிக்கலாம்னு மேலை உலக ஸாஸ்திரிய ஸங்கீதமே அனுமதித்து அதுக்கு பெயரெல்லாம் வச்சு இருக்கு :-))

கார்டு புராகிரஷனில் ஹார்மொனியா ஒன்றுக்கு அடுத்து இன்னொன்று என நோட்களை வாசிப்பதை "arpeggio"என்கிறார்கள், அதே சமயம் ஒரு பிட்சுக்கு இன்னொரு பிட்ச் சம்பந்தமில்லாமல் வாசிப்பதை " Non-harmonic arpeggio"என்கிறார்கள். இவ்வாறு இசையமைப்பதை "modal frame"இசைக்கோர்வை என்கிறார்கள்.

கார்டுகளின் அடிப்படையில் தொடர்பெல்லாம் பார்க்காமல் கேட்க இனிமையாக இருக்கிறதா அப்போ சரி தான் என நோட்களை பயன்ப்படுத்தி அமைக்கும் இசை வகை இது.

ஆப்ரிக்கன், கியுபன்,அமெரிக்கன் ஜாஸ்,ரிதம் அன்ட் ப்ளூஸ் ,பாப் இசை எல்லாம் இப்படியானவை, இன்னும் லத்தின்,சைனீசிஸ்,ஸ்பானிசில் எல்லாம் இவை உண்டு.

பீட்டில்ஸ் இசையமைத்த பலப்பாடல்கள் இப்படியான "modal frame"வகை இசைகளே, ஒரு கார்டில் இருந்து தொலைவான கார்டுக்கு ஜம்படிப்பார்கள், கேட்கும் போதே உணர முடியும்.

ஒரு டோனுடன்( இந்திய இணை ஸ்வரம்) ஒத்துப்போகாமல்  இருப்பதை "atonic"என்பார்கள் பொதுவாக இப்படியான இசைக்கோர்வைகளை "melodic triad"வகை இசை என்பார்கள்.

அதாவது வரிசையாக ஒருக்கார்டில் இருந்து இன்னொரு கார்டுக்கு செல்வதை "ஸ்டெப்"என்பார்கள் இதனை conjunct motion எனக்குறிப்பிடுகிறார்கள்.

அப்படி இல்லாமல் ஒரு கார்டில் இருந்து தொடர்சியில்லாத தொலைவான இன்னொரு உயர்ந்த /தாழ்ந்த ஸ்கேல் உள்ள கார்டுக்கு ஜம்படிப்பதை "ஸ்கிப்"என்பார்கள், இதனை " disjunct motion"எனக்குறிப்பிடுவார்கள்.

இசையமைப்பாளரின் கற்பனை வளத்துக்கேற்ப ஸ்டெப் அல்லது ஸ்கிப்பில் இசை அமைக்கலாம், இப்படி செய்வதில் "பீட்டில்ஸ்"குழுவினர் வல்லவர்கள்.

பீட்டில்ஸ் கார்டு புராகிரஷனில் அடிக்கும் ஜம்ப்களை படமாக பாருங்கள்,

படம்-1



படம்-2



படம்-3



ஸாஸ்திரிய ஸங்கீதமும் தேவைப்பட்டால் "ஜம்ப்"அடிக்கலாம் என்கிறது , நவீன இசையான ஜாஸ்,ப்ளூஸ், ராக் அன்ட் ரோல், பாப் என எல்லாவற்றிலும் ஸ்டெப்&ஸ்கிப் பயன்ப்படுத்தப்பட்டும் வருகிறது. இவ்வகை இசைகளில் விதிக்கு முக்கியத்துவமில்லை, கேட்க இனிமையாகவும், ஒரு பரவச மனநிலையையும் உருவாக்க வேண்டும்,அதனால் தான் பீட்டில்ஸ் பாடல்களை கேட்பவர்களை உடனே கவர்ந்து ஆட்டம் போட வைத்தது எனலாம்.

இசையமைப்பதில் கார்டு புரகிரஷனில் ஜம்ப்படித்து புதுமை செய்து உலக இசைக்கே பம்ப்படித்தவர் ராசா மட்டுமே என நம்ம ஊரு ஆய்வாளார் ஆகா ஓஹோ என சொல்வதை கேட்டால் பாப் டைலான், பாப் மார்லே, பீட்டில்ஸ் ரசிகர்கள் எல்லாம் காறித்துப்பிட மாட்டாங்கோ :-))

# //'கார்டு புரோகிரஸ்ஸனில்' [ Chord progression ] 
 'டிஸ்கார்டு' [ dischord ] என்று ஒதுக்கப்படுபவைகளைக்கூட,
இவர் இனிமையாக கையாள்கிற விதம் ஆச்சரியமானது.
 ‘ என் வானிலே...ஒரே வெண்ணிலா’ என்ற ஜானி படப்பாடலின் ஸ்வரங்களின் முரனான தொடர்ச்சியும், 
அதன் போக்குகேற்ப புனையப்படும்  ‘கார்டு'களின் தொடர்ச்சியும் அலாதியானது.//

மேற்சொன்னது atonal ,disjunct ,dissonance வகை இசையமைப்பே, நியோ கிளாசிக் இசை என்ற வகையில் இவ்வாறு டிஸ்கார்டு நோட்களை பயன்ப்படுத்துவது வழக்கம், இதற்கான பிள்ளையார் சுழியை போட்டது ஜெர்மானிய இசையமைப்பாளர் Richard Wagner(1813-1883) அவரது opera Tristan und Isolde வில் இம்முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் ,எனவே டிஸ்கார்ட் வகை நோட்கள் கொண்ட கார்டினை Tristan chord எனவும் குறிப்பது உண்டு. ஜாஸ் வகை இசையில் அதிகம் டிஸ்கார்டு புழக்கம் உண்டு.

டிஸ்கார்டு இசையை கிருத்துவ தேவாலயங்கள் தடை செய்துள்ளன ,காரணம் டிஸ்கார்ட் இசை சாத்தானை தூண்டும் என்ற நம்பிக்கை எனவே  "devil in the music"என்பார்கள். ஆரம்ப காலத்தில் டிஸ்கார்டு இசை அமைக்க தடை இருந்தது, பின்னர் நவீன இசை உருவான காலத்தில் பலரும் டிஸ்கார்டு வகையில் இசை அமைத்துள்ளார்கள்.

இந்திய கர்நாடக இசையிலும் ஒரு ராகத்திற்கு பொருந்தாத (dissonant ) ஸ்வரத்தினை கூட சேர்த்து வாசிக்கலாம், இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு ஜன்ய ராகத்தினை ஏழு ஸ்வரங்கள் கொண்ட சம்பூர்ண ராகம் போல இசைக்க முடியும்,ஆனால் அவை சம்பூர்ண ராகமல்ல. இவ்வாறு பொருந்தாத ,இல்லாத ஸ்வரத்தினை சேர்த்து வாசிப்பதை "விவாதி ஸ்வரம்"என்கிறார்கள். கர்நாடக ஸங்கீத டிஸ்கார்டு எனலாம்.

//Vivadi swara is a dissonant note, perceived by many in the musical world, to be an enemy note. That is probably the reason why vivadi melas were called ragas with “dosha” (some harmful element like an enemy perhaps!). According to Prof. Sambamurthy, vivadi melas are those scales which take one of the following notes: shatshruti rishabha (R3). Suddha Gandhara (Ga1), shatshruti dhaivata (Dha 3) and suddha nishada (Ni1). There are 40 such ragas which are supposed to have vivadi dosha.//

http://www.carnaticdarbar.com/views_01.htm

# தளபதி திரைப்படத்தில் வரும் ராக்கம்மா கையத்தட்டு பாடலில்  "குனித்த புருவமும்"என நடுவே கர்நாடக ஸங்கீதத்தினை பயன்ப்படுத்தி புரட்சி செய்துள்ளார் எனவும் சிலாகிக்கிறார் நம்ம ஆய்வாளர், திரை இசை என்பதே கலவையான இசை எனும் நிலையில் கர்நாடிக் வந்தால் என்ன இந்துஸ்தானி வந்தால் என்ன அதெல்லாம் புரட்சியா?

இதில் என்ன காமெடினா இப்படிலாம் ஃபியுஷன் செய்வது ரொம்ப நாளா உள்ள ஒன்று ,மேற்கத்திய பாப் இசையில் இப்படி செய்வதை "கவுண்டர் கல்ச்சர்"இசை என்கிறார்கள் இதனை "psychadelic pop"இசை எனவும் சொல்கிறார்கள்.

பீட்டில்ஸ் இசையமைத்த  Rubber Soul.(1969) ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள "Norwegian Wood (This Bird Has Flown)" என்ற பாடலில் நடுவே இந்திய சிதார் இசையை பயன்படுத்தியுள்ளார்கள்.

எனவே விதிகளே இல்லாத திரையிசையில் கர்நாடிக் இசையை நடுவே பயன்ப்படுத்தியது எல்லாம் இனிமையான விதி மீறல் என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வதில் பொருளே இல்லை :-))

-----------------------------------


இங்கே சில இசைக்கோர்வைகளை  கொடுக்கிறேன் இதெல்லாம் எங்கேயோ கேட்டாப்போலவே இருக்கும் எங்கே கேட்டிங்கனு கொஞ்சம் கண்டுப்பிடிச்சு பாருங்க :-))

 # George Bizet's 1897,'Carillon' (Allegro moderato).


-------------

 # Kites by Simon Dupree(1967)



--------------
Lady in Black - Uriah Heep(1970)


------------------------

'Cancione et Danza: 2. Danza'- Antonio Ruiz-Pipo'


---------------

பூகி ஓகி ராக் அன் ரோல்.


---------

இசையை ரொம்ப தோண்டியாச்சு இந்த நடனங்களைப்பார்த்து கொஞ்சம் குதுகலம் அடையுங்கள்,இதெல்லாம் சின்ன சாம்பிள்கள் தான் ,நம்ம ஊரு நடனப்புயல்கள் எல்லாம் எங்கே இருந்து சுடுறாங்கன்னு புரிஞ்சுக்கலாம்.

செம டான்ஸ்.


---------------

டொனல்ட் கானார்ஸ் பலூன் டான்ஸ்.

-------------------

பின் குறிப்பு:-1

கி.பி 1976 இல் அன்னக்கிளி படத்தில் தொடங்கி, 90 களின் ஆரம்பம் வரையில் தமிழ் திரையுலகில் இசை ராஜ்யம் நடத்தியவர் தான் இளையராசா என்பதில் எந்த மாற்று கருத்தேயில்லை,ஆனால் அவர் இசையமைத்து தான் இசைக்கே ஒரு முகவரி கிடைத்தது என்பது போல சிலர் இணையங்களில் விதந்தோம்பி கடை பரப்பி வருவது உண்மையில் ஒரு நல்ல திரையிசை கலைஞருக்கு பெருமை சேர்க்க போவதில்லை, ஏன் எனில் திரையிசை என்பது கலவையான ,விதிகளற்ற இசை அமைப்பு,அங்கே விதிகளே இல்லாத போது இது போல சாஸ்திரிய இசையின் விதியை மீறி இருக்கிறார், புதுமை படைத்திருக்கிறார் என சொல்வது இசையே தெரியாமல் சொல்வதாகும்.

இப்படி நான் பதிவெழுதக்காரணம் எனக்கும் ராசாவுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு என நினைத்துக்கொள்ள வேண்டாம், அடியேன் ராசாவின் கோல்டன் ஹிட்ஸ் எனப்படும் 80 களின் திரையிசைப்பாடல்களின் தீவிர ரசிகன், எனது வாகனம், கைப்பேசி என அனைத்திலும் சுமார் 200 அருமையான ராசாவின் பாடல்கள் எப்பொழுதும் ஒலிக்கும்.

ராசாவின் ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு சிலர் தாங்களாகவே மிகைப்படுத்தி பேசிக்கொண்டு அவருக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து  சிறுமை சேர்க்கிறார்கள், அவர்களுக்கும் தங்களது அபிமான  நடிகரின் படம் வெளியானதும் கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யும் பாமர ரசிகனுக்கும் பெரிதும் வேறுபாடில்லை, இத்தகைய விசிலடிச்சான் குஞ்சு ரசிக மனப்பான்மையை "sycophancy"எனப்படும் தீவிர ரசிக அடிமை மனப்பான்மை எனலாம், இவ்வாறான ரசிகர்கள்  தங்கள் ஆதர்ஷம் எது செய்தாலும் உன்னதம் என கொண்டாடி , அவர்களின் ஆதர்ஷத்தின் புகழை கூட்டுவதற்கு பதில் குறைக்கவே செய்கிறார்கள் , இணையத்தில் ராசாவிற்கு இம்மாதிரியான ரசிக சிகாமணிகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது இருக்கும் ஒரு சிலர் மீண்டும் மீண்டும் வெற்று புகழ் மாலை பாடிக்கொண்டிருக்கிறார்கள், அவற்றை எல்லாம் சற்றே நிறுத்திக்கொண்டால் சேதாரம் தவிர்க்கப்படும் இல்லை எனில் என்னைப்போல் பலர் எதிர் வினையாற்றக்கிளம்பினால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா தான்.
----------------

பின் குறிப்பு:-2

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://worldcinemafan.blogspot.in/2013/05/5.html

http://www.seechord.co.uk/song-writing/secrets-of-the-beatles/

http://en.wikipedia.org/wiki/Rubber_Soul

http://en.wikipedia.org/wiki/R%26B

http://en.wikipedia.org/wiki/Clave_(rhythm)

http://en.wikipedia.org/wiki/Guajeo

http://en.wikipedia.org/wiki/Non-harmonic_arpeggio#Melodic_triad

http://en.wikipedia.org/wiki/Melodic_motion

http://en.wikipedia.org/wiki/Disjunct_(music)

http://en.wikipedia.org/wiki/Coltrane_changes

http://en.wikipedia.org/wiki/Tritone_substitution

http://en.wikipedia.org/wiki/Tristan_chord

http://www.greenwych.ca/example.htm

http://www.newworldencyclopedia.org/entry/Atonality

கூகிள் படங்கள்,நன்றி!
--------------------------------------

திரும்பிப்பார்-4: மூடர்கூடம்-1: நிழல் எங்கே?

$
0
0

(இப்படி சாய்வாக படுத்தால் நிழல் விழாதுனு தெரிஞ்சி இருக்கும் போல ஹி...ஹி)


முன்குறிப்பு:

கொஞ்ச நாள் இடைவெளி விட்டுப்போனதால், ஸ்டார்ட்டிங் டிரபிள் ஆகிடுச்சு,எனவே ஆரம்ப பத்திகளில் கொஞ்சம் அனத்தி வச்சிருக்கேன் ,படிக்க சலிப்பூட்டலாம் எனவே கோடிட்ட பகுதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளை தவிர்த்துவிட்டு ,நேராக பதிவுக்கு செல்ல விரும்புவர்கள் செல்லலாம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சில பல நாட்களாக பதிவெதுவும் எழுத இயலவில்லை... வெட்டி முறிக்கிற வேலையெல்லாம் இல்லை என்றாலும் ஏனோ வெட்டித்தனமாக பதிவெழுதாமல் சும்மா உலாத்திக்கொண்டேயிருந்தேன்,ஆனாலும் பாருங்க நம்ம பாசக்கார சனங்கள் மறந்து விடாமல் நம்ம கடைக்கு வந்து போயிட்டு இருந்தாங்க ,எனக்கே அது பேராச்சர்யமாகத்தான் இருக்கு , நம்மளையும் மதிச்சு நாலுப்பேர் வந்து படிச்சிட்டு போறாங்களே ,அதுவும் பழைய பதிவகளை!

சொன்னா நம்ப மாட்டிங்க,ஆனாலும் நானே சொன்னப்பிறகும் நம்பாம போனிங்கன்னா நல்லா இருக்காது ,எனவே கொஞ்ச நேரம் நம்புணாப்போல ஒரு ஆக்ட் கொடுங்க போதும், கோடான கோடிப்பேர்கள் ஏன் பதிவெழுதவில்லைனு கவலையோட நலம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க, ஹி..ஹி நம்புற மாதிரியே இல்லையேனு நினைக்கப்படாது...நம்பணும்! அட அதுக்கூட பரவாயில்லைங்க, வேற்றுக்கிரகத்தில இருந்தெல்லாம் ,ஏன் பதிவெழுதவில்லைனு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க, இதையும் நம்ப மாட்டிங்களே, ஏலியன் என்றால் வேற்றுகிரகவாசி தானே? நம்ம பதிவ ஏலியன்ஸ் கூட படிக்கிறாங்க, பின்னூட்டமெல்லாம் போடுறாங்க!(ஹி..ஹி பதிவர் ஏலியன் பின்னூட்டத்தில் விசாரிச்சதை தான் இப்படி சொல்லிக்கிட்டேன்!)

நட்பக்கூட கற்பைப்போல எண்ணும் நல்ல மனசுக்காரன் (அது யாரா? ஹி...ஹி அடியேன் தான்)என்பதால், நண்பர்களின் அவாவிற்கிணங்க மீண்டும் அடியேனது பதிவுலக பரா(அ)க்கிரமங்கள் தொடங்குகிறது, பயணங்கள் முடிவதில்லை!

தொடர்ந்து ஆதரவளித்து ,என்னை(யும்) எழுத வைக்கும் தெய்வங்களான "பதிவுலக அன்பர்களுக்கு"கோடான கோடி நன்றிகள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இனிமே தான் மெயின் ரீல் ஓடப்போகுது... படிங்க ..படிங்க!

பதிவர்"தி.ந.முரளிதரன்"(http://tnmurali.blogspot.in)பதிவில் உச்சி வெயில் நேரத்தில் ஒரு கட்டமைப்பின் நிழல் தரையில் விழாது என்ற தொடர்பில் ஒரு சிறிய உரையாடலை துவக்கிவிட்டேன் (உண்மையில் உரையாடல் துவங்கிய இடம் நம்பள்கி பதிவாகும்),அப்பொழுது பூமத்திய ரேகைப்பகுதியில் மட்டும் தான் அப்படி நிகழும் என்பதான கருத்தினை  முன் வைத்தார்கள்,இந்தியாவிலும் நிழல் விழாமல் இருக்கும், சிறு குச்சியை வைத்து செய்துப்பார்க்கலாம் என சொன்னதை , நேரடியாக செய்துப்பார்த்து படமெல்லாம் எடுத்துப்போட்டு பதிவிட்டு கலக்கியிருந்தார் "தி.ந.மு".

அதனை ஒட்டி நாமளும் ஒரு "நிழல் பரிசோதனை "செய்து பார்த்து படமெல்லாம் எடுத்தாச்சு ,ஆனால் பதிவாக்க இப்போது தான் முடிஞ்சது, ஹி...ஹி இனிமே சோதனை உங்களுக்கு தான் படிங்க...படிங்க!

பூமி:




நாம் வாழும் பூமியானது சூரிய குடும்பத்தில்(ஹி...ஹி யாரும் மஞ்சத்துண்டு குடும்பத்துடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) மூன்றாவதாக உள்ள ,உயிர் வாழும் சூழல் உள்ள ஒரே கிரகம் ஆகும்.

முழுக்கோளமாக இல்லாமல் துருவப்பகுதிகளில் தட்டையாக உள்ள "oblate spheroid"வடிவ கோளம், தனது அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது, இந்த சாய்வுக்கும் ஒரு விவாதம் இருக்கு விரைவில் தனியாவர்த்தனமாக சொல்கிறேன்!

சுமார் இருபத்தி நான்கு மணி நேரத்தில் தன்னை தானே சுழன்றுக்கொண்டு ,365.25 நாட்களில் நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகிறது.

பூமியின் மீது செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் கற்பனையான கோடுகள் வரைந்து பகுதி வாரியாக பிரித்து குறிப்பிடுவது வழக்கம்,இம்முறையினை அறிவியல் முறைப்படி முதன் முதலில் செய்தவர் கிரேக்க ரொமானிய வானவியல் நிபுணர் 'தாலமி" (Claudius Ptolemy-AD 90 – c. AD 168)ஆவார்.பிறப்பால் இவர் ஒரு பூர்வீக எகிப்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்க்க ரேகை( longitude):




செங்குத்தாக வரையப்பட்ட கோடுகள், ஒரு கோளம் 360 டிகிரிகளை கொண்டது என்பதால் 360 கோடுகள் வரையப்பட்டுள்ளன. துருவங்களில் குறுகியும், நிலநடுக்கோட்டில் அகன்றும் இருக்கும்.

பூமி ஒரு சுற்று சுழன்றால் =360 டிகிரி

இதற்கு தேவையான நேரம்= 24 மணிகள்

எனவே ஒரு டிகிரி கடக்க ஆகும் நேரம்= 24*60/360
                                                                     =4 நிமிடங்கள்.

எனவே ஒவ்வொரு தீர்க்க ரேகைக்கும்( longitude) இடையே நான்கு நிமிட வித்தியாசம் இருக்கும்.

ஒருவர் கிழக்கு நோக்கி சென்றால் ,ஒவ்வொரு டிகிரி கடக்கும் போதும் நான்கு நிமிடம் முன்னோக்கி செல்வதாக கொள்ளப்படும், அதே போல மேற்கு நோக்கி சென்றால் ஒவ்வொரு டிகிரிக்கும் நான்கு நிமிடம் பின்னோக்கி செல்வதாக கொள்ளப்படும், எனவே செல்லும் திசை,கடக்கும் டிகிரிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப நேரத்தினை திருத்தி வைத்துக்கொள்வார்கள்.

180 டிகிரி தீர்க்க ரேகையை "சர்வதேச நாட்க்கோடு என்பார்கள். சர்வதேச நாட்க்கோட்டில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்தால் ஒரு நாளினை கழித்துவிடுவார்கள், மேற்கு நோக்கி பயணித்தால் ஒரு நாளினை கூட்டிக்கொள்ள வேண்டும். இதனை மையமாக வைத்து "Around the world in 80 dayS'என்ற ஜீல்ஸ்வெர்ன் நாவலில் கதை சொல்லப்பட்டிருக்கும்.

நிழல் விழுமா ,விழாதானு சொல்ல எதுக்கு ,அட்ச ரேகை,தீர்க்க ரேகைனு சுத்தி வளைச்சு சொல்லிக்கிட்டுனு பொலம்பாதிங்க, கொஞ்சம் அடிப்படை சொல்லிட்டா ,பின்னர் சொல்வது எளிதாக புரியும் என்பதாலே சொல்ல விழைகிறேன்!

ஒரு நாளில் பகற்பொழுதின் நீளம் சுமார் 12 மணி நேரம் என வைத்துக்கொண்டால், அதற்கான தீர்க்க ரேகை கோணத்தின் அளவு 180 டிகிரிகள் ஆகும், சூரிய உதயம் 0 டிகிரியில் ஆரம்பித்து , 180 டிகிரியில் அஸ்தமனம் என ஒரு அரைவட்டமாக அமையும் என புரிந்துக்கொண்டால் போதும்.(நாம இருக்கும் இடத்திற்கு ஏற்ப தீர்க்க ரேகை டிகிரி இருக்கும், ஆனால் துருவ வட்டங்கள் நீங்கலாக மற்ற எல்லா இடத்திலும் பகற் பொழுதுக்கு மொத்தம் 180 டிகிரி ,அரைவட்டம் ஆக அமையும், என்பதால், ஆரம்பம் 0,முடிவு 180 டிகிரி என உதாரணமாக சொல்லியுள்ளேன்)

அட்ச ரேகை( Latitude):

கிடைமட்டமாக பூமியின் மீது வரையப்பட்ட கோடுகள், இவை வட்ட வடிவில் பூமியினை சுற்றி அமைந்திருக்கும். துருவத்தில் சிறிய வட்டமாகவும், மையத்தில் பெரிய வட்டமாகவும் இருக்கும்,ஒன்றுக்கொன்று இணையான கோடுகள். மிகப்பெரிய வட்ட வடிவ கோடே"நிலநடுக்கோடு"எனப்படுகிறது.

நில நடுக்கோடு பூமியினை வட,தென் துருவ அரைக்கோளங்களாக பிரிக்கிறது. தீர்க்க ரேகைப்போல 360 டிகிரிகளாக இல்லாமல் வட துருவம் முதல் தென் துருவம் வரையில் 180 டிகிரிகளுக்கு மட்டுமே வரையப்பட்டவை அட்ச ரேகைகள்.

நில நடுக்கோட்டினை  0 டிகிரியாக வைத்து வட துருவ கோளம் 90 டிகிரிகள், தென் துருவ கோளம் 90 டிகிரிகள் ஆகும்.

பூமி பரப்பில் எந்த ஒரு இடத்தினையும்,அட்ச,தீர்க்க ரேகைகளை குறிப்பிட்டே சொல்லிவிட முடியும், இவை ஒரு கிரிட் ஆக மொத்த பரப்பினையும் பிரிக்கிறது.

வட கோள பகுதி அட்ச ரேகைகள் "+"குறியீடாக அல்லது வடக்கு என குறிப்பிட்டும், தென் கோள அட்ச ரேகைகள் "-"குறியீடாக அல்லது தெற்கு என குறிப்பிட்டும் சொல்லப்படுகிறது.

தீர்க்க ரேகைகளை வைத்து ,கிழக்கு,மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பூமிக்கோளமானது வட கிழக்கு,வட மேற்கு, தென் கிழக்கு,தென் மேற்கு என நான்கு கால் கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அட்சக்கோடுகள் இணையானவனை , எனவே ஒவ்வொரு அட்ச டிகிரிக்கும் இடைப்பட்ட தூரம் 111 மைல்கள். ஒரு டிகிரி என்பது 60 நிமிடங்கள், ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள் என சிறிய அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தின் அட்ச ரேகையை இன்னொரு இடத்தின் அட்ச ரேகையுடன் ஒப்பிட்டு ,இரு இடங்களுக்கும் இடையே உள்ள தொலைவினை கணக்கிட முடியும்.

கடற்பயணத்தின் போது தொலைவினை இப்படித்தான் கணக்கிடுவார்கள். கோணத்தில் சொன்னால் ஆர்க் டிஸ்டன்ஸ் அதனை மைலாகவோ,கிலோ மீட்டராகவோ மாற்றிக்கொள்ள முடியும்.

ஒரு நிமிடம் என்பது 1.57 மைல்கள் ஆகும், இதனையே நாட்டிகல் மைல் என சொல்கிறார்கள்.

சூரியனின் நிலை:

சூரிய உதயம் ,அஸ்தமனம் என ஒரு நாளில் கிழக்கு ,மேற்காக சூரியன் தீர்க்க ரேகை மார்க்கத்தில் பயணிக்கிறான்(இது ஒரு தோற்ற நிகழ்வே ,சூரியன் நிலையானது ,பூமி மேற்கில் இருந்து கிழக்காக சுழல்கிறது என்பதை அனைவரும் அறிவோம்)

அதே போல வடக்கு ,தெற்காகவும் சூரியன் பயணிப்பதாக ஒரு தோற்ற நிகழ்வு உண்டு.

நிலநடுக்கோட்டில் இருந்து 23.5 டிகிரி வடக்கில் செல்லும் அட்ச ரேகையினை கடக ரேகை என்பார்கள், இக்கோடு இந்தியாவின் வழியேயும் செல்கிறது, இந்தியாவை நீள் வாக்கில் சரிபாதியாக பிரிக்கிறது எனலாம்.



கிழக்கே மிசோராமில் இருந்து மேற்கே குஜராத்தின் புஜ் பகுதி வழியாக "கடக ரேகை"செல்கிறது.

அருணாச்சல பிரதேசத்தில் தான் இந்தியாவின்(நிலப்பரப்பில்) கிழக்கு முனை உள்ளது இந்தியாவின் முதல் சூரிய உதயம் அங்கு தான் நிகழும்,அருணன் = சூரியன், அஜலம்= மலை, கடக ரேகையில் சூரியன் இருக்கும் போது நேராக மலையில் இருந்து எழுவது போல அப்பகுதியில் தெரிவதால் அருணாச்சல பிரதேசம் எனப்பெயர் வைத்திருக்கக்கூடும்.

வடக்கிழக்கு மாநிலங்கள் ஏழுக்கும் அஸ்ஸாம் ஸ்டேண்டர்டு டைம் எனப்பயன்ப்படுத்துகிறார்கள். IST  விட சுமார் இரண்டு மணி முன்னர் இருக்கும்,

(போபால் அருகே சாலையை கடக்கும் கடக ரேகை)

இந்தியா நில நடுக்கோட்டிற்கு வடக்கே உள்ள நாடு ஆகும்.

தென் கோளத்தில் நில நடுக்கோட்டிற்கு தெற்கே 23.5 டிகிரி தெற்கில் செல்லும் கோட்டினை "மகர ரேகை"என்பார்கள். இக்கோடு ஆஸ்திரேலியாவை இரண்டாக பிரித்தவாறு செல்கிறது.

பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்வாக* சுழல்வதாக சொல்லப்படுவதால் , சூரியன் கடக ரேகையில் இருந்து , மகர ரேகைக்கு செல்வது போல ஒரு தோற்ற நிகழ்வு ஏற்படுகிறது.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்நிகழ்வு நடைப்பெறும், அதாவது கடக ரேகையில் இருந்து மகர ரேகைக்கு செல்ல 6 மாதங்கள், பின்னர் அங்கிருந்து மீண்டும் கடக ரேகைக்கு வரும். ஒரு ஆண்டில்  வடக்கு-தெற்கு- வடக்கு என சூரியன் பயணித்து ஒரு சுற்றினை பூர்த்தி செய்கிறது. அதாவது கடக- மகர ரேகைக்கிடைப்பட்ட பகுதிகளின் வழியாக ஆண்டுக்கு "இரு முறை"சூரியன் செல்கிறது.

23.5 டிகிரி கடக ரேகை முதல் 23.5 டிகிரி மகர ரேகை வரையில் மொத்தம் "47"டிகிரிகள் ,இதனை கடக்க ஆறுமாதம் எனில் ஒரு டிகிரியை கடக்க சூரியனுக்கு தேவைப்படும் நாட்கள் எத்தனை?

ஒரு டிகிரி அட்ச ரேகை கடக்க

= (365/2)/47
                                   

 =3.85 நாட்கள்.


ஆண்டுக்கு இரு முறை கடப்பதால் , 2*3.85 நாட்கள்= 7.7 நாட்கள்.

இதன் மூலம் அறிய வருவது என்னவெனில்,

கடக- மகர ரேகைக்கு இடைப்பட்ட ஒவ்வொரு டிகிரி பகுதியிலும் ஆண்டுக்கு 7.7 நாட்களுக்கு சூரியன் 'நட்டக்குத்தாக'உச்சி வெயில் நேரத்தில் தோன்றுவான் :-))

நாம் கடிகார நேரப்படி பகல்  12.00 மணியை "நண்பகல்"என்கிறோம், இது இந்திய தர நிர்ணய நேரத்தின் படியே , உண்மையில் நாம் இருக்கும் இடத்திற்கு 90 டிகிரியில் சூரியன் தோன்றுவதையே நண்பகல் என சொல்ல வேண்டும். இதனை"solar noon"என்பார்கள்.

சூரியன் வட,தென் கோளத்தில் இருந்தால் முறையே இட,வலமாக ஆனால் தரைப்பரப்பிற்கு 90 டிகிரியில் சூரியன் நண்பகலில் தோன்றும்.

ஆனால் கடக- மகர ரேகை இடையே ஒவ்வொரு இடத்திற்கும் ஆண்டுக்கு சுமார் 7.7 நாட்கள் மிகச்சரியாக உச்சியில் 90 டிகிரியில் தோன்றும் "perfect solar noon"உண்டு!

அது போன்ற நாட்களில் ஒரு கட்டமைப்பின் நிழல் உச்சிவெயில் நேரத்தில் ,கிழக்கு,மேற்கு, வடக்கு,தெற்கு என எந்தப்பக்கமும் விழாது!!!

நம்ம நாட்டில் உள்ள ஒரு இடத்தில் ஆண்டுக்கு 7.7 நாட்களுக்கு உச்சி வெயில் நேரத்தில் நிழல் விழாது எனலாம், ஆண்டு முழுவதும் நிழல் விழாமல் ஒரு கட்டமைப்பினை உருவாக்க முடியுமா?

உண்மையில் பார்த்தோமானால் நிழல் விழாத கட்டிடம்/அமைப்பு உருவாக்க முடியாது, தரையோடு தரையாக படுக்க வைத்தால் மட்டுமே சாத்தியம்.

ஆனால் மனித மூளை அபரிமிதமான சிந்தனாசக்தி கொண்டது, கொஞ்சம் கணக்குலாம் போட்டுப்பார்த்தால் செய்ய முடியும் ஆனால் சில நிபந்தனைகளுக்குட்பட்டு என ஆதிகாலத்திலேயே மனிதன் கண்டுப்பிடித்துவிட்டான்.

ஆண்டு முழுவதும்  ஒரு நாளின் குறிப்பிட்ட காலத்திற்கு நிழலே விழாமல் ஒரு கட்டமைப்பினை உருவாக்க முடியும்.

உதாரணமாக ஆண்டு முழுவதும், காலை ஒன்பது மணி முதல் ,மாலை மூன்று மணி வரை நிழல் விழாமல் ஒரு கட்டமைப்பினை கடக- மகர ரேகைக்கு இடைப்பட்ட பகுதிகளிலும், ஏன் அதன் அருகாமை பகுதியிலும் கூட அமைப்பது சாத்தியமே.

கீழ் கண்ட படத்தினை காண்க:




சூரியனின் கதிர்கள் ஒரு பொருளின் மீது விழும் கோணத்தினை "Angle of incident"என்பார்கள். காலை ,மாலையில் சாய்வான கோணத்திலும் , நண்பகலில் செங்குத்தாக 90 டிகிரியிலும் விழும். சூரியனின் கதிர் வீச்ச்சு கோண அளவு 0-180 டிகிரிக்குள் அமையும்.

சூரிய உதயம்,அஸ்தமனம் பொறுத்து கிழக்கு மேற்கான நிகழ்வில் இது தினசரி நடப்பது.

இதே போல வடக்கு -தெற்காக சூரியனின் நகர்வால் இட,வலமாக ஒரு சாய்வுக்கோணம் ஆண்டு முழுவதும் உண்டு, இந்த "Angle of incident"இன் எல்லை 23.5 டிகிரி வடக்கு முதல் 23.5 டிகிரி தெற்கு வரையாகும்.

படம் -1:

காலை சூரிய உதயம் 6 மணி எனக்கொள்வோம், சூரியன் ஒன்பது மணிக்கு தரைத்தளத்தோடு 45 டிகிரி கோணத்தில் கிழக்கில் வானில் இருக்கும்.

ஒரு டிகிரி தீர்க்க ரேகைக்கு 4 நிமிடம் எனில் , ஒரு மணி நேரத்துக்கு 15 டிகிரி தீர்க்க ரேகை, எனவே 6-9 =3 மணி நேரத்தில் 45 டிகிரி எனக்கணக்கு.

கிழக்கில் 45 டிகிரி "Angle of incident"இல் சூரிய கதிரிகள் நேராக உள்ள குச்சி மீது விழுகிறது. எனவே மேற்கு பக்கமாக நிழல் விழும். சூரியன் தென் கோளார்த்தத்தில் இருந்தால் நிழல் தென் மேற்காக விழும்.

படம்:2.

சூரியக்கதிர்கள் விழும் கோணத்தினை '"Angle of incident" என்பது போல அக்கோணத்திற்கு இணையாக வருவது போல தரையில் உள்ள பொருளை சாய்த்தால் உருவாகும் கோணத்தினை "slope of angle"என்பார்கள்.

"Angle of incident"க்கு ஏற்றார்ப்போல சாய்த்து "slope of angle"வருவது போல வைத்து விட்டால் சூரிய கதிர்கள் பொருளுக்கு இணையான தொடுக்கோணத்தில் விழும்,இந்நிலையில் நிழல் விழாது!!!

படம் இரண்டில் கிழக்கில் 45 டிகிரிக்கு "slope of angle'வருமாறு சாய்ந்து உள்ளதால் நிழல் விழாது.

படம்-3, படம் நான்கில் , சூரியனின் நிலைக்கு ஏற்ப "slope of angle"இல் குச்சி சாய்த்து வைக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

இப்படி நான்கு திசைக்கும் சாய்த்து கொண்டே இருக்கணுமா? நிரந்தரமாக செய்ய முடியாதா எனலாம்? முடியும்.

இந்நான்கு சாய்வு குச்சிகளையும் உச்சியில் இணைத்தால் தெரியும் வடிவம் என்ன?

ஒரு பிரமிட் போல தெரியுமே?



ஆம் அப்படி இணைத்தால் கிடைக்கும் வடிவமைப்பு பிரமிடே தான், பிரமிடின் பக்கங்களில்"slope of angle"ஐ வடக்கு தெற்காக சூரியன் நகர்வின் அதிக பட்ச எல்லைக்கு ஏற்ப அமைத்து விட்டால் , வடக்கு- தெற்கு நகர்வால் உண்டாகும் நிழல் உருவாகாது, அதே போல அக்கோணத்திற்கு ஏற்ப கிழக்கு -மேற்கில் சூரியன் இருக்கும் போதும் நிழல் விழாது.

உதாரணமாக பிரமிடின் நான்கு பக்கங்களின் "slope of angle" 45 டிகிரி இருப்பது போல அமைத்தால் வருடம் முழுவதும் காலை 9 முதல் மாலை -3 மணி வரையில் நிழல் தரையில் விழாது!

45 டிகிரி "slope of angle"உள்ள பிரமிட்டை சென்னையில் அமைத்தால் வருடம் முழுவதும் 9-3 இடையில் நிழல் விழாது, ஏன் எனில் வடக்கு தெற்கு ஆக சூரிய நகர்வு எப்பொழுதும் 45 டிகிரிக்கு மேல் சென்னையில் இருக்க வாய்ப்பேயில்லை.

