Quantcast
Channel: வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்
Viewing all 110 articles
Browse latest View live

ஆட்டையப் போடுறது!

$
0
0
asin1

( பலப்பேரு புக்கையே ஆட்டைய போட்டுறாங்க...அவ்வ்வ்!)



தற்போதெல்லாம் திரைப்படங்கள் வெளியான அன்றே அப்படத்தின் மூலம் எது என "மூலாதாரத்தில்"இருந்து தோண்டியெடுத்து வெட்ட வெளிச்சம் ஆக்கிவிடுகிறார்கள் வலைமகன்கள், இதெல்லாம் இணையமெனப்படும் வஸ்து பாமரனுக்கும் சல்லீசாக கிடைக்க ஆரம்பித்ததன் விளைவாகும். இதனால் பல போலி அறிவுசீவிகளுக்கு தான் பெருமிழப்பு எனலாம்.

இது போன்ற ஆட்டைய போடும் சமாச்சாரங்கள் எல்லாம் தற்கால கண்டுப்பிடிப்பல்ல, தமிழ்ச்சூழலுக்கு திரைப்படமென  ஒரு சமாச்சாரம் அறிமுகம் ஆனக்காலந்தொட்டே"ஆட்டைய போடும் கலாச்சாரம்"துவங்கிவிட்டது என்பது தான் குறிப்பிடத்தக்கது,பல அயல்நாட்டுபடங்களை அப்படியே தமிழாக்கம் செய்து புத்தம் புதியபடமாக எடுப்பது,ஆங்கில நாவல்களை சுட்டு எடுப்பது என்று ஆரம்பித்தார்கள் அப்படியே கொஞ்சம் முன்னேறி தமிழில் வெளியான படைப்புகளையும் பதம் பார்த்துள்ளார்கள், சில சமயமங்களில் எழுத்தாளரை அழைத்து "ஸ்டோரி டிஸ்கஷன்"செய்து கதைய உருவிட்டு அனுப்பவும் செய்துள்ளார்கள், ஹி...ஹி பெரியவா  செய்தால் பெருமாள் செய்தாப்போலனு இக்கால டயரடக்கர்களும் அதே வழியை இன்னும் பின்ப்பற்றுகிறார்கள் என்பது தான் வேதனையான வேடிக்கை!!!

தமிழ்திரையுலகில் இப்படி உருவியெடுக்கும்(நோ டபுள்மீனிங்க்) வேலையை முதன் முதலில் கி.பி 1936 இல் தான் ஆரம்பித்தார்கள் என சொல்கிறார்கள், அப்போதைய புகழ்மிகு தமிழியக்குனரான அமெரிக்க ரிடர்ன் இயக்குனர் எல்லிஸ்.ஆர்.டங்கன் ஒரு திரைப்படம்மெடுப்பதற்காக கதை வேண்டுமெனகேட்டதால் , தயாரிப்புதரப்பு ,சிட்டி.சுந்தரராஜன் என்ற எழுத்தாளரை அழைத்து பேசியது,எழுத்தாளரும் அதுவரை வெளியாகாத புதிய கதை ஒன்றினை"பத்மா சாகசம்"எனப்பெயரிட்டு எழுதியளித்துள்ளார்.

கதைக்கு என சன்மானம் எதுவும் அளிக்கவில்லை,படம் தயாரிக்கும்போது கொடுப்பார்களாயிருக்கும் ,இப்போ தானே "டிஸ்கஷனே"நடக்குது அதுக்குள்ள "பணம் பற்றி"வாயத்தொறந்தால் வாய்ப்பளிக்காமல் போயிட்டால் என்ன செய்வது என எழுத்தாளரும் அப்போதைக்கு எதுவும் பேசாமல் வந்துவிட்டார்.

ஆனால் சிலநாட்களுக்கு பிறகு எழுத்தாளருக்கு தெரிவிக்கப்படாமலும் ,சன்மானம் அளிக்காமலும் படத்தயாரிப்பினை துவக்கிவிட்டார்கள்,இதனை தினமணியில் ஆசிரியர்/எழுதிக்கொண்டிருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் என்ற நண்பர் மூலம் அறிந்த, சிட்டி.சுந்தரராஜன் தனது படைப்பினை ஆட்டைய போட்டார்கள் என நிருபிக்க வழியில்லை என்பதால் மாற்று வழியாக அவரது கதையை தினமணியில் "பத்மா சாகசம்"என்ற தொடர்கதையாக வெளியிட செய்துவிட்டார்,திரைப்படம் வெளியாகும் முன்னரே கதை அச்சு ஊடகத்தில் வெளியானதால் "கதைக்கான"காப்புரிமை தானாகவே எழுத்தாளருக்கு வந்துவிடும்,எனவே சன்மானம் அளிக்காமல் ஏமாற்ற முடியாது.  ஆனால் பத்திரிக்கையில் வெளியான கதைக்கு எதிர்ப்பார்த்த வரவேற்பில்லாமல் போயிற்று,அதே வேளையில் வேறு சில காரணங்களால் படமும் பாதியிலேயே நின்றுப்போனது,இவ்வாறாக 1936 இல் முதல் ஆட்டையப்போடும் வேலை பாதியிலேயே தோல்வியடைந்துள்ளது அவ்வ்!

ஆனால் இக்கால திரைப்படைப்பாளிகள்"தொழில்முறை நேர்த்தியுடன்"ஆட்டையப்போடுவதில் விற்பன்னர்கள், எனவே வெற்றிகரமாக தொழில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், இதில் வேறு "என்னைப்போல யாருக்கு படமெடுக்க தெரியும்"என்றவெட்டி பந்தாவுக்கும் குறைச்சலில்லை, இவனுங்களுக்கு மட்டும் வாயில்லைனா நாய் கவ்விட்டு போயிடும் :-))

தற்போதெல்லாம் ஒருவர் எழுதிய கதையை வெளியிடாமலே காப்புரிமை பெறலாம், அப்படி செய்ய மெனக்கெட முடியாது எனில் ஏதேனும் ஒரு ஊடகத்தில் வெளியானாலே காப்புரிமையின் கீழ் வந்துவிடும் ,ஏதேனும் ஒரு ஊடகம் என்பதில் "வலைப்பதிவுகளும்"அடக்கம்,எனவே வலைப்பதிவில் எழுதியதையும் அனுமதியில்லாமல் எடுத்தாள முடியாது- கூடாது,ஆனால் வலைப்பதிவர்கள் பலரே ஆட்டை மன்னர்கள் என்பது தான் மாபெரும் சோகம் அவ்வ்!

இந்த காப்புரிமை சட்டத்தில் உள்ள ஒரு சின்ன ஓட்டை என்னவெனில் "உள்ளடக்கத்திற்கு"மட்டுமே கற்பனை உழைப்பின் அளவுகோளின் படி காப்புரிமை உண்டாம், படைப்பின் தலைப்புக்கு காப்புரிமை இல்லை!!!

 ஒரு புகழ்ப்பெற்ற எழுத்தாளர் எழுதிய கதையினை  ஆட்டையப்போட்டால் தான் காப்புரிமையின் கீழ் வழக்கு போடலாம்,அக்கதையின் தலைப்பினை சுட்டு திரைப்படமாக எடுத்தால் காப்புரிமை கோரமுடியாது.

pkp.pic.
Image and video hosting by TinyPic

உதாரணமாகபட்டுக்கோட்டை பிரபாகர் என்ற ஒரு எழுத்தாளர் "தொட்டால் தொடரும்"என்றப்பெயரில் ஒரு கதை எழுதியிருக்காருனு வச்சுப்போம், "தொட்டால் தொடரும்"நாவல் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிடுச்சு என்பதால் அதற்கு காப்புரிமை இயல்பாகவே இருக்கு எனவே அக்கதைய ஆட்டைய போட்டால் வழக்கு தொடரலாம்,அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் பெருசா இழப்பீடுலாம் கிடைச்சிடாது என்பது தான் நம்ம நாட்டின் நிலை, இதற்கும் எடுத்துக்காட்டாக ஒரு உண்மை வழக்கும் இருக்கு, என்.ஆர். தாசன் என்ற எழுத்தாளர் எழுதி தீபம் இதழில் வெளியான"வெறும் மண்"என்ற நாடகத்தின் மறுபிரதியாகவே அக்காலத்தில்வெற்றிகரமாக ஓடிய கே.பாலச்சந்தரின்"அபூர்வ ராகங்கள்"திரைப்படம் இருந்தது,எனவே திரைப்படத்தின் மூலக்கதை  உரிமையாளரான என்.ஆர்.தாசன் ,இயக்குனர் பாலச்சந்தர் மீது கதை உரிமைக்காக வழக்கு தொடர்ந்ததில் ,10 ஆண்டுகள் இழத்தடிப்புக்கு பின் ,கதை திருட்டு நடைப்பெற்றதை  நீதி மன்றம் உறுதி செய்து வெறும் 1,000 ரூ தான் கே.பாலச்சந்தருக்கு அபராதம் விதித்ததாம் அவ்வ்!

கதைய ஆட்டைய போட்டதற்கு வழக்கு தொடர்ந்தால் பெயரளவிலாவது இழப்பீடு கிடைக்கும்,ஆனால் தலைப்பினை ஆட்டைய போட்டால் ஒன்னியும் பண்ணமுடியாது என்பதால் சர்வசாதாரணமாக பலரும் தலைப்புகளை சுட்டு கொண்டுதானிருக்கிறார்கள், அதாவது "தொட்டால் தொடரும்"என நாவலின் தலைப்பினை மட்டும் ஆட்டைய போட்டால் காப்புரிமை சட்டத்தின் படி வழக்கெல்லாம் போடமுடியாது! காப்புரிமை சட்டம் இம்புட்டு சோப்ளாங்கியாக இருந்தால் நம்ம படைப்பின் தலைப்பு நமக்கு சொந்தமில்லையா? அப்ப என்னதான் செய்ய என சிண்டை பிச்சுக்கிறிங்களா? ஹி...ஹி யாமிருக்க பயமேன்! அதற்கும் ஒரு வழி சொல்கிறேன்,

காப்புரிமை சட்டத்தின் படி"ஒரு புத்தகத்தின் தலைப்புக்கு"தான் காப்புரிமை கோரமுடியாது ஆனால் இரண்டுப்புத்தகத்தின் தலைப்புக்கு காப்புரிமை கோரமுடியும், அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாக ஒரே தலைப்பில் வெளியாகும் புத்தகத்தொடர்களின் தலைப்புகளுக்கு "காப்புரிமை"செல்லும்!

ஹாரிப்பாட்டர் என்றப்பெயரில் தொடராக புத்தகங்கள் வெளியானதால் அப்பெயரை வேறு யாரும் பயன்ப்படுத்த முடியாது,மேலும் டிரேட்மார்க் ஆகவும் பதிவு செய்துள்ளார்கள். இந்தியில் ஹரிபுத்தர் என ஒரு திரைப்படத்தினை எடுக்க இருந்தார்கள், ஒரிஜினல் ஹாரிப்பாட்டர் தயாரிப்பாளர்கள் ,எங்க படம் டைட்டில் போலவே இருக்குனு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வந்தன,அப்புறம் படமே உருவாகாமல் ஏனோ நின்னுப்போச்சு.

எனவே இழப்பீடு கிடைக்குதோ இல்லையோ ,ஒருவரின் படைப்பின் தலைப்புக்கும் காப்புரிமை கிடைக்க வேண்டும் எனில் "பாகங்களாக"புத்தகங்களை வெளியிட்டாலே போதுமானது,ஏற்கனவே வெளியான தொட்டால் தொடரும் நாவல் போன்றவற்றிற்கு கூட இரண்டாம் பாகம் வெளியிட்டால் தலைப்பின் மீது காப்புரிமை கிடைத்துவிடும் ,எனவே பழைய படைப்பின் தலைப்பு போயிடுமோ என்றெல்லாம் யாரும் அச்சப்படத்தேவையில்லை.

இதே போல இன்னொரு வகையிலும் தலைப்புக்கு காப்புரிமை பெறலாம், தலைப்பினை வணிக முத்திரையாக/சின்னமாக (டிரேட் மார்க்)பதிவு செய்துக்கொள்வது.இதனை மேல் நாட்டில் சகஜமாக செய்கிறார்கள், ஸ்பைடர்மேன், பேட் மேன்,சூப்பர்மேன் ஆகிய பெயர்கள்,உடை,லோகோ எல்லாமே "டிரேட்மார்க்"ஆக  மார்வெல் காமிக்ஸ்நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டவை. படத்தின் டைட்டில் ஓடும் போது இதற்கான அறிவிப்பினை போடுவதை பலர் கண்டிருக்க கூடும்.

# ஆட்டைக்கு மரியாதை!

இது போன்ற ஆட்டையப்போடும் வேலைகளை சின்னவர்,பெரியவர் வித்தியாசமில்லாமல் கலையுலகில் பலரும் செய்துக்கொண்டு தானுள்ளார்கள்,ஆனால் பல சம்பவங்கள் அதிகம் அறியப்படாமலே போய்விடுகிறது, அப்படியான இரு சம்பவங்கள் அதுவும் ஒரே படைப்பாளிக்கு நேர்ந்திருக்கிறது என்றால் நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என அனிச்சையாக சந்தேகப்ப்படவே தோன்றுகிறது!

திருப்பூரை சேர்ந்த சுப்ரபாரதி மணியன்(ஆர்.பி.சுப்பிரமணியன்)என்ற எழுத்தாளர் சாகித்ய அகதமி விருது உட்பட பலவிருதுகளை வென்றவர் ஆவார்.சுமார் 25ஆண்டுகளுக்கு முன்னர் தீபம் இதழில் வெளியான அவரின் "கவுண்டர் கிளப்"என்ற குறுநாவலின் அடிப்படையிலே பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான"முதல்மரியாதை"திரைப்படம் இருப்பதாக கருதிய எழுத்தாளர் ,வழக்கறிஞர் நோட்டீசை இயக்குனர் பாரதிராஜாவுக்கு அனுப்பினாராம், இரு முறை நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டதாம்,மூன்றாவது முறை சுப்ரபாரதிமணியன் என்பவருக்காக ஏன் ஆர்.பி.சுப்ரமணியன் ஆகிய நீங்கள் வழக்கு போடவேண்டும், உங்களுக்கும் அக்கதைக்கும் என்ன சம்பந்தம் என பதில் நோட்டீசு வந்துச்சாம் அவ்வ்!

அப்பொழுது தான் "அபூர்வ ராகங்கள்"படவிவகாரத்தில் அனுபவப்பட்ட எழுத்தாளர் "என்.ஆர்.தாசனை"சந்தித்துள்ளார் சுப்ரபாரதி மணியன், வழக்கு தொடர்ந்தால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் வாய்தாவிலே ஓடும் அப்படியும் விடாமல் வழக்கு நடத்தினால் ஆயிரம் ரூவாத்தான் இழப்பீடு என சொன்னதும், வழக்கவே வேண்டாம்டா சாமினு கை கழுவிட்டாராம்!

#காஞ்சீவரப்"பட்டு".

ஒரு முறை அறியாமல் சிக்கிய எழுத்தாளர் அதோடு சும்மா இல்லை பின்னர் இன்னொரு முறை தெரிந்தே ஒரு சினிமாக்காரருக்கு கதை எழுதிக்கொடுத்துட்டு ஏமாந்திருக்கார், அதோடு இல்லாமல் மூன்றாவதாகவும் ஒரு கதைய இன்னொரு இயக்குனரிடம் கொடுத்திருக்காராம் அவ்வ்.

ஒரு முறை அவரை சந்திக்க வந்த ஒரு புகழ்ப்பெற்ற "ஒளிஓவிய"ஒளிப்பதிவாளர் ,எழுத்தாளரின் "சாயத்திரை"என்ற  நாவல் நன்றாக உள்ளதாகவும் அதனை அவரே திரைப்படமாக்க விரும்புவதாகவும் சொல்லவே , ஒளி ஓவியருடன் சென்னைக்கு சென்று "சாயத்திரைக்கு"திரைக்கதை அமைக்க முயன்றுள்ளார், இறுதியில் சாயத்திரைக்கதை சினிமாவுக்கு ஏற்ப எளிதாக இல்லை,வேற கதை சொல்லுங்க எனகேட்கவும் இன்னொரு புதிய கதையினை "பட்டு"என்ற பெயரில் முழுமையாக திரைக்கதையாக்கி அளித்துள்ளார், கதை பிரமாதம் படமாக்கிடலாம் என ஆரம்பத்தில் ஆர்வம் காட்டியவர் ,பின்னர் அப்படியே விட்டுவிட்டு வேறுசில படங்களில் பிசியாகிவிட்டாராம், சில ஆண்டுகளுக்கு பின்னர் எழுத்தாளர் "காஞ்சிவரம்"என்ற தேசிய விருது வென்ற படத்தினை பார்த்திருக்கிறார், அப்படத்தின் கதை கிட்டத்தட்ட முன்னர் ஒளிஓவியரிடம் அளித்த"பட்டு"கதையாம், விசாரித்த போது ஓளி ஓவியர் பலரிடமும் "பட்டு"திரைக்கதையினை அளித்து படமாக்க உதவ கேட்டிருந்தாராம், அவர்களில் யாரோ "களவாடி"இருக்கலாம் என சொல்லிவிட்டார்களாம்!

மேற்படி இரு சம்பவங்கள் குறித்தும் சுப்ரபாரதி மணியன்,தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

சுட்டி:

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_14.html

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_1247.html


இப்படிலாம் ஆட்டைய போட்டால்  படைப்பாளிக்கு என்ன தான் மரியாதை அவனுக்கு படைப்பூக்கம் எப்படி வரும்னு "ரொம்ப நல்லவங்க"எல்லாம் வருத்தப்படக்கூடும், அவர்களுக்கு ஏதோ என்னால் ஆன ஒரு சின்ன ஆலோசனை என்னவெனில்,

# அச்சு ஊடகமோ அல்லது மின் ஊடகமோ ஏதோ ஒன்றில் வெளியாக செய்துவிட வேண்டும்,குறைந்த பட்சம் நமது படைப்பு என அடையாளங்காட்ட உதவும்.

#அதான் படைப்புகள் வெளியானால் தான் ஆட்டைய போடுறாங்களே எனவே வெளியிடாமலே காப்புரிமை பெற என்ன செய்ய வேண்டும் என்றால் அதற்குமொரு வழி இருக்கு,

ரெஜிஸ்ட்ரார் ஆப் காப்பிரைட்ஸ் என ஒருவர் இருக்கிறார்,அவர் தான் இந்திய அளவில் அனைத்து கற்பனை படைப்புகளுக்கும் காப்புரிமை வழங்கும் வேலையை செய்கிறார்,

அவருக்கு ஒரு விண்ணப்பத்துடன் கற்பனை படைப்பாக்கங்களின் வகைக்கு ஏற்ப குறிப்பிடப்பட்ட கட்டணத்தினை வரைவோலையாலையாக இணைத்து அதனுடன் நமது  படைப்பின் இரு பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டும், நமது/தங்களது படைப்பு "சுத்தமான அக்மார்க் "சுய உருவாக்கமா என ஆய்வு செய்துவிட்டு ,மேற்கண்ட படைப்புக்கு காப்புரிமை அளிக்கப்பட இருக்கிறது என ஒரு அறிவிப்பும் வெளியிடுவார்கள்,30 நாட்களுக்குள் எதிர்ப்பு அல்லது மறுப்பு வரவில்லை எனில் விண்ணப்பித்தவருக்கு காப்புரிமை அளிக்கப்படும், ஒரு பிரதியினை மூடி முத்திரையிட்டு பாதுகாப்பகத்தில் வைத்துவிட்டு ,இன்னொரு பிரதியில் "காபி ரைட் புரெக்டெட்"என முத்திரையிட்டு நமக்கு அனுப்பிவிடுவார்கள்,அதுவே நமக்கான ஆவணம் மேலும் முத்திரையிடப்பட்ட பிரதியை காட்டி "வணிக பேரங்கள்"பேசுவதும் எளிதானது மற்றும் பாதுகாப்பானதும் ஆகும்.

fee pic.

cp1


For fee detailes visit to,

http://copyright.gov.in/frmFeeDetailsShow.aspx


# என்ன வகையான "கற்பனை படைப்புகளுக்கு"காப்புரிமை கோரலாம்?

ஒலிப்பதிவு, ஒளி&ஒலி பதிவு, விரிவுரை காணொளிப்பதிவு, திரைப்படம்,ஓவியம்,சிற்பம்,எழுத்திலக்கியமென அனைத்திற்கும் காப்புரிமை கோரலாம்.

ஆனால் ஒரு வாக்கியம், சொற்றொடர், ஒரு எண்ணம்(ஐடியா), கண்டுப்பிடிப்பு போன்றவற்றிற்கு காப்புரிமை அலுவலத்தில் கோரமுடியாது, அவற்றினை பேடட்ண்ட் அலுவகலத்தில் அல்லது டிரேட் மார்க் அலுவலகத்தில் பதிவு செய்ய முயல வேண்டும்.

#ஒரு முறை காப்புரிமை செய்யப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு காப்புரிமை இருக்கும்,அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டும்.

#அதிக பட்சம் 75 ஆண்டுகள் வரையே காப்புரிமையினை ஒருவர் தக்க வைத்துக்கொள்ள முடியும்,அதன் பின்னர் காப்புரிமை தானாகவே நீங்கிவிடும்.

# உலக காப்புரிமை மாநாட்டு தீர்மானத்தின் படி , கி.பி 1923க்கு முன்னால் உருவான அனைத்து படைப்புகளுக்குமான காப்புரிமை நீக்கப்பட்டாயிற்று,எனவே அக்கால படைப்புகள் எல்லாம் "திற மூல படைப்புகள்"ஆகிவிட்டன.

எனவே தான் இன்டெர்நெட் ஆர்கைவ்ஸ், கூகிள் போன்றவை பல பழைய நூல்களை பிடிஎஃப் வடிவில் மென்னூல்களாக மாற்றி இலவசமாக அளிக்கின்றன.

#  படைப்பாளிஒருவர் நேரடியாகவோ அல்லது ஒரு பிரதிநிதி வழியாகவோ காப்புரிமையினை பெற விண்ணப்பிக்கலாம், தற்சமயம் இணைய தளம்மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்,

மேலும் விவரங்களுக்கு,

http://copyright.gov.in

மேற்கண்ட தளத்தில் ,அடிக்கடி கேட்கப்படும் சந்தேகங்கள், விளக்கமானகையேடு, மற்றும் காப்பி ரைட் சட்டம் மற்றும் திருத்தம் ஆகியன இலவசமாக தரவிறக்கிக்கொள்ளவும் செய்யலாம்.

கேட்பது உரிமை,கொடுப்பது கடமை!

ஹி...ஹி எதாவது பஞ்சு டயலாக் சொல்லி முடிச்சாத்தான் ஒரு ஃபினிஷிங்க்  டச் கிடைக்கும்னு ...அது...!
-----------------------------

பின்குறிப்பு:

# பொது மக்கள்,படைப்பாளிகள் மற்றும் சமூகத்தினர் நலங்கருதி விழிப்புணர்விற்காகவே இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

# பிழை திருத்தம் செய்யப்படவில்லை,விரைவில் பிழை திருத்தம் செய்யப்படும் அதுகாறும் பிழைகளுக்கு பொருத்தருள்க!

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

# http://copyright.gov.in/frmFAQ.aspx

# http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_14.html

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_1247.html

# http://madrasmusings.com/Vol%2021%20No%206/early-modern-tamil-novels.html

மற்றும் விக்கி & கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-------------------------------------

விருது வாங்கலையோ விருது!-OSCAR-the Academy Awards- 2014 nominations.

$
0
0
(நம்மளையும் ஆஸ்கார் விருது வாங்க சொல்லிடுவானோ? அவ்வ்)


ஆஸ்கார் விருதுகள்-2014 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,இவற்றில் இருந்தே 86வது ஆஸ்கார் விழா விருதுகள் முடிவு செய்யப்படப்படும். இவ்வாண்டுக்கான ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இந்திய தயாரிப்புகள் எதுவும் போட்டியில் இல்லை.




ஆஸ்கார் -2014 இறுதி தேர்வுப்பட்டியல்(நாமினேஷன்):

# Best picture

படம்.
(அமெரிக்கன் ஹஸ்டில்- ஹாலிவுட் பில்லா)

12 Years a Slave

American Hustle

Captain Phillips

Dallas Buyers Club

Her

Gravity

Nebraska

Philomena

The Wolf of Wall Street

# Best director


(Martin Scorsese,)

David O Russell, - American Hustle

Alfonso Cuarón, - Gravity

Alexander Payne, - Nebraska

Steve McQueen, - 12 Years a Slave

Martin Scorsese, - The Wolf of Wall Street

# Best actor

படம்.

(Chiwetel Ejiofor, 12 Years a Slave)

Christian Bale, - American Hustle

Bruce Dern,- Nebraska

Leonardo DiCaprio, -The Wolf of Wall Street

Chiwetel Ejiofor, - 12 Years a Slave

Matthew McConaughey, - Dallas Buyers Club

# Best actress
(அமெரிக்கன் ஹஸ்டில் நாயகி- சிறப்பாக திறமைகளை "வெளிப்படுத்தக்கூடியவர்") 

Amy Adams, -American Hustle

Cate Blanchett, -Blue Jasmine

Sandra Bullock,- Gravity

Judi Dench,- Philomena

Meryl Streep, - August: Osage County

# Best supporting actor


(Barkhad Abdi,-somalia)

Barkhad Abdi, - Captain Phillips(first somali actor to be nominated for oscar)

Bradley Cooper, - American Hustle

Michael Fassbender, - 12 Years a Slave

Jonah Hill, - The Wolf of Wall Street

Jared Leto,-  Dallas Buyers Club

# Best supporting actress


(Jennifer Lawrence, American Hustle- சப்போர்ட்டே தேவைப்படாதவர்)

Sally Hawkins, - Blue Jasmine

Jennifer Lawrence, - American Hustle

Lupita Nyong'o, - 12 Years a Slave

Julia Roberts, - August: Osage County

June Squibb, - Nebraska

# Best original screenplay

(nominated for best screenplay(original)

American Hustle

Blue Jasmine

Dallas Buyers Club

Her

Nebraska

# Best adapted screenplay

(nominated for best screenplay-adapted)

Before Midnight

Captain Phillips

Philomena

12 Years a Slave

The Wolf of Wall Street

# Best foreign film

படம்.
(ஓமர் படத்தில் ஒரு காட்சி)

Broken Circle Breakdown (Belgium)

The Great Beauty (Italy)

The Hunt (Denmark)

The Missing Picture (Cambodia)

Omar (Palestine)

# Best documentary

படம்.


The Act of Killing

Cutie and the Boxer

Dirty Wars

The Square

20 Feet from Stardom

# BEST DOCUMENTARY(SHORT)

CaveDigger

Facing Fear

Karama Has No Walls

The Lady in Number 6: Music Saved My Life

Prison Terminal: The Last Days of Private Jack Hall

# BEST SHORT FILMS:

Aquel No Era Yo (That Wasn't Me)

Avant Que De Tout Perdre (Just before Losing Everything)

Helium

Pitääkö Mun Kaikki Hoitaa? (Do I Have to Take Care of Everything?)

The Voorman Problem

மேலதிக விவரங்களுக்கு செல்க,

 # http://oscar.go.com/nominees


# மைய நீரோட்ட திரைப்படங்கள் (mainstream films)குறித்து நம்ம வெகு சன ஊடகங்கள்  விலாவாரியாக நிறைய கதைக்கும்,என்பதால் அதிகம் கவனிக்கப்படாத சில திரைப்படங்கள், குறும்படங்கள்,ஆவணப்படங்கள், அனிமேஷன் வகையறாப்படங்கள் குறித்து கொஞ்சம் பார்க்கலாம்.

மேற்சொன்ன இணையூடக(parallel cinema) வகை கலை படைப்புகளில்,"மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய"பிரதேச படைப்பாளிகள் ஒரு புதிய அலையாக  உருவெடுத்து ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது "கலைப்படைப்புகள்"மீதான இறுக்கமான இஸ்லாமிய பார்வைகள் நெகிழ்வான போக்கில் மாறிவருவதை காட்டுகிறது.

மேலும் இம்மாற்றம்  இந்திய கலைப்படைப்பாளிகளுக்கு  மவுனமொழியில் உரக்க தெரிவிக்கும் ஒரு பாடமாகவும் கருதலாம்.

இந்தியாவில் அனைத்து வகை ஊடக சுதந்திரம் மற்றும் படைப்புலக வசதிகள் ,தொழில்நுட்ப பின் புலங்கள் என வைத்துக்கொண்டு, டிடிஎஸில் செவிப்பறை கிழிய "பஞ்சு டயலாக்குகள்"பேசுவதிலும், நாபிக்கமல குளோஸ் அப்புகளிலும்  மட்டுமே மூழ்கி முத்தெடுக்கும் கலையுலக பிரம்மாக்களும்,95 கோடியைக்கொட்டி விசேஷரூபமாக காப்பியடிக்கும் லோகநாயகர்களும் ,தொலைக்காட்சி பேட்டிகளில் மட்டும் "ஹாலிவுட்"தரம் என பீற்றிக்கொள்வதை குறைத்துக்கொண்டு ,உருப்படியாக உலக தரத்தில் கலைப்படைப்புகளை கொடுங்கடா நொண்ணைங்களா என ஒவ்வொரு சராசரி திரை ஆர்வலனும் உரக்க குரல்கொடுக்க நேரிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என நினைக்கிறேன்.

ஓமர்(பாஸ்தீனம்)


பாலஸ்தீனத்தயாரிப்பான ஓமர் சிறந்த அயல் நாட்டு திரைப்படப்பிரிவில் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பாலஸ்தீனத்திலிருந்து ஆஸ்கார் நாமினேஷன் இறுதிப்பட்டியலுக்கு தேர்வான இரண்டாவது திரைப்படம், யுத்தம்,ரத்தம் என அன்றாட வாழ்வில் பலப்பிரச்சினைகள் கொண்ட ஒரு தேசத்தில் கலைப்படைப்புகளை இயல்பாக ரசிக்கவோ தயாரிக்கவோ மனநிலை ஒத்துழைக்க வாய்ப்பில்லாத சூழலில் ,இது ஒரு பெரும் சாதனை எனலாம்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படைவீரனைக்கொன்றுவிட்ட பாலஸ்தீன இளைஞனுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்குமான இடையிலோடும் பிரச்சினைகளையும்,அவற்றுக்கிடையில் காதலையும் மையமாகக்கொண்டு இத்திரைப்படம் இயங்குகிறது.புரட்சிக்கரமான முத்தக்காட்சியும் படத்திலுள்ளது!



இஸ்ரேலிய குடியுரிமைப்பெற்ற பாலஸ்தீன இயக்குனர் " Hany Abu-Assad"எழுதி,இயக்கி,இணைத்தயாரிப்பும் செய்துள்ளார். இஸ்ரேலிய குடியுரிமை உள்ளவர் இயக்கியப்படம் என்பதால்,இஸ்ரேலியப்படம் என தற்போது இஸ்ரேல் அரசும் சொந்தம் கொண்டாடுகிறது,ஆனால்இயக்குனர், தானொரு பாலஸ்தினியரே என சொல்லி ,நாமினேஷனை பாலஸ்தீன் சார்பாகவே செய்துள்ளார்.

இப்படத்தின் கதையினை நான்கு மணி நேரத்தில் எழுதி,நான்கே நாளில் திரைக்கதை,வசனம் எல்லாம் முடித்துள்ளார்.இவரின் "Paradise Now"என்ற திரைப்படமே இதற்கு முன்னர் 2005 இல் ஆஸ்கார் நாமினேஷனுக்கு தேர்வான முதல் பாலஸ்தீன திரைப்படமென்பது குறிப்பிடத்தக்கது,அம்முறை விருது வாங்க தவறிவிட்டது,இம்முறை ஓரளவு வாய்ப்பிருக்கிறது,ஏன் எனில் மேலை உலக விமர்சகர்கள் போர்ச்சூழல் படங்களை விரும்பக்கூடியவர்கள்,தயாரிப்பு நேர்த்தியாக இருக்குமானால் ஆதரிப்பார்கள், மேலும் வழக்கம் போல சில பல அரசியல் காரணங்களையும் கணக்கில் கொள்ளலாம்.
------------------------

# The Square(எகிப்து)




Jehane Noujaim என்ற எகிப்திய பெண் இயக்கியுள்ளார், எகிப்து அதிபர் ஹோசினி முபாராக்கின் 30 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்கு எதிராக தாஹிரிர் சதுக்கத்தில் மக்கள் திரண்டு போராடியதையும்,அவர்கள் மீதான ராணுவ தாக்குதலையும், அதன் பின்னான விளைவுகளையும் மையமாக கொண்டு உருவான ஆவணப்படமாகும்.

(Jehane Noujaim )

உண்மையான ராணுவ துப்பாக்கி சூடு,டாங்கி தாக்குதல் என அனைத்தும் நேரடிப்பதிவுகளாக பலரால் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை கொண்டுள்ளது.

# Karama Has No Walls


(Sara Ishaq & team)

Sara Ishaq என்கிற யேமனை சேர்ந்த (இளம்)பெண் தயாரித்து இயக்கியுள்ள குறும்படம்.

எகிப்தில் ஏற்பட்ட "அரேபிய வசந்தப்புரட்சியினால்"ஹோசினி முபாரக்"ஆட்சி கவிழ்ந்து ஏற்பட்ட மாற்றத்தின் பின் விளைவாக ஏமனில் ஏற்பட்ட புரட்சியினை மையக்களமாக விவரிக்கும் ஆவணக்குறும்படம் ஆகும்.

2011இல் யேமனின் சானா நகர பல்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக தங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் ,பல்கலை கழக வாயில் அருகே கூடாரங்களை அமைத்து போராடத்துவன்ங்கினார்கள், நாளாவட்டத்தில் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து அருகிலேயே கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் கலந்துக்கொள்ள ஆரம்பிக்க,போராட்டக்குழுவின் பலம்பெருகியது,இவ்விடத்தினை"மாற்றத்திற்கான மைதானம்"என பெயரிட்டு ஆயுதம்  தாங்கிய போராளிக்குழுக்களும் ,அமைதிப்போராட்டத்தில் கலந்துக்கொண்டார்கள்,இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு,மார்ச்,18ஆம் நாள்,வெள்ளியன்று அரசப்படைகள் திடீர் என துப்பாக்கி சூடு நடத்தியதில் 53 பேர் உயிரிழந்தார்கள், ஆயிரக்கணக்கில் காயமுற்றனர், இந்நிகழுவுகளையே மையமாக சித்தரித்து , உண்மை சம்ப காட்சிகளுடன் இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.



இக்குறும்பட தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ள இயக்குனர் முதல் ,அனைவரும் இளைஞர்களே ,பலரும் பெரிய அளவில் முன்னனுபவமில்லாதவர்களே, நம்ம ஊரு குறும்பட இளைஞர்கள் இன்னும் "காமெடி"மட்டுமே செய்துக்கொண்டுள்ளார்கள் ,அவர்களும் வித்தியாசமான வாழ்வியல் சம்பவங்கள்,போராட்டங்களை மையமாக கொண்டு படைப்புகளை உருவாக்கினால் சர்வதேச அளவில் கவனத்தினை ஈர்க்க இயலும்.

# "Dirty Wars: The World Is A Battlefield.(அமெரிக்கா)



Jeremy Scahill என்பவர் இதே தலைப்பில் எழுதிய நூலின் அடிப்படையில், Rick Rowley இயக்கியுள்ள ஆவணப்படம்.

சீரொ டார்க் தர்ட்டி போன்ற திரைப்படங்கள் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை விமர்சிப்பது போல இருந்தாலும், பெரும்பாலும் ராணுவ வீரர்களை,இராணுவ செயல்களை புனிதப்படுத்தும் நோக்கில்,சரியான ஆவணப்படுத்தல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது, ஆனால் இந்த ஆவணப்படத்தில் ஆப்கான்,சோமாலியா,யேமன் எனப்பல நாடுகளில் அமெரிக்க ராணுவம் "Joint Special Operations Command (JSOC)"என்றப்பெயரில் யாரையும் விசாரணையின்றி கொல்லக்கூடிய  சர்வதிகாரத்துடன் செயல்ப்படுத்திய ராணுவ நடவடிக்கள்,அதனால் பலர் கொல்லப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றை துப்பறிந்து ஆவணப்படுத்தி "அமெரிக்க ராணுவத்தின்"உண்மை செயல்பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

நூலாசிரியர் "Jeremy Scahill "அவர்களே இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்டாக இப்படத்தில் நடித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான விமர்சனப்பார்வையிருப்பதால் விருது வெல்வது கடினம்,ஆனால் யார் கண்டார் இப்படத்தின் நுண்ணரசியல் எவ்வகை என பொதுவாக சரியாக புரிந்துக்கொள்ள முடியாமல் கூட இருக்கலாம்,எனவே  விருதினை வென்றாலும் ஆச்சர்யமில்லை அவ்வ்!

# the voorman problem(பிரிட்டன்)



இயக்கம்-Mark Gill

தயாரிப்பு- Baldwin Li & Lee Thomas

சிறையில் இருக்கும்  "voorman"என்ற கைதி தன்னைத்தானே கடவுள் என சொல்லிக்கொள்ள ஆரம்பிக்கிறார், இதனை நம்பும் மற்ற சிறைக்கைதிகளால் ,சிறைச்சாலையில் பிரச்சினைகள் வரலாம் எனக்கருதும் ,சிறைக்கண்காணிப்பாளர், ஒரு மருத்துவரை அழைத்து "voorman"க்கு பரிசோதனை செய்து மன நிலைப்பாதிக்கப்பட்டவர் என சான்று வாங்கிவிட்டால் ,மனநல காப்பகத்துக்கு அனுப்பிவிடலாம் பின்னர் ,சிறையில் பிரச்சினைகள் இருக்காது என நினைத்து,ஒரு மருத்துவரை அழைத்து ,"voorman பரிசோதிக்க சொல்கிறார், அப்பொழுது  மருத்துவருக்கும் "voorman"க்கும் இடையே நடக்கும்"அன்பேசிவ நான் கடவுள்"உரையாடல்களே படத்தின் மையக்கருவாகும்.

இக்குறும்படத்தில் "ஹாப்பிட்"புகழ் martin freeman ,doctor williams என்ற கதாபாத்திரத்திலும்,mr voormanஆக tom hollander உம் நடித்துள்ளார்கள்.

ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்ப்பெற்றிருந்தாலும், சிறப்பான கதையம்சம் கொண்டப்படம் என்றால் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க தயங்கமாட்டார்கள் என்பதற்கு இப்படமேஒரு சாட்சியாகும்.

இக்குறும்படத்தில் நடிக்க முதலில் ஹாலிவுட் நடிகர் "கெவின் ஸ்பாசியை"அனுகியுள்ளார்கள்,அவருக்கு கால்ஷீட் பிசியாக இருந்தமையால் ,மார்டீன் ஃப்ரீமானை பரிந்துரைத்துள்ளார், படத்தின் கதையினை அவருக்கு மின்னஞ்சல் தான் செய்துள்ளார்கள், நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளக்கதை என அவரும் ஒத்துக்கொண்டுள்ளார், மொத்தம் 3 நாட்களில் முழுப்படமும் எடுத்துவிட்டார்கள். இது போன்ற குறும்படங்களில் நடித்தால் தனிப்பட்ட விருதுகள் கிடைக்காது , ஒட்டு மொத்தமாக "சிறந்த குறும்படம்"என்ற விருது மட்டுமே அளிப்பார்கள்,அது தெரிந்தும் ஒரு நல்ல கதையம்சமுள்ள படைப்பில் பங்குப்பெற வேண்டுமென புகழ்ப்பெற்ற ஹாலிவுட் நடிகர்களும் முன்வருகிறார்கள், ஆனால் நம்ம ஊரிலோ ...அட்டு நடிகர்கள் கூட நான் ரொம்ப பிசினு ஃபில்ம் காட்டிக்கிட்டு அலையிறாங்க அவ்வ்!

----------------------------

பின்குறிப்பு:


# பிழைதிருத்தம் மற்றும் இன்னும் சில மேம்பாடுகள்,சேர்க்கைகள் விரைவில் செய்யப்படவுள்ளது,பொறுத்தருள்க!

# தகவல் மற்றும் படங்களுதவி,

# http://oscar.go.com/nominees

# http://www.imdb.com

# http://www.theguardian.com/film/filmblog/2014/jan/16/oscars-nominations-2014-liveblog-academy-awards

# http://dirtywars.org/

# http://www.thevoormanproblem.com/

# http://karamahasnowalls.com/about-2

மற்றும் விக்கி & கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
----------------------------------------


காக்க காக்க கணினி காக்க -1

$
0
0
("Oneman Army"-வவ்வால் இருக்க இணையத்தில் பயமேன்...ஹி...ஹி)


இணையப் பாதுகாப்பு:

இணைய இணைப்பில்லா கணினி என்பது நாம் மட்டுமே பயன்ப்படுத்தும் நமது படுக்கை அறை கழிவறைப்போன்றது, நமது "தனிப்பட்ட அந்தரங்கங்கள்"பாதுகாக்கப்படும்,மேலும் நோய் தொற்று போன்றவையும் இருக்காது,ஆனால் இணைய இணைப்புடன் உள்ள கணினி என்பது"நகராட்சி கட்டண பொதுக்கழிவறை" போன்றது,அதுவும் தாழ்ப்பாள் இல்லாத கதவுடைய கழிவறை எனில் அந்தரங்கத்தை காக்க "கையால் பிடித்துக்கொண்டே"இருக்க வேண்டும் ,கதவைத்தான்!

கொஞ்சம் அசந்தாலும் அவசரக்காரர்கள் உள் நுழைந்து ,அந்தரங்கத்தினை வெட்ட வெளிச்சமாக்கும் சாத்தியமுள்ள அபாயமிகு பிரதேசம்.

ஆனால் இக்காலத்தில் இணைய இணைப்பில்லா கணினி வைத்திருப்பது கல்யாணம் ஆகியும் கட்டை பிரம்மச்சாரியாக வாழ்வது போல "வெட்டியானது"என்பதால் கணினி வாங்கிய கையோடு ,இணைய இணைப்பும் வாங்கி தேநிலவு கொண்டாடுவதே அனைவரின் விருபந்த்தேர்வாக உள்ளதால், இணையப்பயன்ப்பாட்டு பாதுகாப்பிற்கு ஏதேனும் "உறை"போட்டேயாக வேண்டிய நிலை,ஆனால் எத்தனை நோய்தடுப்புசி போட்டு(anti virus),நெருப்பு சுவர் கட்டி(Fire wall)  வச்சாலும், இணையத்தில் திருட்டு கொசுத்தொல்லையை ஒழிக்கவே முடியாது.

பலரும் வரது வரட்டும் எல்லாம் பகவான் பாத்துப்பான் என இணையத்தில் உல்லாச ஊஞ்சல் ஆடிக்கிட்டு தான் இருக்காங்க, பகவானுக்கு சொந்த பிரச்சினைகளையே தீர்க்க நேரமில்லை, காது குளிர தமிழில் தேவாரம் கேட்கலாம்னா கூட கேட்க முடியாது,பத்தாதுக்கு சின்னவூடு,பெரிய வூடு சண்டை, பசங்களூக்குள்ள மாம்பழ பாகப்பிரிவினை பஞ்சாயத்துனு ஆல் டைம் பிசியோ பிசி,இதுல எங்கே இருந்து வந்து நம்ம கணினிய காக்கப்போறார்,எனவே நமக்கு நாமே திட்டமாக "கணினிப்பொட்டிய"காபந்து பண்ணிக்கிட்டாத்தான் இணையத்தில இடைஞ்சல் இல்லாம கும்மாளம் அடிக்க இயலும்.

எனவே அடியேனின் கற்றது,பெற்றது,கடன் வாங்கியது,களவாடியது என கைவரப்பெற்ற கணினி அனுபவங்களை வைத்து ஒரு கணினி பாதுகாப்பு மற்றும் பயனர் கையேடு ஒன்றினை தொடராக வழங்கலாம் என நினைக்கிறேன்.

ஜில்லாக்குத்து மாஸ்டர் ரேஞ்சில எல்லாம் பெருசா எதுவும் எதிர்ப்பார்க்காதிங்க, ஒரு கணினி கைநாட்டின் சுய அனுபவத்தின் வெளிப்பாடாகவே இருக்கும், இனிமே மெயின் பிக்சருக்குள்ள போகலாம்.

கடவுச்சொல் திருட்டு.

சமீபத்தில் அடியேனுக்கு வாய்க்கப்பெற்ற அனுபவத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன், நாமளே மாசத்துக்கு ரெண்டு மூனு பதிவு தேத்துறதுக்கே தலையால தண்ணிக்குடிக்க வேண்டி இருக்கு,அதுக்கும் ஆப்பு வைக்கிறாப்போல ,கடந்த மாசம் அம்னீசியா பேஷண்ட் போல ,பிலாக்கர்,என்ன யார்னே தெரியாதுனு சொல்லிடுச்சு, நான் தான்யா அவன், அவனே தான் நான்னு தலைகீழாக நின்னு சொல்லிப்பார்த்தும் ,சிறிதும் கருணையின்றி காந்தி ஜெயந்தி அன்னிக்கு கதவை அடைச்ச டாஸ்மாக் போல கதவை மூடிக்கிச்சு, அப்புறம் கறுப்பு சந்தையில கட்டிங் வாங்குறாப்போல, கடவுச்சொல் மீட்டெடுப்பு மூலம் மீண்டும் நம்ம கடையில ஐக்கியமானேன்.

ஏன் இப்படி ஆச்சுனு நம்ம சிற்றறிவை கொஞ்சம் பிறாண்டிப்பார்க்கையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி

 "you are logged in from different location,

you are logged out from different location"

என்பதான புனித செய்திகள் வந்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது, அப்பொழுதெல்லாம் இது ஏதோ வேலையத்த வேலையா கூகுள் செய்யுதுனு நினைச்சு அசமந்தாக போயிட்டேன். இப்ப கொஞ்சம் லேட்டா டியூப்லைட் எரிய ஆரம்பிச்சது,யாராவது நம்ம கணக்கில நமக்கே தெரியாம டீயாத்துறாங்களானு.

ஹி...ஹி அப்படியே எதாவது ஆட்டய போடப்பார்த்தாலும் நாம தான் அனாமத்தா வச்சிருக்கோமே உருவறதுக்கு கோவணத்த தவிர நம்ம கிட்டே ஒன்னியுமே இல்லைனு தெரியாம எவனோ "வேலையக்காட்டுறானே"என சிரிப்பு தான் வந்தது.

ஆனாலும் கோவணமா இருந்தாலும் என்னோடதாக்கும் அதை எப்படி விடனு, நம்ம சுயம் விழித்தெழ, "தூங்கிட்டு இருந்த மிருகம்" சிலிர்த்துக்கொண்டது. அதன் பிறகு நம்ம கூகிள் அக்கவுண்ட்ல என்னமாதிரியான வரவுகள் ஆகி இருக்குனு கவனிச்சேன், அங்கே தான் "கொசு கூடாரம்"போட்டிருந்தது அவ்வ்!

கூகுள் கணக்கு சரிப்பார்ப்பு:

ஒருவலைப்பதிவு துவக்கி,இயக்க தேவை மற்றும் பயன்ப்படுவது,கூகுள் இணைய கணக்கு ஆகும், கடவுச்சொல் மாற்ற,வலைப்பதிவு செயலிகளை நிறைவேற்ற என கூகுள் கணக்கு மூலமே உள்நுழைந்து செயல்ப்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

நமது கடவுச்சொல் திருடுப்போய் அல்லது யாரேனும் ஃபிஷிங்(phishing) செய்து நமது கணக்கை அழிக்கும் முன்னர் கூகுள் கணக்கில் உள்நுழைய முடியுமானால் நாம் தப்பித்துக்கொள்ள முடியும், சில சமயம் நமது கடவுசொல்லை தற்செயலாக யாரேனும் தெரிந்துக்கொண்டு ,விளையாட்டாக அல்லது ஏதேனும் உள்நோக்கத்துடன் வலைப்பதிவில் விளையாடக்கூடும்,தவறான பின்னூட்டங்கள் இடலாம்,ஆனால் நமது கணக்கு மட்டுமழிக்கப்படாமல் இருக்கும், அப்படி வித்தியாசமான நடவடிக்கைகள் நமது கூகுள் கணக்கில் நடக்கிறதா,நமது கணக்கில் யாரேனும் அத்துமீறி நுழைகிறார்களா என்பதை அவ்வப்போது கவனித்து வரவேண்டும்.

எனது கூகுள் கணக்கில் அத்துமீறிய நுழைவுகள் சமீபத்தில் ஏற்பட்டது,அதனை எவ்வாறு,நீக்கினேன் என பகிர்கிறேன்,இது பலருக்கும் தெரிந்திருக்க கூடும், எனது சார்பில் ஒரு பகிர்வு.மேலும் அப்படி அத்துமீறி நுழைவுசெய்தவர் யாரென அறிந்துக்கொண்டால்,அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ளவும் மற்றவர்களுக்கு உதவுமே!

அதற்கு முதலில் நமது கூகிள் கணக்கில் உள்நுழைவு செய்ய வேண்டும், கீழ்கண்ட படத்தில் உள்ளது போன்ற இடைமுகப்பு தெரியும்,

படம்-1


இதில் செக்கியூரிட்டி என்ற பகுதியை கிளிக் செய்தால்,

password

Recent activity

Account permissions

Recovery and alerts

என நான்குப்பகுதிகள் காட்டும்,

அதில் முதலில் "Recent activity"என்றப்பகுதில், வியூ ஆல் ஈவண்ட்ஸ் என்பதை அழுத்தினால், சமீப காலத்தில் எத்தனை முறை,எப்பொழுது,எங்கிருந்து நமது கணக்கில் உட்நுழைவு செய்துள்ளோம் எனக்காட்டும்.

படம்-2



இப்பகுதியில் காட்டப்படும் உள்நுழைவு விவரங்கள்,நமது இடம்,காலம்,கணினி இயங்குதளம் சார்ந்து ஒத்து வரவேண்டும்,அப்படி ஒத்து வரவில்லை எனில் நமது கணக்கு விவரங்கள்"நாமறிந்த ரகசியமல்ல ஊரறிந்த ரகசியம்"ஆகிடுச்சு எனப்பொருள், எனவே வெளியேறும் முன்"கடவுச்சொல்லை"மாற்றிவிட வேண்டும்.

வழக்கமாக கம்பிவட அகலப்பட்டை இணைய இணைப்பு(cable broadband)உடன் static ip இணையம் வைத்திருந்தால் நமது சரியான"புவியியல் இடம்"காட்டும்,எனவே நமது உள்நுழைவு என்பதை சரியாக அறியலாம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் ,இணைய சேவை வழங்கியின் செர்வர் எந்த ஊரில் இருக்கோ அதனையே "நமது வசிப்பிடமாக"காட்டும்.

நாம் ஒரு சிற்றூரில் இருப்போம் ,செர்வர் அருகாமை நகரத்தில் இருக்குமெனில்,அவ்வூரையே நமது "வசிப்பிடமாக"காட்டும்.

கும்மிடிப்பூண்டியில் வசிப்பவருக்கும் சென்னையென்றே காட்டும்,எனவே யாரோ கடவுச்சொல்லை ஆட்டைய போட்டாங்கனு மிரள வேண்டாம்.

# தற்பொழுதெல்லாம் "கம்பியில்லா இணையச்சேவை "-3ஜீ ,அல்லது அலைப்பேசியின் GPRS /EDGEஇணைப்பினையும் கணினியில் பயன்ப்படுத்துகிறார்கள், அலைப்பேசி இணைய செர்வர்கள் முற்றிலும் வேறுப்பட்ட இடத்தில் இருந்து இயக்கப்படுகின்றன,எனவே மாநிலம் விட்டு மாநிலம் எல்லாம் லோகேஷன் காட்டும்.

எனவே எந்தெந்த அலைப்பேசி நிறுவனத்தின் அலைப்பேசி இணைய செர்வர் எங்கே இருக்கென அறிதல் மிக அவசியமாகும்.

தமிழ்நாட்டைப்பொறுத்த வரையில்,

பி.எஸ்.என்.எல் அலைப்பேசி - சென்னை,பெங்களூர்,,அஹமதாபாத்,டெல்லி எனக்காட்டுகிறது. அவர்களுக்கு நிறைய இடங்களில் செர்வர்கள் உள்ளதால், டைனமிக் ஐ.பி ஃப்ரியாக உள்ள சர்வர்களில் இணைத்து விடுகிறார்கள்.

பெரும்பாலும் இணைய சேவை வழங்கிகள் "டைனைமிக் ஐ.பி எண்"தான் வழங்குவார்கள், ஒவ்வொரு முறை இணைப்பை துவங்கும் போதும் ஒரு புதிய ஐ.பி எண்ணே நமக்கு கிடைக்கும்.

டோகோமோ- புனே,மகாராஷ்ட்ரா,

வோடாஃபோன் - மும்பை ,மகாராஷ்ட்ரா

ஏர்டெல்- மும்பை,மகாராஷ்ட்ரா அல்லது ஹைதராபாத்,ஆந்திரா

ஏர்செல்-கோவை/சென்னை எனக்காட்டும்.

மேற்கண்ட விவரங்கள் நானே பயன்ப்படுத்தியதன் மூலம் அறிந்தது.

புவியியலிருப்பிடத்தினை அறிய, நமது இணைய தொடர்பின் ஐ.பி எண் தெரிந்திருக்க வேண்டும், இதற்கு ரொம்ப எல்லாம் மெனக்கெட வேண்டாம்,ஏதேனும் whois, trace route சேவை வழங்கும் இணையத்தளத்தில் நுழைந்தால் போதும் ,இணைய ஐ.பி யை காட்டும்.

எடுத்துக்காட்டாக,

http://whatismyipaddress.com/

இணையத்தளத்தில் நுழைந்தால் நமது  ஐ.பி காட்டும்,அல்லது ஐ.பி  காட்டும் கவுண்டர் விட்கெட் பதிவில் வைத்திருந்தால் அதுவே காட்டும்.

நாம் சொன்னது போன்ற தளங்களில் நுழைந்தால் ,ஐ.பி காட்டும் ,அதற்கு ஜியாலஜிகல் லோகேஷன் காட்ட அதற்கான சுட்டியை அமுக்கினால்  ,செர்வர் உள்ள இடத்தினை கூகுள் மேப்பில் காட்டும், வேலை சுலபமாகிடும்.

pic.1


pic.2



இப்பொழுது நமது இணைய சேவை வழங்கியின் இடம் தெரிந்தாகிவிட்டது, நமது கூகிள் கணக்கில் நடவடிக்கைகள் பகுதியில் பார்த்தால்,நமக்கான  "புவியியல் பிரதேசத்தில்"இருந்து நுழைவு செய்யப்பட்டதாக காட்ட வேண்டும்,காண்க "Recent activity" படம்.




# நமக்கான புவியியல் இடத்தின் உள்நுழைவு இல்லாமல் வேறு சில இடங்களில் இருந்து "உள்நுழைவு"செய்யப்பட்டதாக காட்டினால்,நமது கணக்கில்,யாரோ டீ ஆத்தப்பார்க்கிறாங்க  அல்லது மால்வேர்,ஸ்பைவேர், பிஷ்ஷிங்க் என ஏதோ விரும்பத்தகாத வேலை நடக்குது என ஒரு முடிவுக்கு  வரலாம்.

இப்ப அடுத்து என்ன செய்ய?

நம்ம கணக்கை இயக்கும் அதிகாரம் நம்மை தவிர யாருக்கிட்டே இருக்குனு பார்க்கனும்.

இதற்கு Account permissionsஇல் view all என்பதை அழுத்த வேண்டும், கீழ்கண்டவாறு ஒரு பெட்டி திறக்கும்,

படம்.


படத்தில் பார்த்தால் நமது கூகுள் கணக்கில் யாருக்கெல்லாம் இயக்க அனுமதிக் கொடுத்துள்ளோம் எனக்காட்டும்.

நம்ம பேரு  அல்லது நாம் விரும்பி அனுமதி கொடுத்தவர்கள் பெயர் மட்டும் தான் காட்டணும்.

ஆனால்  படத்தில் பார்த்தால் "உடான்ஸ்"என்ற தளத்துக்கும் அனுமதி கொடுத்திருப்பதாக காட்டுவதைக்காணலாம்.

இன்டி பிலாக்கர்,இன்டிலி,தமிழ்வெளி, தமிழ்மணம் என பல திரட்டிகளிலும் இணைத்துள்ளேன்,அவர்கள் எல்லாம் இப்படி கணக்கில் நுழைய அதிகாரம் பெற்றில்லை,உடான்ஸ் மட்டுமே கணக்கில் நுழைய ,அடிப்படை விவரங்கள் திரட்ட அனுமதிப்பெற்றதாக காட்டுவது சந்தேகத்திற்கிடமான செயல் ஆகும்.


எனக்கு நினைவு தெரிந்து அப்படி அனுமதி கொடுக்கவில்லை,அப்படி எனில் எப்படி சாத்தியமாச்சு?

அதனை அடுத்து  காணலாம், முதலில் உடான்ஸ் கொசுவை  விரட்டுவோம்.

உடான்ஸுக்கு என்ன வகையான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என வலப்புறம் காட்டுகிறது,அதற்கு மேலே "Revoke access"என உள்ளதை கவனிக்கவும்,நமது கணக்கை விட்டு வெளியேறும் முன் "ரிவோக் அக்செஸ்"என செய்துவிட வேண்டும் .இல்லை எனில் அடுத்த முறை நமக்கு உள் நுழைய அனுமதி கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

இப்பொழுது ரிவோக் செய்தாகிவிட்டது, அப்படியே ஒரு முறை நமது கடவுச்சொல்லையும் புதிதாக மாற்றிவிட்டு ,மாற்றங்களை சேவ் செய்துவிட்டால்,நம்ம கணக்கு இனிமே நமக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும்.

கவனத்தில் கொள்க,

# கடவுச்சொல்லினை எண் மற்றும் எழுத்து எனக்கலந்து கொஞ்சம் நீளமாக வைப்பது பாதுகாப்பானது.

# ரெகவரி மெயில் ஐடி/அலைப்பேசி எண் எனக்கொடுத்து வைக்கலாம்.

# ஒவ்வொரு முறை இணையப் பயன்ப்பாட்டிற்கு  பின்னரும், ஹிஸ்டரி,குக்கீஸ் ஆகியவற்றை அழித்து விடுவது போல நமது உலாவியில் தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம்.

# பொதுக்கணினிகளை பயன்ப்படுத்தும் பொழுது,பயனர்ப்பெயர்,கடவுச்சொல்லினை நினைவில் வைக்கும் தேர்வினை உள்நுழைவின் போது பயன்ப்படுத்தக்கூடாது.


# குக்கீஸ் &ஜாவா ஸ்கிரிப்ட்டை  பொதுவாக முடக்கி வைத்துவிட்டு,தேவைக்கு இயக்கிக்கொள்ள வேண்டும்.

சரி இப்ப "உடான்ஸ்"எப்படி நம்ம கணக்கில் ஒட்டிக்கிச்சு என்பதை ஆராயலாம்.

உடான்ஸ் என்பது ஒரு இலவச தமிழ்வலைத்திரட்டி, நமது வலைப்பதிவுகளை திரட்ட நாமாக முன்சென்று அதில் தகவல்களை அளித்து பதிவு செய்து இணைந்து கொள்கிறோம்.அப்பொழுது ஒரு "EULA"(enduser license agreement policy or privacy policy)இல் நமது ஒப்புதலை வாங்கிடுவார்கள், அதில் சுருக்கமாக "நம்ம தகவல்களை பெறுவோம்,பயன்ப்படுத்துவோம்"என சொல்வார்கள்,அனைத்து இணைய சேவைகளும் இவ்வேலையை செய்தாலும் சில ஆக்கங்கெட்ட கூமுட்டைகள்  மட்டும், நம்ம ரகசியத்தை உளவறியப் பயன்ப்படுத்திக்கொள்வார்கள்.

உடான்ஸ் திரட்டியில் இணைந்த பொழுதோ அல்லது பதிவுகளை திரட்ட அளித்த பொழுதோ நமது உலாவியில் "ஒட்டுக்கேட்கும்"ஸ்கிரிப்ட் கொண்ட குக்கீஸ்களை நிறுவிவிடுவார்கள், அவை நமதுஇணைய நடவடிக்கை மற்றும் லாக் இன் செஷன் குக்கீஸ்களை படிக்க வல்லது.


எடுத்துக்காட்டாக, நாம் பிலாக்கரில் உள்நுழைந்து இருக்கிறோம்,எனில் நமது கணக்கு விவரங்கள் பிலாக்கர் லாக் இன் செஷன் குக்கீசில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்,அப்பொழுது தான் நமது லாக் இன் ஆதண்டிக்கேட் ஆகும்.

சில சமயங்களில் நமது "லாக் இன் செஷன்ஸ்"ஐ.டி குக்கீசை அப்படியே ஹைஜாக் செய்து,வேறு இடத்தில் இருந்து நுழைவு செய்யவும் செய்யலாம்

கூகுள் போன்ற இணைய சேவை  ஜாம்பவான்களும் இப்படித்தகவல்களை பெறுகின்றார்கள்,ஆனால் பெரும்பாலும் சில்லறைத்தனமாக அனைவரின் கணக்கிலும் விளையாட மாட்டார்கள், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு சிலரின்  கணக்கில் கைவைக்கக்கூடும். அமெரிக்காவின் NSA கதை அனைவரும் அறிந்ததே.

பிஷிங்க் என்பது ஒரு புகழ்ப்பெற்ற தளம் போல நடித்து கணக்கு விவரங்களை திருடுவது, மேற்சொன்னது போல ஒட்டுக்கேட்கும் குக்கீஸ் மூலம் தகவல்களைப்பெற்று தவறாகப்பயன்ப்படுத்துவதும் "பிஷிங்கில்"ஒரு வகையே.

இலவசமாக வழங்கப்படும் சேவை எல்லாமே தூண்டில் புழுக்களே, சிலர் நம்மை "மீன்ப்பிடித்து"விடுவார்கள்,சிலர் சந்தர்ப்பத்துக்காக விட்டுப்பிடிக்க காத்திருப்பார்கள் அவ்வ்!

உடான்ஸ் தளம் ,குக்கீஸ் மூலம் தகவல்களைப்பெற்றதோடு அல்லாமல் கூகிள் கணக்கிலும் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு அத்துமீறி உள்நுழைவு செய்துள்ளது "இணைய அறத்துக்கு"புறம்பான செயல் ஆகும்.  நாம் சரியான நேரத்தில் கவனித்து  நீக்கிவிட்டோம். இது போல உடான்சில் இணைத்த அனைவருக்கும் நடக்க வாய்ப்புள்ளதால் அனைவருமே தத்தமது கூகிள் கணக்கை ஒரு முறை சரிப்பார்த்துக் கொள்வது நல்லது.

தற்சமயம் உடான்ஸ் திரட்டி செயல் படாமல் முடங்கியுள்ளது,ஆனாலும் அதன் உரிமையாளர்கள் முன்னர் பெற்ற தகவல்களை தவறாகப்பயன்ப்படுத்தும் வாய்ப்புள்ளதால்,அனைவரும் கவனமாக இருப்பதே நல்லது.

அடுத்தப்பகுதியில் மேலும் சில  பாதுகாப்பு நடவடிக்களை காண்போம்!

தொடரும்.
------------------------------------

பின்குறிப்பு:

# இக்கட்டுரை பொது மக்கள்,மற்றும் இணையப்பயனாளர்கள் நலன் கருதி ,ஒரு விழிப்புணர்வு நோக்கில் மட்டுமே வெளியிடப்படுகிறது,மற்றபடி ஒரு சிறுக்கொசுவிற்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கில் அல்ல!

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,மைக்ரோசாப்ட் இணைய தளங்கள்,நன்றி!
------------------------------------

அஃதே இஃதே-9

$
0
0

(புதுசு புதுசா ஏதோ சொல்றானே ,ஆமாம் மின்னூல் தொட்டா ஷாக்கடிக்குமா?..ஹி...ஹி)

# வலைப்பதிவுகளை எளிதாக மின்னூலாக்கம் செய்தல்.


மின்னூல் என்பது வெறும் பிடிஎஃப் மட்டுமல்ல , உலாவ தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட "epub, mobi,azw3” (மேலும் பல மின்னூல் வடிவங்கள் உள்ளன)போன்றவையும் ஆகும். இதில் " epub” (version-2,3)என்பது திறமூல மின்னூல் வடிவம் ஆகும், இதனை பல மின்னூல் வாசிப்பு(ebook readers) கருவிகளிலும் வாசிக்க இயலும், ஆனால் " mobi,azw3” போன்றவை அமேசான் நிறுவனத்தால் அவர்களின் கிண்டில் கருவிக்காகவே உருவாக்கப்பட்ட மின்னூல் வடிவம் ஆகும், அவர்களின் கருவியை தவிர மற்ற கருவிகளீல் படிக்க இயலாது. mobi ,azw3” ஆகியவை பழைய வடிவம் ஆகும் தற்போது KF8- kindle format-8 என்ற புதிய மின்னூல் வடிவினை அமேசான் முன்னெடுத்து செல்கிறது. இதோடு இல்லாமல் கிண்டில் எக்ஸ்ரே என ஒரு முறையினையும் அறிவித்துள்ளார்கள்,எப்ப இந்தியா பக்கம் வரும்னே தெரியலை.