சென்னையின் அட்ச ரேகை 13 டிகிரி வடக்கு ஆகும்,சென்னைக்கு வடக்கே கடக ரேகை 23.5 டிகிரியில் உள்ளது, எனவே வடக்கு நோக்கி சூரிய நகர்வு அதிக பட்சம்ம் 10.5 டிகிரிகள் மட்டுமே.

தெற்கில்  மகர ரேகை 23.5 டிகிரியில் உள்ளது அதனுடன் 13 டிகிரியை கூட்டினால் 36.5 டிகிரி மட்டுமே இது 45 டிகிரி "slope of angle'பிரமிடின் கோணத்திற்குள் வந்துவிடுவதால் , ஆண்டு முழுவதும் வடக்கு தெற்கு நிழல் விழாது.

தினசரி 45 டிகிரிக்கு கீழாக சூரியன் கிழக்கு- மேற்கில் இருக்கும் போது மட்டுமே நிழல் விழும்.
அதாவது காலை ஒன்பதுக்கு முன்னாலும், மாலை -3 மணிக்கு பிறகுமே நிழல் விழும்!!!

இதற்கு மேல் பிரமிட் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் இருந்தால் தொடரலாம், நிழல் கதை இத்தோடு முடிந்துவிட்டது!


இந்த அரிய உண்மையை நான் கண்டுப்பிடிக்கலைங்க, சுமார் கி.மு 2580 இலேயே எகிப்தியர்கள் கண்டுப்பிடிச்சுட்டாங்க.


கிஸா பிரமிட் அப்போது தான் கட்டப்பட்டது. எகிப்தின் கெய்ரோவின் அட்ச ரேகை 31 டிகிரியில் பிரமிட் உள்ளது, இது கடக ரேகைக்கு வடக்கே மேல உள்ளதால் சூரியன் எக்காலத்திலும் கெய்ரோ தாண்டி செல்லாது என்பதால் வடக்கு பக்கமாக இருந்து நிழல் விழாது, தெற்கில் இருந்து மட்டுமே சாத்தியம், தெற்கே மகர ரேகை 23.5 டிகிரி + கெய்ரோவின் அட்ச ரேகை 31 டிகிரி கூட்டினால் 54.5 டிகிரி , அந்த கோணம் தான் கிசா பிரமிட்டின் பக்கங்களின்  "slope of angle"ஆகும்.

வடக்கு - தெற்காக சூரியன் நிலைப்பொறுத்து நிழல் தவிர்க்கப்பட்டாச்சு, கிழக்கு- மேற்காக பார்த்தால் 54.5 டிகிரி என்பது சுமார் 9.36 நிமிடம் போல வரும் எனவே காலை 9.36 மணி முதல் மாலை 2.24 வரையில் கிஸா பிரமிடின் நிழல் ஆண்டு முழுவதும் தரையில் விழாது.

எகிப்தியர்கள் அக்காலத்திலேயே வானியல் அறிவில் தேர்ச்சி பெற்றிருந்தற்கு பிரமிட் கட்டமைப்பே சான்றாகும்.

எகிப்தியர்கள் கட்டிடக்கலை, வானியல் ,கணிதம், முக்கோணவியலில் நிபுணர்களாக இருந்ததால் மட்டுமே பிரமிட் போன்ற கட்டமைப்பினை உருவாக்கி இருக்க முடியும்.

நிக்கோலஸ் கோபர் நிகஸ் எல்லாம் சூரியன் மையம், பூமி சுழல்கிறது, கலிலியோ உலகம் உருண்டை என சொல்வதற்குலாம் முன்னரே எகிப்தியர்களுக்கு இவ்வுண்மைகள் தெரிந்துள்ளது.

எனது கணிப்பு என்னவெனில் கிருத்துவ மதப்பரப்பலின் போது எகிப்திய நாகரீகம் மற்றும் அறிவியல் எல்லாம் அழிக்கப்பட்டு , பைபிள் அடிப்படையிலான கருத்தாக்கங்களாக பூமி தட்டை, மையம் என பரப்பிவிட்டிருக்க வேண்டும், பின்னர் மீண்டும் கோபர் நிகஸ்,கலிலியோ போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்து ஆய்வை துவக்கி சொல்லி இருக்கக்கூடும்.

எகிப்திய பிரமிட் வடிவில் கட்டமைப்பு அமைத்தால் நிழல் விழுமா என அறிய ,ஒரு சிறிய மாதிரி பிரமிட் ஒன்றினை அட்டையில் செய்து , வெயிலில் வைத்து பார்த்தேன் .

படம்-1:


காலை ஒன்பது மணிக்கு எடுக்கப்பட்டது மிகச்சிறிய அளவில் நிழல் மேற்கு பக்கமாக விழுகிறது. சுமார் 10 மணி அளவில் நிழல் விழவில்லை.

படம் -2:




சுமார் 11.30 அளவில் எடுக்கபட்டது, பக்கவாட்டிலும் நிழல் இல்லை, உச்சி நிலையிலும் நிழல் இல்லை.

# தஞ்சை பெரிய கோயிலின் கோபுரம் பிரமிட் போல சம பக்க முக்கோணங்களை கொண்டிருக்கவில்லை, அதன் உயரம் மற்றும் அடித்தளம் சரியான விகிதத்திலும் இல்லை, மேலும் சதுர அடித்தளமாகவும் இல்லை என்பதால் நிழல் விழும்,ஆனால் வருடத்தில் சுமார் 7.7 நாட்களுக்கு ,தஞ்சையின் அட்சக்கோடு வழியாக சூரியன் கடக்கும் போது ,உச்சிவெயில் நேரத்தில் நிழல் விழாமல் இருக்க வாய்ப்புண்டு!

பிரமிட்:

பிரமிட் என்பது நான்கு முக்கோண பரப்புகள் பக்கங்கள் ஒன்றாக இணைந்து இருக்கும் அமைப்பு, அடிப்பரப்பு செவ்வகம் எனில் எதிர் எதிர் பக்கங்களின் உள்ள முக்கோணங்கள் மட்டுமே சமமாக இருக்கும்.

அடிப்பரப்பு சதுரம் எனில் நான்கு முக்கோணங்களும் சமமாக இருக்கும்.

எகிப்தில் கட்டப்பட்டுள்ள "கிஸா: பிரமிட் அடிப்பரப்பு சதுரமாகவும், நான்கு பக்கத்திலும் சம பக்க முக்கோணங்களை கொண்டுள்ளது.



இவ்வாறு ஏன் கட்ட வேண்டும்?

ஏன் எனில் சமபக்க முக்கோணங்களை கொண்ட பிரமிட்டை எவ்வளவு உயரமாக கட்டினாலும் அதன் "slope of angle" 54.5 டிகிரியாக தானாகவே அமைந்து விடும்!!!

தற்போதுள்ள பிரம்மிட்டின் "slope of angle"அளந்து பார்த்தப்போது 51.5 டிகிரி தான் இருக்கிறது என சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், ஆனால் சிலர் இப்பொழுது உள்ளது பிரமிட்டின் உள்பகுதி ஆகும் இதன் பக்கங்கள் மீது "பாலிஷ் செய்யப்பட்ட"கற்கள் பதிக்கப்பட்டிருந்தது பல நூற்றாண்டுகளில் அவை உதிர்ந்து விட்டது, மேலே போர்த்தப்பட்டிருந்த கற்களின் தடிமனையும் சேர்த்து கணக்கிட்டால் 54.5 டிகிரி இருக்க வாய்ப்புள்ளது. என்கிறார்கள்.

உயரம்-146.5 மீட்டர்கள்.

அடிப்பகுதி சதுரத்தின் அகலம்- 230.4 மீட்டர்கள்

பயன்ப்படுத்தப்பட்ட கற்களீன் எண்ணிக்கை- 2.3 மில்லியன்கள்.

மொத்த எடை -5.9 மில்லியன் டன்கள்.

கட்ட எடுத்துக்கொண்ட காலம் - 20 ஆண்டுகள்.

பயன்ப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை- சுமார் ஒரு லட்சம்.

மேற் சொன்ன அளவுகளின் படி பார்த்தால் சராசரியாக ஒரு நாளைக்கு 800 டன்கள் கற்களை பிரமிட்டில் பொறுத்தினால் மட்டுமே 20 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடியும். அக்காலத்தில் வாகனங்களோ, கிரேன்களோ இல்லாமல் மனித ஆற்றலை வைத்தே நகர்த்தி , கட்டி இருக்கிறார்கள் என்பதே மிகபெரிய ஆச்சர்யம்.

இதில் மேலும் ஆச்சர்ய மூட்டும் தகவல் என்னவெனில் பிரமிட்டின் உயரம்,அகலம் என முடிவு செய்ய பை மதிப்பினை பயன்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.

பையின் மதிப்பு 3.14 என 17 நூற்றாண்டில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொதுவாக சொல்கிறார்கள், ஆனால் கி.மு 2580 இல் பை மதிப்பினை பயன்ப்படுத்தி பிரமிடுகளை எகிப்தியர்கள் கட்டியுள்ளார்கள்.

பிரமிட்டின் சதுர அடித்தளத்தின் சுற்றளவை அதன் உயரத்தால் வகுத்தால் 2π  என வருகிறது.

பிரமிடின் பக்கம்= A

உயரம் =H

எனில் , சுற்றளவு = 4 A

4 A/H =2π

 இதன் மூலம் என்ன உயரம் தேவை என முடிவு செய்து விட்டால் , என்ன அடிப்பரப்பு என கண்டுப்பிடித்து விடலாம், இல்லை , இத்தனை அடிப்பரப்பில் கட்டினால் என்ன உயரம் வரும் என முடிவு செய்துக்கொள்ள முடியும்.

இவ்வளவு கனமான ஒரு கட்டமைப்பினை மணற்பாங்கான இடத்தில் கட்டினால் அதற்கான அஸ்திவாரம் ஆழமாக போட வேண்டும்,ஆனால் அப்படி செய்யவில்லை, மாறாக பாலைவனத்தில் இருந்த ஒரு குன்றினை சமன் செய்து அக்குன்று பிரமிட்டின் உள்பகுதியில் வருமாறு குன்றின் மீதே பிரமிடினை கட்டியுள்ளார்கள். இதனால் நிலையாக பிரமிட் நிற்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

பிரமிட்கள் மற்றும் எகிப்திய வரலாறு என நிறைய சொல்ல இருக்கிறது அவற்றை பிரிதொரு சந்தப்பத்தில் காணலாம்.
----------------------------------------------------------------------------


நீங்களும் பிரமிட் செய்யலாம்:

தேவையான பொருட்கள்:

# மெல்லிய அட்டை(சார்ட் பேப்பர்)

அட்டையின் அகலம் நாம் செய்ய இருக்கும் பிரமிடின் அடிப்பாக அகலத்தினை போல குறைந்தது மூன்று பங்கு அகலம் இருக்க வேண்டும்.

# பென்சில், காம்பஸ்,ஸ்கேல், கத்திரிக்கோல், ஃபெவிகிவிக், செலொபன் டேப், வெள்ளைக்காகிதம்.

 சமபக்க முக்கோணங்களை உடைய ,சதுர அடிப்பரப்பு கொண்ட பிரமிடினை எளிதாக செய்ய கீழ் கண்ட படத்தில் உள்ளது போல முயற்சிக்கலாம்.



# 10 செ.மீ அடிப்பாகம் கொண்ட பிரமிட் செய்ய , 10 செ.மீ பக்கம் கொண்ட சதுரம் வரையவும். நான்கு பக்கமும் சமமாக இருக்க வேண்டும் ,அப்பொழுது தான் சதுரம் :-))

# ஒவ்வொரு பக்கத்தின் மைய புள்ளியை குறிக்கவும். 5 செ.மி அளவில் புள்ளி வைத்தால் அதான் மையம்.

# நான்கு மைய புள்ளிகளின் வழியாகவும் செல்லு மாறு கோடுகளை வரையவும், கோடுகளின் நீட்சி ஒவ்வொரு பக்கத்திலும் 10 செ.மீ க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

# பிரமிடின் முக்கோணங்கள் சம பக்கம் ஆக நாம் அமைக்க இருக்கிறோம், முக்கோணத்தின் ஒரு பாகம் தான் ,சதுரத்தின் ஒரு பக்கம், எனவே முக்கோணத்தின் மற்ற பக்கங்களும் 10 செ.மீ தான் இருக்க வேண்டும், அப்பொழுது தான் சம பக்க முக்கோணம் ஆகும்.

எனவே 10 செ.மீ அளவினை காம்பஸ் மூலம் எடுத்து , சதுரத்தின் ஒரு பக்கத்தின் முனையில் வைத்து அதன் மையக்கோட்டினை வெட்டவும், அதே போல இன்னொரு பக்கத்தில் வைத்து வெட்டினால் உருவாகும் புள்ளியே ,முக்கோணத்தின் உச்சி ஆகும்.

முக்கோணத்தின் உச்சியினை அதன் அடிப்பாகத்தின் இரு முனைகள் அதாவது சதுரத்தின் பக்கத்தின் முனைகளுடன் இணைத்து கோடு போடவும். இப்பொழுது ஒரு சமபக்க முக்கோணம் சதுரத்துடன் இணைந்து உருவாகி இருக்கும்.

இதனையே மற்ற பக்கங்களுக்கும் செய்யவும்.

# பின்னர் எதிர் எதிர் பக்கமாக உள்ள முக்கோணத்தின் பக்கங்களில் சுமார் 1 செ.மீ வருவது போல பிளாப்கள் வரைந்து கொள்ளவும், இது பக்கங்களை மடித்து ஒட்ட உதவும்.

# படத்தில் கண்டவாறு வரைந்து முடித்த பின் , கத்திரிக்கோல் வைத்து வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

# பின்னர் கோடுகள் மீது ஸ்கேலினை வைத்து உட்பக்கமாக மடித்து விடவும், ஸ்கேல் வைத்து மடித்தால் நேரான மடிப்பு வரும், அப்பொழுது தான் இணைக்க சரியாக வரும்.

# பிளாப்கள் உள்பக்கமாக வருவது போல மடித்து பசை தடவி , அருகில் உள்ள முக்கோணத்துடன் இணைத்து ஒட்டவும்.

ஹி..ஹி பசை காயும் முன்னர் கையை எடுத்துவிட்டால் , தேர்தல் முடிந்தவுடன் பிச்சிக்கொள்ளும் கூட்டணி போல  இரு பக்கங்களும் தனியே பிரிந்து விடும், எனவே செலோப்போன் டேப்பினால் பக்கங்களின் மீது ஒட்டி விடவும் :-))

# அளவுகள் சரியாக இருக்குமானால் நான்கு பக்கங்களையும் இணைத்தால் பிரமிடின் உச்சி (vertex) சரியாக இணைந்து விடும்.  பசையால் ஒட்டியவுடன் ,செலொபன் டேப்பினை வைத்து உச்சிக்கு சற்றுக்கீழே சுற்றி வருவது போல ஒட்டினால் உச்சிப்ப்குதி நெருக்கமாக அமைந்து வரும்.

# இப்போ அழகு செய்ய ஆசைப்பட்டால் வண்ணக்காகிதம் ஒட்டலாம், இல்லைனா வெள்ளைக்காகிதத்தினை ஒட்டினாலே நல்லா பளிச்சுனு அழகா இருக்கும்.

இந்த பிரம்மிட் எகிப்திய தொழில் நுட்பத்தில் உருவானது என்பதால் , இதன் ஸ்லோப் ஆஃப் ஆங்கில் தானாகவே 54.5 டிகிரியில் இருக்கும், சென்னையில் வைத்து என்று இல்லை  கடக ,மகர ரேகைக்கிடையே எங்கே வச்சாலும் காலையில் சுமார் 9.36 முதல் மாலை 2.24 வரையில் நிழலே விழாது!

இதன் தொடர்ச்சியாக பூமி சாய்ஞ்சுக்கிட்டு சுத்துதா ,நேராக சுத்துதா , உண்மையில் எப்படித்தான் சுற்றுகிறது என ஒரு வெட்டி ஆய்வு ஒன்று செய்துள்ளேன் ,அதனை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

தொடரும்...
-------------------------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி, விக்கி,கூகிள் இணைய தளங்கள், நன்றி!
--------------------------------------

புதுவை புத்தகச்சந்தை- 2013!

$
0
0
(புத்தகம்னா ரொம்ப புடிக்கும்,புத்தகம் படிக்கிறவங்களையும் ரொம்ப புடிக்கும்,பொதுவாத்தான் சொன்னேன்...ஹி..ஹி)


வாரக்கடைசியில ஊர்ப்பக்கமா போயிட்டு வரலாமேனு கிளம்பினேன் , கடற்கரையோரமா போனால் காத்து சிலு சிலுனு ஜில்பான்ஸா அடிக்கும் , அப்பிடியே போற வழியில புதுவையில தொண்டைக்கு இதமா நல்லத்"தண்ணி"கிடைக்கும் தொண்டைய கொஞ்சம் நனைச்சிக்கலாம்னு ஒரு மாஸ்டர் பிளான் போட்டு வச்சால் என்னிக்கு நாம நினைச்சது நடந்திருக்கு இன்னிக்கு நடக்கனு நொந்துக்க வேண்டியதா போச்சு, கடைசி நேரத்துல நம்ம வாகன ஓட்டி வேற வேலை இருக்குனு காலை வாரிட்டார்(சீப்பு வச்சு வாரினாரானுலாம் கேட்கப்படாது)சரினு கடைசியில பஸ்ஸ புடிக்கலாம்னு கிளம்பினா , ஊருல இருக்க எல்லாருமே அன்னிக்குனு ஊருக்கு கிளம்பிடுறாங்கய்யா அவ்வ்!

ஒரு வழியா தமிழர்களின் கலாச்சாரப்படி சன்னல் வழியா துண்டப்போட்டு எடம்புடிச்சு ,ஏறியாச்சு ,புதுவையில இறங்கியும் ஆச்சு, இறங்கியதும் நம்ம கண்ணில பளிச்சுனு ஒரு வெளம்பரம் பட்டுச்சு , புத்தி வேண்டாம்னு சொன்னாலும் ,மனசு மசால் வடை தேடிப்போற எலி மாதிரி சொன்னப்பேச்சு கேட்க மாட்டேங்குது அவ்வ்!



யே யப்பா ஏதோ அஜால் குஜால் விளம்பரம் பார்த்து எங்கியோ போய் மாட்டிக்கிட்டான்னு குஜாலாக வேண்டாம், நான் பார்த்த வெளம்பரம் "புதுவை புத்தகக் கண்காட்சி-2013"என்பது தான்!

ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் மைதானத்தில் நடப்பதாக போட்டிருந்தது, இவ்விடத்தில் தான் புதுவையில் பெரும்பாலான பொருட்காட்சி &கண்காட்சிகள் (கண்ணை தோண்டி வச்சிருப்பாங்களானு கேட்கப்படாது) நடக்கும் ,அல்லது பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா திடலில் நடக்கும்.

சரி இம்புட்டு தூரம் வந்தாச்சு ,ஒரு எட்டு புத்தகச்சந்தைக்கு  போயிட்டு அப்பாலிக்கா தாகசாந்தி செய்துக்கலாம்னு ஒரு தானீயங்கி மூவுருளிய புடிச்சா , ரொம்ப நியாயமா ஒரு கொள்ளைரேட்டு சொல்லுறாங்க,  பேருந்து நிலையத்தில இருந்து ஏ.எஃப்டி மில் திடல் சுமார் 1.5 கி.மீ தான் இருக்கும் அதுக்கு  ரூ 60 னு சொல்லுறாங்க, ஹே...ஹே நாம கேட்ட ஆளு எப்புடினு பாவம் பயப்புள்ளைக்கு தெரியலை , போட்ட பிளேடுள , வேற எதாவது வண்டிப்புடிச்சுக்கோங்க , ஆளைவிடுனு அப்பீட் ஆகிட்டாப்படி, அப்புறம் 30 ரூவாய்க்கு சல்லீசா ஒரு தானியப்புடிச்சு சந்தைக்கு போயாச்சு, இனிமே சந்தை நிகழ்வுகளை ஒளிப்படங்களாக காணுங்கள்!

ஏ.எஃப்.டி திடல் என்பது புதுவை கடலூர் சாலையில் , புதுவை உயர்நீதிமன்ற கிளைக்கு எதிரில் உள்ளது.

புத்தகச்சந்தையின் முகப்பு ,மஞ்சள் வெயில் மாலையிலே சும்மா தகத்தகனு எம்சிஆரு மாதிரி சொலிக்குது :-))




வலப்புறம் உணவகம் என்ற பெயரில் ஒரு தகர கொட்டாயில இமாச்சலப்பிரதேஷின் ஆப்பிள் சூசு கடையும்,பஜ்ஜி,போண்டா கடையும் வச்சிருக்காங்க. சாப்பிடத்தூண்டும் வகையில் பெருசாவோ,சிறுசாவோ அல்லது திரிசாவோ இல்லை,எனவே ஒரு ஆப்பிள் சூசு மட்டும் குடிச்சு பார்த்தேன் , 20 ரூபா , காசுக்கு பழுதில்லைனு சொல்லலாம்.




#இந்த மஞ்சக்கலர் போர்டை படிக்காம உள்ள போயிட்டு , வரும் போது ஒரு சலசலப்பை கிளப்பிட்டேன் , ஹி...ஹி கடமையே கண்ணா படம் மட்டும் எடுத்திருந்தேன் அவ்வ்!

# போர்டில் என்னா போட்டிருக்குனு படிச்சு வச்சுக்குங்க,நான் என்னா பண்ணேன்னு கடசீல சொல்லுறேன்!

ஆப்பிள் சூசு கடை, கப்பு சூசு 15ரூ, அட்டை டப்பா 20ரூ ,கண்ணாடிக்குடுவை 30 ரூ





# இந்த கடையில ,பொன்னியின் செல்வன்,காவற்கோட்டம், பாலகுமரனின் உடையார்னு ஏகப்பட்ட சரித்திர புதினங்களாக இருந்துச்சு ,ஆனால் விலை தான் என்ன போல தரித்திரங்கள் வாங்க முடியாத வகையில இருக்கு , சரி போட்டா எடுக்க காசா ,பணமானு போட்டா மட்டும் புடிச்சிக்கிட்டேன், வேற வழி அவ்வ்!






# ஹி...ஹி இந்த கடையிலயும் நிறைய புத்தகங்கள் தான் இருந்துச்சு, மிக்சி ,கிரைண்டர்னு எதுவுமே இல்லை...அடேய் புத்தக சந்தையில இருக்க கடையில வேற என்ன இருக்கும்னு நினைச்சேனு டெங்க்சன் ஆவாதிங்கோ, என்ன எழுதுறதுனு தெரியாம ச்சும்மா ஒரு மொக்கை ஹி...ஹி!

# இந்த கிளக்கு படிப்பகம் காரங்களுக்கு ஆனாலும் ரொம்ப குசும்பு, புத்தக சந்தையை புதுச்சேரி கலைப்பண்பாட்டு துறை நடத்துகின்றது,ஆனால் இவங்க என்னமோ "சிறப்பா"தனியா நடத்துறாப்போல ஒரு பேனர் வச்சிருக்காங்க அவ்வ்!

கடையில சுஜாதா எழுதிய அந்தக்கால புத்தகங்களை மறுபதிப்பு போட்டு கொள்ளை விலையில விக்குறாங்க, ஆனால் அதே புத்தகங்களே வேற பதிப்பகங்களில் மலிவாக கிடைக்குது, இதையும் குறிப்பிட்டு கேட்டேன் ,பேப்பர் குவாலிட்டியா இருக்காம், ம்ஹூக்கும் அப்படியே வாங்கிட்டு போய் ஃப்ரேம் போட்டு வைக்கவா போறோம், படிச்சு கிழிக்க பேப்பர் எப்படி இருந்தா என்ன?

ஒரு காலத்தில"மணிமேகலை பிரசூரம்"உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி முதல் ,நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள் வரை எல்லா தலைப்பிலும் புத்தகங்களை போட்டு தள்ளுவாங்க, அப்போ நினைச்சுக்கிறது இதெல்லாம் யாரு வாங்குவாங்கனு ,அதே போல கிளக்கும் எல்லா தலைப்பிலும் புத்தகம் போடுறதுனு கிளம்பிடுச்சு ,எல்லாருக்கும் வாழ்க்கை வரலாறு, மேலும் ஆயக்கலைகள் 64 க்கும் புக்கு இருக்கும் போல :-))




# பாரதியார் கலைக்கூடம்னு ஒரு நுண்கலை பயிற்சி மையம் அரியாங்குப்பம் அருகே இருக்கு, அவர்கள் ஒரு கடைப்போட்டிருக்காங்க,, அங்கே போய் உட்கார்ந்து "போஸ்'கொடுத்தா நம்மளை அழகா படம் வரைஞ்சு கையிலவே கொடுத்தனுப்புறாங்க, ஏற்கனவே நாம சுமார் மூஞ்சி என்பதால் ,படம் வரையிறவங்களை சோதனைக்குள்ளாக்காமல் நழுவிட்டோம், அங்கே ஒரு குட்டிப்பையனும் படம் வரைஞ்சிக்கொடுத்துக்கிட்டு இருக்காரு ,வருங்காலத்துல ஹீசைன் போல்ட்(ஹி...ஹி தப்பா சொல்லிட்டேன்னு பின்னூட்டத்தில் என்னை திருத்தவும்) போல பெரிய ஓவியரா வருவாராக்கும்!


#எதிர் வெளியீடு (பொள்ளாச்சி) பேரே ஒரு மார்க்கமாக இருக்குனு  யாரும் கடைக்குள்ள போகவேயில்லை போல , நான் போய் ஒரு புக்கு வாங்கினால் , சார் நீங்க தான் முதப்போணி சில்லறையில்லைனு சொல்லிட்டார்(அப்போ மணி மாலை 5 அவ்வ்) பெரும்பாலான கடைகளில் இதான் நிலை சில்லறையில்லைனு சொல்லி அனுப்பிடுறாங்க, வர்ரவன் எல்லாம் 50 ரூவா புக்கு வாங்கிட்டு ஆயிரம் ரூவா தாளை நீட்டுனா என்ன செய்யனு என்ன முன்ன போக விட்டு பின்னாடி பொலம்பினத நானும் கேட்டுட்டு கேட்காத மாரியே வந்துட்டேன் அவ்வ்!

ஹி...ஹி அப்படியும் ஒரு கடையில பிடிவாதமா சரி ரெண்டு புக்கு வாங்குறேன்னு சில்லறைய மாத்தி கொடுக்க வச்சிட்டோம்ல!






# விகடன் வெளியீடு கடையில சுஜாதா, மதன் எழுதிய நூல்கள், விகடனில் தொடரா வந்தது எல்லாம் போட்டு கடைய ரொப்பி வச்சிருக்காங்க,பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், பதிவருமான அமுதவன் அவர்கள் சமீபத்தில் எழுதிய "என்றென்றும் சுஜாதா"என்ற புத்தகத்தினை விகடன் வெளியிட்டு இருக்குனு சொன்னாரேனு தேடு தேடுனு தேடினேன் ஆனால் இல்லவே இல்லை , போட்ட புக்குலாம் வித்து தீர்ந்து போச்சூ போல. ஆனால் அங்கே இன்னொரு புக்கு கண்ணில் சிக்கியது, திருப்பூரின் பிரபல தொழிலதிபதிவரான 'ஜோதிஜி"எழுதிய டாலர் நகரம் தான் , ஆனால் விலை தான் டாலரில் சம்பாதிக்கிறவங்களுக்கு ஏத்தாப்போல வச்சிட்டாங்க , சரி போட்டாவாச்சும் எடுத்துப்போம்னு எடுத்துக்கிட்டேன்.

டாலர் நகரம்பக்கத்தில சோடிப்போட்டாப்போல அம்மையாரின் புகைப்பட ஆல்பம்னு ஒரு புக்கு இருந்துச்சு,அட்டையில இருந்த ரெண்டுப்படமும் பார்த்தால் "டாலர் நகரம்"படிக்கும் முன்,படித்த பின் காட்டும் ரியாக்‌ஷன் போலவே இருந்துச்சு ! நல்லாத்தான் சோடிப்போட்டு வச்சிருக்காங்க அவ்வ்!






"We tamilan"செபாஸ்தியன் சீமான் செவுளிலேயே அப்பிடுவேன் என்பது போல கைய ஒங்கிட்டு படம் போட்ட ஒரு புக்கு, ஏன் இம்புட்டு கோவமா இருக்கார்ன்னு பார்த்தால் ,பக்கத்தில "லிங்கூ'என்ற ஒலக மகா கவித புக்கு அவ்வ்!

 உண்மையில விகடனுக்கு அசாத்திய துணிச்சல் தான் ஓசில கொடுத்தாக்கூட வாங்க மாட்டாங்க  லிங்கூ புக்க ,அதுவும் விலை 60 ஓவா, பக்கத்துக்கு நாலு வரி கவித, எதிர் பக்கத்தில , மசிய பூசிட்டு எச்சித்தொட்டு அழிச்சாப்போல ஒரு படம்,

சாம்பிளுக்கு ஒரு சில பக்கங்கள் புரட்டி பார்த்தேன், தேர் வடம் புடிக்க நீ நடந்து வந்தாய், தேர் நகர்ந்தது...! இத மடக்கி ஒன்னுக்கீழா ஒன்னா எழுதி  மூனு புள்ளி ஒரு ஆச்சர்ய குறி போட்டிருக்கு , கவிதயாம் , முடியலடா சாமி! செபாஸ்தியன் சீமான் கோவமா கைய ஓங்கிட்டு நிக்குறதுல தப்பேயில்லை :-))

சின்ன குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் கொண்ட கடை,அடியேன் மனசளவில் இன்னும் ஒரு கொழந்தை தான் என்றாலும் ,அங்கே வச்சிருந்த டிர் டிர் கிளு..கிளுப்பைக்கூட வாங்க என்னிடம் காசில்லையே அவ்வ்வ்!

நாளு புக்கு 200 ரூவானு போர்டு தொங்கிச்சேனு பார்த்தேன் ,எல்லாம் ஆங்கில பாக்கெட் நாவல்கள், இதெல்லாம் பைகிராப்ட்ஸ் ரோட்டில 25 ரூவாய்க்கே கிடைக்கும்!



புதுமைப்பித்தன் ,இப்பவும் புதுசாத்தான் இருக்கார்!



# ஜெமோவின் எழுத்தாள பிம்பம் அவரை விட பெருசா வளர்ந்து போச்சு போல , என்னமோ கவர்ச்சி நடிகை படம் போட்டு விக்குற வார இதழ்கள் போல அவரு படத்தை வித விதமா டிசைன் செய்து எல்லா புக்கிலும் போட்டிருக்காங்க, ஆனால் யாரும் எடுத்துக்கூட பார்த்தாப்போல தெரியலை.

இதே கடையில"பிரபல இலக்கியப்பதிவர்"ராஜா சுந்தர்ராஜனின் "நாடோடித்தடம்"புக்கும் கண்ணில பட்டிச்சு , அட்டைப்படம் தான் அந்தக்கால 'ராணி முத்து"போல ஒரு பொண்ணு படத்தை பெருசா போட்டிருக்கு ,வரைஞ்ச படம் போல, இன்னும் அதே போல "அடாசான"அட்டைப்பட வடிவமைப்பில ரமணிச்சந்திரன் நாவல்கள் மட்டும் தான் வந்துக்கிட்டு இருக்குனு நினைச்சேன், ஏன் நானும் இருக்கேன்லனு ராஜா சுந்தரராஜன் ஆஜாராகிட்டார் அவ்வ்!

அடுத்தப்பதிப்பில "இலக்கியத்தரமாக "அட்டைப்படம் போடுங்க சார், இல்லை பொண்ணு படம் தான் போடுவேன்னு அடம்பிடிச்சிங்கனா ,ஹி...ஹி நான் சொல்லுற படத்த போடுங்க! நானே எல்லாரையும் புக்கு வாங்க சொல்லி ரெக்கமண்ட் செய்வேன்!



# கண்ண தாசன் புத்தக நிலையத்தில், கவிஞர் கன்னத்தில கைய வச்சு ரொம்ப தீர்க்கமா சிந்திச்சுக்கிட்டு இருந்தார், அப்பாலிக்கா தான் நாம எதுக்கு வந்தோம், என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்னு உறைச்சது ஹி...ஹி!


# மஞ்ச போர்டை படிக்காம ,படம் மட்டும் எடுத்துட்டு போனாதால ,சல சலப்பாச்சுனு சொன்ன மேட்டருக்கு வருவோம்.




வெளியில் வரும் வழியில் , புக்கு எல்லாம் வாங்கி ,பில்லு இருக்கானு செக் பண்ணுறாங்க, பில்லின் ஒரு காப்பியும் வாங்கி வச்சிக்கிறாங்க, சரி அது போகட்டும், ஆனால் புக்கு மேல "மறு விற்பனைக்கல்ல, 15% தள்ளுபடி"னு ரப்பர் ஸ்டாம்ப் வச்சி சீல் போட்டு தராங்க, அது என்ன தள்ளுபடில கொடுத்தாலும் ,என்னமோ இலவசமா கொடுக்கிறாப்போல இப்படி முத்திரைக்குத்துறிங்களேனு கேட்டால் ,அதான் வாசலில் போர்டு வச்சிக்கீறோமேனு சொல்லுறாங்க, அப்படியும் விடாம சீல் போடக்கூடாதுனு சொன்னேன், சீல் போடலைனா 10% மட்டும் தள்ளுபடி, சீல் போட்டால் 15% கூடுதல் தள்ளுபடியாம், சீல் வேண்டாம் என்றால் 15%  இல்லைனு தான் போர்டுல போட்டிருக்கு, 15% பணத்தினை திரும்ப செலுத்த வேண்டும் என வெளக்கினார்கள், அவ்வ்!. மேலும் சில விவரங்களும் சொன்னார்கள்,

புதுவை புத்தகச்சந்தையில் மொத்தம் 25% தள்ளு படி அளிக்கிறார்கள், இதில் 10% தான் புத்தக விற்பனையாளர்கள் அளிப்பது, மீதி 15% ஐ புதுவை அரசு அளிக்கிறது, முதலில் இப்படி சீல் எல்லாம் போடாமல், பில்லின் ஒரு காப்பியை மட்டும் வாங்கிக்கொண்டு தான் இருந்தார்களாம், ஆனால் புத்தக விற்பனையாளர்கள், சும்மா பில் போட்டு வெளியில் எடுத்து போய்விட்டு மீண்டும் உள்ளே எடுத்து வந்து விற்கிறார்கள், இதன் மூலம் புத்தகங்களை விற்காமலே , 100 ரூவாக்கு 15 ரூபா லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும், அதை தடுக்கவே , வெளியில் எடுத்து செல்லும் புத்தகங்களில் சீல் போடுவதாகவும் சொன்னார்கள்.

புதுவை அரசு படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கவும், மக்களுக்கு மலிவாக புத்தகங்கள் கிடைக்க வேண்டும் எனவும் , நிதி ஒதுக்கி தள்ளுபடி அளிக்க செய்வதிலும் ,இந்த புத்தக விற்பனையாளர்கள் குறுக்கில் புகுந்து கைய வைக்கிறாங்களே, அப்புறம் என்ன அறம்,முறம்னு பினாத்த வேண்டியது,அரசு புத்தக வெளியீட்டாளர்களுக்கு உதவியே செய்யலைனு பொலம்ப வேண்டியது?

தமிழகத்தில் எல்லாம் இப்படி கூடுதல் தள்ளுபடி கொடுக்க அரசு நிதியே ஒதுக்குவதில்லை, புதுவையில் ஏதோ பெரிய மனசு செய்து நிதி ஒதுக்குறாங்க, அதிலும் இப்படி குழப்படி செய்தால் ,வருங்காலத்தில் ஒரே அடியாக அரசு சார்பான தள்ளுபடியே இல்லை என அறிவிக்க கூடும், இது மக்களுக்கு தான் இழப்பு, புத்தக வெளியீட்டாளர்கள் வழக்கம் போல 10% தள்ளுபடியில் கடைப்போட்டுக்கொண்டு ,மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைஞ்சுப்போச்சுனு சொல்வதில் அர்த்தமேயில்லை!
-------------------------------------------------------------

பின் குறிப்பு:

யாருக்காச்சும் நன்றினு சொல்லியாகனும் இல்லைனா , சண்டைக்கு வந்தாலும் வருவாங்க போல எனவே,

# வாகன உதவி, த.நா போக்குவரத்து கழகம்,குடந்தைக்கோட்டம்,

# தள்ளுபடி அளித்துதவியவர்கள், பபாசி மற்றும் புதுவை அரசு கலைப்பண்பாட்டு துறை!

# ஒளிப்படங்கள் உதவி,அடியேன்!

# பதிவேற்ற உதவி, பிலாக்கர்.காம் இணைய தளம்.

நன்றி!
--------------------------

Bt COTTON- ஒரு மாற்றுப்பார்வை!

$
0
0

(அய்யோடா இது பிடி காட்டன் இல்லை ..ஹி...ஹி)

பி.டி காட்டனை அமெரிக்க நிறுவனமான மோன்சாண்டோ இந்தியாவில் அறிமுகப்படுத்தியப்போது முதல் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது,அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பி.டி பருத்தி இந்தியாவில் ஊடுருவாமல் போய்விட்டது எனப்பலரும்நினைக்கலாம் ஆனால் உண்மையில் நிலை வேறு இந்தியா முழுக்க மிக அதிக அளவில் பி.டி வகை பருத்தி தான் பயிரிடப்படுகிறது, நம்ம போராளீகள் எப்படி விட்டிருப்பாங்கனு நினைக்கலாம் ல்..ஹி....ஹி அந்தப்போராட்டங்களே ஒரு செட்டப்பு தானே அப்புறம் எங்கே இருந்து பி.டி பருத்தி பி.டி உஷா போல ஊரவிட்டு ஓட, நல்லா ஸ்ட்ராங்கா அஸ்திவாரம் போட்டு இந்தியாவில் உட்கார்ந்துக்கிச்சு பி.டி பருத்தி, இந்தியாவில் இனிமே பி.டி பருத்தி இல்லைனா வேட்டீ இல்லை  எவனுக்கும் அவ்வ்!

சுமார் 65 லட்சம் விவசாயிகள் பி.டி பருத்தி சாகுபடி செய்கிறார்கள்,தேசிய உற்பத்தில் இவர்களின் பங்களிப்பு 94.5 சதவீதமாம், மிச்சம் இருக்க அய்ந்து சொச்சம் சதவீதமும் விரைவில் பீ.டி பருத்தியாகிடும் என்பதில் சந்தேகமேயில்லை, வழக்கம் போல நம்ம போராளிகள் ஊடகங்களில் மட்டும் "புரட்சி வெடி"வெடித்துக்கொண்டிருப்பார்கள் !!!

காண்க செய்தி....

//

Bt cotton now accounts for 94.75 p.c. of total cotton cultivation: T.M. Manjunat (www.cottonyarnmarket.com)
The area under Bt cotton cultivation in the country has rapidly increased from 29,000 hectares in 2002 when commercial cultivation of the variety was permitted to 11.2 million hectares in 2012, according to biotechnology experts.
Participating at an interaction programme organised by the University of Agricultural Sciences-Bangalore on Monday, Biotechnology and Integrated Pest Management Consultant T.M. Manjunath said Bt cotton now accounts for 94.75 per cent of the country’s entire cotton cultivation. He was interacting with about 150 innovative farmers and Bt experts from public and private sectors on various issues related Bt crops.
Similarly, the number of farmers engaged in cultivation of Bt cotton has increased from about 20,000 in 2002 to 65 lakh in 2012, he said. Referring to the opposition from various quarters to Bt crops and the apprehensions on its impact on health and environment, he said there would not have been a rapid increase in the number of farmers cultivating Bt cotton and its area if the variety was not useful to them. It is cultivated mainly in Maharashtra, Karnataka, Tamil Nadu, Andhra Pradesh, Madhya Pradesh, Haryana, Punjab, Rajasthan and Gujarat, he said.//


நம்ம போராளிகள் நடத்தியப்போராட்டத்தின் நுண்ணரசியலை காண்போம்,

ஆரம்பத்தில் மோன்சாண்டோ நேரடியாக பி.டி விதியினை சந்தைப்படுத்த களம் இறங்கியது,அப்பொழுது  நம்மப்போராளீகள் பொங்கி எழுந்தார்கள்! ஏதடா வம்பாப்போச்சேனு சற்றே சிந்தித்த மோன்சான்டோ ஒரு மாற்றுவழியைப்பிடித்தது, மகாராஷ்ட்ராவில் பருத்தி விதை விற்பனையில் முன்னணீ நிறுவனமான மாஹிகோவை ( Mahyco or Maharashtra Hybrid Seeds Co)வாங்கி அதன் பெயரில் விற்க ஆரம்பித்தது,கூடவே  வேளாண் பல்கலைகளின் புதிய வகை பருத்தி ஆய்வுகளுக்கு நிதியை அள்ளீவிட்டது, எனவே நம்ம ஊரு வேளாண்பல்கலைகள் எல்லாமே பி.டி வகை பருத்திகளையே புதிய ரகமா வேறு வேறூ பெயர்களில் வெளியிட ஆரம்பித்தன.

மேலும் மிக எளிதில் தங்களது பிடி மரபணு நுட்பத்தினை இந்தியாவில் பரப்ப இந்திய வேளாண் பல்கலைகளை பின்வாசல் வழியாக "மாகிகோ(மோன்சான்டோ) பயன்ப்படுத்துகிறது, சமிபத்தில் The National Biodiversity Board (NBA)அனுமதியில்லாமலே  கத்திரிக்காயில் பிடி நுட்பத்தினை புகுத்தி உள்ளூர் ரகமாக செய்ய கர்நாடக தார்வாட் வேளாண் பல்கலையுடன் ஒப்பந்தம் போட்டு வேலை செய்த விஷயம் வெளியாகி , கர்நாடக உயர் நீதிமன்றத்தில் "கிரிமினல் வழக்கே'மாகிகோ மீது பதிவாகியுள்ளது.

செய்தி,

//The National Biodiversity Board (NBA) and the Karnataka Biodiversity Board (KBB) filed a case for criminal prosecution of 13 individuals, including some top management officials of Mahyco or Maharashtra Hybrid Seeds Co. Limited which is partly owned by Monsanto, for biopiracy. The authorities complained in 2012 that the company along with others had genetically modified local varieties of eggplant without the mandatory approvals and then laid illegal proprietary claim to the genetically modified seeds. In other words, they were accused of biopiracy under the Biodiversity Act 2002.//

http://www.thehindu.com/news/national/criminal-prosecution-of-mahyco-for-biopiracy-revived/article5244950.ece

மேலும் பிடி விதைகளை பரப்பவும், புதிய பிடி விதைகளை உருவாக்க , ஏற்கனவே உள்ள சுதேச விதைகளை பிடியாக மாற்ற என பிராந்திய அளவில் செயல்ப்டும் நூற்பாலை சங்கங்களையும் வளைத்துப்போட்டு அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு எஞ்சிய பருத்தி வகைகளையும் பிடியாக மாற்ற மாகிகோ(மோன்சான்டோ) தீவிரம் காட்டி வருகிறது.

தென்னிந்திய நூற்பாலை சங்கத்துடனும்அப்படியான ஒப்பந்தத்தில்  மாகிகோ ஈடுப்பட்டுள்ளது.

//V. Muthusamy, Research Manager at SIMA CD&RA, said that the renovated Suvin seeds have been distributed for field trials by farmers’ fields in Andhra Pradesh and Karnataka. The seeds have been distributed in north Gujarat also, he added

Rajkumar said that the association has inked an agreement with Kaveri Seed Company, Hyderabad (a sub-licensee of Mahyco Monsanto Biotech (India)) for co-marketing KCH-999 BGII hybrid cotton seed as SIMA GKD 1.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece

வெள்ளைக்காரன் தனியா வந்து நம்மை ஆண்டு விடவில்லை அப்பொழுது அவனுக்கு துணை நின்றதே நம்மாட்கள் தான் அதே போல தான் மோண்சான்டோவும் தனியா எதுவும் செய்துவிடவில்லை, காசு கிடைக்குதேனு நம்ம ஆட்களும் கூட சேர்ந்து தான் எல்லாம் செய்றாங்க, ஆனால் போராளிகள் பொங்குவதெல்லாம் வெளிநாட்டுக்காரன் செய்துப்புட்டான்னு :-))

அனைத்து மாநிலங்களிலும் முன்னணி விதை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு மோன்சாண்டோ பி.டி விதைகளை காங்கா,காவேரி என உள்ளூர் பெயரில் விற்க வச்சிடுச்சு,இப்படியாக 94.5 சதவீத பருத்தி மார்க்கெட்டும் மோன்சாண்டோ கைக்கு போய் ரொம்ப நாளாச்சு, மோன்சாண்டோவுக்கு எதிராகக்கொடிப்புடிச்ச போராளிகள் ஏன் அதே பி.டிவிதைகளை உள்நாட்டு விதை நிறூவனங்கள் விற்றப்போது செய்யவில்லையே ஏன்?

காரணம் ரொம்ப சிம்பிள் உள்நாட்டு யாவாரிகள் ஒவ்வொருவரும் அந்த அந்த மாநிலத்துலவும் ஜாதி மற்றும் அரசியல் ரீதியில் செல்வாக்கானப்பின்ப்புலங்கள் கொண்டவர்கள், அவங்களுக்கு எதிராகப்பேசினால்  வாயிலவே குத்துவாங்க, மேலும் பல இயக்க தலைவர்களுடன் நல்ல "அண்டர்ஸ்டேண்டிங்கும்"உண்டு, ஜாதி,அரசியல்,மதம் என ஏதோ ஒரு வகையில் தொடர்பும் இருக்கும்,தேர்தல் அல்லது கட்சி செலவுகளுக்கு கவனிப்பும் உண்டு, அப்படி இருக்கும் போது "புரட்சி புண்ணாக்கு"எல்லாம் செய்வாங்களா என்ன?

ஆனால் ஒன்னு இப்பவும் மோன்சாண்டோ எதாவது மாநிலத்தில நேராடியாக பி.டி விதைகளைவிற்கலாம்னு திட்டம் போட்டு ஃபீல்ட் ஒர்க்கில் இறங்கினால் உடனே கொடியப்பிடிச்சுக்கிட்டு கூட்டம் கூட்டமா கிளம்பிடுவாங்க, அதுக்கு உள்ளூர் வியாபாரியின் ஆசிர்வாதமும் உண்டு!

பி.டி விதைக்கான எதிர்ப்பு என்பது சுதேச விதை வியாபாரிகளின் விதை வியாபாரத்தைகாக்க மட்டுமே ,அது எப்புடி மரபணு மாற்றப்பட்ட பி.டி விதைய வெள்ளைக்காரன் நம்ம ஊருல விக்கலாம், மக்கள் பாதிக்கப்படுவாங்களே என புரட்சிபேசுபவர்கள் அதே பி.டிவிதையை கங்கா,காவேரினு நம்ம ஊரு விதை விற்பனையாளர்கள் விக்கும் போது பாதிப்பே வராது என கண்மூடிக்கொள்ளும் வில்லேஜ் விஞ்சானிகள் தான் நம்ம ஊரு சேகுவேராக்கள் அவ்வ்!!!

எல்லா களவாணித்தனத்திலும் நம்மாட்களும் கூட இருக்காங்க ஆனாலும் பழிய மட்டும் தூக்கி "மோன்சாண்டோ"மேல போட்டு அவன் என்னமோ  தன்னந்தனியா இந்த வேலைய செய்துட்டாப்போல ஒரு காட்சித்தோற்றத்தினை உருவாக்க வேண்டியது!

நம்ம நாட்டில் நடக்கும் போராட்டங்கள்,எதிர்ப்புகள் எல்லாமே ஏதேனும் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதே சாபக்கேடு, யாரோ ஏதோ தீமையை எதிர்த்து போராடுராங்க அந்த தீமை போயிடும்னு மக்கள் நம்பிக்கிட்டு சும்மா இருந்துடுவாங்க, கடைசியில் எது நடக்காது என நினைத்தார்களோ அதான் நடந்திருக்கும் :-))

பி.டி தொழிருட்பத்தில் தயாரிக்கப்ப்பட்ட விதைகள் எவ்வித தீங்கும் தராது,பாதுகாப்பானது என மெத்த படித்த விஞ்"சாணி"கள் கொண்டு பரப்புரையை மோன்சாண்டோ கன கச்சிதமாக செய்து வருகின்றது, பல ஊடகங்களும்  "கவனிக்கப்பட்டு விடுவதால் பிடி பருத்தியால் தான் இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகமானது, என பல புள்ளி விவரங்களை அள்ளி விடவும் செய்கின்றன. ஆனால் உண்மை நிலவரம், பிடி பருத்தி எல்லாம் இந்தியவுக்கு வரும் முன்னர் இருந்தே இந்தியா உலக அளவில் பருத்தி உற்பத்தியில் எப்பொழுதும் முதல் மூன்று இடங்களில் ஒன்றினை பிடித்தே இருந்தது.

இன்றும் உலகில் பருத்தி உற்பத்தியில் இரண்டாம் இடம், சாகுபடி பரப்பில் முதலிடம் வகிக்கிறது,ஆனால் பழைய வரலாற்றினை கண்டுக்கொள்ளாமல் அதெல்லாம் தற்போது பிடி பருத்தியால் தான் சாத்தியமாயிற்று என சொல்வது மிகப்பெரும் பித்தலாட்டம் ஏன் எனில் ஆரம்பத்தில் இருந்த சாகுபடி பரப்பு நாளாக ஆக அதிகரித்து வருகிறது, எனவே இப்பொழுது மொத்த உற்பத்தி பேல்களில் அதிகமாக இருப்பதை மட்டும் காட்டி சொல்கிறார்கள், சதவீத அடிப்படையில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா கிட்டத்தட்ட ஒரே நிலையினை வகித்து வந்தது.

வெள்ளைக்காரன் ஆண்டக்காலத்திலேயே மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் என்றும் கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் பெயர் வாங்கிடுச்சு, ஏன் எனில் பிரிட்டீஷ் இந்தியாவில் அவ்வளவு பருத்தி உற்பத்தி இந்தியாவில் செய்யப்பட்டு ஏற்றுமதியானது.

பி.டி தொழிற்நுட்பத்தால் தீங்கு உண்டா?


BT- Bacillus thuringiensis என்ற பேக்ட்டீரியாவின் நச்சு தன்மையுள்ள புரதத்தினை ,மரபணு மாற்றத்தின் மூலம் தாவர மரபணுவுடன் - பருத்திஉடன் இணைத்து செய்யப்படும் மரபணுகலப்பு விதையே பிடி பருத்தியாகும்.

பேக்டீரியா என்பது நுண்ணுயிர் விலங்கு எனலாம்கெனவே அதன் மரபணு தாவர மரபணுவுடன் இயற்கையாக சேராது, அதனை ஆய்வகத்தில் செயற்கையா ரசாயனங்கள் உதவீயுடன் இணைக்கப்படுகிறது,எனவே பி.டி நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தாவர பொருளில் பி.பி மரபணு மட்டுமில்லாமல் ரசாயன எச்சமும் இருக்கும்,எனவே நுகர்விற்கு பின் எம்மாதிரியான பக்க விளைவுகள் வரும் என சொல்லவியலாது ,ஆனால் செயற்கையாக செய்யப்பட்ட அனைத்தாலும் பக்க விளைவுகள் உண்டாகும் என்பது மட்டும் உறுதி.

தற்போது தெளிவாக உயிர் சுற்றுச்சூழலில் உண்டாகும் பாதிப்பினை காணலாம்.

//When consumed by insects, the protein is converted to its active, toxic form (delta endotoxin), which in turn destroys the gut of the insect. Bt preparations are commonly used in organic agriculture to control insects, as Bt toxin occurs naturally and is completely safe for humans.

More than 100 different variations of Bt toxin have been identified in diverse strains of Bacillus thuringiensis. The different variations have different target insect specificity. For example, the toxins classified under Cry1a group target Lepidoptera (butterflies), while toxins in the Cry3 group are effective against beetles.//


http://www.gmo-compass.org/eng/agri_biotechnology/breeding_aims/147.pest_resistant_crops.html


http://en.wikipedia.org/wiki/Pink_bollworm


http://en.wikipedia.org/wiki/Helicoverpa_armigera


http://insected.arizona.edu/ladyinfo.htm



பருத்தியில் அதிகம் சேதம் விளைவிப்பது காய் துளைப்பான் எனப்படும் பூச்சியாகும், இதில் பொதுவான காய் துளைப்பான், பிங்க் காய் துளைப்பான் என இரண்டு உள்ளது, இதற்கு பொல்கார்ட் ‍‍‍‍‍–1,2 என இரண்டு வகையினை மோன்சாண்டோ உற்பத்தி செய்துள்ளது.

(pinkbollworm moth)

கிரை‍‍–1 என்ற டாக்சின் உள்ள விதைகளாகும், இவை லெபிடாப்டிரா வகை பூச்சிகளுக்கு எதிரானவை, இரண்டு காய் துளைப்பானும் அவ்வகையே.

ஆனால் லெபிடாப்டிரா வகையில் சுமார் 1774,250 க்கும் மேற்பட்ட பூச்சிகள் உள்ளன, அவற்றுள் சில வகையே விவசாய "பெஸ்ட்"எனலாம், மற்றவை சாதாரணமானவை, வண்ணத்துப்பூச்சிகளும் லெபிடாப்டிரன் வகையே, மகரந்த சேர்க்கைக்கு இயற்கையான வெக்டார்கள் வண்ணத்துப்பூச்சிகளே! இவ்வகை பூச்சிகளை "நன்மை பயக்கும் பூச்சிகள் "என்பார்கள்.

அதிலும் சில லெபிடாப்ட்ரன்கள் அபூர்வமானவை,
மேலும் மொனார்ச் வண்னத்துப்பூச்சி ஒரு அரிய வகை இனமாகும்,

(monarch butterfly)
காய்த்துளைப்பானுக்கு விஷம் எனப்பயிரிடப்படும் பி.டி பருத்தியின் பூக்களில் தேன் உண்னும் மற்ற லெபிடாப்டிரா வகை வண்ணத்துப்பூச்சிகளூம் பாதிப்புக்குள்ளாகி இறந்து விடும்.

பருத்தி என்ற ஒரு வணிக்கப்பயிரில் ஏற்படும் பூச்சி தாக்ககுதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சொல்லி உருவாக்கப்பட்ட ஒரு உயிர் தொழில்நுட்பம் ஒரு உயிர்வகைப்பாட்டியியல் ஆர்டரில் உள்ள பல்லாயிரம் பூச்சிக்களுக்கும் எமனாக இருப்பதை பலரும் உணரவேயில்லை, ஒரு வேளை வருங்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அருகிவிட்டால் அப்போதான் விழித்துக்கொண்டு ஒலக வண்ணத்து பூச்சி டே"என ஒன்றை உருவாக்கி தமது கடமையை முடித்துக்கொள்வார்களாயிருக்கும் :-))

அதான் ஏற்கனவே சிட்டுக்குருவி தினம் ,சுண்டெலி தினம்னு உருவாக்கி நமக்குலாம்ம் விழிப்புணர்ச்சி ஊட்டுற அறிவு சீவிங்க இதை செய்ய மாட்டாங்களா என்ன அவ்வ்!

மேலும் பல பூச்சிகள் இயற்கை பிரிடேட்டர்கள் ஆகும்,அவை தீமைசெய்யும்பூச்சிகளின் முட்டை, புழு ஆகியவற்றை உண்பதன் ,மூலம் இஅயற்கையான பூச்சிக்கட்டுப்பாடாக உள்ளன. பி.டி விஷம் உள்ள பருத்தியில் உண்டு வளர்ந்த காய் துளைப்பானின் முட்டை ,புழு ஆகியவற்றை உண்ணும் நன்மை பயக்கும் பூச்சிகளூம் இறந்து விடும்.

கிரை –3 டாக்சின் பீட்டில் வகைப்பூச்சிகளூக்கு நஞ்சாகும், பெரும்பாலான பீட்டில்கள் நன்மை பயக்கும் பிரிடேட்டர் ஆகும், அவையும் பி.டி பருத்தி உண்ட காய்த்துளைப்பானின் புழுக்களை, முட்டைகளை உண்டோ, அல்லது பருத்தியின் பொருளாதார முக்கியம் இல்லாத பகுதிகளை உண்டோ பாதிப்புக்கு உள்ளாகலாம்.

உதாரணமாக லேடி பர்ட் பீட்டில் என்பது ஏபிட்ஸ் எனப்படும் சாறுண்ணிகளின் பிரிடேட்டர், பருத்தியில் உள்ள பிடி டாக்சின் ஏபிட்ஸ்களைப்பாதிக்காது, எனவே பிடி பருத்தியின் சாறுண்ட ஏபிட்ஸ்களை உண்ணும் லேடிபர்ட் பீட்டில்களுக்கு மட்டும் பாதிப்பு உண்டாகும், இதனால் இயற்கை பூச்சிக்கட்டுப்பான லேடி பர்ட் பீட்டில் அழிந்து ,சாறுண்ணீ பூச்சிகளின் இனம் பல்கிப்பெருகிடும், இது கதையல்ல நிஜம் என்பதற்கு கண் கூடாக சான்று, பி.டி பருத்தியில் காய் துளைப்பான் தாக்குதல் குறைந்து "சாறுண்ணி பூச்சி"தாக்குதல் அதிகரித்துள்ளதாக விவசாயிகளே சொல்வதிலிருந்து அறியலாம்.

பீ.டி பருத்தி காய்த்துளைப்பானுக்கு எதிராக மட்டுமே நல்லப்பலனைக்கொடுக்கும்,ஆனால் காலப்போக்கில் இயற்கை சமநிலை சிர்க்குலைவதால் பிறப்பூச்சி தாக்குதல் அதிகரிக்கவே வகை செய்யும். பல அரிய வகைப்பூச்சியினங்கள் முற்றீலும் அழியவும் காரணமாகலாம்.

# மேலும் நம் நாட்டில் பருத்தி என்பது இழைகளுக்காக மட்டும் பயன்ப்படுத்தப்படவில்லை, இழைகள் நீக்கப்பட்ட பருத்திக்கொட்டை என்பது கால்நடை தீவனமாக பயன்ப்படுகிறது, பிடி பருத்திக்கொட்டைகளை உண்ட பசுமாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் பிடி யின் தாக்கம் என்னவாக இருக்கும் என இதுவரையில் ஆய்வுகள் ஏதும் நடைப்பெற்றதாக தெரியவில்லை, எனவே அவ்வகை பாலை அருந்தும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு வரும் எனவும் தெரியாது.

நிறைய இடங்களில் பருத்திப்பால் எடுத்து மனிதர்களும் சாப்பிடுகிறார்கள், பருத்தி அல்வா என்று கூட உண்டு, இவ்வாறு உணவாக பிடி பருத்தியினைப் பயன்ப்படுத்தினால் என்ன பின்விளைவுகள் வரும் என  சரியான ஆய்வுகள் இதுவரையில் நடக்கவில்லை.

இந்தியாவில் சாலையை கடப்பதே உயிர் ஆபத்தான ஒன்று அதையே கவலைப்படாமல் செய்கிறோம், பிடிக்குலாம் பயப்படலாமா...ஸ்டீல் பாடி உடம்புலே இதுனு நம்ம மக்கள் தெம்பா பிடி பருத்திப்பால் குடித்துக்கொண்டு , தொலைகாட்சியில் சூப்பர் சிங்கரோ, மானா மயிலாடவோ பார்த்து இன்புற்று வாழ்வார்கள்!

--------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.monsanto.com/newsviews/Pages/india-pink-bollworm.aspx

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece
http://www.simamills.com/news.asp?id=3639

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள் நன்றி!

BT-COTTON- ஒரு மாற்றுப்பார்வை -2: உண்மையைத்தேடி!

$
0
0
(பருத்தி எடுக்கையிலே பலநாளும் பார்த்த புள்ள...ஹி...ஹி)

 BT -ANTHEM.


நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நாளாறு மாதமாய் மான்சான்டோவை வேண்டி

கொண்டு வந்தானடி காட்டன் பிடி

அதை கூத்தாடி கூத்தாடி

வயலில் போட்டு விதைத்தாண்டி!

ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ,ஜிக்கான்!
 ஜிக்கான், ஜிகு ஜிக்கான் ஜிக்கான்!

மழை பேஞ்சு வயலெல்லாம் தண்ணி,

மச்சான் ஏர்ப்பூட்டி உழுதாரே எண்ணி!

பிடி காட்டனுக்கு இல்லடா போட்டி

அதனால வச்சானே விலையத்தான் கூட்டி!

ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான்  ஜிக்கான், ஜிகு ஜிக்கான், ஜிக்கான்!

ராவுனும் பகலென்னும் உழைச்சு

கடன் வாங்கி விதை விதைச்சாண்டி!

கடனுக்கு ஏறுதடா வட்டி

பிடி போட்டவனுக்கோ கிழியுதடா வேட்டி!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி,அவன்

நாளாறு மாதமாய் மான்சாண்டோவை வேண்டி!

ஜிகு ஜிக்கான் ,ஜிகு ஜிக்கான் ஜிக்கான்!
 ஜிக்கான் ஜிகு ஜிக்கான்,ஜிகு ஜிக்கான்!

ஹி...ஹி வருங்காலத்தில் பிடி பருத்தி போட்ட விவசாயிகள் எல்லாம்  நொந்து நூடுல்ஸ் ஆகி வெந்து வெம்பிப்போய் " BT -ANTHEM"என இந்த பாட்டை பாடினாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை!

இந்த பாட்டும் விக்கிப்பீடியாவில் இருக்கும்னு சிலப்பேரு நினைச்சிக்கலாம், இது அக்கால பழைய பாடலை ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு ரீ - மிக்ஸ் செய்து "" BT -ANTHEM" ஆக உருவாக்கி இருக்கேன் ,நம்ம சமூகத்துக்கு ஏதோ என்னால முடிஞ்ச "கலைச்சேவை"எப்பூடி!

இடைக்குறிப்பு:

விக்கிப்பீடியாவில் எல்லாமே இருக்கு ,அது எங்களுக்கு தெரியாதா என நினைக்கும் அறிவு சீவிகள் வந்தவழியே ரிடர்ன் அடிச்சு விக்கிப்பீடியா தளத்தில் சென்று தேடிப்படித்துக்கொள்ளலாம், நாம் விக்கி முதல் ஏனைய தளங்களிலும் தகவல் வேட்டையாடி இயன்றவரை  எளிய தமிழில் சில  கருத்துக்களை பதிவு செய்து வருகிறோம்,ஏதேனும் புதிதாக அறிந்துக்கொள்ள ஆர்வமும் ,நேரமும் உள்ளவர்கள் மேற்கொண்டு தொடரலாம்!

BT- COTTON:மாயையும்,உண்மையும்!

முந்தையப்பதிவில் பிடி காட்டன் உள்ளே வந்தது, அதற்கு தோன்றிய எதிர்ப்புகளும் ,பின்னர் அவை எவ்வாறு தணிந்தது, பிடி பருத்தியின் இன்றைய சாகுபடி நிலவரம், மேலும் ,சுற்றுச்சூழலுக்கும்,பல்லுயிர் பெருக்கத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசப்பட்டதை அறிவீர்கள், அப்பதிவை படிக்கத் தவறியவர்கள் சோம்பல் படாமல் ஒரு முறைப்படித்துவிட்டு தொடர்ந்தால் சில விவரங்களை புரிந்துக்கொள்ள எளிதாக இருக்கும்.

"Bt COTTON"- ஒரு மாற்றுப்பார்வை -1.

 இப்பதிவில் முந்தைய பதிவில் லேசாக தொட்டுச்செல்லப்பட்ட சில விவரங்களையும் விரிவான "FLASH BACK"கில் காணலாம்,மேலும் புதிய விவரங்களும் இனி அடுத்துக் காண்போம்

விதை தயாரிப்பும்,காப்புரிமையும்:"FLASH BACK" 


பருத்தியின் பூர்வீகம் சிந்து சமவெளிப்பகுதி என அறியப்படுகிறது ,இந்தியர்கள் கி.மு 2000-3000 கால இடைவெளியில் இருந்தே பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு நூல் நூற்கவும் ஆடை நெய்யவும் கற்றிருந்தார்கள் என வரலாறு சொல்கிறது.

பந்தாக கம்பளி நூல் காய்க்கும் மரம் இந்தியாவில் உள்ளது என "ஹிரோடட்டஸ்"பருத்தியினை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து பாராசிகம் போய் எகிப்து என உலகமெங்கும் பரவியுள்ளது. தென்னமெரிக்காவிற்கும் சென்றுள்ளது,மயன்களும்,இன்காக்களும் பருத்தி ஆடையே அணிந்துள்ளர்.

பருத்தி பயிரு வச்சது நாமலா இருந்தாலும் பேரு வச்சது அரபியர்களே, காட்டன் என்ற சொல்  AL -QUT(U)N" என்ற அரபிச்சொல்லில் இருந்து உருவானது ,அப்படி எனில் நேர்த்தியான துணி அல்லது முழுத்துணி ஆகும்.

அக்காலத்தில் அரேபியர்கள் மூலமே பருத்தி வியாபரம் நடந்ததால், அவர்கள் அப்பெயரில் விற்றுள்ளார்கள் அதுவே நிலைத்துள்ளது.


முற்காலத்தில் விதை தயாரிப்பாளர்கள் என தனியே சிறப்பான நிறுவப்பட்ட ஒரு அமைப்பாக இல்லை, விவசாயிகளே பாரம்பரியமாக தாங்கள் விளைவித்தவற்றில் ஒரு பகுதியை விதைக்கு என எடுத்து வைத்துக்கொண்டு பயன்ப்படுத்தி வந்தார்கள்.

காலப்போக்கில் தொடர்ந்து ஒரே பாரம்பரிய வகையினை பயிரிட்டு வந்தமையால் இயற்கையாக ஏற்படும் கலப்பு மகரந்த சேர்க்கை, மேலும் ஒரே பயிர் தொடர் விவசாயம் ஆகியவற்றால் விதைகளின் தூய்மை பாதிக்கப்பட்டு உற்பத்தி திறன் குறையலாயிற்று, எனவே உற்பத்தியை பெருக்க மேம்படுத்தப்பட்ட விதைகளை (High yield hibreeds)அறிமுகப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனை தனிநபர்கள் செய்ய இயலாது எனவே அரசே முன்னின்று மேம்பட்ட விதைகளை உற்பத்தி செய்ய ஆய்வுகள் மேற்கொண்டது, உடனடியாக பெருமளவு விதை உற்பத்தி செய்ய இயலாது என்பதால் சர்வதேச விதை ஆய்வு மையங்களில் இருந்து இறக்குமதி செய்து உள்நாட்டில் அறிமுகப்படுத்தியது, ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ,இறக்குமதி செய்யப்பட்ட விதைகள் என்றாலும் அவற்றிற்கு காப்புரிமை என எதுவும் இல்லை, ஒரு முறை விதைத்து அறுவடை செய்தபின் ,விளைச்சலில் இருந்தே அடுத்த சாகுபடிக்கு விதை உருவாக்கிக்கொள்ளலாம், அதற்கு தடை ஏதும் இல்லை,இது அக்காலம்.

மேலும் அரசு வேளாண் ஆய்வு மையங்கள், பல்கலைகள் மூலம் அதிக மகசூல் கொடுக்கும் புதிய மேம்பட்ட விதைகள், மேலும் கலப்பின விதைகள் என உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிற்று ,அவற்றிற்கும் காப்புரிமை இல்லை, ஒரு முறை வாங்கினால் போதும் காலமெல்லாம் பயன்ப்படுத்திக்கொள்ளலாம்,'royalty free seeds"

ஒவ்வொரு புதிய விதைகளும்,கலப்பின விதைகளும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றதாக இருந்தன ,எனவே அவை மட்டும் அக்குறிப்பிட்ட பகுதிகளில் பரவலாக பயன்ப்பாட்டில் இருந்து வேருன்றின, அக்குறிப்பிட்ட விதைகள் அப்பகுதிகளுக்கான விதைகளாகவும் அறியப்பட்டன.


காலங்கள் உருண்டோடின புதிய விவசாயிகள் நிறைய பெருகினர், சாகுபடி பரப்ப்பு விரிந்தது ,விதை தேவைகளும் அதிகரித்தது, சிலர் முன்னரே பயிரிட்டவர்களிடம் வாங்கி விதைத்தனர், ஆனாலும் எல்லாருக்கும் விதைக்கிடைக்காத நிலை உருவாயிற்று, அப்பொழுது தான் விதைகளை உற்பத்தி செய்து தனியாக விற்கலாம்,அதற்கும் ஒரு சந்தை இருக்கிறது என்பது உணரப்பட்டது.

எனவே சில புத்திசாலி விவசாயிகள் அல்லது தொழில்முனைப்பு கொண்டோர் விதைக்கென பண்ணைகள் உருவாக்கி ,ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் வகைகளையும் பயிரிட்டு விதை பயிராக விற்கலானர், மேலும் புதிய ரகம் அறிமுகப்படுத்தப்ப்பட்டதும் மூல விதைகளை வாங்கி கலப்பினம் ஆகிவிடாமல் "தூய்மை பேணீ"விதைகளாக விற்கவும் செய்தார்கள், விதைகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்து சான்றுகள் வழங்கும் பழக்கமும் உருவாயிற்று, இவற்றினை 'சான்றளிக்கப்பட்ட விதைகள்"என்றார்கள். ஆய்வு மையங்கள் உருவாக்கும் விதைகள் "BREEder seed"ஆகும்.

விதை வகைகள்:

BREEDER SEED- ஆய்வு மையங்கள்,வேளாண் பல்கலைகழங்களில் உருவாக்கப்படுவது.

FOUNDATION SEED- பிரீடர்  விதைகளை பயிரிட்டு ,விதை உற்பத்தி மையங்களில் உருவாக்கப்படுவது.

CERTIFIED SEED- ஃபவுண்டேஷன் விதைகளை பயிரிட்டு உருவாக்கப்படுவது.

TRUTHFULLY LABLED SEED- சான்றளிக்கப்பட்ட  அல்லது ஃபவுண்டேஷன் விதைகளை பயிரிட்டு உருவாக்கப்படுவது, இவையே விவசாயிகளுக்கு பெருமளவு விதைகளாக விற்கப்படுகிறது.

சான்றளிக்கப்பட்ட விதைகளும் விவசாயிகளுக்கு பயிரிட விற்கப்படும் விதையே ,ஆனால் விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும் ஏன் எனில் ஒரு மத்திய விதை சான்றளீக்கும் நிறுவனத்தால் "சான்றளிக்கப்பட வேண்டும்"மேலும் தரமும் கூடுதலாக இருக்கும்.

ட்ருத்ஃபுல்லி லேபிள்டு விதை என்பது சான்றளிக்கப்பட்ட விதை தரத்தில் தயாரிக்கப்பட்டு ஆனால் அரசு சான்று பெறாமல் ,விதை தயாரிப்பு நிறுவனத்தாலேயே "இது நல்ல விதை"என உறுதி அளிக்கப்பட்ட ஒன்று, கொஞ்சம் முளைப்பு திறன் & தூய்மையின் தரம் குறைவாக இருக்கலாம்,எனவே விலை கம்மியாக இருக்கும்.இவ்வகையே விவசாயிகளுக்கு அதிகம் விற்கப்படுகிறது.

இவ்வாறு விதை உற்பத்தி என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பாக உருவாயிற்று,ஆனால் அப்பொழுதும் "காப்புரிமை"என்ற ஒன்று பெயரளவில் இன்னார் தான் தயாரிச்சவர் என்ற "கிரெடிட் "கொடுக்க மட்டுமே ,ராயல்டி வழக்கம் உருவாகவில்லை, எல்லாமே "ஓபன் சோர்ஸ்"தான்.

கி.பி 1988 இல் உலக வர்த்தக ஒப்பதங்களின் காரணமாக இந்தியாவில் பன்னாட்டு விதை தயாரிப்பாளர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நுழைந்தார்கள்.2001 இல் உலக வர்த்தக மையத்தின் வழிக்காட்டுதல் அல்லது கட்டாயப்படுத்தல் காரணமாக, உருகுவே மாநாட்டுக்கு பின்னர் விதை காப்புரிமை ஒப்பந்தத்தில் இந்திய கை ஒப்பமிட்டது.

இதன் மூலம் விவசாயிகள் அல்லது இந்திய நிறுவனங்கள், தன்னார்வ குழுக்கள் வைத்துள்ள ,பாரம்பரிய விதைகளையும் ஒரு ரகமாக பதிவு செய்து காப்புரிமை கோரலாம் என சொல்லப்பட்டாலும்,வழக்கம் போல இந்தியாவில் எந்த விவசாயி போய் விதைக்காப்புரிமை வாங்க போகிறான்,பெரும்பாலும் அப்படி கோரப்படவேயில்லை, முன்னணியில் இருந்த தனியார் நிறுவனங்கள் அது வரையில் சந்தைப்படுத்திய விதை ரகங்களை அவர்களின் பெயரில் பதிவு செய்துக்கொண்டது தான் நடந்தது.

இப்பவும் ஒரு விவசாயி தனது விதையினை தான் மட்டுமே பயிரிடுகிறேன் ,தனித்துவமானது என சமர்ப்பித்து ,அதற்கு எதிர்ப்பு இல்லை எனில் காப்புரிமை சான்று பெறலாம்.

தற்சமயம் விதைகள் எல்லாம் காப்புரிமையாக்கப்பட்டு , விதைகளின் விலையும் உயர்த்தப்பட்ட நிலையில் ,விதை வாங்கும் விவசாயிகளை காக்கவும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விதை நிறுவனங்கள் அளித்த உத்தரவாதத்திற்கு ஏற்ப உற்பத்தி செய்யவில்லை எனில் இழப்பீடு பெற்று தர ஒரு அமைப்பினை "Birsa Agriculture University at Kanke"உருவாக்கியுள்ளது,இவ்வமைப்பில் சேர்ந்து இழப்பீடு பெறலாம். தற்சமயம் ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், ஒடிஷா, சத்தீஷ்கர், அந்தமான் தீவுகள் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சுட்டி:

http://articles.timesofindia.indiatimes.com/2012-08-04/ranchi/33034499_1_protection-of-plant-varieties-claim-compensation-branch-office

இதில் கவனிக்க தக்கது என்னவெனில் காப்புரிமை வரும் வரையில் இந்திய தனியார் விதை உற்பத்தியாளர்கள் யாரும் பீரிடர் விதை ஆய்வில் ஈடுபட்டதாகவோ, அல்லது தயாரித்ததாகவோ அறியப்படவில்லை, ஆனால் ஆய்வு செய்து விதைகள்ள் உருவாக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டு பெரும்பாலும் அவர்கள் பிரீடர் விதைகளை வாங்கி தான் உற்பத்தியில் ஈடுபட்டு வந்தார்கள்,சிலர் பேக் கிராசிங் செய்து ஒரு வகையாக உருவாக்கி வைத்திருந்தார்கள்,ஆனால் பல மடங்கு விதைகளாக்கி விவசாயிகளுக்கு விற்கும் போது ஒரு "டிரேட் நேம்"போட்டு விற்பது வழக்கம், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சில குறிப்பிட்ட விதைகள் சில குறிப்பிட்ட விதை தயாரிப்பாளர்களின் "டிரேட் நேம்"பிராபர்ட்டியாகவும் ஆகிவிட்டது.