மின்னூல் என்பது ஏதோ ஒரு வடிவில், கையடக்க கருவிகளுகளில் மின்னூல் என்பது தற்சமயம் பலராலும் வாசிக்க பயன்ப்பட்டு வருகிறது. தமிழ் ஒருங்குறி உருவான பின் இணையத்தில் தமிழில் எழுதுவது எளிதானது போன்றே , கையடக்க கருவிகளுக்கான மின்னூல் உருவாக்கத்திலும் ஒருங்குறி மிகவும் கைக்கொடுக்கிறது

தமிழ் ஒருங்குறியில் தட்டச்சு செய்யப்பட்டு ,நன்றாக கட்டமைக்கப்பட்ட (formatted) ஒரு கோப்பினை"மின்னூலாக்கம்"செய்யும் மென்ப்பொருளில் உள்ளீடு செய்தால் போதும் , சில நிமிடங்களில் மின்னூல் தயார்.

கேட்பதற்கு எளிதாக இருப்பினும் ,இதிலும் சில சிக்கல்கள் உள்ளன, அதனை பின்னர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக காணலாம். வணிக ரீதியில் விற்கத்தக்க தரமான மின்னூல் தயாரிப்பிற்கு தான் சிறிது மெனக்கெட வேண்டும், சும்மா பொழுதுப்போக்காக நண்பர்களுக்குள் படிக்க பரிமாறிக்கொள்ள எனில் மிக எளிதாக ஒரு வலைப்பதிவு இணைப்பு கருவி(blogger plug-in) மூலமே செய்ய இயலும்.

அதனை செயல் முறை பட விளக்கத்துடன் காணலாம்,

# கீழ் கண்ட ஜாவா ஸ்கிரிப்டினை பிரதியெடுத்துக்கொள்ளவும்,


//script src="http://dotepub.com/p/widget.php?lang=en&links=1&img=2" type="text/javascript"//

 டபுள் ஸ்லாஷ்களை மாற்றிவிட்டு,முன்னும் பின்னும்,"<" , ">" என போட்டுக்கொள்ளவும்.


ஜாவாஸ்கிரிப்ட் மூலம்,


இணையத்தளம்,நன்றி!

குறிப்பு: கூகிள் குரோம் உலாவிக்கு நீட்சி/இணைப்பியாகவும்(browser extension) கிடைக்கிறது. உலாவியில் இணைத்துக்கொண்டால் அனைத்து தளங்களையும் மின்னூலாக சேமித்துக்கொள்ள இயலும், பிடிஎஃப் விட மிக சிறிய அளவே இடம் பிடிக்கும்.

# வலைப்பதிவுனுள் நுழைவு செய்யவும், வலைப்பதிவு மோதுப்பலகை ஹி...ஹி டேஷ் போர்டிற்கு(blogger dasgboard) செல்லவும்.

# டேஷ் போர்டில் இடப்பக்க வரிசையில்,கீழே "அடைவுகள்" -டெம்ப்ளேட் "எனக்காட்டப்படுவதை அழுத்தவும்.

# தற்போது கீழ் கண்டவாறு ஒருப்பக்கம் திறக்கும்.


இதில் , வலைப்பதிவு அடைவுகள், அலைப்பேசி அடைவுகள் என இருபகுதிகள் காட்டும், அதில் வலைப்பதிவு அடைவுகளில் , மீயுயர் திருத்தி( edit html) என்ற பட்டையை அழுத்தவும்.

# படத்தில் காட்டியவாறு ,அடைவுகள் பக்கம் திறக்கும்.



கருவிகள் பட்டையில் குதிக்கவும்(jump to widget) என்பதெல்லாம் தேர்வு செய்ய தேவையில்லை, html ஆக காட்டும் அடைவுக்குறியீட்டுப்பகுதியில் (பெட்டியில்)சுட்டெலிப்புள்ளியை(mouse curser) வைத்து தேர்வு செய்யவும்,

பின்னர்,

விசைபலகையில் “ctrl+f “ அழுத்தினால் , அடைவுக்குறியீட்டுப்பெட்டியில் வலது மூலையில் தேடுதல் பெட்டி(serach box) தோன்றும்.

பதிவில் வலப்பக்கம்,இடப்பக்கம்,மேலே ,கீழே என பல கருவிகள் இணைத்திருப்போம், அதில் எந்த கருவிக்கு மேலாக மின்னூலாக்கம் செய்யும் கருவியின் பட்டை வர வேண்டும் என நினைக்கிறீர்களோ,அதன் பெயரை தேடுதல் பெட்டியில் கொடுத்து , எண்டர் தட்டவும்.

நான் செய்த முறை என்னவெனில்,

எனது பதிவில் சமீபத்திய வரவுகள் தான் ,வலப்பக்க வரிசையில் மேலாக முதலில் இருப்பதால் அதற்கு மேலாக மின்னூலாக்க கருவிப்பட்டையை வர வைக்க நினைத்தேன் ,எனவே "recent post” என தேடல் பெட்டியில் கொடுத்து தேடினேன், அதனை அடைவுக்குறியீட்டுப்பெட்டியில் கண்டுக்கொண்டேன்,

காண்கப்படம்.


"recent post” இன் குறியீட்டு வரைவு ஆக ஒரு கமெண்ட் உள்ளதை வட்டமிட்டு காட்டியுள்ளேன், அதன் கீழாக மின்னூலாக்க ஜாவா ஸ்கிரிப்டினை ஒட்டிவிட்டேன்.

அவ்ளவு தான், அடைவு மாற்றத்தினை சேமித்து விட்டு வெளியேறியாச்சு.

இப்பொழுது பதிவினை திறந்து பார்த்தால் , "recent post” தலைப்பிற்கு மேலாக மின்னூலாக்க கருவிப்பட்டை "e-book” என தெரியும்.




# எந்த பதிவினை மின்னூலாக்கம் செய்ய வேண்டுமோ அதனை திறந்து வைத்துக்கொண்டு , “ e-book” கருவிப்பட்டையை அழுத்தவும், இப்பொழுது ஒரு "துள்ளுப்பெட்டி" (pop-up box/window)தோன்றும், அதில் படங்களுடன் மின்னூலாக்கம் செய்யவா எனக்கேட்கும்,


ஆம் எனக்கொடுத்து விட்டால் தானியங்கியாக படங்களுடன் கூடிய மின்னூலை உருவாக்கி விடும்.

அதனை நமது கணினியில் சேமித்துக்கொள்ள வேண்டியது தான்.

கவனத்தில் கொள்க,

# இம்மின்னூல் நமது வலைப்பதிவின் மைய பகுதியில்- உள்ளடக்கத்தில்(body) உள்ளவற்றை மட்டுமே மின்னூலாக்கும்.

# அதிகமான படங்கள் இருக்குமெனில் அவற்றினை சேகரிக்க இயலாது ,குறிபிட்ட எண்ணிக்கையில் மட்டும் படங்களை சேகரிக்கும் என அறிவித்து விடும், அப்பொழுது அதற்கு ஏற்ப ,ஆம் இல்லை என தெரிவித்து மின்னூலாக்க வேண்டும்.

# மின்னூல் உலாவி(navigation), உள்ளடக்கப்பட்டியல்(Table of contents) ஆகியன , நமது பதிவில் உள்ளடக்கத்தினை எவ்வாறு தலைப்பிட்டு  வகைப்படுத்தியுள்ளோம் என்பதனை பொறுத்தே அமையும்.

# இம்மின்னூலினை கணினியில் ,அடோப் டிஜிட்டல் எடிஷன் , கிண்டில் கணினி படிப்பான் போன்ற மின்னூல் வாசிப்பு செயலிகளில்(applications) படிக்க இயலும். மேலும் அண்ட்ராயிட் அலைப்பேசி, நூக், கிண்டில் போன்ற கையடக்க கருவிகளிலும் படிக்க இயலும்.

# ஒருப்பதிவில் எந்த அளவுக்கு ஒருங்குறியில்*சிறப்பாக உள்ளடக்கம் கொண்டுள்ளதோ அதைப்பொறுத்தே "சேதமில்லாமல்மின்னூல் உருவாகும்.

*
மின்னூலின் சிறப்பான வெளியாக்கத்திற்கு ஒருங்குறி(ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகளூக்கு இது அவசியமாகும்),மீஉயர் மொழி(HTML), விரிவாக்க மீயுயர் மொழி( XHTML) ஆகியவற்றின் அடிப்படையில் , மின்னூலின் வடிவமைப்பு(formatting) மற்றும் கட்டமைப்பு (structure) சிறப்பாக இருக்க வேண்டும்.

இலவச மின்னூல் வாசிப்பு கருவிகள்,





# android -Moon+ reader என கூகிள் பிளேயில் ஆண்ட்ராய்ட் போனில் இருந்து தேடினால் ,கிடைக்கும்,அதனை நிறுவிக்கொள்ளலாம்.


நம்மப்பதிவை மின்னூலாக்கியதன் மாதிரிகள்,

அடோப் டிஜிட்டல் எடிஷனில்.


கிண்டில் கணினி படிப்பானில்.



கிண்டில் கருவியில் படிக்கும் பொழுது,e-ink, paper white ஆகியவற்றை மட்டும் தேர்வு செய்யவும், ஃபயர், எச்டி, எச்டி.டிஎக்ஸ் எல்லாம் உடைந்த வடிவில் காட்டும்.

இரு வகையிலும் மின்னூலாக்கியதில் "கிண்டில்"வடிவில் எழுத்துக்கள் தெளிவாக உள்ளன, ஈபுக்கில் கொஞ்சம் பிசிறடிக்குது.

android phone:



மேலும் மின்னூலுக்கு அட்டையாக "நிலையாக"பச்சைக்கலரில்அவர்களின் இணையத்தளப்பேரை போட்டுக்கொடுக்கிறாங்க, எனவே அட்டைப்படம் மாற்றுதல் மற்றும் மேலும் சில மேம்பாடுகளை , கேலிபர்எனப்படும் இலவச மின்னூல் உருவாக்கும் கருவியில் செய்துக்கொண்டேன்,




இந்த ஜவா ஸ்கிரிப்ட் பிளக்கினின் "epub"வடிவம் கொஞ்சம் பிசிறடித்தது, எனவே மொபி வடிவத்தினை , "கேலிபர்"மூலம் மீண்டும்"epub"ஆக மாற்றிக்கொண்டேன் ,அப்பொழுது நன்றாக எழுத்துக்கள் தெரிந்தன, முன்னரும் நன்றாக தெரிந்தது,ஆனால் வரிகளுக்கிடையே இடைவெளி குறைவாக,நெருக்கமாக தோன்றின.



வடிவம் மாற்றும் போதே அட்டைப்படமும் மாற்றிக்கொண்டேன் ,சும்மா பளிச்சுனு தெரிஞ்சது ,...ஹி ...ஹி மின்னூல் தான்!

அனேகமாக தமிழ் வலைப்பதிவுலக வரலாற்றில் மின்னூல் வலைப்பதிவை வெளியிட்டது அடியேனாக தான் இருக்கும் , ஹி...ஹி! ஓசி ஜாவா ஸ்கிரிப்டுக்கே இந்த அலப்பறையா என யாரோ தூரமா கூவுறாங்க போல அவ்வ்!

இப்படி வலைப்பதிவுகளை மின்னூலாக்கி வெளியிடுவதை "epublog”- மின்வலைப்பூ"என அழைக்கலாம் என நினைக்கிறேன்.

நேரம் கிடைப்பின் ,கேலிபர், சிஜில் போன்ற இலவச மின்னூலாக்க கருவிகளைக்கொண்டு தரமான மின்னூல் உருவாக்கும் முறையினையும் பதிவிடுகிறேன்.

அவல நகைச்சுவை குறிப்பு:

இந்த ஸ்கிரிப்டை சில நாட்களூக்கு முன்னர் பதிவில  இணைத்தேன்,இது வரைக்கும் வேறு எந்தப்பதிவிலும் காணாத ஒன்றுனு தான் இணைச்சேன்(எல்லாம் நினைப்புதேன்), வழக்கமாகவே ஆட் ஆன், பிளக்கின் சேர்க்க விரும்புவதேயில்லை. இதை வச்சு யாரும் மின்னூலாக உங்க பதிவை மாற்றினேனு சொல்லவேயில்லை என்பதால் ,ஹி...ஹி சுய விளம்பரமாக ஒரு பதிவை போட்டு தொலைச்சேன் அவ்வ்!

இம்புட்டு மொக்கையாக ஒருப்பதிவானு சபையில யாரும் கேட்டிரக்கூடாதுனு தான் இந்த பின் ஜாமீன் ஹி...ஹிi!


பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,


மற்றும்,

அடோப், கிண்டில்,கூகிள், இணையத்தளங்கள்,நன்றி!
-----------------------------------


சினிமாவுக்கு எனிமா!

$
0
0

(நம்ம வவ்வால் ஒரு தடவை சொன்னா..100 தடவை சொன்னா மாதிரி...ஹி..ஹி!)


சமீபத்திய சென்னை பெருநகராட்சி மாமன்ற நிதிநிலை அறிக்கை சமர்ப்பின் போது, மாமன்றத்தலைவர் சைதை.துரைசாமி அவர்கள் பல திட்டங்களை அறிவித்தார் ,ஆனால் அவற்றை எல்லாம் ஊடகங்களும் சாமனியர்களும் பெரிதும் கவனிக்கவில்லை ,அதே சமயம் சென்னை மாநகரில் "அம்மா திரையரங்கம்"என மலிவு கட்டண திரையரங்குகள் அமைக்கப்படும் என ஒரு மாபெரும் புரட்சித்திட்டத்தினை அறிவித்ததையே அனைவரும் ,வாயில நொரைதள்ளும் அளவுக்கு விவாதித்து மகிழ்கிறார்கள்( நொரை தள்ளப்பதிவு எழுதிட்டு பேசுறப்பேச்சப்பாரு அவ்வ்)

இணைய வெளியிலோ, அய்யய்யோ  ச்சொல்லவே வேண்டாம் ,முகநூல்,பிளஸ், துவித்தர் ,பழம்பஞ்சாங்கமான பிலாக்கர்னு எல்லா இடத்திலும்"இணைய சமூக போராளிகள்"பிரிக்கட்டி பிரிச்சு அடிச்சுட்டு இருக்காங்க!

நாட்டில ஆயிரம் பிரச்சினை ஓடுது ,கூவத்துல சாக்கடை ஓடுது ,அதுல கொசு மேயுது, அதைப்பற்றிலாம் எழுத நமக்கு முடியலை ,இந்த லட்சணத்துல இதைப்பத்தி எழுதனுமானு விரக்தி வெரட்டியடிக்க ,வழக்கம் போல மாட்டு சாணத்தில் இருந்து பெட்ரோல் தயாரிப்பது எப்படினு ஒரு பதிவு எழுதி"நான் ரொம்ப நல்லவன்"எனக்காட்டிக்கலாமானு மனசுல ஒரு நமைச்சல்.ஏற்கனவே புள்ளிவிவர அறிக்கை போல எழுதுற "கவர்ச்சியா"எழுதனும்னு பெரியவங்களால அறிவுரைக்கப்பட்டும் இன்னுமா திருந்தாம இருக்கணும் ,அவ்வப்போது "கவர்ச்சியா"எழுதி நாமளும் பதிவேண்டானு காட்டிக்கலாமேனு , அம்மா திரையரங்க திட்டத்தினை அலசிக்காயப்போடலாமே என இப்பதிவு.

புரட்சித்தலைவினு பட்டம் போட்டுக்கிறிங்களே ,என்ன புரட்சி செய்தீர்கள்னு யாராவது கேட்டுட்டாங்களானு தெரியலை ,சமீப காலமாக அறிவிக்கப்படுவன எல்லாமே புரட்சிகரமாகவே இருக்கின்றன ,பாவம் என்னை போன்ற அப்பிராணிகளுக்கு தான் மிரட்சியில முழுப்பிதுங்குது அவ்வ்!

இனிமே எவனாச்சும் அம்மையாரைப்பார்த்து "என்ன புரட்சி பண்ணினிங்கனு"நாக்கு மேல பல்லு போட்டு சொல்லுவான் ,சொன்னான் வாயில வெத்தலைப்பாக்கு போட வச்சிட மாட்டாங்க ரெத்தத்தின் ரெத்தங்கள் அவ்வ்!

இம்மாபெரும் புரட்சிகர சோசலிச முற்போக்கு திட்டத்தினை ஆதியோடு அந்தமாக அலசி ,பொருளாதார ரீதியாக சாத்தியமா என வரலாறு,புவியியல் ,புள்ளியியல் ஆதாரங்களோடு காண்போம் வாரீர்,வாரீர்!

# அம்மா திரையரங்க திட்டம் நடைமுறையில் சாத்தியமா?

சாத்தியமே!

# பொருளாதார ரீதியாக லாபமளிக்க கூடியதா?

லாபகரமான திட்டமே!

# இதனால் சமூகத்துக்கு பலன் உண்டா?

உண்டு!

# அப்படியானால் மக்களுக்கு அவசியமான திட்டம் தானே என்றால்,

இல்லை என்பேன்!

ஏனெனில் திரைப்படத்துறையினை முட்டுக்கொடுத்து காக்கும் சூழல் இல்லை, மேலும் இதனை விட அத்தியாவசிய தேவைகள் மக்களுக்கு இருக்கின்றன ,அவற்றின் மீது கவனம் செலுத்தலாம் என்பேன்.


இப்போ பொதுவா அரசே திரைத்தொழிலில் பங்குப்பெற்று நடத்துவதன் முன்,பின் வரலாற்றினைப்பார்ப்போம்.

# அரசுக்கு திரையரங்கம் நடத்துவது தான் வேலையா ,இந்த கொடுமைய எல்லாம் அம்மையார் மட்டும் தான் செய்வாங்கனு சில,பலர் நினைக்கலாம்,ஆனால் அரசே திரையரங்குகள் மற்றும் கலையரங்குகளை நடத்துவது ஆதி காலம் தொட்டே இருக்கிறது.

பல நாடுகளிலும் அரசே படத்தயாரிப்பிலும் ஈடுபடுகின்றன, இதற்கு ஆரம்பப்புள்ளி திரைப்படங்களின் ஆதி மூலமான ஃபிரான்ஸ் நாடு ஆகும்.

பிரான்ஸை சேர்ந்த, Auguste and Louis Lumièreசகோதரர்கள் கி.பி 1895 இல் "உணவு இடைவேளை"என்ற  முதல் சலனப்படத்தினை திரையிட்டதில் இருந்து "திரைப்பட தயாரிப்பில்"பிரான்சின் பங்கு துவங்குகிறது.

ஆரம்பத்தில் உலகிலேயே மிக அதிகமான திரைப்படங்கள் பிரான்சில் தான் தயாரிக்கப்பட்டன, பல தயாரிப்பு நிறுவனங்களும் துவங்கின,உலக அளவில் திரையிடப்பட்டன. லூமியர் சகோதரர்களால் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்ட படங்களே இந்தியாவிலும் பார்க்கப்பட்டது,அப்படி திரையிடப்பட்ட ஒரு படத்தினை "தாதா சாகேப் பால்கே"பார்க்க நேரிட்டதால் தான் இந்திய சினிமா துறையும் உருவானது.

*(எச்சரிக்கை: பால்கே வரலாற்று பதிவு கிடப்பில் இருக்கு ,எந்நேரமும் வரலாம் அவ்வ்)

ஆனால் அமெரிக்காவும் படத்தயாரிப்பில் குதித்து பெருமளவில் தயாரிக்க ஆரம்பித்ததும் ,பிரஞ்சு படத்தயாரிப்புகளுக்கான உலக சந்தை சுருங்கியது,உள்நாட்டு சந்தையிலும் அமெரிக்க படங்கள் ஆதிக்கம் செலுத்தவே ,பிரஞ்சு தயாரிப்பாளர்கள் ,திரையரங்குகள் ஆகியன நெருக்கடியில் சிக்கின. எனவே 1911 ஆம் ஆண்டு ,பிரான்சில் 7 அயல்நாட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டால் கண்டிப்பாக ஒரு பிரஞ்சு படத்தினை திரையிட வேண்டும் என தியேட்டர்களுக்கு கட்டுப்பாட்டினை அரசு விதித்துள்ளது.

அப்படியும் பிரஞ்சு படத்தயாரிப்பு நிறுவனங்கள் சிக்கலில் தவிக்கவே, படத்தயாரிப்பினை ஊக்குவிக்க ,அரசே கடனுதவி அளித்தது மேலும்  Georges Mélièsஎன்பவரின் படத்தயாரிப்பு நிறுவனத்தினை பிரஞ்சு அரசே வாங்கி படத்தயாரிப்பிலும் ஈடுபடலாயிற்று.

இவ்விடத்தே ஜியார்ஜெஸ் மெலைஸ் பற்றி சிறிது நினைவு கூர்வோம்,இல்லையெனில் ,திரை ஆர்வலன் என நினைத்துக்கொள்வதில் பொருளேயில்லை, தேவையில்லாத கதை என நினைப்பவர்கள் ஒரு லாங்க் ஜம்ப் அடித்து அடுத்தப்பகுதிக்கு தாவவும்!

Georges Méliès என்பவர் அக்காலத்தில் மேஜிக் நிபுணராக இருந்து ,திரைப்படத்துறையில் இயக்கம்,நடிப்பு, தயாரிப்பு என பல துறைகளிலும் பிரான்சில் கலக்கியவர். இன்றும் பயன்ப்படுத்தப்படும் பல திரை சிறப்பு நுணுக்கங்கள் இவராலேயே உருவாக்கப்பட்டவையே. அதனாலே "திரைப்பட சிறப்புக்காட்சிகளின் தந்தை"என அழைக்கப்படுகிறார். எடிட்டிங்கில் பேரலல் கட், ஜம்ப் கட் எல்லாம் இவரால் கையாளப்பட்ட உத்திகளே!

உலகின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி படமும் இவர் தான் எடுத்தாராம், ஒரு அம்மணி உடைமாற்றுவது தான் மொத்த படமே, படம் முடிச்சதும் அம்மணியையே கண்ணாலம் கட்டிக்கினார் அவ்வ்!(ஹி...ஹி இப்படி ஒரு படம் எடுத்து ...எடுத்து அடப்போங்கப்பா)

கி.பி 1900 ஆம் ஆண்டில் ,மவுனப்படக்காலத்திலேயே , இவர் ஒருவரே ஏழுத்தோற்றங்களில் ஒரே காட்சியாக தோன்றி "சப்தவதாரம்"எடுத்து சாதித்தவர். தொழில்நுட்பம் வளர்ந்தக்காலத்தில் கூட தசவதாரம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டதாக பில்ட் அப் தான் நம்ம ஊரில் கொடுக்கிறாங்க அவ்வ்!

மேலும் ஒவ்வொரு ஃப்ரேமையும் கைகளால் வண்ணம் தீட்டியே கி.பி 1902 இல் வண்ணப்படங்களையும் எடுத்துள்ளார்.

சப்தவதாரம்- The One-Man Band 




வண்ணப்படம்- A Trip to the Moon 



---------------------------------------------------

பிரஞ்சு மொழியில் பல உலக சிறப்புப்பெற்ற கலைத்துவம் வாய்ந்த திரைப்படங்கள் ,அரசு தயாரிப்பில் தான் உருவான, பிரஞ்சு புதிய அலை சினிமா பிறப்பதற்கும்.அரசின் இம்முயற்சியே காரணமாகும்.

கி.பி 1946 முதல் the Centre national du cinéma et de l'image animée (CNC)என்ற அமைப்பின் மூலம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படத்தயாரிப்பில் பிரஞ்சு அரசு ஈடுபட்டு வருகிறது,மேலும் உலக சினிமா நிதி என்ற ஒன்றினை உருவாக்கி பல்வேறு நாட்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்தும் உலக படங்களையும் தயாரிக்கிறது.

குறிப்பு:

உலகத்திலேயே இந்தியர்களுக்கு சினிமா மோகம் அதிகம்,அதிலும் தமிழனுக்கு வெறீயே அதிகம்னு பொதுவா பேச்சுண்டு, ஆனால் அதையெல்லாம் அசால்ட்டா பிரெஞ்சுக்காரங்க தூக்கியடிக்கிறாங்க,

உலகத்திலேயே திரையரங்க வருவாயில் மூன்றாவது இடம் பிரான்ஸ் தான் , முன்னால அமெரிக்காவும்,அடுத்து இந்தியாவும் இருக்கு.

மூன்றாவது இடம் தானேனு நினைக்கலாம் அங்கே தான் இருக்கு மேட்டர், அமெரிக்கா பெரிய நாடு, மக்கள் தொகை நம்ம அளவுக்கு இல்லைனாலும் 32 கோடி இருக்கு,மேலும் நிறைய தியேட்டர் அதோடு  உலக அளவில் மார்க்கெட் உள்ளவர்கள்.

இந்தியா பெரிய நாடு ,அதிக மக்கள் நிறைய பேர் படம் பார்க்கிறாங்க,எனவே இரண்டாம் இடம்.

ஆனால் வெறும் 5.9 (6.58 crores-2013)கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்சில் 5,465 தியேட்டர்கள் இருக்கு(தமிழ் நாட்டின் மக்கள் தொகை சுமார் 7 கோடி ,1,150 தியேட்டர்களே உள்ளன), மேலும் ஒரு மாநகர பகுதியில் உலகிலேயே மிக அதிக தியேட்டர்கள் கொண்ட நகரம் பாரிஸ் தான்!!!

இனிமே எவனாது தமிழனுக்கு சினிமா வெறினு சொன்னால்"ப்ரெஞ்ச் ஃப்ரை"செய்துடணும் :-))


# அதே காலக்கட்டத்தில் இங்கிலாந்திலும் படத்தயாரிப்பில் நெருக்கடியான சூழல் உருவாகவே ,இங்கிலாந்து அரசும்,1925 இல் அயல்நாட்டு படங்களுக்கு கட்டுப்பாடு,உள்நாட்டு தயாரிப்புக்கு வரிச்சலுகை என வழங்கியது, இங்கிலாந்து சினிமாட்டோகிராபி சட்டம் என ஒன்றினையும் போட்டுள்ளது.

பின்னர் மீண்டும் 1949 இல்"the National Film Finance Corporation (NFFC)"என்ற அமைப்பினை உருவாக்கி தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றிற்கு கடனுதவி அளித்து வருகிறது. மேலும் கட்டண வசூலில் 50% தயாரிப்பாளருக்கு கட்டாயம் பங்கு தர வேண்டும் என சட்டமும் இயற்றியது.

# ஐக்கிய அரசநாடுகளின் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் திரைப்படத்துறையினை மேலும் விரிவாக்க வேண்டும் என திட்டமிட்டு, கி.பி. 1960 இல் பேருந்துகளை "நகரும் திரையரங்குகளாக"(movi bus) வடிவைமத்து ,நகரில் உலாவ விட்டது.

(மூவி பஸ் குழு)

(டிக்கெட் வாங்க(சினிமாவுக்குதேன்) காத்திருக்கும் சீமான்கள்)

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில்,அப்பொழுதெல்லாம் டிஜிட்டல் புரொஜெக்ஷன், வண்ணத்தொலைக்காட்சியெல்லாம் இல்லை, வழக்கமான சினிமா புரொஜெக்டரையே பேருந்துக்குள் வைத்து இயக்கினார்கள்!

( அக்கால மூவி பஸ் உட்புறம்,அப்பவே ஒருத்தன் தூங்குறான்யா)

ஆம்னி பஸ்ஸில் டிவிடில படம் போடுறதுக்கு பெரியார் சுழியே ,இங்கிலாந்தில தான் போட்டிருக்காங்க :-))

தற்பொழுது ஐக்கிய அரசநாடுகள் அரசு இத்தகைய "சினிமா பேருந்துகளை"இயக்குவதில்லை, ஆனால் அதே பழைய சினிமா பேருந்துகளை சில திரையார்வலர்கள் விலைக்கு வாங்கி ,செப்பனிட்டு டிஜிட்டல் புரொஜெக்‌ஷன்,சர்ரவுண்டு சவுண்டில் இன்றும் லண்டனில் இயக்கி வருகிறார்கள்.

(தற்கால டிஜிட்டல் மூவி பஸ்)

# திரைப்படங்களுக்கு முன்னரே நாடகங்களை அரங்கேற்ற என அரசே 'நாடக அரங்கங்களையும்"கட்டியுள்ளது.

கி.பி 1879 இல் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அரங்கேற்ற என "தி ஷேக்ஸ்பியர் மெமோரியல் தியேட்டர்"என ஒரு நாடக அரங்கினை சிலர் ஒன்று சேர்ந்து உருவாக்கினர், பின்னர் 1939  இல் ராயல் ஷேக்ஸ்பியர் தியேட்டர் என அரசின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டது.

(ஷேக்ஸ்பியர் நாடக கொட்டாய்)

அக்காலக்கட்டத்தில் ,பெர்னாட் ஷா முதலான எழுத்தாளர்கள் மற்றும் நாடக ஆர்வலர்கள் ஒன்று கூடி அரசே ஒரு நாடக அரங்கினை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்,அதன் பலனாக  கி.பி 1948 இல் லண்டன் கவுண்டி கவுன்சில் ,தேம்ஸ் நதிக்கரையோரம் இடம் ஒதுக்கி தந்தது. பின்னர் கி.பி 1949 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி ,நிதி ஒதுக்கி"தி ராயல் நேஷனல் தியேட்டர்"என ஒன்றினை நாடக அரங்கேற்றங்களுக்காக கட்டினார்கள்.

(நேஷனல் நாடகக்கொட்டாய்)

இந்த நாடக அரங்கம் இன்றளவும் பல மாற்றங்களுடன் இயங்கி வருகிறது , இதற்கென ஆண்டு தோறும் ஆகும் செலவில் 28% மாநியமாக இங்கிலாந்து அரசு அளிக்கிறது, மேற்கொண்டு நிதி நன்கொடைகள் மற்றும் கட்டணத்தின் மூலம் சரிக்கட்டப்படுகிறது.

நவீன கால மாற்றத்திற்கு ஏற்ப, அரங்கில் நடைப்பெறும் நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் பல்வேறு சினிமா தியேட்டர்களின் திரையில் செயற்கைக்கோள் மூலமும் ஒளிப்பரப்பப்படுகிறது.

தமிழகத்தின் நிலை:


நம் நாட்டில்  தமிழ்நாடு என மொழி வாரியாக மாநிலமாகாத அக்காலத்தில், சென்னை மாகாண ஆட்சி மன்ற செயல்பாடுகள் ,அரசினர் தோட்டம் எனப்படும் ஓமாந்தூரார் தோட்டத்தில் இருந்த "பழைய கவர்னர் மாளிகையில்"தான் கூடியது ,பின்னர் இடத்தேவை கருதி ஒரு புதியக்கட்டிடமும் கட்டப்பட்டது, இந்தியா குடியரசாக ஆன பின்னர் செயல் பட்ட தமிழக சட்ட மன்றம் அப்புதியக்கட்டிடத்தில் தான் கி.பி 1952-57 வரையில் செயல்ப்பட்டது.

மேற்கண்ட சட்டமன்ற வரலாறு எதுக்குனு குழம்பலாம், விசயமிருக்கு,இன்று அம்மா திரையங்கத்தினை நக்கலடிக்கும் கழக சொம்புகள் ஒன்றினை  வசதியாக மறந்து விட்டார்கள், சென்னையில் முதல் அரசு திரையரங்கினை  1974 இல் உருவாக்கியது வேறு யாருமல்ல சாட்சாத் மஞ்சத்துண்டு அய்யா அவர்களே :-))



ஆமாம் அப்பழைய சட்டமன்ற வளாகத்தினை  கி.பி 1974 இல் மேம்படுத்தி , 1039 நபர்கள் அமரும் வகையில் திரையரங்காகவும், மாலையில் நாடக அரங்காகவும் செயல்படும் வகையில் மாற்றி கட்டி,அதற்கு கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்நினைவாக "கலைவாணர் அரங்கம்"எனப்பெயரிட்டார்கள். எனவே சென்னையில் முன்னரே அரசால் திரையரங்கம் நடத்தப்பட்டுள்ளது  என்பது தெளிவாகும்.

லாபகரமாக இயங்கியதா என்ற கேள்விக்குள் எல்லாம் போகத்தேவையிலை ,கலைவாணர் அரங்கு 2009 வரையில் சிறப்பாகவே இயங்கியது, மாலையில் பி.சி சர்க்கார் மேஜிக் ஷோ, நாடகம் போன்றவை நடக்கும்,பகல் வேலையில் இரு காட்சிகள் மட்டும் ஆங்கிலம்,தமிழ் என ஏதேனும் திரைப்படங்களை மலிவு கட்டணத்தில் திரையிடுவார்கள்.

நானே பல முறை பார்த்துள்ளேன்,முதல் வகுப்பு கட்டணமே 10 அல்லது 12 ரூ என இருக்கும், பெரும்பாலும் பல இடங்களில் ஓடி முடித்த திரைப்படங்கள் அல்லது உலக திரைப்பட வரிசையில் வந்த படங்களை தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை  வாங்கி திரையிடும், சில சமயங்களில் "கிளாசிக்கான ஸீன்"படங்களும் காணக்கிடைக்கும் ஹி...ஹி!

(இடிப்பட்ட கலைவாணர்)

இத்தகைய பாரம்பரியமிகு கலையரங்கை 2009 இல் புதிய தலைமை செயலகம் கட்டுகிறேன் என இடித்து தள்ளியதும் ,மாண்புமிகு மஞ்சத்துண்டு அவர்களே, மேலும் புதிதாக ஒரு கலையரங்கு கட்டி கலைவாணர் பெயரே வைப்பேன் என வாக்குறுதியளித்தார் , அவசரமாக அரைகுறையாக தலைமைச்செயலகத்தினை கட்டி திறந்தாரே ஒழிய "கலையரங்கை கட்ட மறந்துவிட்டார்"அவ்வ்!

சென்னையில் மட்டுமல்ல திருச்சியில் கூட மாநகராட்சியின் சார்பில் "கலையரங்கம்"என்ற தியேட்டர் கட்டப்பட்டு ,இன்றளவும் இயங்கி வருகிறது,தற்சமயம் நீண்டக்கால குத்தகைக்கு விடப்பட்டு ,டிடிஎஸ், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனில் "கதிர் வேலன் காதலை"மக்களுக்கு காட்டி மகிழ்வித்து வருகிறது!



இது போன்று நெய்வேலி நகரியத்தில் ,  மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் ,பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால்"அமராவதி"என்ற திரையரங்கம் நடத்தப்பட்டது, தற்சமயம் செயல்பாட்டில் இல்லை.

எனவே அரசு எந்திரங்களின் சார்பாக திரையரங்குகள் கட்டி நிர்வாகிப்பது ஒன்றும் வழக்கில் இல்லாத செயல் அல்ல.

கம்யூனிச நாடுகளில் எல்லாம் வழக்கமாகவே திரைப்படத்தயாரிப்பு,விநியோகம், திரையிடல் என அனைத்தையும் அரசே செய்யும்(முன்னாள் சோவியத் யூனியன்) ,அவர்களை உதாரணம் காட்டக்கூடாது என்றே ஜனநாயக நாடுகளை சொல்லியுள்ளேன்.

#  இந்திய அளவில் ,திரைப்படங்களின் வளர்ச்சிக்காக தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் (NFDC formerly Film Finance Corporation)என ஒன்று நிறுவப்பட்டு , பல படங்களை அரசின் நிதியில் தயாரிக்கப்படுகின்றன.



ஜி.வி.அய்யரின் மகாபாரதம்(முதல் சமஸ்கிருத மொழிப்படம்) , மேலும் சலீம் லாங்டே பீ மாத் ரோ ,மீரா நாயரின் மிர்ச்சி மசலா,சலாம் பாம்பே,மம்முட்டி நடித்த "பாபா சாகெப் அம்பேத்கார்" ,டிரெயின் டு பாகிஸ்தான், ஷபனா அஸ்மி நடித்த தாராவிபோன்ற விருது வென்றப்படங்கள் எல்லாம் NFDC ஆல் தயாரிக்கப்பட்டவையே.



தமிழிலும் பல படங்கள் NFDC நிதியில் தயாரிக்கப்பட்டுள்ளன, பாலு மகேந்திராவின்(காலம் சென்ற) வீடு,சந்தியாராகம் , மகேந்திரனின் "சாசனம்", ஹரிஹரனின் "ஏழாவது மனிதன்"கே.எஸ்.சேதுமாதவன்(கேரளா)இயக்கத்தில் நடிகர் சிவகுமார் நடித்த "மறுபக்கம்"போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

ஆரம்பத்தில் புதுமுக இயக்குனர்கள், பிரபல இயக்குனர்கள் என அனைவருக்கும் NFDC நிதியளித்து உதவியது ,சமீபகாலமாக புதுமுக இயக்குனர்களுக்கு படம் தயாரிக்க நிதியளிப்பதில்லை( தற்காலிகமாக அனைத்து படத்தயாரிப்பினையும் நிறுத்தியுள்ளார்கள்). தற்சமயம் இணையத்தில் கட்டண சேவையாக படங்களை ஒளிப்பரப்பி வருகிறார்கள்.

அரசின் நிதியில் திரைப்படங்கள் தயாரிக்கலாம் எனில் திரையரங்குகளும் கட்டலாம் தானே!

#பொருளாதார சாத்தியம்.


திரையரங்குகளை அரசே நடத்தினால் அவற்றிற்கு நல்ல திரைப்படங்கள் கிடைப்பது கடினம் மேலும்  பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களின் விநியோக விலை அதிகம் அவற்றினை வாங்கி மலிவாக திரையிட்டால் நட்டம் வரும் என்கிறார்கள்.

ஆனால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது, தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது ,இதனால் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் இழப்பு ஏற்படுகின்றது, இதனை சரி கட்டும் விதமாக , வரிவிலக்கு பெற்ற படங்களின் ஒன்று அல்லது இரண்டு பிரதிகளை "திரைப்பட *பிரதி"தயாரிப்பு செலவின் விலைக்கு மட்டுமே அரசிற்கு விற்க வேண்டும் என சட்டம் போடலாம்.

*பிரதி தயாரிப்பு செலவு தற்போது டிஜிட்டல் DCP க்கு சுமார் 50 ஆயிரங்கள் மட்டுமே

இப்படி செய்வது அரசே ,அதிகார துஷ்பிரயோகம் செய்யும் செயல் என நினைக்கலாம், அப்படியல்ல வழக்கமாக தேசிய விருது வென்ற படங்களின் ஒரு பிரதியை,படப்பிரதியிட ஆகும் செலவுக்கே தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்திற்கு கொடுக்க வேண்டும் என விதி இருக்கு.

அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்வார்கள், தூர்தர்ஷனிலும் ஒளிப்பரப்பிக்கொள்வார்கள். விருது கிடைக்குது எனில் படப்பிரதி விலைக்கு விற்கும் தயாரிப்பாளர்கள் ,வரி விலக்கு கிடைக்க,படப்பிரதியின் விலைக்கு கொடுக்க கூடாதா?

இது நம்ம நாட்டில மட்டும் இல்லை ஆஸ்கார் போன்ற விருதுகளுக்கு படம் அனுப்பினாலும் இப்படி ஒரு பிரதியை கொடுக்கணும், அவர்கள் அவற்றை எல்லாம் ஆஸ்கார் பெஸ்ட் மூவி கலெக்‌ஷன்"என டிவிடி போட்டு விற்றுக்கொள்வார்கள் அவ்வ்!

மேலும், ஆஸ்கார் நாமினேஷன் செய்யும் போது தயாரிப்பாளர் சுமார் 200 டிவிடி பிரிண்டுகளும் இலவசமாக அளிக்கனும், அதெல்லாம் ஜூரிகள் பார்க்கவாம்!

பல கோடி ரூபாய்கள்  மதிப்பில் கேளிக்கை வரிச்சலுகை கொடுக்கும் அரசுக்கு பதில் கைமாறாக இதனைக்கருதி தயாரிப்பாளர்கள் செய்யலாம்,செய்வார்கள்! அம்மையார் உத்தரவு இட்டால் மீற முடியுமா,இல்லை மீறித்தான் படமெடுக்க முடியுமா!!!

# மேலும் பல எண்ணற்ற சிறு,குறு முதலீட்டு திரைப்படங்களுக்கு அரங்கம் கிடைப்பதேயில்லை எனவே அவர்களுக்கும் பெரும்பயனாக இருக்கும்.

# தற்பொழுதெல்லாம் குறும்படம் தயாரிப்பவர்களும் ,மெனக்கெட்டு பிரிவியூ தியேட்டர்களை அதிக வாடகைக்கு பிடித்து திரையிட்டு காட்டுகிறார்கள், அவர்களுக்கு மலிவான கட்டணத்தில் திரையிட அனுமதியளிக்கலாம். இது திரைக்கலையினை வளர்க்க உதவும்.

# சென்னையில் மட்டும் சில திரையரங்குகள் அமைப்பதை விட தமிழகம் முழுவதுமே மாவட்டம் தோறும் சில அரங்குகள் அமைத்து விட்டு ,சென்னையில் ஒரு மத்திய திரைப்பட ஒளிப்பரப்பு சேவை வழங்கியை நிறுவி அனைத்து அரங்குகளிலும் ,செயற்கை கோள் மூலம் திரையிட செய்யலாம்,எனவே ஒன்றிரண்டு டிஜிட்டல் பிரிண்ட் கிடைத்தாலே பல அரங்குகளில் திரையிட்டு ,குறைவான செலவில் அதிக வருவாய் திரட்ட முடியும்.

# ஒவ்வொரு திரையரங்க வளாகத்திலும் ,கடைகள்,உணவங்கள் அமைக்க இடம் ஒதுக்கி வாடகைக்கு விடலாம்,எனவே நிரந்தர வருவாய் நிச்சயம்.

இவ்வாறு பல்வேறு வருவாய் வழிமுறைகளை ஒருங்கிணைத்து செயல்ப்படுத்தினால் அரசின் திரையரங்க திட்டத்தின் மூலம் நிலையான வருவாய் கிடைக்கும், இயக்குதல் ,பராமரிப்பு செலவீனங்களை சமாளிக்கவும் இயலும்,நட்டம் தவிர்க்கப்படும்.

மலிவுக்கட்டண திரையரங்குகள் உருவானால் ,தற்போதுள்ள திரையரங்குகள் அடிக்கும் கட்டண கொள்ளைக்கு சாவு மணியாக அமையும், மொக்கைப்படத்துக்கெல்லாம் 100 ரூக்கு மேல் அழும் மக்களுக்கு பெரிதும் உதவும்.

சேவை மற்றும் தொழில் துறை ஆகியவற்றை எல்லாம் அரசே நடத்துவது என்பது பொதுவுடமை சித்தாந்தம் ஆகும் .அம்மா குடிநீர்,உணவகம், அம்மா திரையரங்கம் என பல பொதுவுடைமை வணிக நிறுவனங்கள் அரசால் துவக்கப்படுவதை பார்த்தால் வருங்காலத்தில் , தமிழ்நாடு சோசலிச அரசாக மாறினாலும் ஆச்சர்யமில்லை, எல்லாம் செவப்புத்துண்டு கட்சிக்காரங்களோட வச்சிருக்க கூட்டணி சவகாச தோஷமோ என்னவோ!!!

ஒரு உற்சாக குறிப்பு:

பதிவை கவர்ச்சிகரமாக எழுதனும்னு நினைச்சாலும் ,அப்படி ஒரு அசாம்பாவிதம் நம்ம எழுத்துல நடக்கவேயில்லையேனு ஒரே ஃபீலிங்ஸ், எனவே, ஹி...ஹி இன்னொரு படம் போட்டுக்கிறேன் !

(என்னப்பார்வை உந்தன் பார்வை...ஹி..ஹி)

-------------------------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

# http://en.wikipedia.org/wiki/Royal_National_Theatre

#http://en.wikipedia.org/wiki/Shakespeare_Memorial_Theatre

#http://www.nationaltheatre.org.uk/support-us/why-support-the-national-theatre/national-theatre-live-digital-innovation

# http://www.cnc.fr/web/en/missions

#  http://www.nfdcindia.com/

# http://stats.uis.unesco.org/unesco/TableViewer/tableView.aspx

மற்றும் விக்கி,யூ டியூப், கூகிள் இணையத்தளங்கள்,நன்றி!
-------------------------------

கட்டம் கட்டி கலக்குவோம் -2

$
0
0
(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே!...ஹி...ஹி)


வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கிறேங்க்ணா...!

எதிர்ப்பார்த்ததை விட நிறைய பேர் சதுரங்கத்தில் ஆர்வமாக இருப்பதை அறிய மகிழ்ச்சி!

முந்தைய பதிவில் சதுரங்க வரலாற்றினைப்பார்த்தோம், இப்பதிவில் , சதுரங்கம் விளையாடத்தேவையான தளவாடங்கள், சதுரங்கப்பலகை, அதில் உள்ள ஆட்டக்காய்கள், அவற்றின் நகர்வுகள், மற்றும் நகர்வுகளை எவ்வாறு குறிப்பெழுதுவது ஆகியவற்றினை காண்போம். முறையாக ஆடுவதற்கு மேற்கண்ட அடிப்படைகளை அறிந்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

முந்தைய பகுதியை படிக்காதவர்கள் ,ஒரு புரிதலுக்காக அப்பதிவை படித்துவிடவும், ஹி...ஹி வரலாறு மிக முக்கியம் மக்களே...!

சுட்டி:

chess-1


சதுரங்க விளையாட்டு என்பது இரு நபர்கள் விளையாடும் ஓர் உள்ளரங்குப் பலகை விளையாட்டு (Indoor board game) ஆகும். ஆட்டத்தின் துவக்கத்தில்  இரு ஆட்டக்காரர்களுக்கும் ,கறுப்பு ,வெள்ளை என இரு நிறங்களில் தலா பதினாறு காய்கள் வீதம் மொத்தம் 32 ஆட்டக்காய்கள் கொடுக்கப்படும். ஒருவர்  16 வெள்ளை நிறக்காய்களுடனும், அடுத்தவர் 16 கறுப்பு நிறக்காய்களுடனும் ஆட்டத்தினை ஆடுவார்கள்.

நிறத்தேர்வு ,  இரு தனிநபர்களுக்கிடையேயான போட்டி எனில் டாஸ் போட்டோ அல்லது நிறைய பேர் பங்கெடுக்கும் போட்டிகளில் என்றால் , ரேண்டமாக நிர்வாகிகளே நிறத்தினை தேர்வு செய்து , போட்டியாளர்களுக்கென பட்டியல் தயாரித்துவிடுவார்கள், இதனை  FIXTURE or PAIRING என்பார்கள். ஒவ்வொரு சுற்றிலும், தானாகவே கறுப்பு,வெள்ளை என நிறம் மாறி ,மாறி வந்துவிடும், எனவே முதல் சுற்றில் கறுப்பு வண்ணக்காய்கள் கிடைத்தால் கடைசி வரையில் அதிலேயே ஆட வேண்டியதாகி விடும் என அஞ்சத்தேவையில்லை.

சதுரங்க ஆட்டக்காய்கள்(chess pieces).


chess pieces-pic.

ஒவ்வொரு ஆட்டக்காய்களும்  அவற்றின் ஆங்கிலப்பெயரின் முதல் எழுத்தால் குறியீடாக குறிக்கப்படும்.

ஒரு ராஜா= KING-K, மதிப்பிட இயலா புள்ளிகள் மதிப்பு கொண்டது.


ஒரு ராணி =QUEEN-Q,ஒன்பது புள்ளிகள் மதிப்பு


இரண்டு யானைகள் = elephant= fort=ROOK- R. தலா ஐந்து புள்ளிகள் மதிப்பு.


இரண்டு குதிரைகள்  = horse= KNIGHT=KN-N. தலா  மூன்று புள்ளிகள் மதிப்பு


இரண்டு மந்திரிகள்  =minister= BISHOP-B.தலா  மூன்று புள்ளிகள் மதிப்பு.


எட்டு வீரர்கள்.=soldiers=Pawn- P. தலா ஒரு புள்ளி மதிப்பு.


என தலா 16 ஆட்டக்காய்கள் இருவருக்கும் கிடைக்கும். மொத்தம் 32 ஆட்டக்காய்கள்.

ஆட்டக்காய்களுக்கு என மதிப்பு புள்ளிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவற்றை வைத்து வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படுவதில்லை, வெட்டும் போதோ அல்லது வெட்டுக்கொடுக்கும் போதோ எதனை வெட்டுக்கொடுக்கலாம், அல்லது வெட்டலாம் என எளிதாக தீர்மானிக்க மட்டுமே இம்மதிப்பு புள்ளிகள் பயன்ப்படுகிறது.

உதாரணமாக , யானையை வைத்து பிஷப் அல்லது குதிரையை வெட்டி விட்டு , பதிலுக்கு யானையை இழக்க கூடாது. யானை என்பது, பிஷப் அல்லது குதிரையை விட அதிக புள்ளிகள் மதிப்பு கொண்டது. ஏன் எனில் அதிக சக்தியுடன் ஆட்டத்தில் தாக்குதல் நடத்தப்பயன்ப்படுத்தலாம்.

சதுரங்கப்பலகை(Chess board):

ஒரு சதுரங்கப்பலகை என்பது ,கறுப்பு, வெள்ளை என அடுத்தடுத்து 64 கட்டங்களைக்கொண்டிருக்கும். கறுப்பு,வெள்ளை என இல்லாமல் ஏதோ இரண்டு , வெளிர் ,மற்றும் அழுத்தமான வண்ணங்களிலும் பலகை மற்றும் காய்கள் பயன்ப்படுத்தலாம். கறுப்பு, வெள்ளை என்பது பொதுவான வண்ணமாகும்.

இந்த 64 கட்டங்களும் , இடமிருந்து வலமாக ,கிடைமட்டமாக எட்டு வரிசையாகவும், மேலிருந்து கீழாக செங்குத்ததாக  எட்டு வரிசையாகவும்,, "eight rows and eight columns"ஆக பிரிக்கப்பட்டிருக்கும்.

numberd board -pic.



கிடை மட்ட வரிசைகள் = row = rank

செங்குத்து வரிசைகள் = column =Line= file

ஆட்ட நகர்வுகளை குறிப்பெழுத வசதியாக கிடைமட்ட வரிசையில் ஆங்கில சிறிய எழுத்தில் , இடமிருந்து வலமாக "a-to- h" என பெயரிட்டு இருப்பார்கள்.ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒரு  column =Line= file ஐ குறிக்கும்.ஒவ்வொரு நெட்டுக்குத்து(column) வரிசையிலும் 1-8  வரையில் எண்ணிட்டு எட்டுக்கட்டங்கள் இருக்கும்.


கீழிருந்து  மேலாக  1 முதல் 8 வரையில் எண்களிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு எண்ணும் ஒரு  row = rankஐ குறிக்கும். ஒவ்வொன்றிலும் எட்டுக்கட்டங்கள் கிடைமட்டத்தில் "a-to- h" வரை  இருக்கும்.

இதனைக்கொண்டு 64 கட்டங்களையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி குறிக்க முடியும். ஒரு தெருவில் பல வீடுகள் இருக்கும் போது ஒவ்வொரு வீட்டுக்கும் கதவிலக்கம் கொடுத்து அடையாளப்படுத்துவது போல தான்.

இந்த கோ ஆர்டினேட்களை கொண்டு ஒவ்வொரு கட்டத்திற்கும் தனி அடையாள எண் கொடுக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.



மேற்சொன்ன முறையினைப்பயன்ப்படுத்தி  நகர்வுகளை குறிப்பெழுதும் முறை இறுதியில் சொல்லப்படும்.

இப்பொழுது பலகையினை அமைப்பது, காய்களை அடுக்குவது மற்றும்  ஒவ்வொரு ஆட்டக்காய்களும் எம்முறையில் நகரும் என்பதனைக்காணலாம். பெரும்பாலோருக்கு மேற்சொன்னவைகள் எல்லாம் தெரிந்தும் இருக்கலாம், புதியவர்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதால் பொதுவாக அனைத்தையும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

வாழை இலைப்போட்டு சாப்பிடும் போது இலையின் நுனி, இடப்பக்கம் இருக்குமாறு இலைப்போடும் சம்பிரதாயம் இருப்பது போல சதுரங்கப்பலகையினை  வைக்கவும் ஒரு விதியிருக்கு ,சதுரங்கப்பலகையினை  விளையாட அமைக்கும் போது , வெள்ளை நிறம்( வெளிர் நிறம்) கொண்ட கட்டம் , வெள்ளை நிறக்காய்களுடன் ஆடுபவருக்கு வலப்புறத்தில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.


வெள்ளை நிற ஆட்டக்காய்களுக்கு ஒன்றாம் எண் கிடைமட்ட வரிசை( row = rank) ஆரம்பமாக இருக்கும், அதே போல  கறுப்பு நிறத்துக்காய்களுக்கு எட்டாவது கிடைமட்ட வரிசை( row = rank) முதல் வரிசையாக இருக்கும்.

முதல் வரிசையின்(first rank) இடது ஓரத்தில் உள்ள  முதல் கட்டத்தினை a1என்பார்கள், அதாவது "a column,இல்  first rank இல் முதல் கட்டம் ஆகும்,இப்படியே கிடைமட்டமாக a1 முதல் h1வரையிலான முதல் வரிசையில்(first rank),முக்கியமான ஆட்டக்காய்களான , ராஜா, ராணி, யானை முதலானவற்றை அடுக்கப்பட வேண்டும்.

இரண்டாவது வரிசையில்(second rank)எட்டு வீரர்களும்(pawns) அடுக்க வேண்டும். அதாவது a-2 to h2 வரையில் அடுக்கப்பட வேண்டும்.

இப்பொழுது முதல் வரிசையில் முக்கியமான காய்கள் அடுக்கும் ஒழுங்குமுறையினை காணலாம்,

இரு ஓர முனைகளில் உள்ள a-1 மற்றும் h-1இல் இரண்டு யானைகளும் இடம்பிடிக்கும்.

இருபக்கமும் உள்ள யானைக்களுக்கு அடுத்து உள்ள கட்டத்தில் b-1,and g1 squares இல் ,இரண்டு குதிரைகள் இடம்பிடிக்கும்.

இரு பக்க குதிரைகளுக்கு அடுத்து உள்ள கட்டத்தில்,c-1&f-1 squaresஇல் இரு  பிஷப்கள் இடம் பிடிக்கும். ஒரு பிஷப் வெள்ளைக்கட்டத்திலும்,இன்னொரு பிஷப் கறுப்பு கட்டத்திலும் இருக்கும், அவை அந்நிற கட்டங்களில் மட்டுமே மூலை விட்டமாக பயணிக்கும்.

முதல் வரிசையின் மையத்தில் உள்ள இரண்டுக்கட்டங்களில் ராஜா, ராணி இடம் பிடிக்கும், ராஜா எப்பொழுதும் அதன் நிறத்துக்கு எதிர் நிறம் கொண்ட கட்டத்தில் தான் வைக்கப்பட வேண்டும், ராணி அதன் நிறத்துக்கு ஒத்த நிறத்தில் உள்ள கட்டத்தில் இடம் பிடிக்கும். ,

அதன் படி வெள்ளை ராஜாவின் ஆரம்பக்கட்டம் ,King -e1என்ற கறுப்புக்கட்டம் ஆகும்

வெள்ளை ராணியின் ஆரம்பக்கட்டம் -Queen -d1 என்ற வெள்ளைக்கட்டம் ஆகும்.

வெள்ளைக்காய்கள் எப்படி அமைந்து உள்ளதோ அதே போல நேருக்கு  நேராக கறுப்பின் ஆட்டக்காய்களும் அமைக்கப்பட வேண்டும். ராஜாவுக்கு நேராக ராஜா, ராணிக்கு நேராக ராணி, யானைக்கு நேராக யானை என்பதாக.

pic.
(குறியீடாக ஆட்டக்காய்கள் அடுக்கப்பட்டிருக்கும் முறை)


அனைத்து ஆட்டக்காய்களும் அடுக்கப்பட்டு ஆட்டம் துவங்க தயாராக உள்ள சதுரங்கப்பலகை ,கீழ்கண்ட படத்தில் உள்ளது போலக்காணப்படும்.

full board-pic


சாதாரணமாக வீட்டில் பொழுது போக்கிற்கு விளையாட , ஒரு சதுரங்கப்பலகையும், காய்களும் போதும். இது 50 ரூபாய் முதல் கிடைக்கிறது.

ஓரளவு தரமான செட் எனில் சுமார் 250 ரூ ஆகும்,  சதுரங்கப்போட்டிகளில் பயன்ப்படுத்த என ஃபிடே (FIDE)என்ற சர்வதேச சம்மேளன வரையடிப்படியான போட்டி ஆட்டக்காய்கள் மற்றும் பலகையின் ஆரம்ப விலை சுமார்  300 ரூபாய்களே. ஆட்டக்காய்கள்  கனமான "திட பிளாஸ்டிக்கிலும்"(solid plastic) ,பலகை சுருட்டி மடிக்கும் வினைல் ஷீட் வடிவிலும் இருக்கும்.

(சுருட்டி மடிக்க தக்க வினைல் ஷீட் போர்ட் ,விலை ரூ-140)


மேலும் கூடுதல் விலையில் ரோஸ் உட், தேக்கு,மார்பிள், ஸ்டீல்,கண்ணாடி  ஆகியவற்ரால்  செய்த சதுரங்க செட்களின் விலை சில ஆயிரங்கள் முதல் பல்லாயிரங்கள் விலையில் இருக்கு. அவரவர் வசதிக்கு ஏற்ப வாங்கிப்பயன்ப்படுத்தலாம்.

chess set-pic.




படத்தில் இருக்கும் பிளைவுட்டால் ஆன சதுரங்க பலகை மற்றும் காய்கள்  கொண்ட செட் 250 ரூபாய்க்கு வாங்கியது. இதனுடன் கொடுத்த மரத்தினாலான காய்கள் அளவில் சிறியதாக இருந்ததால்,   ஃபிடே அங்கீகாரம் பெற்ற பிளாஸ்டிக் காய்கள் மட்டும் தனியாக 140 ரூக்கு வாங்கிக்கொண்டேன்.

ஆட்டக்காய்கள்.


இவை அனைத்து விளையாட்டு உபகரணக்கடைகளிலும் கிடைக்கும், டோர்னமெண்ட் செஸ் செட் எனக்கேட்டால் கொடுப்பார்கள்.

இப்பொழுது ஆட்டப்பலகை தயார், போட்டிகளில் விளையாட அடுத்து என்ன தேவைப்படும்?

போட்டிகளில் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் என குறிப்பிட்ட நேரமே வழங்கப்படும், யார் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு நகர்த்தல்கள் செய்தார்கள் என கண்டுப்பிடிக்க /அளவிட என"சதுரங்க கடிகாரம்"(chess clock) என ஒன்று பயன்ப்படுத்தப்படுகிறது.

chess clock-pic.
(குவார்ட்ஸ் அனலாக் சதுரங்க கடிகாரம்)

இதில் இரு கடிகார முகப்புகள் இருக்கும், ஒரு கடிகாரம் ஓடும் போது இன்னொன்று ஓடாது.

சதுரங்க கடிகாரத்தினை , வெள்ளைநிற ஆட்டக்காய்களுடன் ஆடுபவரின் இடப்புறத்தில் தான் எப்பொழுதும் வைக்க வேண்டும், இது வெள்ளை எடுத்தவருக்கு ஒரு கூடுதல் அனுகூலம் ஆகும், வலது கையால் காய்களை நகர்த்திக்கொண்டு, ஸ்கோர் எழுதிக்கொள்ளவும் செய்யலாம், இடதுக்கையால் கடிகாரத்தினை இயக்கிக்கொள்ளலாம்.

ஆனால் கறுப்பு எடுத்தவருக்கு , கடிகாரம் வலப்புறமாக அமைந்து விடுவதால், நகர்த்தல்,ஸ்கோர் எழுதுதல் , கடிகாரம் இயக்குதல் என அனைத்தும் ஒரே கையால் செய்ய வேண்டியதாக இருக்கும், எனவே நேரம் குறைவாக இருக்கும் நெருக்கடியான நேரத்தில் ,வேகமாக அனைத்து வேலைகளையும் செய்ய இயலாது.

வெள்ளை நிறம் எடுத்தவர் ஒரு நகர்த்தல் செய்து முடித்ததும் அவர் பக்கம் உள்ள கடிகாரத்தின் மேல் உள்ள பித்தானை அழுத்தி "stopping the clock" செய்ய வேண்டும், இப்பொழுது கறுப்பு நிறம் எடுத்தவர் பக்கம் உள்ள கடிகாரம் ஓடத்துவங்கும், அதாவது ,அவரின் காய்நகர்த்தல் குறித்து யோசிக்க ஆகும் நேரம் மட்டும் இப்பொழுது  குறையும். அதாவது ஒவ்வொருவரின் காய்நகர்த்தல் மற்றும் அதுக்குறித்து யோசிப்பதெல்லாம் அவரவருக்கான நேரத்தில் செய்யப்பட வேண்டும்.

கறுப்பு நிறம் எடுத்தாடுபவர் ,தனது நகர்வினை செய்தவுடன்,அவர்ப்பக்கம் உள்ள கடிகாரத்தினை நிறுத்திவிட்டால், வெள்ளை நிறம் எடுத்தாடுபவருக்கான கடிகாரம் ஓடத்துவங்கும்.

சதுரங்க ஆட்ட வகைகள்:

சதுரங்கத்தில் பொதுவாக ஆட்ட நேரத்தின்(time duration)அடிப்படையில் மூன்று வகை ஆட்டங்கள் உண்டு.

# வழக்கமான ஆட்டம்(Regular game)-  ஒரு மணி நேர டைம் லிமிட்டுகளாக மூன்று தவணைகளில், தலா 3 மணி நேரம் ,பின்னர் தலா அரைமணி நேரம் "sudden death or finish". மொத்த விளையாட்டு நேரம் 7 மணி நேரம். இம்முறையில் தான் மாநில, தேசிய,சர்வதேச, உலக சேம்பியன்ஷிப்கள் நடத்தப்படும்.

# விரைவு ஆட்டம்.(Rapid game)- தலா அரைமணி நேரம் , மொத்த ஆட்டமும், ஒரு மணி நேரத்தில் நேரத்தின் அடிப்படையில்  அல்லது, செக் மேட்,டிரா என ஏதோ ஒரு வகையில் முடிக்கப்பட்டுவிடும்.

# மின்னல் வேக ஆட்டம்(Lightning or Blitz)-தலா ஐந்து நிமிடங்கள் மட்டுமே. மொத்த ஆட்டமும் 10 நிமிடங்களில் மின்னலாய் முடிந்துவிடும்.

இதுவல்லாமல் Blind fold ,simultaneus chess , கணினிக்கு எதிரான சதுரங்கம்,போன்ற மரபுசாரா ஆட்டங்களும் உண்டு.

மேலும் மரபு சாரா சதுரங்கத்தில் பாபி ஃபிஷர் அறிமுகப்படுத்திய செஸ் -960, மற்றும் ரேண்டம் செஸ் என்ற வகையும் உண்டு. இவற்றில் பின் வரிசையில் அடுக்கும் காய்களை சில விதிகளுக்கு உட்பட்டு எப்படி வேண்டுமானாலும் மாற்றி அடுக்கிக்கொள்வார்கள்,


இப்பொழுது வழக்கமான ஆட்டம்(Regular game)-  பற்றி விரிவாக காணலாம்,

ரெகுலர் கேம் -  வழக்கமான நகர்த்தலுக்கு என தலா 3 மணி நேரம்.

இதில் முதல் ஒரு மணி நேரத்தில்(time control) , இருவரும் தலா 12 நகர்த்தல்கள் செய்யப்பட வேண்டும், யாரொருவர் முதல் ஒரு மணி நேரத்தில் 12 நகர்த்தல்கள் செய்ய தவறுகிறார்களோ அவர்கள்,நேரத்தின் அடிப்படையில் தோற்றதாக அறிவிக்கப்படும்.

அடுத்து வரும் ஒவ்வொரு மணிக்கும் தலா 15 நகர்த்தல்கள் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு டைம் லிமிட்டிலும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் நகர்த்தல் செய்து முடிக்கப்பட வேண்டும்.

ஒரு டைம் கண்ட்ரோல் பீரியடில் கூடுதலாக நகர்த்தல்கள் செய்துக்கொள்ளலாம், ஆனால் அடுத்த டைம் கண்ட்ரோல் பீரியடில் அதற்கான எண்ணிக்கையில் நகர்த்தல்கள் செய்யப்பட வேண்டும்.

இருவருக்கும் வழங்கப்பட்ட தலா 3 மணி நேரத்தில்(மொத்தம் 6 மணிநேரம்) ஆட்டம் முடியவில்லை எனில்,

இறுதியில்"sudden death or finish".  ஆக தலா அரை மணி நேரம் வழங்கபடும், இதில் நகர்த்தல்களுக்கு கணக்கில்லை, ஆனால் , கடைசியில் ஒருவர் நகர்த்தியதற்கு பதில் நகர்த்தல் செய்வதற்குள் நமது அரைமணி  நேரம் முடிந்து விட்டாலும்"நேரத்தின் அடிப்படையில்"தோற்றதாக அறிவிக்கப்படும்.

குறிப்பு: உள்ளூர் போட்டிகள் நிர்வாகிகளின் வசதிக்கு ஏற்ப கால அளவுடன் நடத்தப்படுவதுண்டு.

எனவே அவரவருக்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள் நகர்த்தல்கள் செய்யப்படுவதை  உறுதி செய்ய சதுரங்கக்கடிகாரம் போட்டிகளில் கலந்துக்கொள்பவர்களுக்கு அவசியம்  தேவைப்படும்.

மேலும் நேரத்தினைப் பயன்ப்படுத்துவதால், வழங்கப்பட்ட ஆட்ட நேரத்திற்குள் டிரா, அல்லது வெற்றி என ஒரு முடிவு தெரியாத வகையில் ஆடினாலும், நேரத்தின் அடிப்படையில் ஒரு ரிசல்ட் கிடைத்துவிடும் என்பதாலேயே "போட்டிகளில் கடிகாரம்"பயன்ப்படுத்தப்படுகிறது.

மேலும் சதுரங்க கடிகாரம் வைத்து நேர அளவுடன் ஆடுவதில் உள்ள ஒரு சிறப்பு அல்லது சிக்கல் என்னவெனில், ஒரு ஆட்டக்காரர் ,உதாரணமாக வெள்ளைக்காய்களுடன் ஆடுபவர் வேகமாக ஆடி , ஒவ்வொரு மணிக்கும் தேவையான காய்நகர்த்தல்களை குறைவான நேரத்தில் செய்துவிட்டால் ,அவருக்காக ஒதுக்கப்பட்ட 3 மணி நேரத்தில் பெருமளவு அப்படியே இருக்கும்,ஒவ்வொரு  time contrlol நேரத்திலும் சேமிக்கப்பட்ட நேரம் அடுத்தடுத்த time contrlol  நேரத்துடன் கூட்டிக்கொள்ளப்படும். எனவே கறுப்புக்காய்களுடன் ஆடுபவர்  ஒவ்வொரு நகர்த்தல்களையும் மிக மெதுவாக செய்து அவருக்கான 3 மணி நேரத்தினை காலி செய்துவிட்டிருந்தால் , "sudden death or finish"எனப்படும் அரைமணி நேர காலக்கேடு கறுப்பு நிறத்துக்கு மட்டுமே வைக்கப்படும், வெள்ளை நிறம் ஏற்கனவே உள்ள உபரி நேரத்தில் ஆடும், எனவே ,கறுப்பு நிறத்தினை வைத்து ஆடுபவர் , அரைமணி நேரத்திற்குள் செக் மேட் செய்து வெற்றிப்பெற வேண்டும் அல்லது டிராவாது செய்து விட வேண்டும், எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் காய்களை மட்டுமே இங்கும் அங்கும் நகர்த்திக்கொண்டிருந்தால் , நேரம் தீர்ந்து தானாகவே நேரத்தின் அடிப்படையில் தோற்றுவிடுவார்.

எனவே போட்டிகளில் விளையாட விரும்புவோர் சதுரங்க கடிகாரம் ஒன்றினை வாங்கி வைத்துக்கொண்டு "டைம் லிமிட்டுடன்"விளையாடி பழகுதல் அவசியம் ஆகும்.

சதுரங்க கடிகாரத்தில் ,அனலாக் ,டிஜிட்டல் என இரு வகையுண்டு.

அனலாக் வகையில் சாவி கொடுத்து இயங்கும் எந்திர வகை(மெக்கானிக்கல் கீ வைண்டிங்)மற்றும் மின் கலத்தில் இயங்கும் குவார்ட்ஸ் வகை  என இரண்டு வகை உண்டு.

கீ கொடுத்து இயங்கும் மெக்கானிக்கல் வகை கடிகாரங்கள் விலை குறைவானவை சுமார்  2000-2500 ரூ விலையில் கிடைக்கும், ஆனால் தற்சமயம் அவ்வகையான கடிகாரங்கள் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை.

இதற்கு அடுத்த விலையில் மின்கலத்தினால் இயங்கும் குவார்ட்ஸ் வகை அனலாக் கடிகாரங்கள், சுமார்  3000-4000 ரூ விலையில் கிடைக்கிறது.

டிஜிட்டல் வகை கடிகாரங்கள் சுமார் 5000-6000 ரூ விலையில் கிடைக்கிறது.



இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட குறைவாகவும்,அல்லது கூடிய விலையிலும் சதுரங்க கடிகாரங்கள் உள்ளன, பிராண்ட் மற்றும் சில சிறப்பு அம்சங்கள் பொறுத்து விலை மாறும். மேலும் ஃபிடே(FIDE)வரையறை செய்துள்ள தகுதிகள்,தரத்தில் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஃபிடே(FIDE) தரத்தில் கிடைக்கும் பொதுவான அம்சங்களை கொண்ட கடிகாரங்களின் விலையையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இவ்வகை கடிகாரங்கள் பொதுவாகவே மற்ற தரநிர்ணயமில்லாதவற்றை விட 500--1000 ரூ விலைக்கூட இருப்பது வழக்கம்.

நேரத்தினை கணக்கிட கடிகாரம் உள்ளது, ஆனால் ஒவ்வொரு மணிக்கும் எத்தனை நகர்த்தல்கள் செய்தார்கள் என கணக்கிட  மற்றும் பதிவு செய்ய என்ன செய்வது?

இதற்கு ஒவ்வொரு நகர்த்தல்களையும் குறிப்பெழுதி வைக்க வேண்டும்.

அவ்வாறு குறிப்பெழுத வசதியாக இருப்பதற்கு தான் , சதுரங்கப்பலகையினை எண்&  ஆங்கில எழுத்து முறையில் குறிப்பிட்டு கட்டங்களை அடையாளப்படுத்தி வைத்துள்ளார்கள், இம்முறையில் "ஸ்கோர் "எழுதுவதனை,"standard algebraic notation"என்பார்கள்,ஆட்டத்தின் போது ஒவ்வொரு காய்களும் எந்தக்கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது என ஒரு காகிதத்தில் இரு ஆட்டக்காரர்களும் எழுதி வைக்க வேண்டும், இது கட்டாயம் ஆகும். இவ்வாறு எழுதப்பயன்ப்படும் காகிதத்தினை "ஸ்கோர் ஷீட்"(score sheet)என்பார்கள்.

படம்: ஸ்கோர் ஷீட்.


சதுரங்கம் விளையாட தேவையான அடிப்படையான தளவாடங்கள் குறித்து பார்த்தாகிவிட்டது, அடிப்படையாக விளையாட மேற்சொன்னவைகளே போதும் ,ஆனால் போட்டிகளில் பங்குப்பெற மேம்பட்ட சதுரங்க ஆட்டத்திறன் தேவை,எனவே  ஆட்டத்திறனை மேம்ப்படுத்த ,சதுரங்க நூல்களை வாசித்து பல ஆட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்ள  வேண்டும், துவக்க ஆட்ட நூல்கள்( chess openings games) , நடு ஆட்ட முறைகள்(middle ames) இறுதி ஆட்ட முறைகள் (end games) என வகை வாரியாக நூல்கள் உள்ளன.

அடிப்படையாக ,அனைவரும் வைத்திருக்க அல்லது படித்திருக்க வேண்டிய நூல்கள்  என சொன்னால்,

Encyclopedia of chess openings-(ECO)

Modern chess openings -(MCO)

ஆகிய நூல்கள் ஆகும், இவை ஆண்டு தோறும் புதிய வகை ஆட்டவேறுபாடுகள், புதிய விளக்கங்களுடனும் வெளியாகிறது.

ஒரு பயிற்சியாளரை அணுகியும் மேம்படுத்திக்கொள்ளலாம், அப்படி இல்லாத பட்சத்தில் கணினி கொண்டு விளையாடி பயிற்சி எடுக்கலாம், எனவே ஒரு நல்ல வேகமான கணினியும் அவசியம் தேவை. பெரும்பாலும் கணினி விளையாட்டுகள் விளையாடப்பயன்ப்படுத்தப்படும், மல்டி கோர், கிராபிக்ஸ் பிராசசர் உள்ள கணினி பயன்ப்படுத்தினால் சதுரங்க மென்ப்பொருள் அதன் முழுத்திறனில் செயல்படும்.

சதுரங்க மென்ப்பொருள்கள்(chess softwares):

சந்தையில் பல சதுரங்க மென்ப்பொருட்கள் கிடைக்கின்றன, அதில் முன்னணியில் உள்ள சில ஆட்டமுறை வணிக மென்ப்பொருட்களை மட்டும்  குறிப்பிடுகிறேன்.

chess base

Deep fritz-13

மேற்சொன்ன இரண்டும் நீண்ட நாட்களாக முன்னணி மென்ப்பொருளாக விளங்கி வருகின்றன. செஸ் பேஸ் என்ற மென்ப்பொருளை தான் பல உலக சாம்பியன்கள் பயன்ப்படுத்தி வருகிறார்கள்.

இதில் செஸ் பேஸ் என்பது அடிப்படையில் ஒரு செஸ் எஞ்சின் ஆகும், அதனுடன் எந்த ஒரு இடை ஊடகத்தினையும் இணைத்து விளையாடலாம்.

டீப் ஃபிரிட்ஸ் என்பது செஸ் பேஸ் உடன் இணைந்த இடைமுகப்புக்கொண்ட ஒரு மென்பொருள் அவ்வளவே.

Deep fritz-13 என்ற மென்ப்பொருளையும் கிராண்ட் மாஸ்டர்கள் பயன்ப்படுத்தி வருகிறார்கள், காரி கேஸ்பரொவ் உடன் நடந்த கணினியுடன் ஆடிய சதுரங்கப்போட்டியில் அவரை வெல்லப்பயன்ப்படுத்திய அல்காரிதம் கொண்டது, போட்டிக்கு பின்னர் காஸ்பரோவின் ஆலோசனைகள் அடிப்படையில் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்டது என்கிறார்கள்.

இதில் Deep fritz-13 என்பது மல்டி கோர் பிராசர் உள்ள கணினிகளுக்கானது, மற்ற வகை கணினிகளுக்கு என  fritz-13என்றப்பெயரில் உள்ளது.

இந்த மென்ப்பொருட்களை லைசன்ஸுடன் வாங்குவதாக இருந்தால் சுமார் 70-100 டாலர் விலை வரும், அப்படியே இந்திய ரூபாய்க்கு மாற்றிக்கொள்ளுங்கள், நம்ம ஊரிலும் கிட்டத்தட்ட அதே விலைக்கு கிடைக்கிறது.

இவற்றின் டெமொ வெர்ஷன்கள் இலவசமாக பயன்ப்படுத்திப்பார்க்க கிடைக்கிறது, சம்பந்ப்பட்ட இணைய தளங்களுக்கு சென்று தரவிறக்கிப்பயன்ப்படுத்தி பார்க்கலாம். அளவு சுமார் 200 எம்பி வரும்.

ஹி...ஹி வழக்கம் போல கள்ள மார்க்கெட்டில் கிராக் செய்த முழு மென்பொருளும்  100 ரூபாய்க்கும் கிடைக்கும், மேலும், இணையத்திலும் தரவிறக்கம் செய்யலாம், ஆனால் அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் நீங்களா தேடிக்கணும் அவ்வ்!

மேலும்  இந்த ஆண்டு ,   கணினிகளுக்கிடையே நடக்கும் சதுரங்கப்போட்டியில் கீழ்கண்ட மூன்று  மென்ப்பொருட்களும் பல மென்ப்பொருட்களை வீழ்த்திக்காட்டியுள்ளன. இதில் கொமோடோ-6.0 சாம்பியனாகியுள்ளது.

komodo 6.0

Stockfish

Rybka

எனவே வரும் ஆண்டுகளில் சந்தையில் இவை முன்னணி சதுரங்க மென்ப்பொருளாக வர வாய்ப்புள்ளது, தற்பொழுதே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன ,மேலும் விலை மலிவாகவும் உள்ளவை.

குறிப்பு:

ஒரு சதுரங்க மென்ப்பொருள் என்பது , ஒரு இடைமுகப்பு(interface),சதுரங்க எந்திரம்,(chess engine), ஆட்டத்தொகுப்பு (data base) ஆகிய மூன்றினைக்கொண்டிருக்கும். சதுரங்க எந்திரம் தான் ஒரு மென்ப்பொருளின் திறனை நிர்ணயிக்க கூடியது, இவற்ரை தனியாக வைத்துக்கொண்டு ,விருப்பட்ட இடைமுகப்பு, டேட்டா பேசுடன் இணைத்து பயன்ப்படுத்திக்கொள்ளலாம். எனவே பெரும்பாலான மென்ப்பொருட்களில் சில குறிப்பிட்ட சதுரங்க எந்திரங்களே இருக்கும், ஆனால் இடைமுகப்பு, மற்றும் டேட்டா பேஸ் மற்றும் மாற்றிவிட்டு , புதிய பெயரில் புதிய மென்பொருளாக அறிமுகம் செய்து விற்பார்கள்.

இந்த மூன்றும் நன்கு ஒருங்கிணைந்து செயல்படும் மென்பொருளே திறன் வாய்ந்தது எனலாம், அதன் அடிப்படையிலேயே ,ஒரே சதுரங்க எந்திரம் கொண்ட இரண்டு  மென்பொருளில் கூட செயல்திறனில்  வித்தியாசம் காட்டும்.

Stockfish

Rybka

இவையிரண்டும் ஒப்பன் சோர்ஸ் சதுரங்க எந்திரங்கள்,இவற்றை அடிப்படையாக வைத்து ,இடைமுகப்பு, டேட்டா பேஸ் ஆகியவற்றை இணைத்து வணிக மென்ப்பொருட்களும் விற்பனையில் உள்ளன, ஆனால் விலை மலிவானவை.

standard algebraic notation முறையில் ஸ்கோர் எழதுவதனை பின்னர் காணலாம், இப்பொழுது ஒவ்வொரு ஆட்டக்காய்களும் சதுரங்கப்பலகையில் எவ்விதம் நகர்வுகளை மேற்கொள்ளும் எனக்காணலாம்.

யானை(ROOK):




யானை கனத்த,பெரிய உருவம் உடையது , எனவே அதனால் குறுகிய வழியில் ,வளைந்து நெளிந்து செல்ல முடியாது அல்லவா, அதே போல சதுரங்க யானையும் வளைந்து நெளிந்து செல்லாது.  நேரான பாதையில் முன்னால் , குத்து வரிசையிலும், பக்கவாட்டில் கிடைவரிசையிலும் செல்லும்.

# கட்டத்தின் மூலைவிட்டம் வழியான பாதையில் செல்லாது.

# தடையில்லா பாதையில் மட்டுமே செல்லும் ,யானைப்பயணிக்கும் பாதையில் எந்த ஆட்டக்காய்களும் இருக்கக்கூடாது. தனது சொந்த ஆட்டக்காய்களையோ, எதிரணியின் ஆட்டக்காய்களையோ தாண்டாது.

# காலியாக உள்ள கட்டங்கள் வரையில் எத்தனை கட்டம் வேண்டுமானாலும் நகர்த்தலாம்.

# யானையை நகர்த்தி வைக்கும் கட்டத்தில் சொந்த அணியின் காய்கள் எதுவும் இருக்கக்கூடாது, பாதுகாப்பற்ற எதிரணிக்காய் இருக்குமானால் அதனை வெட்டலாம், எவ்வகை ஆட்டக்காயாக இருந்தாலும் வெட்டி வீழ்த்தலாம்.

யானை நகர்வு படம்:



மந்திரி (BISHOP)




 # நேரான பாதையில் செல்லும் ,அதே சமயம் மூலைவிட்டமாக.(diagonal movement)மட்டுமே செல்லமுடியும்.எத்தனைக்கட்டங்கள் வேண்டுமானாலும் ,முன்னால்,பின்னால் என மூலைவிட்டமாக நகர்த்தலாம்.



# செல்லும் பாதை எவ்வித காய்களும் இல்லாமல் காலியாக இருக்க வேண்டும், இடையில் சொந்த அணியின் காய் இருக்குமானால் தாண்டி செல்லாது. கடைசியில் சென்றடையும் கட்டமும் காலியாக இருக்க  வேண்டும்.  பாதுகாப்பற்ற எதிரணி ஆட்டக்காய் இருக்குமெனில் வெட்டிவிட்டு ,அக்கட்டத்தில் வைக்கலாம்.

# கறுப்பு கட்டத்தில் உள்ள பிஷப் ,கறுப்பு மூலைவிட்டமாகவும், வெள்ளைக்கட்டத்தில் உள்ள பிஷப், வெள்ளை மூலைவிட்டமாகவும் தான் ஆட்டம் முடியும் வரையில் பயணிக்க முடியும்.

# பாதுகாப்பற்ற எதிரணியின் எவ்வித ஆட்டக்காயையும் வெட்டிவிட்டு அவ்விடத்தில் வைக்கலாம்.

# திறந்த மூலை விட்டத்தில் நீண்ட தொலைவுக்கு கட்டுப்பாடு, தாக்குதல் அளிக்கவல்லது என்பதால் , நெரிசல் குறைவான "இறுதி ஆட்டத்தில்"பலனளிக்க வல்லது.

குதிரை(Knight)




குதிரை எப்படி துள்ளிக்குதித்து தாண்டி செல்கிறதோ அதே போல சதுரங்கக்குதிரையும் , தாண்டி செல்லக்கூடியது, சதுரங்க காய்களிலேயே முன்னால் இரண்டு ஆட்டக்காய்கள் இருந்தாலும் தாண்டி செல்லக்கூடியது. ஆனால் கடைசியாக சென்று அடையும் கட்டத்தில் சொந்த அணியின் காய்கள் இருக்கக்கூடாது, காலியாக இருக்க வேண்டும். அக்கட்டத்தில் எதிரணியின் ஆட்டக்காய் பாதுகாப்பு இல்லாமல் இருக்குமானால் வெட்டி வீழ்த்தலாம்.




# மொத்தமாக மூன்று கட்டங்கள் வரையில் மட்டுமே செல்லும், முதல் இருக்கட்டங்கள் செங்குத்து அல்லது கிடைமட்டத்தில் நேராக செல்லும், மூன்றாவது கட்டம் ,இடம் அல்லது வலமாக திரும்பி சென்று வைக்க வேண்டும். குதிரை பயணிக்கும் பாதை ஆங்கில "L"அல்லது தமிழ் "ட"வடிவில் தான் இருக்கும்.

# வெள்ளைக்கட்டத்தில் இருந்து புறப்படும் குதிரை சென்றடையும் கட்டம் கறுப்பு நிறமாகவே எப்பொழுதும் இருக்கும், இதே போல கறுப்புக்கட்டத்தில்  இருந்து புறப்படும் குதிரை வெள்ளைக்கட்டத்தில் சென்றடையும்.

குதிரைபயணிக்கும் பாதை:



# தாண்டி செல்லும் பண்பால், ஆட்டக்காய்கள்கள் நெருக்கமாக இருக்கும் ,"மிடில் கேம்"ஆட்டத்தின் போது நன்கு பயனளிக்க வல்லது.


வீரர்கள்(Pawn)


# ஆட்டத்தின் துவக்கத்தில் இரண்டாவது வரிசையில் இருக்கும் வீரன்,எவ்வித நகர்த்தலும் செய்யாத நிலையில், முதல் நகர்த்தலின் போது ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்கள் முன்னால் நகர்த்த முடியும். அதன் பிறகு ஒவ்வொரு கட்டமாக மட்டுமே நகர்த்த முடியும்.

படம்


# ஒரு முறை முன்னால் நகர்த்திய வீரனை ,பின்னால் மீண்டும் நகர்த்த முடியாது. நேர்ப்பாதையில் தான் செல்லும், முன்னால் காலியான கட்டம் இருந்தால் மட்டுமே நகரும், வெற்றிடம் இல்லை எனில் டிராபிக் ஜாமில் சிக்கிய வாகனம் போல அசையாமல் முட்டிக்கொண்டு நிற்கும் :-))

# எதிரணியின் ஆட்டக்காய் பாதுகாப்பற்று இருக்குமானால் வெட்டிவிட்டு அவ்விடத்தில் வைக்கலாம், ஆனால் மூலைவிட்டமாக இருக்கும் ஆட்டக்காயினை தான் வெட்ட முடியும்,நேருக்கு நேர் உள்ளதை வெட்ட இயலாது.

வீரனின் பதவி உயர்வு-Queening of the pawn.

# வீரர்கள் தான் அடிப்படை அங்கத்தினர் ,அவர்களுக்கு சிறப்பு சக்தியெல்லாம் இல்லை, ஆனால் உழைத்து முன்னேறினால் தலைமைப்பொறுப்புக்கு வரலாம் என்பதை காட்டும் விதமாக சதுரங்கத்திலும், ஒரு வீரன் ஆரம்பக்கட்டத்தில் இருந்து எட்டாவது கட்டம் வரையில் தடைகளை தாண்டி சென்றுவிட்டால் விருப்பப்பட்ட "ஆட்டக்காயாக"பதவி உயர்வு அடையும், பெரும்பாலும் , ராணியாக மாற்றிக்கொள்வார்கள்.

படம்.

(white pan makes a move to queen)

ஒரே நேரத்தில் ஒரு வண்ணங்கொண்ட ஆட்டக்காரர் இரண்டு ராணிகளை வைத்துக்கொண்டும் ஆடலாம், அதிகப்பட்சமாக ஒரே நேரத்தில் ஒரு ஆட்டப்பலகையில் 16 ராணிகள் கூட இருக்கலாம், ஆனால் நடைமுறையில் அனைத்து வீரர்களும் கடைசி வரை சென்று பதவி உயர்வு அடைய இயலாது.

பெரும்பாலான ஆட்டக்காய்கள் பரிமாற்றமாக வெட்டப்பட்டு , இறுதி ஆட்டம் , வீரர்களை மட்டும் கொண்டு ஆடும் நிலையில் ,எப்படியாவது ஒரு வீரனை எட்டாவது கட்டம் கொண்டு சென்று "ராணியாக"மாற்ற வேண்டும்,அப்பொழுது தான் வெற்றியடைய முடியும்.

#சிறப்பு நகர்வு - en-passant.

எதிரணியின் வீரன் ஒருவன் முன்னேறி அருகில் வந்துள்ள நிலையில், துவக்க நிலையில் , அடுத்த செங்குத்து வரிசையில் உள்ள வீரனை ஒருக்கட்டம் நகர்த்தினால் வெட்டுப்படும் என ,துவக்க நகர்வாக"இருக்கட்டம் "நகர்த்தினால், எதிரணி வீரன் ,விருப்பப்பட்டால் ,அவ்வீரனை வலிந்து கைப்பற்ற முடியும், இதனை " en-passant. "என்பார்கள்.

ஏன் எனில் முன்னேறி வந்த வீரனுக்கு வெட்டும் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்விதி, உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கணும்ல!

en-passant. ஐ புரிந்துக்கொள்ள சற்று கடினமாக இருக்கலாம், படத்தினை பார்த்தால் புரிந்து விடும்.

 en-passant-படம்.


ராணி(Queen).


ராஜா தான் ஆட்டத்தின் தலைவர் என்றாலும், ஆடுகளத்தின் அத்தனை அதிரடிகளுக்கும் சொந்தக்காரி "ராணி"தான், ராணி மகாராணி :-))

படம்.


#நேராக செங்குத்து அச்சில்,கிடைமட்ட அச்சில் மட்டுமில்லாமல், மூலைவிட்டமாகவும், எத்தனை கட்டங்கள் வேண்டுமானாலும் பயணிக்க வல்லவர். எல்லா திசையிலும் எதிரிகளை தாக்கி வெட்டலாம். ஒரு யானை மற்றும் பிஷப்பின் ஒருங்கிணைந்த நகர்வுகளை கொண்டது எனலாம்.

# பாதையின் குறுக்கில் சொந்த அணி ஆட்டக்காய்கள் இருக்கக்கூடாது, எதிரணி ஆட்டக்காய் பாதுகாப்பில்லாமல் இருக்குமானால் வெட்டிவிட்டு அவ்விடத்தில் அமரும்.

ராஜா(King).

ராஜா தான் சதுரங்கத்தின் மிக முக்கியமான புள்ளி,ஆனால் ஆட்டத்தில் எவ்வித அதிரடியும் செய்ய முடியாது, டம்மி பீஸ்! மெய்யுலகிலும் ஆண்கள் பெரும்பாலும் டம்மி தானே  எல்லாம் "ராணிகளின்"அதிகாரமன்றோ அவ்வ்!

ஆனால் அவரைப்பாதுக்காக்க தான் மற்றவர்கள் உழைக்கிறார்கள், உயிரைக்கொடுக்கிறார்கள், பாதுகாப்பற்ற சூழலில் , ராஜா மாட்டிக்கொண்டால் , தப்பிக்க வழியே இல்லை எனில் "ஆட்டம் குளோஸ்"இதனை செக் மேட் என்பார்கள்.

# ராஜா ஒவ்வொரு நகர்த்தலுக்கும் ஒரு கட்டம் மட்டுமே முன்னேறிச்செல்ல முடியும், ஆனால் நேராக , பக்கவாட்டில், மூலைவிட்டமாக என எந்த திசையிலும் நகர்த்தலாம்.

படம்.

# ஒரு ராஜா இன்னொரு ராஜாவுக்கு செக் வைக்க முடியாது, வெட்ட முடியாது, மேலும் அருகேயுள்ள கட்டத்திற்கும் செல்லக்கூடாது , குறைந்த பட்சம் ஒரு கட்டம் இடைவெளி விட வேண்டும்.



கோட்டை கட்டுதல் - a castling move.

ஒவ்வொரு கட்டமாக நகரும் சக்தி தான் என்றாலும் ,ராஜாவாச்சே எனவே அவருக்குனு "தனிச்சலுகை"ஒன்று சதுரங்கத்தில் கொடுத்துள்ளார்கள். இதன் படி ஒரே நேரத்தில் ஒருக்கட்டத்திற்கு மேலும் பக்க வாட்டில் நகர முடியும், இதனை  castling moveஎன்பார்கள். இந்நகர்வில் ராஜா மற்றும் யானை சேர்ந்து ஈடுபட வேண்டும்.

இம்முறையில் ராஜா பக்கவாட்டில் இருக்கட்டங்கள் யானையை நோக்கி நகர்வார், அதே போல யானை இருக்கட்டங்கள் நகர்ந்து ராஜாவுக்கு அடுத்தப்பக்கமாக தாண்டி வந்துவிடுவார். இவ்விரண்டு நகர்வும் ஒரே நகர்த்தலாக கருதப்படும்.

castling move படம்.

(castling move -முன்னர்)

(castling move- பின்னர்)

நடுவில் உள்ள ஃபைலில் ராஜா இருக்கும் போது எளிதில் தாக்குதலுக்கு இலக்காகும், castling move செய்வதன் மூலம் ஓர் ஓரமாக ,பாதுகாப்பான இடத்திற்கு எளிதில் கொண்டு செல்லலாம்,எனவே இதனை கோட்டைக்கட்டுதல் - castling move என சொல்கிறார்கள். மேலும் ஓரமாக இருக்கும் யானையை "ஆக்டிவாக"செயல்பட மையத்திற்கு கொண்டு வரவும் உதவுகிறது, எனவே ஒரே கல்லில் ரெண்டு மாங்கா castling moveமூலம் கிடைக்கும்.

இவ்வாறு castling move  செய்ய என்று சில விதிகள் இருக்கு,அவற்றை மீறாத நிலையில் மட்டுமே  castling move  செய்ய முடியும்.

castling move விதிகள்/கட்டுப்பாடுகள்:

# castling move செய்யும் வரையில் ராஜா எவ்வித நகர்வும் செய்திருக்க கூடாது,  castling move தான் முதல் நகர்வாக இருக்க வேண்டும்.

# அதே பொல யானையும் எவ்வித நகர்த்தலும் செய்திருக்க கூடாது,  castling move தான் முதல் நகர்வாக இருக்க வேண்டும்.

# இவ்விரண்டுக்கும் இடையில் எவ்வித ஆட்டக்காய்களும் இல்லாமல் ,காலியாக இருக்க வேண்டும். castling move செய்து முடித்தபின் ராஜா,யானை இரண்டும் அதே கிடைமட்ட வரிசையில் தான் இருக்க வேண்டும், முன்வரிசையில் எல்லாம் மாற்றி வைக்க கூடாது.

# ராஜாவுக்கு நேரடியாக செக் வைத்திருக்கும் சூழலில் ,செக்கினை அகற்ற castling move செய்ய முடியாது.

படம்.
(செக் உள்ளதால் castling move செய்ய முடியாது)

# ராஜா, யானை இரண்டுக்கும் இடையே உள்ள எந்த கட்டமும் எதிரணியின் நேரடித்தாக்குதலில் இருக்க கூடாது, மேலும் castling move  செய்து முடித்தால் ராஜாவுக்கு செக் எனும் நிலையும் வரக்கூடாது.

படம்.


மேற்கண்ட படத்தில் castling move செய்யும் கட்டம் ,ராணியின் தாக்குதலில் உள்ளது,மேலும் castling move செய்து முடித்தால் ராஜாவுக்கு செக் எனும் நிலை உருவாகும், எனவே castling move செய்ய முடியாது.

# a castling move  என்பது ராஜா பக்கமாக உள்ள யானையை நோக்கியும் செய்யலாம், இதனை சிறிய castling move என்பார்கள், குறிப்பில் 0-0 என குறிக்க வேண்டும்.

அதே போல ராணிப்பக்கம் உள்ள யானையை நோக்கியும் செய்யலாம், அப்பொழுதும் ராணி முதல் எந்த ஆட்டக்காய்களும் இல்லாமல், ராஜா -யானை இடையே உள்ளக்கட்டங்கள் காலியாக இருக்க வேண்டும், மற்ற விதிகள் அப்படியே தான்.இவ்வாறு செய்யப்படும் castling move ஐ, long  castling move என்பார்கள், குறிப்பெழுதும் போது 0-0-0 என குறிக்க வேண்டும்.

நகர்வுகளை குறிப்பெழுதுதல்(Recording moves in score sheet):

ஆரம்பக்காலங்களில் , ஒவ்வொரு வீரனையும் அடையாளப்படுத்த , எந்த ஆட்டக்காய்களுக்கு முன்னால் உள்ளது  i.e Kp,QP etc, ,எத்தனைக்கட்டங்கள் நகர்ந்தது என்பது போலவும், அதே போல ,யானை, குதிரை,பிஷப் ஆகியவற்றை , ராஜா பக்கம் உள்ளது,  ராணிப்பக்கவும் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் ,KB,KR,K.kN எனவும், ராணிப்பக்கம் உள்ளவற்றை, QB,QR,Q.KN குறிப்பிட்டு எழுதி வந்தார்கள், இப்படி எழுத அதிக நேரம் பிடிக்கும் என்பதால், பின்னர்  எண்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்களை மட்டும் கொண்டு குறிப்பெழுதும் முறையை அறிமுகப்படுத்தினார்கள், இதனை"standard algebraic notation "என அழைப்பார்கள்.

இம்முறையினை சதுரங்க மென்ப்பொருளில் ஆட்டங்களை உள்ளீடு செய்யவும் பயன்ப்படுத்துகிறார்கள், எனவே "Portable Game Notation(PGN)" எனவும் கணினி பயன்ப்பாட்டில் சொல்வார்கள்.

ஏற்கனவே பார்த்தோம் , சதுரங்க பலகை கிடைமட்டத்தில் a to h , செங்குத்தில் 1 to 8 எனக்குறிக்கப்பட்டுள்ளது என, a  வரிசையில்(file)  முதல் கட்டம் -a1 கடைசிக்கட்டம் a8,

அதே போல b1-b8 என h1-h8 வரையில் குறிக்கப்பட்டிருக்கும், இதனைக்கொண்டு , ஒவ்வொரு கட்டத்தினையும் அடையாளப்படுத்தி விடலாம், பின்னர் எந்தக்கட்டத்தில் என்ன ஆட்டக்காய் இருக்கிறது என்பதனை குறிக்க ஆட்டக்காயின் குறியீட்டை சேர்த்து எழுத வேண்டும்.

துவக்கத்தில் ஸ்கோர் எழுத தடுமாற்றமாகத்தான் இருக்கும், போகப்போக பழகிவிடும், பழகும் போது எளிதில் கட்டங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வசதியாக ,சதுரங்கப்பலகையின் அனைத்துக்கட்டத்திலும் a1,a2,a3...,b1,b2,b3...என மார்க்கர் பேனாவால் , முன்னர் காட்டிய படத்தில் உள்ளது உள்ளது போல எழுதி வைத்துக்கொண்டும் பழகலாம்.


உதாரணமாக ,


இரண்டாவது ரேங்கின் இடது ஓரமாக உள்ளக்கட்டம் a2 ஆகும்.   ஆரம்ப நிலையில்,இரண்டாவது ரேங்கில்  a2 கட்டத்தில் உள்ள வீரனை , pawn at a2  என குறிக்க Pa2 என எழுதவேண்டும்,காண்க படம்.

pawn at a2 வட்டமிட்டுக்காட்டப்பட்டுள்ளது.



a2 இல் இருக்கும் வீரன்(Pawn) ,   a4 க்கு  நகர்த்த இருக்கிறோம்,  இவ்வாறு நகர்த்தி a4  இல் வைப்பதை ,

1)Pa2-a4


என எழுத வேண்டும். காண்க படம்.

(pawn a4 இல் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது வட்டமிட்டுக்காட்டப்பட்டுள்ளது.)



ஒவ்வொரு முறையும் , pawnஎன்பதை குறிக்க P என வீரனுக்கு மட்டும் எழுத தேவையில்லை a2-a4 என எழுதினாலே அது வீரனின் நகர்வு என புரிந்துக்கொள்ளப்படும்.


அச்சுப்புத்தகங்களில் மட்டுமே விரிவாக புறப்பட்டக்கட்டம், சென்றடையும் கட்டம் எனக்குறிப்பார்கள் இயல்பான ஆட்டத்தின் போது a2-a4 எனக்கூட எழுத தேவையில்லை ,  நகர்த்தலின் வரிசை எண்ணை எழுதி ,

1) a4 

என எழுதினாலே ,அது a2-a4 க்கு வீரன் நகர்ந்ததை குறிக்கும். சென்றடையும் கட்டத்தினை குறித்தாலே போதுமானது.


மற்ற ஆட்டக்காய்களுக்கு அதன் குறியீட்டை எழுதி நகர்த்தப்பட்ட கட்டத்தினை குறிக்க வேண்டும்.

உதாரணமாக ,

முதல் ரேங்கின்,இடது ஓரக்கட்டம் a1 ஆகும், அதில் யானை (ROOK-R) உள்ளது. அதனை குறிக்க Ra1 என எழுத வேண்டும். காண்க படம்.



a4 இல் இருக்கும் வெள்ளை வீரனை , கறுப்பின் வீரன் பி-5 இல் இருந்து வெட்டிவிட்டு ,a4, க்கு வந்துள்ளது.இப்பொழுது யானை, அதனை வெட்டிவிட்டு ,a4கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

a1 இல் இருக்கும் யானை a4 கட்டத்திற்கு நகர்கிறது எனில்  ஆட்ட நகர்வின்  வரிசை எண்ணை எழுதி விட்டு Ra4 என எழுதினால் யானை(R) a1 இல் இருந்து R-a4க்கு நகர்த்தப்பட்டதை குறிக்கும் என அறியலாம். காண்க படம்.



இந்நகர்வின் போது யானை(R) a4  கட்டத்திற்கு மட்டும் நகரமால் ,அங்கிருந்த ,கறுப்பு வீரனையும் வெட்டிக்கையகப்படுத்திக் கொண்ட பின்னரே அக்கட்டத்திற்கு செல்கிறது, எனவே இதனை ,

 2)Ra1X a4 என எழுத வேண்டும்.

ஒரு ஆட்டக்காய் வெட்டப்பட்டது என்பதனை குறிக்க "X" mark பயன்ப்படுத்த வேண்டும். வீரனைத்தவிர மற்றவற்றிற்கு அதனதன் ஆங்கில குறியீட்டு எழுத்தினை பயன்ப்படுத்த வேண்டும்.

முன்னரே சொன்னதுப்போல, யானை( R)- a1கட்டத்தில் தான் இருந்தது என்பது பொதுவாகவே புரியும் என்பதால், Ra1 என எழுதவும் தேவையில்லை, நேரடியாக,

2)R X a4

என எழுதினாலே போதும். இதே போல ஒவ்வொரு ஆட்டக்காயிற்கும்,அது எந்த கட்டத்தில் இருந்து புறப்பட்டது என குறிக்காமலே , சென்றடையும் கட்டத்தினை மட்டுமே குறிப்பிட்டு எழுதலாம். இப்படி எழுதுவது ஒரு  relative term notation ,எனவே  நகர்த்தலின் வரிசை எண் மற்றும் ஆட்டத்தின் தொடர்ச்சியை வைத்தே எந்த கட்டத்தில் இருந்து எந்த கட்டத்திற்கு நகர்ந்தது என்பதை சரியாக சொல்ல முடியும்.

எனவே ஒன்றாவது நகர்த்தலில் இருந்து குறிப்பு எழுதினால் மட்டுமே ஆட்டத்தின் நிலையை சரியாக ஒரு குறிப்பிட்ட நகர்த்தலில் என்ன செய்யப்பட்டது என அறிய முடியும்.

இடையில் ஒரு நகர்வை குறிக்காமல் விட்டு விட்டு தொடர்ந்து அடுத்த நகர்வை மட்டும் குறித்தால் ,தொடர்ச்சியே இருக்காது ஆட்டத்தில் என்ன தவறு என்று கண்டுப்பிடிக்கவும் முடியாது, அல்லது சதுரங்கபலகையில் உள்ள ஆட்டக்காய்கள் விபத்தாக கலைந்துவிட்டால் மீண்டும் ஆடிய பொசிஷனையோ உருவாக்க முடியாது. போட்டிகளில் ஸ்கோர் எழுதுவது கட்டாயம், அப்படி எழுதாமல் இருந்தால், ஆட்டத்தினை நிறுத்திவிட்டு ,நமக்கான கடிகாரத்தை ஒட விட்டு ,முழுவதும் எழுதி முடித்தப்பின்னரே ஆட்டம் தொடர வேண்டும் என "FIDE"விதியே உள்ளது.

"standard algebraic notation "இல் எழுதப்பட்ட ஆட்டத்திற்கு ஒரு சில  சிறிய உதாரணங்களைக் காணலாம்.

"Fool's mate"என இரண்டு நகர்த்தலில் கறுப்பு ஆட்டக்காரர் வெள்ளை ஆட்டக்காரரை செக் மேட் செய்யும் ஒரு ஆட்டம் உள்ளது. இது போன்று ஆடக்கூடாது என்பதற்கு உதாரணமாக பயிற்சிகளின் போது சொல்லிக்கொடுப்பது வழக்கம், ஆனால் உண்மையில் சதுரங்கம் கண்டுப்பிடித்தக் காலத்தில் இப்படியும் ஆடி இருக்கிறார்களாம்.



1)f3-e5

2)g4-Qh4+#

pic.

இதே போன்று கவனக்குறைவாக ஆடினால் ,நான்கு நகர்த்தலில் வெள்ளை ஆட்டக்கார் ,கறுப்பினை செக் மேட் செய்துவிடும் ஆட்டம் ஒன்றுள்ளது, அதற்கு "Scholar's Mate"எனப்பெயர்.

Scholar's Mate:


1)e4 - e5

2)Bc4 -Bc5



3)Qh5 -Nf6.


ராணி f7 கட்டத்தில் உள்ள வீரனை தாக்கி, ராஜாவுக்கு செக் வைக்க திட்டமிட்டு வருகிறது,ஆனால் ,கறுப்பு ரொம்ப புத்திசாலித்தனமாக!? , வெள்ளை ராணியை குதிரை மூலம் தாக்கி ,அங்கிருந்து விரட்டப்பார்க்கிறது அவ்வ்.



4)Qf7 +#


f7 கட்டத்தில் உள்ள வீரனுக்கு ராஜா மட்டுமே பாதுகாப்பு, எனவே அக்கட்டம் பலவீனமான கட்டம் ஆகும். ஆனால் அதே சமயம் அக்கட்டத்தினை ,வெள்ளை பிஷப் மற்றும் ,ராணி தாக்குகிறது, எனவே பிஷப் சப்போர்ட்டில் ,f7 கட்டத்தில் உள்ள வீரனை, "ராணி"தாக்கி செக் மேட் செய்து விடுகிறது.

இது போன்று எளிய முறையில் ஆட்டத்தினை தோற்காமல் இருக்க என்று தான் சதுரங்கப்பயிற்சி நூல்களை படிக்க வேண்டும் என்கிறார்கள், துவக்க தவறுகள், மற்றும் பொறிகள் என தனியாக ஒரு நூலும் உள்ளது,அதனைப்படித்து வைத்துக்கொள்வது இது போன்ற பிழைகளை தவிர்க்க உதவும்.


# கீழ்கண்ட "GIF"அனிமேஷனில் உள்ள ஆட்டம் Légal Trap/mateஎனப்படும், ஃபிரெஞ்ச் கிராண்மாஸ்டர் "Sire de Légal "என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் அவர் பெயராலே அழைக்கப்படுகிறது.




இதில் எப்படி காய்கள் நகர்த்தப்படுகிறது என கவனித்து அதனை "ஸ்கோர் ஆக எழுதி"பழகிப்பார்க்கவும். 

இது போன்று நிறைய எளிய துவக்க பொறிகள் உள்ளன ,அவற்றையறியாமல் சிக்கிவிடாமல் இருக்க ,அறிந்து வைத்துக்கொண்டு தவிர்த்து விட வேண்டும்.

இது போன்ற எளிமையான "டிராப்கள்"எல்லாம் ஓரளவு நல்ல டோர்னமெண்ட் போட்டிகளில் கூட யாரும் விளையாடப் பயன்ப்படுத்த மாட்டார்கள், ஆனால் யாரேனும் ஏமாறுறிங்களானு செக் செய்ய ஆடிப்பார்க்க வாய்ப்புண்டு,எனவே அறிந்து வைத்திருத்தல் பலன் தரும்.


மேலும் இது போன்ற துவக்க டிராப்கள் தெரியாமல் இருக்கும் நிலையில் ,நண்பர்கள் யாரேனும் தெரிந்து வைத்துக்கொண்டு ,நம்மோடு ஆடும் போது இப்படி எளிதாக மடக்க கூடும் ,எனவே இவற்றை எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டால் தவறில்லை.

வரும் பகுதிகளில் இது போன்ற டிராப்களை முடிந்தவரையில் அறிமுகப்படுத்த முயல்கிறேன்.


some symbols used in "standard algebraic notation "

check = +

check mate =+#

win = #
Result:
white win= 1-0
Black win= 0-1

short castle =0-0

long castle= 0-0-0

good move= !

bad move= ?

fantastic move= !!

Blunder= ??

Interesting move= !?

Questionable move= ?!


"standard algebraic notation "அல்லது"Portable Game Notation(PGN)" குறியீட்டு எழுது முறை மட்டுமல்லாமல் ,"FEN"(Forsyth-Edwards Notation.) குறியீட்டு எழுது முறை என ஒன்றும் உள்ளது.

இம்முறை ஒவ்வொரு நகர்வையும் எழுதி குறிக்கப்பயன்படுவதை விட , ஆட்டத்தின் எந்த நிலையிலும், பலகையில் உள்ள ஆட்டக்காய்கள் ஒவ்வொன்றும் எந்த கட்டத்தில் உள்ளது என அறியப்பயன்படுத்த எழுதும் குறிப்பு முறையாகும். இம்முறை சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு தேவையற்றது, கணினி நிரல் எழுத, ஆட்ட நடுவர்களுக்கு ஒரு நிலையினை குறித்து வைக்க பயன்ப்படும்.

Forsyth-Edwards Notation. முறையில் ஒவ்வொரு ரேங்கிலும் எத்தனை ஆட்டக்காய்கள் உள்ளன, எந்த கட்டத்தில் உள்ளது, எந்தக்கட்டம் காலியாக உள்ளது என வரிசையாக எழுதி வைப்பதாகும்.

"FEN"   முறையில் , வெள்ளை ஆட்டக்காய்களை கேப்பிட்டல் ஆங்கில எழுத்தாலும், கறுப்பு ஆட்டக்காய்களை சிறிய ஆங்கில எழுத்தாலும் குறிக்க வேண்டும். ஆட்டக்காய்களே இல்லாத காலியான கட்டங்களை எண்ணால் ,எண்ணிக்கையாக குறிக்க வேண்டும்.




படத்தில் பார்த்தால் ,எட்டாவது ரேங்கில் உள்ள காய்கள் மற்றும் காலிக்கட்டங்களை  "r3r1k1"என ,"FEN"  குறிப்பாக எழுதியுள்ளார்கள்.

இதன் விரிவாக்கம் ,

எட்டாவது ரேங்கில்,யானை ,r-a8 கட்டத்தில் உள்ளது, பின்னர் 3 கட்டங்கள் காலியாக உள்ளதை குறிக்க 3 என எண்ணால் குறிப்பிட்டுள்ளார்கள், அடுத்து ஒரு யானை e8 கட்டத்தில் உள்ளது, பின்னர் ஒரு காலி கட்டம் என்பதைக்காட்ட "1"என எண்ணால் குறிப்பிட்டுள்ளார்கள், அடுத்து ராஜா  k- g8  இல் உள்ளார், பின்னர் அடுத்த கட்டம் காலியாக உள்ளது என்பதை குறிக்க "1"என எண்ணால் குறிக்கிறார்கள்.

இம்முறையில் ஒரு ரேங்கில் இடது மூலையில் இருந்து வலது மூலை வரைக்கும் உள்ள எட்டுக்கட்டங்களில் ஆட்டக்காய்கள் உள்ளதா, இல்லையா என குறித்து எழுதி வைப்பதாகும். இவ்வாறே ஒவ்வொரு ரேங்கிற்கும் எழுதி வைத்து விடலாம்.

அதாவது ,"FEN"  குறிப்பு முறையில் ஆட்டத்தின் பொசிஷன்களை குறிப்பெழுதி வைக்க பயன்ப்படுத்துவார்கள். இம்முறை சதுரங்கப்புதிர்களில் முன்பே ஒரு நிலையில் ஆட்டக்காய்கள் எவ்வாறு உள்ளன என்பதை  குறிக்க அதிகம் பயன்ப்படுகிறது.

"FEN" குறிப்புகளையும் சதுரங்க மென்ப்பொருளில் உள்ளீடாக கொடுத்து இயக்க முடியும், குறிப்பில் உள்ளவாறு ஆட்டக்காய்களினை பொசிஷனில் அமைத்து மென்ப்பொருள் காட்டும்.

கட்டங்கள் தொடரும்....

-----------------------

பின் குறிப்பு:

# இன்னும் பிழைதிருத்தம் செய்யப்படவில்லை, மேலும் சில சுட்டிகள் ,படங்கள் தேவையான இடத்தில் இணைக்கப்பட உள்ளது.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

Encyclopedia of chess openings-(ECO)

Modern chess openings -(MCO)

http://beginnerchess.hubpages.com/hub/Learn-Chess-Algebraic-Notation

http://support.chess.com/Knowledgebase/Article/View/162/16/what-is-pgn--fen

http://www.chesscorner.com/tutorial/basic/forsyth/forsyth.htm

http://www.chessgames.com/fenhelp.html

மற்றும் ஃபிடே,விக்கி & கூகிள் இணைய தளங்கள்.நன்றி!

---------------------------------------------------------

MH-370:THE MYSTERY.

$
0
0
(பறவையாய் சிறகை விரிக்கிறேன் பறந்து செல்வோமா? ஹி..ஹி!)


கோலாலம்பூரில் இருந்து பீகிங்கிற்கு புறப்பட்ட மலேசியா பயணிகள் விமானம் MH-370 , திடீர் என நடுவானில் அனைத்து தகவல் தொடர்புகளையும் துண்டித்து விட்டு மாயமானது குறித்து ஒரு பதிவு எழுதிட 'பதிவர் குறும்பன்"அவர்கள் நேயர் விருப்பம் தெரிவித்திருந்தார் , இதுகுறித்து ஒரு வார காலமாக அலசிக்கொண்டிருந்த வேளையில், அவ்விமானம் ஆஸ்திரேலியா அருகே விபத்துக்குள்ளாகி இந்தியக்கடலில் மூழ்கிவிட்டதை கண்டறிந்தும் விட்டார்கள்(இதுவும் கூட சந்தேகமே).

 ஹி...ஹி நம்ம சுறு சுறுப்பு அவ்ளோ வேகம் ,ஆனாலும் இந்நவீனக்காலத்தில் எப்படி  ஒரு முழு போயிங்க் 777-ER-200 (wide body long range jet aircraft)வகை விமானம் மர்மமாக எவ்வித தடயமும் இன்றி மறைய முடியும் என்பது பலருக்கும் புரியாத ஒன்றாகவே இன்னமும் உள்ளதால் , திரட்டிய தகவல்களை வைத்து பதிவிட்டு விடுவோம்,  என இப்பதிவு.

 குறும்பன் அவர்கள் தளத்தில் இட்டப்பின்னூட்டம்,

http://kurumban.blogspot.in/2014/03/mh370_16.html

"குறும்பன்,






நானும் இந்த விமான மர்மத்தினை கவனிச்சுட்டு தான் வரேன், இதில மலேஷிய அரசின் "வெளிப்படைத்தன்மை இன்மை"தான் சந்தேகத்துக்குள்ளாக்குது.

ஏன் எனில் விமானம் கடத்தப்பட்டிருந்தால் "டிமாண்ட்"ஏதேனும் கடத்தப்பட்டவர்களால் கேட்கப்பட்டிருக்கும். அதனை சொல்லாமல் மழுப்புறாங்களோனு டவுட்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவற்றுக்கு தான் அவ்விடங்களில் கூட சேட்டிலைட் கண்கானிப்பு இருக்கும் ,மற்ற யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்கா உலகம் முழுக்க கண்காணிக்குது,சீனா அதன்ன் எல்லைப்பகுதி அருகாமைனு கண்காணிக்கும்.

மற்ற எல்லா நாடுகளும் அவற்றின் எல்லைக்குள் தான் கண்காணிப்பு வசதி வச்சிருக்கும்.

ரேடார் ரேஞ்ச் என்பது பெரும்பாலும் , நில எல்லையில் இருந்து 30 கி.மி தான் தெளிவா இருக்கும், அப்புறம் குத்து மதிப்புக்கு ஒரு லாங் ரேஞ்ச் ரேடார் தனியா வச்சு கவனிப்பாங்க.இதனால் தான் விமானங்களை தெளிவாக அடையாளம் காட்ட அவற்றில் இருந்து ரேடியோ சிக்னல் அனுப்பிட்டு இருப்பாங்க. விமானத்தில் இருந்து சிக்னல் வரலைனா தெரியாது,மலேஷிய விமானத்தில் அதான் நடந்திருக்கு.

ஒவ்வொரு விமானத்திலும் தானியங்கியாக , விமானத்தின் குறியீட்டு எண்ணை பிராட்காஸ்ட் செய்யனும். அதை வச்சு தான் ரேடாரில் இது இந்த நாட்டு விமானம் என அடையாளப்படுத்துவாங்க, அந்த எண் டிஸ்பிளே ஆகும்.அப்படி குறியீட்டு ரேடியோ சிக்னல் வராத பறக்கும் பொருளை "Un identified Flying Object-UFO"என சொல்லுவார்கள்.

ஒரு நாட்டு வானெல்லையில் அப்படி அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ரேடாரில் சிக்கினாலே "விமான படை மூலம்"செக் செய்வது வழக்கம்.

எனவே ஒரு விமானம் அடையாளம் இல்லாமல் ஒரு நாட்டையும் கடந்து பறக்கவே முடியாது.

இரு முறை அத்துமீறி "அடையாளமே"இல்லாமல் இந்திய வானெல்லையில் பறந்த அமெரிக்க போர் விமானங்களை இந்தியாவே மடக்கிப்பிடிச்சு தறையிறக்கி இருக்கு.

ரஷ்ய விமானங்களை நம்ம ஊரில் விமர்சிப்பாங்க ,ஆனால் அமெரிக்க எஃப்-16 ஐ இன்டெர்செப்ட் செய்ய ,ரஷ்ய விமானங்களால் மட்டுமே முடியும்,இல்லைனா இன்னொரு எஃப்-16 இருக்கணும். ப்ரென்ச் மிராஜ் வகை கூட இன்டர் செப்ட் செய்யும். இந்தியா கிட்டே ரஷ்யா மிக்,பிரென்ச் மிராஜ்ஜ் என ரெண்டுமே வச்சிருப்பதால் தான் அமெரிக்க ஃபைட்டர் ஜெட்டை மடக்க முடிஞ்சது.

எஃப்-32,f-35 இன்டர் செப்ட் செய்ய நம்ம கிட்டே விமானமில்லை அவ்வ்!

இந்தியாவை மட்டமா எடைப்போடுவாங்க ,ஆனால் அந்தமானை மலேஷியா விமானம் "சிக்னல் இல்லாமல்"கடந்திருந்தால் , புடிச்சிருக்கும், அந்தமானில் ரேடார் உண்டு. மிராஜ், மிக் லாம் இந்திய எல்லையில் இருந்து சுமார் முக்கால்-1 மணியில் அந்தமானை அடைந்துவிடும்.

என்னோட அனுமானம் என்னனா , ஏதோ ஒரு "ராணுவ ஆட்சி"நடைபெறும் நாட்டுக்கு கடத்தி போயிருக்கணும் இல்லைனா விபத்தில் சிக்கி இருக்கணும்.

//வானூர்தியை புறப்படும் இடத்திலிருந்து சேரும் இடம் வரை செய்மதி துணை கொண்டு கண்காணிக்க முடியாதா? குறிப்பிட்ட இடைவெளியில் வானூர்தி ஓட்டுநர்களின் நடத்தையை கண்காணிக்க முடியாதா. இது நடந்தால் தான் நாம் சிறிது நிம்மதியாக பயணம் செய்யலாம்.//

எல்லா இடத்திலும் சேட்டிலைட் கண்காணிப்பு தொடர்ச்சியாக செய்ய முடியாது ,கம்யூனிகேஷன் சேட்டிலைட் மூலம் சிக்னல் பரிமாற்றம் தான் நடக்கும், சிக்னல் கட் ஆச்சுனா இப்போ போல என்னாச்சுனு தெரியாது.

மற்ற ரிமோட் சென்சிங் டைப் சேட்டிலைட் எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தினை ஒரு நாளுக்கு இத்தனை முறைனு கடக்கும் ,அப்போ மட்டுமே "கண்காணிப்பு"இருக்கும். அப்படி உலகம் முழுக்க கண்கானிக்க அமெரிக்காவால் மட்டுமே பொருளாதார சாத்தியம் இருக்கு.

அவங்க சேட்டிலைட் கூட அந்த பகுதியை சில மணி நேரங்கள் தான் கண்காணிச்சு இருக்க முடியும், அதை வச்சு தான் சொல்லுறாங்க. அதுக்கு அப்புறம் என்னாச்சுனு தெரியாம போச்சு.


அப்பின்னூட்டத்தில் அப்போது சொன்னது ,இது கடத்தலாக இருக்காது ,விமானம் விபத்தில் சிக்கி இருக்கும் என ,ஏன் எனில் கடத்தல்காரர்கள் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் எப்படியும் தங்கள் கோரிக்கையை வைத்து விடுவார்கள்,மேலும் நீண்ட நாட்களுக்கு பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருப்பதும் கடினமான ஒன்று ,அவர்களுக்கான உணவு தேவைகள் ,இன்னப்பிற என சமாளிப்பது கடினமாகும்.

விமானம் விபத்துக்குள்ளானது என சொல்லப்பட்டாலும் அதிலும் இன்னும் ஒரு தெளிவு உருவாகவில்லை, இந்நிலையில் கடத்தல் என ஒன்று நடந்திருப்பதாக கொண்டால், இத்தனை நாட்களுக்கு மர்மமாக வைத்திருக்க தீவிரவாதிகளால் முடியாது,எனவே ஒரு ராணுவ வல்லரசு நாட்டின் செயலாக மட்டுமே இருக்க முடியும்.

மேலும் மன அழுத்தத்தினால் "உளவியல் பாதிப்புக்குள்ளான"விமான ஓட்டிகள் திடீர் என விமானத்தினை கடலில் அல்லது மலையில் மோதி "தற்கொலை"முயற்சியில் இறங்குவதும் உண்டு, அப்படிப்பட்ட சாத்தியக்கூற்றினையும் மறுப்பதற்கில்லை.

அனைத்து சாத்தியங்களையும் இப்பதிவில் காண்போம்.

விமான பறத்தலியல் குறித்து எனது முந்தைய பதிவுகள்.

# http://vovalpaarvai.blogspot.in/2012/02/blog-post_23.html

# http://vovalpaarvai.blogspot.in/2007/07/blog-post_4011.html

# http://vovalpaarvai.blogspot.in/2007/07/uss-cvn-68.html

இவற்றை ஒரு முறைப்படித்தால் விமானம் எவ்வாறு பறக்கிறது, இயல்பில் விமானங்கள் விபத்தில் சிக்க உள்ள வாய்ப்புகள் குறித்து ஒரு புரிதல் ஏற்படும்.

# போயிங்க் 777-ER-200 (wide body long range jet aircraft)




போயிங்க் 777 விமான வகையில் பல வகைகள் உள்ளன, அவற்றில் போயிங்க் 777-ER-200  என்பது wide body long range jet aircraft ஆகும், பொதுவாக Dreamliner என வர்த்தக ரீதியாக சொல்வார்கள், நீண்ட தூரம் பறக்க வல்லவை, மிகவும் நம்பகமானவையும் கூட. ஒரு முறை முழுதாக எரிப்பொருள் நிரப்பிவிட்டால் 14,500 கி.மீட்டர்களுக்கு நிற்காமல் பறக்க வல்லவை ,எனவே கண்டம் விட்டு கண்டம் பயணிக்கும் நீண்ட தூர விமான சேவைகளுக்கு அதிகம் பயன்ப்படுகின்றன.

விமானத்தின் பண்புகள்:

பயணிகள் எண்ணிக்கை -300-400

அளவு:

உடல் நீளம்-209 அடிகள்.

இறக்கை நீளம்: 199.11 அடிகள்(இறக்கையின் ஒரு முனையில் இருந்து மறுமுனை)

# உயரம்(tail height): 60.9

# உள்விட்டம்(கேபின்) :19.3 அடிகள்.
வெளிவிட்டம்:20.4 அடிகள்.

# மொத்த எடைத்திறன்:297.5 டன்கள்.

# எரி பொருள் கொள்ளளவு:171,170 லிட்டர்கள்.

#பறக்கும் தூரம்: 14,305 கி.மீ.
(லண்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரையில் நிற்காமல் பறக்கும்)

# விமான தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு:

விமானம் என்பது வெறும் பறக்கும் எந்திரமாக ஆதியில் இருந்தது , ஒரு காரை கிளப்புவது போல கிளப்பிக்கொண்டு போகலாம், மற்ற அனைத்தும் ஓட்டுனரே கவனித்து செய்துக்கொள்வார்.

ஆனால் அறிவியல் வளர வளர , பறத்தலை எளிதாக்க என பல மின்னணு கருவிகள், மீட்டர்கள் என இணைக்கப்பட்டன. அவை உண்மையில் எளிதாக்கியதா என்றால் சிக்கலாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் அவ்வ்!

ஆனால் பலவகையிலும் பாதுகாப்பான பறத்தலை உறுதி செய்தன என்றால் மிகை இல்லை ,அதே சமயம் அளவுக்கதிகமான மின்னணு சார்பு நிலை , வழமையான "மனித விழிப்புணர்வை"மழுங்கடித்தது என்றும் சொல்லலாம்,அத்தகைய ஒரு நிகழ்வினால் தான் மலேசிய விமானம் "காணாமல்"போனது!

விமானத்திற்கும் தரைக்கட்டுப்பாடு நிலையத்திற்கும் இடையே எப்பொழுதும் தகவல் பரிமாற்றம் மற்றும் "ஒலித் தொடர்பு"இருக்கும். உரையாட என மூன்று வகை நுட்பங்களை பயன்ப்படுத்துகிறார்கள். மேலும் சில இருக்கலாம், ஆனால் பொதுவாக பரவலாக பயன்ப்படுத்தப்படுவது 3 சேனல்கள்.

# உயர் அதிர்வெண் மைக்ரோ வேவ் தொலைத்தொடர்பு.

இம்முறையில் காக்பிட்டில் இருந்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினை தொடர்பு கொள்ள செயற்கைக்கோள் பயன்ப்படுகிறது.

இதுவே முதன்மை தகவல் தொடர்பு அலைவரிசையாகும், பரந்த கடற்பறப்பு ,வனங்கள்,பாலை என தகவல் தொடர்பு கோபுரங்கள் இல்லாத இடங்களில், செயற்கை கோளின் வீச்சில் இருக்குமானால் இவ்வலைவரிசையில் தான் உரையாடுவார்கள்.

# நீண்ட அலைவரிசை வானொலி.

செயற்கைக்கோள் செயல்ப்பாடு இல்லாத இடத்திலும் , ரீ டிரான்ஸ்மிஷன் செய்ய இயலாத இடத்திலும் இம்முறை அதிகம் பயன்ப்படுகிறது. நீண்ட தொலைவினை இவ்வலைவரிசை கையாளக்கூடியது.

# மோர்ஸ் கோட்.

மேற்கண்ட இரு அலைவரிசையிலும் தகவல் தொடர்பை நிறுவ முடியாத சூழலில் மோர்ஸ் கோடைப்பயன்ப்படுத்தி தகவல் அனுப்புவார்கள். மோர்ஸ் கோட் மூலம் தகவல் அனுப்பும் போது நீண்ட தூர கவரேஜ் ,குறைவான ஆற்றலில் "ரீ டிரான்ஸ்மிஷன்"வசதி இல்லாமலே செய்ய முடியும்.

பெரும்பாலும் அவசரக்கால தகவல் தொடர்பாக இதனை வைத்திருக்கிறார்கள்.

மோர்ஸ் கோட் பற்றிய எனது முந்தையப்பதிவு.

http://vovalpaarvai.blogspot.in/2007/09/blog-post_423.html


விமானத்தின் இரு முதன்மையான தகவல் தொடர்பும் செயலிழக்காது அப்படியான நிலை வருமெனில் 'ஏதோ  பெரிய பிரச்சினை"என பொருள், எனவே மோர்ஸ் கோடில் "SOS" (Save Our Soul)என அவசரகால  தகவல் கொடுப்பார்கள்.

விமானிகளுக்கு மோர்ஸ் கோட் எல்லாம் சொல்லிக்கொடுத்திருந்தாலும் அதனை நேரடியாக  பயன்ப்படுத்தும் தேவை கூட இல்லை, மோர்ஸ் கோட் ஜெனரேட்டர் என ,மென்போருள் உடன் இணைந்த விசைப்பலகை தான் பயன்ப்படுத்துவார்கள். வழக்கம் போல ஆல்பா நியுமெரிக் கீ பேட்டில் தட்டச்சினால் "மோர்ஸ்கோடாக"அனுப்பிவிடும்.

விமானங்களில்"SOS" (Save Our Soul)  செய்தி அனுப்ப ஒரு குறிப்பிட்ட பித்தானை அழுத்தினாலே போதும். ஏன் எனில் அவசரக்காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் விபத்தாகலாம் எனவே ,மிகவேகமாக தகவல் அனுப்ப என அனைத்தும் முன்னேற்பாடக செய்திருப்பார்கள்.

தகவல் தொடர்பில் பிரச்சினை இல்லாத நிலையில் விமானத்தில் ஏதேனும் பழுது என்றால் "வாய்சில்""மே டே"மே டே "ஃப்ளைட் எம்.எச்.370 என சொன்னாலே போதும். தரைக்கட்டுப்பாட்டு அமைப்பு விழிப்படைந்து , அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி உதவ சொல்வதோடு ,கடைசியாக தகவல் அனுப்பட்ட கோ ஆர்டினேட்டை நோக்கி மீட்புப்படையை அனுப்பிவிடுவார்கள்.

விமானத்தில் மின்னணு பழுது உருவாகிவிட்டது என்றால் விரைவில் தகவல் தொடர்பு இழப்பு உருவாகும் என கணித்து "தொடர்பில்"இருக்கும் போதே பிரச்சினையை தரைக்கட்டுப்பாட்டிற்கு சொல்லி விட வேண்டும் அல்லது ,  சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்கள் செயலிழந்த உடனே , லாங் வேவ் ரேடியோ தொடர்பில் "மே டே"என அறிவித்து விட வேண்டும்.

ANC - Aviate ,Navigate,Communicate என பொதுவாக பிரச்சினையைக்கையாள வழி சொல்வார்கள், பிரச்சினை உருவானதும் விமானத்தினை , தொடர்ந்து பறக்க வைக்க முயல வேண்டும், அடுத்து அருகாமையில் உள்ள விமான நிலையத்தினை நோக்கி செல்ல வேண்டும், பின்னர் பிரச்சினையை கட்டுப்பாட்டு அறைக்கு சொல்லிவிட வேண்டும்.

அதே சமயம் தகவல் தொடர்பு துண்டிக்கப்படும் முன்னரே , பிரச்சினையை சொல்லிவிட வேண்டும், டிரான்ஸ்பாண்டர்கள் செயலிழந்தன அல்லது யாரோ வேண்டுமென்றே நிறுத்திவிட்டார்கள் என்கிறார்கள், ஆனால் பிரச்சினை குறித்து விமான ஓட்டிகளிடம் இருந்து எந்த தகவல் தொடர்புமே வரவில்லை, ஒரே அடியாக "அமைதியாகிவிட்டார்கள்".

மின்னணு பழுதினை குறித்து தகவல் அளிக்க மலேசிய விமானிகள் முயற்சி செய்யவே இல்லை  என்பது கவனிக்க தக்கது.

முதலில் சேட்டலைட் டிரான்ஸ்பான்டர்கள் செயலிழந்தது என்கிறார்கள்,ஆனால் அதன் பின்னர் பேசி இருக்கிறார்கள் பிரச்சினையை சொல்லாமல் "ஆல் ரைட் ,குட்நைட்"என்று சொன்னதாக மலேசிய அரசு சொல்கிறது.

விமானக்கண்காணிப்பு:

வானில் பறக்கும் விமானத்தினை தரையில் இருந்து இரு வழிகளில் கண்காணிக்கலாம். இதற்கு இருவகையான ரேடார்கள் பயன்ப்படுகின்றன.

செகண்டரி ரேடார்:




விமானம் பறக்கும் இடம், பாதை, உயரம் என அனைத்து தகவல்களையும் , விமானத்தின் குறியீட்டு எண்ணுடன் , செயற்கை கோள்  டிரான்ஸ்பான்டர்கள் மூலம்  முதலில் செயற்கைக்கோளுக்கு அனுப்பி பின்னர் தரைக்கு  தன்னிச்சையாக அனுப்பும்.