உதாரணமாக , கி.பி.1963 இல் டெல்லியில் நடந்த விவசாயக்கண்காட்சியில் 100 கிராம் Pusa Saoni bhendi (lady's finger) விதையை சாம்பிளாக வாங்கி வந்து அதனை வளர்த்து பல மடங்கு விதைகளாக்கி தான் முதன் முதலில்  மாகிகோ  விதை விற்பனையை ஆரம்பித்தது. பின்னர் அவர்களின் டிரேட் நேம் பிராபர்ட்டியாகவும் ஆகிவிட்டது.

இப்படி காப்புரிமை இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக விதை கிடைக்கும் சூழல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் உருவாகும் காலம் வரையில் தான் இருந்தது, விதைக்காப்புரிமை என்ற கொள்கையை தூக்கிப்பிடிக்க காரணமே பன்னாட்டு நிறுவனங்களின் "மரபணு மாற்ற ஆய்வுகளே'ஆகும்.

எதுக்கு இந்த வரலாறு என சலிப்படையலாம், ஆனால்  விதைகள் உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏன் பலத்த போட்டியிடுகின்றன என்பதை புரிந்துக்கொள்ள இந்த அடிப்படை தகவல்கள் உதவும். ஏன் எனில் காப்புரிமை என்ற பெயரில் கிடைக்கும் ராயல்டி தொகை என்பது நோகாமல் நோம்பு கும்பிடும் ஒரு நுட்பம் ஆகும், ஒரு முறை தயாரித்து விட்டால் போதும் அப்புறம் தொடர்ந்து ராயல்டி ராஜலக்‌ஷ்மி வாசக்கதவை தட்டி துட்டக்கொட்டுவாள் :-))

மேலும் இந்தியா எப்பொழுதுமே விவசாய உற்பத்தியில் முன்னணியில் உள்ள ,விதை தேவை அதிகம் உள்ள நாடு ஆகும், இங்க மார்க்கெட்டினை பிடித்து விட்டால் ,அப்புறம் வாழ்நாளெல்லாம் கவலையே இல்லை, நாம ஒரு தங்க முட்டையிடும் வாத்து ஆவோம்.

இந்தியாவில்  எப்போவோ யாரோ தயாரித்த பாரம்பரிய விதைகளின்  காப்புரிமை எல்லாம் மாநில வாரியாக பல தனியார்கள் கைகளில் சிக்கிய நிலையில், பல சர்வதேச விதை நிறுவனங்களும் இந்தியாவில் நுழைந்து செயல்ப்பட ஆரம்பித்தந்தன ,  அவர்களின் கலப்பின விதைகளையும் நம்ம ஊர் விதை வியாபாரிகளே விநியோகம் செய்து வந்தார்கள், ஆனால் 2001 க்கு முன்னர் ராயல்டி என்ற பிரச்சினை இல்லாமல் கமிஷன் அடிப்படையில் வியாபாரம் நடந்தது, மேலும் விவசாயிகளும் நினைத்தால் அவர்களே சாகுபடியில் இருந்து விதைகளாக உற்பத்தி செய்துக்கொள்ளலாம் இந்நிலையில் காப்புரிமை என்பது உறுதியானதும் ஏற்கனவே ஆய்வுகளை முடித்து விட்டு காத்திருந்த சர்வதேச விதை  தாதா மான்சான்டோ வியாபார களத்துக்குள் வருகிறார். தனது பிடி தொழில் நுட்ப விதைகளை தனியாக விற்கப்பார்க்க , ஏற்கனவே கமிஷனில் விதை விற்றுக்கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அதன் கூட்டாளிகளான இந்திய வியாபாரிகளுக்கும் சிக்கல், பிடி விதையை பூச்சியே தாக்காது, பூச்சி மருந்து வேண்டாம் என சொல்லி விற்றுவிட்டால்,நம்ம விதை விற்காதே எனவே , பீடி வந்தால் நாடே அழிந்துவிடும் என முதலில் எதிர்ப்பை கிளப்பிவிட்டு ஆரம்பத்தில் கன ஜோராக எதிர்ப்பரசியல் செய்ய வைத்தார்கள். இதற்கு மற்ற பன்னாட்டு விதை நிறுவனங்களும் உடந்தை. சர்வதேச சந்தையிலும் பிடி தயாரிக்காத நிறுவனங்கள்,பிடி தயாரிக்கும் நிறுவனங்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டே தான் இருக்கின்றன.

இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு விதை நிறுவனங்கள்;பிடி யுகம்!






இப்போ திரைக்கதையில் ஒரு டிவிஸ்ட் ஆக மோன்சான்டோ மகாராஷ்ராவை சேர்ந்த மாகி கோவின் மூல நிறுவனத்தின் 26% பங்குகளை வாங்கி முதலீடு செய்வதோடு அல்லாமல்,மரபணு மாற்று விதைகளுக்கென்றே பிரத்யோகமா 50:50 மூலதன பங்கில் "மாகிகோ- மோன்சான்டோ  பயோ டெக் இந்தியா"என உள்நாட்டு கூட்டு நிறுவனமாக அவதாரம் எடுத்து விடுகிறது. மகாராஷ்ட்ராவை பிடிக்க காரணம் ,அம்மாநிலம் தான் இந்தியாவிலே அதிக பருத்தி உற்பத்தி செய்யும் ,மாநிலமாகும், அதோடு இல்லாமல் மற்ற உள்நாட்டு வியாபாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தி மற்ற பன்னாட்டு நிறுவனங்களை விட்டுவிட்டு வந்துவிடுங்கள், எங்க பிடியை விற்றால் நல்ல மார்ஜினில் லாபம் வரும் வகையில் ஒப்பந்தம் போடலாம் என பேசி மடித்துவிட்டது.

தற்போதைய நிலையில் 450 கிராம் பிடி பருத்தி விதை பாக்கெட்டின் விலை சுமார் 980 ரூ, இதற்கு ராயல்டி கட்டணமாக 225 ரூவை மோன்சாண்டோவிற்கு உள்ளூர் தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டும், மிச்ச தொகை முழுவதும் நம்ம ஆட்களுக்கு.

முன்னர் மிக உயர்வான வழக்கமான கலப்பின பருத்தி விதைகளின் விலை ரூ  400-500 மேல் எக்காலத்திலும் போனதில்லை. எனவே அவற்றினை விற்கும் போது பெர்சேன்டேஜில் கமிஷன் பெரிதாக கிடைக்கவில்லை, இப்பொழுது பிடி பருத்திக்கு இரண்டு மடங்கில் விலை , மார்ஜினும் அதிகம் என்பதால் வியாபாரிகளும் மோன்சான்டோவை ஏகமாக ஆதரிக்க துவ்வங்கிவிட்டார்கள்.

தற்சமயம் சுமார் 150 நிறுவனங்கள், மான்சான்டோ உடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு 600 வகையான பெயர்களில் பிடி பருத்தி விதைகளை விற்று படுத்தி எடுக்கிறார்கள் இந்திய விவசாயத்தை!

இப்படித்தான் சுமார் பத்தாண்டுகளில் 94.75% பருத்தி சாகுபடி பரப்பினை மோன்சான்டோ விதைகளே ஆக்ரமித்தது.   ஆண்டுக்கு சுமார் 4 கோடி விதை பாக்கெட்டுகள் ,அதாவது சுமார் நான்காயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, அமெரிக்காவில் கூட மோன்சான்டோவிற்கு இவ்வளவு பெரிய சந்தையில்லை.

உலக அளவில் பல நாடுகளிலும் எதிர்ப்புகள், வழக்குகள்,நஷ்ட ஈடுகள் என அடிவாங்கிக்கொண்டு , அதன் பங்கு சந்தை மதிப்பு கூட சரிய ஆரம்பித்துள்ளது ,ஆனால் இந்தியாவில் பலமாக காலூன்றி சக்கைப்போடு போடுவதால் நட்டத்தையும் தாங்க முடிகிறது, இந்திய வருவாய் இல்லை எனில் இன்நேரம் மூடுவிழாக்கூட கண்டிருக்கலாம்.



மேலும் மோன்சான்டோ இந்தியாவில் நுழைந்த காலத்தில் உலக அளவில் 50 நிறுவனங்கள் பிடி பருத்தி நுட்பத்தினை கையில் வைத்திருந்தன, இன்று சுமார் 150 நிறுவனங்களுக்கு அது சாத்தியம்,ஆனால் வேறு எந்த நிறுவனத்திற்கும் இந்தியாவில் அனுமதி அளிக்காமல் மோன்சான்டோவிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது, இன்று வரையில் வேறு யாரும் நுழைய விடாமலும் பார்த்துக்கொள்ளப்படுகிறது, மகாராஷ்ட்ரா நிறுவனத்தின் பின் புலமும்,சில அரசியல் சக்திகளுமே "மான்சான்டோவிற்கு "இத்தகைய தனிசிறப்பு சலுகையை வழங்கி வரக்காரணமாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளது,இதனைப்பற்றி வெளிப்படையாக"Centre for Cellular and Molecular Biology (CCMB) former director Pushpa M Bhargava"என்பவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

செய்தி:

//He wanted to know why the central government allowed only Monsanto to produce the Bt seed when there were more than 50 seed companies that had the capacity to do so.

He appealed to the farmer leaders and farmers to be cautious about the usage of Bt seed as it would not only damage the crops but the environment as well.//

சுட்டி:

 http://articles.timesofindia.indiatimes.com/2002-04-29/hyderabad/27136416_1_bt-seed-bt-cotton-pushpa-m-bhargava



இம்முறையினால் மோன்சான்டோவிற்கு கொள்ளை லாபம் எப்படி எனில் மாகிஹோ மூலம் மட்டுமே சுய தயாரிப்பு பிடி விதைகள் ,பிற தயாரிப்பாளர்களுக்கு பிரீடர் சீட் மட்டும் கொடுக்கும்,அதனை ஏற்கனவே காப்புரிமை பதிவு செய்து வைத்துள்ள இந்திய பருத்தி விதைகளுடன் கலப்பினம் செய்து புதிய "பிடி ரகமாக "மாற்றிக்கொள்ள வேண்டும் தொழில்நுட்ப உதவி மட்டுமே அளிக்கும், பின்னர் அதில் இருந்து லேபிள்டு சீட் உற்பத்தி செய்து விற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு பாக்கெட்டு 225 ரூ ராயல்டி கொடுத்து விட வேண்டும்.

இதில் உள்ள தந்திரம் என்னவெனில் மான்சான்டோ வசம் காப்புரிமையே இல்லாத விதைகளிலும் பிடியை புகுத்தி அவற்றை பிடி காப்புரிமை என சொந்தம் கொண்டாடிக்கொள்வதாகும், சில காலம் போனபின்னர் பிடி கலக்காத இந்திய விதையே இல்லாத சூழலில் நம்ம விதை தயாரிப்பாளர்களுக்கு "விதை என சொல்லி 'விற்க ஒரு மூலப்பொருளே இல்லாமல் போய்விடும்,எல்லாமே மோன்சான்டோவின் காப்புரிமை வளையத்தில் சிக்கி இருக்கும்.

விதை உற்பத்தியில் அரசின் மெத்தனம்:



உணவு தானிய விதைகளை "high volume, low value seeds"என்கிறார்கள் ,அப்படி எனில் மிக அதிக விதைகள் உற்பத்தி செய்ய வேண்டும் ,ஆனால் விலை குறைவாக விற்கப்படுபவை, இவற்றில் நிறைய லாபம் கிடைக்காது. பருத்தி போன்ற பணப்பயிர்களின் விதைகளை "low volume ,high value  seeds"என்கிறார்கள் , அதாவது குறைவான அளவு விதை உற்பத்தி ,ஆனால் அதிக விலைக்கு விற்கப்படுவை,எனவே லாபம் அதிகம் கிடைக்கும்.

இதனாலே தனியார் நிறுவனங்கள் பருத்தி,பிடி பருத்தி விதை உற்பத்தி மற்றும் விற்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இவர்களுக்கு மறைமுகமாக அரசு எந்திரமும் ஒத்துழைக்கிறது, தற்பொழுதெல்லாம் அரசு விதை நிறுவனங்களோ, வேளாண் பல்கலைகளோ பருத்தி விதை உற்பத்தியில் கவனம் செலுத்துவதையே குறைத்துக்கொண்டன,பல இடங்களில் விதை உற்பத்தி மையங்களை மூடவும் செய்துவிட்டார்கள்.

கோவை மாவட்டம்,பொங்கலூரில் 57 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மாநில அரசு விதைப்பண்ணை இயங்கி வந்தது, பல வகை சான்றளிக்கப்பட்ட பருத்தி  ஹைபிரிட் விதைகளை உற்பத்தி செய்து பெருக்கி மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்து வெற்றிகரமாகவே இயங்கியது.காலப்போக்கில் தனியார் விதை விற்பனையாளர்களுக்கு சாதகமாக அரசாலேயே ஓரங்கட்டப்பட்டு இன்று பாழடைந்து கிடைக்கிறது, அரசுக்கு விதை உற்பத்தியில் உள்ள ஆர்வத்திற்கு இதுவே சான்று!

சுட்டி:

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/efforts-to-revive-57yearold-seed-farm/article4417172.ece

மரபணு மாசு :

இவ்வாறு திட்டமிட்டு மரபணு மாற்றத்தினை அனைத்திலும் புகுத்துவதை "மரபணு சூழல் சீர்க்கேடு"என்கிறார்கள். எப்படி காற்றில் கரியமிலவாயு கலப்பது சுற்று சூழல் சீர்க்கேடோ அப்படியே மரபணு கலப்பாக அனைத்தையும் மாற்றுவதையும் சீர்க்கேடு என்கிறார்கள், பழைய பாரம்பரிய மூல விதைகளே இல்லாத நிலையில் இச்சீர்கேடு திரும்ப சரி செய்ய இயலா நிலையை அடையவும் கூடும், எனவே தான் பாரம்பரிய விதைகளை காக்க வேண்டும் என பல இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.



செய்தி:

Monsanto is a ticking time bomb for U.S. agriculture

As the USDA has now admitted, Monsanto's GMO experiments from 1998 - 2005 were held in open wheat fields. The genetically engineered wheat escaped and found its way into commercial wheat fields in Oregon (and possibly 15 other states), causing self-replicating genetic pollution that now taints the entire U.S. wheat industr//

சுட்டி:

http://www.naturalnews.com/040572_japan_ge_wheat_genetic_pollution.html

பாரம்பரிய விதை வங்கி:

இவ்வாறு மரபணு மாசு செய்வதன் இன்னொரு உள்நோக்கம் என்னவெனில் ,பிற்காலத்தில் மரபணு மாற்றிய பயிர்களை விதைக்காத விவசாயிகளின் வயலில் இருக்கும் பயிர்களின் விதையும் எங்களுடையதே என சொல்லி ராயல்டி கேட்டு மிரட்டலாம்!

இந்தியாவிலும் பிடி இல்லாத பருத்தி விதைகளை பாதுகாத்து பயிரிட சில தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

வட கர்நாடக மாநிலம், மகரி என்ற கிராமத்தினை சேர்ந்த விவசாயி "Nagappa Nimbegundi"(52) என்பவர் பிடி பருத்தியில் ஊடுபயிராக காய்கறிகளை பயிரிட்டால் சரியாக விளையாததை கண்டு , சாதாரண பருத்தி பயீரிட முயன்றுப்பார்க்கலாம் என நினைத்த பொழுது விதைகளே கிடைக்கவில்லை என்பதை அறிது பின்னார் தேடிப்பார்த்து விதைகள் வாங்கி பயிரிட்டுள்ளார், அப்பொழுது தான் பிடி பரவலால் பாரம்பரிய விதைகள் அழியும் நிலையில் உள்ளது என உணர்ந்து ,இந்தியா முழுவதும் சென்று 13 பழமையான பருத்தி வகைகளையும், 11 பிடி அல்லாத வகைகளையும் கண்டுப்பிடித்து சேகரித்து , பாரம்பரிய விதை வங்கியினை உருவாக்கியுள்ளார்.

செய்தி:

//W DELHI: For 52-year-old Nagappa Nimbegundi, a farmer from Makari village in North Karnataka, this Independence Day was special. After three years of relentless efforts, he has managed to revive 13 varieties of indigenous cotton and 11 other varieties of non-Bt cotton in his farm.

The seed bank that he is developing is of significance as 90% of cotton production in India has been taken over by Bt cotton, a genetically modified variety developed by an American company. Indigenous varieties have become virtually non-existent and are difficult to find even at research institutions.//

சுட்டி:

http://articles.timesofindia.indiatimes.com/2013-08-16/india/41416828_1_bt-cotton-seed-companies-bengal-desi

இது போன்று மேலும் பல தன்னார்வலர்கள் சுய முயற்சியில் பல பாரம்பரிய விதைகளை மீட்டு பயிரிட்டு ,பாரம்பரிய விதை வங்கிகளை நடத்துகிறார்கள்.


மேலும் பிடி பருத்தியின் மூலம் பிற தாவரங்களிலும் பிடி கலப்பினம் இயற்கையாக நேரிடலாம், இதனால் பொதுவாக தாவர உயிர்ச்சூழலில் "மரபணு மாசு"ஏற்படலாம்.
அரிசியில் "மரபணு மாசு"ஏற்படுத்திவிட்டதாகா "பேயர்"நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கப்பட்டு ,750 மில்லியன் டாலர்கள்,நஷ்ட ஈடு பெறப்பட்டுள்ளது.

ஆனால் இம்மாதிரி நம்ம நாட்டில் எளிதில் வழக்கு நடத்தி நட்ட ஈடு பெற முடியாது என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக போய்விட்டது!

செய்தி:

while in 2006 a large part of the U.S. long-grain rice crop was contaminated by an experimental strain from Bayer CropScience , prompting import bans in Europe and Japan.

The company agreed in court in 2011 to pay $750 million to growers as compensation.//

சுட்டி:

http://www.dailymail.co.uk/news/article-2333381/GM-wheat-crops-America-facing-wheat-export-crisis-Europe-Japan-lead-way-rejecting-genetically-modified-crops.html

#அமெரிக்காவில் இவ்வாறு கோதுமையில் அனுமதியின்றி மரபணு கலப்பினை செய்துவிட்டதாக "மோன்சான்டோ"மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


//The U.S. Judicial Panel on Multidistrict Litigation announced that at least 16 lawsuits will be sent to U.S. District Judge Kathryn Vratil in Kansas City for pretrial evidence gathering.
Lawsuits started to be filed in June after an Oregon farmer found wheat that would not die in his field. After the wheat was tested, it was discovered that it contained a gene that allowed it to withstand Monsanto’s herbicide glyphosate.
Monsanto had previously field tested a Roundup Ready wheat variety 15 years prior. It remains unknown how the GM variety got into the field since trials haven’t been conducted for many years after Monsanto abandoned the project after trading countries would not accept such wheat.
The GM wheat discovery this year caused multiple wheat importers to stop importing wheat from the United States for several weeks, dropping the price of U.S. wheat.//

சுட்டி:

http://www.agprofessional.com/news/GM-wheat-lawsuits-to-be-consolidated-in-Kansas-City-228392511.html


அமெரிக்க அரசும் மரபணு கோதுமையை பொது வயலில் பயிரிட அனுமதியே தரவில்லை என சொல்லியுள்ளது, அமெரிக்க கோதுமையில் மரபணு கலப்பு இருக்கலாம் என சந்தேகித்து ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவை அமெரிக்க கோதுமை இறக்குமதியை தடையும் செய்துள்ளது.

# ஹங்கேரியில் அரசுக்கே தெரியாமல் 1000 ஏக்கரில்  மோன்சான்டோ மரபணு மாற்ற மக்காசோளத்தினை பயிரிட்டுள்ளது கண்டறியப்பட்டு அரசால் அழிக்கப்பட்டு , ஒட்டுமொத்தமாக தடையும் விதித்துள்ளார்கள், இதெல்லாம் 2011 இலேயே நடந்துவிட்டது.



செய்தி:

Almost 1000 acres of maize found to have been grown with genetically modified seeds have been destroyed throughout Hungary deputy state secretary of the Ministry of Rural Development Lajos Bognar said. The GMO maize has been ploughed under, said Lajos Bognar, but pollen has not spread from the maize, he added.

Unlike several EU members, GMO seeds are banned in Hungary. The checks will continue despite the fact that seed traders are obliged to make sure that their products are GMO free, Bognar said.//

சுட்டி;

http://www.foodfirst.org/en/Hungary+destroys+GMO+corn

#
இதன் எதிரொலியாக இந்திய அரசும் அமெரிக்காவில் இருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை இறக்குமதி செய்ய தடை விதித்து விட்டது. ஏன் எனில் பெரும்பாலும் "அறிவிக்கப்படாமல் மரபணு தானியங்களை"பதப்படுத்தப்பட்ட உணவில் கலப்பது "அமெரிக்க வியாபார  தந்திரமாகும்". கண்டிப்பாக மரபணு தானியங்கள் பற்றி உணவு பாக்கெட் லேபிளில் குறிப்பிட வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் விதி இருக்கு,ஆனால் அமெரிக்காவில் அது கட்டாயமில்லை. அவ்வாறு கட்டாயமாக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

செய்தி:
//No import nod for GM processed food items till March 2014

NEW DELHI: The Union environment ministry has issued an order keeping in abeyance the controversial August, 2007 notification, which allows import of genetically modified (GM) processed food items into India without its prior permission, till March 31, 2014.//

சுட்டி:

http://articles.timesofindia.indiatimes.com/2013-10-25/india/43394778_1_gm-food-crops-ministry-final-order

உலகெங்குமே மரபணு மாற்று தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்புகள் உள்ள நிலையில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடு தேவையே இல்லாமல் முழு அளவில் "மரபணு மாற்றத்தொழில்நுட்பத்தினை "பின்ப்பற்ற என்ன தேவை?
மரபணு மாற்றுத்தொழில் நுட்பம் வந்தால் தான் உணவுப்பஞ்சம் தீரும்,அனைவருக்கும் உணவு மலிவாக கிடைக்கும் என்கிறார்கள்,ஆனால் இத்தொழில்நுட்பமோ உற்பத்தியை பெருக்கும் நோக்கிலேயே வடிவமைக்கப்படவில்லை, பூச்சிக்கொல்லியாகவும்,"கிளைப்போசைட், ரவுண்ட் அப்"போன்ற களைக்கொல்லி தாங்கு சக்தியை உருவாக்கவுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் உற்பத்தியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவோ, ஊட்டச்சத்து மிக்கதாகவோ உணவுப்பொருட்கள் மாறவேயில்லை என்பதே நிதர்சனம், தொடர்ந்து அவற்றையும் காண்போம்.
-------------------------

விதை நிறுவனங்களின் அறம்:

இந்தியாவில் பருத்தி சாகுபடியில் மாகாராஷ்ட்ரா,குஜராத்,ஆந்திரா,கர்நாடகா ,தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால் விதை உற்பத்தியில் ஆந்திர மாநிலமே முன்னணியில் உள்ளது, இந்தியாவின் விதை உற்பத்தி தலைநகரம் என அழைக்கப்படுகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளின் நிலங்களில் விதை உற்பத்தியில் ஈடுபடுகின்றன, மலிவான கூலியில் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தியுள்ளன.

இதில் பெரிய கொடுமை என்னவெனில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் "குழந்தை தொழிலாளிகள்"ஆகும். சுமார் 6 முதல் 16 வயதிற்குற்பட்ட சிறார்களை,அதிலும் குறிப்பாக பெண் சிறார்களை கிராமங்களில் இருந்து பிடித்து வந்து பண்ணையில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்து கொத்தடிமைகளாக வேலை வாங்குகிறார்கள், தினசரி சம்பளம் வெறும் 20 ரூபாய்களே ஆனால் வேலை நேரமோ 16 மணி நேரத்திற்கு குறையாத அளவில்.



பருத்தி சாகுபடி என்பது மிக அதிகமாக பூச்சி மருந்து,களைக்கொல்லி என புழங்கும் இடம் அவற்றின் ஊடே பணி புரிவதால் பல சிறார்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.

ஆந்திராவில் மட்டும் பன்னாட்டு நிறுவன சார்பாக ஒப்பந்த தொழிலார்களாக உள்ள சிறார்களின் எண்ணிக்கை நிறுவனங்கள் வாரியாக.

Hindustan Lever Ltd.- 2,500 ஏக்கர்- 22,500 சிறார்கள்.

Syngenta - 650 ஏக்கர் - 5,850சிறார்கள்.

Advanta -300 ஏக்கர் - 2,700 சிறார்கள்

Mahyco-Minsanto -1,700 ஏக்கர்- 15,300 சிறார்கள்

Proagro- 200 எக்கர் - 1,800,சிறார்கள்

Total ஏக்கர் -5350

மொத்த சிறார்கள் - 48,150.

பன்னாட்டு விதை நிறுவனங்கள் லாபத்திற்காக விவசாயிகளின் இயல்பான விதை உரிமைகளை மட்டும் பறிக்கவில்லை, சட்டத்திற்கு புறம்பாக குழந்தை தொழிலாளர்களையும் பயன்ப்படுத்தி வருகின்றன, ஆனால் அவர்களை நேரடியாக குற்றம் சட்டமுடியாத படி இதனை எல்லாம் ஒப்பந்த விவசாயிகளைக்கொண்டு நடத்துகின்றன, சட்டப்படி அவர்களுக்கும் ,இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நழுவி விடுவார்கள்.



சுட்டி:

கீழ்கண்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தளத்தில் மேலதிக தகவல்கள் உள்ளன.

http://www.indianet.nl/cotssec2.html

மரபணு மாற்றத்தின் யதார்த்த நிலை:

ஒரு மரபணு மாற்றம் எனப்படுவது ஒரு மூல உயிரியில் இருந்து தேவைப்படும் மரபணுவை மட்டும் வெட்டி , தேவைப்படும் உயிரியில் ஒட்டுவதாகும்.

வெட்டுவது கூட சரியாக வெட்டிவிடலாம்,ஆனால் ஒட்டும் இடத்தில் சரியாக தேவையான இடத்தில் ஒட்ட இயலாது,தோராயமாகவே ஒரு இடத்தில் நுழைக்க முடியும், அவ்விடம் உண்மையில் நமக்கு தேவையான மாற்றத்தினை தரக்கூடிய மரபணு தொடர் வரிசையாக இருக்கும் என சொல்லவும் முடியாது. காரணம் ஜீனோம் சீக்கவன்சில் அறியப்பட்ட மரபணுத்தொடர்களை விட அறியப்படாத "ஜங்க்"எனச்சொல்லப்படும் மரபணுத்தொடர்களே அதிகம் உள்ளது.

இதன் விளைவாக மரபணு மாற்றம் உரிய விளைவை "உருவாக்கப்பட்ட உயிரியில்"தரும் என சொல்ல முடியாது, நூற்றுக்கு 90 சதவீதம் போல மரபணு மாற்ற வினை தோல்வியாகவே அமையும், வெற்றிகரமாக நடந்தவையும் சிறப்பான விளைவை தருமா என்பதும் கேள்விக்குறியே.

# மேலும் எல்லா உயிரியிலும் என்னவென்று அறியாத 'ஜன்க் டி.என்.ஏ"நிறைய உள்ளன, இவற்றுடன் பிடி மரபணு வினைப்புரிந்தால் என்னவாகும் என யாருக்கும் தெரியாது, ஒரு வேளை விரும்பத்தகாத விளைவுகளையும் உருவாக்கலாம்.

பெரும்பாலும் "ஆபரேஷன் சக்சஸ்,பேஷன்ட் டெட்" கதை தான்!

# மிக நுண்ணிய மரபணுவில் ,தோராயமாக மரபணு மாற்றம் செய்யப்படுவது கண்ணை மூடிக்கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்வது போலத்தான்.

# மரபணு மாற்ற உயிரியில் ஒரு குறிப்பிட்ட பண்பினை உருவாக்கி தொடர்ந்து அதனையே பயிர் செய்வதன் மூலம், ஒரே வகையான நோய்,பூச்சி என்ற நிலை உருவாகி, அதன் எதிர்ப்பு தன்மையும் குறைந்து ,பின்னர் சாதாரண பூச்சி,நோய் தாக்குதலுக்கே கடும் விளைவை தரக்கூடும்.

எனவே எதிர்ப்பு தன்மை குறைந்த ஒரு உயிரி சூழல் உருவாகிவிடும்.

# மரபணு மாற்றத்தின் போது , பேக்ட்ரீயா, மற்றும் பூஞ்சைகள் தொற்றினை தாவரங்கள் தாக்கு பிடிக்க வேண்டும் என ஆன்டி பயாடிக் ரசாயனங்கள் பயன்ப்படுத்தப்படும், எனவே மரபணு மாற்ற பயிரில் உருவாகும் நுண்ணுயிர்களும் ஆன்டி பயாடிக் எதிர்ப்பை வளர்த்துக்கொள்ளும், எனவே மரபணு மாற்ற பயிர்கள் மூலம் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் ,ஆண்டி பயாடிக் மருந்து கொடுத்தாலும் மனிதருக்கு நோய்கள் குணமாகாது.

# ஒரு பூச்சி மருந்து ,பூச்சியினை கொல்கிறது, அதே மருந்தை  மனிதர்கள் உட்கொண்டால் அவர்களும் இறப்பார்கள் என்பது உண்மை.

அதே போல பிடி டாக்சின் புரதமான கிரை-3ab உட்கொண்டால் ,காய் துளைப்பான் இறக்கிறது.

இப்பொழுது கிரை 3ab  டாக்சின் கொண்ட அதே தாவரப்பகுதியை மனிதன் உண்டால்,அதில் உள்ள நஞ்சு மனிதனை பாதிக்காதா?  ஒரு பூச்சியை கொல்லும் எனில் அது மனிதனையும் கொல்லும்,  அல்லது பாதிப்பாவது கொடுக்கும் என்பதே நிதர்சனம்.

எலி மருந்து வைத்து எலியை கொல்கிறோம்,  விஷம் தோய்ந்த அவ்வெலியை பூனை சாப்பிட்டால் பூனைக்கு நஞ்சு போகாதா?

இங்கே தாவரத்திலேயே தோய்ந்த பிடி டாக்சின் புரதமும் அப்படியானதே.

# பிடி டாக்சின் புரதமானது மனித செரிமான அமைப்பால் சிதைக்கப்பட இயலாத ஒரு புரதமாகும், எனவே உயிரினை கொல்கிறதோ இல்லையோ ஒவ்வாமையை பெரும்பாலும் உருவாக்கிவிடும்.

உணவில் பிடி நஞ்சு: பிடி பருத்திப்பால் அபாயம்!

கனடாவில் கருவுற்ற பெண்களின் இரத்த மாதிரியில் பிடி டாக்சின் புரதம் இருந்துள்ளது, மேலும் கருவில் இருக்கும் குழந்தைகளின் ரத்தத்திலும் பிடி டாக்சின் புரதம் இருந்துள்ளது.

அவர்களை விசாரித்த போது அவர்கள் ,மரபணு மாற்றப்பட்ட சோயா பீன், உருளை, மக்காச்சோளம்,பருத்தி எண்ணையிலான உணவை உண்பது தெரிய வந்துள்ளது,எனவே மரபணு விதையில் இருந்து பிடி டாக்சின்கள் உடலுக்குள் சென்றுள்ளது உறுதியாகிறது. இவ்வாய்வு முடிவுகளை "the journal Reproductive Toxicology இலும் வெளியாக தேர்வு செய்யப்பட்டதாம்.

நமது செரிமான அமைப்புகளால் செரிக்கப்படாத பிடி டாக்சின்கள் ரத்தத்தில் கலந்து அப்படியே அழியா நிலையில் பிளாஸ்டிக் போல  உடலில் சுற்றி வந்துக்கொண்டிருந்துள்ளது.

வழக்கமாக தாவரத்தின் மீது செலுத்தப்படும் பூச்சிக்கொல்லியின் எச்சம் அதன் விதைகளிலேயே அதிகம் சேகரமாகும், அதே போல பிடி டாக்சின்களில் எச்சமும் பிடி பருத்தியின் விதையில் தான் அதிகம் இருக்கிறதாம்.



பருத்தி எண்ணையாவது சமைக்கும் போது நன்கு கொதிக்க வைக்கப்படுகிறது,அப்படியும் பிடி டாக்சின் சிதையவில்லை, நம் நாட்டிலோ பருத்திப்பால் என பருத்திக்கொட்டையில் இருந்து எடுத்து அருந்துகிறோம்,அவை அந்த அளவு முழுக்க வேகவைப்பதோ சூடுப்படுத்தப்படுவதோ இல்லை எனவே மிக நன்றாக பிடி டாக்சின்கள் அழியாமல் முழு வடிவில் இருக்கும், அவற்றை தொடர்ந்து பருகினால் பிடிடாக்சின்கள் உடலில் சிறுக சிறுக சேர்ந்து ஒரு காலத்தில்"chronic poison'"ஆகி பெரும் பின் விளைவை உண்டாக்கலாம். எனவே பெரும்பான்மை பிடி பருத்தி பயிரிடும் இக்காலத்தில்  "பிடி பருத்திப்பால்"தான் கிடைக்கும் அதனைக்குடிப்பதும் அபாயமான ஒன்றாகிவிட்டது எனலாம். பிடி பருத்தி மூலம் செய்யப்படும் அல்வாவுக்கும் இதே நிலை தான்.

வருங்காலத்தில் இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய உணவு என அறிவிக்கப்படும் நிலை கூட வரலாம்.

பிடி டாக்சின் புரதம் என்பது விஷத்தன்மையே இல்லாத ஒன்றாகவே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும்  ,அவை உடலுக்கு தேவையில்லாத ஒரு பொருள்,  பிளாஸ்டிக் குப்பைகள் போல ரத்தத்தில்  சேர்ந்து அழியாமல் தொடர்ந்து குவிந்துக்கொண்டே இருந்தால் ஒரு எல்லையில் கடும் விளைவை உண்டாக்க நிச்சயம் வாய்ப்புண்டு.

# அதே போல பிடி பருத்தி விதைகள் மாட்டிற்கு தீவனமாக அளிக்கப்படுகிறது ,மாட்டின் ஜீரண மண்டலத்தாலும் பிடி டாக்சின் புரதம் செரிக்கப்படுவதில்லை,  அழியாத பிடி டாக்சின் புரதம் மாட்டின் பாலின் மூலம் மீண்டும் மனிதர்களுக்கே வந்து சேரும் வாய்ப்புள்ளது. இப்படி பல வகையிலும் தொடர்ந்து பிடி நஞ்சை நம் உடலில் சேர்த்துக்கொண்டு போனால் எதிர்காலத்தில் அனைவருமே நோயோடு வாழ்வதை தவிர வேறு வழியில்லை, தவணை முறையில் மரணம் எனலாம்!


பிடி பருத்தியின் கிரை டாக்சின் புரதத்தால்  பருத்திப்பால்  மற்றும் மாட்டுப்பால் உற்பத்தி நஞ்சாவது குறித்து இது வரையில் வெகுஜன ஊடகம் எதுவுமே கண்டுக்கொள்ளவில்லை, மரபணு மாற்ற உணவால் பிடி புரதம் ரத்தத்தில் கலந்து விடுவதை வைத்து ,பிடி பருத்திப்பால்,மற்றும் மாட்டுப்பால் நஞ்சாக வாய்ப்புள்ளதை கணித்துள்ளேன்,இனி வருங்காலத்தில் வெகுஜன ஊடகங்கள் இதனை காப்பி அடிச்சு புதுசா கண்டுப்பிடிச்சா போல சொன்னா அடியேனின் தீர்க்க தரிசனத்தினையும்  நினைவு கூரவும் ...ஹி ...ஹி சும்மா ஒரு வெளம்பரம்!

மேலும் சர்க்கரை வியாதி, ஆண்மை இழப்பு போன்றவற்றை எலிகளில் ஏற்படுத்தியுள்ளதை சில ஆய்வக பரிசோதனை முடிவுகள் உறுதி செய்கின்றன.

செய்தி:

//Scientists from the University of Sherbrooke, Canada, have detected the insecticidal protein, Cry1Ab, circulating in the blood of pregnant as well as non-pregnant women.
They have also detected the toxin in fetal blood, implying it could pass on to the next generation. The research paper has been peer-reviewed and accepted for publication in the journal Reproductive Toxicology. The study covered 30 pregnant women and 39 women who had come for tubectomy at the Centre Hospitalier Universitaire de Sherbrooke (CHUS) in Quebec.
None of them had worked or lived with a spouse working in contact with pesticides.
They were all consuming typical Canadian diet that included GM foods such as soybeans, corn and potatoes. Blood samples were taken before delivery for pregnant women and at tubal ligation for non-pregnant women. Umbilical cord blood sampling was done after birth.