விமானம் அனுப்பிய தகவல்களை வைத்து ,ரேடார் மூலம் விமானப்பாதையை கண்காணிப்பார்கள்.

விமானக்குறியீட்டு எண்:

விமானத்தின் குறியீட்டு எண்  எனப்படுவது , இணையத்தளங்களின் டொமைனுக்கு வழங்கப்படும் ஐ.பி எண் போல தான். நான்கு இலக்கம் கொண்டது இக்குறியீட்டு எண்ணை IATA எனப்படும்  சர்வதேச பயணிகள் விமான கட்டுப்பாட்டு அமைப்பு , ஒவ்வொரு நாட்டு பயணிகள் விமானத்திற்கும் என ஒதுக்குகிறது,

இவ்வெண் சம்பந்தப்பட்ட நாட்டின் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு மட்டுமே தெரியும். ஒவ்வொரு விமானத்தின் டிரான்ஸ்பான்டரிலும் அதற்கான குறியிட்டு எண் உள்ளீடு செய்யப்பட்டு விடும், அவை அனுப்பும் எல்லா சிக்னலிலும் அவ்வெண் இருக்கும்,அதை வைத்து , செகண்டரி ரேடாரில் இனங்கண்டுக்கொள்ள தக்க வகையில் "ரேடார் மென்ப்பொருட்கள்"வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதே போல மற்ற எல்லா நாட்டின் தரைக்கட்டுப்பாட்டு கணினி டேட்டாப்பேசிலும் குறியீட்டு எண் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனை செகண்டரி ரேடார்கள் படித்து ஒப்பீடு செய்து , மற்ற நாட்டின் அங்கீகாரப்பூர்வமான விமானம் தான் என அடையாளங்காட்டும்.

ஒரு நாட்டிற்குள் வந்து செல்லும் சர்வதேச விமானங்கள் எவை,உள்நாட்டு விமானங்கள் எவைனு பட்டியலிட்டு குறியீட்டு எண்ணை ரேடாருக்கான டேட்டாப்பேசில் முன்னரே வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு நாட்டுக்குமிடையே இத்தனை விமானங்கள் இயக்கலாம் என்பதற்கு என சில நடைமுறைகள் இருக்கு, உதாரணமாக ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு நான்கு விமானம் பறக்க விட்டது எனில் ,அதே போல அந்நாடும் நான்கு விமானத்தினை இயக்கலாம். ஏதேனும் ஒரு நாடு கூடுதலாக விமானத்தினை இயக்கனும் என்றால் அதற்கு பணம் கட்டணும் அல்லது அவர்களை இன்னொரு விமானம் இயக்க சொல்லிவிட்டு தான் இயக்க முடியும், இப்படித்தான் சர்வதேச பயணிகள் விமான சேவை இயங்குது. இப்படியான விதியால் தான் சில நாடுகளுக்கு மிக குறைவான எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இப்படியாக ஒரு நாட்டில் வானெல்லையில் எந்த நாடுகளின் ,எவ்வகையான விமானங்கள்,எத்தனை பறக்கலாம் என்பதெல்லாம் முன்னரே முடிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டிருக்கும்.ஒரு நாட்டின் ஏர் டிராபிக் பட்டியலில் இல்லாத ஒரு விமானம் அந்நாட்டின் வானெல்லையில்  முன் அனுமதியின்றி பறக்கக்கூடாது ,பறந்தால் சுட்டு வீழ்த்த அந்நாட்டுக்கு உரிமை உண்டு!

சுடுவதற்கு முன்னர் சில எச்சரிக்கைகள் விடுவார்கள், அப்படியும் கேட்கலைனா பைட்டர் ஜெட்களை அனுப்பி சுட்டு பொசுக்கிடுவார்கள்.


செகண்டரி ரேடார் முறையில் விமானம் சிக்னல்கள் அனுப்பினால் தான் ரேடாரில் காட்டும், டிரான்ஸ்பான்டர்கள் செயலிழந்து விட்டால் ,விமானமே ரேடார் திரையில் இருந்து காணாமல் போய்விடும் அவ்வ்!

இவ்வகை விமானக்கண்காணிப்பு சிவில் ஏவியேஷன் எனப்படும் பயணிகள் விமானப்போக்குவரத்தில் பயன்ப்படுகிறது.

இந்த ஒரே முறை மட்டுமே பயணிகள் விமான போக்குவரத்தில் உள்ளதால் தான் மலேசிய விமானம் "காணாமல்"போனது.

பிரைமரி ரேடார்:




இந்த ரேடார் "எதிரொலிப்பு"முறையில் செயல்ப்படுகிறது.

அதாவது ஒரு உயர் அதிர்வெண் ரேடியோ சிக்னலை காற்றில் அனுப்புவார்கள், ஏதேனும் கடினமான ,எதிரொலிக்கும் பொருளின் மீது பட்டு மீண்டும் தரைக்கு வருவதை "ரேடர் ஸ்கிரீனில்"ஒரு ஒளிப்புள்ளியாக காட்டும்.

டாப்ளர் என்பவர் கண்டுப்பிடித்த எதிரொலி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் இவ்வகை ரேடார்களை "டாப்ளர் ரேடார் அல்லது டாப்ளர் பல்ஸ் ரேட் ரேடார்"என்பார்கள்.

பறக்கும் பொருள் உற்பத்தி செய்து சிக்னல் அனுப்பாத நிலையில், எதிரொலி சிக்னல் மூலம் அடையாளங்காணப்படுவதால்  என்ன வகையான பொருள் என அறிந்துக்கொள்ள முடியாது.

வெறுமனே ஏதோ ஒரு ஒன்று வானில் இத்தனை மீட்டர் உயரத்தில் , இவ்வளவு தூரத்தில் பறக்குது அல்லது இருக்கு என மட்டுமே அறியமுடியும்.

இவ்வகை பிரைமரி ரேடார்கள் "ராணுவப்பயன்ப்பாட்டிற்கு"என உள்ளவை, சிவில் ஏவியேஷனுக்கு "சேட்டிலைட் டிரான்ஸ்பாண்டர்"வகை ரேடார்களே.

ரேடியோ சிக்னலை அனுப்பும் போது அதிக சக்தியுடன் செல்லும்,ஆனால் எதிரொலித்து வரும் சிக்னல் அதே ஆற்றலுடன் இருக்காது எனவே மீண்டும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு  ரேடாரை வந்தடையும் என நிச்சயமே இல்லை அவ்வ்!

மேலும் சிக்னல் அனுப்பிய டிராஜெக்டரி வேறு, எதிரொலித்த டிராஜெக்டரி வேறாக இருக்கும் வாய்ப்பு அதிகம் எனவே ஒரு விமானத்தின் மீது பட்டு எதிரொலித்தாலும் சரியாக திரும்ப கிடைக்கும் என சொல்லவே முடியாது. மேலும் இடையில் மலைகள்,கட்டிடங்கள் என இருந்தால் ,ரேடாருக்கு சிக்னல் போய் சேராது.

இதனாலேயே ரேடாரில் சிக்காமல் பறக்க ,தாழ்வாக பறப்பார்கள், அப்படி செய்தால் ரேடார் அனுப்பும் அலை  பெரும்பாலும் படாது, அப்படியே பட்டாலும், எதிரொலி தாழ்வான டிராஜெக்டரியில் செல்லும் போது மலை ,கட்டிடம் என மோதி செயலிழந்து விடும்.

பெரும்பாலான ராணுவ ஃபைட்டர் ஜெட்கள் ரேடார் சிக்னலை எதிரொலிக்காத பூச்சு கொண்டவை, எனவே லாங் ரேஞ்சில் ரேடாரில் சிக்கவே சிக்காது ரொம்ப நெருக்கமாக வரும் போது எஞ்சின் போன்ற சில ரேடார் சிக்னலை எதிரொலித்து காட்டிக்கொடுத்தால் தான் உண்டு.

மேலும் விமானங்கள் வெளியிடும் மின்காந்த அலைகளை கொண்டும் கண்டுப்பிடிப்பார்கள்,இதெல்லாம் குறுகிய தொலைவில் தான் சாத்தியம்.


இதனாலேயே பிரைமரி ரேடாரில் ஒரு விமானம் சிக்க கொஞ்சம் நேரம் ஆகும், மேலும் ரேடாரின் ஆற்றலை விட திரும்ப வரும் எதிரொலியின் ஆற்றல் தான் முக்கியம் என்பதால் , பிரைமரி ரேடார்கள் அமைவிடத்திலிருந்து 240 கி.மீ வரையில் தான் சரியாக செயல்ப்படும் என வரையறுத்துள்ளார்கள்.



உயரம் அதிகமான இடத்தில் ரேடார்கள் வைத்தால் அதிக தொலைவிற்கு கண்காணீக்கும், கிடைமட்டத்தில் பார்த்தால் ஒரு "V"வடிவில் ரேடார் அலைகள் பரவும், அதாவது அதிக தொலைவில் அதிக பரப்பினை கவர் செய்யும்,ஆனால் அருகாமையில்,ரேடாரை விட உயரம் குறைவான இடத்தில்  ஒரு "ப்ளைண்ட் ஸ்பாட்"உருவாக்கும்.

எனவே அருகாமையில் பறப்பதை கண்காணிக்க குறைவான உயரத்தில் இன்னொரு ரேடாரை வைப்பார்கள் இதனை சர்பேஸ் ரேடார் அல்லது ஷார்ட் ரேஞ்ச் ரேடார் என்பார்கள்.

பயணீகள் விமான போக்குவரத்தில் "அப்ரோச்"ரேடார் /லேண்டிங் ரேடார் என சொல்வார்கள். சுமார் 30 கி.மீ பரப்பில் செயல்படும்,ஏன் எனில் தரை மட்டத்தோடு சிக்னலை அனுப்புவதால் பாதி கட்டிடங்கள் ,மலைகள் என மோதி வீணாகிவிடும்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அப்ரோச் ரேடாரே வேலை செய்யாதாம், அப்படியே வேலை செஞ்சாலும் 1 கி.மீ தான்  கிழக்கு திசையில் வேலை செய்யும், ஏன் எனில் விமான நிலைய ரேடார் டவரை விட உயரமா முன்னாடி திரிசூலம் மலை இருக்கு :-))

மீனம்பாக்க கதையை இங்கே மீண்டும் சொல்லி விடுகிறேன்,

மீனம்பாக்கம் விமான நிலையம் ,ஒரு தவறான இடத்தில் அமைக்கப்பட்ட ஒன்றாகும், முன்னாடி மலைய வச்சிருக்கு அவ்வ்!

 "take off and landing against a hill is very difficult" என்பது ஒரு பொதுவான காரணமாம். மேலும் அவசரக்காலத்தில் விமானம் வெகுவேகமாக உயரம் குறைந்து கொண்டே வரும், அப்பொழுது மலைக்கு மேலாக வந்து தரையிறக்குவது ஆபத்தானது.

மலை முன்னால் இருப்பதால் தரையிறங்கும் போது சேட்டிலைட் டிரான்ஸ் பாண்டர் வேலை செய்தால் மட்டுமே  அப்ரோச் ரேடார் வேலை செய்யும். கிழக்கு பக்கம் இருந்து விமானம் தாழ்வாக வரும் போது , பிரைமரி ரேடாரில் தெரியாது.

இம்மலை உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் அல்லது டேக் ஆப் ஆகும் விமானங்கள் மேற்கே பம்மல் -திருநீர்மலை பக்கம் இருந்தே ரன் வேயை பயன்ப்படுத்துகின்றன.

கிழக்கில் இருந்து வரும் விமானங்கள் ஒரு அரைவட்டம் அடிச்சு பம்மல் பக்கமாக வந்து இறங்குகின்றன. கிழக்கு நோக்கி/இருந்து  டேக் ஆப்  ஆவது ,லேண்ட் ஆவது வெகு அரிதாக செய்வது. சிறிய ரக விமானங்கள்( ATR or smaller than ATR) வகைக்கு தான் அவை சாத்தியமாம்.

பிரைமரி ரேடார் தான் பயணிகள் விமான போக்குவரத்துல பயன்பாட்டில இல்லையேனு நினைக்கலாம், ஆனால் சென்னை ராணுவ பயன்ப்பாட்டிலும் குறிப்பிட தக்க ஒரு இடம், ராணுவ மையம் உள்ள இடம்.

சென்னை விமான நிலையத்தினை நோக்கி ஒரு "அடையாளம் தெரியாத"விமானம்  கிழக்கில் low altitude இல்  வந்தால் மீனம்பாக்கம் ஏர்ப்போர்ட் ரேடாரில் தெரியாது, அருகே உள்ள ராணுவ பிரைமரி ரேடாரிலும் காட்டாது அவ்வ்.

ஆனால் இதற்காக திரிசூலம் மலை மேல ஒரு ரேடார் வச்சிருக்காங்க என சிலர் சொன்னார்கள் அது உண்மையாக இருந்தால் மட்டுமே ,சென்னைக்கு அனானிமசாக வரும் விமானத்தினை அறியலாம்.
*****
,

விமானக்கண்காணிப்பின் தொழில்நுட்பங்களை பார்த்தோம், இந்நவீன உலகிலும் , விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் செயலிழந்து விட்டால் ,திருவிழாக்கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாகிவிடும் விமானம் அவ்வ்.

பிரைமரி ரேடாரில் சுமார் 240 கி.மீ வட்டத்தில் சிக்கினால் தான் உண்டு , பறந்த கடற்பறப்பில் பறக்கும் போது டிரான்ஸ்பாண்டர் அவுட் ஆனால் , அவ்ளோ தான் , எல்லாம் சிண்டை பிச்சுக்கணும் :-))

பயணிகள் விமானப்போக்குவரத்தினை "டிரான்ஸ்பாண்டர்"உதவியோடு கண்காணித்து வருவது போல , பொதுவாக வானெல்லையில் பறக்கும் அனைத்து விமானங்களை பிரைமரி ரேடார் மூலம் ராணூவம் கண்காணித்து வரும்.

உலகில் அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில நாடுகள் மட்டும் சக்தி வாய்ந்த மின்காந்த புல ரேடார்களை நிறுவியுள்ளன,அவற்றின் வீச்சு சுமார் 3000 கி.மீ,அதனைப்பற்றி பின்னர் காணலாம்.

பிரைமரி ரேடாரில் விமானத்தின் குறியீட்டு எண் தெரியாவிட்டாலும், அந்நேரத்தில் என்ன பயணிகள் விமானம் பறக்க அனுமதிக்கப்பட்டது,அதன் பாதை என்ன என்ற விவரங்கள் உடனுக்குடன் , சிவில் விமான போக்குவரத்து தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்து ராணுவ ரேடார் மையத்துக்கு அனுப்பப்பட்டு விடும், எனவே அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை கண்டால் ராணுவம் விழிப்படைந்து விடும்.

முதல் கட்டமாக "ஒரு எச்சரிக்கை செய்தியை"பிராட்காஸ்ட் செய்வார்கள், அதனை விமான ஓட்டிக்கேட்டு பதில் சொல்ல வேண்டும், தற்செயலாக தடம் மாறி வந்தால் ,காரணத்தினை சொல்லி உதவியும் கேட்கலாம், பதிலே சொல்லாமல் ஊமைக்கோட்டானாக "பறக்கும் பொருள்"தொடர்ந்து பறக்குமானால், அதனை நோக்கி மின்னலாய் "ஃபைட்டர் ஜெட் இண்டெர்செப்டர்கள்"அனுப்பப்படும்.

பயணிகள் விமானத்தின் அதிகப்பட்ச வேகம் 980 கி.மீ /மணி மட்டுமே, ஃபைட்டர் ஜெட்டுகளில் பல வகை இருக்கு ,ஆனால் அவை எல்லாமே பயணிகள் விமானத்தினை விட வேகமானவை  வழக்கமான சூப்பர் சானிக் ஃபைட்டர் ஜெட்கள் சராசரியாக 2000 கி.மி/மணி வேகத்தில் பறக்கவல்லவை.

(IAF மிராஜ்-2000)

இந்தியாவிடம் உள்ள மிக் 21,,29,சுகோய்-30mki(157 flights), மிராஜ்(Dassault Mirage 2000,42+7=49 flights) போன்றவை எல்லாம் சராசரியாக 2500 கி.மி/மணி உட்சபட்ச வேகத்தினை எட்டக்கூடியவை, எனவே அந்தமானில் ஒரு விமானம் ஊடுருவியதாக தெரிஞ்சால் , சுமார் 45 நிமிடத்தில் அதன் வாலை நுகர்ந்து நிற்கும் நம்மிடம் உள்ள சூப்பர் சோனிக் இன்டர்செப்டர்கள்.

(IAF-SUKOI.MKI30)

ஒரு சுதேச பீத்தல் என எடுத்துக்கொண்டாலும் , பெருமை பட்டுக்கொள்ள நம்மக்கிட்டேவும் சரக்கு இருக்கு, ஆசியப்பிராந்தியத்தில் சீனாவை தவிர வேற நாடு நம்மிடம் வாலாட்ட முடியாது.

நம்மிடம் உள்ள ஒரே பிரச்சினை போதுமான எண்ணிக்கையில் விமானங்கள் இல்லை ,மற்றப்படி பைலட்டுகளின் தரம் ,தொழில்நுட்பம் எல்லாம் உலகத்தரமே , சுகோய் விமானத்தின் ஏவியானிக்ஸ் எனப்படும் மின்னணு கருவிகள் எல்லாம் இந்திய வடிவமைப்பு, விமான உடல் மற்றும் எஞ்சின் ரஷ்யாவுடைது.

மிகக்குறைவான தூர ஓடுப்பாதையில் , மிக அதிக உயரத்தில் உள்ள இடத்தில் இருந்து டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் செய்யும் வித்தையில் இந்திய விமானிகள் கெட்டிக்காரர்கள், சியாச்சினில் உள்ள ஓடுப்பாதையில் இதனை செய்துள்ளார்கள் ,இன்றளவும் உலக ராணுவ விமானிகள் இடையே இது ஒரு சாதனையாகும்.

* உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ராணுவ விமான ஓடுப்பாதை சியாச்சின்.

* மிக உயரமான இடத்தில் உள்ள சிவில் விமான தளம் ,லடாக்.

ரஷ்ய தயாரிப்புகளை பற்றி பல விமர்சனங்கள் உண்டு ,ஆனால் அவர்களின் ஃபைட்டர் ஜெட்கள் தான் மிக அதிக உயரத்தில் ,குறைவான ஆக்சிஜன் உள்ள இடத்திலும் "எஞ்சின் முடங்காமல்"பறக்கும், இந்த விடயத்தில் அமெரிக்க வகைகள் கூட பின் தங்கியவை,ஆனால் அவற்றை மித உயரத்தில் அடிச்சுக்க ஆளேயில்லாதவை. மேலும் சிறப்பான ஆயுதங்கள், மின்னணு ஏவியானிக்ஸ் எனக்கொண்டவை.

மிக் வகைப்பற்றி பல கம்ப்ளையிண்ட்கள் உண்டு ஆனால் கிளப்பின நான்காவது  நிமிடத்தில் , வான எல்லை எனப்படும், ஸ்கைலிமிட்டை தொடக்கூடியவை, இன்றளவும் மிக்.25 விமானத்தின் ஹை ஆல்டியூட் கிளைம்பிங்க் ரெக்கார்ட் முறியடிக்கப்படவில்லை. இவ்வாறு செங்க்குத்தாக அதிஉயரத்தினை அடைவதை "ஸூம் கிளைம்பிங்"என்பார்கள்.

இப்போதைய மிக்-21 பிரச்சினைக்கு காரணம் விமானத்தின் தொழில் நுட்பமல்ல ,வயோதிகமே எல்லா விமானங்களுமே சுமார் 40 ஆண்டுகள் பழமையானவை, ஆனாலும் அவற்றுக்கு ஓய்வு கொடுக்காமல் இன்னும் ஓட்டிக்கிட்டு இருக்கோம் அவ்வ்.

சீனாவோ,அமெரிக்காவோ  நிறைய விமானங்கள் வச்சிருந்தாலும் இந்திய எல்லைக்குள் நீண்ட நேரம் பறந்து வாலாட்ட முடியாது ,ஏன் எனில் ஃபைட்டர் ஜெட்கள் அதிபட்சம் சுமார் 2 மணி நேரம் பறப்பதற்கான எரிப்பொருள் கொள்ளளவு கொண்டவையே . எனவே ஏதேனும் வம்பு செய்ய ஆசைப்பட்டால் இந்தியாவுக்கு அருகில் ஒரு பேஸ் ஸ்டேஷன் இருந்தால் மட்டுமே சாத்தியம் , இல்லை எனில் எத்தனை அதிக விமானம் வச்சிருந்தாலும்  நாட்டின் உள்ளே ஊடுருவி பறக்க எரிப்பொருள் போதாது.இதனால் தான் இலங்கையை சீனாவும், அமெரிக்காவும் "கள்ளப்பார்வை"பார்க்கின்றன, எல்லாம் இந்தியாவுக்கு ஒரு செக் வைக்க தான்.

மலேசிய விமானம் காணாமல் போன கடற்பரப்பு,வானெல்லை பல நாடுகளுக்கு சொந்தமெனினும் , சீனாவே முதன்மையான பாதுகாப்பு விதிகளை ஏற்படுத்தி கண்காணிக்கும் நாடு ஆகும், தென் சீனக்கடலுக்கு என சீனா ஒட்டுமொத்தமாக அறிவித்துள்ள விதிகள்.

south china sea

First, aircraft flying in the East China Sea Air Defense Identification Zone must abide by these rules.

  Second, aircraft flying in the East China Sea Air Defense Identification Zone must provide the following means of identification:

  1. Flight plan identification. Aircraft flying in the East China Sea Air Defense Identification Zone should report the flight plans to the Ministry of Foreign Affairs of the People's Republic of China or the Civil Aviation Administration of China.

  2. Radio identification. Aircraft flying in the East China Sea Air Defense Identification Zone must maintain the two-way radio communications, and respond in a timely and accurate manner to the identification inquiries from the administrative organ of the East China Sea Air Defense Identification Zone or the unit authorized by the organ.

  3. Transponder identification. Aircraft flying in the East China Sea Air Defense Identification Zone, if equipped with the secondary radar transponder, should keep the transponder working throughout the entire course.

  4. Logo identification. Aircraft flying in the East China Sea Air Defense Identification Zone must clearly mark their nationalities and the logo of their registration identification in accordance with related international treaties.

  Third, aircraft flying in the East China Sea Air Defense Identification Zone should follow the instructions of the administrative organ of the East China Sea Air Defense Identification Zone or the unit authorized by the organ. China's armed forces will adopt defensive emergency measures to respond to aircraft that do not cooperate in the identification or refuse to follow the instructions.

  Fourth, the Ministry of National Defense of the People's Republic of China is the administrative organ of the East China Sea Air Defense Identification Zone.

  Fifth, the Ministry of National Defense of the People's Republic of China is responsible for the explanation of these rules.

  Sixth, these rules will come into force at 10 a.m. November 23, 2013.

http://eng.mod.gov.cn/Press/2013-11/23/content_4476143.htm

டிரான்ஸ்பான்டர் செயலிழந்த (கட்டாயமாக நிறுத்தம்) நிலையில் தென் சீனக்கடலில் நீண்ட தூரம் செல்லாமல் ,மேற்காக திருப்பியதில் ஒரு திட்டமிட்ட செயல் இருக்கு என சந்தேகம் கிளம்புகிறது, இன்னும் கொஞ்ச நேரம் நேராக பறந்திருந்தால் சீன விமானப்படை பறந்து வந்திருக்கும், அதை நன்கு அறீந்தே மேற்காக திருப்பியுள்ளார்கள், எனவே அதனை தற்செயலான "விபத்தாக"நிகழந்த திருப்பம் என சொல்ல முடியாது.

ராணுவ பயன்ப்பாட்டில் பொதுவாக பிரைமரி ரேடார் மட்டுமே அதிகம் பயன்ப்பாட்டில் இருந்தாலும், அமெரிக்கா ,ஆஸ்திரேலியா போன்றவை "மின்காந்த அலை எதிரொலி"ரேடார் என ஒன்றினைப்பயன்ப்படுத்துகின்றன.

ஆஸ்திரேலியா Over-The-Horizon Radar (OTHR) என்றப்பெயரில் இதனை அழைக்கிறது, இம்முறையில் ஒரு சக்திவாய்ந்த ரேடியோ அலை வானின்  அயனோஸ்பியர் நோக்கி செலுத்தப்பட்டு  ,அங்கிருந்து கீழ் நோக்கி எதிரொலித்து வரும் அலை ,பறக்கும் பொருளின் மீது மோதி சேட்டிலைட்டினை அடைந்து மீண்டும் ,கட்டுப்பாட்டு அறையை அடையும், இம்முறையில் சுமார் 3000 சதுரகிலோ மீட்டரைக்கண்காணிக்கலாமாம்  , ஆனால் இந்த ரேடார் டேட்டாவினை ஆஸ்திரேலியா வெளியிட மறுப்பதாக சொல்கிறார்கள்.

படம்:
(Over-The-Horizon Radar (OTHR))

இதே போன்ற மின்காந்த ரேடார் கண்காணிப்பு டீகோ கார்சியாவிலும் உள்ளது ,ஆனால் அமெரிக்காவும் பெரிதாக வாயை திறக்க மாட்டேன்கிறது. இது போக அமெரிக்கா பல உளவு சேட்டிலைட்கள் வைத்துள்ளது அவற்றில் என்ன விவரம் பதிவாகியது எனவும் சொல்லவில்லை. இதில் அமெரிக்காவின் டீகோ கார்சியா ராணூவத்தளத்தின் மீது கூட சந்தேகம் உள்ளது..

பொதுவாக பயணிகள் மற்றும் ராணுவ விமான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு எப்படி எனப்பார்த்தோம், இனி மலேசிய விமானத்திற்கு என்னாச்சு எனப்பார்ப்போம்.

மலேசிய விமானம் MH-370 :

விமான வகை: போயிங்-777- 200ER.

பைலட்டுகள்:



தலைமை விமானி:Capt. Zaharie Ahmad Shah

துணை விமானி: Fariq Abdul Hamid

விமான சிப்பந்திகள்: 10

பயணிகள் எண்ணிக்கை:239

புறப்பட்ட நேரம்:12.41 ,மார்ச்-8,2014.

பயண தூரம்: கோலாலம்பூர் - பீகிங்- 3680 கி.மீ.

பயண நேரம் சுமார் 6  மணி நேரம். எனவே விமானத்தில் எரிப்பொருளை பயணநேரத்திற்கு கூடுதலாக சுமார் ஒரு மணி நேரம் அளவுக்கு சேர்த்து நிரப்புவார்கள்,எனவே சுமார் 7 மணி நேரம் பறக்க தக்க எரிப்பொருளே விமானத்தில் இருந்திருக்க வேண்டும்.

விமான பயணப்பாதை படம்.



12.41 டேக் ஆஃப்.

1.07 மணிக்கு  விமான டிரான்ஸ்பான்டர்கள் செயலிழப்பு.

1.19 மணியளவில் இறுதியாக , உதவி விமானி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரையாடியுள்ளார்.

கே.எல் தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ,இனி வியட்நாம் ,ஹோசிமின் நகர விமானக்கட்டுப்பாட்டு எல்லை ஆரம்பம் ஆகிறது ,அவர்களின் வழிக்காட்டுதலை பின்ப்பற்றவும் என கூறியதற்கு "ஆல் ரைட் ,குட் நைட் என பதில் அளித்துள்ளார் துணைவிமானி ,அத்துடன் "அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு எழும் சந்தேகம் என்னவெனில் ,கடைசி உரையாடலுக்கு முன்னரே சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்கள் செயலிழந்துள்ளன ,அது பற்றி பின்னர் உரையாடிய போது தரைக்கட்டுப்பாட்டு அதிகாரியும் கேட்கவில்லை, விமானியும் ,அவ்வாறு ஆனது என தெரிவிக்கவில்லை, ஏன்?

மலேசிய அரசு வழங்கிய "விமான உரையாடல்"தகவலின் நம்பகத்தன்மை கேள்விக்குறியது ஆகும்.

# விமானம் புறப்பட்டு சுமார் அரைமணிநேரத்தில் அனைத்து வித தகவல் தொடர்புகளும் அற்ற நிலையில் என்னவாயிற்று என தெரியவில்லை, ஆனால் உடனே மலேசிய விமானக்கட்டுப்பாட்டு நிலையம் எவ்வித அலெர்ட்டும் மற்ற நாடுகளுக்கு கொடுக்கவேயில்லை, காலையில் தான் இத்தகவலை அறிவிக்கிறார்கள்!!!

ஒரு வேளை அறிவிக்க நல்ல நேரம் பார்த்தார்களோ என்னமோ?

வியட்நாம் கடல் எல்லையில் தகவல் தொடர்பினை இழந்த விமானம் ,பின்னர் தன் பயணப்பாதையில் இருந்து மேற்காக சுமார் 90 டிகிரி திரும்பி மீண்டும் மலேசியா நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது, மலேசியா வானெல்லையில் பறந்து , தாய்லாந்து வானெல்லையிலும் பறந்து பின்னர் மலேசியாவின் மறுபுற  கடற்பரப்பை அடைகிறது.

அது வரையில் டிரான்ஸ்பான்டர்கள் செயல்ப்படாத ஒரு மர்ம பறக்கும் பொருளாகவே வானில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மேலும் மலேசிய மேற்கு கடற்கரையில் ,மலாக்கா நீர்ச்சந்தியில் "Pulau perek"தீவு அருகே சுமார் 2.40 மணி அளவில் மலேசிய ராணுவ பிரைமரி ரேடாரில் "அடையாளம் தெரியாத"விமானமாக பதிவாகியுள்ளது.




சுமார் இரண்டு மணி நேரங்கள் அளவுக்கு மலேசிய ,தாய்லாந்து வானெல்லையில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளாக எம்.எச்.370 பறந்துள்ளது, ஆனால் இரு நாட்டு விமானப்படையும் எவ்வித நடவடிக்கையிலும் இறங்கியதாக தகவலேயில்லை அவ்வ்!

இத்தனைக்கும் காணாமல் போனது மலேசிய விமானம் , காணாமல் போய் சுமார் 2 நேரம் கழித்து ஒரு மர்ம பறக்கும் பொருள் நம்ம எல்லையில் ரேடாரில் சிக்குதே எனவே ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் 2.40க்கு ரேடாரில் சிக்கிய விமானத்தினை தொறத்தி சென்று சோதித்து இருக்கலாம், இத்தனைக்கும் மலேசிய விமானப்படையில் நான்கு எஃப்-16 ஃபைட்டர் ஜெட்கள் உள்ளன.அவ்விமானங்களை வைத்துக்கொண்டு வேடிக்கைப்பார்த்துள்ளது மலேசிய ராணுவம்.



சுமார் ரெண்டு நாள் மற்ற நாடுகளை வியட்நாம் அருகே தேடவிட்டுவிட்டு தான் இந்த விவரங்களையே மலேசியா அரசு தெரிவித்தது ,அது கூட அவர்களாக தெரிவிக்கவில்லை, லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "Inmarsat"எனப்படும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேட்டிலைட் மூலம் , போயிங்க் விமானத்தின் எஞ்சின் செயல்ப்பாடுகள் பற்றிய டேட்டா ACARS,( Aircraft Communications Addressing and Reporting System.)என்ற முறையில் சேகரிக்கப்பட்டு , போயிங்க் விமான நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது.



விமானம் பறக்கும் போது எஞ்சினின் செயல்ப்பாடுகள், எஞ்சின் வேகம், பறக்கும் உயரம், அதன் சக்தி, காற்றழுத்தம் என அனைத்தையும் எஞ்சினுடன் இணைந்த கண்காணிப்பு கருவிகள் சேகரித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சேட்டிலைட் மூலம் தரைக்கு அனுப்பிவிடும்.இவ்வமைப்பு தன்னியக்கமான ஒன்று இதற்கும் விமானத்தின் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்களுக்கும் தொடர்பில்லை, இதற்கென தனியான டிரான்ஸ்பான்டர்கள் விமான இறக்கையில் எஞ்சின் அருகிலேயே இருக்கிறது, இதனை விமானத்தில் இருப்பவர்களோ அல்லது விமானியோ கட்டுப்படுத்தி செயலிழக்க செய்ய முடியாது. சில விமானங்களில் ஒரே டிரான்ஸ்பான்டரே செயல்பாட்டில் இருக்கும் ஆனால் "Inmarsat"டேட்டா கனெக்‌ஷனை மட்டும் துண்டிக்க இயலாத வகையில் செய்திருப்பார்கள்.

விமானம் காணாமல் போய்விட்டது என தகவல் அறிவித்தவுடன் ,போயிங் ,அக்குறிப்பிட்ட விமானத்தின் எஞ்சின் தகவல்களை சரிப்பார்த்த போது , காணாமல் போனதாக சொல்லப்பட்ட நேரத்தில் இருந்து சுமார் ஆறுமணி நேரம் எஞ்சின் இயங்கியுள்ளது, சீராக இயங்கியதாக அவை தெரிவிக்கின்றன, எனவே உடனே விமானம் விபத்தில் சிக்கி இருக்க வாய்ப்பில்லை என அறிவித்தது ,அதன் பின்னரே ,மலேசிய ராணூவம் நாங்க கூட ரேடாரில் ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை பார்த்தோம் ,ஒரு வேளை அது மலேசிய விமானமாக இருக்கலாம் என சொன்னது.

இது ஒரு பொறுப்பற்ற செயல் ஆகும், செப்டெம்பர்-11 தாக்குதலுக்கு பின்னர் , பயணிகள் விமானத்தினைக்கூட ஒரு அபாயகரமான ஆயுதமாக மாற்றலாம் என உணர்ந்த சர்வதேச நாடுகள் "பயணிகள் விமானம்'கடத்தப்பட்டால், அவற்றினை வழிமறித்து உடனே தரை இறக்க வேண்டும், கடத்தல்காரர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், பயணிகள் உயிரினைப்பற்றியும் கவலைப்படாமல் சுட்டு வீழ்த்தலாம் என ஒரு தீர்மானமே இயற்றியுள்ளார்கள்.

செப்டெம்பர் -11 தாக்குதலுக்கு பின்னர் உலக நாடுகள் அனைத்துமே "அடையாளம் தெரியாமல் பறக்கும்"விமானங்கள் மீது கருணைக்காட்டுவதே இல்லை, வழிமறித்து சொன்ன இடத்தில் தரையிறங்க சொல்வார்கள் கேட்கவில்லை எனில் சுட்டு விடுவது தான் ஒரே "முடிவு"!




டிரான்ஸ்பாண்டர்கள் வேலை செய்யாத நிலையில் எம்.எச்.370. ,தாய்லாந்து ,மலேசியா, இந்தோனேசிய வானெல்லையில் சுமார் இரண்டு மணிநேரம் பறந்துள்ளது ,அப்படி இருந்தும் எவரின் "பிரைமரி ரேடாரிலும்"சிக்கவேயில்லை என்பது போல சொல்கிறார்கள் .அதுவும் இந்திய பெருங்கடல் நோக்கி செல்லும் போது கோலாலம்பூருக்கு வெகு அருகில் தான் பறந்துள்ளது,ரேடாரில் சிக்கவேயில்லை ,அது ரேடாரா இல்லை ரேடியோ பெட்டியா அவ்வ்!. தற்செயலாக இருமுறை மட்டும் ரேடாரில் தெரிந்தது , ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதாக "ரொம்ப முக்கியத்துவமே"கொடுக்காமல் பட்டதும் படாததுமாய் மலேசிய அரசு பேசுகிறது.

 உலகில் உயரமான கட்டிடங்களில் ஒன்றான பெட்ரோனாஸ் டிவின் டவர் மலேசியாவில் உள்ளது, படுகொலை எண்ணம் கொண்ட தீவிரவாதிகள் கையில் விமானம் சிக்கி இருந்தால் இன்னேரம் 'பெட்ரோனாஸ் டவர்"இருந்த இடம் மண்மேடாகி இருக்கும்,சில ஆயிரம் உயிர்கள் போயிருக்கும். அந்தளவு தான் மலேசிய ராணுவத்தின் விழிப்புணர்வு இருந்துள்ளது. இனியாவது விழித்துக்கொள்வார்களா?

மலேசிய ராணுவம் வாயத்தொறந்த பின் நாம சும்மா இருக்கக்கூடாது என தாய் ராணூவம் எங்க ரேடாரிலும் தெரிஞ்சது ஆனால் கொஞ்ச நேரத்தில் சிக்னல் மறைந்துவிட்டது எனவே கண்டுக்கலைனு சொல்லியிருக்கு என்ன கொடுமை சார் இது!

இன்ம்ராசாட்  குழுவின் ஒரு சேட்டிலைட் இந்திய பெருங்கடலில் உள்ளது ,அதன் வழியே தகவல் திரட்டியுள்ளது, சேடிலைட்டுக்கும் ,விமானத்துக்கும் இடையேயான தொலைவினை  மட்டுமே கணக்கிட முடியுமாம் அதன் அடிப்படையில் வட மேற்கு, தென்கிழக்கு என ஒரு ஆர்க்கில் தான் விமானம் பறந்திருக்க வேண்டும் என கணித்துள்ளார்கள்



இம்ராசாட் தகவல்கள் வைத்து  தெரிய வருவது என்னவெனில்,மலேசியா விமானம் தொடர்ந்து 6-7மணி நேரம்,  காலை 8.11 மணி வரையில் பறந்துள்ளது ,விமானத்தில் இருந்த எரிப்பொருள் அளவை வைத்து பறந்து செல்லக்கூடிய ரேஞ்சை கணக்கிட்டு,  மேற்கில் கசகஸ்தான் நோக்கியோ அல்லது தென்கிழக்கில் இந்திய பெருங்கடல் பகுதிக்கோ பறந்திருக்கலாம் என தோராயமாக்க கண்டுப்பிடித்தார்கள்.

(MH-370 பறந்து செல்லக்கூடிய எல்லை)

ஏன் இம்ராசாட் தகவல் வைத்து சரியான இடத்தினை அறியமுடியாதா என ஒரு சந்தேகம் வரலாம்,அவர்கள் வெறும் எஞ்சின் தகவல்களை மட்டுமே திரட்டுவார்கள், பறக்கும் கோ ஆர்டினேட்களை சேகரிப்பதில்லையாம், எல்லாம் ஒரு சிக்கன நடவடிக்கை :-))

இம்ராசாட் பறக்கும் இடத்தினையும் தன்னிச்சையாக காட்ட தனியாக "ஸ்விஃப்ட்"என ஒரு அமைப்பினை வைத்துள்ளது, அதனை மலேசியா விமானப்போக்குவரத்து வாங்க மறுத்துவிட்டது என அவர்களே சொல்கிறார்கள்.

இம்முறையில் விமானத்தின் இருப்பிடத்தினை தொடர்ந்து கண்காணிக்க , ஒவ்வொரு "பயணத்துக்கும்" 10 டாலர் என இம்ராசாட்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமாம், அந்த 10 டாலரை மலேசிய அரசு மிச்சம் செய்ய நினைத்துள்ளது அவ்வ்.

இவ்வளவு வேலையும் நடக்க சுமார் 10 நாட்கள் ஆகிவிட்டது அதன் பின்னரே தென்சீனக்கடலில் இருந்து இந்தியப்பெருங்கடல் பரப்பில் தேடத்துவங்கினார்கள். மலேசிய அரசுக்கு காணாமல் போன அன்றே , விமானம் விபத்தில் அந்தப்பகுதியில் சிக்கவில்லை என தெரியும் என நினைக்கும் வகையிலேயே அவர்களின் செயல்பாடுள்ளது, ஆனால் ஏனோ வேண்டுமென்றே தவறான இடத்தில் தேடவிட்டு வேடிக்கைப்பார்த்துள்ளார்கள், அது ஏன் என தெரியவில்லை?

மலேசிய விமானம் தென்கிழக்காக இந்திய பெருங்கடல் நோக்கி பறந்திருந்தால் ,இந்தோனேசிய வானெல்லையையும் கடந்திருக்க வேண்டும், ஆனால் அவர்களும் எதுவுமே தெரியாமல் அல்லது தெரியாதது போல அமர்ந்திருக்கிறார்கள் அவ்வ்.

இதில் உட்சப்பட்ச கொடுமை என்னவெனில் விமானம் காணாமல் போனதாக அறிவித்த அன்று , இந்தியாவின் ரேடார் அந்தமானில் இருக்கு அது சரிவர இயங்குவதில்லை,இந்தியா மட்டும் விழிப்புடன் இருந்திருந்தால் ,வடமேற்காக விமானம் சென்றிருந்தால் கண்டுப்பிடிச்சிருக்கலாம்  என மலேசிய பிரதமர் அறிவிப்பில் குறிப்பிட்டது தான்!

இந்தியா போன்ற பரந்த கடற்பரப்பினை கொண்ட நாடுகள் நிலப்பரப்பில் நிறுவிய ரேடார்களை மட்டும் நம்பியிருப்பதில்லை, கடற்படைக்கப்பல்களை கடலில் ரோந்து செல்லவிட்டு அவற்றின் ரேடார்கள் மூலம் வான் மற்றும் கடலினை ஸ்கேன் செய்துக்கொண்டே இருப்பார்கள்.

மேலும் சில ஸ்ட்ராடஜிக்கான இடங்களில் எப்பொழுதும் ஒரு கடற்படை கப்பல்களை நிறுத்தியும் வைத்திருக்கும். இவ்வளவு ஏன் அமெரிக்கா போன்ற  தொலைவில் உள்ள நாடுகளின் கடற்படை கப்பல்களும் இந்திய கடற்பிராந்தியத்தில் உலாத்தி கண்காணித்துக்கொண்டு தானுள்ளன.

இவ்வளவு இருந்தும் மலேசிய விமானம் மற்ற யாருடைய ரேடாரிலும் சிக்காமல் (மலேசியா, தாய்லாந்து தூங்கியது கணக்கில் இல்லை)இந்திய கடலில் ஆஸ்திரேலியா வரை எப்படி சென்றது என்பது மிகப்பெரிய மர்மம்.

இம்மர்மத்திற்கும் சில விளக்கங்கள் கொடுக்க இயலும், ஆனால் அவற்றின் சாத்தியம் வெகு அரிது.

விமானத்தினை மிக தாழ்வாக அதாவது சுமார் 5000 அடி உயரத்திற்கும் கீழ் பறக்க வைத்தால் ரேடாரில் அதிகம் சிக்காது,ஆனால் விமானம் எவ்வளவு தாழ்வாக பறக்கிறதோ அவ்வளவு அதிக எரிப்பொருளைப்பயன்ப்படுத்தும்,மேலும் போயிங்க் -777 போன்ற பெரிய அளவிலான விமானங்களை நீண்ட தொலைவிற்கு தாழ்வாக பறக்க வைக்க இயலாது.

வானில் இரு விமானங்களுக்கிடையே சுமார் 1000 அடி இடைவெளியாவது இருந்தால் தான் ரேடாரில் ,இரண்டு விமானங்களாக காட்டும்,எனவே ஒரு அங்கீகரிக்கப்பட்ட குறியீடு உள்ள விமானத்தின் பின்னால் 1000 அடிகளுக்குள்ளாக இன்னொரு விமானத்தினை வால்ப்பிடித்தார்ப்போல ஓட்டி சென்றால் ஏமாற்ற முடியும்.

சிறிய ரக விமானங்களில் தாழ்வாகப்பறந்து ரேடாரை ஏமாற்றிவிட்டு இன்னொரு நாட்டினுள் நுழைய முடியும். மிகுந்த ராணுவக்கண்காணிப்புள்ள ரஷிய வானெல்லையில் ரேடாரை ஏமாற்றி விட்டு நுழைந்து கிரெம்லின் முன்னால் தனது செஸ்னா விமானத்தை தரையிறக்கி உலகை ஆச்சர்யப்படுத்தினார் 19 வயதே ஆன மத்தியாஸ் ரஸ்ட் என்ற ஜெர்மன் இளைஞர்.



செய்தி:

"Mathias Rust, just 19, had single-handedly flown more than 500 miles (750km) through every Soviet defensive shield in a single-engine plane to land at the gates of the Kremlin."
http://www.bbc.co.uk/news/magazine-20609795

அடுத்து , விமானக்குறியீட்டு எண்ணை ஸ்பூப் செய்வது, இதற்கு விமான தொழில்நுட்பமும், கணினி அறிவும் பெரிய அளவில் தேவை. விமானத்தின் குறியீட்டு எண்  கணினியில் சேமிக்கப்பட்டு டிரான்ஸ்பான்டர் மூலம் வெளியிடப்படும், விமானக்கட்டுப்பாட்டு கணினியை ஹேக் செய்து உள் நுழைந்து , குறியீட்டு எண்ணை மாற்றினால் இன்னொரு விமானம் போல "செகண்டரி ரேடாரில்"காட்டும். இதற்கு ஹேக்கிங் அறிவு மட்டுமில்லாமல் ,அதே நேரத்தில் அவ்வான் வழி செல்லும் இன்னொரு விமானத்தின் குறியீட்டு எண்ணும் தெரிந்திருக்க வேண்டும், அல்லது பிரைவேட் சார்ட்டட் ஜெட் ஏதேனும் ஒன்றின் குறியீட்டு எண்ணை தெரிந்துக்கொண்டு அதனை உள்ளீடு செய்து மாற்றி இருக்க வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் விமானக்கட்டுப்பாட்டு கணினி எல்லாம் "அவ்வளவு எளிதில்"ஹேக் செய்ய இயலாது, பல தகவல்களும் "ரீட் ஒன்லி"வகையில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் கணினி என்றாலே ஹேக் செய்ய ஒரு வழி இருக்கும்,அதனை செய்யும் அளவுக்கு அதிதிறமைசாலி ஒருவர் விமானத்தில் பயணம் செய்திருந்தாலே இதெல்லாம் சாத்தியம்.  இதற்காகவே பயணிகளின் பின்ப்புலமும் விரிவாக ஆராயப்பட்டது.

எனவே இப்போதைய நிலையில் ,டிரான்ஸ்பான்டர்கள் செயல்படாமல் போனக்காரணம் தெரியவில்லை, ஏன் மேற்காக திரும்பியது என்பதற்கும் சரியான விளக்கமில்லை.

விமானத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்க வேண்டும் எனவே அவசரமாக தரையிறக்க திரும்பியிருக்கலாம் என்கிறார்கள், ஆனால் மலேசியாவின்  லங்காவி விமான நிலையமே(Pulau Langkawi ,state of Kedah in Malaysia -Langkawi International Airport) அருகில் உள்ளது ,அங்கே செல்லாமல் அதனையும் தாண்டி மலேசிய மேற்கு கடற்கரையான மலாக்கா சந்தி வரையில் விமானம் பறந்துள்ளது கேள்விக்குறியது.

விமானத்தில் பழுதென்றால் லங்காவி ஏர்போர்ட் வரைக்கூட செல்லத்தேவையில்லை, தகவல் கொடுத்து விட்டு கடலிலேயே விமானத்தினை லேண்டிங் செய்யலாம். நீரில் இறங்குமாறு வடிவமைக்கப்படாத விமானம் எப்படி தண்ணீரில் லேண்ட் ஆகும் என நினைக்கலாம். ஆனால் முடியும்.



அனைத்து விமானங்களும் அவசரக்கால தரையிறக்கமாக நீரில் இறங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தண்ணீரில் லேண்டிங் செய்வதை  DITCHING   என்கிறார்கள்.

எல்லா விமானத்திலும் அவசரக்காலத்தில் தண்ணீரில் இறங்கும் போது பயன்ப்படும் என்று தான் "லைப் ஜாக்கெட்கள்"வைத்துள்ளார்கள்,பயணத்துக்கு முன்னர் பயணீகளுக்கு டெமொவும் கொடுப்பார்கள்.

விமானத்தில் வெடிப்பு , அல்லது நெருப்பு பிடித்து ஓட்டை விழவில்லை எனில் ,லேண்டிங் கியர் எனப்படும் விமான சக்கரங்களை வெளியில் எடுக்காமல் ,லாகவமாக சறுக்கினார்ப்போல நீரில் இறக்கினால் விமானம் சேதமடையாது,சுமார் அரைமணிநேரத்துக்கு மூழ்காமல் மிதக்கும் , ஏர் பஸ் போன்ற விமான நிறுவனங்கள் கடலில் இறக்கினால் தண்ணீர் உட்புகாதவாறு சிறப்பு வடிவமைப்பும் செய்துள்ளன, டிட்சிங்க் என "உள்ள கியரை"இயக்கினால் அனைத்து ஓட்டைகளும் மூடிக்கொள்ளும்.அந்நேரத்தில் லைஃப் ஜாக்கெட்டுகள் அணிந்துக்கொண்டு பாதுகாப்பாக கடலில் குதித்து ,மீட்புப்படை வரும் வரையில் காத்திருக்க வேண்டும்.



Chesley Sullenberger,என்ற  அமெரிக்க விமானி நியுயார்க்கில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்து போனதையும், இன்னொரு எஞ்சினில் தீப்பிடித்துள்ளதையும் அறிந்து,உடனடியாக ஹட்சன் ஆற்றில் தண்ணீரில் இறக்கி அனைத்து பயணிகளையும் காப்பாற்றியுள்ளார்.

இதுப்போல் பலமுறை  விமானங்கள் தண்ணீரில் "தரை"யிறக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.

செய்தி:

The pilot of a US Airways jet managed to avoid disaster and save the lives of all 155 people on board his stricken plane when he ditched into the icy waters of the Hudson river moments after taking off from New York's LaGuardia airport.

http://www.theguardian.com/world/2009/jan/16/us-airways-plane-crash-lands-on-hudson



விமானத்திற்கும் பெரிய சேதமில்லை, வெளியில் எடுத்து சிறிய அளவில் பழுதுப்பார்த்து மீண்டும் பயன்ப்படுத்திக்கொண்டுள்ளார்கள்!

ஆற்றில் தரையிறக்கியது போல கடலில், வயலில்,பீச்சில் ,ஏன் நடு ரோட்டில் எல்லாம் கூட விமானத்தினை தரையிறக்கியுள்ளார்கள்.

இந்தியாவில் முன்பொரு முறை ஏர் இந்தியா விமானி ஒருவர் எஞ்சினில் நெருப்பு பிடித்த நிலையில் அவசரக்கால தரையிறக்கமாக திருப்பதி அருகே நெல் வயலில் விமானத்தினை இறக்கி ,ஒரு உயிரிழப்புக்கூட இல்லாமல் அனைவரையும் காப்பாற்றியுள்ளார், அவ்விமானத்தில் சிரஞ்சீவி,விஜயசாந்தி போன்றப்பிரபலங்களும் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே விமானம் விபத்தில் சிக்காமல் இருப்பது விமானியின் திறமையைப்பொறுத்தே ஆகும். அவசரம் எனில் கடல்,பீச், வயல் என தரை இறக்கி சமாளீக்க தெரிந்தவர்களே உண்மையான திறமைசாலிகள்.

எனவே விமானம் மேற்காக திரும்பியது அவசரக்காலமாக அல்ல திட்டமிட்ட ஒன்று ,அதனை செய்தது பைலட்டுகளா,அல்லது வேறு யாராவதா என்பது தான் விடைத்தெரியாத கேள்வி!

இந்த இடத்தில் இன்னொரு விடைத்தெரியாத கேள்வியும் தொக்கியுள்ளது, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் விமானிகளின் அறையோடு , விமான சிப்பந்திகள் தொர்பு கொள்ள வேண்டுமாம், மேலும் அடிக்கடி காக்பிட் உள் சென்று பார்த்து வர வேண்டும் , இது எதற்கு எனில் பைலட்டே "தற்கொலை"முயற்சியாக ஏதேனும் செய்து விமானத்தினை விபத்தில் சிக்க வைக்கலாம் என்பதனாலாயே.

பைலட்டுகள்  காக்பிட்டினை உட்புறமாக பூட்டிக்கொண்டாலும் அதனை திறக்க ரகசிய கோட் விமான சிப்பந்திகளுக்கு தெரியும். மேலும் உட்ப்புறமாக மெக்கானிக்கல் லாக் போட்டுக்கொண்டாலும் உள் நுழைய மாற்று வழி உண்டாம். நீண்ட நேரம் காக்பிட் கதவு திறக்கப்படாமல் இருந்தால் இண்டர்காம் வழியே தொடர்புக்கொள்வார்கள்,சரியான பதில் இல்லை எனில் விமான சிப்பந்திகள் ,ரகசிய கதவினை திறந்து உள் நுழையலாம்.

பைலட்டே ஏதேனும் சதியில் ஈடுப்பட்டால் முறியடித்துவிட்டு ஆட்டோ பைலட் மூலம் தரையிறக்கலாம். பைலட்டே இல்லாமல் அல்லது செயல்ப்படாமல் போனாலும் ஆட்டோ பைலட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் தான் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது

இப்படியான சர்வதேச பயணிகள் விமான புரோட்டோக்கால் உள்ள நிலையில் , விமானத்தினை தீவிரவாதிகள் கடத்திய அறிகுறியே இல்லை, ஆனால் விமானம் தொடர்ந்து தவறான பாதையில் பறந்துள்ளது , இது கண்டிப்பாக அனுபவம் வாய்ந்த விமான சிப்பந்திகளுக்கு தெரிந்திருக்கும்,ஆனால் அவர்களூம்  எதுவும் முயற்சித்தாற்போல தெரியவேயில்லை,

விமானத்தில் அனைத்து தகவல் தொடர்பு கருவிகள், கணீனிகள் எல்லாமே கார்கோ பகுதியில் தனியே ஒரு அறையில் வைக்கப்பட்டிருக்கும்,ஏதேனும் அவசரம் எனில் அங்கிருந்து தகவல் தொடர்புக்கு முயற்சிப்பார்கள்,ஆனால் அப்படியான முயற்சி எதுவுமே எம்.எச்.370 இல் இருந்து மேற்கொள்ளப்படவில்லை.

எம்.எச்.370 இல் பைலட்டுகள் இருவர் , பத்து  பேர் விமான சிப்பந்திகள் ,வெளியாள் யாரும் கடத்த முயலாத நிலையில் ,பைலட்டுகளே சதி செய்கிறார்கள்  எனில் ஒரு விமான சிப்பந்தியாவது மாற்று வழியில் தகவல் தொடர்புக்கொள்ள முயன்றிப்பார்கள்,  விமான பணிப்பெண்கள், சிப்பந்திகள் ,உணவுக்கொடுக்க, சாக்லேட் கொடுக்க இருக்கிறார்கள் என நாம் நினைக்கலாம்,ஆனால் அவர்களுக்கு அவசரகால மருத்துவ சிகிச்சை,சிபி.ஆர், மற்றும் சில பாதுகாப்பு பணிகள் செய்ய கற்றுக்கொடுத்திருப்பார்கள், அவர்களது முக்கியமான பணியே விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பயணிகளைப்பத்திரமாக பாதுகாப்பது தான்.

மலேசிய விமானத்தில் பைலட்டுகள் மட்டுமல்ல விமான சிப்பந்திகளும் செயல்படவில்லை ,ஏன்? ஒரு வேளை அவர்களும் செயல் இழக்க செய்யப்பட்டார்களா?

அப்படி எனில் செய்தது யார்? அது கண்டிப்பாக விமானத்தில் பயணம் செய்த யாரோவாகத்தான் இருக்க முடியும். அந்த யாரோ எப்படி பைலட் மற்றும் சிப்பந்திகளை கட்டுப்படுத்தினார் என்பது புரியாதப்புதிர்.

விமான எஞ்சின் மற்றும் விமானத்துக்கு எவ்வித சேதமுமில்லை என்பது ,தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் சுமார் 6-7 மணி நேரங்கள் பறந்துள்ளது என்பதன் மூலம் அறியலாம், எனவே விமானம் யார்  கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும் பாதுகாப்பாக தரையிறங்க போதுமான வாய்ப்புகள் இருந்துள்ளது,ஆனால் அவ்வாறு செய்யவில்லை,எனவே மர்மமாக விமானம் மறையக்காரணம் திட்டமிட்ட  சதிச்செயலே என்பது உறுதி.

விமானிகள் மீதான சந்தேகம்:

தலைமை விமானி:Capt. Zaharie Ahmad Shah, நீண்ட பறக்கும் அனுபவம் கொண்ட மூத்த விமானி, இது வரையில் எக்குற்றச்சாட்டும் அவர் மீது இல்லை.

ஆனால் இவர் மலேசிய எதிர்க்கட்சி தலைவரான "இப்ராகிம் அன்வரின்"உறவினர். அன்வர் தற்சமயம் "பாலியல் வழக்கில்"சிக்கி சிறையில் உள்ளார். அவரை சில நாட்களுக்கு முன்னர்  சிறையில் சென்று பார்த்துள்ளார்.
மேலும் விமானி அஹம்த் ஷாவின் வீட்டில் "பயிற்சி விமான மென்ப்பொருள்"நிறுவி பயிற்சி செய்துள்ளார் ,அதில் மாலத்தீவு ,டீகோ கார்சியா விமான ஓடு தளங்களுக்கான பயிற்சியும் இருந்துள்ளதாம். இதனால் அவர் மீதும் சந்தேகப்பார்வை பாய்கிறது.

# துணை விமானி: Fariq Abdul Hamid  இளைஞர் ,எனவே கொஞ்சம் "ஷோக்கு"பேர்வழியாக இருந்துள்ளார், இதற்கு முன்னர் ஒரு முறை விமானப்பயணத்தின் போது , தென் ஆப்பிரிக்க அழகிகள் இருவரை பயண நேரம் முழுக்க "காக்பிட்டுக்கள்'அழைத்து கடலைப்போட்டு இருக்கார் , எனவே    பெண்களைக்காட்டி அவரை மயக்கி சதிவலையில் சிக்க வைப்பது எளிதென சொல்கிறார்கள்.

("காக்"பிட்டில் ஜாலிலோ ஜிம்கானா)

news:

"Jonti Roos, a South African currently living in Melbourne during a year-long stay in Australia, revealed last week she and her friend Jaan Maree were plucked from the queue while waiting to board a flight from Phuket to Kuala Lumpur and asked if they would like to ride up front.
Fariq Abdul Hamid, 27, the co-pilot of missing Malaysian Airlines flight MH370, spent the flight smoking in the cockpit and chatting with the two girls, Ms Roos claims."

http://www.dailymail.co.uk/news/article-2584129/Woman-spent-flight-MH370-pilot-says-life-hands.html




இங்கு இன்னொரு முக்கிய விடயமும் கவனிக்க ,கவலைக்கொள்ள தக்கதாக உள்ளது. பயணிகள் விமானங்கள் வழக்கமாக 35,000 அடி உயரத்தில் தான் பறக்கும், ஆனால் மலேசிய விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதும் ,உடனே 45,000 அடிகள் உயரத்திற்கு சென்று சிறிது நேரம் பறந்து விட்டு பின்னர் 25,000 அடிகளுக்கு விமானம் கீழிறங்கியுள்ளது.

விமானம் 45,000 அடி உயரத்தில் பறந்தால் பயணிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மூச்சு திணறும், எனவே தானியங்கியாக ஆக்சிஜன் மாஸ்க்குகள் விமானந்தின் லாஃப்டில் இருந்து வெளியாகும், அதனைக்கொண்டே சுவாசிக்க முடியும். ஆனால் அந்த ஆக்சிஜன் இருப்பு சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். பின்னர் தீர்ந்து விடும்.

எனவே ஆக்சிஜன் இல்லாமல் பெரும்பாலான பயணிகள் மயக்கமாகி விடுவார்கள், சுமார் 45,000 அடிகள் உயரத்தில் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் பறந்தால் பெரும்பாலோர் உயிரிழந்திருப்பார்கள் என்கிறார்கள்.

விமானிகளுக்கும் அதே போல நிலை தான் வரும் ஆனால் திட்டமிட்டு கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத்து சென்றிருக்கலாம். அப்படி திட்டமிட்டு  அதிக உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பயணிகள் கொல்லப்பட்டிருந்தால், விமானம் விபத்தில் சிக்கும் முன்னரோ அல்லது மூழ்கடிக்கப்படும் முன்னரோ பயணிகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்க கூடும்.,அதனை செய்தது யார்? விமானிகளா அல்லது கடத்த திட்டமிட்டவர்களா என ஒரு சந்தேகத்தினையும் நிபுணர்கள் எழுப்புகிறார்கள்.

மேலும் சில சதிச்செயல்களுக்கான சாத்தியக்கூறுகளை காண்போம்.

ரிமோட் கண்ட்ரோல்:

விமானத்தினை தொலைவில் இருந்து கூட கட்டுப்படுத்த இயலும், இவ்வகையில் ஆள் இல்லாத உளவு விமானங்கள் இயக்கப்பட்டு எதிரி நாட்டினை உளவுப்பார்க்க பயன்ப்படுத்தப்படுகின்றன.

UAV (Unmanned aerial vehicle) அல்லது  Drone Flights என இவ்வகை விமானங்களை சொல்வார்கள்.

சேட்டிலைட்ஸ் மூலம் பறப்பதற்கான கட்டளைகள் கொடுக்கப்பட்டு விரும்பிய திசையில் விமானத்தினை பறக்க வைத்து படம் எடுப்பார்கள்.

இவ்வகை விமானங்களை எதிரி நாட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்துவது வாடிக்கை. தற்காலங்களில் இதற்கும் ஒரு மின்னணு தீர்வு கண்டுள்ளார்கள், ரிமோட் ஹைஜாக்கிங் எனலாம் , எதிரி நாடு சேட்டிலைட்ஸ் மூலம் அனுப்பும் சிக்னல்களை "ஜாம்"செய்து விட்டு  வேறு சிக்னல்களை  "Drone Flights "க்கு அனுப்பி தரையிறக்க செய்துவிடுவார்கள்.

இது போன்ற உயர் தொழில்நுட் ராணுவ செயல்ப்பாடுகள் சமீபகாலமாக அதிகரித்து விட்டது. அமெரிக்கா இது போன்ற ஆள் இல்லாத உளவு விமானங்களை அதிகம் பயன்ப்படுத்த துவங்கியதால் ரஷ்யா 'சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்"ஜாமிங் ரேடார்களை "the Avtobaza ground-based electronic intelligence and jamming system"என  பிரத்யோகமாக தயாரித்துள்ளது.

இவ்வகை ரேடார்களை ஒரு டிரக் அல்லது விமானத்தில் கூட பொருத்தி இயக்கலாம். எதிரி நாட்டு உளவு விமானம் கண்டறியப்பட்டதும் அதனை நோக்கி "ஜாமிங்"சிக்னல்களை அனுப்பி தகவல் தொடர்ப்பினை துண்டித்து விடுவார்கள், பின்னர் அவ்விமானம் எத்திசையில் பறக்க வேண்டும் ,எங்கு இறங்க வேண்டும் என்ற கட்டளைகளை , அதன் உரிமையாளர்கள் அனுப்புவதை போல அனுப்புவார்கள்,  தானியங்கியாக விமானம் பறக்க  ஜிபிஎஸ்  உதவுகிறது ,எனவே புதிய ஜிபிஎஸ் கோ ஆர்டினேட்களை அதே போல அனுப்பி "தானியங்கி விமானத்தினை"ஏமாற்றுவார்கள் ,இதனை "ஜிபிஎஸ்'ஸ்பூபிங் என்கிறார்கள்.

படம்:


ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய "the Avtobaza ground-based electronic intelligence and jamming system"உதவியுடன், இரான் , அமெரிக்காவின் ஆளில்லாத உளவு விமானம்( "an American Lockheed Martin RQ-170 Sentinel unmanned aerial vehicle (UAV) ஒன்றினை மடக்கிப்பிடித்துள்ளது.

(இரானால் வளைக்கப்பட்ட அமெரிக்க உளவு விமானம்)

செய்தி:

"The original reports that Iran “shot down” a Lockheed Martin RQ-170 Sentinel appear to be misleading. Iranian news agency reports credited the army’s electronic warfare unit with bringing down the UAV, but apparently in a way that limited the amount of damage on landing or impact."

http://www.flightglobal.com/blogs/the-dewline/2011/12/avtobaza-irans-weapon-in-rq-17/

இம்முறை ஆளில்லாத விமானத்தினை கைப்பற்ற உதவும், ஆனால் பயணிகள் விமானத்தில் பைலட்டுகள் இருக்கிறார்கள், எனவே ஆட்டோ பைலட்டுக்கான சிக்னல்களை அனுப்பி திசைமாற்றினால் ,பைலட்டுகள் இடைமறித்து திசையை மாற்றி ஓட்ட முடியும், மனித இடையீட்டையே விமானம் முதலில் ஏற்கும்.

ஒரு வேளை பைலட்டுகள் முன்னரே செயலிழக்க வைக்கப்பட்டிருந்தால் இம்முறையில் விமானத்தினை கைப்பற்றி ,விரும்பிய இடத்திற்கு ஓட்டி செல்ல முடியும்!

அவ்வாறு யார் செய்திருக்க கூடும்?

அனேகமாக அமெரிக்காவாக இருக்கலாம் என "ஒரு வதந்தி"உலாவுகிறது.ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு  சரியான விடையில்லை.

மேலும் மாலத்தீவில் இருக்கும் சில தீவுகளில் வசிப்பவர்கள்,விமானம் மாயமான அன்று , மிக தாழ்வான உயரத்தில் ஒரு பயணிகள் விமானம் பறந்து சென்றதைப்பார்த்தாகவும் சொல்கிறார்கள்.மாலத்தீவீற்கு அருகில் தான் டீகோ கார்சியா தளமும் உள்ளது.இச்செய்தி மேலும் மர்மத்தினை அதிகரிக்கவே செய்கின்றது.