Read more at: http://indiatoday.intoday.in/story/toxin-from-gm-crops-found-in-human-blood/1/137728.html//

# மரபணு மாற்ற பயிர்களால் பூச்சி மருந்து பயன்ப்பாடு குறைந்துள்ளதா?

இந்தியாவில் பிடி பருத்தி அறிமுகம் ஆகி சுமார் பத்தாண்டுகள் ஆகிறது, பிடி நுட்பத்தால் பூச்சி மருந்து பயன்ப்பாடு குறையும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படும் எனப்பொதுவாக சொல்லப்படுவதால், அதன் உண்மை தன்மை அறிய மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் ,இணை இயக்குனர்  Dr. Kesavraj Kranthi தலைமையில் ஒரு ஆய்வினை மேற்கொண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.

அவர்களின் ஆய்வு கணிப்பு என்னவெனில் எதிர்ப்பார்த்த அளவு பூச்சி மருந்து பயன்பாடு குறையவில்லை, மேலும் பல புதிய செகன்டரி காட்டன் பெஸ்ட்கள் அதிகமாகியுள்ளது என்பதாகும்.

படம்:


சுட்டி:

சுட்டியில் உள்ள பிடிஎஃப் படித்தால் முழு அறிக்கையின் விவரம்ம் கிடைக்கும்.

படத்தில் பார்த்தால் தெரியும்,

பருத்திக்கும்,மற்ற பயிர்களுக்கும் பயன்ப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் ஒப்பீடு ,

ஆண்டு-2004

மொத்த பருத்தியில் பிடி பருத்தி சதவீதம் - 5.59

பூச்சிக்கொல்லி மதிப்பு: 1032 கோடிகள்.

பூஞ்சை கொல்லி - 6 கோடி.

களைக்கொள்ளி- 4 கோடி.

பருத்திக்கு மட்டும் மொத்தம்= 1040 கோடிகள்.

ஒட்டு மொத்த விவசாய பூச்சிக்கொல்லி பயன்பாட்டின் மதிப்பு =2455 கோடிகள்.

 இப்பொழுது பிடி காட்டன் சாகுபடி அதிகமாக நடக்கும் ஆண்டினை காண்போம்,

ஆண்டு - 2010

பிடி பருத்தி சதவிகிதம்- 90.67%

பூச்சிக்கொல்லி- 884 கோடி,

பூஞ்சைக்கொல்லி -67 கோடி,

களைக்கொல்லி - 87 கோடி.

பருத்திக்கு மட்டும்மொத்தம்- 1038 கோடிகள்.

ஒட்டு மொத்தமாக அனைத்து பயிர்களுக்குமான செலவு= 4283 கோடிகள்.


மேற்கண்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், பிடி பருத்தி குறைவாக பயிரிட்ட 2004 காலத்தில் 1040 கோடிகள் செலவாகியுள்ளது, அதே சமயம், பிடி பருத்தி பருத்தி  90.45 சதவீதம் இருந்த போது 1038 கோடிகள் செலவாகியுள்ளது.

பிடி பரவலான பின் ஏற்பட்ட பூச்சிக்கொல்லி பயன்ப்பாட்டு அளவில் ஏற்பட்ட மாற்றம் என்பது வெறும் 2 கோடி ரூபாய்கள் மதிப்பளவில்  தான்!

நம்ம பிடி ஆதரவு விஞ்'சாணிகள்"பூச்சிக்கொல்லி செலவு குறைவு என சொன்னது எப்படி எனில், நேரடியாக "பூச்சிக்கொல்லிக்கு"மட்டும் ஆன செலவை வைத்தே, மேலும் மற்றப்பயிர்களுக்கு செலவான பூச்சிக்கொல்லிகள் அளவு கூடியதை ஒப்பிட்டு சதவீதத்தில் பருத்திக்கு குறைந்துவிட்டது என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆனால் 2004 ஐ விட 2010 இல் அதிகமாக பூஞ்சைக்கொல்லியும்,களைக்கொள்ளிக்கும் செலவாகியுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால் கிட்டத்தட்ட சமம் எனும் நிலை,ஏனெனில் பிடி பருத்திக்கு பூஞ்சை எதிர்ப்பு தன்மை குறைவு என்பதால் அதன் செலவு கூடியுள்ளது.

களைகள் அதிகம் இருந்தால் பிடி விளையாது,ஆனால் சுதேசி பருத்திகள் ஓரளவு களைகளை சமாளிக்கும் ,எனவே களைக்கொல்லியே தேவைப்படாது.

பூச்சிக்கொல்லி செலவை கொஞ்சம் குறைத்து மற்ற ரசாயன செலவையே பிடி பருத்தி அதிகரித்துள்ளது தெளிவாகிறது.

எனவே விவசாயிகளுக்கு  பூச்சிக்கொல்லி செலவு குறைந்து பண ஆதாயமும் இல்லை, சுற்று சூழல் பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.

பிடி பருத்தி போட்டதால் விளைச்சல் பெருகிவிட்டது நல்ல லாபம் என்கிறார்களே அதிலாவது உண்மை உள்ளதா எனப்பார்க்கலாம்.

(தற்சமயம் ஓரளவு லாபம் அளிப்பதாக உள்ளது ஆனால் அது நீடித்த ஒன்றல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

பிடி பருத்தி விளைச்சல்:

பிடி பருத்தி சாகுபடியால் விளைச்சல் பல மடங்கு உயர்ந்துள்ளது என பொதுவாக சொல்லப்படுவது உண்மையல்ல, ஒட்டு மொத்தமாக பருத்தி உற்பத்தி அதிகம் ஆனது உண்மை ஆனால்  அது பிடி பருத்தியால் அல்ல, மொத்த சாகுபடி பரப்பு அதிகரிப்பால் மட்டுமே.

காண்க படம்.




http://www.business-standard.com/article/companies/seed-companies-reap-rich-harvest-on-bt-cotton-wave-112022300038_1.html

ஆண்டு- 1950-51 -

 பரப்பளவு - 5.8 மில்லியன் ஹெக்டேர்.

மொத்த உற்பத்தி- 3.4 மில்லியன் பேல்கள்.

ஒரு ஹெக்டே விளைச்சல்- 99 கி.கி

அக்காலக்கட்டத்திற்கு குறைவு என தோன்றலாம்,ஆனால் அதுவே உலக அளவில் பெரிய உற்பத்தி ஆகும், நாம் 1800 களிலேயே இங்கிலாந்துக்கு லட்சம் பேல்கள் பருத்தி ஏற்றுமதி செய்தவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியில் பருத்தி உற்பத்தியில் இந்தியா அப்போது அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இருந்தது, அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பின் இங்கிலாந்தின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்தது இந்தியாவே.

பிரிட்டீஷார் தங்கள் தொழில் நலனுக்காக இந்தியாவில் துணி உற்பத்தி நடக்காமல் பார்த்துக்கொண்டு மூலப்பொருட்களான பருத்தி மற்றும் நூல் உற்பத்தியை பெருக்கினார்கள்.

இதனால் தான் இந்தியாவில் அப்பொழுதே நிறைய நூற்பாலைகள் பெருகின, அதுவும் மும்பையில் மிக அதிகம்,எனவே இந்தியாவின் மான்செஸ்டர் எனப்பட்டது, கோவைப்ப்பகுதியிலும் நூற்பாலைகள் பெருகியதால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்பட்டது.

சரி பழங்கதை போகட்டும், பிடி கதைக்கு வருவோம்,அதான் பிடி சாமியின் மயிர் கூச்சறிய செய்யும் திகில் கதையை விட பிரமாதமாக இருக்கும் அவ்வ்!



பி.டி பருத்திலாம் வந்த 2004 -5 ஆண்டு காலத்தினை பார்ப்போம்,

பி.டிப்பருத்தியின் சதவீதம் 5.59.

மொத்த பரப்பளவு- 8.78 மி.ஹெக்டேர்.

மொத்த உற்பத்தி - 24.3 மி.பேல்கள்.

ஒரு ஹெக்டேர் விளைச்சல்- 470 கி.கி

மொத்த உற்பத்தியினை வைத்து கூடி இருக்கிறது, மேலும் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி திறனும் 470 கி.கி என உயர்ந்துள்ளது, இது பிடி பருத்தியினால் என சொல்ல முடியாது, ஏன் என்னில் 2004 இல் பி.டி பருத்தி வெறும் 5.59 சதமே சாகுபடியில் இருக்கு.

சரி இப்போ 2012 ஆம் ஆண்டுக்கான நிலவரத்தினை காண்போம்.

பி.டி பருத்தி சதவீதம் - 94.75%

மொத்த பரப்பு- 12.19 மி.ஹெக்டேர்கள்.

மொத்த உற்பத்தி - 34.5 மில்லியன் பேல்கள்.

உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு - 481 கி.கி.

இப்போவும் உற்பத்தி கூட இருக்குனு சொல்லலாம்,ஆனால் இதெல்லாம் மொத்த சாகுபடி பரப்பு உயர்வால் தான், ஏன் எனில் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி என பார்த்தால் தெரியும், 2004 இல் 5.59% ஆக பிடி  இருக்கும் போது 470 கி.கி,இப்பொழுது 94.5% இருக்கும் போது 481 கி.கி தான் அதாவது பிடி சாகுபடி அதிகரிப்பால் ஒரு ஹெக்டேருக்கு வெறும் 11 கிலோ உற்பத்தி தான் அதிகரித்துள்ளது.

எப்படியோ அதிகரித்துள்ளதே என சொல்வீர்கள் ஆனால் விவசாய பொருளாதாரமே அறியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும், ஏன் ஏனில் ஒரு பாக்கெட் பாரம்பரிய விதை என்பது 400-500 ரூக்கு வாங்கி பயிரிடும் போது 470 கிலோ உற்பத்தி, ஆனால் இப்பொழுதோ சுமார் 980 ரூக்கு பிடி பருத்தி விதை வாங்கி பயிரிட வேண்டியுள்ளது, அதாவது விதை செலவு  இரட்டிப்பு ஆகியுள்ளது ,மேலும் சுற்றுச்சூழல், நுகர்வோர் நலன் ,விதையுரிமை என அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது, ஒரு ஹெக்டேருக்கு 11 கிலோ உற்பத்தியினை அதிகரிக்க இவ்வளவு பெரிய அபாயத்தினை எதிர்க்கொண்டு பயிரிட வேண்டுமா?

இவ்வுற்பத்தியை மேம்படுத்தப்பட்ட கலப்பின பாரம்பரிய விதைகளாலேயே எட்ட முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

மேலும் 2004 இல் இருந்து பருத்தி உற்பத்தியினை கவனித்து வந்தால் தெரியும்,

2007 -521 கி.கி

2008- 554

2009- 524

2010 -503

2011- 511

2012- 480.கி.கி

ஆரம்பத்தில் கொஞ்சம் உயர்ந்த உற்பத்தி படிப்படியாக சரிய துவங்கி மெதுவாக உற்பத்தி திறன் குறைந்து வருவதை காணலாம், பிடி பருத்தி இல்லாத காலத்தின் போது இருந்த உற்பத்தி திறனை நோக்கி பிடி பருத்தியின் உற்பத்தி சரிந்து செல்வதாக வேளாண் பொரூளாதார வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.

எனவே பிடி பருத்தி என்பது உற்பத்திக்கு கிடைத்த மாபெரும் வரம், பூச்சிகளுக்கு எமன் என்பதெல்லாம் 'பிரச்சார மாயைகள்"என்பது தெளிவாகும்.

பிடி அல்லது மரபணு மாற்றத்தினால் பெரும் பலன்கள் உருவாகும் என்பதெல்லாம் வெற்று காகித அறிக்கைகளே, உண்மையில் பெரும் பலன் என்பதெல்லாம் இல்லை எல்லாம், பெரும் பன்னாட்டு விதை நிறுவனங்கள் சந்தைப்பிடிக்க கிளப்பிவிடும் கட்டுக்கதைகளே என்பது தெளிவாகி இருக்கும், இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது சந்தர்ப்பம் வாய்க்கும் போது மீண்டும் தொடர்வேன்!

(இவன திருத்தவே முடியாது போல ,இப்படி பெருசா எழுதி தலைய பிச்சுக்க வைக்கிறானே... அவ்வ்)

------------------------------

பின்குறிப்பு:

# இன்னும் பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை, பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் ,திருத்தம் செய்யப்படும்.

# சுட்டிகள் முதல் அனைத்தையும் முழுவதும் படித்தபின் , ஏதேனும் விவாதம் இருப்பின் உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம், முழுவதும் படிக்காமல் முன் முடிவுடன் விவாதம் செய்ய முற்படுவதை தவிர்க்கவும். அடியேன் விஞ்சானியெல்லாம் இல்லை, ஏதோ வாசிப்பின் வாயிலாக உருவான புரிதலை பகிர்ந்துக்கொண்டுள்ளேன், கருத்துப்பிழை, சொற்பிழை இருப்பின் எவ்வளவு இருக்கோ அவ்வளவு குறைச்சுக்கிட்டு கருத்து சொல்லலாம் அவ்வ்!

# மேலும் எமது முந்தைய விவசாயம் சார்ந்த இடுகைகளின் சுட்டியும் அளித்துள்ளேன் ,விருப்பம் இருப்பின் வாசிக்கவும்.

என்னோட இந்த விவசாயப்பதிவுகளையும் பாருங்க,




#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!

1) விவசாயி படும் பாடு-1

2)விவசாயி படும் பாடு-2

இந்தப்பதிவுகளையும் பார்க்கவும்.

1)பஞ்ச கவ்யம்

2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1

3)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2

4)நடவு எந்திரம்

5) ஒருங்கிணைந்த விவசாயம்
-------------------------------

தரவுகள்:

 சுட்டிகள் அனைத்தும் பதிவினூடாக அளிக்கப்பட்டுள்ளது , எனினும் உங்களின் மேலான பார்வைக்கு மீண்டும் பட்டியலிடப்படுகிறது.

# http://articles.timesofindia.indiatimes.com/2013-08-16/india/41416828_1_bt-cotton-seed-companies-bengal-desi

# http://articles.timesofindia.indiatimes.com/2011-05-17/nagpur/29551789_1_bt-cotton-seeds-price-hike-bg-ii

# http://articles.timesofindia.indiatimes.com/2002-04-29/hyderabad/27136416_1_bt-seed-bt-cotton-pushpa-m-bhargava

# http://articles.timesofindia.indiatimes.com/keyword/seed-companies

# http://articles.timesofindia.indiatimes.com/2012-06-02/hyderabad/31982969_1_bt-cotton-seed-ankur-seeds-seed-companies

# http://articles.timesofindia.indiatimes.com/2012-08-04/ranchi/33034499_1_protection-of-plant-varieties-claim-compensation-branch-office

# http://thealternative.in/beat/india-after-gandhi-monsanto-raj-bt-cotton/

# http://www.indianet.nl/cotssec2.html

# http://www.mindfully.org/Industry/2003/Monsanto-Unilever-Child-Labour17may03.htm

# http://www.globalissues.org/article/214/stress-on-the-environment-society-and-resources

# http://agrariancrisis.in/2012/06/28/pesticide-use-in-bt-cotton-dr-kesavraj-kranthi/

# http://www.ota.com/organic/environment/cotton_environment.html

# http://ejfoundation.org/sites/default/files/public/the_deadly_chemicals_in_cotton.pdf

# http://www.business-standard.com/article/markets/shortage-of-bt-cotton-seeds-may-hit-2011-12-production-able-111021500188_1.html

# http://www.seedbuzz.com/knowledge-center/article/impact-of-bt-cotton-seeds-on-indian-agriculture

# http://articles.economictimes.indiatimes.com/2012-06-11/news/32175116_1_cotton-seed-bollgard-ii-bt-cotton

# http://articles.timesofindia.indiatimes.com/2013-05-21/aurangabad/39417570_1_bt-cotton-seeds-seed-companies-farmers

# http://www.business-standard.com/article/markets/shortage-of-bt-cotton-seeds-may-hit-2011-12-production-able-111021500188_1.html

# http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/glut-triggers-price-war-among-bt-hybrid-cotton-seed-makers/article4686541.ece

http://www.thehindu.com/sci-tech/agriculture/article3222647.ece

மற்றும் நமது அபிமான "விக்கிப்பீடியா &  கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-----------------------------------------------------------------------

தமிழ்ப்புரட்சி வேந்தர் செயமோகர்!

$
0
0
(இவன் தமிழ் படிச்சா குளு..குளுனு இருக்கு ஹி...ஹி)


ஆசான் செயமோகரு பல மயிர்க்கூச்செறியும் உள்ளொளி புறப்பாடு  கிளப்பும் சமகால நவீன மாயதந்திர மெய்யியல், உபமெய்யியல் உட்ப்பொதிந்த இலக்கியம் படைக்கும் மாபெரும் இலக்கிய சமையல் கலைஞர் என்பதை மறுக்க இவ்வாழி சூழ் உலகில் யாருக்கும் திராணியோ தெம்போ இல்லை என்பதை நாத்திகத்தையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு ஆசானுக்காக ,சோட்டாணிக்கரை பகவதியம்மன் சாட்சியாக சூலத்துல தேங்கா உடைச்சு சாம வேதம் ஓதி உரத்துச்சொல்லக்கூட அடியேன் தயார்.

ஷ்ப்பா முடியல ... இப்பவே கண்ணக்கட்டுதேனு யாரும் ஓடிப்போயிராதிங்க, ஹி...ஹி எத்தினி நாளைக்கு தான் மோன்சான்டோ ,பவண்டோனு பேசிட்டு இருக்கிறது நாமளும் கொஞ்சம் எலக்கியம் பேசி ... எலக்கியவியாதியா மெட்டாமார்பாசிஸ் ஆகலாம்னு ஒரு அல்ப ஆசை தான் அவ்வ்!

சரிங்க்ணா நெம்ப டெங்க்ஸன் ஆவாம மேக்கொண்டு படிங்க்ணா...

 இங்கீலீப்பீசு பத்திரிக்க அச்சடிச்ச  இந்து அச்சாபீசு தமிலு வளக்கனே வேல மெனக்கெட்டு தமிலுல ஒரு பத்திரிக்கை அச்சடித்து விக்க ஆரம்பிச்சதும் ...தான் அவுங்க கொண்டையில சே மண்டையில ஒரு பலுப்பு எரிய ஆரம்பிச்சு இருக்கும் போல , தமில இங்கீலீப்பீசு எயுத்துல எழுதிக்கினு இருந்தா என்னாதுக்கு நாம தனியா தமிழு பத்திரிக்க அச்சடிக்க போறோம், ஆனா இந்த பொயப்பத்த தமிலு மக்க விடாம தமிலுளவே எயுதிக்கினு படிச்சிக்கினு இருக்கறதால தானே நமக்கு இம்புட்டு கஸ்டம்னு நினைச்சிருப்பாய்ங்க போல,  செய மோகர கூப்பிட்டு ...இந்த மாரி...இந்த மாரி ஒரு நெலமை அதனால நீங்க அந்த மாரி ...அந்த மாரி ஒரு கட்டுரைய எயுதிக்கொடுங்க ... செமத்தியா கவனிக்கிறோம்னு  சொல்லிருப்பாங்க போல ,ஆசான் ஆச்சே சொம்மாவே கெரகம் எடுத்து ஆடுவார் ... தி இந்து(தமிலு) வே கூப்டு சொன்னதும் டண்டனக்கா டனக்குனக்கானு ஒரு கெதக்களியே ஆடிப்புட்டாரு எயுத்துல :-))

மோன்சான்டோ பிடி பருத்தியை விட செயமோகன்டோ பிடி(வாத) தமிழ் பருத்தி ரொம்ப டேஞ்சரா கீதுப்பா , தமிலுக்கு என்னாத்துக்கு தனி எலுத்து அதாங்க் இங்லீப்பீசு கீதுல்ல அதுலவே எயுதிட்டு போலாம், இங்லீப்பீசுல 26 எயுத்து தான் கீது ஆனாங்காட்டி தமிலுல பாக்கச்சொல்லோ 247 எயுத்து வச்சு கொலையா கொல்லுறய்ங்க படிக்கிற பச்ச கொயந்தய்ங்க இன்னா பாடு படுது தெர்தாப்பா ...ஆக்காங் ஒனக்கு எங்கே தெர்ய போவுது நீ நாலு எயுத்து பட்சிருந்தா தானேனு கொமட்டுல குத்தி கும்டி அடுப்பு கணக்கா பொகையுறாருப்பா அவ்வ்!

மெட்ராசு தமில் பேசிக்கினு ,தஞ்சாவூர் -கடலூர் கலந்த தமிலுல எயுதிக்கினு ... நடுவால இங்கிலீப்பீசுல பீட்டர் வுட்டுக்கினு எம்புட்டு வேலைய நானு செய்ய வேண்டியதிருக்கு எனக்கே ரொம்ப குஷ்டமா ச்சே கஸ்டமாயிருக்குப்பா ...பேயாம ஞானும் ஆசான் செயமோகரு வழியில் சுலுவா இங்கிலீப்பீசு லெட்டரில் தமிலு எயுதினு போயிடலமானு ஆசயா இருக்குபா  அப்பாலிக்கா தி சோ கால்டு தமிலு வெறியர்கள் என்ன தமிலு எனத்துரோவினு சொல்லி கல்லக்கொண்டு எறிஞ்சா இன்னாப்பண்றதுனு நெனைச்சாலே அடிவவுத்துல தண்ணியில்லாம போவுது அவ்வ்!

எனக்கு இன்னா டவுட்டுன்னா ஆசான் செயமோகரு தமிலு நாட்ட விட மலையாளக்கரையில நெம்ப ஃபேமசாம்...இதெப்படி ஒனக்கு தெரியும்னுலாம் கேட்கப்படாது அத அவரே சொல்லிக்கீரார் அவ்வ்!

ஆகவே மகாசனங்களே எனுக்கு ஒன் இஸ்மால் டவுட்டு வந்துடுச்சு, ஆசான் இந்த அரிய தத்துவத்தை ஏன் மலையாள மொழில செய்ய சொல்லி மலையாளப்பத்திரிக்கையில எயுதுலனு ?

ஹி...ஹி மலையாளத்துல கண்டியும் எய்தி இருந்தார்னு வச்சிக்கோ இன்நேரம் கஞ்சிக்காச்சி கயுவி ஊத்தியிருப்பாங்க :-))

செரி மலயாளத்துல எயுதினாத்தான் கஞ்சிக்காச்சுவாங்க ,ஆசான் தான் ஆறுமாசத்துக்கு ஒருக்கா டெலிபோன் டைரக்டரி போல பொஸ்தவம் எயுதுறாரே அதையாச்சும் இப்பிடி பொரட்சியா இங்கிலீப்பிசு லெட்டரில் எயுதி முன்னோட்டங்காட்டியிருக்கலாம்ல.... சும்மாவா அப்பிடி ...டெலிபோன் கும்பெனில கம்பி கட்டினவர் ஆச்சே!

 ஹி...ஹி அப்பிடிலாம் எயுதுனா இப்ப கெடைக்கிற லைப்ரரி ஆர்டர் 1500 பொஸ்தவுமும் கேண்ஜலாகிடும்னு ஆசானுக்கு தெர்யும்ல...கூடவே சுத்திட்டிருக்க கைப்புள்ளிங்க கூட ஒரு புக்கும் வாங்காது... அப்பாலிக்கா சுண்டல் மடிக்க எடக்கு தான் போடனும்னு தெரிஞ்சு தான் உசாரா நமக்கு அட்வைசு கொடுக்கார்... சொல்லுதல் யார்க்கும் எளியவாம்னு தாடிக்கார தாத்தா அன்னிக்கே இதத்தான் சொல்லிட்டு செலையா நிக்கார் குமரிலனு ...நாவர்க்கோயில்க்காரருக்கு தெரியாமலா இருக்கும் அவ்வ்!

செரிப்போவட்டும் காசுக்கு விக்குற புக்குல எல்லாம் வெசப்பரிச்ச செய்ய முடியாது ,பொஸ்தவ கும்பெனி கோச்சுக்கும்னு வச்சிக்கலாம்.. எணையத்துல சொம்மா எயுதுக்கினு கீறார் அதுலவாச்சும் இதமாரி பண்ணிக்கீறாரானு பார்த்தா அதுவும் இல்ல... ஆசானாலேயே செய்ய  முடியாத, புடிக்காத ஒன்ன எங்கள மாரி அரடிக்கெட்டுக்கள செஞ்சு பாக்க சொல்றிங்களே ,இது எந்த ஊரு நாயம்?

இதுல கெல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணக்கா ... தமில் ஆராய்ச்சிலாம் செஞ்சி ... இப்படி எயுதினா சரியாத்தான் வருங்கீறார்... அத பாருங்களேன்..

//மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது.//

நெம்ப நல்லா ஆய்ந்துக்கீறார்..எறா ஆயுறவங்க கூட இம்புட்டு சொத்தமா சோலிய செய்யமாட்டாங்க அவ்வ்!

"க"என ஒலி வர எளமையிலே பழக்குகிறோமாம், தமிலே படிக்காம தமிலுல எய்தினா இப்புடித்தான் தோனும், தமிலு ஒரு எலக்கண மொழி... எல்லாத்துக்கும் எலக்கணம் வச்சிக்கீது... எண் எலக்கணம்,எழுத்திலக்கணம், புணர்ச்சி விதி னு ஏகப்பட்டது கீது... புணர்ச்சிவிதினா வேறதெவும் நெனைச்சிப்புடாதிங்க அப்பாலிக்க அல்டிமேட் கதை கணக்காகிடும் அவ்வ்!

நம்ம தமிலுல ஒரு எழுத்து உருவாகிறதுக்கு கூட எலக்கணம் இருக்கு, இப்பிடி ...இப்பிடினு சொல்லிக்கீறாங்க...

க்+அ = க னு பிரிச்சு காட்டி ..."க"இப்படி தான் வருதுனு சொல்லி "க"ஒலியை உள்வாங்க வைப்பாங்கோ... சொம்மா "A"தான் "A" , A for Apple னு சொல்லிட்டு எயுத்த சொல்லித்தர மாட்டாங்கோ.

இங்கிலீப்பீசுல தமில் போல சாப்ஜாடா அப்படி சொல்லித்தரவும் வய்யே இல்ல, அதுல எலுத்தோட "ஒலி உச்சரிப்புக்கும்"சொல்லோட ஒலி உச்சரிப்புக்குமே தொடர்பேயில்லாம புட்டுக்கினு நிக்கும்.

"CAR" = கார்(kaar)

"CARE"=கேர் (kaer)

"CA"என்ற ரெண்டெலுத்து ஒரே மாதிரி அடுத்தடுத்து ரெண்டு சொல்லிலும் வந்தாலும் ஒரெடுத்துல "கார்"னும் இன்னொரு எட்த்தில "கேர்'னும் படிக்கணும் , இப்படி "ஒலி உச்சரிப்பு"எப்படி மாறுதுனு அடையாளங்காட்ட ஒரு சுட்டி ,சட்டினு எதுவும் உடனே சிக்காது ...படிக்கச்சொல்லவே இப்பிடி..இப்பிடி சொல்லவோணோம்னு "மண்டையில புகுத்தி "வச்சத்தான் உண்டு.

அதான் கடசில ஒரு "ஈ"உக்காந்திருக்கே அத வச்சு ஒலி உச்சரிப்பு அடையாளம் பார்க்கலாம்னு சொன்னா மன்டையில போடுவேன் ... "ஈ"கடசீல தான கீது அது எப்படி முதல்ல வரச்சொல்ல ஒலி மாறுபாட காட்டும்?

ஏன்னா தமிலு எழுத்தொலிக்கு முக்கியம் கொடுக்க மொழி, இங்கிலீப்பீசு சொல் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, ஏதோ ஒரு  இஸ்பெல்லிங்க கூட எயுதிட்டு இத இப்படிக்கா உச்சரிக்கணும்னு வாத்தியாருங்க நம்மள "மனப்பாடம்"தான் செய்ய வைக்க முடியும், ஒலித்திரிபுக்கு எலுத்து அடிப்படையில காரணமே சொல்ல முடியாது.

அதனால தான் நம்மாளுங்க  இங்கிலிப்பீசு பேசச்சொல்லோ "புரநவுண்சியேஷன்"ல தப்பு பண்ணிடுறது,ஆனா கரிக்ட்டா இஸ்பெல்லிங்க் எல்லாம் எயுதிடுவாங்க.

ஹி...ஹி.. இஸ்பெல்லிங்க்,இஸ்கோல் ..ஐஸ்லேன்ட் எல்லாம் இப்படிக்கா "S"எஸ்னு சொல்லி ஒலிய கொடுக்கபோய் வரது. வெள்ளக்காரய்ங்க படிக்க சொல்ல இங்கிலீப்பீசுல எழுத்தின் ஒலி வடிவத்தை பின் தள்ளிட்டு "சொல்லின்"ஒலி வடிவம்னு "கட்டமைச்சு"சொல்லிக்கொடுத்திடுவாங்க எனவே அவங்களுக்கு அது எளிது,நமக்கு தான் நொறத்தள்ளும் அவ்வ்!

அதனால ஆசான் சொல்லுறாப்போல இங்கிலீப்பீசு லெட்டரில் எலுதினா ரொம்ப சுலுவாகிடும் என்பதல்லாம் கப்சா!

எலுத்துக்குனு இல்ல, ரெண்டு சொல்லு பக்கம் பக்கமா வந்து ஜாயின்ட் அடிக்க சொல்லக்கூட இப்படி ஒன்னா ஒட்டி இன்னொரு எலுத்தா மாறி அதுக்கு ஏத்தாப்போல உச்சரிக்கிற "புணர்ச்சி"விதிலாம் தமிலுல இருக்கு, இங்கிலீப்பீசுல அப்படிலாம் இல்லாம எல்லா எலுத்தும் தனியா நிக்கும் ,ஆனா சேத்து சொல்லறப்போ இன்னொரு ஒலி வடிவதை நம்ம மனப்பாடம் செய்யனும் ... அதாவது தமிலுல ஒவ்வொரு எலுத்தா எலுத்துக்கூட்டி அதே ஒலில சொல்லிக்கிட்டே ஒரு சொல்ல சொல்லி முடிச்சாலும் "சொல்லின் ஒலி வடிவமும்"அதாவே வரும்.

அ+ம்+மா = அம்மா +இ+ங்+கே =இங்கே + வா +வா ,

பிரிச்சு சொல்லிப்படிச்சுட்டு அப்படியே ,

சேர்த்து படிச்சு பாருங்க = அம்மா இங்கே வா வா என அயகா சொல்ல முடியும்!

எலுத்தா படிக்கும் போது சொல்லுற அதே ஒலில சொல்லாவும் சொல்லலாம், எனவே புரநவுண்சியேஷன் கொயப்பமே வராது.

ஆனால் இங்கிலீப்பீசுல அப்படிலாம் இல்ல எல்லா எலுத்தும் தனித்தனியா நிக்கும், எலுத்தெலுத்தா சொல்லிட்டு அதே ஒலில சொல்லலாம்னு பார்த்தா சொல்ல முடியாது அவ்வ்!

புள்ளி வச்ச எலுத்து புள்ளி வைக்காத எலுத்து , குறில் ,நெடில் என எதுமே கெடையாது எல்லாம் இப்படித்தான் சொல்லனும்னு "சொல்லை"சொல்லும் போதே"திணிக்கனும்"அவ்வ்! இப்படி இதான் உண்மை,அப்படித்தான் சொல்லணும் அப்படியே ஏத்துக்கிட்டு படினு சொல்லுறது "AXIOM" * என்ற வகையில நம் மண்டையில ஏத்துறதாகும்.

*"An axiom, or postulate, is a premise or starting point of reasoning. As classically conceived, an axiom is a premise so evident as to be accepted as true without controversy"

புணர்ச்சி,உணர்ச்சி... ஒரு மண்ணும் கெடையாது... சொல்லித்தரவங்க தான் எல்லாத்தையும் சொல்லித்தரணும் அது எப்படினு கேள்விக்கேட்டா விளக்கமே இருக்காது. கூட்டு குடும்பமாக சொல்லில் தான் எல்லாத்தையும் வச்சிருப்பாங்க, எழுதுக்குனு ஒன்னியும் இல்லை.

தமிலு எழுத்து, எண் என எல்லாம் பிரிச்சு மேய்ஞ்சி எலக்கணம் போட்டு எளிதாக உள்வாங்க வழி செய்த மொழி ,இது போல ஒலகத்துலவே வெகு சில மொழிங்க தான் இருக்கு.

சீன,சப்பானிய மொழிலாம் படங்காட்டி விளக்கும் மொழி ,அதாவது ரொம்ப எலுத்துக்குனு மெனக்கெடுவதேயில்லை, வூடுனு எழுதினா வூடு படத்தையே சின்னதா வரிஞ்சாப்போல எயுதிடுவாங்க அவ்வ்!

நம்ம தமிலு மட்டும் இப்படி பிரிச்சி மேய்ஞ்சி வச்சிருக்காங்க என்றால் அந்த அளவுக்கு அந்தக்காலத்திலயே ஆய்ந்து அடிப்படை அலகா பிரிச்சு எப்படி வேண்டுமானாலும் "வரி வடிவில்"கொண்டு வர வசதியாக இருக்கத்தான்... அதனால தான் தமிலுல முன்னால பின்னால எப்படி வேண்டுமானாலும் வார்த்தைய தூக்கிப்போட்டு ஒரே மீனிங்க கொண்டு வரது ரொம்ப சுலுவா செய்ய முடியும்.

இதனால தான் நம்ம தமிலுல 2000 வருசத்துக்கு முன்னமே எலக்கியம் எயுதிக்கீறாங்க அதுவும் எப்புடி ... ஓசை நயம் இருக்கும், ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் இயைபு இருக்கும், சந்தம் இருக்கும், ஒரு இசை போல ஒலிக்கும், கவிதை போல இனிக்கும், ஆனால் ஆழமான பொருளையும் தரும்.

மத்த மொழிலவும் 2000 வருசம் முந்திய படைப்புகள் இருக்கலாம் ஆனால் அவற்றில் எல்லாம் இத்தப்போல மொழிக்கட்டமைப்பு கூறுகள் இருக்காது சொம்மா ஒரு கதைய சொல்லிட்டு போவும்.

சொம்மாவா சொன்னார் பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்"னு!

இப்படி எலுத்துக்குலாம் எலக்கணம் போட்டு ,ஒரு மொழியில என்னவெல்லாம் செப்படி வித்தைக்காட்டலாமோ அதுக்குலாம் வழி வாய்க்கா செஞ்சி வச்சிட்டு 2000 வர்சம் முன்னமே நம்ம முன்னோர்கள் போயிட்டாங்க, இப்போ 13 வருசமா கம்பியூட்டர்ல தமில இங்கிலிபீசுல தட்டுறேன் எனக்கு ஒன்னும் வித்தியாசமே தெரியலைனு சொல்லுறாரே ஆசான், அத டிரான்ஸ்லிட்டரேஷன் மொழிப்பெயர்ப்புக்கு ஒரு ஒரு எலுத்துக்கும் என்ன மாதிரி எலுத்துனு எவனோ வடிவமைச்சதால தானே,

இங்கிலீபீசுல எல்லா தமிலு எழுத்தின் ஒலிக்கும் "இங்கிலீப்பீசு லெட்டர் காம்பினேஷன்"இல்லைனு இன்னும் கூடவா தெரிஞ்சிக்கலை ,அப்படி இல்லாத சொல்லுக்குலாம் சும்மா குன்சா இப்படி எலுதினா அப்படி "டிரான்சிலிட்டரேட் செய்யனும்"னு நம்மாளுங்க தான் "டிசைன்"செய்திருக்காங்க, சும்மா "அம்மா இங்கே வா வா"னு இருக்கிறத இங்கிலீபீசுல எலுதினா ஒலி எப்படி வருதோ அப்படியே தமிலுலவும் வருதுன்னு அடிச்சு வுடக்கூடாது.

ஹி...ஹி அடுத்த வரி "ஆசை முத்தம் தா தா"னு ஏன் எயுதாம போனார்?  அவருங்கண்டியும் எயுதி இருந்தார் இன்னேரம் ,டப்பா டான்ஸ் ஆடியிருக்கும் ,அவ்வ்!

"ஏகபோகம்னு"இங்கிலீபீசுல எலுதினா அப்படியே தமில் ஒலி வடிவத்துல தான் இருக்கானு செக் செய்து சொல்லுங்க பார்ப்போம் :-))

நம்மாளுங்க இப்படி இங்லீப்பீசு லெட்டர சேர்த்துக்க , நீக்கிக்க ,அப்பாலிக்க டைப்படிச்சா அதுக்கு இப்படி தமில் சொல்லு வராப்போல மென்பொருள் எலுதிட்டோம்னு சொல்லிக்கொடுத்தது தப்பா போச்சு அவ்வ்!

#//பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா?//

ஹி...ஹி அப்புறம் , தமிழுல நெடில் வரச்சொல்ல ரெண்டு "a"போடுறாப்போல car க்கு ரெண்டு "a" போட்டு "kaar"னு எலுதி இங்கிலீப்பீசு டீச்சர்க்கிட்டே ஒதைத்தான் வாங்குவான்.

# ஆங்கிலமே பிராதன மொழியாக புழங்கி வரும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட மாணவர்கள் இன்னொரு மொழிக்கற்க வேண்டும் என "அறிவுறுத்தி"மதிப்பெண் கிரெடிட் கொடுக்கிறார்கள், இதனால் அமெரிக்க குழந்தைகள், ஸ்பானிஷ்,,சீனம், ஃபிரெஞ்ச் என எடுத்துப்படிக்கவும் செய்கிறார்கள், தமிழில் ஆர்வம் உள்ள தமிழ்ப்பெற்றோர்கள் வீட்டில் தமிழும் பேசிய மாரி ஆச்சு குழந்தைக்கு அந்நிய மொழி கிரெடிட் வாங்கிக்கொடுத்த மாரியும் ஆச்சுனு தமிழையே பள்ளியில் அந்நிய மொழி(இரண்டாவது மொழி) என பதியவும் செய்கிறார்கள்.