செய்தி:
"
Whilst the disappearance of the Boeing 777 jet, carrying 239 passengers has left the whole world in bewilderment, several residents of Kuda Huvadhoo told Haveeru on Tuesday that they saw a "low flying jumbo jet" at around 6:15am on March 8."

http://www.zerohedge.com/news/2014-03-18/did-missing-flight-mh370-land-maldives-or-diego-garcia-full-updated-summary

மேலும் இன்னொரு தகவலும் சொல்கிறார்கள் ,மலேசிய விமானத்தில் இன்னெதென அறிவிக்கப்படாத கார்கோ 20 டன்கள் ஏற்றப்பட்டிருந்தது எனவும் அதனைக்கைப்பற்றவே இந்த கடத்தல் விமானியின் துணையுட அல்லது செயலிழக்க செய்துவிட்டு நடைப்பெற்று இருக்க வேண்டும் என்கிறார்கள்.  இதன் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் அல்லது ஏதேனும் தீவிரவாத இயக்கமாகவும் இருக்கலாம், பொருளை எடுத்துக்கொண்டு விமானத்தினை மூழ்கடித்திருக்கலாம்.

கடைசியாக விமானம் காணாமல் போனதாக சொல்லப்படும்  இந்திய சமுத்திரத்தில் உள்ள இடத்தினை ,மலேசியா விமானம் அடையும் பாதையில் இருந்து "டீகோ கார்சியா"சுமார் 1000 கி.மி தொலைவில் தான் உள்ளது. அதே போல விமானம் கடலில் மூழ்கிய இடமும் அமைந்துள்ளது.

(சில இனங்காண இயலாத சிதைவுகள் சேட்டிலைட்டில் சிக்கியுள்ளன) 

சுமார் 1000 கி.மீ சுற்றளவில் பரப்பு உள்ளதே எனலாம், டீகோ கார்சியாவில் இருந்து ஒட்டுமொத்த இந்திய சமுத்திரத்தினையும் "கண்காணிக்கும்"வசதியை அமெரிக்கா நிறுவியுள்ளது.

கடற்பரப்பினையும்,கடலடியில் செல்லும் நீர்மூழ்கிகளையும் கண்காணிக்க , SOSUS, (Sound Surveillance System) மற்றும் Integrated Undersea Surveillance System -insignia"என அமைத்துள்ளது .இதன் மூலம் கடலில் நிகழும் அனைத்து "நடமாட்டங்களையும்"அமெரிக்கா கண்காணிக்கிறது. கடற்பரப்பில் பெரிய பொருள் ஏதேனும் மோதினால் கூட அதன் அதிர்வலைகளை வைத்து என்ன பொருள் எங்கே மோதல் நிகழ்ந்ததது என அமெரிக்காவால் அறிய முடியும்.எனவே அமெரிக்காவிற்கு தெரியாமல் மலேசிய விமானம் "இந்தியக்கடலில் பயணம் செய்திருக்க முடியாது, கடலில் வீழ்ந்தும் இருக்க முடியாது,அப்படி கடலில் மோதியிருக்குமானால் டீகோ கார்சியாவில் பதிவாகிவிடும்.

மேலும் கடலில் ஆங்காங்கு அமெரிக்க கடற்படை கப்பல்கள் உலாவிக்கொண்டே இருக்கின்றன ,அவற்றின் ரேடாரில் இருந்து கண்டிப்பாக "எந்த விமானமும்,கப்பலும்"எளிதில் தப்ப முடியாது.

ஒரு வேளை ஏதோக்காரணத்தினால் மலேசிய விமானம் "டிரான்ஸ்பான்டர்கள்"இல்லாமல் இந்தியக்கடலில் வருகிறது என வைத்துக்கொள்வோம், அமெரிக்க ராணுவம் ஏதோ உளவு விமானம் என நினைத்து "ரிமோட் கண்ட்ரோல்"முறையில் கைப்பற்றி ,டீகோ கார்சியாவில் தரையிறக்க கூட செய்திருக்கும்.



தரையிறக்கிய பிறகு "பயணிகள் விமானம்"என்பதை அறிந்து ,வெளியில் சொன்னால் பிரச்சினை ஆகிவிடும், மேலும் கடத்தியதே திட்டமிட்டு என சொல்லிவிட்டால் என்ன செய்வது என "தடயத்தினை அழிக்க"கூட முயன்றிருக்கலாம்!

கடைசியாக வந்த தகவலின் படி "ஐபிஎம் நிறுவனத்தினை சார்ந்த பொறியாளர் மலேசியா விமானத்தில் பறந்ததாகவும், அவரை கடத்திக்கண்களை கட்டி வைத்துள்ள நிலையில் ஐ போன் மூலம் ஒரு இருண்டப்படத்தினை அனுப்பியுள்ளார் ,அதன் மூலம் கோ-ஆர்டினேட்களை கண்டுப்பிடித்தப்போது அது டீகோ கார்சியா என ஒரு தகவல் உலாவுகின்றது. அது உண்மையான தகவல் அல்ல எனவும் சில இணையத்தளங்கள் சொல்கின்றன.


EMP ATTACK.

Electro magnetic pulse attack , மிக உயர் அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகளை அனுப்பி எந்த ஒரு வாகனத்தின் "மின்னணுக்கட்டுப்பாட்டுக்ருவியையும் செயலிழக்க செய்ய முடியும்.

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யுரியஸ் படத்தில் , வேகமாக செல்லும் காரினை நோக்கி ஒரு "மின்னணு அம்பு"செலுத்தப்படும் ,அது அனுப்பும் சிக்னல்கள் காரினை கட்டுப்படுத்தும் மின்னணுக்கருவிகளை செயலிக்க செய்து , இயங்காமல் முடக்குவதாக காட்டியிருப்பார்கள்.

அக்கருவி கற்பனை என  படம் வந்தக்காலத்தில் சொல்லப்பட்டாலும் அவ்வகை கருவி உண்மையில் உள்ளது. அமெரிக்க ராணூவ பாதுகாப்பு மையங்களிள் இக்கருவி நிறுவப்பட்டிருக்கும் எந்த வாகனமும் தடையை தாண்டி உள் நுழைந்தால் ,தானாக எஞ்சினை நிறுத்தி விடும்.

செய்தி:

"Police forces in Britain and the US have ordered tests of the new system that delivers a blast of radio waves powerful enough to knock out vital engine electronics, making the targeted vehicle stall and slowly come to a stop."

http://www.theguardian.com/science/2004/jul/12/sciencenews.crime

f2f


இதே வகையில்  மலேசியா விமானமும் செயலிழக்க செய்யப்பட்டிருக்கலாம்.

மலேசிய விமானம் ஏதோ ஒரு காரணத்தால் திசை மாறி பறந்தது , இந்தியக்கடலினை அடைந்தது  என வைத்துக்கொள்வோம் , இந்தியக்கடலில் பிரிட்டீஷ் மற்றும் அமெரிக்கா சேர்ந்து ஒரு கடற்படை தளத்தினை டீகோ கார்சியாவில் நடத்துகின்றன. அங்கிருந்துக்கொண்டு வான் மற்றும் கடல் பரப்பு மற்றும் ஆழ்கடலை அவர்கள் கண்காணிக்கிறர்கள்.



டிரான்ஸ்பாண்டர்கள் இல்லாமல் மர்ம பறக்கும் பொருளாக வரும் விமானத்தினை அமெரிக்க ரேடார்கள் கண்டிருக்க கூடும்,  எச்சரிக்கை செய்து பார்த்திருப்பார்கள் ,கேட்காமல் முன்னேறும் நிலையில் சக்தி வாய்ந்த  மின்காந்த அலைகளை அனுப்பி "விமான என்சினை"செயலிழக்க செய்திருக்க கூடும்.

(diego carcia naval base)

பின்னர் மலேசிய அரசு , விமானம் காணாமல் போய்விட்டது என புலம்பியதை உணர்ந்து , தாங்கள் வீழ்த்தியது அவ்விமானம் தான் என அறிந்து , வெளியில் காட்டிக்கொள்ளாமல் ,மவுனம் கூட சாதிக்கலாம்.

இதற்கு முன்னர் 1983 இல் கொரிய பயணிகள் விமானம் அத்துமீறி ரஷ்ய எல்லையில் நுழைந்தது விட்டது அதனை உளவு விமானம் என எண்ணி  ,சுகோய்-15 இன்டெர்செப்டர் மூலம் ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் பயணம் செய்த 269 பயணிகளும் பலியானார்கள்.

செய்தி:

"Korean Air Lines Flight 007 (also known as KAL007 and KE007[note 2]) was a scheduled Korean Air Lines flight from New York City to Seoul via Anchorage. On September 1, 1983, the airliner serving the flight was shot down by a Soviet Su-15 interceptor near Moneron Island, west of Sakhalin Island, in the Sea of Japan. The interceptor's pilot was Major Gennadi Osipovich. All 269 passengers and crew aboard were killed, including Lawrence McDonald, a sitting member of the United States Congress. The aircraft was en route from Anchorage to Seoul when it flew through prohibited Soviet airspace around the time of a U.S. reconnaissance mission.

The Soviet Union initially denied knowledge of the incident,[2] but later admitted the shootdown, claiming that the aircraft was on a spy mission."

http://en.wikipedia.org/wiki/Korean_Air_Lines_Flight_007

இது போல சந்தேகத்தின் பேரில் சுட்டு வீழ்த்தியிருந்தால் அதனை முடிந்த வரையில் மறைக்கத்தான் சம்பந்தப்பட்ட அரசு விரும்பும்.

# கசகஸ்தான் ,அல்லது ஆப்கானுக்கு விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சொன்னால் ,அப்படி செய்ய , இந்தியா,பர்மா, தாய்லாந்து, நேப்பாள் ,சீனா,மங்கோலியா,பாகிஸ்தான் என பல நாட்டின் வானெல்லையை "ரகசியமாக'கடக்க வேண்டும். மற்ற நாடுகளை ஏமாற்றியதாக வைத்துக்கொண்டாலும் ,சீனா அதிதீவீரமாக கண்காணித்து வருகிறது அவர்களை எப்படி ஏமாற்றினார்கள் என்பதற்கு சரியான விளக்கமில்லை.

மலேசிய விமானத்தின் முடிவு தான் என்ன?

கடத்தல் எனில் ,அதன் பின்னணி சர்வதேச அரசியல் காரணமாகவே இருக்க வேண்டும்,எனவே உண்மை எளிதில்  வெளியில் வராது.

விபத்து எனில் சுமார் 6-7 மணி நேரம் பறந்த பின் நிகழாது ,ஏதோ ஒருக்காரணத்திற்காக கடத்தப்பட்டு பாதை மாறி சென்ற விமானத்தினை "சந்தேகத்தின் அடிப்படையில்"சுட்டு வீழ்த்தியிருக்கலாம்.அல்லது சர்வதேச அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு கடத்தி மறைத்தும் வைத்திருக்கலாம்.

இதற்கான விடை அனேகமாக அமெரிக்காவிற்கு தெரியலாம்,அவர்கள் வெளிப்படையாக பேசினால் மட்டுமே உண்மை வெளிவரும்.
-----------------------------------------------


பின்குறிப்பு:


# முடிந்த வரையில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது,பிழை திருத்தம் செய்யப்படவில்லை,விரைவில் செய்யப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி ,கூகிள் மற்றும்

http://www.bbc.co.uk/news/world-middle-east-26706417

# http://www.boeing.com/boeing/commercial/777family/pf/pf_200product.page?

# http://en.wikipedia.org/wiki/Iran%E2%80%93U.S._RQ-170_incident

#http://www.flightglobal.com/blogs/the-dewline/2011/12/avtobaza-irans-weapon-in-rq-17/

#http://beforeitsnews.com/conspiracy-theories/2014/03/flight-mh370-is-at-diego-garcia-heres-the-proof-2461078.html

#http://www.theguardian.com/science/2004/jul/12/sciencenews.crime

#http://channel.nationalgeographic.com/channel/american-blackout/articles/emp-attack/

#http://en.wikipedia.org/wiki/SOSUS

#http://www.theguardian.com/world/2014/mar/24/flight-mh370-inmarsat-aaib-analysis

#http://www.bbc.co.uk/news/magazine-20609795

நன்றி!
***********************

சிரித்து வாழ வேண்டும்!

$
0
0
(சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் ...ஹி...ஹி...!)


# நம்ம படத்துல ஹீரோ பயங்கர மொடாக்குடிகாரன்,ஆனால் பெரிய சாதனைய செஞ்சு ஹீரோயினை அடையுறார்...

அப்படியா படத்தோட பேரு என்ன?

வல்லவனுக்கு "ஃபுல்லும்"ஆயுதம்!

(சரக்கடிக்கிறதுக்கு பதிலா பாட்டிலை எடுத்து மண்டையில அடிச்சிருப்பாங்களோஅவ்வ்)
-----------

(திருஷ்டி "சுத்தி"போடும் போது இந்த சுத்தியால தான் போடுவாய்ங்களோ?)

# கதைப்படி நம்ம படத்துல ஹீரோ "ஒரு கார்ப்பெண்டர்"ஆ நடிக்கிறார்...

ஓ அப்படியா , படத்துக்கு பேரு என்ன?

சுத்தி!


--------------


# இயக்குனர்: சார் படத்துல உங்களுக்கு டபுள் ஆக்ட் ஒருத்தர் ஆறடி ,இன்னொருத்தர் மூனடி தான் உயரம் ,குள்ளமான கேரக்டருக்கு தான் படத்துல "வெயிட் ரோல்"

உலகநடிகர்: ஆஹ் ஆஹ் ...இப்படியான உலகத்தரமான படத்துக்காக தான் காத்திருக்கேன் அப்படியே அசத்திடலாம் , படத்துக்கு என்ன பேரு வச்சிருக்கிங்க?

இயக்குனர்:உத்தம"குள்ளன்"!

--------------
(ஹி..ஹி பூச்சடையாள்!)

சின்னக்கா:இந்தக்காலத்துள்ள பொம்பளைங்களுக்கே இப்படி நீளமா முடி வளர்ரது இல்லையே ,உங்க வீட்டுக்காரருக்கு எப்படி ஆறடி நீளத்துக்கு முடி வளந்தது?

பெரியக்கா:அட நீ வேறக்கா, கோச்சடையான் படம் வர்ர வரைக்கும் முடியே வெட்டிக்க மாட்டேன்னு ஆரம்பிச்சார் ,அது பாட்டுக்கு ஆறடிக்கு சடைப்பின்னி போடுற அளவுக்கு வளந்துடுச்சு,படம் தான் இன்னும் வரக்காணோம் அவ்வ்!
---------------

(கண்ண மூடிப்பார்க்கணுமா அவ்வ்)

# நம்ம படத்துல ஹீரோ, ஹீரோயின் முதல் நடிக்கிற எல்லாருமே கண்ணு தெரியாத கதாபாத்திரங்கள் சார்..

படத்துக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க?

கண்ணை மூடிப்பார்க்கவும்!!!
--------------

# வேட்பாளர்: ஒரு காலத்தில சமூக இணையதளங்களில் எல்லாம் "49-O"போடுங்கனு புரட்சிகரமா கருத்து சொன்னது தப்பா போச்சி!

தொண்டர்: ஏன்?

வேட்பாளர்: இப்போ நானே மறந்து போயிட்ட அந்த "ஓ"போடுங்கள ,மக்கள் இன்னும் மறக்கலை போல, நான் ஓட்டுக்கேட்டு போனால் ,கவலைப்படாதிங்க சார் ,நாங்க "ஓ"போட்டுறோம்னு சொல்லி கடுப்பேத்துறாங்கப்பா அவ்வ்!
-----------------
(ஈ...ஈ ...நெஜமா சிரிப்பே வரலே சும்மா சிரிச்சு வச்சேன்)

# இல்லத்தரசி: எலெக்‌ஷன் கமிஷன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா தேர்தல் நடத்தறேன்னு சொல்லிட்டு செய்யுறது ஆனாலும் ரொம்ப ஓவரா போகுது?

இல்லத்தரசன்: அப்படி என்ன ஓவரா போயிட்டாங்க?

இல்லத்தரசி:காலையில வாசப்பெருக்கலாம்னு ,"தொடைப்பத்த"எடுத்துக்கிட்டு வாசலுக்கு போறேன் , பிரச்சார நேரம் முடிஞ்சு போச்சு ,இனிமே அரசியல் சின்னத்த எல்லாம் பயன்ப்படுத்தக்கூடாதுனு ஒருத்தர் தடுக்கிறார் அவ்வ்!
-----------

# அவரு ஏன் இந்த தேர்தல் செல்லாது மீண்டும் தேர்தல் வைக்கணும்னு வழக்கு போட்டிருக்கார்?

# வாக்குப்பதிவு நடக்கும் இடத்திலிருந்து 100 மீட்டருக்குள் எந்த கட்சி சின்னமும் பயன்ப்படுத்த தடை இருக்கும் போது , பூத்துல இருக்க தேர்தல் அலுவலர்கள் எல்லாம்  காங்கிரஸ் கட்சி சின்னம்"கையோட"பூத்துக்குள்ள எப்படி இருக்கலாம், அது தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி தவறு எனவே "கை"இல்லாதவங்கள வச்சு மறு தேர்தல் நடத்தணும்னு தான் அவ்வ்!

(இப்படி கைய காட்டினாக்கூட கேஸ் போடுவாய்ங்களோ அவ்வ்)
-------

# என்னடி சாம்பார்ல என்னமோ நார் நாரா கிடக்கு?

நீங்க தானே சாப்பாட்டுல நார் சத்து இருக்கணும் அப்போ தான் ஆரோக்கியம்னு சொன்னீங்க, அதான் நல்லா ஆரோக்கியமா இருக்கட்டுமேனு ,தேங்கா நாரு கொஞ்சம் போட்டேன் !!!
--------------

# சமையல் பதிவர்:என்னடி இது காலிஃபிளவர் குருமா? வாயில வைக்கவே முடியல ,ஒரே கசப்பா இருக்கே? வெளெக்கெண்ணைய மறந்து போய் ஊத்திட்டியா?

மனைவி:இப்ப வாய மூடிக்கிட்டு சாப்பிடுறிங்களா, இல்லை நான் சமைச்சத எல்லாம் நீங்க சமைச்சாப்போல "படம் எடுத்து"முகநூலில் போட்டு பேர் வாங்குற ரகசியத்தை உங்க முகநூல் பக்கத்தில் கமெண்ட் போட்டு அம்பலமாக்கட்டுமா?

சமையல் பதிவர்: ஹி...ஹி காலிஃபிளவர் குருமா சூப்பரா இருக்கு அவ்வ்!
------------

#அவள்:உங்க மாமியார் மேல இம்புட்டு பாசமா, அவங்கள மலேசியாவுக்கு விமானத்துல டிக்கெட் போட்டு டூருக்கு அனுப்புற?

இவள்:ஹி...ஹி அதெல்லாம் ஒரு மண்ணுமில்லை, மலேசியா விமானம் தான் காணாமல் போனா கண்டே புடிக்க முடியாதாம் ,அதான் எப்படியாச்சும் காணாம போகட்டும்னு மலேசியாவுக்கு மலேசியா விமானத்துல அனுப்பி வைக்குறேன்!!!

(ஹையோ ...ஹையோ வவ்வாலோட  ஒரே நகைச்சுவையப்பா )

--------------------------

பின்குறிப்பு:

# ஆக்கங்கள் அனைத்தும் அடியேனது சுயநினைவின் படி சுய கற்பனையே , முன்னரே கேள்விப்பட்டது போல இருந்தாலோ அல்லது இயல்பு வாழ்க்கை மாந்தர்களையோ, சம்பவங்களையோ நினைவூட்டினாலோ  அது தோற்றப்பிழையே, அடியேன் பொறுப்பல்ல அது தங்களின் மனப்பிராந்தியாக இருக்கலாம்!

#எனது முந்தைய நகைச்சுவை மாதிரியான சிலப்பதிவுகள், படித்து விட்டு பேதியானால் அடியேன் பொறுப்பல்ல!!!

#சிரிப்பொலி-1

#மொக்கை சிரிப்பொலி-2

#மொக்கை சிரிப்பொலி-3

#காமெடி டைம்

#காமெடி டைம்-2

#அறிவியல் காமெடி

#அரசியல் காமெடி
----------------------------

# படங்கள் உதவி "google images"இணையதளம்,நன்றி!

***************************

தேர்தல்-2014 : ஒரு புதிய பார்வை!

$
0
0
(இந்த வவ்வால் பார்வையே வித்தியாசமா இருக்கே ...ஹி.ஹி)

அரசியல் பதிவு ஒன்னு போட வேண்டும் என நினைத்து ,அவ்வப்பொழுது சில குறிப்புகள் எடுப்பதும் ,பின்னர் குப்பையில் இடுவதுமாக போய்க்கொண்டேயிருந்தது, இன்றாவது அப்பதிவை வெளியிடவில்லை,எனில் ,நமது அரசியல் கணிப்புகளை பின்னர் சொல்வதில் பயனேயில்லை, அதான் இன்று முடிவே சொல்லிட போறாங்களே அப்புறம் என்ன கணிப்பு வேண்டிக்கிடக்கு, சரி நேரா மேட்டருக்கு போவோம்!

அகில இந்திய அளவில் மோடி அலை வீசுது என்கிறார்கள் ,மெரினா பீச்சில் கடல் அலையை தவிர வேற அலை எதுவும் நமக்கு தெரியலை, பிஜேபி என்பது தேசியக்கட்சி எனினும் பல மாநிலங்களில் அடித்தளமே இன்னும் உருவாக்கிக்கொள்ளாத கட்சியாக தான் உள்ளது.

# பிஜேபி செல்வாக்குள்ள மாநிலங்கள்;

குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, ம.பி, டெல்லி, கோவா, இமாச்சால், உ.பி,ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களே, இங்கு தான் பெரும்பாலான தொகுதிகளை வென்றாக வேண்டும்.

தென்னகத்தில் கர்நாடகம் தவிர , கேரளா, தமிழ்நாடு,ஆந்திரா ,புதுவையில் எல்லாம் செல்லாக்காசு.

அதே போல , ஒரிசா, பீகார் , சத்தீஸ்கர் ,மேற்கு வங்கம், ஜார்கண்ட் , மேலும் வட கிழக்கு மாநிலங்கள் ஏழிலும் பெரிதாக செல்வாக்கே இல்லை.இப்பகுதிகளில் எல்லாம் மாநிலத்துக்கு ஒரு எம்.பி வென்றால் அதிசயம்.

எனவே பொதுவாக களப்பணி ஆற்றுதல் ,வாக்கு திரட்டுதல் என செய்தால் மட்டுமே அலையே அடிச்சாலும் வெற்றி கிட்டும் எனவே அடித்தளமே பல மாநிலங்களில் இல்லாத பிஜேபி தனிப்பெரும் மெஜாரிட்டியாக 272 இடங்களை பெற முடியாது( கரிப்பூசிடுவாங்களோ...ஹி...ஹி எனக்கு தான்)

பிஜேபி அதிகப்பட்சம் வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்- சுமார் 170-190 இடங்களே.

கூட்டணிகள் வெல்ல வாய்ப்புள்ள இடங்கள் சுமர் 50 வரையிலே இருக்கும் ,மொத்தமாக கூட்டிக்கழித்து பார்த்தால் 240இடங்களுக்குள் வரக்கூடும்.

# காங்கிரஸ் தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் உள்ளது அதே போல சுமார் 15 மாநிலங்களில் இன்னமும் ஆட்சியில் உள்ளது.

வடக்கிழக்கு மாநிலங்கள் ஏழிலும் நல்ல அடித்தளமும் உள்ளது.

பொதுவாக தென்னக மாநிலங்களில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் இன்னமும் வலுவான சக்தியே ,எனவே அகில இந்திய அளவில் பிஜேபியை விட அடித்தளம் வலுவான கட்சியே.

தொடர் ஊழல் குற்ற சாட்டுகள், தொடர்ந்த்து 10 ஆண்டுகள் ,ஆட்சி எனும் நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிரான  அதிருப்தி என்பவை பலவீனங்களாகும் ,அதுவே பிஜேபியின் பலம், கடந்த பத்தாண்டுகளில் பிஜேபி எதிர்க்கட்சியாக பெரிதாக எதுவுமே சாதிக்கவில்லை , மோடியை திட்டமிட்டு விளம்பரப்படுத்தினாலும் , அவர் அகில இந்திய பிராண்டாக சொல்லிக்கொள்ள தக்க சாதனைகளை எதுவும் செய்யவில்லை.

காங்கிரசின் கோஷ்டி அரசியல்,ஊழல், அதிருப்தி மன நிலை ஆகியவற்றினை கடந்து இம்முறை அதிகப்பட்சம் வெற்றிப்பெற வாய்ப்புள்ள இடங்கள் சுமார் 110-120, குறைந்த பட்சம் 78 இடங்கள்.

தமிழகத்தினை பொறுத்த வரையில்,

அதிமுக

தேர்தலில் முந்திக்கொண்டி களத்தில் குதித்தது முதல் அனைத்திலும் பிறக்கட்சிகளை தனக்கு பின்னால் வர வைத்தார் அம்மையார்,ஆனால் நாற்பதும் நமக்கே எனும் வெற்றி நிலையெல்லாம் இல்லை,

மொத்தமாக கூட்டிக்கழித்து பார்த்தால் 23-24 இடங்கள் அதிகபட்சமாகவும், குறைந்த பட்சம் 17 இடங்கள் வரலாம்.

இந்தளவு இடங்கள் கூட எப்படி வருமெனில் , கடந்த ஆட்சியை விட தேர்தல் வரையில் மின் வெட்டினை சமாளித்து விட்டது ,மேலும் தேர்தலுக்கு வெகு நெருக்கமாக பல இடங்களில் "அத்தியாவசிப்பணிகளைசெய்துக்கொடுத்தது", உ.ம். சென்னை புற நகர்ப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலையே இல்லாத இடங்களில் எல்லாம் தார்ச்சாலை வந்துவிட்டது

(road work on progress)

தேர்தல் காலங்களில் எல்லாம் இப்படி செய்வது தானே என நினைக்கலாம், ஆனால் எனக்கு தெரிஞ்சு 2 சட்ட மன்ற தேர்தல் ,2 நாடாளு மன்ற தேர்தல் வந்து விட்டது ஆனாலும் அவ்விடங்களில் சாலைகளே போடப்படவில்லை, இம்முறை தான் சாலைகள் போடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வசதி என்பதோடு "லேண்ட் வேல்யூ"வேறகூடிப்போச்சு -))

மேலும் சென்னைப்புற நகர்ப்பகுதிகளில் பல மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன, இது வரையில் பேருந்துகள் செல்லாத தடங்களில் எல்லாம் செல்கின்றன.


கூடுவாஞ்சேரி அருகில் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சுமார் 8-10 கி.மி உள் இருக்கும் பகுதி காட்டூர் ,காட்டுப்பாக்கம் , காரணை ,கன்னிவாக்கம் போன்ற பகுதிகளுக்கு எல்லாம் மினி பஸ் ஜிகு ஜிகு என போகுது,முன்னர் எல்லாம் இருசக்கர வாகனத்தில் கூடுவாஞ்சேரி ,அல்ல ஊரப்பக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து , பார்க்கிங்கில் வண்டிய விட்டு தான் நகருக்குள் செல்ல முடியும், இப்போ நேராக காட்டூர் - தாம்பாரம், கன்னிவாக்கம் - தாம்பரம் என மினி பஸ்கள் ஓடுது.


இதனால் சாலை வசதி ,பேருந்து வசதியுள்ள இடங்கள் என சொல்லி ரியல் எஸ்டேட் வேற தூக்குது , மக்களும் ஹேப்பி!!!.

ஒரு சில மினிபஸ்கள் விட்டு சில ஆயிரம் ஓட்டுக்களை உறுதி செய்தாயிற்று ,இப்படி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துலவும் , சில பல ஆயிரங்களில் கூடுதல் வாக்கினை அம்மையார் கைப்பற்றக்கூடும் என்பதால் ,இம்முறை நல்ல முடிவு கிடைக்கும் என தெம்பாக உள்ளார் எனலாம்.

தேர்தல் கமிஷன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என சொன்னதெல்லாம் "காகித அறிக்கை"தான் ,அவர்களும் பார்த்தா "ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்,பூசாதமாதிரியும் இருக்கணும்'என கெடுபிடி போல ஒரு மாதிரி வேலைப்பார்த்து முடித்து விட்டார்கள், வாக்குப்பதிவுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்னரே வாக்களர்களுக்கு ஒரு ஓட்டுக்கு சுமார் 200 அல்லது 300 ரூ பட்டுவாடா ஆகிவிட்டது , கடைசி நாளில் பணப்பட்டுவாடா செய்யலாம் என முயற்சித்து மாட்டியது ,திணறியது எல்லாம் எதிர்க்கட்சிகளே அவ்வ்!

இதில் வேற மேலிடத்தில்  500 ரூ கொடுக்க சொல்லி கொடுத்ததில் அமுக்கிட்டு 300 அல்லது 200 கொடுக்கிறாங்கனு மக்களுக்கு புலம்பல் அவ்வ்.

# திமுக:

மேற் சொன்ன எந்த சாதகங்களும் இல்லை ,மேலும் கடந்த 10 ஆண்டுகளாக  மத்தியில் ஆட்சியில் இருந்தும் 2ஜீ இல்  மட்டுமே "பேர்"வாங்கியிருக்கு மற்றபடி சொல்லிக்கொள்ளும் சாதனைகளே இல்லை என்பதால் மாநில தேர்தல் போல அம்மையாரின் ஆட்சி குறைப்பாடுகளை மட்டுமே சொல்லி வாக்கு கேட்கும் பரிதாப நிலை.

# சகோதர சண்டை, எனவே கட்சியினரில்  சில பிரிவுகள் உருவாகி நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் என்ற மன நிலை இருக்கு.

# பல மாவட்டங்களில்முன்னால் அமைச்சர்களை வேட்பாளர்களின் மேம்படி செலவினை கவனிக்க சொல்லவே ,அவர்கள் நாம ஏன் செலவு செய்து இன்னொருத்தனை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என "கஜானாவை"தொறக்கவேயில்லை, இதனால் வார்டு அளவில் கிடைக்க வேண்டிய தேர்தல் கவனிப்புகள் "இல்லாமல் உடன்ப்பிறப்புகள் பெரிதாக ஆர்வமில்லாமல் சுருண்டு விட்டார்கள்.

ஒரு வார்டுக்கு 10 பேருக்கு கூட தின செலவுக்கு காசு கொடுக்காம , நீப்பாரு அப்பறம் பார்த்துக்கலாம் என சொல்லவே ,பல கிளைச்செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் நைசாக நழுவிட்டார்கள் :-))

எனவே ஊழல் குற்ற சாட்டு, சகோதர சண்டை, ஒருங்கிணைப்பில் தொய்வு , என இம்முறை தேர்தல் களத்தில் திமுக பின் தங்கியே உள்ளது , அதிகப்பட்சமாக 7-9 இடங்களை கைப்பற்றலாம்.

குறைந்த பட்சம் -5.

கூட்டணியில் 1-2 இடங்கள் கிடைத்தால் அதிசயம்.

#பி.ஜேபி அலை எல்லாம் தமிழகத்தில் எடுபடவே இல்லை,

தமிழகத்தில் பிஜேபி அணியில் இருக்கும் கூட்டணிக்கட்சிகளே "நம்மளை தவிர கூட்டணியில்"யாருக்கும் அதிக இடங்கள் கிடைத்து விடக்கூடாது என உட்குத்து அரசியல் செய்வதால் ஒன்னும் பெரிதாக தேற வாய்ப்பில்லை அவ்வ்.

பாமக மற்றும் தேமுதிக   வினரின் ஓட்டுக்கண்டிப்பாக கூட்டணி என்ற முறையில் பரிமாறிக்கொள்ளப்படவேயில்லை.

அதிகப்பட்சம் 2 இடங்கள் கைப்பற்றலாம், ஆனால் அதுவே நிச்சயமில்லை.

# தமிழகத்தினை பொறுத்த வரையில் இத்தேர்தல் இரு பெரும் திராவிடக்கழகங்களின் நேருக்கு நேர் மோதல் , யாருக்கு உண்மையான செல்வாக்கு இருக்கு என இன்று மாலைக்குள் தெரிந்து விடும்!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நம்பகமானதா?

# மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் "நம்பகமானது"அதில் திரிசமன் செய்யவே முடியாது என்கிறார்கள் ,ஆனால் மிக எளிதாக செய்யலாம் என நினைக்கிறேன் ,கீழ்கண்ட முறை எனது  அவதானிப்பே ,பிழை இருக்கலாம்.

ஒரு சுவிட்ச் போர்டில் அருகே மின் விளக்கு ,மின் விசிறி என இரு சுவிட்சுகள் உள்ளது , ஒன்றினை இயக்கினால் விளக்கு எரியும், இன்னொன்று மின் விசிறி என இருக்கு

நாமும் அப்படியே இயக்கி பழகிவிடுகிறோம், ஆனால் அதன் உள் இருக்கும் இணைப்புகளை மாற்றினாலே , மின் விளக்கு சுவிட்சை போட்டால் மின் விசிறி இயங்கும் படி செய்யலாமே?

காண்க படம்.





இதே போல மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் ,வாக்களர்கள் பெயர்கள் அகரவரிசையில் இருக்கும் எனவே ஒருவரின் பித்தானின் இணைப்பினை , மின்னணு வாக்கு எந்திரத்தின் ஐசி உடன் இணைக்கும் சர்க்கியுட்டில் மட்டும் சால்டரிங் செய்து மாற்றி விடலாமே. நமது மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஐ.சி தான் "கை வைக்க முடியாத "read only"வகை, எனவே அதற்குள் செல்லும் இணைப்பில் எந்த பட்டனை மாற்றி இணைத்தாலும் கண்டுக்கொள்ளாது அவ்வ்!


"schematic diagram for EVM"

(சரியான இணைப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம்.)

(குறுக்காக இணைக்கப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு எந்திரம்)


தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள EVM இல் ஐசி மற்றும் நினைவகம் மட்டுமே ஒரு முறை புரோகிராம் செய்த பின் "மாற்றம் செய்ய இயலாத வகையில் , "READ ONLY"ஆக உள்ளது, எனவே ஐ.சிக்கு உள்ளிடு செலுத்தும் ,பித்தான்களினை இரண்டாவது படத்தில் போல மாற்றி இணைத்துவிடலாம், ஆனால் அகர வரிசைப்படி வேட்பாளர்கள் பெயர் ஒன்றிலிருந்து துவங்கும், இதனால் முதல் பித்தானுக்கு நேராக உள்ள வேட்பாளருக்கு அழுத்தினால், அதன் எண்ணிக்கை "ஐசி"இல் இரண்டாவது "நினைவக ஒதுக்கீட்டில்"சேமிப்பாகும். இதனை வாக்களிப்பவர் உணர இயலாது,அவர் அழுத்திய பித்தானுக்கு நேராக "விளக்கு எரிவதை கண்டு வாக்குப்பதிவானது என "திருப்திப்பட்டுக்கொள்ள"மட்டுமே முடியும்.

வாக்கு பதிவு எந்திரத்தில் ,வேட்பாளர் பெயருடன் இணைந்த பித்தான்கள், அதற்கு அருகில் விளக்கு என இருக்கும் அமைப்பு "பேலட் யூனிட்" ஆகும் , அதில் எந்த வரிசை பித்தானை அழுத்தினோம் என காட்டாது, பித்தானை அழுத்தியதும் விளக்கு மட்டுமே எரியும்.
(பேலட் யூனிட் -வரிசை எண் காட்டாது)

கண்ட்ரோல் யூனிட் என ஒன்று தேர்தல் அலுவலரின்  மேசையில் இருக்கும் அதில் தான் வரிசை எண் ,மற்றும் அதற்கு பதிவான வாக்குகளை காட்டும், எனவே பேலட் யூனிட்டில் , இரண்டு பித்தான்களை மாற்றி இணைப்புக்கொடுத்தாலும் , அதற்கான விளக்கு எரியும் என்பதால் ,அச்சின்னத்திற்கு வாக்கு அளித்ததாக தெரியும் ,ஆனால் வாக்குகள் பதிவாவது வரிசை எண்ப்படி என்பதால் , அதனை சரிப்பார்க்க வாக்களரால் முடியாது.

(கண்ட்ரோல் யூனிட்- வரிசை எண் ,பதிவான வாக்கினைக்காட்டும்)


தேர்தல் அலுவலரும் ஏதோ ஒரு வரிசை எண்ணில் வாக்குப்பதிவானதை மட்டுமே உறுதி செய்துக்கொள்வார், வரிசைப்படி இந்த சின்னம் இருக்கு அதில் தான் பதிவானது என்பது அவருக்கு மட்டுமே தெரியும், ஆனால் பித்தான்கள் மாற்றி இணைக்கப்பட்டு ஒன்றை அழுத்தி அது மற்றொன்றில் வாக்குப்பதிவு செய்துள்ளதை அவரும் அறிய இயலாது.

எனவே ஒரு தொகுதியில் "A"கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது எனில் அங்கு வலுவிழந்த இன்னொரு கட்சி "B"க்கு வாக்கு விழுமாறு செய்ய  இரண்டையும் மாற்றி இணைத்தாலே போதும், B இன் வாக்குகள் "A" க்கு போகும் , "A" வாக்குகள்  B க்கு போகும் , ஏதேனும் ஒருக்கட்சிக்கு வாக்குகளே விழாமல் போனால் தான் சந்தேகம் வரும் ஆனால் ஒரு குறைந்த பட்ச வாக்குகள் பதிவாகும் போது சந்தேகமே உருவாகாது. இப்படி மாற்றி இணைக்க , பேலட் யூனிட்டை மட்டுமே திறந்தால் போதும் ,ஐ.சி யூனிட்டில் கையே வைக்க வேண்டாம், இதனை சாதாரணமாக "செல் போன்"பழுதுப்பார்ப்பவர்களை வைத்து சால்டரிங் அயர்ன் மூலம் , பித்தான்களின் சர்க்கியூட் போர்டில் எளிதில் செய்ய இயலும்

வாக்கு எண்ணும் போதும் கண்ட்ரோலில் யூனிட்டில் பதிவான வாக்குகள் வரிசைப்படியே  பிரித்து எண்ணப்படும், அப்பொழுது மாற்றிப்பதிவானதையும் கண்டுப்பிடிக்க இயலாது.

இது எனது சந்தேகம் மட்டுமே, இப்படி செய்ய ஒரு சாத்தியக்கூறுள்ளதாக கருதுகிறேன், இதற்கு  "தேர்தல் அலுவலர்களின்"ஒத்துழைப்பும் தேவை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக தான் காவலுடன் வைத்துள்ளார்கள், ஆனால் அவர்களும் அரசு ஊழியர்களே எனும் நிலையில் ஆளும் அதிகாரம் படைத்தவர்கள் நினைத்தால் 'தில்லு முல்லு"செய்யலாம் என்பதை மறுக்க இயலாது!

EVM= Electronically Void Machine!
-----------

பின் குறிப்பு:

# இன்னும் சில அலசல்கள் ,படங்கள் பின்னர் இணைக்கப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், தேர்தல் ஆணைய இணைய தளம், தி இந்து மற்றும் விக்கி ,நன்றி!
--------------

எல்லாமே அரசியல்: தேர்தல்-2014: ஒரு புதிய பார்வை-2.

$
0
0
(இந்த வவ்வால் மண்டையில் எதாவது "microcontroller"இருக்குமோ? ஹி...ஹி!)


கடந்தப்பதிவில் மின்னணு வாக்கு எந்திரத்தில் எளிய முறையில் "ஏமாற்ற ஒரு வழி இருப்பதை"அலசினேன் ,அதே போல மேலும் பல எளிய மற்றும் உயர் நுட்ப வழிகள் உள்ளன , இதனை நான் ஒன்றும் புதிதாக கண்டுப்பிடித்து சொல்லவில்லை பலரும் இது போல ஆய்வு செய்துள்ளார்கள், அப்படி சொல்லாமல் விடுபட்டு போன வழிகள் சிலவற்றை மட்டுமே அடியேன் அலசி வருகிறேன்.

மேலும் சில வழிமுறைகளை காண்போம்,

தேர்தல் ஆணையம் ,எந்திரத்தின் நம்பகத்தன்மைக்கு சான்றாக சொல்லி வருவது என்னவெனில், அவர்கள் பயன்ப்படுத்தும் மைக்ரோ கண்ட்ரோலர் "masked microcontroller chip"வகை எனவும் ஒரு முறை அதில் இயங்கு மென்ப்பொருள் அல்லது கணினி ஆணைத்தொடரை எழுதிவிட்டு அதனை மூடிவிட்டால் போதும் பின்னர் அதில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது என்பதேயாகும்.

அவர்கள் சொன்னப்படி "EVM "மைக்ரோ கண்ட்ரோலர் என்பது  "தீண்டா திருமேனியாகவே"இருக்கட்டும் , ஆனால் எந்திரத்தில் திரிசமன் செய்ய அதனை தொடாமலே காரியத்தினை முடிக்கலாம், அப்படியான ஒரு முறை தான்"நடுவே ஒரு நாட்டாமை"(man in the middle)முறையாகும்.

அது எப்படி எனக்காண்போம்,

வாக்கு எந்திரத்தில் இரு பகுதிகள் உள்ளன என அறிவோம்,



1) பேலட் யூனிட்- இது வாக்கு பதிவு கூண்டில் இருக்கும்.

இதில் வரிசையாக வேட்பாளர்கள் பெயர் அகரவரிசையில் ஒட்டப்ப்பட்டு இருக்கும், ஒவ்வொரு பெயருக்கும் எதிரில் ஒரு சிவப்பு லெட் விளக்கு, நீல நிற பித்தான் இருக்கும்,அதனை அழுத்தி வாக்களிக்க வேண்டும், அப்பொழுது சிவப்பு விளக்கு ஒளிறும், மேலும் பீங்க் என சனநாயக சங்கு ஊதுவது போல சத்தமும் வரும் ,அதுவே நாம் வாக்களித்து விட்டோம் என்பதற்கான அத்தாட்சி , மற்றபடி வேறு எவ்வகையிலும் வாக்களிக்கப்பட்டதை நாம் உறுதி செய்யவியலாது.

2)கண்ட்ரோல் யூனிட்.

இது வாக்குப்பதிவினை நடத்தும் அதிகாரியின் முன்னால் மேசையில் இருக்கும்.

ஒரு வாக்காளர் வாக்களிக்க தயாராகும் போது "ரெடி"என ஒரு பித்தானை அழுத்தி ,பேலட் யூனிட் செயல்பட தயாராக்குவார். அதன் பின்னரே பேலட் யூனிட்டில் பித்தானை அழுத்த இயலும், ஒரு முறை வாக்களித்தவுடன் , அடுத்தும் அவரே இரண்டாவது வாக்களிக்க இயலாதவாறு "நிறுத்தும்"வசதியும் இந்த யூனிட்டில் தான் உள்ளது.

ஒரு முறை பேலட் யூனிட்டில் பித்தானை அழுத்தியவுடன் அடுத்து அழுத்த சுமார் 10 நொடிகள் தேவைப்படும் வகையில் "டைம் டிலே"மெக்கானிசம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து அடுத்து ரெடி பித்தானை அழுத்திக்கொண்டே வாக்களித்தாலும் ஒரு நிமிடத்தில் 5 ஓட்டுகளையே பதிவு செய்ய இயலும், இது மெசினை வன்முறையாளர்கள் கைப்பற்றி  கள்ள ஓட்டினை போடும் வேகத்தினை  குறைக்கவே.

# ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகள் அனைத்தும் இந்த கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள "non removable memory"இல் தான் சேமிக்கப்படும், இதுவே முக்கியமான பாகம் ஆகும், பேலட் யூனிட் என்பது வெறும் "உள்ளீடு"கருவி மட்டுமே.

இதெல்லாம் சரி ,இரண்டு கருவிகளும் தனி தனியாக இருக்கு ,இவற்றிற்கிடையே எப்படி "தகவல் பரிமாற்றம்"நிகழும் என ஒரு கேள்வி வருகிறதல்லவா?

இணைப்பில்லாமல் தகவல் பரிமாற்றம் சாத்தியமல்ல தானே.எனவே இரண்டு கருவிகளும் ஒரு "ரிப்பன் கேபிள்"மூலம் இணைக்கப்பட்டுள்ளது ,இதன் நீளம் 5 மீட்டர்.

இப்படி இணைப்பதும் ஒரு வகை நெட் ஒர்க் ஆகும், வாக்கு எந்திரமும் அப்படி நெட் ஒர்க் செய்யப்பட்டுள்ளது எனலாம், இதற்கு பயன்ப்படும் நெட் ஒர்க் புரோட்டோ காலின் பெயர் - RS-485 ஆகும்.



ரிப்பன் கேபிளை கண்ட்ரோல் யூனிட் உடன் இணைக்கும் சாக்கெட் வகை  RS-485 ஆகும் ,அதன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

protocol என சொல்லிக்கொண்டாலும்  TCP/IP போல எல்லாம் கிடையாது, உண்மையில் இது இணைப்பிற்கான ஒரு தர நிர்ணயம் தான் , வெறுமனே "ஓட்டையில் சொறுகி"இயக்கிக்கொள்ளும் "plug and play"வகை இணைப்பே.

*RS= Recommended Standard!


கண்ட்ரோல் யூனிட்டும் ,பேலட் யூனிட்டும் , RS-485 சாக்கெட் உள்ள ஒரு 5 மீட்டர் நீளமுள்ள   உள்ள ரிப்பன் கேபிள் மூலம் இணைக்கப்பட்டு தொடர்பு கொள்கிறது.

எந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலரில் ஒரு எளிமையான அல்காரிதம் அசம்ப்ளி லாங்க்வேஜில் எழுதப்பட்டு பதியப்பட்டுள்ளது ,அதை தவிர எந்திரத்தில் வேறு கணினி நிரல்களே இல்லை,எனவே இரு பாகங்களுக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றம் "என்கிரைப்ட்"செய்யப்படாமல் மட்டுமே நிகழ்கிறது. தேர்தல் ஆணையமும் என்கிரைப்ட் செய்யும் வசதி இருப்பதாக சொல்லவில்லை.

இங்கே தான் நடுவில நாட்டாமை எனப்படும்"man in the middle"வருகிறார்.

இவரோட வேலை ஒட்டுக்கேட்பது அல்லது தகவலை திருத்துவது/திருடுவது ஆகும், இது எப்படி எனப்பார்க்கலாம்.

வழக்கமாக இரு கணினி இடையே தகவல் பரிமாறும் போது என்கிரைப்ட் செய்யப்படாமல் இருந்தால் , அத்தகவல்களை இடையில் யார் வேண்டுமானாலும் கைப்பற்றி படிக்க இயலும், இவ்வாறு படிக்க இயலாமல் என்கிரைப்ட் செய்யப்பட்டு தகவல் பரிமாறும் இணைய தளங்களை  செக்கியூர் செர்வர்  இணைய தளங்கள் என தனியாக குறிப்பிடுவார்கள், அத்தளங்களின் முகவரி https:// என ஆரம்பிக்கும், பிலாக்கர் போன்றவற்றில் லாக்கின் செய்யும் தளம் இவ்வாறு இருப்பதை காணலாம்.

என்கிரைப்ஷன் விளக்க படம்:

(senders message encrypted with public key-receiver decrypted with private key)

கண்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட் இடையே என்கிரைப்ஷனே இல்லை என்பதால் , பரிமாறப்படும் தகவலை எளிதில் கைப்பற்றி படிக்க இயலும், அதற்கு தகவல் அனுப்பும் பேலட் யூனிட்டிலோ அல்லது தகவல் பெறும் கண்ட்ரோல் யூனிட்டிலோ அல்லது இரண்டுக்கும் நடுவில் ரிப்பன் கேபிளிலோ ஒட்டுக்கேட்கும் கருவியினை பொருத்தினால் போதும்.

பேலட் யூனிட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் முழுக்க "அரக்கு சீல் வச்சு , பேப்பர்லாம் ஒட்டி ,நூல் போட்டு கட்டி "பாதுகாப்பாக வச்சிருப்பாங்கலாம், எனவே யாராவது திருப்புளி வச்சு நட்டைக்கழட்டி டப்பாவ தொறந்தால் "தொறந்தாச்சு என்ற"உண்மையை கண்டுப்புடிச்சுடுவாங்களாம் , எனவே அதுக்கு பயந்துக்கிட்டே யாரும் டப்பாவ தொறக்க மாட்டாங்க ,ரொம்ப நல்ல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன  என சிரிக்காமல் விளக்குறாங்க தேர்தல் ஆணைய அதிகாரிகள்,சரி அப்படியே வச்சிப்போம், ரெண்டு எந்திரப்பாகங்களையும் திறக்கவில்லை அப்பவும் தகவலை திருட முடியாதா என்றால் முடியுமே!!!

எப்படி எனில் "இணைக்கும் ரிப்பன் கேபிள்"தான் அம்போனு அனாமத்தா சீல் வைக்காம கிடக்கே ,அங்க நடுவில நாட்டாமைய நிக்க வைக்கலாம் அவ்வ்!

நாட்டாமை எப்படி தீர்ப்பை மாத்தி எழுதுறார் என்பதை புரிந்துக்கொள்ள அனைவருக்கும் நன்கு தெரிந்த உதாரணம் ஒன்றினைப்பார்ப்போம்.

சாதாரணமாக நாம் பயன்ப்படுத்தும் கணினியில் ஏதேனும் ஒரு தகவலை பதிய என்ன செய்கிறோம் , உளிய எடுத்து செதுக்கவோ இல்லை பேனா எடுத்து எழுதவோ செய்வதில்லை, ஒரு தட்டச்சு விசைப்பலகையை இணைத்து அதில் தகவலை உள்ளீடு செய்கிறோம்.

விசைப்பலகையில் a,b,c,d ... or A,B.C,D... என ஆங்கில எழுத்துக்களும், 1,2,3,4... என எண்களும் ,@,#,& ,* ,? என பலக்குறியீடுகளும் கீ களின் மேல் பொறிக்கப்பட்டிருக்கு ,அதனை அழுத்தினால் திரையில் "சம்பந்தப்பட்ட"வடிவங்கள் தோன்றுகின்றவே அது எப்படி ?

(அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது- K/B controller)

எப்படி என்றால் விசைப்பலகையின் உள்ளேயும் மைக்ரோ கண்ரோலர் உள்ளது ,அதில் ஒவ்வொரு எழுத்துக்கும் என ஒரு "ASCII code"( American Standard Code for Information Interchange) மதிப்பினை கொடுத்துள்ளார்கள்.மொத்தம் 127 ascii code values.

"a"என்ற  key ஐ அழுத்தினால் அதற்கு என ஒதுக்கப்பட்ட "ASCII code" மதிப்பான "097"என்ற டெசிமல் வேல்யுவினை கணினிக்கு அனுப்பும்.

கணினியில் "the Microsoft Direct Input Keyboard Device"என்ற ஒரு பிரிவு மென்பொருளில் இதற்கென இயங்குகிறது( இயங்கு தளத்தில் வடிவமைச்சிருப்பாங்க)அதில் விசைப்பலகையின் எல்லா கீக்களுக்கும் மதிப்பு கொடுக்கப்பட்டு இருக்கும், "ASCII code"  மதிப்புக்கு எந்த எழுத்து எனப்பார்க்கும், அதனை திரையில் காட்ட கேரக்டர் மேப்பிங்கில் "அந்த எழுத்தின் வடிவை தேடும்"(glype) அதை தான் "ஃபான்ட்"என்கிறோம்.

"097"என்ற எண்ணுக்கு "a" என கண்டுப்பிடிக்கும்,  கேரக்டர் மேப்பிங்கில் "a" எழுத்தினை அதே மதிப்பினை பெயராகக்கொண்டு சேமித்து வைக்கப்பட்டிருக்கும், அதாவது நாம் பயன்ப்படுத்தும் ஃபாண்டில் இருக்கும் ஒவ்வொரு எழுத்துருவும் "ASCII code"  பெயரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

அதாவது ஒவ்வொரு எழுத்துருவும்(glype)  ஒரு சிறிய படம் ஆகும்,அதன் கோப்பு பெயர் அதற்கான "ASCII code"   ஆகும்.

கவனிக்க:

இங்கே சுருக்கமாக சொல்ல ""ASCII code"   ஒன்றை மட்டுமே சொல்கிறேன் ,ஆனால் பைனரி,ஹெக்சா டெசிமல், யுனிகோட் என அனைத்து கோடிங் மதிப்பிலும் எழுத்துரு கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும்.

கொரியர் ,டைம்ஸ் நியு ரோமன் என பல ஃபாண்ட்கள் உள்ளதல்லவா அவை எல்லாமே எழுத்தின் வடிவங்களை சிறிய படங்களாக மாற்றி அவற்றிற்கு ""ASCII code"   கொடுத்து சேமிக்கப்பட்டவையே.

நாம் கூட வித விதமான "ஸ்டைலில் எழுதி"ஸ்கேன் செய்து தனி தனி எழுத்துக்களாக எல்லாவற்றையும் படங்களாக சேமித்து "ASCII code"   கொடுத்து விட்டால் போதும் நாமே உருவாக்கிய ஃபான்ட் எனலாம், இப்படித்தான் பல வகையான ஃபாண்ட்கள் உருவாக்கப்படுகின்றன. "font forge"என்ற மென்ப்பொருள் இலவசமாக கூட கிடைக்கிறது அதனை வைத்து உருவாக்கலாம்.

unicode எனில் அதன் மதிப்பினை எழுத்துருவுக்கு கொடுக்க வேண்டும்.

கேரக்டர் மேப்பிங் படம்.



இப்போது கணினியில் உள்ளீடு செய்யப்பட்டதை இயங்கு  தளம் எப்படி மீண்டும் உருவாக்கி திரையில் காட்டுகிறது எனப்பார்த்தோம், திரையில் காட்டுவதை சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.

இதே போல தான் வாக்குப்பதிவு எந்திரத்திலும் 'பேலட் யூனிட்"ஒரு தட்டச்சு விசைப்பலகையாக செயல்ப்படுகிறது.

அது அனுப்பும் தகவல் என்னவெனில்,

ஒன்றாம் எண் பித்தான் என அதன் வரிசை எண்ணின் மதிப்பும்,ஒரு முறை அழுத்தப்பட்டது என்பதற்கான குறியீட்டு மதிப்பும் மட்டுமே ஆகும், அதே போல அனைத்து பித்தான்களுக்கும் நடைபெறும்.

இதனை பேலட் யூனிட்டில் இருக்கும் ஒரு சிறிய மைக்ரோ கண்ட்ரோலர் செய்யும். அங்கிருந்து தகவல் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் யூனிட்டுக்கு சென்று "கணினியில்"கேரக்டர் மேப்பிங்கில்"தேடி "எழுத்துருவை காட்டுவது போல , செவன் செக்மெண்ட் டிஸ்ப்ளேயில் காட்டும் ,அதனையே நினைவகத்திலும் சேமித்து வைத்துக்கொள்கிறது.

இது வரைக்கும் எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு இதுல என்ன குத்தம் கண்டுப்பிடிச்சேனு ,பொங்காதிங்க , கொஞ்சம் நல்லா புரியிறாப்போல சொல்லணும்னு தான் இம்புட்டு "சபினா"போட்டு விளக்குறேன் அவ்வ்.

இப்போ ,மீண்டும் நம்ம கணினிக்கே வருவோம், ஆங்கில விசைப்பலகையில் ஆங்கில எழுத்தினை அமுக்கினால் அதன் "ASCII code"  மதிப்பினை அனுப்புதகிறது ,கணினி அதனை காட்டுகின்றது, ஆனால் NHM writer அல்லது  e-கலப்பையை நிறுவி விட்டு தமிழ் என தேர்வு செய்து , "a"என அமுக்கினால் எப்படி "அ"என மொழி மாற்றி காட்டுகிறது என யோசித்து இருப்பீர்களா?

அதான் யுனிக்கோட் டிரான்ஸ்லிட்டரேஷன் டைப்பிங் அப்படித்தான் காட்டும் என சொல்லிடலாம் , அப்படிக்காட்டணும் என கணினிக்கு என்ன அவசியமா?

இதன் விளக்கம் தான் மொழி மாற்று உள்ளீடு மென்பொருட்கள் உருவாக்கத்தின் அடிப்படை ஆகும்.

யுனிக்கோட் முறையில் ஒவ்வொரு மொழியின் எழுத்துக்களுக்கும் அதற்கென ஒதுக்கப்பட்ட  Unicode block இல் குறிப்பிட்ட இடம் ,எண்ணிக்கையில் மதிப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.தமிழுக்கு என 128 (72+56) இடங்களை கொடுத்திருக்கிறார்கள் , அதில் "அ"என்ற எழுத்துக்கு என்ன மதிப்பெனில் "0B85"ஆகும்.

இப்பொழுது "a"என விசைப்பலகையில் அழுத்தினால் "ASCII code"  மதிப்பில் 097 என அனுப்பாமல் ,யுனிக்கோடில் "0B85" என "அ"மதிப்பினை விசைப்பலகை அனுப்பும் படி செய்துவிட்டால் போதும், கணினியில் "அ"தெரியும், ஆனால் என்ன செய்ய விசைப்பலகை மைக்ரோ கண்ட்ரோலர் ஏற்கனவே புரோகிராம் செய்யப்ப்பட்டு சீல் வச்சிட்டாங்களே எனவே விசைப்பலகையில் யூனிக்கோட்டினை புகுத்த முடியாதே அவ்வ்.

இதுக்கு மாற்று என்னவெனில் , கணினியில் இருக்கும் "எழுத்துரு மேப்பினை" நமது மொழிக்கு ஏற்ப திருத்துவது தான் வழியாகும்.

அப்படி திருத்த உதவுவது தான் எ -கலப்பை ,NHM writer போன்ற யுனிகோட் தமிழ் எழுதிகள்.

இந்த தமிழ் எழுதிகளை நிறுவியதும் அவை மைக்ரோ சாப்ட் டைரக்ட் கீ யின் கேரக்டர் மேப்பிங்கில் , ஆங்கில கேரக்டர்களுக்கு உண்டான மதிப்பிற்கு பதில் தமிழ் எழுத்துக்களுக்கான யுனிகோட் மதிப்பினை கொடுக்கும்.



அதாவது "a" = 097 என விசைப்பலகை அனுப்பினால் அதற்கு சப்ஸ்டிடியூட்டாக யுனிக்கோட்டில் ""0B85" என்ற மதிப்பினை கேரக்டர் மேப்பில் கொடுக்கும், அதற்கான எழுத்துரு என்ன என கணினி "ஃபான்ட் ஃபோல்டரில்"தேடிப்பார்க்கும் அங்கே "அ"எழுத்து "0B85" என்ற பெயரில் இருக்கும் அதனை இழுத்து வந்து திரையில் போடும்,நாமும்"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி "..என சரஸ்வதி சபதம் வித்யாபதிபோல ஒரே நாளில் தமிழ்ப்புலமைப்பெற்று பதிவு எழுத ஆரம்பிச்சுடுவோம் -))

இதன் மூலம் அடியேன் என்ன சொல்ல வருகிறேன் என்றால் , கணினியின் மென்ப்பொருள் வழக்கமாக செய்யும் வேலையை இடையில் ஒரு மென்ப்பொருளை போட்டு மாத்தி செய்ய வைக்கிறோம், மற்றபடி அதே கீ போர்ட், அதே கணினி  தான்.

NOTE:

ஆஸ்கி அல்லது யுனிக்கோடின் மதிப்பு தெரிந்தால் நேரடியாக உள்ளிடு செய்தும் தட்டச்சு செய்யலாம்.

Inserting ASCII characters


To insert an ASCII character, press and hold down ALT while typing the character code. For example, to insert the degree (º) symbol, press and hold down ALT while typing 0176 on the numeric keypad.
 NOTE   You must use the numeric keypad to type the numbers and not the keyboard. Make sure that the NUM LOCK key is on if your keyboard requires it to type numbers on the numeric keypad.

Inserting Unicode characters

To insert a Unicode character, type the character code, press ALT, and then press X. For example, to type a dollar symbol ($), type 0024, press ALT, and then press X. For more Unicode character codes, see Unicode character code charts by script.
 IMPORTANT   Some of the Microsoft Office programs, such as PowerPoint and InfoPath, cannot convert Unicode codes to characters. If you need a Unicode character and are using one of the programs that doesn't support Unicode characters, use the Character Map to enter the character(s) that you need.
 NOTES 
  • You must use the numeric keypad to type the numbers and not the keyboard. Make sure that the NUM LOCK key is on if your keyboard requires it to type numbers on the numeric keypad.
  • If you have trouble getting the Unicode to convert to your character, type the code using the numeric keypad, select the code, and then click ALT+X.
மூலம்:

http://office.microsoft.com/en-in/onenote-help/insert-ascii-or-unicode-latin-based-symbols-and-characters-HA010167539.aspx

ASCII Table:


Unicode table:


இவ்வாறு செய்ய இயலக் காரணம் கணினி ஒரு மென்ப்பொருளை நிறுவ அனுமதிக்குது. அதே சமயம் வாக்கு எந்திரம் இவ்வாறு அனுமதிக்காது என சொல்கிறார்கள்.

வாக்கு எந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலருக்குள் "தகவல் போனப்பிறகு மாற்ற முடியாது"என்பதை ஏற்றுக்கொள்வோம், இப்போ போகும் வழியில் நாம் விரும்பிய மென்ப்பொருளை நிறுவி மாற்றலாமே!

NHM writerஎப்படி"a"வை ஆ என  மாற்றுதோ அதே போல பேலட் யூனிட்டில் உள்ள பித்தான் ஒன்று அனுப்பும் ஓட்டினை பித்தான் இரண்டு அனுப்பும் ஓட்டாக  அடையாளம் மாற்றும் ஒரு அல்காரிதம் உருவாக்கி அதனை ஒரு தனித்தியங்கும் ஐ.சியில் நிறுவி ஒரு அடாப்டர் போல உருவாக்கலாம், அதனை கேபிளில் ஏதேனும் ஒரு இடத்தில் நிறுவிவிட்டால் போதும்,பேலட் யூனிட் அனுப்பும் தகவலை இடைமறித்து , ஒன்றை இரண்டாக மாற்றி கன்ட்ரோல் யூனிட்டுக்கு அனுப்பும் அவ்ளோ தான் வேலை ஓவர்.

இப்படி உருவாக்கின அடாப்டரை ரிப்பன் கேபிளின் கனெக்டரின் ஒரு முனையில் இணைப்பது போல செய்து அதனை கண்ட்ரோல் யூனிட் உடன் இணைத்து விட்டால் போதும்.

வாக்குப்பதிவு முடிந்ததும் அடாப்டரை கழட்டி வைத்துக்கொண்டு , மெசின்களை மட்டும் பக்குவமாக சீல் செய்து அனுப்பிடலாம்.

இப்படி இடையில் ஒரு அடாப்டரை மாட்டியிருப்பதை பூத்தில் உள்ளவர்கள் யாராவது விஷயம் தெரிந்து கேட்டால் தான் உண்டு, எத்தனை பூத் ஏஜண்டுகளுக்கு இந்த விவரம்லாம்     தெரியும்?

அப்படியே கேட்டாலும் இப்படித்தான் மாட்டணும் இல்லைனா மெசின் வேலை செய்யாது என மிரட்டலாக சொன்னால் போதும் ,அரசு அதிகாரி தப்பாவா சொல்லப்போறார் , நமக்கேன் வம்பு என ஒதுங்கிடுவார்கள்.

#இப்படி செய்வதன் மூலம் மெசின்களை திறக்கவோ , இல்லை சேதமுண்டாக்கவோ தேவையில்லை எனவே அடையாளம் காணவும் இயலாது.

# மாக் போல் நடக்குமே அதில் தெரியாதா என முரளி போல சிலர் கேட்கக்கூடும், மாக் போல் முடித்து விட்டு , மெசினை அட்ஜெஸ்ட் செய்வது போல , கேபிளின் RS.485 jack உடன் அடாப்டரை மீண்டும் மாட்டிவிட்டு இயக்கினால் போதும்.

# தேர்தல் ஆணையம் வழங்கும் வழிக்காட்டுதல் புத்தகத்தில் "கட்சிகளின் பூத் ஏஜண்டுகள்"கேபிள் உட்பட அனைத்தையும் பரிசோதிக்கலாம் என சொல்லி இருக்கிறது,ஆனால் பெரும்பாலும் மேலோட்டமாக பார்ப்பதோடு சரி, மேலும் அவ்வப்போது எந்திரங்கள் செயல்ப்படாமல் "ஜாம்"ஆகி நிற்பதும் பின்னர் அங்கே இங்கே தட்டி ,அமுக்கி சரி செய்வதும் வெகு சகஜம் என்பதால் , வாக்குப்பதிவு நடந்து வரும் வேளையில் ஏதோ பழுதினை சரி செய்வது போல "ரகசியமாக "ஒரு அடாப்டரை செறுகி விட்டு , வாக்குப்பதிவினை திசை திருப்பிவிடலாம்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் அடாப்டரை பிரித்தெடுத்து கொண்டு ,தேர்தல் ஆணைய தளவாடங்களை மட்டும் பேக் செய்துக்கொள்ளலாம்.

# இந்த அடாப்டரின் அளவு மிக சிறியதாக ஒரு பென் டிரைவ் அளவிலோ அல்லது அதனை விட சிறியதாகவோ தயாரிக்க முடியும்.

#ஒரு லோக் சபா தொகுதிக்கு சுமார் 1200 -1500 பூத்துக்கள் தான் , அதில் ஒரு 100 கிராமப்புர பூத்துக்களாக பார்த்து தேர்வு செய்து , தேர்தல் அலுவலர்களை மடக்கி "அடாப்டர்"மாட்டி தேர்தலை நடத்துவது "சர்வ வல்லமை'படைத்த ஆளுங்கட்சியால் முடியாதா என்ன?