அப்போ வெள்ளைக்காரனுக்கு தெரியதா ரெண்டு மொழி படிக்க வச்சா குழந்தைகள் கஷ்டப்படும்னு? உண்மையில் ரெண்டு மொழி படிச்சா மொழி ஒப்பீட்டின் மூலம் மொழிக்கற்றல் திறன் கூடவே செய்யும்!

அவர்களை விட எல்லாம் பெரியவர் நம்ம ஆசான் செயமோகர் ஏன்னா அவர் ஒரு வில்லேஜ் மொழிஞானி :-))

# # தமிழே படிக்காம,தமிழ் எழுத்துருவே தெரியாம,தமிழ்வாசிக்க தெரியாத ஒரு தலைமுறை ஒன்னு உருவாகிட்டு இருக்கு,அவங்களை எல்லாம் வாசிக்க வைக்கனும்னா ,வருங்காலத்திலும் தமிழில் நல்ல நூல்கள் வரவேண்டுமெனில் 'தமிங்கிலீஷ்"எழுத்துரு தான் அருமருந்து என்கிறார்,

தமிழே வாசிக்கத்தெரியாதவங்களுக்கு தமிழ் வொக்காபுலரி (சொல்லறிவு)மட்டும் இருக்குமா?

பேச்சு வழக்கில் சில நூறு தமிழ்ச்சொற்கள் மட்டுமே பயன்ப்படுத்திட்டு இருப்பாங்க, வாசிக்கும் போது தான் பலப்புதிய சொற்களும் அறிமுகம் ஆகும், தமிழ வாசிச்சுட்டு இருக்கும் நம்ம மக்களுக்கே திருக்குறள் புரிய ஒரு விளக்க உரைத்தேவைப்படுது, காரணம் என்னனா நாம மொழியில இருக்க பல சொற்களை பயன்ப்படுத்தாம விட்டதால் அதன் பொருள் என்னனு தெரியாம போயிடுச்சு, தமிழ் எழுத படிக்க  தெரிஞ்சவங்க எல்லாம் அதனால தான் பல சங்க இலக்கியங்கள், ஏன் சில நூற்றாண்டுக்கு முன் வந்த இலக்கியங்கள் கூட படிச்சு புரிஞ்சுக்க கஷ்டப்படுறாங்க., தமிழ் நல்லா தெரிந்தவங்களோட நிலைமையே இதான், அப்படி இருக்கும் போது தமிழ் அட்சர சுத்தமாக தெரியாதவங்க எப்படி 'டிரான்ஸ்லிட்டரேஷனில்"இருந்தால் மட்டும் படிச்சு புரிஞ்சுப்பாங்களா?, ஒவ்வொரு சொல்லுக்கும் தமிழ் - தமிழ் அகராதி தேவைப்படும், அப்படி மெனக்கெட்டு படிப்பாங்களா என்ன?

ஆங்கிலத்தில் இப்படி ஏகப்பட மொழிக்கலப்பு இருப்பதால் ,ஆங்கில எழுத்துருக்களை வாசிக்க தெரிஞ்சாலும் பொருள் புரிய ஆங்கில அகராதி தேவைப்படுது, அமெரிக்கன், பிரிட்டீஷ் என அம்மக்களுக்கும் அகராதி தேவைப்படுது, நாம் பெரும்பாலும் தமிழ் -தமிழ் அகராதி இல்லாமலே சமகால தமிழ் இலக்கிய படைப்புகளை படிச்சிடுவோம், அப்படி சமகால தமிழில் புரியிறாப்போல எழுதினால் மட்டுமே போணியாகும் ,அத விட்டுட்டு யாருக்கும் புரியாம எழுதிட்டு ,எழுத்துரு மாற்றினால் எல்லாரும் வாசிப்பாங்கனு சொல்வதெல்லாம் ,மொழியின் பயன்ப்பாட்டுவியல் புரியாத கத்துக்குட்டித்தனம்!

எனவே தமிழே படிக்காத,தமிழ் 'வோகாபுலரி(சொல்லறிவு)"இல்லாத ஒருத்தன் அகராதி வச்சு "டிரான்ஸ்லிட்டரேஷன் தமிழ்"படைப்பை  படிச்சு புரிஞ்சுக்க விரும்ப மாட்டான் ,அதுக்கு பேசாம நேரடியாக நல்லா புரியுற இங்கிலீஷ் புக்க படிக்கலாம்னு போயிடுவான் அவ்வ்! இப்போ ஆசான் புக்கு கூட சரியா விக்காம போக காரணம் மக்களுக்கு தமிழ் வாசிக்க மறந்து போனதால் இல்லை, என்னா சொல்ல வரார்னே பிரியலை, அதுக்கு ஒருத்தங்க "அருஞ்சொற்பொருள்"விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு அவ்வ்!


#//இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். தென்னக மொழிகளைப் பிரிப்பது அவற்றின் வேறுபட்ட எழுத்துருக்கள்தான். மற்றபடி அவை 70% ஒன்றே.//

மிகச்சில நாட்களில் என்றால் ஒரு வாரம் ,பத்துநாள் போதுமா?

ஆசானுக்கு இங்கிலீப்பீசு நல்லாதெரியும் தானே ,அப்போ ஃபிரென்ச்,ஜெர்மன் ,ஸ்பானிஷ், எல்லாம் ஒரு சில நாட்களில் வாசிக்க கத்து இருக்கலாமே அவ்வ்!

ஆசான் ஆசைப்படுறா போல தமிழ் வரிவடிவம் தேவையில்லைனு நம்ம முன்னோர்களும் நெனைச்சிருந்தால் இன்னேரம் எல்லாரும் தேவநகரில இந்திப்போல தான் எயுதிக்கினு இருந்திருப்போம், ஒரு வேளை ஆரம்பத்துல எல்லாம் தேவநகரில எயுதுங்க, இந்திய மொழிகள் பல்வேறு இருந்தாலும் எல்லாம் வாசிக்க பழகிடும், மொழி வழியா இணைஞ்சி ஒருங்கிணைந்த அகன்ற பாரதம் உருவாகிடும்னு  சொல்ல தான்  ஆசைப்பட்டிருப்பாரோனு நினைக்கிறேன் ,ஏற்கனவே இந்துத்வா நாத்தம் அதிகம் அடிக்குதுனு பொலந்துக்கிட்டு இருக்காங்க எனவே பேசாம இங்கிலீப்பீசுனு சொல்லி ஆரம்பிப்போம் எதுக்கு அன்னிய மொழியின் வரிவடிவம்னு சொல்லிட்டு எவனாவது டீவில விவாதம் ஆரம்பிச்சு கூப்பிடுவாங்க  அங்கே போய் அப்போ சுதேசமான மொழி தேவநகரி அதை வச்சிக்கிட்டா என்னனு  திரிய பத்த வைக்கலாம்னு ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருப்பார் ஏமான் :-))
------------------------

இந்திய மொழிகள் அந்நிய தாக்கத்தினை எப்படி சமாளித்தது?

மலேசியாவில் , லத்தின்(ஆங்கில) எழுத்து வடிவில் மலாய் மொழியை எழுதுகிறார்கள் ,அதே போல தமிழில் செய்தால் என்ன எனவும் ஆசான் கேட்கிறார்,அதற்கு மலேசிய வரலாறும் கொஞ்சம் பார்க்க வேண்டும்,

மலேசியாவை எப்படி ஆங்கிலேயர்கள் பிடித்தார்கள் என்பதை விளக்கும் ஒரு வரலாற்று நூல், சிங்கப்பூரை நிர்மாணம் செய்தவரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம்,

(சிங்கப்பூரை உருவாக்கிய தாமஸ் ஸ்டாம்ஃபோர்ட் ரேபேல்ஸ்)

அந்நூல்,

Sir Thomas Stamford Raffles
Kt., LL.D., F.R.S.
Founder of Singapore
1819

By
J. A. Bethune Cook
Author of " Sunny Singapore,"
" Apa Suka, Tuan,"

மலேயா(மலாக்கா) தீபக்கற்பத்தில் அப்பொழுது பெரும்பாலும் வசித்தவர்கள் ,இந்து, புத்தமத பழங்குடியின மக்களே, அவர்களில் பட்டாக்கா பகுதியை சார்ந்த சில இனக்குழுக்களுக்கு நரமாமிசம் சாப்பிடும் வழக்கு கூட இருந்துள்ளது, இப்பொழுது மலேசியா சிங்கப்பூரில் இருப்பவர்கள் எல்லாரும் பூர்வீக மக்களே அல்ல, அக்காலத்தில் பழங்குடியின மக்கள் பலரை கொன்றுவிட்டு சீன வழி வந்தவர்களை குடியேற்றினார்கள்,அப்படி குடியேற்றப்பட்டவர்களில் இந்தியர்களும் அடக்கம்.

முதலில் உள்ள புகுந்தது போர்ச்சுகீசியர்கள் தான் சுமார் 50 பேரை வச்சிக்கிட்டே ,கொஞ்சம் இடங்கொடுங்க வியாபாரம் செய்துட்டு போயிடுவோம்னு சொல்லிட்டு முகாம் போட்டு  ,நைட் கோட்டை சுவர் ஏறிக்குதித்து எல்லாரையும் கொன்று மலேசியாவை
(மலாக்கா) புடிச்ச கதை தெரிய வரும்:-((

கம்போடியாவை ஆண்ட ஶ்ரீவிஜயா வழிவந்த மன்னர்கள் தான் மலேயாவை ஆண்டது, அவனை ராஜேந்திரச்சோழன் வென்றதுலாம் வெள்ளைக்கரன் வரும்  முன்னரே நடந்தது, அப்போவே இந்து மதம்,புத்த மதம் பரவி இருந்தது, இடத்திற்கு ஏற்ப ,pallava grantham,bali,brahmi,malay,ஜரவானிஸ்,சீனம் கலந்து பேசிக்கொண்டிருந்தார்கள், எழுத பெரும்பாலும் பல்லவ கிரந்தம், பிரம்மி ,native Rencong script,வடிவே பயன்ப்பாட்டில் இருந்தது.,பின்னர் டச்சு மற்றும் வெள்ளையர் காலனி அமைத்து ,இந்திய &சீனர்களை,குடியேற்றி இன்னும் பல்குழு இனமக்களாக மாற்றிய  நிலையில்,வெள்ளையருக்கு முன்னரே இஸ்லாமும் உள்ள புகுந்திருந்தாலும், வெள்ளையர்களின் சமகாலத்தில் நன்கு பரவி  ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இஸ்லாமிய பரவலின் போது அரபிய எழுத்தில் மலாய் மொழியை எழுதிய முறைக்கு jawi என்று பெயர் .மக்களிடையே மத மற்றும் இன அடிப்படையில் ஒற்றுமை இல்லாத நிலையில் வெள்ளைக்காரன் எல்லாத்திலவும் ஆங்கிலம் புகுத்தி ,லிபிலவும் ஆங்கிலம் புகுத்திட்டான். இப்பவும் மலேசியாவில் அரபி வடிவ ஜாவியும் புழக்கத்தில் உள்ளது, தேர்வுகளையும் அம்மொழியில் எழுதலாம்.

இலத்தின் எழுத்து ஆதிக்கம் செலுத்த காரணம் எந்த இனக்குழுவோட மொழியின் லிபியையும் முன்னிலைப்படுத்த மற்ற இனக்குழுக்கள் விரும்பாததே. மேலும் மலேசியாவில் பூர்வீக மொழியில் பெரியளவு இலக்கியம் ,கல்விலாம் அப்போ வளவே இல்லை, வெள்ளைக்காரன் காலத்தில் தான் நாடே முழுசா உருவாச்சு எனவே ,வெள்ளைக்காரன் என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டார்கள்,இந்தியாவில் அப்படியில்லையே!

அதக்காலத்தில இந்தப்பக்கம் பர்மாவில இருந்து மலேயா,சிங்கப்பூர், ஜாவா,சுமத்தரா, வியட்நாம்,கம்போடியா என எல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமா மலாக்கா தீவுக்கூட்டம்னு தான் குறிப்பிட்டார்கள், மொத்தமா 20 லட்சம் மக்கள் தொகை தான்,காலனி ஆட்சி அமைந்து ஓரளவு ,நவீன மலேசியா,சிங்கப்பூர் உருவான பின் மக்கள் தொகை வெறும் 100 ஆண்டுகளில் வேகமா வளர்ந்து 3.5 கோடி ஆச்சாம்,  ஆனால் இந்தியாவில வெள்ளைக்காரன் வரும் போதே கோடிக்கணக்கில் மக்களும், பல மொழிகளும்,அதுக்கு இலக்கணமும் இருந்துச்சு.எனவே ஆட்சிப்புடிக்க வந்தவர்களால் ரொம்ப ஆதிக்கம் செலுத்தி மாற்ற முடியலை,மொழி வளமும் வளர்ச்சியும் இல்லாத மலாய் மொழி  ஆங்கில எழுத்துருக்கு மாறியதை  உதாரணம் காட்டி பழமையான   தமிழை இப்போ மாற்றஞ்செய்ய துடிக்கிறார் ஆசான் அவ்வ்.

தமிழ் மொழி என்று இல்லை எந்த இந்திய மொழியையும் வெள்ளைக்காரர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை, காரணம் பெரும்பாலான மக்களுக்கு அக்காலத்திலேயே வட்டார மொழி அறிவு பெருகி இருந்தது,மேலும் நிர்வாகமும் மொழி சார்ந்து இருந்தது. மேலும் வளமான இலக்கிய் வளம், ஏன் அறிவியல் நூல்களுமே உண்டு,பூர்வீக மொழி கல்வி கட்டமைப்பு எல்லாம் இருந்தது. உலகின் மிக பழமையான பல்கலைகழகமே நாளந்தாவில் இருந்தது என்னும் போது இந்தியாவில் எப்படி வெள்ளைக்காரன் லிபிய புகுத்த முடியும்?

மிக நீண்ட காலம் ஆண்ட முகமதிய ஆட்சியாளர்களாலேயே இந்திய முழுக்க "அரபிய "லிபிய கொண்டு வர முடியவில்லை.  நிர்வாக மொழி என அரண்மனையில் பாரசீகமும் மக்களிடையே அந்தந்த வட்டார மொழியுமே செல்லுபடியாச்சு.

இதற்கு மிக முக்கியமான காரணம் என்னவெனில் இந்திய மக்களுக்கு மொழி,இனம் ,மதம் என்றால் கொஞ்சம் பெருமிதம் உண்டு, எனவே தன்மானம் பொத்துக்கிட்டு வந்துடும், என்ன தான் அடிமையா இருந்தாலும் எப்படி அதுல இன்னொருத்தன் கைய வைக்கலாம்னு கிளம்பிடுவாங்க, இல்லைனா இந்தி திணிப்புனு சொல்லி எல்லாம் ஆட்சிய புடிக்க முடியுமா?

இது ஏதோ தென்னாட்டுல நடக்கிற கூத்து,நம்மாட்கள் தான் உணர்ச்சி வசப்படுறாங்கனுலாம் சொல்லிட முடியாது, காந்தி ,தீவிரமாக மேற்கத்திய கல்வியை எதிர்த்தும்,பலாகங்காதர திலகர்  மத உணர்வை முன்னிறுத்தி பிள்ளையார் கையில தூக்கிட்டு மொழி, இனம்,மத உணர்வை  பயன்ப்படுத்தி தான் வெள்ளையனை எதிர்த்து போராட மக்களை திரட்டினாங்க, ஆனால் என்னமோ அவங்க எல்லாம் அரசியல் போராட்டம் மட்டுமே நடத்தி சாதிச்சுட்டதாவும், நாம தான் மொழி வெறியர்களாகிட்டாப்போலவும் முற்போக்கு இலக்கியவியாதிகள் கற்பித்துக்கொண்டு ,ஆங்கிலத்தில் எழுத வைப்பதை புரட்சினு நினைக்கிறாங்க அவ்வ்
---------------------------------------

தமிங்கிலீஷ் தட்டச்சு எளிதாக்குகிறதா தமிழை?


(Tamil-99 keyboard layout)

நேரடியாக இக்கேள்விக்கு பதில் எளிதாக்குகிறது எனலாம்,அப்புறம் என்ன அதையே பயன்ப்படுத்துகிறோம்,அதையே "கற்றலுக்கும்"எழுத்துருவாக'பயன்ப்படுத்திவிட்டு போய்விடலாமே என செயமோகத்தனமாக முடிவுக்கு வருவதற்கு முன்னர் சற்றே சிந்திக்க சில குறிப்புகள்,

ammaa= அம்மா ,எனஃபொனடிக்அடிப்படையில் தட்டச்சு செய்வதை டிரான்ஸ்லிட்டரேஷன் தட்டச்சு என்பார்கள், ஆனால் இம்முறை எளிதாக தெரிந்தாலும் ,நமது உழைப்பை உறிஞ்சக்கூடியது,
எப்படி எனில் நேரடி தமிழ் விசைப்பலகை இருக்குமெனில் 3 விசை அழுத்தங்களில் "அ+ம்+மா"என முடிக்கும் வேலைக்கு , "a+m+m+a+a"என அடிக்க "5"விசை அழுத்தங்களை நாம் கொடுக்க வேண்டியதிருக்கு.

எனவே இம்முறை மிகச்சிறிய  தமிழ் தட்டச்சு வேலைக்கு தான் பயன்ப்படும்,  பின்நவீன எலக்கியவியாதிகள் போல சுமார் 500 பக்கங்கள் தட்டச்சு செய்ய வேண்டுமெனில் ... தமிங்கிலீஷில் தட்டச்சு செய்வதற்குள் விரல் எல்லாம் ஓரங்க்குலம் தேய்ந்து போனாலும் போய்விடக்கூடும் அவ்வ்!

தொழில்முறையில் தமிழ் தட்டச்சு செய்ய TAM,TAB,TASCI, போன்ற விசைப்பலகை லே அவுட்டினைத்தான் பயன்ப்படுத்துகிறார்கள், இவற்றில் பல "கீ"களுக்கு நேரடியாக தமிழ்ச்சொற்கள் ஒதுக்கப்பட்டிருக்கும், எனவே "க"த என எல்லாம் அடிக்க தமிங்கிலீஷ் தட்டச்சு போல ரெண்டு மூன்று ஆங்கில எழுத்தை அடிச்சு நேரம் செலவிட தேவையிருக்காது,மேலும் SHIFT, CTRL  போன்றவற்றை எல்லா எழுத்துக்கும் புடிச்சு அமுக்கிட்டிருக்க வேண்டாம். எனவே நேரமும் ,உழைப்பும் மிச்சம் ஆகும்.

அதாவது இப்பொழுது தமிங்கிலீஷில் தட்டச்சு செய்யும் நாம எல்லாம் சுமார் 100 எழுத்துக்கள் கொண்ட ஒரு தமிழ் பத்தியை தட்டச்ச 200-300 ஆங்கில எழுத்துக்களை அமுக்கிக்கொண்டிருக்கிறோம் அவ்வ்!

இது போல ஏகப்பட்ட எழுத்துக்களை அமுக்கி ஒரு படைப்பை உருவாகுவதற்குள் அயர்ச்சி அடைந்து ,ஸ்ஸ்ப்பாடா என நொறைத்தள்ளிடும், இதெல்லாம் பொழுதுப்போக்காக தமிழில் விளையாடுபவர்களுக்கு தான் பயன்ப்படும், நீண்ட காலப்பயன்ப்பாட்டுக்கு 'தலைவலி போய் திருகு வலியை கொடுக்க வல்ல தட்டச்சு என்பதே உண்மை.

தொழில்முறை தமிழ் தட்டச்சு போன்று மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து விசைப்பலகை அழுத்தல்களை குறைத்து தட்டச்சு செய்வதை எளிமையாக்க ஒருங்குறியில் உருவான ஒரு விசைப்பலகை அமைப்பு இல்லையா எனக்கேட்கலாம், இருக்கு!

உண்மையான இணையத்தமிழ் ஆர்வலகள் பலர் கூடி"தமிழ்-99"என ஒரு தமிழ்விசைப்பலகை அமைப்பினை உருவாக்கியுள்ளார்கள், அதுவே எளிய ,சிறந்த கணினித்தமிழ் உள்ளீடு அமைப்பாகும். இம்முறையில் எழுத்துக்கள் உருவாக்கம் தமிழ் எழுத்திலக்கண முறைப்படியே அமையும்,தமிழ் எழுத்துக்கள் ,தமிழ் எழுத்துக்களாகவே மனதில் பதியும்,எனவே நமக்கும் தமிழ் அறிவு மட்டுப்படாது.

தமிங்கீலீஷ் தட்டச்சு எளிமையாக ,வேகமாக தட்டச்சு செய்ய உதவுவது போல தெரிவதே ஒரு பிரமை தான், நமது நேரத்தையும்,உழைப்பையும், ஏன் தமிழ் சிந்தனையையும் மட்டுப்படுத்தக்கூடியதே அம்முறை.

பீட்சா, பர்கர் எல்லாம் உணவு தான் ,சாப்பிட்டால் பல் சுலுக்குவதில்லை, ரொம்ப எளிதாக சமைக்கக்கூட தேவையில்லாமல் ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே கொண்டு வந்திடுவாங்க, இன்னும் கொஞ்ச நாள் போனால் சந்தை பிடிக்க ஊட்டிவிட்டுக்கூட போவாங்க!!!, அடடே ரொம்ப எளிதாக இருக்கே என மூன்று வேளையும் சாப்பிடக்கூட நமக்கு ஆசையாக இருக்கலாம்,ஆனால் அதையே மூன்று வேலையும் முக்கினால்'ஜங்க் புட்"உடம்புக்கு ஒத்துக்காது தவிர்க்கணும் என மருத்துவர்கள் முதல் பொதுவான உடல்நல விரும்பிகள் வரை சொல்வதேன்?

எனக்கென்னமோ ஆசானுக்கு டாம்,டேப் ,டாஸ்கி முறையில் ஶ்ரீலிபியில் தட்டச்சு செய்து புத்தகம் உருவாக்கி கொடுப்பவர் "ஏமானே ,ஒரு பக்கத்துக்கு கொஞ்சம் பைசாவ கூட்டிக்கொடுங்க , விலைவாசிலாம் ஏறிப்போச்சுங்க ஏமானேனு"கேட்டிருப்பாரோ, என்னவோ?, எனவே எதுக்கு இந்த முறைலாம் பேசாம "தமிங்கிலீஷ்"தட்டச்சு போலவே கற்பது முதல் எல்லாத்தையும் மாத்திட்டால் பதிப்பகத்துறையிலும் தமிங்கிலீஷ் முறையே முழுக்க பயன்ப்பாட்டிற்கு வந்திடும் ,அப்பாலிக்கா நாமே தெனம் 10 பக்கம்னு தட்டச்சு செய்து  ஒரு 500 பக்கம் பொஸ்தவத்த வெளியிட்டுவிடலாம் காசு மிச்சம் ஆகிடும்னு நினைச்சிருக்கலாம் , கணக்கு பண்ணாமல் எதுலவும் கமிட் ஆக மாட்டார் நம்ம ஏமான் அவ்வ்!

வேகமாக சோர்வின்றி,நிறைய தட்டச்சு செய்ய வேண்டுமெனில் தமிழ் -99 முறையே சிறப்பானது, அதுக்குறித்து மேலும் அறிய,

சுட்டிகள்:

# http://tamil99.org/

# http://blog.ravidreams.net/tamil99/

# http://blog.ravidreams.net/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

ஒரு முழுமையான மொழி என்பது எழுத்துருவும், வாசிப்பும்(பேச்சு ,ஒலி) எனக்கொண்டிருக்க வேண்டும், எனவே அதில் சீர் திருத்தம் என செய்யப்பட்டால் ,இரண்டுக்கும் நன்மை பயக்க வேண்டும்,ஒரு மொழிக்கென சிறப்பாக தனித்து உருவாகியுள்ள எழுத்தை அழித்துவிட்டு செய்ய முற்படும் சீர்திருத்தம் மேம்பாடே அல்ல ,பின்நோக்கி செல்வது ஆகும்,

 ஒரு மொழி என்பது முதலில் ஒலி வடிவாக தோன்றி பின்னர் ஒலிக்குறிப்புக்கு "வடிவக்குறிப்பாக"எழுத்துருப்பெறும், இவ்வாறு நிகழ பலக்காலம் ஆகும். ஒரு மனிதக்கூட்டம் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்து புழங்கி வந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும், நாடோடி மொழிகளுக்கே எழுத்து வடிவம் இல்லாமல் , ஒலிவடிவத்தில் இருக்கும், அப்படி எழுத நினைத்தாலும் சென்ற இடமெல்லாம் உள்ள எழுத்தில் எழுதிக்கொள்ளத்தான் முடியும்,தமிழ் நீடித்து நின்று வளர்ந்த மொழி மண்ணோடும், கலாச்சாரத்தோடும் இணைந்த மொழி, தமிங்கிலீஷில் எழுதினால் அம்மொழி தமிழ் மண்ணுக்கு சொந்தமென சொல்லும் உரிமையை தான் இழக்க நேரிடும்!

தமிழ் மொழியில் நீட்டலும் ,மழித்தலும் செய்து சீர்த்திருத்தம் செய்ய நினைத்தால் இம்மொழியின் "உட்க்கூறுகளை"கொண்டு தானே செய்ய வேண்டுமே ஒழிய ,இன்னொரு மொழியின் உட்க்கூற்றினை பிடுங்கி இங்கே நடுவதல்ல!

ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற விட்டாலும் பின்னர் கைவலிக்குறைக்கும் முறை, ஆரம்பத்தில் இதுல கொஞ்சம் நாள் வண்டி ஓட்டிவிட்டு , அப்புறம் மறந்துப்போச்சேனு விட்டுப்புட்டேன், இனிமே ஆசான் செயமோகர் புண்ணியத்துல மீண்டும் தமிழ் -99 கரைக்கு ஒதுங்கிடலாம்னு பார்க்கிறேன் அவ்வ்!
------------------------------

தமிழ் மொழியின் அச்சு வரி வடிவ வரலாறு!

இப்போ கொஞ்சம் பழங்கதையும் பார்ப்போம்,

#  இந்தியாவுக்கு கடல் வழி கண்டுப்பிடிச்சு வந்த முதல் ஐரோப்பியரான வாஸ்கோடகாமா  கி.பி 1498 இல் கோழிக்கோட்டிற்கு வந்தார். வாஸ்கொட காமாவுக்கு வழி ஒன்னும் தானா தெரியலை ,அப்போ மலபார் பகுதியில் இருந்து ,அரேபியா வழியா போன ஒரு இஸ்லாமிய வியாபாரி தான் , எங்கோ நடுவில் கடல்பயணத்தின் போது ,வாஸ்கோடகாமை சந்தித்து வழிக்காட்டி உதவியபடியே சொந்த ஊருக்கும் திரும்பினார்னும் சொல்வாங்க.

எப்படியோ வந்து சேர்ந்த அவர் சும்மா ஒன்னியும் வரலை வரும் போதே மொழி வல்லுனர்கள் எல்லாம் கூட்டாந்தார் ,அவங்கலாம் இந்திய மொழிய ஆராய்ந்து கத்துக்க ஆரம்பிச்சாங்க ,அப்படிக்கத்துக்கிட்ட மொத இந்திய மொழியே "மலபார்"என அப்பொழுது சொல்லப்பட்ட மலபார் தமிழ் தான்.

அதுக்கு காரணம் கோழிக்கோடு பகுதில கரையேறியது,ஆனால் அதே நேரம் கோவாவிலும் ஒரு கூடாரம் போட்டாச்சு.

படம்:



St Francis Church கி.பி.1510இல் கட்டப்பட்டது இங்கு தான் கி.பி.1524 இல் இறந்த வாஸ்கோட காமாவின் உடல் புதைக்கப்பட்டு, பின்னர்,கி.பி 1538இல் தோண்டியெடுக்கப்பட்டு போர்ச்சுகல்லுக்கே மீண்டும் கொண்டு செல்லப்பட்டது, இப்பொழுது ஒரு நினைவு மண்டபம் மட்டும் உள்ளது.

மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்:
சுட்டி:

http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church


(தம்பிரான் வணக்கம் அட்டை-வலப்பக்கமா குந்திக்கிறவர் தான் ஹென்றி)

Henrique Henriques (1520-1600) என்ற போர்ச்சுக்கீசிய மொழி ஆய்வாளர் , தமிழை கத்துக்கிட்டு , போர்ச்சுகல்- தமிழ் அகராதிய ,(Cartilha – First Tamil book 1554) லத்தின் வரிவடிவில் சிறு புத்தகமாக கி.பி 1554 இல் லிஸ்பனில்  Vincente de Nazareth, Jorge Carvalho and Thoma da Cruz ஆகியோர் மூலம் அச்சடித்தார். இவர் அப்பொழுது தூத்துக்குடி அருகே ஒரு தமிழ் பல்கலைகழகம் கூட அமைக்க வேண்டும் என ,போச்சுக்கல் அரசுக்கு பரிந்துறையும் செய்தாராம்.




(Cartilha – First Tamil book 1554)

இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சு வடிவம் கண்ட முதல் மொழி தமிழ் ஆகும்.

அதன் பின்னர்,கி.பி 1556 இல் இந்தியாவின் முதல் அச்சகம் , தற்போதைய கேரளாவில், கொல்லம் அருகே அம்பளக்காடுஎனுமிடத்தில் அமைக்கப்பட்டது என்கிறார்கள். ஒரு சிலர் கோவாவில் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.

பின்னர் கி.பி 1557 இல் Juan Gonsalves. என்ற ஸ்பானிஷ் பாதிரி ,தமிழுக்கான முதல் "அச்சு எழுத்துக்களை செதுக்கி"உருவாக்கினார்.



இவ்வெழுத்துக்களை வைத்து Henrique Henriques  கொல்லத்தில் உருவாக்கப்பட்ட அச்சகத்தில்தம்பிரான் வணக்கம்என்ற முதல் தமிழ் (மலபார் தமிழ்)அச்சு புத்தகத்தினை அச்சிட்டு வெளியிட்டார்.

இந்நூல்"‘Doctrina Christam en Lingua Malauar Tamul "என இலத்தின் வரிவடிவில் வந்த நூலின் மொழிப்பெயர்ப்பு, கிருத்துவ வழிப்பாட்டு பாடல்கள் பிரேயர்கள் கொண்டது.


அதன் பின்னர் 1559 இல் மலையாள மொழியும் தமிழும்(மலபார் மலையாளம்) கலந்த Doctrina Christam’ alias ‘Kiricittiyani vanakkam’ என்று மொழிப்பெயர்க்கப்பட்ட நூலும் அச்சடிக்கப்பட்டது.

பின்னர் 1586 இல் தூத்துக்குடி புன்னக்காயலில் ஒரு அச்சகம் அமைக்கப்பட்டு ‘Flos Sanctorum’ (Punitar varalaru of 669 pages)புனிதர் வரலாறு என்ற நூல் அச்சடிக்கப்பட்டது, இந்நூல் தான்  முதன் முதலில் தமிழ்நாட்டில் அச்சடிக்கப்பட்ட நூல் ஆகும்.

(‘Flos Sanctorum’ (Punitar varalaru -தமிழ்,of 669 pages)


(‘Flos Sanctorum’ (Punitar varalaru of 669 pages,ஜெர்மானிய மொழிப்பெயர்ப்பு-1672)

நாடு பிடிக்க ,மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள் நினைச்சிருந்தால் இங்க இருக்கவங்களை தாஜா செய்து "லத்தின் வரி வடிவில்"எழுத,படிக்க சொல்லிட்டு போயிருக்கலாம்,ஆனால் அப்படி செய்யாமல் உள்ளூர் மொழியின் மொழி வரி வடிவத்தை மாற்ற விருப்பமில்லாமல் ,நம்ம ஊரு மொழிய கத்துக்கிட்டு,அதுக்கு"type casting "உருவாக்கி,புத்தகம் அச்சடித்து அப்புறமாத்தான் தன் சுயநலத்தையும் காட்டினான், ஆனால் நம்ம ஆசானோ இங்கனக்குள்ள குந்திக்கிட்டு 13 வருசமா டிரான்ஸ்லிட்டரேஷனில் டைப்படிக்கிறேன் நல்லாத்தான் இருக்கு , எல்லாரும் அப்படியே எழுதுங்கடானு"இவரே தமிழின் ஏகபோக பிரதிநிதி"போல தீர்ப்பு எழுதுறார் அவ்வ்!

என்ன கொடுமை சார் இது!
----------------------------

பின்குறிப்பு:

# தப்புத்தப்பா தமிழில் எழுதி தமிழைக்கொலை பண்ணிட்டேன் என பொங்கிட்டு  ,பிழை  திருத்தம் சொல்ல வராதிங்க ,ச்சும்மா தமாசுக்கு வேண்டும்னே மெட்ராஸ் பாஷைய கலந்துக்கட்டி எழுதினேன் :-))

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

# https://tidsskrift.dk/index.php/fundogforskning/article/view/1298/2076

# http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church

# http://karkanirka.org/2010/04/14/first_tamil_book/

# http://pazhayathu.blogspot.in/2009/11/first-printing-press-in-indiathe.html

# http://www.nathansholidayhome.com/sightseeing-in-and-around-fort-kochi/

மற்றும் தி இந்து, விக்கிப்பீடியா, & கூகிள் ,இணையத்தளங்கள்,நன்றி!
-------------------------

தமிழின் நவீனத்துவம்.

$
0
0
(அழகின் நவீனத்துவம் ...ஹி...ஹி)

"பாஷை , வெறும் சொற்களில் மட்டும் தங்கி நிற்கிற ஒன்றல்ல,சொற்கள் தம்முடைய ஸ்தூல நிலையில் வெறும் சப்தம் தான். அவற்றுக்குக் கிடைக்கும் அர்த்தம், அவற்றை உபயோகிக்கிற ஒப்புதல்களை இயல்புப்படுத்துதல் ஆகும்.

ஒரே சப்தம் ,ஒரு மொழியில் பெறும் பொருள் வழக்கை இன்னொரு மொழியில் கொள்வதில்லை, இதனால் தான் இயல்பான ஒப்புதல் என்பது"வழங்கப்படுதல்"என்ற நிலைமைக்கு சார்பாகி,"வழக்கொழிந்த சொற்கள்"என்று ஒரு பகுதியை பிரித்து விடுகிறது. இதன் தவிர்க்க முடியாமையை ஏற்காத உள்ளங்கள், உயிர்த்தன்மையற்றதாகவே இருக்கும்.

உபயோகம்தான் மொழியின் இயக்கம்,- உயிர்  - என்று கொள்ளும் போது ,"வலிந்து ஏற்கும் உபயோகத்தை அல்ல",இயக்கத்தின் இயற்கை ஏந்தி வரும் உபயோகத்தையே நாம் ஏற்கவேண்டும். வழக்கொழிந்த சொற்கள் இந்த இயக்கத்தின் இயற்கையினின்றும் பின் தங்கிவிட்டவை. இதனாலாயே ,பழந்தமிழ் சொற்களை மீண்டும் உபயோகிப்பதென்ற தனித்தமிழ் இயக்கம் ,இயற்கை தன்மையோ உயிரோ அற்று ,நவீன அனுபவங்களையும் சந்திக்க இயலாமல் நின்றுவிடுகிறது.

இயக்கத்தின் இயற்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதால், பிறமொழிச்சொற்கள் இன்றைய தமிழில் நவீனமான விஷயங்களையும் அனுபவங்களையும் சொல்ல உதவுகின்றன. தமிழின் நவீன - அதாவது இன்றைய காலத்தில்  - படைப்பியக்கம், வழக்கொழிந்த சொற்கள் மூலம் அல்ல ,இயங்கும் சொற்களின் மூலமாக மட்டுமே சாத்தியமாகிறது.

மொழியின் ஸ்தூலமான சொற்களின் விஷயத்தில் 'தூய்மை பாராட்டியவர்கள், சிந்தனை அனுபவம் என்பவற்றால் உந்தப்படவில்லை ,இவர்களது எழுத்துக்களில் ,பழம்பெருமை, பொதுப்புத்தியை மீறாத ஒழுக்கவியல், இவற்றை "அழகாக"கூறுவதாக எண்ணிக்கையாளப்பட்ட சொல்ஜோடனை ஆகியவைதாம் இருந்தன., இருக்கின்றன.

இவர்களது சமகாலத்திய சிருஷ்டி,கர்த்தாக்களிடமோ ,வாழ்வின் உண்மைத்தன்மைகளும் சமூகவரம்புகள், ஒழுக்கங்கள்,நீதி அநீதிகள் ஆகியவற்றை அனுபவசாத்தியத்தின் தளத்தில் நிறுத்திச்செய்கின்ற விசாரணைகளும் ,இவற்றை எவ்விதமான உள்ளம் சந்திக்கிறதோ, அதன் பாத்திர இயல்புக்கு ஏற்ற மொழிப்பிரயயோகத்தில் எழுதப்பட்டன.

கருத்தைப் பிரதானமாக வைத்துப் புதுமைப்பித்தன் எழுதியவை இந்தவகை இயக்கத்தின் சிகரமாகும். புதுமைப்பித்தனின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களது தமிழ் , இதனாலாயே ஜீவத்துடிப்புள்ள தமிழ் என்றாகிறது.