ஒரு பூத்துக்கு அதிக பட்சம் 1500 ஓட்டுக்கள், சராசரியாக 1000 ஓட்டு என வைத்துக்கொண்டாலும் 100 பூத்தில்  சுமார் ஒரு லட்சம் ஓட்டுகளில் விளையாடலாம், அதுவே தேர்தல் முடிவுகளை சாதகமாக்க போதுமே?

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேகமாகவும் ,எளிதாகவும் இருப்பதால் மட்டுமே அதனை பயன்ப்படுத்த காரணமே அன்றி ,அதன் பாதுகாப்பு அம்சம் காரணமல்ல, சுப்ரீம் கோர்ட் இதனை புரிந்துக்கொண்டு , 2014 லோக் சபா தேர்தலிலேயே "வாக்களிப்பினை பிரிண்ட் அவுட்"எடுக்கும் வசதியுள்ள மெசின்களை பயன்ப்படுத்த சொல்லி அறிவுறுத்தியது ,ஆனால் போதுமான எந்திரங்கள் தயாரிக்க அவகாசம் இல்லை என ஆணையம் பழைய முறையிலேயே செயல்ப்பட்டது.

# மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான பரிசோதனைப்பற்றி ரெடிப் இணையத்தளத்தில் வந்த கட்டுரை:

வாக்குப்பதிவு துவங்கும் முன்னரே "தொகுதி வாரியாக பதிவான வாக்கு, வெற்றிப்பெற்ற வேட்பாளர் என தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் "சில ஃபைல்கள்"சேமித்து வைக்கப்பட்டிருந்ததாம், முடிவு வரும் போது தேதியை மட்டும் மாற்றிவிட்டு வெளியிட்டார்கள் என சொல்கிறது.

"Concerns about the Indian EVMs were raised during the 2009 election in part as a result of an astounding discovery on the Election Commission of India Web site. Dr Anupam Saraph, at the time chief information officer for the city of Pune, and Professor M D Nalapat, vice-chair of the Manipal Advanced Research Group, discovered files on the ECI Web site that seemed to show election results days before votes were actually cast and counted.

India's 2009 elections were held in five phases, running from April 16 to May 13. Counting was not supposed to begin until all the phases were complete. Before the voting started, Saraph and Nalapat decided to track the elections and create a wiki for constituencies and candidates, with data sourced from Excel files on the ECI Web site."


(ஹரி கே.பிரசாத்)

Subsequently, a team of IT specialists, including J Alex Halderman from the University of Michigan, Electronic Frontier Foundation Pioneer Award winner Hari K Prasad, and Dutch Internet pioneer Rop Gonggrijp, used an actual Indian EVM to demonstrate two ways they could be hacked.
As Florida voters (and watchers of Scandal know, often elections come down to just a few precincts in a few constituencies. Those wishing to swing an election need only manipulate a few well-chosen machines. Less than that if the goal is just to ensure specific people gain or maintain their seats.
சுட்டி 

http://www.rediff.com/news/column/ls-election-how-secure-are-the-evms/20140515.htm

#உச்ச நீதிமன்ற ஆணை:

//India ordered to introduce 'paper trail' in electronic voting machines
India’s Supreme Court has directed the country’s Election Commission to introduce a paper backup of votes cast through electronic voting machines, but allowed the commission to introduce it in stages during general elections next year.//

சுட்டி:

http://www.pcworld.com/article/2053800/india-ordered-to-introduce-paper-trail-in-electronic-voting-machines.html


(EVM with printer)

# மேகலாயாவில் பிரிண்ட் அவுட்" EVM"சோதனை செய்யப்பட்டுள்ளது.

The two Assembly constituencies, situated in Meghalaya’s East Khasi Hills district, were chosen to be the testing grounds for the newly-developed Voter Verifiable Paper Audit Trail (VVPAT) to improve authenticity during India’s expensive and extensive electoral battles.
The VVPAT is an independent verification system for voting machines designed to allow voters to verify that their votes were cast correctly. The technology also provides room to detect possible election fraud or malfunction, and to audit the stored electronic results.
The VVPAT, used by South American countries, has been developed by Bharat Electrical Ltd (BEL) and Electronic Corporation of India (ECIL).

சுட்டி:

http://www.telegraphindia.com/1110727/jsp/northeast/story_14292680.jsp

# கேரளாவில் பிரிண்ட் அவுட் EVM சோதனை செய்யப்பட்டுள்ளது.

The counting of votes of the Voter Verifiable Paper Audit Trail (VVPAT) mock poll held on Sunday in 36 polling booths in the Vattiyoorkavu Assembly constituency took place at the District Collectorate here on Monday. The votes in the electronic voting machines were counted first.
The printed paper ballot slips stored in the printers and those deposited by the voters in ballot boxes were counted and tallied with the number of votes recorded for each ‘candidate' in the respective EVMs. Except for some minor differences noticed in some booths, the votes registered in the EVMs and those printed in the printers tallied, a press note quoting the Chief Electoral Officer said.
சுட்டி:
http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/article2295753.ece


# இந்த லோக்சபா தேர்தலில்,காந்தி நகரில் "பிரிண்ட் அவுட் வசதி"அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 "Voter Verifiable Paper Audit Trail (VVPAT) will be used in Gandhinagar Lok Sabha among the seven seats of the country," said  of Gujarat .

VVPAT has to be attached with the Electronic Voting Machine (EVM), which can generate a slip immediately after a voter casts his/her vote by pressing a button.

சுட்டி

http://www.business-standard.com/article/elections-2014/ls-polls-voters-to-get-automated-receipts-at-gandhinagar-114042901134_1.html

#  சுப்ரமணியம் சுவாமியி "தி இந்து நாளேட்டில்"எழுதிய கட்டுரை:

THE DEMONSTRATION

On September 3, 2009, I went to Nirvachan Bhavan along with Vemuru Hari Prasad, a software specialist from Hyderabad, to demonstrate that EVMs can indeed be tampered with. (Dr. Prasad has since been arrested.)
The proceedings at Nirvachan Bhavan were videotaped by the ECI, in the presence of officials of the Electronics Corporation of India Limited (ECIL) and Bharat Electronics Limited (BEL), which manufacture EVMs. But the ECI has refused to provide me a copy of the recording made.
Dr. Hari Prasad was given an EVM and asked to give a demonstration. He efficiently went about seeking to prove that it could be tampered with. When he was in the final stage of his work, suddenly the ECIL and BEL representatives began to protest, and claimed that he was violating the companies'‘intellectual property rights'.
....

The ECI must cut its losses and agree to a paper receipt. If it cannot arrange that, we should return to ballot papers. Ballot papers are riggable at a ‘retail' level; but with EVMs, an entire election can be stolen with a chip.
(Dr. Subramanian Swamy is a former Union Minister for Law and Justice.)
சுட்டி:
http://www.thehindu.com/opinion/op-ed/the-problem-with-evms/article607744.ece

இதில் உள்ள முரண் நகை என்னவெனில் உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்காரணம் , சுப்பிரமணியம் சுவாமி ,ஹரிபிரசாத் என்பவர் செய்த ஆய்வின் அடிப்படையில் அவருடன் இணைந்து  போட்ட வழக்கே ஆகும் கூடுதலாக வி.வி.ராவ்மற்றும் Rajendra Satyanarayan Gilda என்பவர்களும் வழக்கு போட்டிருந்தார்கள். இதில் ஹரிபிரசாத் என்பவரை மட்டும் தேர்தல் ஆணையம் பின்னர் மிரட்டும் நோக்கில் தனியாக அழைத்து  "கைது செய்து"பின்னர் ஜாமீனில் விட்டது அவ்வ்!

சுவாமியின் காணொளி உரை:



பேட்டி:



கொஞ்ச காலம் முன்னர்வரையில் "மின்னணு வாக்குப்பதிவு"எந்திரங்களை நம்ப முடியாது ஏமாற்றி வெற்றி பெறுகிறார்கள் என பொங்கல் வைத்துக்கொண்டிருந்த,சு.சாமி தற்போது பாரதிய ஜனதாவில் உள்ளார் , ஒரு வேளை பிஜேபி தோற்றிருந்தால் , சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி தேர்தல் ஆணையம் செயல்படவில்லை ,எனவே இத்தேர்தலே செல்லாது என இன்னேரம் கோர்ட் படியேறி இருப்பார் சு.சாமி :-))

பிஜேபி தோல்வி அடைந்திருக்குமானால் இந்த ஊடகங்களும்,உடனடியாக ஓடிப்போய் சு.சுவாமியிடம் மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை என்னவென கேள்விக்கேட்டு பரபரப்பை கூட்டியிருக்கும் ,ஆனால் இப்பொழுது எல்லாம் தூங்குவதேன்?

தற்போது மின்னணு வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து சு.சுவாமிகள் என்ன கருத்தினை சொல்லக்கூடும்?

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்:

Dr. Subramanian Swamy Vs. Election Commission of India

Print this judgment Save this judgment as PDF

Court :  Supreme

Judge :  P SATHASIVAM and RANJAN GOGOI

Decided On :  2013-10-08

Appellant :  Dr. Subramanian Swamy

Respondent :  Election Commission of India

Judgment:

REPORTABLE IN THE SUPREME COURT OF INDIA CIVIL APPELLATE JURISDICTION12 3 CIVIL APPEAL NO.9093 OF20134 (Arising out of SLP (Civil) No.13735 of 2012) Dr. Subramanian Swamy .... Appellant(s) Versus Election Commission of India .... Respondent(s) WITH WRIT PETITION (C) No.406 OF2012
JUDGMENT

P. Sathasivam, CJI.

1) Leave granted. Civil Appeal @ SLP (C) No.13735 of 2012

2) This appeal is directed against the judgment and order dated 17.01.2012 passed by the Division Bench of the High Court of Delhi at New Delhi in W.P.(C) No.11879 of 2009 whereby the High Court disposed of the petition by disallowing the prayer made by the appellant herein for issuance of a writ of mandamus directing the Election Commission of India (ECI)-Respondent herein to incorporate a system of “paper trail/paper receipt” in the Electronic Voting Machines (EVMs) as a convincing proof that the EVM has rightly registered the vote cast by a voter in favour of a particular candidate.

3) Being aggrieved of the above, the present appeal has been filed by way of special leave. Writ Petition (Civil) No.406 of 2012

4) One Rajendra Satyanarayan Gilda has filed this Writ Petition, under Article 32 of the Constitution of India, praying for issuance of a writ of mandamus/direction(s) directing the Union of India, the Chief Election Commissioner and the Technical Experts Committee-Respondent Nos. 1-3 herein respectively to effect the necessary modifications in the EVMs so as to allow the voters to verify their respective votes and to attach the printers to the EVMs with a facility to print the running record of the votes for the purpose of verification by the voters in the process of voting. He also prayed for a direction to frame guidelines and to effect necessary amendments in the Conduct of Election Rules, 1961.

5) In view of the pendency of the appeal filed by Dr. Subramanian Swamy, this Court issued notice in the writ petition and tagged with the said appeal.

6) Heard Dr. Subramanian Swamy, appellant-in-person in the appeal, Dr. R.R. Deshpande, learned counsel for the writ petitioner, Mr. Ashok Desai and Ms. Meenakshi Arora, learned senior counsel for the ECI. Contentions:

7. Dr. Subramanian Swamy, the appellant herein contended before this Court that the present system of EVMs, as utilized in the last few general elections in India, does not meet all the requirements of the international standards and though the ECI maintains that the EVMs cannot be tampered with, but the fact is that EVMs, like all electronic equipments, are open to hacking.

8) The appellant has further highlighted that the instant matter arises out of the refusal of the ECI to incorporate a certain obvious safeguard in the EVMs called “paper backup”, “paper receipt” or “paper trail”, presently in use and mandated in some countries like USA, which would easily and cheaply meet the requirement of proof that the EVM has rightly registered the vote cast by a voter. The appellant has further highlighted that the “paper trail” system is to supplement the procedure of voting as in this procedure, after recording a vote in the EVM, a print out will come out which will appraise the voter that his vote has been rightly registered and the same will be deposited in a box which can only be used by the ECI in case of election dispute.

9) It is the categorical stand of the appellant that the above said system will bring more accuracy in the present system and if a particular election is challenged on the ground that some particular identified voter’s voter or the votes of a group of voters have been suppressed/have not been correctly assigned by the EVMs, the accepted current procedure is for a re-run of the same EVMs for a re-count, however, under the new procedure, a re-count will be of the receipts in the ballot box containing the printouts the EVMs had issued to the voter thereby ensuring more transparency in the process.

10) The writ petitioner has also raised similar contentions as those of Dr. Swamy. According to the petitioner, in the present system of voting through EVMs, there is no such facility by which a voter can verify and confirm his own voting. At present, a voter presses a button only but cannot ascertain the actual voting. He is not sure whether his vote is recorded or not, if recorded, whether it is recorded in favour of the person to whom it was intended or not. Whether it is valid or invalid and whether it is counted or not. It is submitted by the petitioner that unless and until answers to these questions are personally seen by the voter, it cannot be said that voting is made by him because “pressing a button of choice and getting flashed the red-light” is not actual voting in real sense unless the voter knows well that what has happened in consequence of pressing a button of his choice from the EVMs. Stand of the Election Commission of India:

11. Mr. Ashok Desai, learned senior counsel for the ECI submitted that the apprehension that EVMs could be tampered with is baseless. It was also informed to this Court that the ECI has been exploring the possibility of incorporating a viable Voter Verifiable Paper Audit Trail (VVPAT) system as a part of the presently used EVMs to make the election system more transparent. Further, it was brought to our notice that the ECI conducted field trials for VVPAT system earlier also but the same had not been successful and were discontinued. The ECI also filed a counter affidavit stating that the EVMs provided by the Commission are of such a high end technology that it cannot be hacked.

12) Referring to Section 61A of the Representation of the People Act, 1951, it is submitted that the Statute itself provides for recording of votes by EVMs and the ECI has been given the discretion to prescribe recording of votes by such EVMs as it may deem fit. This discretion has to be exercised in a manner to preserve the sanctity of the election process and ensure that the election is conducted in a free and fair manner. The ECI has exercised due diligence to ensure that EVMs so used are “tamper proof” and it is also in the process of exploring to incorporate VVPAT system which is compatible with the present EVMs used by it. It is asserted that there is no instance of tampering with EVMs so far by anyone.

13) It is further submitted that the EVMs used in India are unique and unlike the ones used in the elections in USA and other countries, which are personal computer based. EVMs deployed by the ECI have been lauded not only in India but also abroad. EVM’s Control Unit retains in the memory each vote recorded elector-wise. The information stored in the memory of the Control Unit can be retrieved by using a device called the “decoder” which, when attached to the Control Unit of EVM, can print out the statement of voting data showing the order in which each voter has voted and to whom he has voted.

14) Insofar as the transparency of the election process as well as the right of a voter to know whether his vote has actually been recorded for the candidate for whom it was cast is concerned, it is submitted that as soon as a vote is recorded by a voter by pressing the “candidate’s” button on the Ballot Unit, a light glows against the name and symbol of the candidate, which the voter can see for himself/ herself. This is a visual (electronic) assurance to the voter that the candidate for whom he has cast his vote has actually got that vote. Thereafter, the light goes off to protect the secrecy of voting.

15) It is further submitted that the feasibility of VVPAT system was sought to be explored to by various political parties and they were explained the technical and administrative safeguards. The ECI also constituted a Technical Experts Committee to examine the viability of the VVPAT system. On 27.05.2011, the Technical Experts Committee, after discussion with political parties and civil society members and also after seeing the demonstration of the prototype VVPAT system developed by M/s. Bharat Electronics Ltd. (BEL) and M/s. Electronics Corporation of India Ltd. (ECIL), recommended that a field test of the prototype VVPAT system should be carried out in a simulated election under different environmental conditions in Jaisalmer, Thiruvananthapuram, Delhi, Leh and Cherapunji. The ECI also held further meetings with the manufacturers of EVMs on various dates to fine tune the system and expedite the follow up action required. Several meetings were also held with the Expert Committee on VVPAT system.

16) In wider fulfillment of the objectives of the field trial, the ECI has requested the National and State parties to extend necessary cooperation by getting involved in the trial process actively and also witness the trial in order to have a first hand experience of the system. The ECI has also requested the individuals including the appellant – Dr. Subramanian Swamy and the groups, who have been engaged with the ECI on the issue of EVM-VVPAT, to witness the trial.

17) We have carefully perused the relevant materials and considered the rival contentions. Discussion

18) When the matter was listed before this Court for hearing on 27.09.2012, Mr. Ashok Desai had brought to our notice that the ECI is contemplating foolproof method in EVMs for which they are taking various steps in consultation with the Technical Experts Committee and the views of all recognized political parties. Mr. Desai also promised to appraise this Court about the deliberations and the ultimate decision to be taken by them in this regard. Accordingly, this Court granted sufficient time to the ECI to file Status Report regarding introduction of VVPAT system in EVMs to be used in the elections.

19) Pursuant to the directions of this Court, the ECI filed a Status Report on the developments of VVPAT system. In the said report, the ECI, citing various technicalities, prayed for further time to make the system more robust for the field conditions.

20) On 15.12.2012, M/s BEL, Bangalore filed a report showing the status of development of VVPAT system which contains changes that have been carried out in VVPAT from September to December, 2012 and also furnished chronological changes made in VVPAT system after the field trial of the VVPAT system held in July and August, 2012.

21) Pursuant to the directions of this Court, the Secretary, ECI, filed an affidavit highlighting the following steps/ information:

“(i) That vide its Affidavit dated 14.01.2013, the Commission had filed the status report regarding introduction of the VVPAT system in the Electronic Voting Machines (EVMs). (ii) That subsequently, in the Technical Expert Committee meeting held on 04.02.2013, the Committee approved the design of the VVPAT and decided that software fine tuning will be done and completed by the end of February, 2013, and modified design specifications will be submitted to the Technical Expert Committee for approval. The Committee also recommended that the Commission may for using the VVPAT and that the VVPAT should be tried in a bye-election. (iii) That in the Technical Expert Committee meeting held on 19.02.2013, the Committee finalized the VVPAT design. The manufacturers, namely, M/s. Bharat Electronics Limited and M/s. Electronics Corporation of India Limited have quoted Rs. 16,200/- (excluding duties, taxes and transport charges) per VVPAT system. The Commission has decided to purchase sufficient units of VVPAT for trials in a Bye-election, at an approximate cost of Rs.72,90,000/- (Rupees seventy two lakh ninety thousand) approximately. (iv) It is submitted that the Commission will require approximately 13 lakh VVPAT units to be manufactures for 13 lakh EVMs presently available and roughly about Rs. 1690 crores (One Thousand Six Hundred Ninety Crores)(i.e. 13 lakh units x Rs.13,000 per unit) are required for the purpose of implementation of the VVPAT system taking into account the possible reduction in the cost per unit when produced in bulk. (v) It is further submitted that in order to implement the new system the Conduct of Election Rules, 1961 will require certain amendments. In this connection, vide letter No.3/1/2013/Vol.II/SDR/86 dated 28.03.2013, the Commission has informed the Legislative Department of the Ministry of Law and Justice inter alia the various amendments required to the relevant parts of Rules 49A to 49X, 66A, 55C, 56C, 57C and Form 17C of the Conduct of Elections Rules, 1961, as well as introduction of Rules 49MA and 56D in the said Rules… (vi) That the Commission has called for a meeting of all the recognized National and State Parties on 10th May, 2013 for the purpose of demonstration of VVPAT unit to them and for discussion with them for eliciting their views regarding use of VVPAT system in the elections. The petitioner herein and others interested in the matter would also be invited at the meeting.”

22) It is seen from the records that after various deliberations with the experts and persons concerned with the technology, the Technical Experts Committee approved the final design of VVPAT units in its meeting held on 19.01.2013. In order to meet the directions of this Court and for proper execution of VVPAT system, as noticed above, the ECI in its letter dated 28.03.2013, addressed to the Secretary to the Government of India, Ministry of Law and Justice stated that necessary ground work for amendment to the Conduct of Election Rules, 1961 (in relevant parts in Rules 49A to 49X, 66A, 55C, 56C, 57C and Form 17C) may be made so that the amendment to the Rules can be notified immediately which will enable the ECI to use the VVPAT system in bye-elections in consultation with the political parties. By placing all those materials, the ECI requested the Ministry of Law and Justice for drafting and notifying amendment Rules expeditiously.

23) From the materials placed by the ECI, it is noted that the purchase order has been placed with M/s BEL and M/s ECIL for supplying 150 and 300 VVPAT units respectively at Rs. 16,200/- per unit excluding excise duty, sales tax and transportation etc. costing Rs. 72,90,000/- (approx.). The ECI has also highlighted that if the VVPAT systems are ultimately to be used with all the 13 lakh EVMs available, the total cost in the purchase of VVPAT units may come to about Rs. 1,690 crores, taking into account the possible reduction in the cost per unit due to bulk production the cost may come to Rs. 13,000/- per unit approximately.
24) The affidavit dated 21.08.2013, filed on behalf of the ECI, shows that the Ministry of Law and Justice, on 24.07.2013, referred the draft notification to amend the Conduct of Election Rules, 1961 to provide for use of VVPAT system of elections to the ECI for its views and comments. The ECI suggested certain minor modifications in the draft notification and sent the same back to the Ministry of Law and Justice on 02.08.2013 with a request to notify the amendment Rules at the earliest. Accordingly, the Ministry of Law and Justice notified the amendments to the Conduct of Election Rules, 1961 in the Gazette of India vide notification No.S.O. 2470(E) dated 14.08.2013 to enable use of VVPAT with EVMs.

25) The aforesaid affidavit of the ECI also shows that the ECI had also convened a meeting of all the recognized National and State political parties on 10.05.2013 and demonstrated before their representatives the working of VVPAT system. Separately, on the same day, the ECI also held a meeting with individuals including the appellant herein who had been engaged with the ECI over the past several years regarding the functioning of EVMs. VVPAT system was demonstrated before them as well. Representatives of political parties and other individuals expressed their satisfaction over the VVPAT system. Thereafter, the ECI had decided to use the VVPAT system in the bye-election from 51-Noksen (ST) Assembly Constituency in the State of Nagaland. Instructions were issued to hold special meetings with the contesting candidates in that constituency to brief them about the use of VVPAT system. The ECI also organized special training sessions for poll officers for the use of VVPAT and steps were taken to educate the electors for the same.

26) After various hearings, when the matter was heard on 4.10.2013, an affidavit dated 01.10.2013 filed on behalf of the ECI was placed before this Court. The said affidavit was filed to place on record the performance/result of the introduction of the VVPAT system in the bye- election from 51-Noksen (ST) Assembly Constituency of Nagaland for which the poll was conducted on 04.09.2013 indicating the future course of action to be decided by the ECI on the basis of said performance. By this affidavit, it was brought to our notice that since VVPAT system was being used for the first time, the ECI has decided that intensive training shall be given to the polling officers. Members of the Technical Experts Committee of the ECI also went to supervise training and the actual use of VVPAT in the bye-election. It is further stated that the ECI also wrote letters to all the recognized political parties and other persons, including the appellant herein, engaged with the ECI on this subject inviting them to witness the use of VVPAT. It is also brought to our notice that VVPAT was successfully used in all the 21 polling stations of 51-Noksen (ST) Assembly Constituency of Nagaland. It was also stated that as per the Rules, the paper slips of VVPAT shall not be counted normally except in case the Returning Officer decides to count them on an application submitted by any of the candidates. However, since VVPAT system was being used for the first time in any election, the ECI decided on its own to count paper slips of VVPAT in respect of all polling stations. According to the ECI, no discrepancy was found between the electronic and paper count.

27) In the said affidavit, it is finally stated that the ECI has decided to increase the use of VVPAT units in a phased manner and for this purpose the ECI has already written to the Government of India, Ministry of Law and Justice to issue administrative and financial sanction for procurement of 20,000 units of VVPAT (10,000 each from M/s BEL and M/s ECIL) costing about Rs. 38.01 crore.

28) Though initially the ECI was little reluctant in introducing “paper trail” by use of VVPAT, taking note of the advantage in the system as demonstrated by Dr. Subramanian Swamy, we issued several directions to the ECI . Pursuant to the same, the ECI contacted several expert bodies, technical advisers, etc. They also had various meetings with National and State level political parties, demonstrations were conducted at various places and finally after a thorough examination and full discussion, VVPAT was used successfully in all the 21 polling stations of 51-Noksen (ST) Assembly Constituency of Nagaland. The information furnished by the ECI, through the affidavit dated 01.10.2013, clearly shows that VVPAT system is a successful one. We have already highlighted that VVPAT is a system of printing paper trail when the voter casts his vote, in addition to the electronic record of the ballot, for the purpose of verification of his choice of candidate and also for manual counting of votes in case of dispute.

29) From the materials placed by both the sides, we are satisfied that the “paper trail” is an indispensable requirement of free and fair elections. The confidence of the voters in the EVMs can be achieved only with the introduction of the “paper trail”. EVMs with VVPAT system ensure the accuracy of the voting system. With an intent to have fullest transparency in the system and to restore the confidence of the voters, it is necessary to set up EVMs with VVPAT system because vote is nothing but an act of expression which has immense importance in democratic system.

30) In the light of the above discussion and taking notice of the pragmatic and reasonable approach of the ECI and considering the fact that in general elections all over India, the ECI has to handle one million (ten lakhs) polling booths, we permit the ECI to introduce the same in gradual stages or geographical-wise in the ensuing general elections. The area, State or actual booth(s) are to be decided by the ECI and the ECI is free to implement the same in a phased manner. We appreciate the efforts and good gesture made by the ECI in introducing the same.

31) For implementation of such a system (VVPAT) in a phased manner, the Government of India is directed to provide required financial assistance for procurement of units of VVPAT.
32) Before parting with the case, we record our appreciation for the efforts made by Dr. Subramanian Swamy as well as the ECI, in particular Mr. Ashok Desai and Ms. Meenakshi Arora, learned senior counsel for the ECI.

33) With the above directions, the appeal and the writ petition are disposed of. No separate order is required in the applications for intervention. Both sides are permitted to approach this Court for further direction(s), if need arises. ...…………….…………………………

CJI (P. SATHASIVAM) .…....…………………………………J.

மூலம்:

http://www.legalcrystal.com/judgements/description/1092581

நன்றி!


# சு.சாமிக்கள் எல்லாம் "தேவை ,காலம் ,இருக்கும் இடம் அறிந்து கலகம் செய்வார்கள்,அடியேன் உண்மைக்காக மட்டுமே கலக்குவேன் , எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து வழக்கெல்லாம் போட்ட மனுசன் , அவருக்கு சாதகாமா தீர்ப்பு வந்த பின்னும் "தேர்தல் ஆணையம்"அதனை செயல்ப்படுத்தாமல் தேர்தலை நடத்தியதை குறித்து ஏன் வாயே தொறக்கலை?இப்போ தொறந்தா வாயிலே குத்து விழுமோ அவ்வ்!


வாய்மையே வெல்லும்!

********

# மின்னணு எந்திரத்தில் அந்நிய சதி:

BEL(Bharat Electronics Ltd) பெங்களூர் & ECIL(Electronics Corporation of India Ltd) ஹைதரபாத்,ஆகிய இரு மத்திய அரசு நிறுவனங்களும் தான் மின்னணு வாக்கு எந்திரத்திற்கான அல்காரிதம் கோடினை எழுதுகின்றன.

இந்த அல்காரிதத்தினை மைக்ரோ கண்ட்ரோலர் சிப்பில் பதிய வைக்கும் வேலையை சிப் தயாரிக்கும் நிறுவனங்கள் தான் செய்ய முடியும், இந்திய நிறுவனங்கள் அல்ல. நமக்கு ஜப்பானை சேர்ந்த Renesas (jappan) முன்னால் ஹிட்டாச்சி குழுமம், and Microchips(usa) ஆகிய இரு நிறுவனங்களே மைக்ரோ கண்ட்ரோலரை தயாரித்து , பெல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் எழுதிய அல்காரிதத்தினை "பதிவு"செய்து தருகிறார்கள்.

பின்னர் இந்த சிப்பினை வைத்து முழு மின்னணு எந்திரமும் இந்தியாவில் தயாரித்துக்கொள்ளப்படுகிறது.

ஒரு முறை எழுதிய பின் அதன் சோர்ஸ் கோட் என்ன என யாராலும் அறியவும் முடியாத மாஸ்க்டு மைக்ரோ கண்ட்ரோலர் சிப்கள், எனவே இந்திய நிறுவனங்கள் கொடுத்த அதே சோர்ஸ் கோட் தான் பதியப்பட்டதா அல்லது அந்நிய நிறுவனங்கள் வேறு ஏதேனும் "கூடுதல்"ஆணைத்தொடர்களை சேர்த்துள்ளார்களா எனவும் அறிய இயலாது.

அப்படி கூடுதல் ஆணைத்தொடர்களை எழுதி , அதனை வைத்து  "வாக்கு எண்ணிக்கையை"மாற்ற ஏதேனும் ரகசிய செயல்பாட்டினை உருவாக்கினார்களா என்பதையும் அறிய முடியாது.

உதாரணமாக அலைப்பேசியில் "எவ்வளவு"பேலன்ஸ் என அறிந்திட *111# அழுத்தினால் காட்டுகிறது அல்லவா ,அது போல , மின்னணு வாக்கு எந்திரத்தில் உள்ள , குளோஸ், ரெடி, ரிசல்ட் , கிளியர் போன்ற பித்தான்களை ஏதேனும் ஒரு காம்பினேஷனில் அழுத்தினால் "பதிவான வாக்குகளின்"வரிசையை ஒரு எண் முன்னர் அல்லது பின்னர் நகர்த்தலாம் என்பது போல கூட ஆணைத்தொடர்களை உருவாக்கி ரகசியமாக மைக்ரோ கண்ட்ரோலரில் பதிவு செய்திருக்கலாம், அதற்கான வாய்ப்புள்ளதை மறுக்கவும் இயலாது!

உதாரணமாக ,

ரெடி+டோட்டல்+ ரெடி என தொடர்ச்சியாக அழுத்தினால் , பதிவான வாக்குகள் ஒரு வரிசை எண் முன்னோக்கி மாறிக்கொள்ளும் படி ஆணைத்தொடர் உருவாக்கி இருக்கலாம்,

அதே போல டோட்டல் +ரெடி+டொட்டல் என்றால் பின்னோக்கி வரிசை எண் மாறிக்கொள்வது போல ஒரு ஆணைத்தொடர் உருவாக்கி பதிய வைத்திருக்கலாம்.

மேற்கண்ட ரகசிய இயங்கு முறையினை யாரேனும் "பெரிய தொகை கொடுத்தால் " அவற்றை விற்கலாம் எனக்கூட அவ்வாறு மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவனங்கள் செய்யலாம். அந்நிய நிறுவனங்கள் லாப நோக்கில் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதற்கு ஒன்றும் உத்தரவாதமில்லையே?

அல்லது அரசியல் காரணங்களுக்காக நம் நாட்டு ஆளும் அரசினை மாற்றியமைக்க ரகசிய ஏற்பாடாக கூட அந்நிய வல்லரசு நாடுகள் முன் கூட்டியே மைக்ரோ கண்ட்ரோலர் தயாரிக்கும் நிறுவனங்களை "மிரட்டி"செய்யவும் கூடும்.

நம் நாட்டு அரசின் தலையெழுத்தினை நிர்ணயிக்கும் தேர்தல் முடிவினை நிர்ணயிக்கும் எந்திர தயாரிப்பில் அன்னிய நிறுவனங்களின் பங்கிருப்பது , ஒரு வகையில் அபாயகரமானது ஆகும், அவர்கள் நேர்மையாக நடந்துக்கொண்டால் மட்டுமே "நேர்மையான"தேர்தலே நடக்க சாத்தியம் உள்ளது, பணத்திற்கு ஆசைப்பட்டு அல்லது அரசியல் சூழ்ச்சியில் சிக்கி ரகசிய ஏற்பாட்டினை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் செய்திருந்தால் அதனை கண்டுப்பிடிக்க கூட "நமது தேர்தல் ஆணையத்தால்"இயலாது என்பது மிகப்பெரும் பாதுகாப்பு ஓட்டை ஆகும்.

இப்படியான பல பாதுகாப்பு குறைபாடுகளும் ,சந்தேகங்களும் உடைய ஒரு மின்னணு எந்திரத்தினை நம்பி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலையெழுத்தினை நிர்ணயிப்பது சரியா?

சூது கவ்வும்!

----------------

பின் குறிப்பு:

# பிழைதிருத்தம் மற்றும் சில தகவல் மேம்பாடுகள் பின்னர் செய்யப்படும்.

# என்னளவில் புரிந்துக்கொண்டதை வைத்து சில சாத்தியக்கூறுகளை எழுதியுள்ளேன் , அப்படியே என்ன நடக்குமென்பதை சொன்னதாக எடுத்துக்கொள்ளக்கூடாது, வெள்ளத்தனைய மலர் நீட்டம் உள்ளத்தனைய புரிதல் ஹி..ஹி!

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

மைக்ரோ சாப்ட்,ஆஸ்கி,யுனீ கோட்.ஆர்க், தேர்தல் ஆணையம், விக்கி ,கூகிள் மற்றும் இன்ன பிற இணைய தளங்கள்,நன்றி!

# http://www.asciitable.com/

# http://www.fileformat.info/tip/microsoft/enter_unicode.htm

# http://office.microsoft.com/en-in/onenote-help/insert-ascii-or-unicode-latin-based-symbols-and-characters-HA010167539.aspx

# http://www.zenith-india.com/zen/trainingmaterial/details/how_computer_keyboards_work.htm

# http://www.bbc.com/news/10123478

# http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/article2295753.ece

# http://www.business-standard.com/article/elections-2014/ls-polls-voters-to-get-automated-receipts-at-gandhinagar-114042901134_1.html

# http://www.thehindu.com/opinion/op-ed/the-problem-with-evms/article607744.ece
--------------------

நூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014

$
0
0

(ஆடிப்போனால் ஆவணி வரும் தாவணி வருமா? ஹி...ஹி)


ஆடிப்போய் ஆவணி கூட வந்திரும் போல இருக்கு(அப்படியே ஆவணி வந்திட்டாலும் டாப்புல வர்ராப்போல அவ்வ்) இந்த வவ்வாலு இன்னும் ஒருப்பதிவு கூட எழுதக்காணோமேனு என்னோட ரசிகப்பெருமன்றத்தினர்(அப்படி யாரேனும் இருக்கிங்களா?) இணையப்பெருவீதியில் பெருந்திரளாக கூடி கோஷமெழுப்பியது எமது குகையின் சுவர்களில் பட்டு எதிரொலித்து ரீங்காரமிடுவதான ஒரு கற்பனை மண்டையை உலுக்கவே , சரி எதாவது எழுதி வச்சி "பருவ மழையையாய் கருத்து மழையை"பொழிவோம்னு சிறு மூளையை கசக்கி பார்த்தும் ஒரு சொட்டு "சொற்துளி"கூட கசியக்காணோம் , படைப்பூக்கத்தின் வசந்தகால நதி அசந்து விட்டதா?  அய்யகோ இனி சீறிளமை ததும்பும் கன்னித்தமிழைக்காப்பது எங்கணம்?

அடங்குடா நொண்ணை , வர்ரவன் போறவன் எல்லாம் தமிழைக்காப்பாத்தனும், வாழ வைக்கணும்னு பில்டப் கொடுக்கிறதே வேலையா போச்சு , தமிழ் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா இல்லை தத்துப்பிள்ளையா என கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்து யாரோ அறச்சீற்றம் காட்டுறாப்போல தெரியுது எனவே வந்த வேலைய பார்ப்போம் ..ஹி..ஹி!

ஊரு நாட்டுப்பக்கம் போறப்போலாம் அந்தப்பக்கம் என்ன நிகழ்வுகள் நடக்குதுனு கவனிச்சு முடிஞ்சா ஆஜராகி அட்டென்டன்ஸ் போடுவது வழக்கம் என நான் சொல்லாமலே நம்ம மக்களுக்கு தெரியும் தானே அப்படியாக  இம்முறையும் ஊரோரமா போகச்சொல்லோ நிலக்கரி சுரங்கத்துல இவ்வாண்டுக்கான(2014-ஜூலை) புத்தக சந்தை நடப்பதாக "கரிச்சான் குருவி"ஒன்னு காதோரமாக கூவிச்செல்லவே , நாம அடியெடுத்து வைக்கலைனா சந்தைக்கு காலத்தால் அழியாத தீரா அவச்சொல் உருவாகிடுமே என பெரு முயற்சி செய்து பயணம் புறப்பட மூட்டை கட்டலானேன்.



நிலக்கரி சுரங்க நகராம் நெய்வேலி நகரியத்தின் நடுவண் பேருந்து நிலையம்.  

இம்முறை பேருந்திலேயே சென்று விடுவதாக திட்டமிட்டு ,அங்கிருந்து அழைத்து செல்ல உறவினரின் மகிழுந்தினை பேசி வைத்தாயிற்று , ஏனெனில் நெய்வேலி நகரியத்தின் உட்ப்புற பயணம் அவ்வளவு சிலாக்கியமானதல்ல, பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பச்சைக்கலர் பேருந்துகளை தவிர வேறு பொதுப்போக்குவரத்து கருவிகளை கண்ணில் காணவியலாது ,மேலும் ஒவ்வொரு வட்டமும் பல ஃபர்லாங்குகள் தொலைவில் இருப்பதால் என்னைப்போன்ற சாமானியர்க்கு தானி*க்கு கட்டண தீனி போடுவதும் கட்டுப்படியாகாது அவ்வ்!

*தானி - தானியியங்கி மூவுருளி = ஆட்டோ ரிக்‌ஷா.

சொல்லாக்க உதவி , தமிழ் அறிவியல் கலைக்களஞ்சியம்,மணவை முஸ்தபா.

மேற்கொண்டு வள வளக்காமல் படங்காட்டி கதை சொல்லி செல்கிறேன்.

#

புத்தகச்சந்தை இதுக்குள்ள தான் நடக்குது( நிக்குது).

# நுழைவு வாயில், வள்ளுவரை வச்சு வடிவா செட் போட்டிருக்காங்க( சிவாசியை வச்சு ஏன் செட் போடலைனு எனக்கு தெரியாதுங்க அவ்வ்)



தோட்டக்கலைத்துறையின் அரங்கு.


நுழைவு வாயிலுக்கு எதிர்ப்புறம் தமிழக தோட்டக்கலைத்துறையின் அரங்குகள் இரண்டினை வச்சிருந்தாங்க ,அது மட்டுமில்லாமல் பழ மரக்கன்றுகள் இலவசம்னு கொட்டை எழுத்தில பேனரும் இருக்கவே "பேராசையும், பெரும் ஆவலும் பிடறியில் உந்தித்தள்ள , இலவசம்னா எனக்கு ரெண்டு மரக்கன்று கொடுங்கனு அல்பத்தமிழனாய் அவதாரமெடுத்தேன் (எப்பவுமே நீ அல்பந்தாண்டானு ஒரு வேண்டாத அசரிரீ கேட்குது அவ்வ்)

சுரங்கத்துல கரி அள்ளுறவங்களுக்கு மட்டும் தான் இலவச மரக்கன்று என ஒத்தை சொல்லால் ஊதி அணைத்துவிட்டார் எனது பேராசை பேருந்தீயை அவ்வ்!!!


வழக்கம் போல ஹி...ஹி என அசடு வழிந்தாலும் இதெல்லாம் நமக்கென்ன புதுசா என்னனு , சமாளித்துக்கொண்டு, அப்புறம் எதுக்கு எல்லாருக்கும் இலவசமா கொடுக்கிறாப்போல "இலவச பழமரக்கன்று"என பேனர் வச்சீங்க ,அத மாத்துங்க இல்லைனா டிபார்ட்மெண்ட்ல புகார் கொடுப்பேன் என லைட்டா கெத்துக்காட்டிவிட்டு , சந்தைக்கு தாவினேன்.

சென்ற முறை 3 ரூ நுழைவு கட்டணம் இம்முறை 5 ரூ ஆக உயர்த்தப்பட்டிருந்தது , பா.ஜக ஆட்சியில் விலைவாசி உயர்வுக்கு இதுவே சாட்சி என நுண்ணரசியலாக கம்மூனிஸ்ட் கட்சிக்காரங்க போல "பொங்கல்"வைக்கலாமானு தோன்றியது!

#

இந்த வழியில் தான் பயணம் ஆரம்பம்!

#
கொற்கை.


கொற்கை என்றால் ஏதோ கொக்கிற்கும் காக்கைக்கும் கலப்பினமாக பொறந்த உயிரினமாக இருக்குமோனு பாமரத்தனமாக யாரும் நினைக்கப்படாது, அது ஏதோ தமிழின் ஆகச்சிறந்த சமகால இலக்கியமாம் , ஜோ.டி.குரூஸ் எழுதி இருக்காரு,  மத்திய அரசாங்க அவார்டு வாங்கிய எழுத்தாளர் என்பதால் கனமான கருத்தாக்கத்தினை உள்ளடக்கமாக கொண்டிருக்கும் என நினைக்கிறேன்.

 புத்தகமும் நல்லா "பல்க்"ஆக இருந்தது ,  வாங்கி வைத்துக்கொண்டால் எதிரிகளை தாக்க நல்ல தற்காப்பு ஆயுதமாக பயன்ப்படக்கூடும் , ஓங்கி அடிச்சா "தோர்"சம்மட்டியால் அடிச்சதை விட நல்ல விளைவுகள் கிடைக்கக்கூடும் :-))

புத்தகத்தை கையில் எடுத்துப்பார்க்கும் போதே சுட்டது, அம்புட்டு விலை , இதெல்லாம் படிக்க மனசு மட்டும் இருந்தால் போதாது என்ற நிகழ்கால வாழ்வியல் யதார்த்தம் மாயக்கரங்களால் செவுளில் அறைந்தது.

#
வரலாறு பேசும் பண்டாரம்.

இந்த அரங்கில் சமய நூல்கள், சமயம் சார்ந்து தமிழ், வரலாறு என ஏகப்பட்ட நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது, நமக்கு தமிழையும், வரலாற்றையும்  சமய சார்பற்று அணுகவே பிடிக்கும் என்பதால் , அட்டைகளை மட்டும் நோட்டமிட்டு விட்டு கிளம்பியாச்சு.

# விகடன் அரங்கம்.



விகடனில் வெளியான தொடர்கள் எல்லாம் புத்தகங்களாக பரிணாமம் பெற்றிருந்தன , வழக்கம் போல பார்வை மேய்ச்சல் மட்டுமே. பதிவர் அமுதவன் அவர்கள் எழுதிய நூல்களைக்கேட்டுப்பார்த்தேன் , சரக்கு கைவசம் இல்லை என்றார்கள், சும்மா வெறுங்கையோட போவானேன் என "நூல் விலைப்பட்டியலை"கைப்பற்றிக்கொண்டு கிளம்பினேன்!!!

கிழக்கு பதிப்பகம்.

கிழக்கின் அரங்கு மேற்கை பார்த்து அமைந்திருந்ததது, அதை  தவிர பெருசா கவனிக்க தக்க நூல்கள் எதுவும் நம்ம கண்ணில் படவில்லை.

# நிழல்.



  உலக சினிமாவினைப்பற்றி பேசும் ஒரு திரைப்பட பத்திரிக்கை நிழல் என்றப்பெயரில் வருகிறதாம், அதன் அரங்கு ,  நிழலின் பழைய ,புதிய இதழ்களை  நிறைய வைத்திருக்கிறார்கள், ஆனால் எல்லாம் ஒரே விலை தான் அவ்வ்.

 உலக சினிமா , உள்ளூர் சினிமா என அலசும் பல நூல்கள் அங்கிருந்தன , ஆனால் பெரும்பாலான நூல்களை திருநாவுக்கரசு என்ற ஒருவரே எழுதியிருந்தார் , பெரிய உலகசினிமா அப்பாடக்கரா இருப்பார் போல இருக்கே என நினைத்துக்கொண்டே , ஒரு நிழல் இதழை புரட்டினால் ,அதில் ஆசிரியர் என அவர் பெயரே போட்டிருக்கு  ,நல்லா செய்றாங்கப்பா தொழில் அவ்வ்!!!

உண்மைத்தமிழன் அண்ணாச்சிக்கு சொந்தமோ என்னமோ தெரியலை உலக சினிமா பத்தி திறனாய்வுப்பார்வையில் எழுதாமல் "அதோட முழுக்கதையும்"சீன் --1 ,சீன் -2 என போட்டு கதை வசனமாக எழுதி வச்சிருக்கார். நமக்கு எதாவது உலக சினிமா கதைப்புரியலைனா வாங்கிப்படிச்சிக்கலாம், எனக்கு ரொம்ப நாளா அகிரா குரோசோவேயின் "ரோஷமான்"கதைல குழப்பம் உண்டு என்பதால் , அதோட கதை வசன நிழல் இதழும் இன்னும் சில இதழ்களும் பொறுக்கிக்கொண்டேன்.

#
இவ்விடம் கதை திரைக்கதை ,வசனம் பழுதுப்பார்க்கப்படும் என ஒரு புத்தகம் கண்ணில் பட்டது எடுத்துப்பார்த்தால் ,அவதாரை இப்படி எடுத்திருக்கலாம், கஜினி படத்தினை இப்படி மாத்தி எடுத்திருந்தால் இன்னும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் என்பதான கட்டுரைகள், ஒரு வேளை புத்தகத்தை போட்டவர் பதிவரோ அவ்வ்!

புத்தகங்கள் எதுவும் என் சிற்றறிவுக்கு தேவைப்படாத தரத்தில் இருந்ததால் வாங்கவில்லை.

#


வீரப்பன் செத்தது வியாபார ரீதியாக நக்கீரனுக்கு பெரும் பின்னடைவு எனலாம், புதுசா பரபரப்பாக போட சரக்கில்லாமல் ,யட்சிணி வசியம், தேவவசிய முத்திரைகள், ஜாதக பலன்கள் என பளப்பள அட்டையில் புத்தகம் போட்டு விக்குறாங்கப்பா அவ்வ்!

#



 கல்கியை எல்லாம் தூக்கி சாப்பிடுறார் பாலகுமரன், உடையார் நாவல் தொகுதி ரூ 1570 என தெகிரியமாக அட்டையில் எழதி வச்சி விக்குறாங்க, இந்த விலையில் இதெல்லாம் வாங்கிப்படிக்கும் அளவுக்கு தமிழார்வம் மக்களுக்கு இருக்குமெனில் , தமிழில் படிக்கும் விருப்பம் தமிழர்களிடம் குறைந்து விட்டது என எழுத்தாளுமைகள் ஏன் பொலம்புறாங்கனே தெரியலை அவ்வ்!

மேலும் சில படங்கள்.



------------------

பின் குறிப்பு:

# படங்கள் அனைத்தும் அடியேன் சுட்டது தான் , சில படங்கள் கலங்களாக இருக்கும், அதுக்கு உற்சாக பானம் எதுவும் காரணமல்ல, அப்படியே போய்கிட்டே எடுத்தவை, மேலும் இம்முறை "புத்தக சந்தையில் யாரும் புகைப்படம் எடுக்காதீர்கள்"என மைக் கட்டி அவ்வப்போது அறிவிப்பு வேற செய்தார்கள் , சுரங்கம் தோண்டுறவங்க கடமை உணர்ச்சிய நினைச்சா ஃபுல்லரிக்குது அவ்வ்!

# போன மாசம் நடந்த புத்தக சந்தை , இப்போ தான் எனக்கு பதிவு போட வாய்த்தது அவ்வ்.
----------------------------

என்ன கொடுமை சார் இது-13

$
0
0
(ஹி...ஹி முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்)


காகதாளிய நியாயம்!

கூகிள்காரன் ஓசியில பிலாக்னு ஒன்னு கொடுத்தாலும் கொடுத்தான் ஆள் ஆளுக்கு ஒரு பிலாக் ஆரம்பிச்சுட்டு, எதையாவது கிறுக்கி தள்ள ஆரம்பிச்சுட்டாங்க, சில சமயம் நல்லாவும் எழுதி தொலைச்சுடுறாங்க, ஆனால் சிலர் பண்ணுற அலப்பரை இருக்கே அது ஒரு தனிரக பயங்கரமா இருக்கும், தான் ஒரு  திரைவிமர்சனம் எழுதினா மணிரத்னம்,ஷங்கர் வரைக்கும் படிக்குறாங்கல ஆரம்பிச்சு அமெரிக்க சனாதிபதி ஓபாமாவே என் வாசகர்,எனக்கு மெயில் அனுப்பினார் என்பதாக பெரும்பீத்து பீத்துறாங்கய்யா :-))

சரி அதுவாது போகட்டும்னு விடலாம், நேத்து மழை பெஞ்சா கூடா நான் முத்தாநேத்தே மழை வராப்போல இருக்குனு துவித்தர்ல சொன்னேன், பிளஸ்ல சொன்னேன் ,பிலாக்கர்ல சொன்னேன்னு சொல்லிக்கிறாங்க, இதமாரி தான் ஒருப்பதிவர் இருக்கார், அவர் எழுதுறத அவர தவிர நாலுப்பேர் படிச்சாலே அதிசயம், பிரபல திரட்டிகள் கூடக்கண்டுக்காத ஒரு டொக்குப்பதிவு வச்சுக்கிட்டு, எதையாவது எழுதிட்டு ,கொஞ்ச நாள் கழிச்சு நான் சொன்னா மாதிரியே நடந்துப்போச்சுனு ஓவரா பில்டப்பு கொடுக்கிறார்,

கொஞ்ச நாள் முன்ன லோகநாயகர் டிடிஎச் இல் படம் வெளியாகும் முன் வெளியிடுவேன்னு சொன்னதும், அதெல்லாம் சாத்தியமில்லைனு முழ நீளத்துக்கு ஒரு பதிவு போட்டு வெளக்கு வெளக்குனு வெளக்கினார், என்ன எழவு மாயமோ தெரியலை அதே போல டிடிஎச் இல் படம் வெளியாகவில்லை, அப்புறம் படம் வந்து ஒரு வாரத்தில் டிடிஎச் என லோகம் சொன்னார் ,ஆனால் இன்னிவரைக்கும் டிடிஎச் இல் படமே வரலை, உடனே அந்த வெளங்காவெட்டிப்பதிவர் பார்த்தீரா ...நான் அப்பவே சொன்னேன்ல என ஒரு அலப்பரைய கொடுத்தார் :-))

கெரகம் ஏதோ நல்ல நேரம் குத்து மதிப்பா சொன்னது போல நடந்துப்போச்சுனு மக்கள் பொறுத்துக்கொண்டார்கள், பின்னர் உரமானியத்தில் ஊழல் நடக்குதுனு ஒரு பதிவுப்போட்டார், ஒரு மாசம் கழிச்சு, உரமானிய ஊழல் பற்றி அம்மையார் ஒரு அறிக்கை விட்டாங்க, இதுல இன்னொரு கொடுமை என்னனா, அலப்பரைப்பதிவர் சொன்ன மாதிரியே கணக்கும் சொல்லி இருக்கவும், ஆசாமிக்கு உச்சந்தலையில கிர்ருனு ஏறிடுச்சு, நான் அப்பவே சொன்னேன்ல என அதை எடுத்து போட்டு ஒரு பதிவு போட்டு , காலரை தூக்கிவிட்டுக்கிறார்,எல்லாம் நேரம்யானு அப்பாவி பொதுமக்களும் ஏதோ போனாப்போவுதுனு அவர் பதிவை படிச்சு தொலைக்கிறாங்க என்பதை புரிந்துக்கொள்ளாமல் அடுத்த அலப்பரைக்கு அடிப்போட ஆரம்பிச்சுட்டார்.

சுட்டி:

உரமானிய ஊழல்.


அந்த அலப்பரைப்பதிவர் நவக்கிரகங்களுக்கும் நண்பனாகிட்டார் போல எந்த பதிவு போட்டாலும் அதுக்கு பின்விளைவாக இப்போலாம் ஒரு செய்தி மாட்டிக்குது,கச்சத்தீவு பற்றி ஒரு பதிவு போட்டு , கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது, அக்காலத்தில் திமுக பக்கோடா சாப்பிட்டுக்கிட்டு வேடிக்கை பார்த்தது ஏன் ? அப்படினு வில்லங்கமா ஒரு பதிவைப்போட்டார், ஆனாப்பாருங்க பதிவு வந்த சில நாட்களில் டெஷோ கூட்டமைப்பு சார்பாக ,கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போடப்படும்னு அறிவிப்பு வருது.

நீங்களே அந்த செய்தியப்பாருங்க,

//* கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 368வது பிரிவின்படி, பார்லிமென்டின் பரிசீலனைக்கு வைத்து, சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை, அப்படி எந்தவொரு சட்டமும், இதுவரை நிறைவேற்றபடாததால், கச்சத்தீவை இலங்கைக்கு, ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது, அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது.
* எனவே, 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், உச்சநீதி மன்றத்தை டெசோ அமைப்பு அணுகும்//

செய்தி மூலம்:
http://tamil.oneindia.in/news/2013/04/16/tamilnadu-teso-decides-approach-sc-cancel-kac-173503.html

ஹி..ஹி இதான் அந்த அலப்பரையின் தீர்க்க தரிசனப்பதிவு,
கட்சத்தீவு

அடப்பாவிகளா, 1974 இல் விட்டுக்கொடுத்துட்டு 2013 வரைக்கும் சும்மா குந்தியிருந்துட்டு , இப்போ வழக்குப்போடுவோம்னு அறிக்கை வெளியிட்டா, பொங்கலுக்கே பட்டாசு வெடிக்கிறவன், தீபாவளிக்கு சும்மா இருப்பானா அதுக்கு ஏற்றார்ப்போல  லட்டுப்போல செய்தி வந்து மாட்டிக்கிட்டதும், எல்லாம் என்னால தான், எம்பதிவை படிச்சப்பொறவு தான் "டேஷோ"தலிவருக்கு ஞானம் வந்து வழக்கு போட்டிருக்கார்னு டமாரம் அடிச்சுட்டு கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்!

ரொம்ப தாமதம் என்றாலும் 2008 இல் அம்மையார் வழக்கு போட்டாச்சு, அப்போலாம் சும்மா இருந்துட்டு இப்போ வழக்கு போட்டால் ,ஜட்ஜே கேட்பார் "ஏன் மிஸ்டர் 1974 இலே உங்க கட்சி தானே மாநில ஆட்சியில் இருந்துச்சு ,அப்போலாம் ஏன் வழக்குப்போடலைனு :-))

ஏதோ காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இப்படி எதாவது நடந்து தொலைக்குது  அதுக்கெல்லாம் வெட்டிப்பந்தா விடப்படாதுனு சொல்லலாம்னு நானும் பார்க்கிறேன் ,ஆசாமி கண்ணுலவே சிக்க மாட்டேங்கிறப்படி, நீங்களாச்சும் எங்காவது பார்த்தா சொல்லி வையுங்க, அப்பவாவது நல்லப்புத்தி வருதா பார்ப்போம்.

(நீ கலக்கு மாமு ...ALL THE BEST!!!!)

என்ன கொடுமை சார் இது!
--------------------

எல்லாமே அரசியல்-2


(ஓடாது தெரிஞ்ச பின் உஷாரா ஏறி போராட்டம்)

#ஈழப்பிரச்சினைக்காக முதலில் லயோல கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் துவக்கினார்கள், பின்னர் பலக்கல்லூரி மாணவர்களும் துவக்கினார்கள்,இதையெல்லாம் பார்த்த சில வெள்ளந்தியான பதிவர்கள் ,அடடே என்னா ஒரு தமிழுணர்வு ,இது போல யாருக்கும் வருமானு சிலிர்த்துக்கொண்டு பதிவெல்லாம் போட்டார்கள்,ஆனால் அப்பொழுதும் மாற்றுப்பார்வைக்கு பெயர் போன அலப்பரை பதிவர் ,இப்போராட்டங்களின் பின்னால் இருக்கும் அரசியலை புட்டு புட்டு வைத்தார், ஆனால் சில நாட்களுக்கு பின்னர் போராட்டம் நீர்த்துப்போக ஆரம்பித்ததும் சிலிர்த்துக்கொண்டவர்கள் எல்லாம் மனசுக்குள் சலித்துக்கொண்டு , ஐபிஎல் பார்க்க போயிட்டார்கள்.

மாணவர்கள் போராட்டத்தில் திடீர் திருப்பமாக , அதே லயோலா கல்லூரியில் இருந்து ஒரு பிரிவு மாணவர்கள் குழுவாக போய் 61 வயது ஆகியும் நரைகூடி கிழப்பருவம் அடையாத நித்திய இளைஞரான ,இளைஞரணி தலைவர் மு.க.இசுடாலினை(தமிழ்..தமிழ்) சந்தித்து இளைஞர் அணியில் ஐக்கியமாகி ,டெஷொவுக்கு ஆதரவாக போராடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இதில் உள்ள இராச தந்திரம் என்னவெனில் , முதலில் ஈழப்பிரச்சினைக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் மாணவர்கள் சைக்கிள் கேப்பில் டெஷோவை எதிர்க்கிறோம் எனவும் பதாகை பிடித்திருந்தார்கள், மேலும் தொடர்ந்து திமுகவிற்கு எதிரான விமர்சனங்களை வைத்தார்கள்,ஆனால் மறந்தும் ஆளுங்கட்சியை விமர்சிக்கவேயில்லை,இது மக்களிடயே கழகத்தின் இமேஜை டேமேஜ் செய்து வந்தது. இதனை கட்சி ரீதியாக எதிர்க்கொண்டால் எடுபடாது என புரிந்து கொண்டு ,இன்னொரு மாணவர் குழுவை வளைத்துவிட்டார்கள், இனி அவர்கள் மூலம் ஈழப்பிரச்சினைக்கான போராட்டம் ,அதே நேரம் டெஷோவையும் விளம்பரப்படுத்துவார்கள், வழக்கமாக எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை எளிதில் அனுமதி கொடுக்காது,அதுவும் ஆளுங்கட்சிக்கு விருப்பமில்லாத போராட்டம் எனில் அனுமதிக்கிடைப்பது குதிரைக்கொம்பு,

இப்பொழுது கழகத்தின் ஆதரவு மாணவரணிக்கு அனுமதி மறுத்தால், முன்னர் போராடிய மாணவர்களுக்கும் அனுமதி கொடுக்க இயலாது, அனுமதி கொடுத்தால் இரு தரப்புக்கும் கொடுக்க வேண்டும், அப்படிக்கொடுத்தால் கழகத்தின் டெஷோவிற்கு விளம்பரம் கிடைத்துவிடும்,எனவே அனுமதிக்க முடியாது ,அதே போல இனி முதலில் போராடிய மாணவர்கள் குழுவிற்கும் அனுமதி கிடைப்பது கடினம், மாணவர்களும் தடையை மீறி எல்லாம் போராட மாட்டார்கள்,எனவே இப்பொழுது தானாகவே மாணவர்கள் எழுச்சி அடங்கிவிடும், அல்லது இரு தரப்புக்கும் அனுமதிக்கொடுக்கப்படும் இதனால் கழகத்தின் இமேஜ் டேமேஜ் ஆகாமல் காக்கப்பட்டு விடும், இதுவே மஞ்சத்துண்டின் ராசதந்திரம்.

இச்சம்பவங்களே எந்த அளவுக்கு மாணவர்கள் போராட்டத்தின் பின்னால் அரசியல் இருந்து இயக்கியது என்பதனை விளக்கப்போதுமானது.

எல்லாமே அரசியல் தான்!

என்ன கொடுமை சார் இது!
-------------------------------

தனி ஆவர்த்தனம்!

ஆரம்பத்தில் பெரியாரின் திராவிடர் கழகம் திராவிட நாடு என தனி நாடு வேண்டும் என கோஷம் போட்டு வந்தது, பின்னர் தி.கவில் விருந்து பிரிந்த அண்ணதுரை அவர்கள் திமுக கண்டார், அவரும் திராவிட நாடு என முழங்கினார், பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவே ,மொழிவழி பிரிந்து இனவழி ஒன்று கூடுவோம் ,அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றெல்லாம் முழங்கினார்.

ஆனால் இதுக்கெல்லாம் மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக கி.பி 1962 இல் இந்திய அரசியல் சட்டத்தின் 19 ஆம் பிரிவில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள், இதனை பதினாராவது அரசியல் சட்டத்திருத்தம் அல்லது தனிநாடு தடைச்சட்டம் என்றார்கள். மேலும் இதனடிப்படையிலேயே பதவிப்பிரமாணமும் எடுக்க வேண்டும்.

இச்சட்டத்திருத்தத்தின் படி , இந்தியாவில் இயங்கும் எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ தனி நாடு என கோரிக்கை வைத்து இயங்கக்கூடாது, அப்படி செய்தால் தேர்தலில் போட்டியிடத்தடை விதிக்கப்படும், தேவைப்பட்டால் நிரந்தர தடையே விதிக்கப்படும்.

சட்ட திருத்த விவரங்களுக்கு காண்க...

http://indiacode.nic.in/coiweb/amend/amend16.htm

இச்சட்டத்திருத்த மசோதா விவாதத்தின் போது ராஜ்யசபாவில் அண்ணா அவர்கள் தம் கட்டி நீண்ட எதிர் விவாதம் எல்லாம் செய்தார் ஆனாலும் ,சட்டத்திருத்த மசோதா அபார வெற்றிப்பெற்றது, இனிமேல் திராவிட நாடு எனப்பேசினால் தேர்தல் தடை என்ற சூழலில் , தனிநாடுக்கோரிக்கைக்கு மூடுவிழா நடத்திவிட்டு , மத்தியில் கூட்டாச்சி ,மாநிலத்தில் சுயாட்சி என புதிய கோஷம் உருவாக்கிக்கொண்டார், அதாவது ஃபெடரல் கவெர்ண்மெண்ட் அமைப்பில் மாநிலங்களுக்கு அதிக தன்னாட்சி உரிமை கேட்பதாகும்.

இந்த பழைய மேட்டரெல்லாம் எதுக்குனு கேட்கிறிங்களா விடயம் இருக்கு, அண்ணா காலத்திலே ஊத்தி மூடப்பட்ட, ஒரு சமாச்சாரத்தினை பற்றி இப்பவும் ஒரு அரசியல் தலைவர் பேசிக்கிட்டு இருக்கார், அவர் வேறு யாருமல்ல புரட்சிப்போராளி குருமா ச்சே திருமா தான்.அவருக்கு அவ்வாறு பேசுவது அரசியல்சட்டப்படி தடை செய்யப்பட்டது என தெரியுமா என தெரியவில்லை,

சமீபத்தில் நடந்த அம்பேத்கார் பிறந்த நாள் விழாவில் வீர உரையாற்றிய திருமா, நான் நாடாளுமன்றத்திலேயே தனித்தமிழ் நாடு வேண்டும் எனக்குரல் கொடுத்தேன் என சொல்லி இருக்கிறார்.(செய்தி ஜூவியில் வந்துள்ளது)

இவ்வாறு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரின் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் சில முரணான கருத்துக்களையும் சொல்லலாம்,ஆனால் யாரேனும் ஒரு உறுப்பினர் ஆட்சேபம் தெரிவித்தால் அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்படும், மேலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால் ,சபாநாயகர் விரும்பினால் இடைநீக்கமும் செய்யலாம்.சட்ட மன்றமோ,நாடாளுமன்றமோ சபாநாயகருக்கு "வானாளவிய அதிகாரம்"உண்டு என்பது கடந்த கால வரலாறு!

எனவே நாடாளுமன்றத்தில் பேசினேன் என சொல்லிக்கொண்டு மேடைப்போட்டு பேசிக்கொண்டு இருந்தால் ,யாரேனும் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால் தேர்தலில் கலந்துக்கொள்ள தடைவிதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சூனா சாமியின் கவனத்திற்கு  இதெல்லாம் இன்னும் செல்லவில்லை போல ,தெரிந்தால் உடனே பெட்டிஷன் போட்டு அலப்பரையை கொடுக்கலாம்.(ஹி...ஹி ,வருங்காலத்தில் அப்படி நடந்தால் அடியேனின் தீர்க்க தரிசனத்தின் அருமையை  நினைவு கூறவும்)

இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு  நடைப்பெற சாத்தியமுல்ல தெலுங்கானா தனிமாநில கோரிக்கைக்கே  தெலுங்கான மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை, அப்படி இருக்க சட்டத்தின் படி நிறைவேற வாய்ப்பேயில்லாத தனிநாடு பற்றிப்பேசினேன் என பெருமையாக பேசி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்ய நினைக்கும் அரசியல் தலைவர்களை என்னவென்பது?

திருமாவிற்கு அரசியல் சட்ட நிலை என்னனு தெரிஞ்சு பேசினாரா, தெரியாம பேசினாரானு தெரியலை ஆனால் எதைப்பேசினாலும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரையில் அரசியல் கட்சிகளுக்கு வாழ்வுதான் :-))

என்ன கொடுமை சார் இது!
---------------

வாய்ப்பும்,வரமும்:



கருப்பு வெள்ளைக்காலப்படங்களில் வரும் ஜாலியான பாட்டுக்களை டப்பாங்குத்து பாட்டுக்கள் என்பார்கள், கிராமிய இசையின் பின்னணியில் பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்ப வரும் படங்களில் ஜாலியான பாட்டு என்றால் குத்துப்பாட்டு என்பார்கள், ஆனால் இசைனு சொல்லிக்கிறாப்போல எதுவும் இருக்காது, வெறும் டம்முக்கு டிப்பான் டப்பானு ஒரு பீட்ஸ் தான் பாட்டு முழுக்க ஓடும்.

மாமா ...மாமா மாமா ஏமா...ஏமானு ஜாலியான டப்பாங்குத்தாக இருப்பினும், பாட்டின் நடுவில் "தாலிக்கட்டும் முன்னே கை மேனியில் படலாமானு "கலாச்சாரமும் பேசு(பாடு)கிறார்கள் :-))

இப்போலாம் டாடி மம்மி வீட்டில் இல்லைனு நேரா இன்விட்டேஷன் தான் :-))

இந்த பாட்டில உள்ள கவனிக்க தக்க அம்சம் என்னவெனில் ,பாடலுக்கு ஆடும் ஆண் நடிகர் தான்,அவர் பெயர் "கள்ளப்பார்ட் நடராஜன்",அக்கால நாடகங்களில் வில்லனாக நடிப்பவர்களை "கள்ளப்பார்ட்"என்றும் ஹீரோவை "ராஜ பார்ட்"என்றும் சொல்வார்கள்.

நாடக நடிகர்கள் எல்லாருமே நடனம்,இசை என கற்றுக்கொண்டவர்களே, எனவே வில்லன் நடிகராக நாடகத்தில் நடித்தவர் என்றாலும் செமையா "உட்கார்ந்து எழுந்து"என குத்தாட்டம் போட்டிருக்கார். பாட்டின் நடுவில் எம்.ஆர்.ராதாவும் கனவாக ஒரு சில குத்துக்கள் போட்டிருக்கார்.

இப்படிலாம் நடனம் ஆடத்தெரிந்த நாடக நடிகர் பெரிய நடிகராக வந்தாரா என்றுப்பார்த்தால் இல்லை ,கடைசியில் பார்த்தால் தேவர் மகன் படத்தில் ரேவதிக்கு அப்பாவாக "மாயன் பார்த்தால் எங்களுக்கு தான் பிரச்சினை போயிடுங்க தம்பி "என அழுகாச்சி வசனம் பேசி நடித்தவர் இவர் தான் என தெரிய வருகிறது.

திறமை இருக்கும் பலருக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை, ஆனால் திறமை என பெரிதாக இல்லாதவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு ,கிடைத்து பின்னர் திறமையை வளர்த்துக்கொண்டு பெரிய அளவில் வந்துவிடுவதும் நடக்கிறது. வாய்ப்பு கிடைப்பதை விட வரம் கிடைக்க வேண்டும் போல!

இப்போலாம் சினிமாவில ஹீரோவாக ஆகணும் என்றால் ஹீரோவிற்கு மகனாக பிறந்திருக்க வேண்டும், அரசியலில் முதல்வராக /தலைவராக ஆக வேண்டும் என்றால் முதல்வருக்கு மகனாக பிறந்திருக்க வேண்டும் என ஆகிவிட்டது.

என்ன கொடுமை சார் இது!
--------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,ஜீவி,நன்றி!
**********

இளையராஜா இசை ராஜாவா?

$
0
0

(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி)


இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோடி அனந்த நமஷ்காரங்கள், இப்பதிவை படிக்க புகுமுன் அடியேனின் சுய விளக்கத்தினையும் மனதில் இருத்திக்கொண்டு படிக்குமாறு தாழ்மையுடன் தெண்டனிட்டு வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கிறேன், வவ்வாலாகிய நான் பலப்பல லோகாதாய விவகாரங்களையும்  எனக்கே உரித்தான தனித்துவமான முறையில் அலசி ஆய்ந்து மீஉயர் நடையில் கட்டுரைகளை வடித்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு சேவையாற்றி  வருவதை அனைவரும் அறிவீர்கள் என்பதை தன்னடக்கத்துடன் சொல்ல விழைகிறேன், ஆனால் இதுகாறும் இசைக்குறித்து பெரிதாக பிரஸ்தாபித்து எதுவும் எழுதியதில்லை காரணம் அடியேன் இசையில்  ஒரு ஞானசூனியம் என்பதை அறிந்திருப்பதாலேயாகும், ஆனாலும் கேள்வி ஞானம் சற்றுண்டு, நாக்க மூக்கா போன்ற ஸினிமா ஸங்கீத கீர்த்தனைகளை லயித்துக்கேட்கும் பழக்கமுண்டு,மேலும் சில பல ஸங்கீதக்காரர்களுடன் லேசான பரிச்சயமும் உண்டு என்பதால் அவ்வப்போது ஸங்கீத சம்பாஷணைகளில் கலந்துக்கொண்டு ஆமாமாம் நீங்க ஸொல்றது சரிதான், அது ஹரிப்பிரியா ராகமே தான் என சொல்லி ,அடேய் ஸங்கீத ஞானசூன்யமே அது கரகரப்பிரியா என பாராட்டுப்பத்திரங்கள் வாங்கிய அனுபவமுண்டு, அப்படியாப்பட்ட ஸங்கீத பின் புலமுள்ள நீ எப்படி ராசாவின் இசை ஆளுமை பற்றி எழுதக்கிளம்பினாய் என ஏகத்துக்கும் எகிறிக்குதிக்க வேண்டாம், இதற்கெல்லாம் காரணம் , ராசாவின் ரஸிக கண்மணிகளின் அளவுக்கதிமான விதந்தோம்பலேயாகும்.



இளையராஸா ஒரு அதிஅற்புதமான ஸினிமா ஸங்கீதக்காரர் என்பதில் எள்முனையளவேனும் அடியேனுக்கு சந்தேகமில்லை ,ஆனால் அவரன்றி இசையில்லை, இசையின் பிதாமகர் அவரே, இசை மேதை,ஞானி ,அவர் தும்மினாலே ஸப்தஸ்வரங்களும் ஒலிக்கும் என்பது போன்ற மிகையான விதந்தோம்பல்களை சில ரஸிக ஸிகாமணிகள் செய்வதோடு ,அதற்கு ஆதாரம் இதோ என ஆட்டுத்தாடி வைத்த சிலரின் கட்டுரைகளை வேறு சான்றாவணமாக காட்டிக்கொள்கிறார்கள்,அப்படியான ஒரு கட்டுரையை மிக ஸமீபத்தில் இணையத்தில் வாஸிக்க நேரிட்டது, மேற்கத்திய இசையென்றால் மேற்கு திசையை நோக்கி வாஸிப்பது என்ற அளவில் ஞானமுள்ள எனக்கே அக்கட்டுரை தம்புராவில் தவில் வாசித்தார் என்பது போல மிகசெயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஒன்று என உடுப்பி ஓட்டல் உளுத்தம் வடை ஓட்டை போல தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

எனவே இசை ஞானமில்லை என இனியும் வாளாவிருந்தால் நாளைய தமிழ்கூறும் நல்லுலகம் இது போன்ற மொள்ளமாரித்தனங்கள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஸமூகபிரக்ஞையுள்ள வவ்வால் எப்படி சும்மா இருந்தார் என நாக்குமேல பல்லுப்போட்டு நாராசமாக கேட்கும் என்பதால் , கூச்சத்தினை கூறையில் ஏற்றிவிட்டு வெட்கமில்லாமல் கேள்வி ஞானத்தினை வைத்தே ஒரு இசைக்கட்டுடைத்தல் கட்டுரை படைத்துள்ளேன், இதில் உள்ளதெல்லாம் கூகிளாண்டவர் துப்பிய எச்சில்களே ஏதேனும் பிழையிருந்தால் அடியேன் பொறுப்பல்ல,இப்பாலகனை உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக பாவித்து அடியேனின் சண்டப்பிரசண்டங்களை மன்னித்து அருள்வீராக!

இனி மேற்கொண்டு இசைக்கட்டுடைத்தல் சாகித்தியத்தினுள் செல்லலாம்,

மூலப்பதிவு: இளையராஜா


//ஒரு முறை எனது இசை வகுப்பின் ஆசிரியர் மேற்கத்திய இசையின் கூட்டுச்சுரங்கள் [ chord ] பற்றிய பாடத்தில்  'C' மேஜர் ஸ்கேல் பற்றிய பாடத்தை நடத்தினார்.
அப்போது 'C'மேஜர் ஸ்கேலின்... முதல் கார்டு 'C'மேஜர்.
இரண்டாவது கார்டு... 'D'மைனர் [ 'D' minor ].
ஒரு பாடலின்  'ஏற்பாட்டில்' [ arrangements ] இந்த இரண்டு 'கார்டு'களையும் அடுத்தடுத்து இசைப்பது தவறானது என்று சொன்னார்.//

chord or scale or key என எப்படி சொன்னாலும் பொருள் ஒன்றே, எனவே  'C'மேஜர் ஸ்கேலில் முதல் கார்டு "சி"மேஜர் எனவும் அடுத்து வருவது டி மைனர் ஸ்கேல் அதனை வாசிக்க மாட்டர்கள் என்பதே தவறு.

சி மேஜர் ஸ்கேலின் இசைக்குறிப்பு படம்.



இதில் C,D,E என வருவதெல்லாம் கார்டு அல்ல , பிட்ச்,அல்லது நோட் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒரு டோன் ஆகும். இது போல பல டோன்கள் உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஷார்ப்,ஃப்ளாட், மீடியம் என மாறுபட்ட டோன்கள் உண்டு.

கர்நாடக ஸாஸ்திரிய ஸங்கீதத்தில் வரும் ஸ,ரி,க,ம,ப,த,நி  ஸ்வரங்கள் போன்றவை மேற்கத்திய ஸாஸ்திரிய ஸங்கீத "A,B,C,D,E,F,G "எனப்படும் நோட்கள். இராகங்கள் போன்றவை கார்டு/ஸ்கேல்/கீ ஆகியவை.

கார்டு,ஸ்கேல் எல்லாம் ஒன்று என புரியாமல் ,அதில் வரும் நோட்களை கார்டுகளாக பாவித்து "C"மேஜர் கார்டுக்கு அடுத்து "D"மைனர் கார்டு ,"C"மேஜர் ஸ்கேலில் வராது என்கிறார்.

படத்தில் பார்த்தால் ,"C"மேஜர் ஸ்கேலின் நோட்டில் "C"க்கு அடுத்து "D"வருவதை காணலாம் ஆனால் இவை எல்லாம் "நோட்"அல்லது பிட்ச் ஆகும் , கார்டு அல்ல, இயல்பாகவே "C"மேஜர் ஸ்கேலில் "D"மைனர் கார்டு இல்லை ,அங்கு வருவது நோட் ஆகும், ஆனால் என்னமோ "C"மேஜர்  ஸ்கேலின் உள்ளே இருக்கும் பகுதி நோட்கள் "சி மேஜர்"&"டி"மைனர் என்பது போல விதிப்படி வராது என சொல்லி இருக்கிறார் :-))

ஆனால் கார்டு புராகிரஷன் என்பது வேறு ,அதனைக்கொண்டு வந்து ஒரு கார்டு/ஸ்கேலில் அடுத்து வாசிக்கும் நோட்களுடன் குழப்பி , அங்கே "D"மைனர் கார்டு "C"மேஜர் ஸ்கேலில் ,"C"மேஜருக்கு அடுத்து வராது என மெனக்கெட்டு சொல்லியுள்ளார்.

மேஜரோ மைனரோ ஒரு கார்டுக்குள் இருப்பதெல்லாம் நோட்கள், கார்டு அல்ல, கார்டும்,ஸ்கேலும் ஒன்றே.

இப்பொழுது "சி"மேஜர் கார்டு, டி மைனர் கார்டு பற்றியும் ,கார்டு புராகிரஷன் பற்றியும் என்ன சொல்கிறது இசை விதி எனப்பார்ப்போம்.

மேற்கத்திய இசையில் A,B,C,D,E,F,G எனத்தனியே நோட்/டோன்/பிட்ச் உண்டு , இவற்றின் கலவையில் இதே போல வரிசையாக A,B,C,D,E,F,G  என கார்டு/ஸ்கேல்/கீ  உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றுக்கும் மேஜர் கார்டு,மைனர் கார்டு என இரு வகை உண்டு.இந்தக்கார்டுகளை அடுத்தடுத்து "ஹார்மோனியாக"வாசிப்பதே மெலடி எனப்படும் இசை ஆகும்.

மேற்கத்திய இசையில் ஆதாரமாக ,ஸ்திரமான பிட்ச்சில் இருப்பது "C"கார்டு என்பதால் எல்லா வாத்தியத்திலும் "C"கார்டு எளிதாக தெளிவாக வாசிக்க முடியும் எனவே "C"கார்டினை மையமாக வைத்தே இசை விதிகள் இருக்கும்.

இசை விதிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் இசையமைப்பதை எளிதாக்கவே. விதியை பின்ப்பற்றுவது கடினமாக இருப்பதால் தானே இசைக்கற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது பின்னர் எப்படி விதி எளிதாக்கும்னு நினைக்கலாம்.

உதாரணமாக கிரிக்கெட்டின் "ஃபீல்டிங் பொசிஷண்களை"பார்க்கலாம். பாயிண்ட், சில்லி பாயிண்ட், கல்லி, பைன் லெக்,டீப் பைன் லெக், லாங் ஆன்,லாங்க் ஆப்,மிட் ஆன்,மிட் ஆஃப் என பெயர் வைத்து அங்கெல்லாம் ஏன் ஆட்களை நிறுத்த வேண்டும் ,நிறைய இடம் இருக்கே இஷ்டத்துக்கு நிக்க வச்சா என்ன?  காரணம் என்னவெனில் ஒரு பேட்ஸ்மேன் பந்தினை அடித்தால் இயல்பாக இப்படி பெயர் சூட்டப்பட்ட புள்ளிகளின் வழியே அல்லது அருகே தான் செல்லும், பல ஆண்டுகளாக ஆடி, பந்து பயணிக்கும் பாதைகளை கவனித்து பின்னரே "ஃபீல்டிங் பொசிஷன்கள்"தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போ இன்னார் எப்படி அடிப்பாங்கனு தெரியாம எங்கே நிறுத்துவது என யோசிக்காமல் போனதும் "ஸ்டேண்டர்ட் பீல்டிங்"பொசிஷணில் ஆட்களை நிறுத்துவது நேரம் சேமிக்க உதவும், ஆட்டத்தினையும் எளிதாக்குகிறது அல்லவா?

அதே போல எந்த நோட், கார்டு எப்போ வாசிச்சா இனிமையாக இருக்கும்னு பல ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் இசை விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மேஜர் கார்டு, மைனர் கார்டு இடையே உள்ள ஒத்திசைவை வைத்து தொடர்பினை உருவாக்கியுள்ளார்கள். இத்தொடர்பின் அடிப்படையில் கார்டு புராகிரஷனை உருவாக்குவார்கள்.

ஒன்றுக்கொன்று இடையேயுள்ள தொடர்பின் அடிப்படையில் ரிலேட்டிவ் CHORD என்பார்கள். இதனை கணித்து உருவாக்கப்பட்ட விதியை"circle of fifth"என்பார்கள்.

படம்.



வெளிவட்டத்தில் வருவது மேஜர் கார்டு, உள்வட்டத்தில் இருப்பது மைனர் கார்டு.

12 மணி நிலையில் துவக்கமாக அமைவது "c"மேஜர் கார்டு அதில் இருந்து கடிகாரச்சுற்றில் ஒவ்வொரு ரிலேட்டிவ் கீயும் செல்கிறது.  மிக அருகில் இருப்பதே முன்மையான ரிலேட்டிவ் கீ ஆகும்.

இந்த விதிப்படி "C"மேஜருக்கு முதன்மையான ரிலேட்டிவ் கீ 'A"மைனர் ஆகும்.

C மேஜரின் நேரடி மைனர் கீ ஆன "C"மைனர் பேரலல் மைனர் எனப்படும்.

இந்த இரண்டு கீ களும் "C"மேஜருடன் நல்ல ஒத்திசைவு கொடுக்கும் என்பதால் அடுத்தடுத்து வாசிக்கவும் எளிதாக இருக்கும்,இனிமையாகவும் இருக்கும் என்பதால் , C மேஜர்  ஐ, A மைனர் அல்லது "C"மைனர் காம்பினேஷனில் இசையமைப்பது இனிமையான மெலடிக்கு உத்திரவாதம் என எளிமைப்படுத்துவதே இசை விதி.

இது போல ஒவ்வொரு மேஜர் கீக்கும் ரிலேட்டிவ் கீ, பேரலல் கீ "circle of fifth "விதிப்படி கண்டுப்பிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விதி எப்படி செயல்படுகிறது எனில் ,

ஒரு மேஜர் கார்டின் நோட்களை வரிசையாக எழுதினால் , ஒன்றாவது ரூட் நோட்டில் இருந்து ஆறாவதாக உள்ள நோட்டே ரிலேடிவ் மைனர் கீ ஆகும்.

அதே போல ஒரு மைனர் கீ ரீயின் ரிலேட்டிவ் மேஜர் என்னவெனில் மூன்றாவதாக வரும்  நோட் ஆகும்.

"சீ"மேஜரின் நோட்கள்,

C, D, E, F, G, A, B, C

http://en.wikipedia.org/wiki/C_major

இதில் ஆறாவதாக வருவது "A"நோட் ஆகும் இதுவே , C மேஜரின் ரிலேட்டிவ் மைனர் ஆகும்.

ஒரு மேஜர் கீயின் பகுதி நோட்கள் அப்படியே அதன் ரிலேட்டிவ் மைனர் கீ இல் இருக்கும், எனவே அடுத்தடுத்து வாசிக்க எளிதாக இருக்கும், இதனடிப்படையிலேயே "ரிலேட்டிவ்"கீ என்கிறார்கள்.

A மைனரின் பகுதி நோட்கள்.

A, B, C, D, E, F, G, A

சீ மேஜரின் பகுதி நோட்கள் அப்படியே கொஞ்சம் வரீசை மாறி வருவதை காணலாம். மேலும் மூன்றவதாக "C"நோட் உள்ளது.

இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோடி இசை அறிஞர்கள் வாசித்து பார்த்து அதன் ஒத்திசைவு தொடர்புகளை அனுபவ ரீதியாக அலசி உருவாக்கப்பட்டது.

கடிகாரச்சுற்றில் நெருக்கமாக உள்ள மேஜர், மைனர்கள் ஹார்மனியை உருவாக்கும் என்பதால் அதையே பின்ப்பற்றுவது வழமை.

அதற்காக தொலைவாக உள்ள ஒரு மேஜர்,மைனர் கீ காம்பினேஷனில் இசை அமைக்க கூடாது என்றெல்லாம் கட்டாயம் எல்லாம் இல்லை. அமைக்கலாம். அதற்கும் ஒரு பேர் வைத்துள்ளார்கள் "ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ்"(RELATIVE KEY PARADOX).

கடிகாரச்சுற்றின் அடிப்படையில் , C மேஜருக்கு மிக தொலைவாக உள்ள மைனர் கீ "D"மைனர் ஆகும். எனவே காம்பினேஷனில் வாசிக்க விரும்புவதில்லை, ஆனால் வாசிக்கவே மாட்டார்கள்,கூடாது என இல்லை, அப்படி தொலைவான மைனர்களையும் சேர்த்து வாசிப்பதை சில தேவைகளுக்கு பயன்படுத்துவார்கள்.

மேலை சாஸ்திரிய சங்கீதத்தில் அதிகம் முரணாக வாசிக்க மாட்டார்கள் ஆனால் ஜாஸ், பாப் எனப்படும் இசைகளில் இப்படி உட்டாலக்கடியா சேர்த்து இசையமைப்பார்கள் ஏனெனில் அவை பாரம்பரிய இசையல்ல, வழமைக்கு மாறான முறையில் இசைக்கோர்வை செய்வது இயல்பு.

ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால் தேவையான மூட் மற்றும் மெலடி உருவாக்கவே. பாப் ,ராக்,ஜாஸ்,ராக் அன்ட் ரோல் கண்ரி இசைகளில் பாரம்பரிய விதிகளை விட இனிமை,எளிமைக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள்.

திரையிசை எனப்படுவது ஸாஸ்திரிய ஸங்கீதமே அல்ல ,அது விதிகளற்ற கலவையான இசை வடிவம் ஆகும்," fusion of amalgamated contemporary music"எனலாம். அப்படி இருக்கும் போது அதில் விதிக்கு மாறாக இசைகோர்வை செய்வது தான் இயல்பே ஆனால் அப்படி செய்து விட்டதாய் சொல்லி இசை மேதை என ஒருவரை மெச்சுவது உலகமகா காமெடி.

இதில் இன்னொரு காமெடி அப்படி மாற்றி செய்வதையும் ஸாஸ்திரிய இசை ஒரு உபவிதியாக அனுமதிக்கிறது. எனவே புதுமை படைத்தார் ,இசை விதியை திருத்தினார் என்றேல்லாம் கூத்தாடுவதே அபத்தம்.

தொலைவான ரிலேட்டிவ் மைனர் கீகளை ஏன் பயன்ப்படுத்துகிறார்கள் எனப்பார்ப்போம்.

மேலை இசையில் ஒவ்வொரு மேஜர் கார்டு/ஸ்கேல்/கீயும் மகிழ்வான உணர்ச்சியை இசையில் அளிக்க வல்லவை. கடிகாரச்சுற்றில் செல்ல செல்ல மகிழ்ச்சி உணர்வு கூடும் எனலாம்.

அதே போல ஒவ்வொரு மைனர் கீகளும் சோக உணர்வை அளிக்க வல்லவை. கடிகார சுற்றில் செல்ல செல்ல சோகம் கூடும் எனலாம்.

இப்போ C மேஜர், D மைனர் நிலை என்னவென பார்ப்போம்.

C மேஜர் மகிழ்வான கீ, அதற்கு வெகு தொலைவில் அமைந்திருப்பதே "D"மைனர் எனவே மிக சோக உணர்வை தரும்.

C மேஜர் -D மைனர் என அடுத்தடுத்து வாசித்தால் அந்த இசை மகிழ்வா, சோகமா என இனம் காண முடியாது என்பதால் ஸாஸ்திரிய இசையில் பெரும்பாலும் பயன்ப்படுத்துவதில்லை.

ஆனால் பாப் இசை போன்றவற்றில் இப்படி அடிக்கடி தொலைவான ரிலேட்டிவ் மைனர்களை பயன்ப்படுத்தி இசை உணர்வில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்குவார்கள்.

இசை உளவியலில் கூட இதனை பயன்ப்படுத்தி ஆய்வுகள் செய்துள்ளார்கள். தொலைவான ரிலேட்டிவ் மைனர் காம்பினேஷனான C மேஜர்- D மைனர் இல் அமைக்கப்பட்ட இசைக்குறிப்புகளை வாசிக்க சொல்லி கேட்க வைத்து பயனாளர்கள் என்ன உணர்ந்தார்கள் எனக்கேட்டப்பொழுது சிலர் மகிழ்ச்சியான இசை என்றும் சிலர் சோகமான இசை என்றும் சொல்லியுள்ளார்கள்.

மேலும் கேட்பவரின் மூடைப்பொறுத்து ஆரோகணமாகவும்( ஏறுவரிசை),அவரோகணமாகவும்(இறங்கு வரிசை) இசை ஒலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இசைக்குறிப்பின் பிட்ச் மாறாமல் நிலையாகவே இருந்துள்ளது. எனவே தான் இவ்வாறு இசைகோர்வை உருவாக்குவதை "ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ்"என்கிறார்கள்.

ஒரே இசைக்கோர்வை ஏறுவரிசையாகவும் ,இறங்குவரிசையாக உணர செய்யும் இவ்விசையமைப்பை ஆய்வு செய்து வரிசைப்படுத்தியவர்" Roger Shepard," (1964)என்ற ஆய்வாளர் எனவே ஷெப்பர்ட் ஸ்கேல் என்றே அழைக்கப்படுகிறது.

எந்த ஒரு சிந்தசைசரும் இல்லாமல் டாப்ளர் விளைவை உருவாக்குகிறது இம்முறை எனவே ஹாலிவுட் திரைப்படங்களில்  பின்னணி இசையில் சிறப்பு ஒலியை உருவாக்க ஷெப்பர்ட் ஸ்கேல் அடிப்படையில் இசைகோர்வை அமைப்பதுண்டு. பேட்மன் படங்களில் பேட்மென் ஓட்டும் பைக் வேகம்மெடுத்து செல்வதை ஒலியியல் ரீதியாக காட்ட ஷெப்பர்ட் ஸ்கேல் முறையில் இசையமைக்கபடுகிறது.

ஷெப்பர்ட் 1964 இல் வகைப்படுத்தினாலும், இவ்வாறு தொலைவான ரிலேட்டிவ் மைனர் காம்பினேஷனில் இசைக்கோர்வை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் ஜெர்மானிய இசை மேதை "பாக்"(Johann Sebastian Bach,1685-1750) ஆவார். சொல்லப்போனால் பியானோவுக்கு என இசைக்குறிப்பு எழுதிய முதல் இசையமைப்பாளரே அவர் தான், அவரது காலத்தில் தான் பியானோ கண்டுப்பிடிக்கப்பட்டது, ஜெர்மானிய மன்னர் முதல் பியானோவை வாங்கி அதற்கு இசைக்குறிப்பு எழுத சொன்னார், பின்னர் ஒரு சவாலும் விடவே ரிலேட்டிவ் கீ பேராடாக்ஸ் என்ற விதி உருவாகாத காலத்திலேயே தொலைவான மேஜர்-மைனர் கீ காம்பினேஷனில் இசையமைத்து கேட்பவர்களின் மனநிலைக்கு ஏற்ப ஏறுவரிசை அல்லது இறங்குவரிசை பிட்சில் ஒலிப்பது போல செய்துக்காட்டினார்.

பிரபல பாப்,ராக் இசைக்குழுவினர்கள் பாடல்களில் இம்முறை அதிகம் இருக்கும், பாப் மார்லே, பாப் டைலான், பீட்டில்ஸ் பாடல்களில் இத்தகைய ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ் இசையமைப்பு அதிகம் காணக்கிடைக்கும். ரிலேட்டிவ் கீ பேரடாக்சில் இசையமைக்க எளிய கட்டை விரல் விதி , எதிர்க்கடிகார சுற்றில் மைனர் கீ காம்பினேஷன் தேர்வு செய்வதாகும், C மேஜருக்கு , D மைனர் எதிர்க்கடிகார சுற்றில் மிக அன்மை மைனர் ஆகும் எனவே மகிழ்வு ,சோகம் என ஒரே இசைக்கோர்வையில் கேட்பவரின் மனநிலைக்கு ஏற்ப ஒரு ஒலிச்சித்திரத்தினை உருவாக்கும்.

இப்போ நீங்களே சொல்லுங்கப்பா, C மேஜர்- D மைனர் காம்பினேஷனில் அழகிய கண்ணே பாடலை இசையமைத்தது மாபெரும் இசைப்புரட்சியா என?
உதிரிப்பூக்கள் படத்தில் ஒரு தாய் தன் குழந்தைகளுடன் மகிழ்வாக இருப்பதாக காட்ட வேண்டிய சூழலில் தேவையே இல்லாமல் மகிழ்வா சோகமா என இனம்பிரிக்க முடியாமல் இசையமைத்துள்ளார் எனலாம் ஆனால் பொதுவாக அப்பாடல் சோக உணர்வை தூண்டும் வகையில் ஒலிக்கும், ஒரு வேலை சோகத்தினை மனதில் வைத்திருக்கும் நாயகி குழந்தைகளுக்காக மகிழ்வாக இருப்பதாக காட்ட வேண்டும் என இயக்குனர் சூழலை விவரித்து  அவ்வாறு பாடல் அமைத்திருக்கலாம், எனவே சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இனிமையான பாடல் எனலாம் ,ஆனால் இசைப்புரட்சி என்பதெல்லாம் மிகையான ஒன்று.

# மேலும் அந்த ஸங்கீத ஆய்வாளர் கர்நாடக ஸங்கீதத்தினையும் கொத்துக்கறி போட்டுள்ளார்,

//கர்நாடக சங்கீதத்திலும்  'ஸட்ஜமம்'என்கிற முதல் ஸ்வரத்திற்கு,
அதற்கு அடுத்து வருகிற இரண்டாவது ஸ்வரமான  'ரிஷபம்'பகை ஸ்வரம்.//

இது எப்படினு என் மரமண்டைக்கு புரியவில்லை, நம்ம கேள்வி ஞானத்தினை துருவியதில் எனக்கு கிடைத்த விளக்கத்தினைப்பார்ப்போம் ,,

கர்நாடக இசையில் ஏழு ஸ்வரங்கள் உள்ளன,

ஸ,ரி,க,ம,ப,த,நி

இவற்றினை ஸப்தஸ்வரங்கள் என்பார்கள் இவற்றின் கூட்டுக்கலவையில் தான் ராகங்கள் உருவாகின்றன.

இதில் "ஸ" (ஸட்ஷமம்) ,"ப"(பஞ்சமம்) ஆகியவை மாறாத (அச்சல) ஸ்ருதி கொண்டவை. மற்றவை மாறக்கூடிய ஸ்ருதி கொண்டவை அவற்றிற்கு கோமல்(ஃப்ளாட்) ,தீவிரம், மத்திமம் என மூன்று ஸ்ருதிகள் உண்டு , இவற்றை எல்லாம் கூட்டினால் 16 ஸ்ருதி நிலைகள் வரும் ,இதன் அடிப்படையில் தான் 16 கர்நாடக ராகங்கள் உருவாகின, இராகங்கள் பதினாறு உருவான வரலாறு இதுவே.

பின்னர் இந்த 16 ஸ்ருதி நிலைகள் அடிப்படையில் 72 இராகங்கள் உருவாகின அவற்றை 72 மேல கர்த்தா இராகம் என்பார்கள். இதான் கர்நாடக ஸங்கீதத்தின் அடிப்படை இராகங்கள். இம்முறையை உருவாக்கியவர் வேங்கடமஹி எனும் இசை அறிஞர் ஆவார். மேல கர்த்தா ராகங்களில் இருந்து உருவாகும் ராகங்கள் ஜன்ய ராகம் எனப்ப்படும். பல இராகங்கள் இவ்வாறு உருவாகியுள்ளன, ஆதியில் மில்லியன் கணக்கில் இராகங்கள் இருந்துள்ளன இப்பொழுது சுமார் 300 இராகங்களே நிலைத்துள்ளன.

மேலகர்த்தா இராகங்கள் 72 இலும் ஏழு ஸ்வரங்களும் வரும் என்பதால் "சம்பூர்ண இராகங்கள்"என்பார்கள். எல்லா மேலகர்த்தா இராகங்களும் சம்பூர்ண இராகங்கள் ஆனால் எல்லா சம்பூர்ண இராகங்களும் மேலகர்த்தா இராகம் அல்ல.அதாவது குமரிகள் எல்லாம் கிழவிகள் ஆகலாம்,ஆனால் கிழவிகள் எக்காலத்திலும் குமரிகள் ஆக மாட்டார்கள் :-))

இப்போ எதுக்கு இந்த அடிப்படை கர்நாடக ஸங்கீத போதனைகள் என கேட்கிறீர்களா , மேட்டர் இருக்குதுள்ள, கர்நாடக ஸங்கீதம் பயில ஆரம்பிக்கும் போது பால பாடமாக ஆரம்பிப்பது "மாய மாளவ கெளளை"என்ற இராகத்தில் இருந்து தான் , இது ஒரு மேலகர்த்தா இராகம் இதன் சிறப்பு என்னவெனில் இதன் பகுதி ஸ்வரங்கள் அப்படியே ஸ,ரி,க,ம,ப,த,நி"என வருவதே ஆகும்.

எனவே மாய மாலவ கெளளை பயின்றால் ஏழு ஸ்வரங்களும் பழக்கமாகிவிடும் , பின்னர் படிப்படியா மற்ற இராகங்கள் பயில்வது எளிது. இந்த இராகத்தில் "ஸட்ஜமம்"அடுத்து "ரிஷபம்"வருகிறதே பின்னர் எப்படி பகை ஸ்வரமாச்சு?

மாய மாளவ கெளளை மட்டுமில்லை பல மேலக்கர்த்தா இராங்களிலும், அவற்றின் இருந்து உருவான ஜன்ய இராகங்களிலும் "சட்ஜமம், அடுத்து 'ரிஷபம்"வருவகிறது, ஆனால் நம்ம ஆய்வாளார் பகை ஸ்வரம் அடுத்தடுத்து வராது, இராசா தான் பகை ஸ்வரம் எல்லாம் வச்சு இசைப்போடுவார்னு பெருமை பாடுகிறார்.

இதை வேற ஒரு பதிப்பகம் புத்தகமாக போட்டிருக்கு, அதை எடுத்து பதிவா போட்டு ராசானா ராசா தான்னு ஒருத்தர் எசப்பாட்டு பாடுறார், ஜால்ரா அடிக்கிறது தான் அடிக்குறிங்க ஏன் எதுக்குனு ஒரு வெளக்கம் கொடுத்துட்டு அடிங்கப்பா, நீங்கப்பாட்டுக்கு மனசுக்கு தோணினாப்போல ஜால்ரா வாசிச்சிடுறிங்க, இது எப்படினு புரியலையேனு என்ன போல ஞானசூனியங்களுக்கு விளங்காம போயிடுறதால கூகிளை தோண்டி உண்மையை கண்டுப்பிடிச்சு தொலைய வேண்டியிருக்கு அவ்வ்!

# அடுத்த உலகமாக இசை சாதனையாக கீழ்கண்டதை திருவாய் மலர்ந்தருளியுள்ளார்(எழுத்து வடிவில் தான்)

//இதைப்போல 'ஹார்மனி' [ harmony ] பற்றிய பாடத்தில் ஒரு இசையை இயற்றும்போது
ஒரு ஸ்வரத்திலிருந்து அடுத்த ஸ்வரத்திற்கு நகருகையில் ஒரு ஒழுங்கான இயக்கம்  [ Movement ] இருக்க வேண்டும்.
முதல் ஸ்வரத்திலிருந்து, ஏழாவது ஸ்வரத்திற்கு தாவுதல் போன்ற
 'கிரேட் ஜம்ப்' [ great jump ] செய்யக்கூடாது.
அது இனிமையாக இருக்காது என்பது இசைக்கோட்பாடு.
இசை விதியும் கூட.
 ‘செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே’ என்ற  ‘16 வயதினிலே’ படப்பாடலை கேட்கும் போதும், 
‘என்னுள்ளே எங்கோ...ஏங்கும் கீதம்’  என்ற  ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படப்பாடலின் 'ஹம்மிங்'கேட்கும் போதும், 
இந்த விதி இவரால் எவ்வளவு அழகாக மீறப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது.//

ஆனாப்பாருங்க இதப்போல லாங்க் ஜம்ப்,ஷார்ட் ஜம்ப்பெல்லாம் அடிக்கலாம்னு மேலை உலக ஸாஸ்திரிய ஸங்கீதமே அனுமதித்து அதுக்கு பெயரெல்லாம் வச்சு இருக்கு :-))

கார்டு புராகிரஷனில் ஹார்மொனியா ஒன்றுக்கு அடுத்து இன்னொன்று என நோட்களை வாசிப்பதை "arpeggio"என்கிறார்கள், அதே சமயம் ஒரு பிட்சுக்கு இன்னொரு பிட்ச் சம்பந்தமில்லாமல் வாசிப்பதை " Non-harmonic arpeggio"என்கிறார்கள். இவ்வாறு இசையமைப்பதை "modal frame"இசைக்கோர்வை என்கிறார்கள்.

கார்டுகளின் அடிப்படையில் தொடர்பெல்லாம் பார்க்காமல் கேட்க இனிமையாக இருக்கிறதா அப்போ சரி தான் என நோட்களை பயன்ப்படுத்தி அமைக்கும் இசை வகை இது.

ஆப்ரிக்கன், கியுபன்,அமெரிக்கன் ஜாஸ்,ரிதம் அன்ட் ப்ளூஸ் ,பாப் இசை எல்லாம் இப்படியானவை, இன்னும் லத்தின்,சைனீசிஸ்,ஸ்பானிசில் எல்லாம் இவை உண்டு.

பீட்டில்ஸ் இசையமைத்த பலப்பாடல்கள் இப்படியான "modal frame"வகை இசைகளே, ஒரு கார்டில் இருந்து தொலைவான கார்டுக்கு ஜம்படிப்பார்கள், கேட்கும் போதே உணர முடியும்.

ஒரு டோனுடன்( இந்திய இணை ஸ்வரம்) ஒத்துப்போகாமல்  இருப்பதை "atonic"என்பார்கள் பொதுவாக இப்படியான இசைக்கோர்வைகளை "melodic triad"வகை இசை என்பார்கள்.

அதாவது வரிசையாக ஒருக்கார்டில் இருந்து இன்னொரு கார்டுக்கு செல்வதை "ஸ்டெப்"என்பார்கள் இதனை conjunct motion எனக்குறிப்பிடுகிறார்கள்.

அப்படி இல்லாமல் ஒரு கார்டில் இருந்து தொடர்சியில்லாத தொலைவான இன்னொரு உயர்ந்த /தாழ்ந்த ஸ்கேல் உள்ள கார்டுக்கு ஜம்படிப்பதை "ஸ்கிப்"என்பார்கள், இதனை " disjunct motion"எனக்குறிப்பிடுவார்கள்.

இசையமைப்பாளரின் கற்பனை வளத்துக்கேற்ப ஸ்டெப் அல்லது ஸ்கிப்பில் இசை அமைக்கலாம், இப்படி செய்வதில் "பீட்டில்ஸ்"குழுவினர் வல்லவர்கள்.

பீட்டில்ஸ் கார்டு புராகிரஷனில் அடிக்கும் ஜம்ப்களை படமாக பாருங்கள்,

படம்-1



படம்-2



படம்-3



ஸாஸ்திரிய ஸங்கீதமும் தேவைப்பட்டால் "ஜம்ப்"அடிக்கலாம் என்கிறது , நவீன இசையான ஜாஸ்,ப்ளூஸ், ராக் அன்ட் ரோல், பாப் என எல்லாவற்றிலும் ஸ்டெப்&ஸ்கிப் பயன்ப்படுத்தப்பட்டும் வருகிறது. இவ்வகை இசைகளில் விதிக்கு முக்கியத்துவமில்லை, கேட்க இனிமையாகவும், ஒரு பரவச மனநிலையையும் உருவாக்க வேண்டும்,அதனால் தான் பீட்டில்ஸ் பாடல்களை கேட்பவர்களை உடனே கவர்ந்து ஆட்டம் போட வைத்தது எனலாம்.

இசையமைப்பதில் கார்டு புரகிரஷனில் ஜம்ப்படித்து புதுமை செய்து உலக இசைக்கே பம்ப்படித்தவர் ராசா மட்டுமே என நம்ம ஊரு ஆய்வாளார் ஆகா ஓஹோ என சொல்வதை கேட்டால் பாப் டைலான், பாப் மார்லே, பீட்டில்ஸ் ரசிகர்கள் எல்லாம் காறித்துப்பிட மாட்டாங்கோ :-))

# //'கார்டு புரோகிரஸ்ஸனில்' [ Chord progression ] 
 'டிஸ்கார்டு' [ dischord ] என்று ஒதுக்கப்படுபவைகளைக்கூட,
இவர் இனிமையாக கையாள்கிற விதம் ஆச்சரியமானது.
 ‘ என் வானிலே...ஒரே வெண்ணிலா’ என்ற ஜானி படப்பாடலின் ஸ்வரங்களின் முரனான தொடர்ச்சியும், 
அதன் போக்குகேற்ப புனையப்படும்  ‘கார்டு'களின் தொடர்ச்சியும் அலாதியானது.//

மேற்சொன்னது atonal ,disjunct ,dissonance வகை இசையமைப்பே, நியோ கிளாசிக் இசை என்ற வகையில் இவ்வாறு டிஸ்கார்டு நோட்களை பயன்ப்படுத்துவது வழக்கம், இதற்கான பிள்ளையார் சுழியை போட்டது ஜெர்மானிய இசையமைப்பாளர் Richard Wagner(1813-1883) அவரது opera Tristan und Isolde வில் இம்முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் ,எனவே டிஸ்கார்ட் வகை நோட்கள் கொண்ட கார்டினை Tristan chord எனவும் குறிப்பது உண்டு. ஜாஸ் வகை இசையில் அதிகம் டிஸ்கார்டு புழக்கம் உண்டு.

டிஸ்கார்டு இசையை கிருத்துவ தேவாலயங்கள் தடை செய்துள்ளன ,காரணம் டிஸ்கார்ட் இசை சாத்தானை தூண்டும் என்ற நம்பிக்கை எனவே  "devil in the music"என்பார்கள். ஆரம்ப காலத்தில் டிஸ்கார்டு இசை அமைக்க தடை இருந்தது, பின்னர் நவீன இசை உருவான காலத்தில் பலரும் டிஸ்கார்டு வகையில் இசை அமைத்துள்ளார்கள்.

இந்திய கர்நாடக இசையிலும் ஒரு ராகத்திற்கு பொருந்தாத (dissonant ) ஸ்வரத்தினை கூட சேர்த்து வாசிக்கலாம், இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு ஜன்ய ராகத்தினை ஏழு ஸ்வரங்கள் கொண்ட சம்பூர்ண ராகம் போல இசைக்க முடியும்,ஆனால் அவை சம்பூர்ண ராகமல்ல. இவ்வாறு பொருந்தாத ,இல்லாத ஸ்வரத்தினை சேர்த்து வாசிப்பதை "விவாதி ஸ்வரம்"என்கிறார்கள். கர்நாடக ஸங்கீத டிஸ்கார்டு எனலாம்.

//Vivadi swara is a dissonant note, perceived by many in the musical world, to be an enemy note. That is probably the reason why vivadi melas were called ragas with “dosha” (some harmful element like an enemy perhaps!). According to Prof. Sambamurthy, vivadi melas are those scales which take one of the following notes: shatshruti rishabha (R3). Suddha Gandhara (Ga1), shatshruti dhaivata (Dha 3) and suddha nishada (Ni1). There are 40 such ragas which are supposed to have vivadi dosha.//

http://www.carnaticdarbar.com/views_01.htm

# தளபதி திரைப்படத்தில் வரும் ராக்கம்மா கையத்தட்டு பாடலில்  "குனித்த புருவமும்"என நடுவே கர்நாடக ஸங்கீதத்தினை பயன்ப்படுத்தி புரட்சி செய்துள்ளார் எனவும் சிலாகிக்கிறார் நம்ம ஆய்வாளர், திரை இசை என்பதே கலவையான இசை எனும் நிலையில் கர்நாடிக் வந்தால் என்ன இந்துஸ்தானி வந்தால் என்ன அதெல்லாம் புரட்சியா?

இதில் என்ன காமெடினா இப்படிலாம் ஃபியுஷன் செய்வது ரொம்ப நாளா உள்ள ஒன்று ,மேற்கத்திய பாப் இசையில் இப்படி செய்வதை "கவுண்டர் கல்ச்சர்"இசை என்கிறார்கள் இதனை "psychadelic pop"இசை எனவும் சொல்கிறார்கள்.

பீட்டில்ஸ் இசையமைத்த  Rubber Soul.(1969) ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள "Norwegian Wood (This Bird Has Flown)" என்ற பாடலில் நடுவே இந்திய சிதார் இசையை பயன்படுத்தியுள்ளார்கள்.

எனவே விதிகளே இல்லாத திரையிசையில் கர்நாடிக் இசையை நடுவே பயன்ப்படுத்தியது எல்லாம் இனிமையான விதி மீறல் என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வதில் பொருளே இல்லை :-))

-----------------------------------


இங்கே சில இசைக்கோர்வைகளை  கொடுக்கிறேன் இதெல்லாம் எங்கேயோ கேட்டாப்போலவே இருக்கும் எங்கே கேட்டிங்கனு கொஞ்சம் கண்டுப்பிடிச்சு பாருங்க :-))

 # George Bizet's 1897,'Carillon' (Allegro moderato).


-------------

 # Kites by Simon Dupree(1967)



--------------
Lady in Black - Uriah Heep(1970)


------------------------

'Cancione et Danza: 2. Danza'- Antonio Ruiz-Pipo'


---------------

பூகி ஓகி ராக் அன் ரோல்.


---------

இசையை ரொம்ப தோண்டியாச்சு இந்த நடனங்களைப்பார்த்து கொஞ்சம் குதுகலம் அடையுங்கள்,இதெல்லாம் சின்ன சாம்பிள்கள் தான் ,நம்ம ஊரு நடனப்புயல்கள் எல்லாம் எங்கே இருந்து சுடுறாங்கன்னு புரிஞ்சுக்கலாம்.

செம டான்ஸ்.


---------------

டொனல்ட் கானார்ஸ் பலூன் டான்ஸ்.

-------------------

பின் குறிப்பு:-1

கி.பி 1976 இல் அன்னக்கிளி படத்தில் தொடங்கி, 90 களின் ஆரம்பம் வரையில் தமிழ் திரையுலகில் இசை ராஜ்யம் நடத்தியவர் தான் இளையராசா என்பதில் எந்த மாற்று கருத்தேயில்லை,ஆனால் அவர் இசையமைத்து தான் இசைக்கே ஒரு முகவரி கிடைத்தது என்பது போல சிலர் இணையங்களில் விதந்தோம்பி கடை பரப்பி வருவது உண்மையில் ஒரு நல்ல திரையிசை கலைஞருக்கு பெருமை சேர்க்க போவதில்லை, ஏன் எனில் திரையிசை என்பது கலவையான ,விதிகளற்ற இசை அமைப்பு,அங்கே விதிகளே இல்லாத போது இது போல சாஸ்திரிய இசையின் விதியை மீறி இருக்கிறார், புதுமை படைத்திருக்கிறார் என சொல்வது இசையே தெரியாமல் சொல்வதாகும்.

இப்படி நான் பதிவெழுதக்காரணம் எனக்கும் ராசாவுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு என நினைத்துக்கொள்ள வேண்டாம், அடியேன் ராசாவின் கோல்டன் ஹிட்ஸ் எனப்படும் 80 களின் திரையிசைப்பாடல்களின் தீவிர ரசிகன், எனது வாகனம், கைப்பேசி என அனைத்திலும் சுமார் 200 அருமையான ராசாவின் பாடல்கள் எப்பொழுதும் ஒலிக்கும்.

ராசாவின் ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு சிலர் தாங்களாகவே மிகைப்படுத்தி பேசிக்கொண்டு அவருக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து  சிறுமை சேர்க்கிறார்கள், அவர்களுக்கும் தங்களது அபிமான  நடிகரின் படம் வெளியானதும் கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யும் பாமர ரசிகனுக்கும் பெரிதும் வேறுபாடில்லை, இத்தகைய விசிலடிச்சான் குஞ்சு ரசிக மனப்பான்மையை "sycophancy"எனப்படும் தீவிர ரசிக அடிமை மனப்பான்மை எனலாம், இவ்வாறான ரசிகர்கள்  தங்கள் ஆதர்ஷம் எது செய்தாலும் உன்னதம் என கொண்டாடி , அவர்களின் ஆதர்ஷத்தின் புகழை கூட்டுவதற்கு பதில் குறைக்கவே செய்கிறார்கள் , இணையத்தில் ராசாவிற்கு இம்மாதிரியான ரசிக சிகாமணிகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது இருக்கும் ஒரு சிலர் மீண்டும் மீண்டும் வெற்று புகழ் மாலை பாடிக்கொண்டிருக்கிறார்கள், அவற்றை எல்லாம் சற்றே நிறுத்திக்கொண்டால் சேதாரம் தவிர்க்கப்படும் இல்லை எனில் என்னைப்போல் பலர் எதிர் வினையாற்றக்கிளம்பினால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா தான்.
----------------

பின் குறிப்பு:-2

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://worldcinemafan.blogspot.in/2013/05/5.html

http://www.seechord.co.uk/song-writing/secrets-of-the-beatles/

http://en.wikipedia.org/wiki/Rubber_Soul

http://en.wikipedia.org/wiki/R%26B

http://en.wikipedia.org/wiki/Clave_(rhythm)

http://en.wikipedia.org/wiki/Guajeo

http://en.wikipedia.org/wiki/Non-harmonic_arpeggio#Melodic_triad

http://en.wikipedia.org/wiki/Melodic_motion

http://en.wikipedia.org/wiki/Disjunct_(music)

http://en.wikipedia.org/wiki/Coltrane_changes

http://en.wikipedia.org/wiki/Tritone_substitution

http://en.wikipedia.org/wiki/Tristan_chord

http://www.greenwych.ca/example.htm

http://www.newworldencyclopedia.org/entry/Atonality

கூகிள் படங்கள்,நன்றி!
--------------------------------------

திரும்பிப்பார்-4: மூடர்கூடம்-1: நிழல் எங்கே?

$
0
0

(இப்படி சாய்வாக படுத்தால் நிழல் விழாதுனு தெரிஞ்சி இருக்கும் போல ஹி...ஹி)


முன்குறிப்பு:

கொஞ்ச நாள் இடைவெளி விட்டுப்போனதால், ஸ்டார்ட்டிங் டிரபிள் ஆகிடுச்சு,எனவே ஆரம்ப பத்திகளில் கொஞ்சம் அனத்தி வச்சிருக்கேன் ,படிக்க சலிப்பூட்டலாம் எனவே கோடிட்ட பகுதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளை தவிர்த்துவிட்டு ,நேராக பதிவுக்கு செல்ல விரும்புவர்கள் செல்லலாம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சில பல நாட்களாக பதிவெதுவும் எழுத இயலவில்லை... வெட்டி முறிக்கிற வேலையெல்லாம் இல்லை என்றாலும் ஏனோ வெட்டித்தனமாக பதிவெழுதாமல் சும்மா உலாத்திக்கொண்டேயிருந்தேன்,ஆனாலும் பாருங்க நம்ம பாசக்கார சனங்கள் மறந்து விடாமல் நம்ம கடைக்கு வந்து போயிட்டு இருந்தாங்க ,எனக்கே அது பேராச்சர்யமாகத்தான் இருக்கு , நம்மளையும் மதிச்சு நாலுப்பேர் வந்து படிச்சிட்டு போறாங்களே ,அதுவும் பழைய பதிவகளை!

சொன்னா நம்ப மாட்டிங்க,ஆனாலும் நானே சொன்னப்பிறகும் நம்பாம போனிங்கன்னா நல்லா இருக்காது ,எனவே கொஞ்ச நேரம் நம்புணாப்போல ஒரு ஆக்ட் கொடுங்க போதும், கோடான கோடிப்பேர்கள் ஏன் பதிவெழுதவில்லைனு கவலையோட நலம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க, ஹி..ஹி நம்புற மாதிரியே இல்லையேனு நினைக்கப்படாது...நம்பணும்! அட அதுக்கூட பரவாயில்லைங்க, வேற்றுக்கிரகத்தில இருந்தெல்லாம் ,ஏன் பதிவெழுதவில்லைனு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க, இதையும் நம்ப மாட்டிங்களே, ஏலியன் என்றால் வேற்றுகிரகவாசி தானே? நம்ம பதிவ ஏலியன்ஸ் கூட படிக்கிறாங்க, பின்னூட்டமெல்லாம் போடுறாங்க!(ஹி..ஹி பதிவர் ஏலியன் பின்னூட்டத்தில் விசாரிச்சதை தான் இப்படி சொல்லிக்கிட்டேன்!)

நட்பக்கூட கற்பைப்போல எண்ணும் நல்ல மனசுக்காரன் (அது யாரா? ஹி...ஹி அடியேன் தான்)என்பதால், நண்பர்களின் அவாவிற்கிணங்க மீண்டும் அடியேனது பதிவுலக பரா(அ)க்கிரமங்கள் தொடங்குகிறது, பயணங்கள் முடிவதில்லை!

தொடர்ந்து ஆதரவளித்து ,என்னை(யும்) எழுத வைக்கும் தெய்வங்களான "பதிவுலக அன்பர்களுக்கு"கோடான கோடி நன்றிகள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இனிமே தான் மெயின் ரீல் ஓடப்போகுது... படிங்க ..படிங்க!

பதிவர்"தி.ந.முரளிதரன்"(http://tnmurali.blogspot.in)பதிவில் உச்சி வெயில் நேரத்தில் ஒரு கட்டமைப்பின் நிழல் தரையில் விழாது என்ற தொடர்பில் ஒரு சிறிய உரையாடலை துவக்கிவிட்டேன் (உண்மையில் உரையாடல் துவங்கிய இடம் நம்பள்கி பதிவாகும்),அப்பொழுது பூமத்திய ரேகைப்பகுதியில் மட்டும் தான் அப்படி நிகழும் என்பதான கருத்தினை  முன் வைத்தார்கள்,இந்தியாவிலும் நிழல் விழாமல் இருக்கும், சிறு குச்சியை வைத்து செய்துப்பார்க்கலாம் என சொன்னதை , நேரடியாக செய்துப்பார்த்து படமெல்லாம் எடுத்துப்போட்டு பதிவிட்டு கலக்கியிருந்தார் "தி.ந.மு".

அதனை ஒட்டி நாமளும் ஒரு "நிழல் பரிசோதனை "செய்து பார்த்து படமெல்லாம் எடுத்தாச்சு ,ஆனால் பதிவாக்க இப்போது தான் முடிஞ்சது, ஹி...ஹி இனிமே சோதனை உங்களுக்கு தான் படிங்க...படிங்க!

பூமி:




நாம் வாழும் பூமியானது சூரிய குடும்பத்தில்(ஹி...ஹி யாரும் மஞ்சத்துண்டு குடும்பத்துடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) மூன்றாவதாக உள்ள ,உயிர் வாழும் சூழல் உள்ள ஒரே கிரகம் ஆகும்.

முழுக்கோளமாக இல்லாமல் துருவப்பகுதிகளில் தட்டையாக உள்ள "oblate spheroid"வடிவ கோளம், தனது அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது, இந்த சாய்வுக்கும் ஒரு விவாதம் இருக்கு விரைவில் தனியாவர்த்தனமாக சொல்கிறேன்!

சுமார் இருபத்தி நான்கு மணி நேரத்தில் தன்னை தானே சுழன்றுக்கொண்டு ,365.25 நாட்களில் நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகிறது.

பூமியின் மீது செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் கற்பனையான கோடுகள் வரைந்து பகுதி வாரியாக பிரித்து குறிப்பிடுவது வழக்கம்,இம்முறையினை அறிவியல் முறைப்படி முதன் முதலில் செய்தவர் கிரேக்க ரொமானிய வானவியல் நிபுணர் 'தாலமி" (Claudius Ptolemy-AD 90 – c. AD 168)ஆவார்.பிறப்பால் இவர் ஒரு பூர்வீக எகிப்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்க்க ரேகை( longitude):




செங்குத்தாக வரையப்பட்ட கோடுகள், ஒரு கோளம் 360 டிகிரிகளை கொண்டது என்பதால் 360 கோடுகள் வரையப்பட்டுள்ளன. துருவங்களில் குறுகியும், நிலநடுக்கோட்டில் அகன்றும் இருக்கும்.

பூமி ஒரு சுற்று சுழன்றால் =360 டிகிரி

இதற்கு தேவையான நேரம்= 24 மணிகள்

எனவே ஒரு டிகிரி கடக்க ஆகும் நேரம்= 24*60/360
                                                                     =4 நிமிடங்கள்.

எனவே ஒவ்வொரு தீர்க்க ரேகைக்கும்( longitude) இடையே நான்கு நிமிட வித்தியாசம் இருக்கும்.

ஒருவர் கிழக்கு நோக்கி சென்றால் ,ஒவ்வொரு டிகிரி கடக்கும் போதும் நான்கு நிமிடம் முன்னோக்கி செல்வதாக கொள்ளப்படும், அதே போல மேற்கு நோக்கி சென்றால் ஒவ்வொரு டிகிரிக்கும் நான்கு நிமிடம் பின்னோக்கி செல்வதாக கொள்ளப்படும், எனவே செல்லும் திசை,கடக்கும் டிகிரிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப நேரத்தினை திருத்தி வைத்துக்கொள்வார்கள்.

180 டிகிரி தீர்க்க ரேகையை "சர்வதேச நாட்க்கோடு என்பார்கள். சர்வதேச நாட்க்கோட்டில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்தால் ஒரு நாளினை கழித்துவிடுவார்கள், மேற்கு நோக்கி பயணித்தால் ஒரு நாளினை கூட்டிக்கொள்ள வேண்டும். இதனை மையமாக வைத்து "Around the world in 80 dayS'என்ற ஜீல்ஸ்வெர்ன் நாவலில் கதை சொல்லப்பட்டிருக்கும்.

நிழல் விழுமா ,விழாதானு சொல்ல எதுக்கு ,அட்ச ரேகை,தீர்க்க ரேகைனு சுத்தி வளைச்சு சொல்லிக்கிட்டுனு பொலம்பாதிங்க, கொஞ்சம் அடிப்படை சொல்லிட்டா ,பின்னர் சொல்வது எளிதாக புரியும் என்பதாலே சொல்ல விழைகிறேன்!

ஒரு நாளில் பகற்பொழுதின் நீளம் சுமார் 12 மணி நேரம் என வைத்துக்கொண்டால், அதற்கான தீர்க்க ரேகை கோணத்தின் அளவு 180 டிகிரிகள் ஆகும், சூரிய உதயம் 0 டிகிரியில் ஆரம்பித்து , 180 டிகிரியில் அஸ்தமனம் என ஒரு அரைவட்டமாக அமையும் என புரிந்துக்கொண்டால் போதும்.(நாம இருக்கும் இடத்திற்கு ஏற்ப தீர்க்க ரேகை டிகிரி இருக்கும், ஆனால் துருவ வட்டங்கள் நீங்கலாக மற்ற எல்லா இடத்திலும் பகற் பொழுதுக்கு மொத்தம் 180 டிகிரி ,அரைவட்டம் ஆக அமையும், என்பதால், ஆரம்பம் 0,முடிவு 180 டிகிரி என உதாரணமாக சொல்லியுள்ளேன்)

அட்ச ரேகை( Latitude):

கிடைமட்டமாக பூமியின் மீது வரையப்பட்ட கோடுகள், இவை வட்ட வடிவில் பூமியினை சுற்றி அமைந்திருக்கும். துருவத்தில் சிறிய வட்டமாகவும், மையத்தில் பெரிய வட்டமாகவும் இருக்கும்,ஒன்றுக்கொன்று இணையான கோடுகள். மிகப்பெரிய வட்ட வடிவ கோடே"நிலநடுக்கோடு"எனப்படுகிறது.

நில நடுக்கோடு பூமியினை வட,தென் துருவ அரைக்கோளங்களாக பிரிக்கிறது. தீர்க்க ரேகைப்போல 360 டிகிரிகளாக இல்லாமல் வட துருவம் முதல் தென் துருவம் வரையில் 180 டிகிரிகளுக்கு மட்டுமே வரையப்பட்டவை அட்ச ரேகைகள்.

நில நடுக்கோட்டினை  0 டிகிரியாக வைத்து வட துருவ கோளம் 90 டிகிரிகள், தென் துருவ கோளம் 90 டிகிரிகள் ஆகும்.

பூமி பரப்பில் எந்த ஒரு இடத்தினையும்,அட்ச,தீர்க்க ரேகைகளை குறிப்பிட்டே சொல்லிவிட முடியும், இவை ஒரு கிரிட் ஆக மொத்த பரப்பினையும் பிரிக்கிறது.

வட கோள பகுதி அட்ச ரேகைகள் "+"குறியீடாக அல்லது வடக்கு என குறிப்பிட்டும், தென் கோள அட்ச ரேகைகள் "-"குறியீடாக அல்லது தெற்கு என குறிப்பிட்டும் சொல்லப்படுகிறது.

தீர்க்க ரேகைகளை வைத்து ,கிழக்கு,மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பூமிக்கோளமானது வட கிழக்கு,வட மேற்கு, தென் கிழக்கு,தென் மேற்கு என நான்கு கால் கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அட்சக்கோடுகள் இணையானவனை , எனவே ஒவ்வொரு அட்ச டிகிரிக்கும் இடைப்பட்ட தூரம் 111 மைல்கள். ஒரு டிகிரி என்பது 60 நிமிடங்கள், ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள் என சிறிய அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தின் அட்ச ரேகையை இன்னொரு இடத்தின் அட்ச ரேகையுடன் ஒப்பிட்டு ,இரு இடங்களுக்கும் இடையே உள்ள தொலைவினை கணக்கிட முடியும்.

கடற்பயணத்தின் போது தொலைவினை இப்படித்தான் கணக்கிடுவார்கள். கோணத்தில் சொன்னால் ஆர்க் டிஸ்டன்ஸ் அதனை மைலாகவோ,கிலோ மீட்டராகவோ மாற்றிக்கொள்ள முடியும்.

ஒரு நிமிடம் என்பது 1.57 மைல்கள் ஆகும், இதனையே நாட்டிகல் மைல் என சொல்கிறார்கள்.

சூரியனின் நிலை:

சூரிய உதயம் ,அஸ்தமனம் என ஒரு நாளில் கிழக்கு ,மேற்காக சூரியன் தீர்க்க ரேகை மார்க்கத்தில் பயணிக்கிறான்(இது ஒரு தோற்ற நிகழ்வே ,சூரியன் நிலையானது ,பூமி மேற்கில் இருந்து கிழக்காக சுழல்கிறது என்பதை அனைவரும் அறிவோம்)

அதே போல வடக்கு ,தெற்காகவும் சூரியன் பயணிப்பதாக ஒரு தோற்ற நிகழ்வு உண்டு.

நிலநடுக்கோட்டில் இருந்து 23.5 டிகிரி வடக்கில் செல்லும் அட்ச ரேகையினை கடக ரேகை என்பார்கள், இக்கோடு இந்தியாவின் வழியேயும் செல்கிறது, இந்தியாவை நீள் வாக்கில் சரிபாதியாக பிரிக்கிறது எனலாம்.



கிழக்கே மிசோராமில் இருந்து மேற்கே குஜராத்தின் புஜ் பகுதி வழியாக "கடக ரேகை"செல்கிறது.

அருணாச்சல பிரதேசத்தில் தான் இந்தியாவின்(நிலப்பரப்பில்) கிழக்கு முனை உள்ளது இந்தியாவின் முதல் சூரிய உதயம் அங்கு தான் நிகழும்,அருணன் = சூரியன், அஜலம்= மலை, கடக ரேகையில் சூரியன் இருக்கும் போது நேராக மலையில் இருந்து எழுவது போல அப்பகுதியில் தெரிவதால் அருணாச்சல பிரதேசம் எனப்பெயர் வைத்திருக்கக்கூடும்.

வடக்கிழக்கு மாநிலங்கள் ஏழுக்கும் அஸ்ஸாம் ஸ்டேண்டர்டு டைம் எனப்பயன்ப்படுத்துகிறார்கள். IST  விட சுமார் இரண்டு மணி முன்னர் இருக்கும்,

(போபால் அருகே சாலையை கடக்கும் கடக ரேகை)

இந்தியா நில நடுக்கோட்டிற்கு வடக்கே உள்ள நாடு ஆகும்.

தென் கோளத்தில் நில நடுக்கோட்டிற்கு தெற்கே 23.5 டிகிரி தெற்கில் செல்லும் கோட்டினை "மகர ரேகை"என்பார்கள். இக்கோடு ஆஸ்திரேலியாவை இரண்டாக பிரித்தவாறு செல்கிறது.

பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்வாக* சுழல்வதாக சொல்லப்படுவதால் , சூரியன் கடக ரேகையில் இருந்து , மகர ரேகைக்கு செல்வது போல ஒரு தோற்ற நிகழ்வு ஏற்படுகிறது.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்நிகழ்வு நடைப்பெறும், அதாவது கடக ரேகையில் இருந்து மகர ரேகைக்கு செல்ல 6 மாதங்கள், பின்னர் அங்கிருந்து மீண்டும் கடக ரேகைக்கு வரும். ஒரு ஆண்டில்  வடக்கு-தெற்கு- வடக்கு என சூரியன் பயணித்து ஒரு சுற்றினை பூர்த்தி செய்கிறது. அதாவது கடக- மகர ரேகைக்கிடைப்பட்ட பகுதிகளின் வழியாக ஆண்டுக்கு "இரு முறை"சூரியன் செல்கிறது.

23.5 டிகிரி கடக ரேகை முதல் 23.5 டிகிரி மகர ரேகை வரையில் மொத்தம் "47"டிகிரிகள் ,இதனை கடக்க ஆறுமாதம் எனில் ஒரு டிகிரியை கடக்க சூரியனுக்கு தேவைப்படும் நாட்கள் எத்தனை?

ஒரு டிகிரி அட்ச ரேகை கடக்க

= (365/2)/47
                                   

 =3.85 நாட்கள்.


ஆண்டுக்கு இரு முறை கடப்பதால் , 2*3.85 நாட்கள்= 7.7 நாட்கள்.

இதன் மூலம் அறிய வருவது என்னவெனில்,

கடக- மகர ரேகைக்கு இடைப்பட்ட ஒவ்வொரு டிகிரி பகுதியிலும் ஆண்டுக்கு 7.7 நாட்களுக்கு சூரியன் 'நட்டக்குத்தாக'உச்சி வெயில் நேரத்தில் தோன்றுவான் :-))

நாம் கடிகார நேரப்படி பகல்  12.00 மணியை "நண்பகல்"என்கிறோம், இது இந்திய தர நிர்ணய நேரத்தின் படியே , உண்மையில் நாம் இருக்கும் இடத்திற்கு 90 டிகிரியில் சூரியன் தோன்றுவதையே நண்பகல் என சொல்ல வேண்டும். இதனை"solar noon"என்பார்கள்.

சூரியன் வட,தென் கோளத்தில் இருந்தால் முறையே இட,வலமாக ஆனால் தரைப்பரப்பிற்கு 90 டிகிரியில் சூரியன் நண்பகலில் தோன்றும்.

ஆனால் கடக- மகர ரேகை இடையே ஒவ்வொரு இடத்திற்கும் ஆண்டுக்கு சுமார் 7.7 நாட்கள் மிகச்சரியாக உச்சியில் 90 டிகிரியில் தோன்றும் "perfect solar noon"உண்டு!

அது போன்ற நாட்களில் ஒரு கட்டமைப்பின் நிழல் உச்சிவெயில் நேரத்தில் ,கிழக்கு,மேற்கு, வடக்கு,தெற்கு என எந்தப்பக்கமும் விழாது!!!

நம்ம நாட்டில் உள்ள ஒரு இடத்தில் ஆண்டுக்கு 7.7 நாட்களுக்கு உச்சி வெயில் நேரத்தில் நிழல் விழாது எனலாம், ஆண்டு முழுவதும் நிழல் விழாமல் ஒரு கட்டமைப்பினை உருவாக்க முடியுமா?