இன்னொரு புறம், பரவலான வாசகத்தேவைகளையும் வியாபாரத்தையும் இலக்காக்கி, "கல்கி"ரா.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எழுதியவை. ஆழமற்ற சில்லறைத்தளம் ஒன்றில் தமிழ் எழுத்தைச் செயல்பட  வைத்துள்ளன.இதை பத்திரிக்கைத்தமிழ் என்று அதன் உடனடிப்பரிவர்த்தனைக்காக ஏற்றுக்கொள்ளும் போதே, இதன் இயல்பான வெகுஜனத்தன்மையை இலக்கிய இயக்கத்தின் தன்மைகளிலிருந்து பிரித்துக் கண்டுக்கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வெளியீட்டைப் பொறுத்தவரையில் கூட தனித்தமிழ் ,சிருஷ்டி, வியாபாரம் என்ற மூன்று தளங்களும் சுத்தமாகப் பிரிந்து நிற்கின்றன. தனித்தமிழ் இயக்கத்தில் அரசியலின் பாமரத்தன்மையும், சிருஷ்டி இயக்கத்தில் முதிர்ந்து புடமிடப்பட்ட செம்மையும், வியாபார எழுத்தில் கவர்ச்சித்தன்மையும் , உணர்ச்சி வெளியீட்டை நிர்ணயித்துள்ளன.ஒரு வகையில் உணர்ச்சி வெளியீட்டுத் தளத்திலேயே முதன்மையாக இந்த மூன்று தமிழ்களின் குணங்களும் பிணங்க ஆரம்பித்து ,அனுபவம்,சிந்தனை, ஆகிய துறைகளில் இந்தப்பிணக்கு இவற்றிடையே நீடிக்கிறது என்றும் கூறலாம்.
-------------------

தமிழ்ப் பழமை வழிபாடு எவ்வளவுக்குப் பாமரத்தனமானதோ , அவ்வளவு பாமரத்தனம் தான் மேலுள்ள வகையான சமஸ்கிருத மனோபாவமும் இரண்டுமே இந்தியத்தின் சாபக்கேடான ஜாதியத்தில் வேருன்றிப்பிறந்தவை. எனது உனர்வின் நவீனத்துவம் இத்தகைய விஷநிலத்தில் இருந்து  விளைந்த ஒன்றல்ல. இந்த விஷநில விளைச்சல்களுக்கு நான் தனித்தமிழ் இயக்கத்தை விமர்சித்த பார்வை உபயோகமாகிவிட இதனால் இடமற்றுவிடுகிறது. எனது முன்னோடியான புதுமைப்பித்தனைப் பொறுத்தும் இதையே கண்டுக்கொள்ள வேண்டும். சமஸ்கிருத சநாதனத்துக்கு "உபயோகமாக"ஒரு வெளிப்படையான தீவிர நிலையாக என் நேர்ப்பேச்சுக்கள் தென்ப்பட்டுள்ளன.

--------------------------

ஒரு மொழியின் சிறப்பு ,அதன் உபயோகத்தைச் சார்ந்தது, கிரீசின் பரிபாலான காலத்தைத் தொடர்ந்து ரோம சாம்ராஜ்யத்தில், கிரீசின் மொழியான கிரேக்கம் தான் உயர்ந்ததாக கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த கணிப்பை புறந்தள்ளியவர்கள் ரோமின் லத்தீன் கவிஞர்கள், நாடகாசிரியர்கள், தொடர்ந்து ஐரோப்பாவில் பேக்கனின் காலம் வரை, லத்தீன் உயர்ந்த உபயோகங்களைப்பெற்றுள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் , லத்தீனையன்றிச் சுயமொழியையே ,சிருஷ்டிகளுக்கும் ,இதர படைப்புகளுக்கும் உபயோகிக்கிற விழிப்பு ஏற்படலாயிற்று .

இதன் அடிப்படை, சுய அனுபவத்தினை - தர்சனத்தை - தனது மன இயக்கத்துடன் நெருங்கித்துடிக்கிற ஒரு சுய மொழியில் தரும் இயற்கையாகும். ஆங்கிலத்தை ,பிரெஞ்சை, ஜெர்மனை ,ரஷ்யனை விட லத்தீன் உயர்வானது என்றோ லத்தீனை விட கிரீக் உயர்ந்தது என்றோ ஐரோப்பிய நகரங்களின் வாடகை ரூம்களில் லத்தீனியப்பூணூல் ,கிரேக்கப்பூணூல் அணிந்த சநாதனிகள் பேசிக்கொண்டு காலங்கழிப்பதை நாம் காண முடியாது. ஆனால் தமிழை விடச் சமஸ்கிருதம் உயர்ந்தது, தமிழ் காட்டுமிராண்டி பாஷை என என்று அவங்க பெரியாரே சொல்கிறாரே என்று கதை அளக்கும் நவீன சநாதனிகளை நான் கண்டிருக்கிறேன், - நமது பாரதத்துச் சென்னை நகர் வாடகை ரூம்களில் இவர்களது குழுக்கள் 'நவீன இலக்கிய இயக்கங்களாக"க்கூட முனைப்புப் பெற்றுள்ளன

ஒரு மொழியை விட இன்னொரு மொழி உயர்வானது என்று கூறுவதை விட மொழிகளின் உபயோக சாத்தியத்தைப்பற்றிப்பேசுவதே பொறுந்தும். தமிழ் இன்றைய மொழி , அதாவது நான் தமிழ் பழமைவாதத்தை நிராகரித்துக் கூறுவது இது.இன்றைய மொழி எனும் பொழுது, அது பழந்தமிழாக அன்றி ,"சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழியின் சொற்களைக்கூட ஜீரணித்துத் தமிழாக இயங்குகிறது"என்பதையே அர்த்தம் கொள்கிறேன். இந்த ஜீரணிப்புக்கு ஏற்றவகையாக, தனது பிரயோகக் கட்டுமானங்களைப்புதுப்பித்து நிற்கிற உரம் தமிழுக்கு இருக்கிறது; சமஸ்கிருதத்துக்கு இல்லை, உதாரணமாக அது இன்றைய அனுபவங்களைச் சரளமாக பரிவர்த்தனை செய்யக்கூடிய இயற்கை வளர்ச்சியை சமஸ்கிருதம் அடையவில்லை.

---------------------

அக உலக கலைஞர்கள்:

'அகநானூறு போன்ற துணுக்குக் கவிதைகளில் செய்யப்பட்ட மன உலகப் பரிசோதனைகள், தமிழிலக்கியத்தின் இடைக்கால இருளின் முன் மறுப்பட்டுவிட்டன. இன்று ஒரு புது விழிப்பு ஏற்பட்ட பிறகும், அது முழுதாக உணரப்படவில்லை ,காரணம், அந்த இடைக்காலத்தின் பின்பு வந்துள்ள தமிழ்ப்பண்டிதப்படிப்பு எதுவும் அந்த அக உலக ஓட்டத்தை எட்டவில்லை,எனினும் இயல்பிலேயே சுரணையுள்ள படைப்பாளிகள் அதை உணர்ந்துக்கொண்டார்கள்.

அதனால் தான் புதுமைப்பித்தன் அன்று மவுனியிடம் சொன்னார், 'அகநானூற்றின் மன உலகம் இந்தப்பண்டிதர்களுக்குத் தெரிந்திருந்தால் இன்று உன் கதைகளையும், என் கதைகளையும் புரியவில்லை, தெளிவில்லை என்று இவர்கள் சொல்ல மாட்டார்கள்.

.....

தமிழ் பண்டிதர்கள் போனாலும் போனார்கள் ,இன்று இங்கிலீஷ் பண்டிதர்கள் அவர்கள் இடத்தைப்பிடித்துக் கொண்டார்கள். பாஷை என்னவானாலும் பண்டிதர் பண்டிதர் தான் என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள். இங்கிலீஷ் இலக்கிய பரிச்சயம் என்ற போர்வை ,இவர்களது குறுகிய பார்வைகளுக்குப் போர்வையிடுகிறது. இங்கிலீஷ் மணமே தெரியாத வெற்றிலை கடைக்காரர்களும், ஜவுளிக்கடைக்காரர்களும் உணர்ந்து ரஸிக்கிற எழுத்தை ,இவர்கள் தங்கள் பாண்டித்யத்தின் மேடையில் நின்று விசிறிவிடுகிறார்கள்.

--------------------

மேற்சொன்ன எழுத்து விவரணங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் அடியேனது அல்ல ...ஹி...ஹி அதான் எங்களுக்கு தெரியுமே ... உனக்கு விக்கிப்பீடியாவை காப்பி அடிச்சு மொழிப்பெயர்த்து எழுதத்தானே வரும், இது போல முதல் தரமான இலக்கிய சம்பாஷணைகள் எல்லாம் செய்ய வராதேனு ,மனசுக்குள்ள நீங்க சொல்லுற அந்த "மைண்ட் வாய்ஸ்'எனக்கும் கேட்குது அவ்வ்!

(கவிஞர்.தருமு சிவராம் என்கிற பிரமீள்)

சுமார் கி.பி 1960 களில் எழுத்தாளர் மற்றும் படைப்பாளியுமான மறைந்த, சி.சு.செல்லப்பாஅவர்கள் நடத்திவந்த "எழுத்து "என்ற இலக்கிய தரமான தமிழ் பத்திரிக்கையில் நவீன புனைவாளர்,கவிஞர், கட்டுரையாசிரியர் ,இலக்கிய விமர்சகருமான  மறைந்த"தருமு அரூப் சிவராம்"என்கிற பிரமீள் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு "தமிழின் நவீனத்துவம்"என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது, வெளியீடு நற்றிணை பதிப்பகம், (விலை 140 ரூ).



தருமு அரூப்  சிவராம்(கி.பி 1939-1997) , இலங்கை திருகோணமலையில் பிறந்து , தமது 20 ஆம் வயதுகளின் தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு வந்து , நவீன தமிழ்ப்படைப்புலகில் சல சலப்பை உண்டு பண்ணும் பல படைப்புகளை தந்தவர்.  இக்காலத்திலும் பின்நவீனத்துவ படைப்பாளிகளின் ஆதர்சமாக விளங்கக்கூடியவர். நவீன தமிழிலக்கியத்தின் நடமாடும் துன்பியல் சின்னமாக அக்காலத்தில் அலைந்து திரிந்து கி.பி 1997 இல் வேலூர் அருகே கரடிக்குடி எனும்  இடத்தில் அநாதரவாக  இயற்கை எய்தினார்.

சு.ரா அவர்களின் சமகாலத்தவர், நட்பாக இருந்து ,பின் பூசலாக மாறி போட்டுக்கொண்ட இலக்கிய சண்டைகள் பற்றி எழுத்துலகில் மர்மக்கதை போல ஒரு அத்தியாயம் இன்னும் ஓடிக்கொண்டிருப்பது சிறப்பு! இந்த கட்டுரையில் கூட "ஜவுளிக்கடை முதலாளிகள்'என ஊமக்குத்தாக குத்தியிருப்பது சு.ராவையே :-))

எதுக்கு இந்த பழங்கதைய இப்போ பேசிட்டு ,இதெல்லாம் இலக்கியவியாதிகள் சமாச்சாரமாயிற்றே ... வடை சுடுற எடத்தில வவ்வாலுக்கு என்ன வேலைனு கேட்கலாம் , மேட்டர் இருக்கே,  தற்காலத்தில் தமிழை நவீனப்படுத்தவும் ,சாஸ்வதமாக நிலைத்திருக்க செய்யவும் லத்தின் லிபியில் தமிழ் எழுதப்பட வேண்டும் போன்ற செயமோகத்தனமான ஆலோசனைகளுக்கு , இக்கட்டுரையில் ஒரு பதில் உள்ளது, எனவே தான் அடியேன் சிரமம் பாராது அந்நூலில் இருந்து எடுத்தாண்டுள்ளேன்( டேய் ...காப்பி அடிச்சுட்டு என்னா பேச்சு பேசுற அவ்வ்)

# தருமு சிவராம் அவர்கள் , ஆரம்பத்தில் தனித்தமிழ் இயக்கத்தில் ஆர்வமுடன்  பங்கேற்றுவிட்டு , தனித்தமிழ் என்பது சிருஷ்டி எழுத்துக்களுக்கு தடையாக இருக்கும் என பின்னர் முடிவெடுத்து , தனித்தமிழ் இயக்கத்தினை விமர்சித்து அதற்கு எதிராக செயலாற்றியவர், அப்போ தமிழின துரோகியானு அவசரப்பட்டு 'ரப்பர் ஸ்ஸ்டாம்ப்"எடுக்காதிங்க அவ்வ்!

 தமிழ் புதிய சொற்களை சுவீகரித்துக்கொள்ள வேண்டும், அப்படி இருந்தும் தமிழ் - தமிழாகவே நிலைத்திருக்கும் , தமிழே சிறப்பான நவீனப்படைப்பிலக்கிய மொழி என்பதே அவரின் பார்வையாகும்.

அவரின் பலக்கருத்துக்கள் சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும் இருக்கும், இக்கட்டுரைத்தொகுப்பிலும் அத்தகைய முரண்கள் உள்ளன.

# நவீன படைப்பாளிகள் அக உலகத்தர்சனத்தின் அடிப்படையில் எழுதுபவர்கள், மொழி அடிப்படையில் வெற்று வார்த்தை கோர்வைகளாக பார்க்காமல் 'அவற்றில் உள்ள "மீ மொழி" (meta language)யை வாசகன் கண்டுக்கொண்டால்  அக உலக தர்சனம் கிட்டும் என்கிறார். அக உலக தர்சனத்தினை காண கைய புடிச்சு அழைத்து செல்வது மட்டுமே எழுத்தாளனின் வேலை ,வாசகனுக்கு அங்கே என்ன அனுபவம் கிடைக்கும், தர்சனத்தின் முடிவென்ன என்பதெல்லாம் அல்லவாம்!

ஆனால் அக உணர்வுகளின் வெளிப்பாட்டை "பழந்தமிழ் அதாவது தனித்தமிழ்'வெளிப்படுத்தாது என்பதே அவரின் குறைப்பாடு,ஆனால் புதுமைப்பித்தன் ,மவுனியிடம் ,அகநானூற்றின் அக உணர்வு நிலையை தான் உதாரணம் காட்டி நவீன எழுத்தாளர்களின் அக உணர்ச்சி படைப்புக்களை ஒப்பீட்டு பேசியுள்ளார் எனக்குறிப்பிடுகிறார், எனவே பழந்தமிழிலும் அக உலக தர்சனம் காட்டக்கூடிய எழுத்துக்கள் இருந்துள்ளது,ஆனால் நம்ம நவீன எழுத்தாள மக்களுக்கு தான் "பழந்தமிழ் சொல்லறிவு"மட்டுப்பட்டு விட்டமையால் , அக உலக பார்வையில் பழந்தமிழில் எழுத இயலாமல் போச்சு, ஆகவே குறைபாடு என்பது மொழியில் இல்லை அதனை பிரயோகிப்பவரிடம் தான் உள்ளது என்பதை எளிதாக உணரலாம்.

# 1960 களில் அக உலகப்பார்வையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எழுத்துக்களே மேன்மையானது , மற்றவை எல்லாம் சில்லறை வியாபார எழுத்துக்கள் என குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார். கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தியின் எழுத்துக்களை எல்லாம் அப்படித்தான் ஒதுக்கி தள்ளுகிறார்.

இதில் கவனிக்கத்தக்கது என்னவெனில் இருவருமே தனித்தமிழ் என்ற "கான்செப்ட்"டை விரும்பாதவர்கள். ஆனால் தருமு சிவராமுக்கு கல்கியின் எழுத்துக்கள் 'வர்த்தக பரிவர்த்தனை ,சில்லறை எழுத்துக்களாகவே"பட்டிருக்கு.

ஆனால் தருமு சிவராம் ,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தினை விட தமிழ் மேலான மொழி எனவும் கருத்தாக்கம் கொண்டவர், இதனை அவரது விமர்சனக்கட்டுரைகளில் பல இடங்களில் காணலாம்.

நிகழ்காலத்தில் செயமோகர் போன்றவர்களும் தமிழில் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது , எனவே இலத்தின் எழுத்துருவில் பதிப்பிக்கணும் என்கிறார், உண்மையில் வாசிக்கும் பழக்கம் , புத்தக விற்பனை குறைவாக இருக்கானா ,அப்படிலாம் இல்லை, பல நூல்கள் நல்லாத்தான் விற்பனை ஆகிட்டிருக்கு. அப்புறம் ஏன் இப்படியான புலம்பல்கள் என்றால் ,எல்லாம் அவரவர் படைப்புக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்தே "கணிப்பு"சொல்கிறார்கள், போதாக்குறைக்கு அதை வச்சே ஒட்டு மொத்தமாக தமிழுக்கே ஒரு புதிய மாற்றம் வேண்டும் என்கிறார்கள்.

தருமு சிவராமால் சில்லறை எழுத்து என புறம் தள்ளப்பட்ட கல்கியின் படைப்புகள் இன்றும் புத்தக சந்தையில் அதிகம் விற்பனையாகி ,தமிழ் வாசகர்களின் இடையே வாசிக்கும் பழக்கத்தை தூண்டுகிறது என்பது மிக ஆச்சர்யமான ஒரு முரண் நகை.



சில்லறை எழுத்தோ அல்லது அக உலக உணர்ச்சிகளை காட்டும் உன்னத சிருஷ்டி எழுத்தோ , ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் தமிழ் படைப்புலகில் இருந்துக்கொண்டுதானுள்ளது, அதனதன் சந்தைக்கு எவ்வித பங்கமும் இல்லை, ஆனால் இந்த அறிவு சீவி எழுத்தாளர்கள் தான் எல்லாக்காலத்திலும் ஏதேனும் ஒரு முறைப்பாட்டுடன் புலம்பி வந்துள்ளார்கள், அது இன்றும் செயமோகனத்தனமாக தொடர்வது காலத்தின் கட்டாயம் அவ்வ்!

நாம் கூட ,பொன்னியின் செல்வன் முழுத்தொகுதி - 240 ரூ (மலிவுப்பதிப்பு), சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - 240 ரூ(மலிவுப் பதிப்பு)ஆகியவற்றை புத்தக சந்தையில் வாங்கினேன், ஒவ்வொரு புத்தகமும் சுமார் 500 பக்கங்கள், அதுவும் ஏ-4 அளவில், கெட்டி அட்டையுடன் உள்ளது. கொடுத்த காசுக்கு மதிப்பு ,மீண்டும் படிக்கவும் தூண்டுகிறது.  எனவே தமிழன்(ஹி..ஹி அடியேனே) இப்பவும் தமிழில்  படிக்க ஆர்வமாத்தான் உள்ளான் , அவனுக்கு புரியும் படியும், நியாயமான விலையிலும் புத்தகங்கள் வந்தால் , ஆர்வத்துடன் வாங்கிப்படிக்கவே செய்வான்,ஆனால் அதை எல்லாம் விட்டுப்புட்டு தலகாணி சைசில் புரியாத வார்த்தை ஜோடனைகளில் எழுதிவிட்டு , 500 ரூபானு விலை வச்சால் எப்படி வாசிக்க முன்வருவான்?



எனவே உத்தம படைப்பாளிகள் தங்களுக்கான சந்தை என்ன , வாசகர்கள் யார் என உணர்ந்து அதற்கேற்ப படைப்புகளை செம்மையாக வழங்க முனைப்புக்காட்டினால் படைப்புலகில் அழியாப்புகழ் கிடைக்கும் என்பதே யதார்த்தம்!
-----------------------------------------

பின்குறிப்பு;

# எலக்கியம் பத்திலாம் அதிகம் பேசாமல் வாசிக்க மட்டுமே விரும்புவேன் ,ஆனால் இந்த எலக்கியவியாதிகள் கடைசீல என்னையும் எலக்கியம் பேச வச்சிடுறாங்களே அவ்வ்!

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கிப்பீடியா, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!

# கவிஞர் பிரமீள் குறித்து இணையத்தில் காணக்கிடைத்த சில கட்டுரைகளின் சுட்டிகள்,

# http://maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=158&Itemid=34

# http://solvanam.com/?p=24488

# http://www.blog.beingmohandoss.com/2007/10/blog-post_30.html

# http://ravisrinivas.blogspot.in/2008/07/blog-post_03.html

நன்றி!


கட்டம் கட்டி கலக்குவோம்-3

$
0
0
(மலபார் "ராணி"...ஹி...ஹி..!)


எட்டு எட்டா மனித வாழ்க்கையை பிரிச்சுக்கோ...எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சுக்கோ என பாடிய "பாட்ஷா"சூப்பர் ஸ்டாருக்குபிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ,நம்ம ஆட்டத்தை ஆரம்பிப்போம்!

சதுரங்கமும் எட்டு எட்டாக கட்டங்கள் கொண்டது தானே , எனவே எல்லாமே எட்டுக்குள் அடக்கம் :-))

சரி மக்கா , நாம கட்டம் கட்டி கலக்க ஆரம்பிப்போம்,

சதுரங்கத்தின் வரலாறு,விளையாடத்தேவைப்படும் தளவாடங்கள், ஆட்டக்காய்கள் மற்றும் அவற்றின் நகர்வு முறைகள், நகர்வுகளை குறிப்பெழுதுவது ஆகியனவற்றை கடந்த இருப்பதிவுகளில் கண்டோம், இனி மேற்கொண்டு சதுரங்க ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொள்வதனைப்படிப்படியாக காணலாம்.

# சதுரங்க ஆட்டம் என்பது "மூளைக்கு வேலை கொடுக்கும் அக உணர்வு விளையாட்டு"ஆகும். சதுரங்கப்பலகையில் ஆடும் ஆட்டத்தினை விட "நம் மூளையில்"மனத்திரையில்அதிக ஆட்ட வகைகளை ஆடி பார்க்க நேரிடும், பின்னர் அதனை ஆட்டப்பலகையில் வெளியீடாக காட்ட வேண்டும்.

"MIND PLAYS THE GAME"

அவ்வாறு விளையாட எவ்வாறு நம்மை தயார்படுத்திக்கொள்வது?

ஒரு நல்ல சதுரங்க விளையாட்டு வீரராக தயார்ப்படுத்திக்கொள்ள ஒரு அடிப்படையான திட்டமிட்ட அனுகு முறை தேவையாகும், அதில் மிக முக்கியமான அம்சங்கள் கீழ்க்கண்டவையாகும்.

#துவக்க ஆட்டம்(Chess Openings)


# திட்டமிடுதல் (Chess strategy )


# ஆட்ட நுட்பங்கள்(Chess tactics )


# இறுதி ஆட்டம் (Chess Endings )


# அனுபவம்( Chess experience )


இவ்வடிப்படையான ஐந்து பயிற்சியலகுகளையும் ஒரு வட்ட வடிவ படமாக காட்டியுள்ளேன்.




பொதுவாக துவக்க ஆட்டத்தினை கற்றுக்கொள்வதில் இருந்து ஆரம்பித்து ஐந்து அலகுகளிலும் பயிற்சியினை பெறலாம், ஆனால் அப்படி செய்வது சில சமயங்களில் குழப்பத்தினையும் அளிக்கலாம் என்பதால்  ஏதேனும் ஒரு நிலையினை எடுத்துக்கொண்டு பயிற்சியினை ஆரம்பித்து வட்டவடிவில் சுற்றினை பூர்த்தி செய்து பயிற்சியினை நிறைவடையவும் செய்யலாம்.


இப்படி வட்டவடிவில் காட்டியிருப்பதே துவக்க நிலை,இறுதி நிலையென வரையறையாக ஒரு நிலைப்பாடே இல்லாமல் வட்டத்தின் எந்நிலையிலும் நமது புரிதலுக்கு ஏற்ப கற்றலை துவக்கலாம் எனச்சொல்லவே.


அதெப்படி ஆரம்பத்துலவே அனுபவ துவக்கம் கிடைக்கும்னு கேட்கலாம், ஏற்கனவே விளையாண்டவர்களின் அனுபவத்தினை கேட்டு , அவர் என்ன செய்தார் , எப்படி விளையாண்டார்னு தெரிந்துக்கொண்டு அதனையே செய்து பார்ப்பது தான்!


ஒருவரோட அனுபவத்தினை கேட்டு ,அதனையே பழகிப்பார்த்தால் அதுவே நமது அனுபவமாகவும் ஆகிவிடும்!


துவக்க நிலை ஆட்டம் என்பது ஆட்டத்தின் துவக்கத்தில் ,சதுரங்கப்பலகையில் அனைத்து ஆட்டக்காய்களும் இருக்கும் நிலையில் , முதலில் ஆடப்படும் 10 -12 நகர்வுகளை குறிக்கும்.


சதுரங்கப்பலகையின் அடிப்படையையே இப்பொழுது தான் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளவர்களுக்கு , ஒவ்வொரு ஆட்டக்காயின் நகர்வு போக்கும் புரியாத நிலையில் பின்ப்பற்ற கடினமாக இருக்கும்.


மேலும் துவக்க ஆட்டங்களில் பல வகை இருக்கு, அவற்றில் பல கிளை வகைகளும் இருக்கு, இவற்றை எல்லாம் ஒவ்வொரு ஆட்டக்காயின் பலம்,பலவீனம், நகர்வின் தன்மை என சரியாக உள்வாங்கிக்கொள்ளாத ஆரம்ப நிலையிலே சொன்னால் மனதில் பதிய கடினமாக இருக்கலாம் ,எனவே ஆட்டக்காய்கள் குறைவாக உள்ள , இறுதி ஆட்ட நிலையில் எப்படி ஆடி வெற்றிப்பெறுவது என இறுதி ஆட்ட வகையினை கற்றுக்கொள்வதில் இருந்து பயிற்சியினை ஆரம்பிப்பது எளிதாக இருக்கும்.

இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டக்காயின் நகர்வு, அதன் பலம், பலவீனம் என எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியும். பல கிராண்ட் மாஸ்டர்கள் "இறுதி ஆட்டத்தினை "கற்றுக்கொண்டு ஆடத்துவங்குவதை சரியான அனுகுமுறை என பரிந்துரையும் செய்துள்ளார்கள்.


இறுதி ஆட்டத்தினை கற்றுக்கொள்வதையே துவக்க நிலைப்பயிற்சியாக கொண்டு ,"JOSE’ R. CAPABLANCA"என்ற முன்னாள் உலக சேம்பியன்  "Chess Fundamentals" என்ற சதுரங்கப்பயிற்சி நூலினை எழுதியுள்ளார்.அதனை அடிப்படையாக கொண்டு மேலும் பல புதிய தகவல்களையும் இணைத்து இத்தொடரினை கொண்டு செல்ல உள்ளேன்.


இப்பொழுது , வெள்ளை ஆட்டக்காரர் ஒரு ராஜா, ஒரு யானையை வைத்துக்கொண்டு  எப்படி ஒற்றை கறுப்பு ராஜாவை  செக் மேட் செய்து வெற்றி யடைகிறார் என்பதனை காண்போம். ஆட்டப்பலகையில் வீரர்களோ வேறு எந்த ஆட்டக்காய்களோ இல்லாத சூழல்.


ராஜா+ யானை VS ராஜா: இறுதி ஆட்ட நிலை:


இவ்விறுதியாட்ட நிலை பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் , இதில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் , எவ்வளவு குறைவான நகர்த்தல்களில் செக் - மேட்செய்து ஆட்டத்தினை முடிக்கிறோம் என்பதில் தான் உள்ளது.

ஏன் எனில் சதுரங்கத்தில்" 50 நகர்வுகள் விதி"(50 moves Rule) என ஒன்றுள்ளது. அவ்விதிப்படி,

# 50 நகர்த்தல்களுக்குள் ஏதேனும் ஒரு  "வீரன்"நகர்த்தப்படவில்லை எனில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்படும்.

இந்த இறுதி ஆட்ட சூழலில் பலகையில் "வீரனே"இல்லாததால் , வீரனை நகர்த்தி ஆடவே இயலாது எனவே 50 நகர்த்தல்களுக்குள்  செக் - மேட் செய்யவில்லை எனில் ஆட்டம் டிரா என தானாக அறிவிக்கப்பட்டுவிடும்.

# 50 நகர்த்தல் விதியின் இன்னொருப்பிரிவின் படி , 50 நகர்த்தல்களுக்கு எவ்வித ஆட்டக்காய்களும் வெட்டப்படவில்லை எனில் ஆட்டம் டிரா ஆகும்.

This rule applicable at all stages of the game.

# கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் , நேரம் ஆகும். ராஜா + யானை வைத்து ஆடுபவருக்கு நேரம் குறைவாக இருந்து , வெறும் ராஜாவுடன் ஆடுபவருக்கு நேரம் அதிகமிருக்குமெனில் , தேவையற்ற நகர்வுகள் செய்வதில் கால விரயம் ஆகி ,நேரம் தீர்ந்து போனால் , நேரத்தின் அடிப்படையில் தோற்க நேரிடும்.

மேலும் ஒற்றையானையை வைத்துக்கொண்டு வெற்றியடைய முடியாது என நினைத்து டிரா என நினைத்து ஏற்றுக்கொண்டால் ,நமக்கு தான் இழப்பு ஆகும்.

எனவே ஒற்றையானைவை வைத்து குறைவான நகர்த்தல்களில் செக் மேட் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.


# தனி ராஜா ஏதேனும் ஒரு மூலையிலும், யானை மற்றும் ராஜா எதிர் பக்கத்தின்  மூலைகளிலும் இருக்குமானால் குறைந்த பட்சம் 10 நகர்த்தல்களில் செக் மேட் செய்து விட முடியும்.

# தனி ராஜா ஆட்டப்பலகையின் மையத்தில் இருக்குமானால் 11-12 நகர்த்தல்களில் செக் -மேட் செய்து விட முடியும்.


நிலை-1: தனி ராஜா ஒரு மூலையில் உள்ளது.

பத்து நகர்த்தல்களில்  செக்- மேட் செய்வதனை காணலாம்.


படம்-1


 white to move.


1) Ra7 -Kg8

வெள்ளை தனது முதல் நகர்வாக , ராஜாவை நகர்த்தாமல் யானையினை a7 கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது, இதன் மூலம் கறுப்பு ராஜா கடைசி ரேங்கினை விட்டு வெளியில் நகரமுடியாமல் கட்டுப்படுத்திவிட்டது ,இதனால் அதிக அலைச்சல் இன்றி குறைவான நகர்வில் செக் மேட் செய்ய இயலும்.

கறுப்பு ராஜாவிற்கு வேறு நகர்விற்கு வழியில்லை எனவே g8 கட்டத்திற்கு செல்கிறது.

2)Kg2 - Kf8




வெள்ளை ராஜா . மூளைவிட்டமாக g2 கட்டத்திற்கு செல்கிறது.

ஏன் இவ்வாறு நகர்த்த வேண்டும்?

h1கட்டத்தில் இருக்கும் ராஜா அடுத்து  நேர் வரிசையில்  h2, h3... h6 என முன்னேறி சென்றால் என்ன ?

# பொதுவாக சதுரங்கப்பலகையில் நிறைய கட்டங்களை கடக்க வேண்டும் எனில் மூளைவிட்டமாக பயணித்தால் ,அதிக கட்டங்களை குறைவான நகர்த்தல்களில் கடக்கலாம்.

# அடுத்து , இறுதி ஆட்ட நிலையில் எதிர் ராஜாவினை துரத்தி செல்வதெனில் ,அல்லது அதனை எளிதில் பின் தொடர வேண்டும் எனில் அதற்கு நேருக்கு நேரான கட்டத்தில் நமது ராஜா இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும், அப்பொழுது தான் நமது "ரீச்சில்"இருக்கும்.

# இப்படி தனித்த ராஜாவினை செக் மேட் செய்ய வேண்டும் எனில் அதனை ஒரு குறுகிய எல்லைக்குள் அடைத்துவிட வேண்டும் அதாவது கடைசி ரேங்க் அல்லது வரிசையின் ஓரமாக தள்ளிக்கொண்டு சென்று விட வேண்டும், பின்னர்  நமது ராஜாவினை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக எதிர் ராஜாவுக்கு ஒரு வரிசை அல்லது ரேங்க் விட்டு நேரதிராக கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.

அதன் பின்னரே இன்னொரு சக்தி வாய்ந்த ஆட்டக்காய் கொண்டு . பலகையின் ஏதேனும் ஒரு மூலைக்கோ அல்லது நமது ராஜாவுக்கு நேர் வரிசையில் ஒரு கட்டம் தள்ளியுள்ள எதிர் கட்டத்தில் ,கடைசி வரிசையில் எதிர் ராஜா இருக்குமாறு செய்து கொண்டு செக் மேட் செய்ய வேண்டும்.

ஒரு ராஜா ,யானை மட்டும் உள்ள சூழலில் ,யானைக்கொண்டு ,எதிர் ராஜாவை முன்னரே கட்டுப்படுத்தியாகிவிட்டது, ராஜாவுக்கு நேருக்கு நேராக முன்னேற வேண்டும் , அதே சமயம் விரைவாக 6 வது ரேங்கினை அடைய வேண்டும் என்பதால் ராஜாவை மூலைவிட்டமாக g2கட்டத்தில் வைத்துள்ளோம்.

3)Kf3 - Ke8

4)Ke4 -Kd8

5)Kd5 -Kc8

கறுப்பு ராஜா c8கட்டத்திற்கு சென்றுள்ளது எனவே அதற்கு நேராக c6கட்டத்திற்கு வெள்ளை சென்றால் ,ஆட்டத்தினை இழுக்க ,கறுப்பு அடுத்த நகர்வில் மீண்டும் d-8 என  பின்னால் நகரக்கூடும் ,வெள்ளை ஆட்டக்காரரின் முதல் நோக்கம் ,கறுப்பு ராஜாவினை ஒரு மூலைக்கு தள்ளி செல்ல வேண்டும் என்பதே ,எனவே இப்பொழுது  வெள்ளை ராஜா c-6 கட்டம் செல்லாமல் ,

6)Kd6 -Kb8



# கறுப்பு ராஜா தொடர்ந்து கடைசி ரேங்கின் எட்டாவது கட்டங்களின் வழியாக யானையை நோக்கி நகர்கிறது, அதற்கு வேறு வழியில்லை.

# வெள்ளை ராஜா ,தொடர்ந்து மூலை விட்டமாக பயணித்து ,கறுப்பு ராஜாவுக்கு நேராக ,அதே வரிசையில் இருக்குமாறு  பார்த்துக்கொண்டு முன்னேறி ஆறாவது ரேங்கினை அடைந்துவிட்டது.

இந்நிலையில் ஒன்றினை கவனிக்க வேண்டும் , கறுப்பு ராஜா தானாக b8 கட்டத்திற்கு சென்று ஒரு மூலையை நோக்கி சென்றுவிட்டது.  அவ்வாறு மூலை நோக்கி  b 8 செல்லாமல் , கறுப்பு ராஜா c8 இல் இருந்து   d-8க்கு கறுப்பு ராஜா மீண்டும் வந்தால், d6 இல் இருக்கும் வெள்ளை ராஜாவுக்கு நேரான வரிசையில் d-8 இல் கறுப்பு ராஜா வந்துவிடும் ,எனவே  யானையை  a8 கட்டத்திற்கு நகர்த்தி  செக் மேட் செய்து விடலாம். இதற்காக தான் வெள்ளை ராஜா c-6  கட்டம் செல்லாமல் ,d6க்கு வருகிறார்.இதன் மூலம் மறைமுகமாக கறுப்பு ராஜா மூலைக்கு செல்ல அழுத்தம் அளிக்கப்படுகிறது.


எப்பொழுதுமே இன்னொரு மாற்று நகர்வினையும் கணக்கில் வைத்து இரண்டுக்கும் ஏற்ற ஒரு நகர்வினை செய்ய வேண்டும்.


இப்பொழுது தொடர்ந்து மூலை கட்டங்களான a8 or b8இல் வைத்து செக் மேட் செய்ய முடியும்.

7)Rc7 -Ka8




b8இல் இருக்கும் கறுப்பு ராஜா மீண்டும் Kc8 என முன் ,பின்னாக இழுக்காமல் இருக்க யானையை c7கட்டத்தில் வைத்து அடைக்கிறோம்.


இப்பொழுது கறுப்பு ராஜாவிற்கு வேறு கட்டங்களுக்கு செல்ல வழியில்லை என்பதால் K-a8 என மூலைக்கு சென்றுவிடுகிறது.


8)Kc6 -Kb8

இப்பொழுது , வெள்ளை ராஜா , கறுப்பு ராஜாவின் வரிசைக்கு நேராக கொண்டு செல்ல வேண்டும், எனவே c6 கட்டத்திற்கு நகர்த்தப்படுகிறது. இனிமேல் கறுப்பு ராஜாவிற்கு a8,b8 ஆகிய இருக்கட்டங்களில் மட்டுமே நகர்வு சாத்தியமாகும் எனவே வேறு வழியில்லாமல் Kb8
 கட்டத்திற்கு வருகிறது.


9)Kb6-Ka8

ராஜாவிற்கு நேர் வரிசையில் ராஜா என்ற கொள்கையின் படி வெள்ளை ராஜா Kb6 கட்டத்திற்கு நகர்கிறது. இதன் மூலம் ஏ-8 இல் அல்லது பி-8 இல் வைத்து கறுப்பு ராஜாவினை செக் மேட் செய்வது சாத்தியமாகிறது.

கறுப்பு ராஜாவிற்கு வேறு வழியே இல்லை என்பதால் மீண்டும் a8 கட்டத்திற்கு இறுதியாத்திரையாக செல்கிறது ,அவ்வ்!

இனி வெள்ளை ஆட்டக்காரரின் ஒரே நகர்த்தலில் "பாபா மர்க்கயா"தான்!




10) R c8 +#

வெள்ளை யானை"c8 "கட்டத்திற்கு சென்று செக் வைக்கிறது, கறுப்பு ராஜாவினால் வேறு எந்த கட்டத்திற்கும் செல்ல இயலாது ,அதன் முன்னால் உள்ள a7,b7 ,c7 ஆகிய கட்டங்கள் வெள்ளை ராஜாவின் கட்டுப்பாட்டில் உள்ளது, ஒரு ராஜாவின் அடுத்தக்கட்டத்திற்கு இன்னொரு ராஜா செல்ல இயலாது, என்னவே யானையின் செக்கினை தவிர்க்க இயலாத "கறுப்பு ராஜா"செக் & மேட் ஆகிவிட்டது.

இந்த இறுதி ஆட்டத்தின் மொத்த நகர்வுகளின் எண்ணிக்கை "10"மட்டுமே.

மிகச்சரியாக ஆடினால் யார் வேண்டுமானாலும் இப்படி "10"நகர்வுகளில் செக் மேட் செய்யலாம். அதிகப்பட்சம் 15 நகர்வுகளுக்குள் ஆட்டத்தினை முடிக்குமாறு பழகி கொள்ள வேண்டும்.

இந்தாட்டத்தில் "கறுப்பு ராஜா"தொடர்ந்து ஒரே பக்கமாக நகர்ந்தது ,அப்படி செய்யாமல் முன் , பின்னாக நகர்த்தினால் என்ன செய்வது என்றால் , நமது ராஜாவின் எதிர் வரிசையில் கடைசி ரேங்கில் இருக்குமாறு செய்ய வேண்டும் அல்லது , யானைக்கொண்டு ஒரு சில செக் வைத்து ஒரு மூலைக்கு விரட்ட வேண்டும்.

இந்த இறுதி ஆட்டத்தின் மொத்த நகர்வுகளையும் "GIF"அனிமேஷன் ஆக மாற்றி இணைத்துள்ளேன் ,பார்த்து பழகிக்கொள்ளவும்.

அனிமேஷன்:


# ஒற்றை ராஜா +யானை எதிர்த்து ஒற்றை ராஜா என்ற இறுதி ஆட்டத்தில் ஏதேனும் ஒரு மூலை என நான்கு மூலைகளில் வைத்து செக் மேட் செய்யலாம்.

அல்லது நான்கு பக்கங்களில் கடைசி ரேங்க் அல்லது வரிசையில் நமது ராஜாவுக்கு நேருக்கு நேராக ஒரு கட்டம் தள்ளி முன்னால் உள்ள நிலையில் யானை மூலம் செக் மேட் செய்யலாம்.

எல்லாவற்றின் அடிப்படையும் ஒன்று தான் ஆனால் எட்டு இடங்களில் செக் மேட் செய்ய இயலும் , மற்றபடி வேறு எந்த நிலையிலும், அல்லது சதுரங்கப்பலகையின் மையத்தில் வைத்தோ செக் மேட் செய்ய இயலாது.

புரிந்து கொள்ள வசதியாக எட்டு நிலைகளில் செக் மேட் செய்யப்படும் படங்கள்.

நான்கு மூலைகளில் செக்-மேட்:


நான்குப்பக்கங்களிலும் கடைசி வரிசையில் செக்-மேட்:



# இறுதி ஆட்டத்தில் எவ்வகையான ஆட்டக்காய்கள் உள்ள நிலையில் என்ன முடிவு கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்,

# ஒரு ராஜா +யானை VS தனி ராஜா

# ஒரு ராஜா + ராணி VS தனி  ராஜா,

# ஒரு ராஜா + இரண்டு பிஷப் VS தனி ராஜா

# ஒரு ராஜா + ஒரு பிஷப்& குதிரை VS  தனி ராஜா

மேற்கண்ட இவ்வகையான நிலைகளில் கூடுதல் ஆட்டக்காய்கள் உள்ளவருக்கு வெற்றி கிடைக்கும்.
***********
கட்டாயம் டிரா ஆகும் நிலைகள்,

# ஒரு ராஜா + ஒரு பிஷப் VS தனி ராஜா

# ஒரு ராஜா + ஒரு குதிரை அல்லது இரண்டு குதிரைகள் VS தனி ராஜா

என நிலை இருந்தால் செக்  மேட் செய்யவே முடியாது, எனவே விதிப்படி டிரா ஆகும்.

இரண்டு குதிரைகள் இருந்தாலும் செக் மேட் செய்யவே முடியாது. பலகையில் வேறு ஏதேனும் ஆட்டக்காய்கள் இருக்க வேண்டும்,அது எதிரணியின் சிப்பாயாகவாது இருக்க வேண்டும். ஏன் எனில் குதிரையை பொறுத்த வரையில் அதன் அருகில் உள்ள கட்டத்திற்கு சென்றால் எதுவும் செய்ய இயலாது, மற்ற ஆட்டக்காய்களிற்கு அவ்வாறு செல்ல இயலாத கட்டம் என ஏதேனும் ஒன்றாவது இருக்கும்.


தனி ராஜா என்ற நிலையில்லாமல் ,

ஒரு யானை எதிர் ஒரு பிஷப் அல்லது குதிரை

இரண்டு பிஷப் எதிர்த்து ஒரு பிஷப் அல்லது குதிரை


ஒரு பிஷப் + குதிரை எதிர்த்து எதிர் நிற பிஷப் என இறுதி ஆட்ட நிலை இருந்தாலும் டிரா ஆகிவிடும்.


கவனக்குறைவாக ஆடினால் மட்டுமே தோற்கடிக்க முடியும் எனும் இறுதி ஆட்ட நிலைகள் இவை.


"50"நகர்வு விதி(50 moves rule) என இருப்பது போல Draw  ஆக என இன்னும் சில டிரா செய்ய வைக்கும் விதிகளும் உள்ளன.

# தொடர்ந்து மூன்று முறை ஒரே நிலையை(repeated position)ஆடினால் ஆட்டம் டிரா ஆகும்.

இதனை மிர்ரர் இமேஜ் பொசிஷன் டிரா என்பார்கள்.


# செக் மேட் செய்யாமல் வெறுமனே செக் மட்டுமே தொடர்ந்து கொடுத்தாலும் விதிப்படி டிரா ஆகிவிடும். இதனை  Perpectual check"(PP)டிரா என்பார்கள். அதிகப்பட்சம் தொடர்ந்து 15 செக் கொடுக்கலாம் ,ஆனால் மூன்றாவது செக் வைத்து தப்பிவிட்டாலே விதியை சொல்லி "டிரா"கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில சிறுவிதிகள் உள்ளன,

# நமது நகர்வு செய்ய வேண்டிய சூழலில் தேவையில்லாமல் நமது ஆட்டக்காயினையோ எதிராளியின் ஆட்டக்காயினையோ "தொடக்கூடாது".

அப்படித்தொட்டுவிட்டால் , விதிக்குட்பட்ட நகர்வு செய்ய முடியும் எனில் அதனை நகர்த்தியாக வேண்டும். எதிராளியின் ஆட்டக்காய் எனில் அதனை வெட்ட முடியும் எனில் வெட்ட வேண்டும்.

இதனை "Touch piece" விதி என்பார்கள்.

#  கோட்டைக்கட்டுதல்(castling)செய்யும் போது கூட முதலில் ராஜாவினை தான் தொட வேண்டும், அதன் பின்னரே யானையை தொட வேண்டும், மாறி யானையை தொட்டுவிட்டால் அதனை "டச் பீசாக"கருதி நகர்த்த வேண்டும்.

# நாம் அவசரப்பட்டு ஒரு ஆட்டக்காயினை தொட்டுவிட்டோம் ஆனால் அதனை  விதிப்படியான நகர்த்தல் செய்ய வாய்ப்பே இல்லை எனில் , அடுத்து எப்பொழுது விதிப்படி நகர்த்தும் சூழல் வருகிறதோ அப்பொழுது "கட்டாயம் நகர்த்த "வேண்டும் ,ஹி...ஹி தொட்டால் தொடரும் , இதனை "enforced move"என்பார்கள்.

இவ்வாறு தவறுதலாக தொட்டு ஆட வேண்டிய கட்டாயத்தால் ஆடி ,ஆட்ட நிலை பாதகமாக மாறிவிடும் சூழல் உருவாகலாம், எனவே கவனமாக ஆட வேண்டும். சர்வதேச போட்டிகளில் கூட இப்படி ஆகியுள்ளது.

# ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஆட்டக்காய்களை தொட வேண்டும்,லேசாக கட்டத்தில் இருந்து விலகியுள்ள ஆட்டக்காயினை சரி செய்ய வேண்டுமெனில் , தொடும் முன்" "I ADJUST'"என அறிவிக்க வேண்டும், சிம்பிளாக "ADJUST"என்று சொல்வது வழக்கம்..


இன்னும் பல விதிகள் உள்ளன ,அவற்றை எல்லாம் தேவையான இடங்களில் ஆங்காங்கே சொல்கிறேன், ஒரே நேரத்தில் வரிசையாக சொன்னால் மனதில் பதியாது.


# COPYCAT TRAP.

பதிவுலகில் ஒருவர் எழுதின பதிவ அப்படியே காபி & பேஸ்ட் அடிக்கும் சிலர் இருக்கிறார்கள், சிலர் பிரபல பத்திரிக்கைகளில் வருவதை எல்லாம் காபி & பேஸ்ட் அடிச்சு தினம் ரெண்டு பதிவுனு போட்டு கொலையா கொல்லுறதும் உண்டு.

அதே போல சதுரங்கத்திலும் நாம என்ன நகர்த்துறமோ அதையே காபி அடிச்சு திரும்ப ஆடுறவங்களும் உண்டு, நம்ம நகர்வுக்கு நேருக்கு நேர் அப்படியே பிரதி எடுத்து ஆடுவாங்க , இதனை"காப்பியடிக்கும்(திருட்டு) பூனை"என்பார்கள்.

காப்பி  அடிச்சாலே சரக்கு இல்லைனு தானே அர்த்தம் எனவே காப்பி அடிச்சவங்க எளிதாக மாட்டிக்கிட்டு தோற்றுவிடுவாங்க :-))

அப்படியே காப்பி அடிச்சும் ஆடும் ஆட்டம்,



1)e4- e5

2) Nf3 -Nf6

3)N X e5 - N X e4

வெள்ளை ஆடியதை அப்படியே திருப்பி செய்தது கறுப்பு.

4) Qe2 - Nf6??

5) Nc6 + 

இப்படி செய்வதனை discoverd chcek என்பார்கள், ராஜாவுக்கு செக் அதே நேரம் ராணியும் தாக்கப்படுகிறது,எனவே வெள்ளைக்கு கறுப்பு ராணி "பலியாவது"நிச்சயம்.


இப்படி விளையாடி  மாட்டிக்கிறதை COPYCAT TRAP என்பார்கள், இப்படி துவக்க ஆட்டத்தில் ,நாம ஏன் யோசிச்சு ஆடனும் , வெள்ளையாட்டக்காரர் செய்வதை அப்படியே செய்வோம்னு ஆடி ஒருத்தர் மாட்டிக்கிறதை "GIF"அனிமேஷனில் பாருங்கள்!

COPYCAT TRAP அனிமேஷன்.



இந்த COPYCAT TRAPக்கு ஆன்டி கிளைமாக்ஸ் ஒன்னு இருக்கு அதை அடுத்தப்பதிவில் காணலாம்.  முடிந்தால் நீங்களும் கண்டுப்பிடிச்சு சொல்லுங்கள்.


கட்டங்கள் தொடரும்...

----------------------------------------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

# chess fundamentals - jos Capablanca

# The final theory of chess - Gary M. Danelishen

# FIDE ,wiki and google

இணைய தளங்கள் ,நன்றி!
--------------------------------------------

அஃதே இஃதே-8

$
0
0
(நல்ல மேய்ப்பர்...ஹி...ஹி..!)


GOOD SHEPHERD.

மேரியம்மா புள்ள ஏசய்யாவுக்கு பொறந்த நாளுனு ஊருக்குள்ள எல்லாம் பேசிக்கிட்டாங்க, நமக்கு யாருவூட்டு பொறந்த நாளு, கண்ணாலம்னாலும் ஒன்னுதேன் , ஊருல கண்ணாலம் மாருல சந்தனம்னு கெளம்பிடுறது , பொழுது சாயச்சொல்ல போய் கேக்கு சாப்புட்டு வரனும் ,பின்ன ஊருல நல்லது கெட்டதுனா என்னனு போய்க்கண்டுகிட வேணாமா?  அப்புறம் என்னத்துக்கு மனுசப்பயலா பொறந்தோங்கிறன்?

ராவுத்தர் "ரம்சான்"நோம்பு வச்சு பிரியாணி கொடுத்தாலும் திங்கிறது தான் ,நமக்கு அல்லா ச்சாமியும் ஒன்னுந்தேன்,அய்யனார் சாமியும் ஒன்னுந்தேன்! எந்த ச்சாமியாச்சும் நம்மள துள்ள துடிக்க  வெட்டணும்,கொல்லணும், அழிக்கணும்னு சொல்லுதா? அப்படி தூசானமாச்சொல்லுறதுலாம் யாரு? எல்லாம் அவனுங்கந்தேன் அதான் அவனுங்க ... கொடியப்பிடிச்சிக்கிட்டு வோட்டுக்கேட்டு வருவாய்ங்களே அவனுங்களேந்தேன்...முன்னலாம் கட்சி சின்னத்த காட்டி வோட்டுக்கேட்டாய்ங்க ... அப்புறம் ஊருக்குள்ள ஏகப்பட்ட பயப்புள்ளைக "தனி தனியா சின்னம்"போட்டுக்கிட்டு வோட்டுக்கேட்கவும் சாமிப்பேர சொல்லி ஓட்டுக்கேட்க "சண்டைய கெளப்பிவிட்டு"நம்ம ச்சாமிய கும்புடுற பயக எல்லாம் நமக்குதேன் வோட்டு போடனும் ,இல்லாங்காட்டி ஊருல எல்லாம் "அவனுங்க ச்சாமியாப்பூடும்னு"சொல்லி பயங்காட்டி வோட்டுக்கேட்க ஆரம்பிச்சுட்டானுங்க, இதெல்லாம் செய்யச்சொல்லி எந்த சாமிய்யா சொல்லிச்சு? சாமிக்கு அரசியல் தந்திரமும் தெரியாது ஆரியருங்க மந்திரமும் தெரியாது!

வெள்ளைக்கார தொரைங்க மொத மொதல்ல கப்பல்ல வந்து மேரியம்மாவுக்கு செலை வச்சு கோயில் கட்டணும்னு சொன்னப்போ ,மேரியம்மனும் நம்ம மாரியம்மனும் ஒன்னுதேன்னு நெனச்சவங்கலாம் யாரு? எல்லாம் நம்ம பயகதேன்... அதோட மட்டுமா விட்டாங்க மொத ஆளா முன்ன நின்னு செங்கல்,மணல் எல்லாம் கொடுத்து ,ஆளா பேரா நின்னு கோவில் கட்டவும் உதவுனாங்க கூடவே ஈசானிய மூலையில மொதக்கல்லு வச்சு ..கல்ப்பூரம் கொளுத்தி,தேங்காப்பழம் வச்சு படைச்சு ஒரு கோழிய அறுத்து காவுக்கொடுத்தா "தொட்டக்காரியம்"தொலங்கும்னு நல்ல வழியும் ச்சொன்னவய்ங்க தான் நம்ம மக்கள்,அம்ப்புட்டு வெள்ள மனசப்பூ!

மேரியாத்தான்னா, வெள்ள சீலைக்கட்டி ,பொத்தவம் படிச்சு ,படையலுக்கு கேக்கு வச்சு கும்புடுறச்சாமி, மாரியத்தான்னா, மஞ்ச சீலைக்கட்டி , கரகம் எடுத்து கூழ் ஊத்திக்கும்புடுறச்சாமினு தான் நம்ம மக்க பார்த்தாங்க அதத்தாண்டி வேற எந்த வேத்துமையும் பார்க்க  நம்ம பாட்டன் பூட்டன்களுக்கு தெரியாதப்பூ!

படிக்காத சனங்களா இருந்தாலும் கும்புடுறதுல என்னப்பு சண்டைனு சமரசமா வாழ்ந்தவய்ங்க, ஆனா இப்ப எல்லாம் கொழாப்போட்டு படிச்சுப்புட்டு என்னமோ இன்டெரெட்டாம் அதுல போயி உஞ்சாமி பெருசா ,எஞ்சாமி பெருசா ,கறி சோறு துண்ணலாமா கூடாதான்னுலாம் சண்டைப்போட்டுக்கிறாய்ங்க!என்னத்த படிச்சாங்களோ தெரியலப்பு...படிப்பு இருக்கு ஆனா பண்பு இல்லையே... நான் என்ன செய்வேன்ன்ன்!!!

காலங்காலமா ஊருக்கு ஒரு சாமி,ஆளுக்கு ஒரு சாமினு கும்புட்ட மக்கந்தேன் ஆனா காஷ்மீர்  எல்லையில வெளிநாட்டான் சண்டைக்கு வரான்னா "வெற்றி வேல் வீரவேல்னு"சொல்லிக்கிட்டு துண்ட உதறி தலையில உருமாக்கட்டிக்கிட்டு வேட்டிய தார்ப்பாச்சா இழுத்து முடிஞ்சுக்கட்டிக்கிட்டு ,கன்னியாக்கொமரியில இருந்து ரயிலேறி மொத ஆளா ஓடிப்போய் யுத்தத்துல கலந்துக்கிட்டாய்ங்கப்பூ ,அதமாரியா இன்னிக்கு பெருசா படிச்ச பயப்புள்ளைக இருக்காங்க ...படிச்சதும் மொதல்ல எந்த வெளிநாட்டுக்கு ஓடிப்போலாம்னு ஊருல இருக்க எல்லா வெளிநாட்டுக்கம்பெனி வாசலுலவும் கெடையா கெடக்காய்ங்க.



சாமிலாம் யாரு? யாருங்கிறேன்... எல்லாம் ஒருக்காலத்தில நம்ம பாட்டன் பூட்டன் தாத்தனா இருந்தவய்ங்கதேன் ,அவிங்க காலத்துக்கு பொறவு சாமியா நெனச்சு கும்புடுறோம், வடக்க, மலைக்கு அந்த பக்கம் ஆடு மேச்சுட்டு சனங்களுக்கு  நல்லகதி கிடைக்கனும்னு புத்திமதி சொன்னவருதேன் மேரியம்மா புள்ள ஏசய்யா, அதமாரி மலைக்கு இந்த பக்கமா மாடு மேய்ச்சுட்டு சனங்களுக்கு நல்ல புத்தி சொன்னவரு தான் கிச்சிணய்யா ... அவரு ஆட்டுக்கார வேலன்னா இவரு மாட்டுக்கார வேலன்... இதுல என்ன பெருசா ஒசத்தி தாழ்த்தினு மல்லுக்கட்டிக்கிட்டு நிக்க இருக்கு?

நமக்கு தெரிஞ்சதெல்லாம் சாமினா கும்பிட்டுக்கணும் சட்டம்னா மதிச்சு நடந்துக்கனும் அம்புட்டுதேன். அத்துவானக்காட்டுல புழுதி ஒழவு ஓட்டி சோளம் வெதைச்சுட்டு வாரோம் ,யாரு தண்ணி ஊத்துனா?அதுக்கெல்லாம் காவ ஆரு ? எல்லாம் முனிசுபரனும் அய்யனாருந்தேன் காவல், உடையவன் இல்லாம வேற ஆராச்சும் போய் கைய வச்சிட உடுவாய்ங்களா? மீறி கைய வச்சா"ரெத்தங்கக்கி சாவனும்"அம்புட்டு உக்கிரமான காவதெய்வங்க, அதமாரியே ஆடு ,மாடு மேச்சலுக்கு வுடுறோம் நாய்,நரினு ஒன்னும் சீண்டாம ,களவு போகமா அத்தனையும் வூடு வந்துறும் எல்லாம் சுடலை மாடன் காவல்,இம்புட்டு காவந்து செய்யுற ச்சாமிய நாமளும் சும்மா உடுவமா ... அறுப்பு முடிஞ்சதும் மொத நெல்லு,சோளம்,கம்பு ,கேவுருனு எதா இருந்தாலும் காவக்காத்த சாமிக்குந்தேன், பொங்க வச்சு ,கெடா வெட்டி படையல் போடாம வெள்ளாமையில இருந்து ஒரு குறுணிக்கூட விக்க மாட்டோம்ல.

அய்யனாரு, முனிஸ்பரன், சுடலமாடன்,கிச்சிணய்யானு எல்லா சாமியும் கும்பிட்ட மக்கய்தேன் ,அல்லாச்சாமி நம்ம நாட்டுக்கு வந்தப்போ அவரையும் கும்புட்டுக்கிட்டாய்ங்க, ஏசய்யா வந்தப்பவும் கும்புட்டுக்கிட்டாய்ங்க ,சாமிங்க பேருதேன் வேற ,ஆனா கும்புடுற மக்க யாரு எல்லாம் நம்ம மக்கந்தேன், பொறவு என்னத்துக்கு சண்டைங்கிறேன்?

சனத்தொகை போல சாமிங்களும் அதிகமாகி அடிதடியா ஆனப்போ, எலே காட்டுப்பயலுகளா எதுக்கு சண்டைனு திட்டி, பெரியார் "ராமசாமிய்யா"கூட்டம் போட்டு சொன்னப்போ அதுக்கும் மொத ஆளா ஓடிப்போயி "அய்யா வாழ்க"னு தொண்ட நரம்பு பொடைக்க கோசம் போட்டதும் நம்ம மக்கதேன்.

வடக்கத்திக்காரய்ங்க "இந்தி"தான் படிக்கணும்னு சொன்னப்போ ,காட்டுமிராண்டி பாஷைனு சொன்னாலும் அதான் எங்க பாஷை, தமிழ விட முடியாது ...தமிழை காப்பாத்த ரயிலை மறிடானு பெரியாரய்யா சொன்னதும் முன்ன ஓடிப்போயி தண்டவாளத்துல தலைய கொடுத்ததும் நம்ம மக்கதேன்.

சாமி இருக்குனு சொன்னாலும் இல்லைனு சொன்னாலும் தமிழன், தமிழ் நாடுனு சொன்னால் எல்லாருமே ஒன்னுக்கூடி தான் இந்த மண்ணுல நின்னாங்க,இனிமேலும் நிப்பாய்ங்க அதுல ஒரு மாத்தமும் வாராது.

மேரியம்மா புள்ள ஏசய்யாவுக்கு பொறந்த நாளுனு சொல்லி மாதாக்கோயில்ல மணியடிச்சு கூப்பிட்டுருக்காய்ங்க , மதிச்சு கூப்புடுறது மனுசத்தன்மை , அதை மதிச்சு போறது பெரிய மனுசத்தன்மை ... எனக்கு பெரிய மனுசத்தன்மை இருக்கு நா போய் கேக் சாப்புட்டு வாரேன்...வாரிகளா போவோம் ?

அந்த மாதாக்கோயில் மணி அடிக்குதய்யா ...

மார்கழி மாசக்குளிர் அடிக்குதய்யா ...!!!

ஓ ஏசய்யா தோ வாரோமய்யா ,வாரோம்!

 நீரும் பெரிய மனுசனா இருந்தா வாருமய்யா போலாம்..வரச்சொல்லோ "இரானி பாய்"டீக்கடையில தேத்தண்ணி குடிச்சிப்புட்டு வரலாம் ..இந்த குளிருக்கு சூடாத்தேத்தண்ணீ குடிச்சா தேவாமிருதமா இருக்குமய்யா... அடச்சும்மா வாரும் தேத்தண்ணிக்கு பைசா கூடா நானே கொடுக்கேன்...ஹி...ஹி இன்னிக்கு நாந்தேத்தண்ணி வாங்கி கொடுத்தா நாளப்பின்ன காப்பித்தண்ணி வாங்கி கொடுக்காமலா போயிரப்போறீர்? நீரும் பெரிய மனுசந்தேன்!!!

பின்குறிப்பு:

கடவுள் இருக்குனு நம்புறவன விட கடவுள் இல்லைனு நம்புறவன் "மனிதனாக "வாழ்கிறான்!

---------------------------

அவார்டுக்கு ஆப்பு!

ஆந்திராவின் புகழ் மிகு நடிகர்களான  "பெத்தராயுடு"மோகன்பாபு, மற்றும் நகைச்சுவை புயல் "பிரம்மானந்தம்ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட பத்மாசிரி விருதுகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க சொல்லி "ஆந்திர உயர் நீதி மன்றம்"உத்தரவிட்டுள்ளது.



காரணமென்னவெனில் ,சமீபத்தில் மோகன் பாபு குடும்பத்தார் தயாரித்த "Denikaina Ready"என்ற தெலுங்கு படத்தின் விளம்பரம் மற்றும் டைட்டிலில் இருவரும் தாங்கள் பெற்ற பத்மசிரி விருதுகளை அடைமொழியாக பயன்ப்படுத்தி இருக்கிறார்களாம், அதற்கென்ன எல்லாரும் தமிழ் நாட்டில அதைத்தானே செய்கிறார்கள் என நினைக்கலாம், ஆனால் மத்திய அரசின் விருதுக்கான விதிமுறைகள் படி விருதுப்பெற்றவர் அவற்றினை பெயருக்கு முன்னால்,பின்னால் அல்லது விளம்பரம் , லெட்டர் பேட் ,விசிட்டிங் கார்ட் என எதிலும் பயன்ப்படுத்தக்கூடாதாம். மீறிப்பயன்ப்படுத்தினால் விருது ரத்து செய்யப்படுமாம்.

இது வரையில் மத்திய அரசாக அப்படி ரத்து செய்ததேயில்லை, ஆனால் இச்சட்டத்தினை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட பா.ஜக கட்சியினை சேர்ந்த ஒருவர் ,ஆந்திர உயர் நீதி மன்றத்தில் "பொது நல வழக்கு"தொடர்ந்துவிட்டார் ,அதனடிப்படியிலேயே ஆந்திர உயர் நீதி மன்றம் "விருதுகளை "இரு நடிகர்களும் தாங்களாகவே திரும்ப ஒப்படைத்து விடுமாறு உத்திரவிட்டுள்ளது.

செய்தி:

The AP High Court on Monday faulted the actors for prefixing the name of the award to their names in the credits of the Telugu movie Denikaina Ready that was released in 2012.

Chief Justice Kalyan Jyoti Sengupta pointed out that it would be better for the actors to surrender their awards to the Centre in view of the allegation as gentlemen, and to uphold morals.

The Chief Justice, along with Justice P.V. Sanjay Kumar, was dealing with a PIL filed by senior BJP leader N. Indrasena Reddy, who had challenged the alleged inaction of the Centre in not recommending to the President to annul the awards.

http://www.deccanchronicle.com/131224/news-current-affairs/article/mohan-babu-brahmanandam-get-hc-stick

செய்தி- டெக்கான் கிரானிக்கல், நன்றி!

இவ்வழக்கின் அடிப்படையில் தமிழ் நாட்டில் பலரும் விருதினை திரும்ப ஒப்படைக்கும் சூழல் உருவாகலாம் , லோகநாயகர் முதற்கொண்டு பலரும் சிக்கும் வாய்ப்புள்ளது.


லோகநாயகரின் பட விளம்பரங்களில் தவறாமல் "பத்மசிரி"எனப்போடப்பட்டிருக்கும், இணையத்தில் அப்படிப்பட்ட படத்தினை தேடிய போது அவரது ரசிகமணி "சந்தியர்கரண்"என்பவரின் தளத்தில் கிடைத்த படம் இது.படத்திற்கு நன்றி!




இசைப்புயல் ஏ.ஆர்.ரெஹ்மானும் பெயருக்கு முன்னால் "பத்மசிரி"எனப்போட்டுக்கொள்வதை அனுமதித்துள்ளார்.

தெனாலி பட டைட்டிலில் "பத்மசிரி"ஏ.ஆர்.ரெஹ்மான்என வந்துள்ளது.

இன்னும் வைரமுத்து,விவேக் போன்றோரும் விருதினை பெருமையாக திரைப்பட டைட்டிலில் பயன்ப்படுத்தியுள்ளதை பார்த்திருக்கிறேன். படங்கள் கிடைத்தால் அவற்றையும் இணைக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் அவர்களும் "பத்மவிபூஷன்"விருது பெற்றுள்ளார் ,ஆனால் அவரது விளம்பரங்கள் விருதுடன் காணக்கிடைக்கவில்லை, தலைவரு வழி எப்பவும் தனி வழி தான் , சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விட வேற பட்டம் தேவையில்லைனு நினைச்சு ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டார் போல!

# மன்னாதி மன்னர்!


புரட்சித்தலைவர் என அன்புடன் அழைக்கப்படும்"எம்சிஆர்"அவர்களின் திரை கலையுலக பயணம் அமெரிக்க இயக்குனர் எல்லீஸ். ஆர்.டங்கனின் "சதிலீலாவதி"(1936)படத்தில் ஒரு சிறிய வேடத்தில் காவலராக நடித்ததில் இருந்து தான் துவங்கியது. இதே படத்தில் தான் எம்.ஆர்.ராதா,டி.எஸ்.பாலையா ,என்.எஸ்.கிருட்டிணன் ஆகியோரின் திரையுலக பயணமும் துவங்கியது. ஹி...ஹி ...இப்படத்தில் தான் தமிழ் சினிமாவின் "ஐடெம் சாங்க்"கலாச்சாரத்தின் முதல் புள்ளியாக ஒரு "காபரே"டான்ஸ் பாட்டும் இடம்பிடித்தது. அதன் பின் வெளியான படங்களில் "கிளப் டான்ஸ்"இல்லைனா படம் ஓடாதுனு கலையுலக சிற்பிகளே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அவ்வ்!


சில பல சிறிய வேடங்களை தாண்டி பின்னர் "ராஜகுமாரி"(1947)படத்தில் இருந்து கதையின் நாயகனாக நடிக்க துவங்கினார், இப்படி வெற்றிகரமாக திரையுலகில் பவனி வந்த காலத்தில் கி.பி 1953 இல்  "ஜெனோவா"என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் மலையாள திரையுலகிலும்  கதாநாயகனாக அறிமுகமானர். இப்படமே எம்சிஆரின் ஒரே மலையாளப்படம் ஆகும்.


ஜெனோவா திரைப்படம் கிருத்துவ புராணத்தின் அடிப்படையில் உருவான திரைப்படமாகும், இப்படத்தில் ராணி ஜெனோவாக "பி.எஸ்.சரோஜாவும்"யூதமன்னர் சிப்ரஸாக"எம்சிஆரும்"நடித்தனர். இயக்கம் எஃப்.நாகூர், இசை.எம்.எஸ்.விசுவநாதன்(முதல் மலையாள இசையமைப்பு).

கி.பி 1953 ஆம் ஆண்டின் ஈஸ்டர் தினத்தன்று திரையிட திட்டமிடப்பட்டு , தயாரிப்பு சிக்கல்களால் 13 நாட்கள் தாமதமாக வெளியானாலும் ,அவ்வாண்டின் மிகப்பெரிய மலையாள வெற்றிப்படமாக"ஜெனோவா"அமைந்தது.பின்னர் இரு மாதங்களுக்கு பிறகு தமிழிலும் அதே பெயரிலேயே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாயிற்று.

கதைப்படி மன்னர் சிப்ரசின் மனைவி ஜெனோவா, திருமணம் ஆகி சில நாட்களில் போருக்காக மன்னர் பரதேசம் சென்றுவிடுகிறார்,ஆனால் அப்பொழுதே ராணி "ஜெனோவா"கருவுற்றுவிடுகிறார். அது மன்னருக்கு தெரியாது.

சிப்ரஸ் போர்க்களத்தில் இருக்கையில் மந்திரி "கோலோ"(மலையாளத்தில் ஆலப்பி வின்சென்ட்,தமிழில் பி.எஸ்வீரப்பா)வுக்கு ராணி ஜெனோவா மீது மையல் உருவாகி அடைய முயற்சிக்கிறார்,அவ்வேளையில் நம்பிக்கையான வேலையாள் "கார்த்தோஸ்"குறுக்கிட்டு ராணியை காப்பாற்றுகிறார், வெளிப்படையாக தனது சதியை காட்டிக்கொள்ள இயலாத நயவஞ்சக "மந்திரி"ராணிக்கும் வேலைக்காரன் "கார்த்தோசுக்கும்"கள்ளத்தொடர்பு எனக்கதைக்கட்டி ,இருவரையும் சிறையில் அடைக்கிறார்.


யுத்தம் முடிந்து வரும் மன்னர் "சிப்ரசோவும்"மந்திரியின் பேச்சினை நம்பி ,ராணி ஜெனோவாவினை நாடுக்கடத்திவிட்டு, வேலையாள் "கார்த்தோசுக்கு"மரணதண்டனை விதிக்கிறார். கர்ப்பிணியாக காட்டில் திரியும் ராணி ஜெனோவாவினை காக்கும் பொருட்டு "மேரியம்மா"பிரசன்னம் ஆகி சுகப்பிரசவம் ஆக செய்து , தாயையும் சேயையும் காக்கிறார். அவர்கள் காட்டிலேயே வாழ்கிறார்கள்.

இதற்கிடையில் நயவஞ்சக மந்திரி "மன்னர் சிப்ரசோவை"சிறையில் அடைத்து ஆட்சியைப்பிடிக்கிறார்,ஆனால் படைத்தளபதிக்கும்(எம்.ஜி.சக்கரபாணி) மன்னராக ஆசை எனவே அவரும் கிளர்ச்சி செய்கிறார், இடையில் மன்னரின் விசுவாசிகள் ,மன்னரை மீட்கிறார்கள் , மூன்று தரப்பாக சண்டை நடக்கிறது, படைத்தளபதி மட்டும் இறக்கிறார், மந்திரி கோலோ தப்பிவிடுகிறார்.

பின்னர் ராணி ஜெனோவா நிரபராதி என அறிந்து தேடிச்செல்லும் மன்னர் சிப்ரசை ,மந்திரி கோலோ காட்டில் வழிமறித்து தாக்குகிறார்,சண்டையின் முடிவில் மந்திரி கொல்லப்படுகிறார்,ஆனால் காயமுற்ற மன்னர் சிப்ரசோ மயக்கமாகிவிடவே ,அப்பொழுது அங்கு வரும் அவரின் கானக புதல்வன் கண்டெடுத்து மீட்டு அன்னையுடன் சேர்க்கிறார், பின்னர் மனமாச்சரியங்கள் ஒழிந்து ,நாடு திரும்பி அனைவரும் மகிழ்வாக வாழ்வதாக "பாசிட்டிவ்"ஆக படத்தினை முடித்து மங்கலம் பாடுகிறார்கள்.

இப்படத்திற்கு மலையாளத்தில் எம்சிஆருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது செபாஸ்தியன் குஞ்சு மற்றும் குஞ்சு பாகவதர் ஆகும். ஒரு மலையாளப்படத்தில் நாயகருக்கு முதன் முதலில் டப்பிங் கொடுக்கப்பட்டது இப்படத்தில் தானாம். பாடல்களை ஏ.எம்.ராஜா மற்றும் பி.லீலா பாடியுள்ளனர்.



பின்னாளில் தமிழ் திரையுலகின் மாபெரும் வசூல் சக்ரவர்த்தியாக மாறியப்பின்னரும் "ஜெனோவா"படத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தினால் கிருத்துவ புராணப்படமொன்றில் ஏசுநாதராக நடிக்க வேண்டும் என்ற ஆசை எம்சிஆருக்கு ஏற்பட்டது. ஆனால் சரியான நேரமே வாய்க்கவில்லை போலும், பின்னர் 1971 இல் மலையாள சினிமா தயாரிப்பாளர் ஜோசப் என்பவர் "ஏசுநாதர்"என்றப்பெயரிலேயே அவரின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்க இருப்பதாக கூறி எம்சிஆரை அனுகவும் ,மகிழ்வுடன் சம்மதித்துள்ளார், மேக் அப் எல்லாம் போட்டு "ஏசுநாதர்"கெட் அப்பில் எம்சிஆரின் புகைப்படத்துடன் பத்திரிக்கை விளம்பரங்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் ஏனோ  வெளியில் சொல்லப்படாத சில பல காரணங்களால் பின்னர் அப்படம் கைவிடப்பட்டது.



இத்திரைமுயற்சி எம்சிஆரின் திரைப்பட வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றென சொல்கிறார்கள். படம் உருவாகாமல் போனதற்கு காரணம் "வழக்கம்"போல எம்சிஆரின் இழுத்தடிப்பு எனவும் ,இல்லை படத்தயாரிப்பாளரின் வேறு படங்கள் தோல்வி அடையவே பண முடையால் தடைப்பட்டது என்கிறார்கள் ஒரு சிலர். இன்னும் சிலரோ , படத்தயாரிப்புக்காக வெளியிட்ட விளம்பரத்தில் வந்த "ஏசுநாதர்"உருவ  எம்சிஆரின் படத்தினையே ஏசுநாதராக கருதி மக்கள் வழிப்பட ஆரம்பித்துவிட்டார்களாம்  ,எனவே படம் வெளியானால் மக்களை தவறாக வழிநடத்தியதாக ஆகிவிடும் எனக்கருதி எம்சிஆரே படத்தினை நிறுத்திவிட்டு தயாரிப்பாளருக்கு செலவிட்ட தொகையினை அளித்துவிட்டார் என்கிறார்கள். உண்மை என்னவென எம்சிஆருக்கும் ,தயாரிப்பாளருக்கும் மட்டுமே தெரியும்!!!

எம்சிஆரின்  நினைவு நாள் december-24.
----------------------------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

# http://www.hindu.com/mp/2010/04/05/stories/2010040550910400.htm

# http://www.hindu.com/mp/2011/04/25/stories/2011042550900500.htm

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
---------------------------------------
Viewing all 110 articles
Browse latest View live