உண்மையில் பார்த்தோமானால் நிழல் விழாத கட்டிடம்/அமைப்பு உருவாக்க முடியாது, தரையோடு தரையாக படுக்க வைத்தால் மட்டுமே சாத்தியம்.

ஆனால் மனித மூளை அபரிமிதமான சிந்தனாசக்தி கொண்டது, கொஞ்சம் கணக்குலாம் போட்டுப்பார்த்தால் செய்ய முடியும் ஆனால் சில நிபந்தனைகளுக்குட்பட்டு என ஆதிகாலத்திலேயே மனிதன் கண்டுப்பிடித்துவிட்டான்.

ஆண்டு முழுவதும்  ஒரு நாளின் குறிப்பிட்ட காலத்திற்கு நிழலே விழாமல் ஒரு கட்டமைப்பினை உருவாக்க முடியும்.

உதாரணமாக ஆண்டு முழுவதும், காலை ஒன்பது மணி முதல் ,மாலை மூன்று மணி வரை நிழல் விழாமல் ஒரு கட்டமைப்பினை கடக- மகர ரேகைக்கு இடைப்பட்ட பகுதிகளிலும், ஏன் அதன் அருகாமை பகுதியிலும் கூட அமைப்பது சாத்தியமே.

கீழ் கண்ட படத்தினை காண்க:




சூரியனின் கதிர்கள் ஒரு பொருளின் மீது விழும் கோணத்தினை "Angle of incident"என்பார்கள். காலை ,மாலையில் சாய்வான கோணத்திலும் , நண்பகலில் செங்குத்தாக 90 டிகிரியிலும் விழும். சூரியனின் கதிர் வீச்ச்சு கோண அளவு 0-180 டிகிரிக்குள் அமையும்.

சூரிய உதயம்,அஸ்தமனம் பொறுத்து கிழக்கு மேற்கான நிகழ்வில் இது தினசரி நடப்பது.

இதே போல வடக்கு -தெற்காக சூரியனின் நகர்வால் இட,வலமாக ஒரு சாய்வுக்கோணம் ஆண்டு முழுவதும் உண்டு, இந்த "Angle of incident"இன் எல்லை 23.5 டிகிரி வடக்கு முதல் 23.5 டிகிரி தெற்கு வரையாகும்.

படம் -1:

காலை சூரிய உதயம் 6 மணி எனக்கொள்வோம், சூரியன் ஒன்பது மணிக்கு தரைத்தளத்தோடு 45 டிகிரி கோணத்தில் கிழக்கில் வானில் இருக்கும்.

ஒரு டிகிரி தீர்க்க ரேகைக்கு 4 நிமிடம் எனில் , ஒரு மணி நேரத்துக்கு 15 டிகிரி தீர்க்க ரேகை, எனவே 6-9 =3 மணி நேரத்தில் 45 டிகிரி எனக்கணக்கு.

கிழக்கில் 45 டிகிரி "Angle of incident"இல் சூரிய கதிரிகள் நேராக உள்ள குச்சி மீது விழுகிறது. எனவே மேற்கு பக்கமாக நிழல் விழும். சூரியன் தென் கோளார்த்தத்தில் இருந்தால் நிழல் தென் மேற்காக விழும்.

படம்:2.

சூரியக்கதிர்கள் விழும் கோணத்தினை '"Angle of incident" என்பது போல அக்கோணத்திற்கு இணையாக வருவது போல தரையில் உள்ள பொருளை சாய்த்தால் உருவாகும் கோணத்தினை "slope of angle"என்பார்கள்.

"Angle of incident"க்கு ஏற்றார்ப்போல சாய்த்து "slope of angle"வருவது போல வைத்து விட்டால் சூரிய கதிர்கள் பொருளுக்கு இணையான தொடுக்கோணத்தில் விழும்,இந்நிலையில் நிழல் விழாது!!!

படம் இரண்டில் கிழக்கில் 45 டிகிரிக்கு "slope of angle'வருமாறு சாய்ந்து உள்ளதால் நிழல் விழாது.

படம்-3, படம் நான்கில் , சூரியனின் நிலைக்கு ஏற்ப "slope of angle"இல் குச்சி சாய்த்து வைக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

இப்படி நான்கு திசைக்கும் சாய்த்து கொண்டே இருக்கணுமா? நிரந்தரமாக செய்ய முடியாதா எனலாம்? முடியும்.

இந்நான்கு சாய்வு குச்சிகளையும் உச்சியில் இணைத்தால் தெரியும் வடிவம் என்ன?

ஒரு பிரமிட் போல தெரியுமே?



ஆம் அப்படி இணைத்தால் கிடைக்கும் வடிவமைப்பு பிரமிடே தான், பிரமிடின் பக்கங்களில்"slope of angle"ஐ வடக்கு தெற்காக சூரியன் நகர்வின் அதிக பட்ச எல்லைக்கு ஏற்ப அமைத்து விட்டால் , வடக்கு- தெற்கு நகர்வால் உண்டாகும் நிழல் உருவாகாது, அதே போல அக்கோணத்திற்கு ஏற்ப கிழக்கு -மேற்கில் சூரியன் இருக்கும் போதும் நிழல் விழாது.

உதாரணமாக பிரமிடின் நான்கு பக்கங்களின் "slope of angle" 45 டிகிரி இருப்பது போல அமைத்தால் வருடம் முழுவதும் காலை 9 முதல் மாலை -3 மணி வரையில் நிழல் தரையில் விழாது!

45 டிகிரி "slope of angle"உள்ள பிரமிட்டை சென்னையில் அமைத்தால் வருடம் முழுவதும் 9-3 இடையில் நிழல் விழாது, ஏன் எனில் வடக்கு தெற்கு ஆக சூரிய நகர்வு எப்பொழுதும் 45 டிகிரிக்கு மேல் சென்னையில் இருக்க வாய்ப்பேயில்லை.

சென்னையின் அட்ச ரேகை 13 டிகிரி வடக்கு ஆகும்,சென்னைக்கு வடக்கே கடக ரேகை 23.5 டிகிரியில் உள்ளது, எனவே வடக்கு நோக்கி சூரிய நகர்வு அதிக பட்சம்ம் 10.5 டிகிரிகள் மட்டுமே.

தெற்கில்  மகர ரேகை 23.5 டிகிரியில் உள்ளது அதனுடன் 13 டிகிரியை கூட்டினால் 36.5 டிகிரி மட்டுமே இது 45 டிகிரி "slope of angle'பிரமிடின் கோணத்திற்குள் வந்துவிடுவதால் , ஆண்டு முழுவதும் வடக்கு தெற்கு நிழல் விழாது.

தினசரி 45 டிகிரிக்கு கீழாக சூரியன் கிழக்கு- மேற்கில் இருக்கும் போது மட்டுமே நிழல் விழும்.
அதாவது காலை ஒன்பதுக்கு முன்னாலும், மாலை -3 மணிக்கு பிறகுமே நிழல் விழும்!!!

இதற்கு மேல் பிரமிட் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் இருந்தால் தொடரலாம், நிழல் கதை இத்தோடு முடிந்துவிட்டது!


இந்த அரிய உண்மையை நான் கண்டுப்பிடிக்கலைங்க, சுமார் கி.மு 2580 இலேயே எகிப்தியர்கள் கண்டுப்பிடிச்சுட்டாங்க.


கிஸா பிரமிட் அப்போது தான் கட்டப்பட்டது. எகிப்தின் கெய்ரோவின் அட்ச ரேகை 31 டிகிரியில் பிரமிட் உள்ளது, இது கடக ரேகைக்கு வடக்கே மேல உள்ளதால் சூரியன் எக்காலத்திலும் கெய்ரோ தாண்டி செல்லாது என்பதால் வடக்கு பக்கமாக இருந்து நிழல் விழாது, தெற்கில் இருந்து மட்டுமே சாத்தியம், தெற்கே மகர ரேகை 23.5 டிகிரி + கெய்ரோவின் அட்ச ரேகை 31 டிகிரி கூட்டினால் 54.5 டிகிரி , அந்த கோணம் தான் கிசா பிரமிட்டின் பக்கங்களின்  "slope of angle"ஆகும்.

வடக்கு - தெற்காக சூரியன் நிலைப்பொறுத்து நிழல் தவிர்க்கப்பட்டாச்சு, கிழக்கு- மேற்காக பார்த்தால் 54.5 டிகிரி என்பது சுமார் 9.36 நிமிடம் போல வரும் எனவே காலை 9.36 மணி முதல் மாலை 2.24 வரையில் கிஸா பிரமிடின் நிழல் ஆண்டு முழுவதும் தரையில் விழாது.

எகிப்தியர்கள் அக்காலத்திலேயே வானியல் அறிவில் தேர்ச்சி பெற்றிருந்தற்கு பிரமிட் கட்டமைப்பே சான்றாகும்.

எகிப்தியர்கள் கட்டிடக்கலை, வானியல் ,கணிதம், முக்கோணவியலில் நிபுணர்களாக இருந்ததால் மட்டுமே பிரமிட் போன்ற கட்டமைப்பினை உருவாக்கி இருக்க முடியும்.

நிக்கோலஸ் கோபர் நிகஸ் எல்லாம் சூரியன் மையம், பூமி சுழல்கிறது, கலிலியோ உலகம் உருண்டை என சொல்வதற்குலாம் முன்னரே எகிப்தியர்களுக்கு இவ்வுண்மைகள் தெரிந்துள்ளது.

எனது கணிப்பு என்னவெனில் கிருத்துவ மதப்பரப்பலின் போது எகிப்திய நாகரீகம் மற்றும் அறிவியல் எல்லாம் அழிக்கப்பட்டு , பைபிள் அடிப்படையிலான கருத்தாக்கங்களாக பூமி தட்டை, மையம் என பரப்பிவிட்டிருக்க வேண்டும், பின்னர் மீண்டும் கோபர் நிகஸ்,கலிலியோ போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்து ஆய்வை துவக்கி சொல்லி இருக்கக்கூடும்.

எகிப்திய பிரமிட் வடிவில் கட்டமைப்பு அமைத்தால் நிழல் விழுமா என அறிய ,ஒரு சிறிய மாதிரி பிரமிட் ஒன்றினை அட்டையில் செய்து , வெயிலில் வைத்து பார்த்தேன் .

படம்-1:


காலை ஒன்பது மணிக்கு எடுக்கப்பட்டது மிகச்சிறிய அளவில் நிழல் மேற்கு பக்கமாக விழுகிறது. சுமார் 10 மணி அளவில் நிழல் விழவில்லை.

படம் -2:




சுமார் 11.30 அளவில் எடுக்கபட்டது, பக்கவாட்டிலும் நிழல் இல்லை, உச்சி நிலையிலும் நிழல் இல்லை.

# தஞ்சை பெரிய கோயிலின் கோபுரம் பிரமிட் போல சம பக்க முக்கோணங்களை கொண்டிருக்கவில்லை, அதன் உயரம் மற்றும் அடித்தளம் சரியான விகிதத்திலும் இல்லை, மேலும் சதுர அடித்தளமாகவும் இல்லை என்பதால் நிழல் விழும்,ஆனால் வருடத்தில் சுமார் 7.7 நாட்களுக்கு ,தஞ்சையின் அட்சக்கோடு வழியாக சூரியன் கடக்கும் போது ,உச்சிவெயில் நேரத்தில் நிழல் விழாமல் இருக்க வாய்ப்புண்டு!

பிரமிட்:

பிரமிட் என்பது நான்கு முக்கோண பரப்புகள் பக்கங்கள் ஒன்றாக இணைந்து இருக்கும் அமைப்பு, அடிப்பரப்பு செவ்வகம் எனில் எதிர் எதிர் பக்கங்களின் உள்ள முக்கோணங்கள் மட்டுமே சமமாக இருக்கும்.

அடிப்பரப்பு சதுரம் எனில் நான்கு முக்கோணங்களும் சமமாக இருக்கும்.

எகிப்தில் கட்டப்பட்டுள்ள "கிஸா: பிரமிட் அடிப்பரப்பு சதுரமாகவும், நான்கு பக்கத்திலும் சம பக்க முக்கோணங்களை கொண்டுள்ளது.



இவ்வாறு ஏன் கட்ட வேண்டும்?

ஏன் எனில் சமபக்க முக்கோணங்களை கொண்ட பிரமிட்டை எவ்வளவு உயரமாக கட்டினாலும் அதன் "slope of angle" 54.5 டிகிரியாக தானாகவே அமைந்து விடும்!!!

தற்போதுள்ள பிரம்மிட்டின் "slope of angle"அளந்து பார்த்தப்போது 51.5 டிகிரி தான் இருக்கிறது என சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், ஆனால் சிலர் இப்பொழுது உள்ளது பிரமிட்டின் உள்பகுதி ஆகும் இதன் பக்கங்கள் மீது "பாலிஷ் செய்யப்பட்ட"கற்கள் பதிக்கப்பட்டிருந்தது பல நூற்றாண்டுகளில் அவை உதிர்ந்து விட்டது, மேலே போர்த்தப்பட்டிருந்த கற்களின் தடிமனையும் சேர்த்து கணக்கிட்டால் 54.5 டிகிரி இருக்க வாய்ப்புள்ளது. என்கிறார்கள்.

உயரம்-146.5 மீட்டர்கள்.

அடிப்பகுதி சதுரத்தின் அகலம்- 230.4 மீட்டர்கள்

பயன்ப்படுத்தப்பட்ட கற்களீன் எண்ணிக்கை- 2.3 மில்லியன்கள்.

மொத்த எடை -5.9 மில்லியன் டன்கள்.

கட்ட எடுத்துக்கொண்ட காலம் - 20 ஆண்டுகள்.

பயன்ப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை- சுமார் ஒரு லட்சம்.

மேற் சொன்ன அளவுகளின் படி பார்த்தால் சராசரியாக ஒரு நாளைக்கு 800 டன்கள் கற்களை பிரமிட்டில் பொறுத்தினால் மட்டுமே 20 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடியும். அக்காலத்தில் வாகனங்களோ, கிரேன்களோ இல்லாமல் மனித ஆற்றலை வைத்தே நகர்த்தி , கட்டி இருக்கிறார்கள் என்பதே மிகபெரிய ஆச்சர்யம்.

இதில் மேலும் ஆச்சர்ய மூட்டும் தகவல் என்னவெனில் பிரமிட்டின் உயரம்,அகலம் என முடிவு செய்ய பை மதிப்பினை பயன்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.

பையின் மதிப்பு 3.14 என 17 நூற்றாண்டில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொதுவாக சொல்கிறார்கள், ஆனால் கி.மு 2580 இல் பை மதிப்பினை பயன்ப்படுத்தி பிரமிடுகளை எகிப்தியர்கள் கட்டியுள்ளார்கள்.

பிரமிட்டின் சதுர அடித்தளத்தின் சுற்றளவை அதன் உயரத்தால் வகுத்தால் 2π  என வருகிறது.

பிரமிடின் பக்கம்= A

உயரம் =H

எனில் , சுற்றளவு = 4 A

4 A/H =2π

 இதன் மூலம் என்ன உயரம் தேவை என முடிவு செய்து விட்டால் , என்ன அடிப்பரப்பு என கண்டுப்பிடித்து விடலாம், இல்லை , இத்தனை அடிப்பரப்பில் கட்டினால் என்ன உயரம் வரும் என முடிவு செய்துக்கொள்ள முடியும்.

இவ்வளவு கனமான ஒரு கட்டமைப்பினை மணற்பாங்கான இடத்தில் கட்டினால் அதற்கான அஸ்திவாரம் ஆழமாக போட வேண்டும்,ஆனால் அப்படி செய்யவில்லை, மாறாக பாலைவனத்தில் இருந்த ஒரு குன்றினை சமன் செய்து அக்குன்று பிரமிட்டின் உள்பகுதியில் வருமாறு குன்றின் மீதே பிரமிடினை கட்டியுள்ளார்கள். இதனால் நிலையாக பிரமிட் நிற்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

பிரமிட்கள் மற்றும் எகிப்திய வரலாறு என நிறைய சொல்ல இருக்கிறது அவற்றை பிரிதொரு சந்தப்பத்தில் காணலாம்.
----------------------------------------------------------------------------


நீங்களும் பிரமிட் செய்யலாம்:

தேவையான பொருட்கள்:

# மெல்லிய அட்டை(சார்ட் பேப்பர்)

அட்டையின் அகலம் நாம் செய்ய இருக்கும் பிரமிடின் அடிப்பாக அகலத்தினை போல குறைந்தது மூன்று பங்கு அகலம் இருக்க வேண்டும்.

# பென்சில், காம்பஸ்,ஸ்கேல், கத்திரிக்கோல், ஃபெவிகிவிக், செலொபன் டேப், வெள்ளைக்காகிதம்.

 சமபக்க முக்கோணங்களை உடைய ,சதுர அடிப்பரப்பு கொண்ட பிரமிடினை எளிதாக செய்ய கீழ் கண்ட படத்தில் உள்ளது போல முயற்சிக்கலாம்.



# 10 செ.மீ அடிப்பாகம் கொண்ட பிரமிட் செய்ய , 10 செ.மீ பக்கம் கொண்ட சதுரம் வரையவும். நான்கு பக்கமும் சமமாக இருக்க வேண்டும் ,அப்பொழுது தான் சதுரம் :-))

# ஒவ்வொரு பக்கத்தின் மைய புள்ளியை குறிக்கவும். 5 செ.மி அளவில் புள்ளி வைத்தால் அதான் மையம்.

# நான்கு மைய புள்ளிகளின் வழியாகவும் செல்லு மாறு கோடுகளை வரையவும், கோடுகளின் நீட்சி ஒவ்வொரு பக்கத்திலும் 10 செ.மீ க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

# பிரமிடின் முக்கோணங்கள் சம பக்கம் ஆக நாம் அமைக்க இருக்கிறோம், முக்கோணத்தின் ஒரு பாகம் தான் ,சதுரத்தின் ஒரு பக்கம், எனவே முக்கோணத்தின் மற்ற பக்கங்களும் 10 செ.மீ தான் இருக்க வேண்டும், அப்பொழுது தான் சம பக்க முக்கோணம் ஆகும்.

எனவே 10 செ.மீ அளவினை காம்பஸ் மூலம் எடுத்து , சதுரத்தின் ஒரு பக்கத்தின் முனையில் வைத்து அதன் மையக்கோட்டினை வெட்டவும், அதே போல இன்னொரு பக்கத்தில் வைத்து வெட்டினால் உருவாகும் புள்ளியே ,முக்கோணத்தின் உச்சி ஆகும்.

முக்கோணத்தின் உச்சியினை அதன் அடிப்பாகத்தின் இரு முனைகள் அதாவது சதுரத்தின் பக்கத்தின் முனைகளுடன் இணைத்து கோடு போடவும். இப்பொழுது ஒரு சமபக்க முக்கோணம் சதுரத்துடன் இணைந்து உருவாகி இருக்கும்.

இதனையே மற்ற பக்கங்களுக்கும் செய்யவும்.

# பின்னர் எதிர் எதிர் பக்கமாக உள்ள முக்கோணத்தின் பக்கங்களில் சுமார் 1 செ.மீ வருவது போல பிளாப்கள் வரைந்து கொள்ளவும், இது பக்கங்களை மடித்து ஒட்ட உதவும்.

# படத்தில் கண்டவாறு வரைந்து முடித்த பின் , கத்திரிக்கோல் வைத்து வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

# பின்னர் கோடுகள் மீது ஸ்கேலினை வைத்து உட்பக்கமாக மடித்து விடவும், ஸ்கேல் வைத்து மடித்தால் நேரான மடிப்பு வரும், அப்பொழுது தான் இணைக்க சரியாக வரும்.

# பிளாப்கள் உள்பக்கமாக வருவது போல மடித்து பசை தடவி , அருகில் உள்ள முக்கோணத்துடன் இணைத்து ஒட்டவும்.

ஹி..ஹி பசை காயும் முன்னர் கையை எடுத்துவிட்டால் , தேர்தல் முடிந்தவுடன் பிச்சிக்கொள்ளும் கூட்டணி போல  இரு பக்கங்களும் தனியே பிரிந்து விடும், எனவே செலோப்போன் டேப்பினால் பக்கங்களின் மீது ஒட்டி விடவும் :-))

# அளவுகள் சரியாக இருக்குமானால் நான்கு பக்கங்களையும் இணைத்தால் பிரமிடின் உச்சி (vertex) சரியாக இணைந்து விடும்.  பசையால் ஒட்டியவுடன் ,செலொபன் டேப்பினை வைத்து உச்சிக்கு சற்றுக்கீழே சுற்றி வருவது போல ஒட்டினால் உச்சிப்ப்குதி நெருக்கமாக அமைந்து வரும்.

# இப்போ அழகு செய்ய ஆசைப்பட்டால் வண்ணக்காகிதம் ஒட்டலாம், இல்லைனா வெள்ளைக்காகிதத்தினை ஒட்டினாலே நல்லா பளிச்சுனு அழகா இருக்கும்.

இந்த பிரம்மிட் எகிப்திய தொழில் நுட்பத்தில் உருவானது என்பதால் , இதன் ஸ்லோப் ஆஃப் ஆங்கில் தானாகவே 54.5 டிகிரியில் இருக்கும், சென்னையில் வைத்து என்று இல்லை  கடக ,மகர ரேகைக்கிடையே எங்கே வச்சாலும் காலையில் சுமார் 9.36 முதல் மாலை 2.24 வரையில் நிழலே விழாது!

இதன் தொடர்ச்சியாக பூமி சாய்ஞ்சுக்கிட்டு சுத்துதா ,நேராக சுத்துதா , உண்மையில் எப்படித்தான் சுற்றுகிறது என ஒரு வெட்டி ஆய்வு ஒன்று செய்துள்ளேன் ,அதனை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

தொடரும்...
-------------------------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி, விக்கி,கூகிள் இணைய தளங்கள், நன்றி!
--------------------------------------

புதுவை புத்தகச்சந்தை- 2013!

$
0
0
(புத்தகம்னா ரொம்ப புடிக்கும்,புத்தகம் படிக்கிறவங்களையும் ரொம்ப புடிக்கும்,பொதுவாத்தான் சொன்னேன்...ஹி..ஹி)


வாரக்கடைசியில ஊர்ப்பக்கமா போயிட்டு வரலாமேனு கிளம்பினேன் , கடற்கரையோரமா போனால் காத்து சிலு சிலுனு ஜில்பான்ஸா அடிக்கும் , அப்பிடியே போற வழியில புதுவையில தொண்டைக்கு இதமா நல்லத்"தண்ணி"கிடைக்கும் தொண்டைய கொஞ்சம் நனைச்சிக்கலாம்னு ஒரு மாஸ்டர் பிளான் போட்டு வச்சால் என்னிக்கு நாம நினைச்சது நடந்திருக்கு இன்னிக்கு நடக்கனு நொந்துக்க வேண்டியதா போச்சு, கடைசி நேரத்துல நம்ம வாகன ஓட்டி வேற வேலை இருக்குனு காலை வாரிட்டார்(சீப்பு வச்சு வாரினாரானுலாம் கேட்கப்படாது)சரினு கடைசியில பஸ்ஸ புடிக்கலாம்னு கிளம்பினா , ஊருல இருக்க எல்லாருமே அன்னிக்குனு ஊருக்கு கிளம்பிடுறாங்கய்யா அவ்வ்!

ஒரு வழியா தமிழர்களின் கலாச்சாரப்படி சன்னல் வழியா துண்டப்போட்டு எடம்புடிச்சு ,ஏறியாச்சு ,புதுவையில இறங்கியும் ஆச்சு, இறங்கியதும் நம்ம கண்ணில பளிச்சுனு ஒரு வெளம்பரம் பட்டுச்சு , புத்தி வேண்டாம்னு சொன்னாலும் ,மனசு மசால் வடை தேடிப்போற எலி மாதிரி சொன்னப்பேச்சு கேட்க மாட்டேங்குது அவ்வ்!



யே யப்பா ஏதோ அஜால் குஜால் விளம்பரம் பார்த்து எங்கியோ போய் மாட்டிக்கிட்டான்னு குஜாலாக வேண்டாம், நான் பார்த்த வெளம்பரம் "புதுவை புத்தகக் கண்காட்சி-2013"என்பது தான்!

ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் மைதானத்தில் நடப்பதாக போட்டிருந்தது, இவ்விடத்தில் தான் புதுவையில் பெரும்பாலான பொருட்காட்சி &கண்காட்சிகள் (கண்ணை தோண்டி வச்சிருப்பாங்களானு கேட்கப்படாது) நடக்கும் ,அல்லது பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா திடலில் நடக்கும்.

சரி இம்புட்டு தூரம் வந்தாச்சு ,ஒரு எட்டு புத்தகச்சந்தைக்கு  போயிட்டு அப்பாலிக்கா தாகசாந்தி செய்துக்கலாம்னு ஒரு தானீயங்கி மூவுருளிய புடிச்சா , ரொம்ப நியாயமா ஒரு கொள்ளைரேட்டு சொல்லுறாங்க,  பேருந்து நிலையத்தில இருந்து ஏ.எஃப்டி மில் திடல் சுமார் 1.5 கி.மீ தான் இருக்கும் அதுக்கு  ரூ 60 னு சொல்லுறாங்க, ஹே...ஹே நாம கேட்ட ஆளு எப்புடினு பாவம் பயப்புள்ளைக்கு தெரியலை , போட்ட பிளேடுள , வேற எதாவது வண்டிப்புடிச்சுக்கோங்க , ஆளைவிடுனு அப்பீட் ஆகிட்டாப்படி, அப்புறம் 30 ரூவாய்க்கு சல்லீசா ஒரு தானியப்புடிச்சு சந்தைக்கு போயாச்சு, இனிமே சந்தை நிகழ்வுகளை ஒளிப்படங்களாக காணுங்கள்!

ஏ.எஃப்.டி திடல் என்பது புதுவை கடலூர் சாலையில் , புதுவை உயர்நீதிமன்ற கிளைக்கு எதிரில் உள்ளது.

புத்தகச்சந்தையின் முகப்பு ,மஞ்சள் வெயில் மாலையிலே சும்மா தகத்தகனு எம்சிஆரு மாதிரி சொலிக்குது :-))




வலப்புறம் உணவகம் என்ற பெயரில் ஒரு தகர கொட்டாயில இமாச்சலப்பிரதேஷின் ஆப்பிள் சூசு கடையும்,பஜ்ஜி,போண்டா கடையும் வச்சிருக்காங்க. சாப்பிடத்தூண்டும் வகையில் பெருசாவோ,சிறுசாவோ அல்லது திரிசாவோ இல்லை,எனவே ஒரு ஆப்பிள் சூசு மட்டும் குடிச்சு பார்த்தேன் , 20 ரூபா , காசுக்கு பழுதில்லைனு சொல்லலாம்.




#இந்த மஞ்சக்கலர் போர்டை படிக்காம உள்ள போயிட்டு , வரும் போது ஒரு சலசலப்பை கிளப்பிட்டேன் , ஹி...ஹி கடமையே கண்ணா படம் மட்டும் எடுத்திருந்தேன் அவ்வ்!

# போர்டில் என்னா போட்டிருக்குனு படிச்சு வச்சுக்குங்க,நான் என்னா பண்ணேன்னு கடசீல சொல்லுறேன்!

ஆப்பிள் சூசு கடை, கப்பு சூசு 15ரூ, அட்டை டப்பா 20ரூ ,கண்ணாடிக்குடுவை 30 ரூ





# இந்த கடையில ,பொன்னியின் செல்வன்,காவற்கோட்டம், பாலகுமரனின் உடையார்னு ஏகப்பட்ட சரித்திர புதினங்களாக இருந்துச்சு ,ஆனால் விலை தான் என்ன போல தரித்திரங்கள் வாங்க முடியாத வகையில இருக்கு , சரி போட்டா எடுக்க காசா ,பணமானு போட்டா மட்டும் புடிச்சிக்கிட்டேன், வேற வழி அவ்வ்!






# ஹி...ஹி இந்த கடையிலயும் நிறைய புத்தகங்கள் தான் இருந்துச்சு, மிக்சி ,கிரைண்டர்னு எதுவுமே இல்லை...அடேய் புத்தக சந்தையில இருக்க கடையில வேற என்ன இருக்கும்னு நினைச்சேனு டெங்க்சன் ஆவாதிங்கோ, என்ன எழுதுறதுனு தெரியாம ச்சும்மா ஒரு மொக்கை ஹி...ஹி!

# இந்த கிளக்கு படிப்பகம் காரங்களுக்கு ஆனாலும் ரொம்ப குசும்பு, புத்தக சந்தையை புதுச்சேரி கலைப்பண்பாட்டு துறை நடத்துகின்றது,ஆனால் இவங்க என்னமோ "சிறப்பா"தனியா நடத்துறாப்போல ஒரு பேனர் வச்சிருக்காங்க அவ்வ்!

கடையில சுஜாதா எழுதிய அந்தக்கால புத்தகங்களை மறுபதிப்பு போட்டு கொள்ளை விலையில விக்குறாங்க, ஆனால் அதே புத்தகங்களே வேற பதிப்பகங்களில் மலிவாக கிடைக்குது, இதையும் குறிப்பிட்டு கேட்டேன் ,பேப்பர் குவாலிட்டியா இருக்காம், ம்ஹூக்கும் அப்படியே வாங்கிட்டு போய் ஃப்ரேம் போட்டு வைக்கவா போறோம், படிச்சு கிழிக்க பேப்பர் எப்படி இருந்தா என்ன?

ஒரு காலத்தில"மணிமேகலை பிரசூரம்"உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி முதல் ,நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள் வரை எல்லா தலைப்பிலும் புத்தகங்களை போட்டு தள்ளுவாங்க, அப்போ நினைச்சுக்கிறது இதெல்லாம் யாரு வாங்குவாங்கனு ,அதே போல கிளக்கும் எல்லா தலைப்பிலும் புத்தகம் போடுறதுனு கிளம்பிடுச்சு ,எல்லாருக்கும் வாழ்க்கை வரலாறு, மேலும் ஆயக்கலைகள் 64 க்கும் புக்கு இருக்கும் போல :-))




# பாரதியார் கலைக்கூடம்னு ஒரு நுண்கலை பயிற்சி மையம் அரியாங்குப்பம் அருகே இருக்கு, அவர்கள் ஒரு கடைப்போட்டிருக்காங்க,, அங்கே போய் உட்கார்ந்து "போஸ்'கொடுத்தா நம்மளை அழகா படம் வரைஞ்சு கையிலவே கொடுத்தனுப்புறாங்க, ஏற்கனவே நாம சுமார் மூஞ்சி என்பதால் ,படம் வரையிறவங்களை சோதனைக்குள்ளாக்காமல் நழுவிட்டோம், அங்கே ஒரு குட்டிப்பையனும் படம் வரைஞ்சிக்கொடுத்துக்கிட்டு இருக்காரு ,வருங்காலத்துல ஹீசைன் போல்ட்(ஹி...ஹி தப்பா சொல்லிட்டேன்னு பின்னூட்டத்தில் என்னை திருத்தவும்) போல பெரிய ஓவியரா வருவாராக்கும்!


#எதிர் வெளியீடு (பொள்ளாச்சி) பேரே ஒரு மார்க்கமாக இருக்குனு  யாரும் கடைக்குள்ள போகவேயில்லை போல , நான் போய் ஒரு புக்கு வாங்கினால் , சார் நீங்க தான் முதப்போணி சில்லறையில்லைனு சொல்லிட்டார்(அப்போ மணி மாலை 5 அவ்வ்) பெரும்பாலான கடைகளில் இதான் நிலை சில்லறையில்லைனு சொல்லி அனுப்பிடுறாங்க, வர்ரவன் எல்லாம் 50 ரூவா புக்கு வாங்கிட்டு ஆயிரம் ரூவா தாளை நீட்டுனா என்ன செய்யனு என்ன முன்ன போக விட்டு பின்னாடி பொலம்பினத நானும் கேட்டுட்டு கேட்காத மாரியே வந்துட்டேன் அவ்வ்!

ஹி...ஹி அப்படியும் ஒரு கடையில பிடிவாதமா சரி ரெண்டு புக்கு வாங்குறேன்னு சில்லறைய மாத்தி கொடுக்க வச்சிட்டோம்ல!






# விகடன் வெளியீடு கடையில சுஜாதா, மதன் எழுதிய நூல்கள், விகடனில் தொடரா வந்தது எல்லாம் போட்டு கடைய ரொப்பி வச்சிருக்காங்க,பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், பதிவருமான அமுதவன் அவர்கள் சமீபத்தில் எழுதிய "என்றென்றும் சுஜாதா"என்ற புத்தகத்தினை விகடன் வெளியிட்டு இருக்குனு சொன்னாரேனு தேடு தேடுனு தேடினேன் ஆனால் இல்லவே இல்லை , போட்ட புக்குலாம் வித்து தீர்ந்து போச்சூ போல. ஆனால் அங்கே இன்னொரு புக்கு கண்ணில் சிக்கியது, திருப்பூரின் பிரபல தொழிலதிபதிவரான 'ஜோதிஜி"எழுதிய டாலர் நகரம் தான் , ஆனால் விலை தான் டாலரில் சம்பாதிக்கிறவங்களுக்கு ஏத்தாப்போல வச்சிட்டாங்க , சரி போட்டாவாச்சும் எடுத்துப்போம்னு எடுத்துக்கிட்டேன்.

டாலர் நகரம்பக்கத்தில சோடிப்போட்டாப்போல அம்மையாரின் புகைப்பட ஆல்பம்னு ஒரு புக்கு இருந்துச்சு,அட்டையில இருந்த ரெண்டுப்படமும் பார்த்தால் "டாலர் நகரம்"படிக்கும் முன்,படித்த பின் காட்டும் ரியாக்‌ஷன் போலவே இருந்துச்சு ! நல்லாத்தான் சோடிப்போட்டு வச்சிருக்காங்க அவ்வ்!






"We tamilan"செபாஸ்தியன் சீமான் செவுளிலேயே அப்பிடுவேன் என்பது போல கைய ஒங்கிட்டு படம் போட்ட ஒரு புக்கு, ஏன் இம்புட்டு கோவமா இருக்கார்ன்னு பார்த்தால் ,பக்கத்தில "லிங்கூ'என்ற ஒலக மகா கவித புக்கு அவ்வ்!

 உண்மையில விகடனுக்கு அசாத்திய துணிச்சல் தான் ஓசில கொடுத்தாக்கூட வாங்க மாட்டாங்க  லிங்கூ புக்க ,அதுவும் விலை 60 ஓவா, பக்கத்துக்கு நாலு வரி கவித, எதிர் பக்கத்தில , மசிய பூசிட்டு எச்சித்தொட்டு அழிச்சாப்போல ஒரு படம்,

சாம்பிளுக்கு ஒரு சில பக்கங்கள் புரட்டி பார்த்தேன், தேர் வடம் புடிக்க நீ நடந்து வந்தாய், தேர் நகர்ந்தது...! இத மடக்கி ஒன்னுக்கீழா ஒன்னா எழுதி  மூனு புள்ளி ஒரு ஆச்சர்ய குறி போட்டிருக்கு , கவிதயாம் , முடியலடா சாமி! செபாஸ்தியன் சீமான் கோவமா கைய ஓங்கிட்டு நிக்குறதுல தப்பேயில்லை :-))

சின்ன குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் கொண்ட கடை,அடியேன் மனசளவில் இன்னும் ஒரு கொழந்தை தான் என்றாலும் ,அங்கே வச்சிருந்த டிர் டிர் கிளு..கிளுப்பைக்கூட வாங்க என்னிடம் காசில்லையே அவ்வ்வ்!

நாளு புக்கு 200 ரூவானு போர்டு தொங்கிச்சேனு பார்த்தேன் ,எல்லாம் ஆங்கில பாக்கெட் நாவல்கள், இதெல்லாம் பைகிராப்ட்ஸ் ரோட்டில 25 ரூவாய்க்கே கிடைக்கும்!



புதுமைப்பித்தன் ,இப்பவும் புதுசாத்தான் இருக்கார்!



# ஜெமோவின் எழுத்தாள பிம்பம் அவரை விட பெருசா வளர்ந்து போச்சு போல , என்னமோ கவர்ச்சி நடிகை படம் போட்டு விக்குற வார இதழ்கள் போல அவரு படத்தை வித விதமா டிசைன் செய்து எல்லா புக்கிலும் போட்டிருக்காங்க, ஆனால் யாரும் எடுத்துக்கூட பார்த்தாப்போல தெரியலை.

இதே கடையில"பிரபல இலக்கியப்பதிவர்"ராஜா சுந்தர்ராஜனின் "நாடோடித்தடம்"புக்கும் கண்ணில பட்டிச்சு , அட்டைப்படம் தான் அந்தக்கால 'ராணி முத்து"போல ஒரு பொண்ணு படத்தை பெருசா போட்டிருக்கு ,வரைஞ்ச படம் போல, இன்னும் அதே போல "அடாசான"அட்டைப்பட வடிவமைப்பில ரமணிச்சந்திரன் நாவல்கள் மட்டும் தான் வந்துக்கிட்டு இருக்குனு நினைச்சேன், ஏன் நானும் இருக்கேன்லனு ராஜா சுந்தரராஜன் ஆஜாராகிட்டார் அவ்வ்!

அடுத்தப்பதிப்பில "இலக்கியத்தரமாக "அட்டைப்படம் போடுங்க சார், இல்லை பொண்ணு படம் தான் போடுவேன்னு அடம்பிடிச்சிங்கனா ,ஹி...ஹி நான் சொல்லுற படத்த போடுங்க! நானே எல்லாரையும் புக்கு வாங்க சொல்லி ரெக்கமண்ட் செய்வேன்!



# கண்ண தாசன் புத்தக நிலையத்தில், கவிஞர் கன்னத்தில கைய வச்சு ரொம்ப தீர்க்கமா சிந்திச்சுக்கிட்டு இருந்தார், அப்பாலிக்கா தான் நாம எதுக்கு வந்தோம், என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்னு உறைச்சது ஹி...ஹி!


# மஞ்ச போர்டை படிக்காம ,படம் மட்டும் எடுத்துட்டு போனாதால ,சல சலப்பாச்சுனு சொன்ன மேட்டருக்கு வருவோம்.




வெளியில் வரும் வழியில் , புக்கு எல்லாம் வாங்கி ,பில்லு இருக்கானு செக் பண்ணுறாங்க, பில்லின் ஒரு காப்பியும் வாங்கி வச்சிக்கிறாங்க, சரி அது போகட்டும், ஆனால் புக்கு மேல "மறு விற்பனைக்கல்ல, 15% தள்ளுபடி"னு ரப்பர் ஸ்டாம்ப் வச்சி சீல் போட்டு தராங்க, அது என்ன தள்ளுபடில கொடுத்தாலும் ,என்னமோ இலவசமா கொடுக்கிறாப்போல இப்படி முத்திரைக்குத்துறிங்களேனு கேட்டால் ,அதான் வாசலில் போர்டு வச்சிக்கீறோமேனு சொல்லுறாங்க, அப்படியும் விடாம சீல் போடக்கூடாதுனு சொன்னேன், சீல் போடலைனா 10% மட்டும் தள்ளுபடி, சீல் போட்டால் 15% கூடுதல் தள்ளுபடியாம், சீல் வேண்டாம் என்றால் 15%  இல்லைனு தான் போர்டுல போட்டிருக்கு, 15% பணத்தினை திரும்ப செலுத்த வேண்டும் என வெளக்கினார்கள், அவ்வ்!. மேலும் சில விவரங்களும் சொன்னார்கள்,

புதுவை புத்தகச்சந்தையில் மொத்தம் 25% தள்ளு படி அளிக்கிறார்கள், இதில் 10% தான் புத்தக விற்பனையாளர்கள் அளிப்பது, மீதி 15% ஐ புதுவை அரசு அளிக்கிறது, முதலில் இப்படி சீல் எல்லாம் போடாமல், பில்லின் ஒரு காப்பியை மட்டும் வாங்கிக்கொண்டு தான் இருந்தார்களாம், ஆனால் புத்தக விற்பனையாளர்கள், சும்மா பில் போட்டு வெளியில் எடுத்து போய்விட்டு மீண்டும் உள்ளே எடுத்து வந்து விற்கிறார்கள், இதன் மூலம் புத்தகங்களை விற்காமலே , 100 ரூவாக்கு 15 ரூபா லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும், அதை தடுக்கவே , வெளியில் எடுத்து செல்லும் புத்தகங்களில் சீல் போடுவதாகவும் சொன்னார்கள்.

புதுவை அரசு படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கவும், மக்களுக்கு மலிவாக புத்தகங்கள் கிடைக்க வேண்டும் எனவும் , நிதி ஒதுக்கி தள்ளுபடி அளிக்க செய்வதிலும் ,இந்த புத்தக விற்பனையாளர்கள் குறுக்கில் புகுந்து கைய வைக்கிறாங்களே, அப்புறம் என்ன அறம்,முறம்னு பினாத்த வேண்டியது,அரசு புத்தக வெளியீட்டாளர்களுக்கு உதவியே செய்யலைனு பொலம்ப வேண்டியது?

தமிழகத்தில் எல்லாம் இப்படி கூடுதல் தள்ளுபடி கொடுக்க அரசு நிதியே ஒதுக்குவதில்லை, புதுவையில் ஏதோ பெரிய மனசு செய்து நிதி ஒதுக்குறாங்க, அதிலும் இப்படி குழப்படி செய்தால் ,வருங்காலத்தில் ஒரே அடியாக அரசு சார்பான தள்ளுபடியே இல்லை என அறிவிக்க கூடும், இது மக்களுக்கு தான் இழப்பு, புத்தக வெளியீட்டாளர்கள் வழக்கம் போல 10% தள்ளுபடியில் கடைப்போட்டுக்கொண்டு ,மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைஞ்சுப்போச்சுனு சொல்வதில் அர்த்தமேயில்லை!
-------------------------------------------------------------

பின் குறிப்பு:

யாருக்காச்சும் நன்றினு சொல்லியாகனும் இல்லைனா , சண்டைக்கு வந்தாலும் வருவாங்க போல எனவே,

# வாகன உதவி, த.நா போக்குவரத்து கழகம்,குடந்தைக்கோட்டம்,

# தள்ளுபடி அளித்துதவியவர்கள், பபாசி மற்றும் புதுவை அரசு கலைப்பண்பாட்டு துறை!

# ஒளிப்படங்கள் உதவி,அடியேன்!

# பதிவேற்ற உதவி, பிலாக்கர்.காம் இணைய தளம்.

நன்றி!
--------------------------


Bt COTTON- ஒரு மாற்றுப்பார்வை!

$
0
0

(அய்யோடா இது பிடி காட்டன் இல்லை ..ஹி...ஹி)

பி.டி காட்டனை அமெரிக்க நிறுவனமான மோன்சாண்டோ இந்தியாவில் அறிமுகப்படுத்தியப்போது முதல் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது,அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பி.டி பருத்தி இந்தியாவில் ஊடுருவாமல் போய்விட்டது எனப்பலரும்நினைக்கலாம் ஆனால் உண்மையில் நிலை வேறு இந்தியா முழுக்க மிக அதிக அளவில் பி.டி வகை பருத்தி தான் பயிரிடப்படுகிறது, நம்ம போராளீகள் எப்படி விட்டிருப்பாங்கனு நினைக்கலாம் ல்..ஹி....ஹி அந்தப்போராட்டங்களே ஒரு செட்டப்பு தானே அப்புறம் எங்கே இருந்து பி.டி பருத்தி பி.டி உஷா போல ஊரவிட்டு ஓட, நல்லா ஸ்ட்ராங்கா அஸ்திவாரம் போட்டு இந்தியாவில் உட்கார்ந்துக்கிச்சு பி.டி பருத்தி, இந்தியாவில் இனிமே பி.டி பருத்தி இல்லைனா வேட்டீ இல்லை  எவனுக்கும் அவ்வ்!

சுமார் 65 லட்சம் விவசாயிகள் பி.டி பருத்தி சாகுபடி செய்கிறார்கள்,தேசிய உற்பத்தில் இவர்களின் பங்களிப்பு 94.5 சதவீதமாம், மிச்சம் இருக்க அய்ந்து சொச்சம் சதவீதமும் விரைவில் பீ.டி பருத்தியாகிடும் என்பதில் சந்தேகமேயில்லை, வழக்கம் போல நம்ம போராளிகள் ஊடகங்களில் மட்டும் "புரட்சி வெடி"வெடித்துக்கொண்டிருப்பார்கள் !!!

காண்க செய்தி....

//

Bt cotton now accounts for 94.75 p.c. of total cotton cultivation: T.M. Manjunat (www.cottonyarnmarket.com)
The area under Bt cotton cultivation in the country has rapidly increased from 29,000 hectares in 2002 when commercial cultivation of the variety was permitted to 11.2 million hectares in 2012, according to biotechnology experts.
Participating at an interaction programme organised by the University of Agricultural Sciences-Bangalore on Monday, Biotechnology and Integrated Pest Management Consultant T.M. Manjunath said Bt cotton now accounts for 94.75 per cent of the country’s entire cotton cultivation. He was interacting with about 150 innovative farmers and Bt experts from public and private sectors on various issues related Bt crops.
Similarly, the number of farmers engaged in cultivation of Bt cotton has increased from about 20,000 in 2002 to 65 lakh in 2012, he said. Referring to the opposition from various quarters to Bt crops and the apprehensions on its impact on health and environment, he said there would not have been a rapid increase in the number of farmers cultivating Bt cotton and its area if the variety was not useful to them. It is cultivated mainly in Maharashtra, Karnataka, Tamil Nadu, Andhra Pradesh, Madhya Pradesh, Haryana, Punjab, Rajasthan and Gujarat, he said.//


நம்ம போராளிகள் நடத்தியப்போராட்டத்தின் நுண்ணரசியலை காண்போம்,

ஆரம்பத்தில் மோன்சாண்டோ நேரடியாக பி.டி விதியினை சந்தைப்படுத்த களம் இறங்கியது,அப்பொழுது  நம்மப்போராளீகள் பொங்கி எழுந்தார்கள்! ஏதடா வம்பாப்போச்சேனு சற்றே சிந்தித்த மோன்சான்டோ ஒரு மாற்றுவழியைப்பிடித்தது, மகாராஷ்ட்ராவில் பருத்தி விதை விற்பனையில் முன்னணீ நிறுவனமான மாஹிகோவை ( Mahyco or Maharashtra Hybrid Seeds Co)வாங்கி அதன் பெயரில் விற்க ஆரம்பித்தது,கூடவே  வேளாண் பல்கலைகளின் புதிய வகை பருத்தி ஆய்வுகளுக்கு நிதியை அள்ளீவிட்டது, எனவே நம்ம ஊரு வேளாண்பல்கலைகள் எல்லாமே பி.டி வகை பருத்திகளையே புதிய ரகமா வேறு வேறூ பெயர்களில் வெளியிட ஆரம்பித்தன.

மேலும் மிக எளிதில் தங்களது பிடி மரபணு நுட்பத்தினை இந்தியாவில் பரப்ப இந்திய வேளாண் பல்கலைகளை பின்வாசல் வழியாக "மாகிகோ(மோன்சான்டோ) பயன்ப்படுத்துகிறது, சமிபத்தில் The National Biodiversity Board (NBA)அனுமதியில்லாமலே  கத்திரிக்காயில் பிடி நுட்பத்தினை புகுத்தி உள்ளூர் ரகமாக செய்ய கர்நாடக தார்வாட் வேளாண் பல்கலையுடன் ஒப்பந்தம் போட்டு வேலை செய்த விஷயம் வெளியாகி , கர்நாடக உயர் நீதிமன்றத்தில் "கிரிமினல் வழக்கே'மாகிகோ மீது பதிவாகியுள்ளது.

செய்தி,

//The National Biodiversity Board (NBA) and the Karnataka Biodiversity Board (KBB) filed a case for criminal prosecution of 13 individuals, including some top management officials of Mahyco or Maharashtra Hybrid Seeds Co. Limited which is partly owned by Monsanto, for biopiracy. The authorities complained in 2012 that the company along with others had genetically modified local varieties of eggplant without the mandatory approvals and then laid illegal proprietary claim to the genetically modified seeds. In other words, they were accused of biopiracy under the Biodiversity Act 2002.//

http://www.thehindu.com/news/national/criminal-prosecution-of-mahyco-for-biopiracy-revived/article5244950.ece

மேலும் பிடி விதைகளை பரப்பவும், புதிய பிடி விதைகளை உருவாக்க , ஏற்கனவே உள்ள சுதேச விதைகளை பிடியாக மாற்ற என பிராந்திய அளவில் செயல்ப்டும் நூற்பாலை சங்கங்களையும் வளைத்துப்போட்டு அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு எஞ்சிய பருத்தி வகைகளையும் பிடியாக மாற்ற மாகிகோ(மோன்சான்டோ) தீவிரம் காட்டி வருகிறது.

தென்னிந்திய நூற்பாலை சங்கத்துடனும்அப்படியான ஒப்பந்தத்தில்  மாகிகோ ஈடுப்பட்டுள்ளது.

//V. Muthusamy, Research Manager at SIMA CD&RA, said that the renovated Suvin seeds have been distributed for field trials by farmers’ fields in Andhra Pradesh and Karnataka. The seeds have been distributed in north Gujarat also, he added

Rajkumar said that the association has inked an agreement with Kaveri Seed Company, Hyderabad (a sub-licensee of Mahyco Monsanto Biotech (India)) for co-marketing KCH-999 BGII hybrid cotton seed as SIMA GKD 1.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece

வெள்ளைக்காரன் தனியா வந்து நம்மை ஆண்டு விடவில்லை அப்பொழுது அவனுக்கு துணை நின்றதே நம்மாட்கள் தான் அதே போல தான் மோண்சான்டோவும் தனியா எதுவும் செய்துவிடவில்லை, காசு கிடைக்குதேனு நம்ம ஆட்களும் கூட சேர்ந்து தான் எல்லாம் செய்றாங்க, ஆனால் போராளிகள் பொங்குவதெல்லாம் வெளிநாட்டுக்காரன் செய்துப்புட்டான்னு :-))

அனைத்து மாநிலங்களிலும் முன்னணி விதை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு மோன்சாண்டோ பி.டி விதைகளை காங்கா,காவேரி என உள்ளூர் பெயரில் விற்க வச்சிடுச்சு,இப்படியாக 94.5 சதவீத பருத்தி மார்க்கெட்டும் மோன்சாண்டோ கைக்கு போய் ரொம்ப நாளாச்சு, மோன்சாண்டோவுக்கு எதிராகக்கொடிப்புடிச்ச போராளிகள் ஏன் அதே பி.டிவிதைகளை உள்நாட்டு விதை நிறூவனங்கள் விற்றப்போது செய்யவில்லையே ஏன்?

காரணம் ரொம்ப சிம்பிள் உள்நாட்டு யாவாரிகள் ஒவ்வொருவரும் அந்த அந்த மாநிலத்துலவும் ஜாதி மற்றும் அரசியல் ரீதியில் செல்வாக்கானப்பின்ப்புலங்கள் கொண்டவர்கள், அவங்களுக்கு எதிராகப்பேசினால்  வாயிலவே குத்துவாங்க, மேலும் பல இயக்க தலைவர்களுடன் நல்ல "அண்டர்ஸ்டேண்டிங்கும்"உண்டு, ஜாதி,அரசியல்,மதம் என ஏதோ ஒரு வகையில் தொடர்பும் இருக்கும்,தேர்தல் அல்லது கட்சி செலவுகளுக்கு கவனிப்பும் உண்டு, அப்படி இருக்கும் போது "புரட்சி புண்ணாக்கு"எல்லாம் செய்வாங்களா என்ன?

ஆனால் ஒன்னு இப்பவும் மோன்சாண்டோ எதாவது மாநிலத்தில நேராடியாக பி.டி விதைகளைவிற்கலாம்னு திட்டம் போட்டு ஃபீல்ட் ஒர்க்கில் இறங்கினால் உடனே கொடியப்பிடிச்சுக்கிட்டு கூட்டம் கூட்டமா கிளம்பிடுவாங்க, அதுக்கு உள்ளூர் வியாபாரியின் ஆசிர்வாதமும் உண்டு!

பி.டி விதைக்கான எதிர்ப்பு என்பது சுதேச விதை வியாபாரிகளின் விதை வியாபாரத்தைகாக்க மட்டுமே ,அது எப்புடி மரபணு மாற்றப்பட்ட பி.டி விதைய வெள்ளைக்காரன் நம்ம ஊருல விக்கலாம், மக்கள் பாதிக்கப்படுவாங்களே என புரட்சிபேசுபவர்கள் அதே பி.டிவிதையை கங்கா,காவேரினு நம்ம ஊரு விதை விற்பனையாளர்கள் விக்கும் போது பாதிப்பே வராது என கண்மூடிக்கொள்ளும் வில்லேஜ் விஞ்சானிகள் தான் நம்ம ஊரு சேகுவேராக்கள் அவ்வ்!!!

எல்லா களவாணித்தனத்திலும் நம்மாட்களும் கூட இருக்காங்க ஆனாலும் பழிய மட்டும் தூக்கி "மோன்சாண்டோ"மேல போட்டு அவன் என்னமோ  தன்னந்தனியா இந்த வேலைய செய்துட்டாப்போல ஒரு காட்சித்தோற்றத்தினை உருவாக்க வேண்டியது!

நம்ம நாட்டில் நடக்கும் போராட்டங்கள்,எதிர்ப்புகள் எல்லாமே ஏதேனும் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதே சாபக்கேடு, யாரோ ஏதோ தீமையை எதிர்த்து போராடுராங்க அந்த தீமை போயிடும்னு மக்கள் நம்பிக்கிட்டு சும்மா இருந்துடுவாங்க, கடைசியில் எது நடக்காது என நினைத்தார்களோ அதான் நடந்திருக்கும் :-))

பி.டி தொழிருட்பத்தில் தயாரிக்கப்ப்பட்ட விதைகள் எவ்வித தீங்கும் தராது,பாதுகாப்பானது என மெத்த படித்த விஞ்"சாணி"கள் கொண்டு பரப்புரையை மோன்சாண்டோ கன கச்சிதமாக செய்து வருகின்றது, பல ஊடகங்களும்  "கவனிக்கப்பட்டு விடுவதால் பிடி பருத்தியால் தான் இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகமானது, என பல புள்ளி விவரங்களை அள்ளி விடவும் செய்கின்றன. ஆனால் உண்மை நிலவரம், பிடி பருத்தி எல்லாம் இந்தியவுக்கு வரும் முன்னர் இருந்தே இந்தியா உலக அளவில் பருத்தி உற்பத்தியில் எப்பொழுதும் முதல் மூன்று இடங்களில் ஒன்றினை பிடித்தே இருந்தது.

இன்றும் உலகில் பருத்தி உற்பத்தியில் இரண்டாம் இடம், சாகுபடி பரப்பில் முதலிடம் வகிக்கிறது,ஆனால் பழைய வரலாற்றினை கண்டுக்கொள்ளாமல் அதெல்லாம் தற்போது பிடி பருத்தியால் தான் சாத்தியமாயிற்று என சொல்வது மிகப்பெரும் பித்தலாட்டம் ஏன் எனில் ஆரம்பத்தில் இருந்த சாகுபடி பரப்பு நாளாக ஆக அதிகரித்து வருகிறது, எனவே இப்பொழுது மொத்த உற்பத்தி பேல்களில் அதிகமாக இருப்பதை மட்டும் காட்டி சொல்கிறார்கள், சதவீத அடிப்படையில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா கிட்டத்தட்ட ஒரே நிலையினை வகித்து வந்தது.

வெள்ளைக்காரன் ஆண்டக்காலத்திலேயே மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் என்றும் கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் பெயர் வாங்கிடுச்சு, ஏன் எனில் பிரிட்டீஷ் இந்தியாவில் அவ்வளவு பருத்தி உற்பத்தி இந்தியாவில் செய்யப்பட்டு ஏற்றுமதியானது.

பி.டி தொழிற்நுட்பத்தால் தீங்கு உண்டா?


BT- Bacillus thuringiensis என்ற பேக்ட்டீரியாவின் நச்சு தன்மையுள்ள புரதத்தினை ,மரபணு மாற்றத்தின் மூலம் தாவர மரபணுவுடன் - பருத்திஉடன் இணைத்து செய்யப்படும் மரபணுகலப்பு விதையே பிடி பருத்தியாகும்.

பேக்டீரியா என்பது நுண்ணுயிர் விலங்கு எனலாம்கெனவே அதன் மரபணு தாவர மரபணுவுடன் இயற்கையாக சேராது, அதனை ஆய்வகத்தில் செயற்கையா ரசாயனங்கள் உதவீயுடன் இணைக்கப்படுகிறது,எனவே பி.டி நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தாவர பொருளில் பி.பி மரபணு மட்டுமில்லாமல் ரசாயன எச்சமும் இருக்கும்,எனவே நுகர்விற்கு பின் எம்மாதிரியான பக்க விளைவுகள் வரும் என சொல்லவியலாது ,ஆனால் செயற்கையாக செய்யப்பட்ட அனைத்தாலும் பக்க விளைவுகள் உண்டாகும் என்பது மட்டும் உறுதி.

தற்போது தெளிவாக உயிர் சுற்றுச்சூழலில் உண்டாகும் பாதிப்பினை காணலாம்.

//When consumed by insects, the protein is converted to its active, toxic form (delta endotoxin), which in turn destroys the gut of the insect. Bt preparations are commonly used in organic agriculture to control insects, as Bt toxin occurs naturally and is completely safe for humans.

More than 100 different variations of Bt toxin have been identified in diverse strains of Bacillus thuringiensis. The different variations have different target insect specificity. For example, the toxins classified under Cry1a group target Lepidoptera (butterflies), while toxins in the Cry3 group are effective against beetles.//


http://www.gmo-compass.org/eng/agri_biotechnology/breeding_aims/147.pest_resistant_crops.html


http://en.wikipedia.org/wiki/Pink_bollworm


http://en.wikipedia.org/wiki/Helicoverpa_armigera


http://insected.arizona.edu/ladyinfo.htm



பருத்தியில் அதிகம் சேதம் விளைவிப்பது காய் துளைப்பான் எனப்படும் பூச்சியாகும், இதில் பொதுவான காய் துளைப்பான், பிங்க் காய் துளைப்பான் என இரண்டு உள்ளது, இதற்கு பொல்கார்ட் ‍‍‍‍‍–1,2 என இரண்டு வகையினை மோன்சாண்டோ உற்பத்தி செய்துள்ளது.

(pinkbollworm moth)

கிரை‍‍–1 என்ற டாக்சின் உள்ள விதைகளாகும், இவை லெபிடாப்டிரா வகை பூச்சிகளுக்கு எதிரானவை, இரண்டு காய் துளைப்பானும் அவ்வகையே.

ஆனால் லெபிடாப்டிரா வகையில் சுமார் 1774,250 க்கும் மேற்பட்ட பூச்சிகள் உள்ளன, அவற்றுள் சில வகையே விவசாய "பெஸ்ட்"எனலாம், மற்றவை சாதாரணமானவை, வண்ணத்துப்பூச்சிகளும் லெபிடாப்டிரன் வகையே, மகரந்த சேர்க்கைக்கு இயற்கையான வெக்டார்கள் வண்ணத்துப்பூச்சிகளே! இவ்வகை பூச்சிகளை "நன்மை பயக்கும் பூச்சிகள் "என்பார்கள்.

அதிலும் சில லெபிடாப்ட்ரன்கள் அபூர்வமானவை,
மேலும் மொனார்ச் வண்னத்துப்பூச்சி ஒரு அரிய வகை இனமாகும்,

(monarch butterfly)
காய்த்துளைப்பானுக்கு விஷம் எனப்பயிரிடப்படும் பி.டி பருத்தியின் பூக்களில் தேன் உண்னும் மற்ற லெபிடாப்டிரா வகை வண்ணத்துப்பூச்சிகளூம் பாதிப்புக்குள்ளாகி இறந்து விடும்.

பருத்தி என்ற ஒரு வணிக்கப்பயிரில் ஏற்படும் பூச்சி தாக்ககுதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சொல்லி உருவாக்கப்பட்ட ஒரு உயிர் தொழில்நுட்பம் ஒரு உயிர்வகைப்பாட்டியியல் ஆர்டரில் உள்ள பல்லாயிரம் பூச்சிக்களுக்கும் எமனாக இருப்பதை பலரும் உணரவேயில்லை, ஒரு வேளை வருங்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அருகிவிட்டால் அப்போதான் விழித்துக்கொண்டு ஒலக வண்ணத்து பூச்சி டே"என ஒன்றை உருவாக்கி தமது கடமையை முடித்துக்கொள்வார்களாயிருக்கும் :-))

அதான் ஏற்கனவே சிட்டுக்குருவி தினம் ,சுண்டெலி தினம்னு உருவாக்கி நமக்குலாம்ம் விழிப்புணர்ச்சி ஊட்டுற அறிவு சீவிங்க இதை செய்ய மாட்டாங்களா என்ன அவ்வ்!

மேலும் பல பூச்சிகள் இயற்கை பிரிடேட்டர்கள் ஆகும்,அவை தீமைசெய்யும்பூச்சிகளின் முட்டை, புழு ஆகியவற்றை உண்பதன் ,மூலம் இஅயற்கையான பூச்சிக்கட்டுப்பாடாக உள்ளன. பி.டி விஷம் உள்ள பருத்தியில் உண்டு வளர்ந்த காய் துளைப்பானின் முட்டை ,புழு ஆகியவற்றை உண்ணும் நன்மை பயக்கும் பூச்சிகளூம் இறந்து விடும்.

கிரை –3 டாக்சின் பீட்டில் வகைப்பூச்சிகளூக்கு நஞ்சாகும், பெரும்பாலான பீட்டில்கள் நன்மை பயக்கும் பிரிடேட்டர் ஆகும், அவையும் பி.டி பருத்தி உண்ட காய்த்துளைப்பானின் புழுக்களை, முட்டைகளை உண்டோ, அல்லது பருத்தியின் பொருளாதார முக்கியம் இல்லாத பகுதிகளை உண்டோ பாதிப்புக்கு உள்ளாகலாம்.

உதாரணமாக லேடி பர்ட் பீட்டில் என்பது ஏபிட்ஸ் எனப்படும் சாறுண்ணிகளின் பிரிடேட்டர், பருத்தியில் உள்ள பிடி டாக்சின் ஏபிட்ஸ்களைப்பாதிக்காது, எனவே பிடி பருத்தியின் சாறுண்ட ஏபிட்ஸ்களை உண்ணும் லேடிபர்ட் பீட்டில்களுக்கு மட்டும் பாதிப்பு உண்டாகும், இதனால் இயற்கை பூச்சிக்கட்டுப்பான லேடி பர்ட் பீட்டில் அழிந்து ,சாறுண்ணீ பூச்சிகளின் இனம் பல்கிப்பெருகிடும், இது கதையல்ல நிஜம் என்பதற்கு கண் கூடாக சான்று, பி.டி பருத்தியில் காய் துளைப்பான் தாக்குதல் குறைந்து "சாறுண்ணி பூச்சி"தாக்குதல் அதிகரித்துள்ளதாக விவசாயிகளே சொல்வதிலிருந்து அறியலாம்.

பீ.டி பருத்தி காய்த்துளைப்பானுக்கு எதிராக மட்டுமே நல்லப்பலனைக்கொடுக்கும்,ஆனால் காலப்போக்கில் இயற்கை சமநிலை சிர்க்குலைவதால் பிறப்பூச்சி தாக்குதல் அதிகரிக்கவே வகை செய்யும். பல அரிய வகைப்பூச்சியினங்கள் முற்றீலும் அழியவும் காரணமாகலாம்.

# மேலும் நம் நாட்டில் பருத்தி என்பது இழைகளுக்காக மட்டும் பயன்ப்படுத்தப்படவில்லை, இழைகள் நீக்கப்பட்ட பருத்திக்கொட்டை என்பது கால்நடை தீவனமாக பயன்ப்படுகிறது, பிடி பருத்திக்கொட்டைகளை உண்ட பசுமாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் பிடி யின் தாக்கம் என்னவாக இருக்கும் என இதுவரையில் ஆய்வுகள் ஏதும் நடைப்பெற்றதாக தெரியவில்லை, எனவே அவ்வகை பாலை அருந்தும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு வரும் எனவும் தெரியாது.

நிறைய இடங்களில் பருத்திப்பால் எடுத்து மனிதர்களும் சாப்பிடுகிறார்கள், பருத்தி அல்வா என்று கூட உண்டு, இவ்வாறு உணவாக பிடி பருத்தியினைப் பயன்ப்படுத்தினால் என்ன பின்விளைவுகள் வரும் என  சரியான ஆய்வுகள் இதுவரையில் நடக்கவில்லை.

இந்தியாவில் சாலையை கடப்பதே உயிர் ஆபத்தான ஒன்று அதையே கவலைப்படாமல் செய்கிறோம், பிடிக்குலாம் பயப்படலாமா...ஸ்டீல் பாடி உடம்புலே இதுனு நம்ம மக்கள் தெம்பா பிடி பருத்திப்பால் குடித்துக்கொண்டு , தொலைகாட்சியில் சூப்பர் சிங்கரோ, மானா மயிலாடவோ பார்த்து இன்புற்று வாழ்வார்கள்!

--------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.monsanto.com/newsviews/Pages/india-pink-bollworm.aspx

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece
http://www.simamills.com/news.asp?id=3639

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள் நன்றி!

BT-COTTON- ஒரு மாற்றுப்பார்வை -2: உண்மையைத்தேடி!

$
0
0
(பருத்தி எடுக்கையிலே பலநாளும் பார்த்த புள்ள...ஹி...ஹி)

 BT -ANTHEM.


நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நாளாறு மாதமாய் மான்சான்டோவை வேண்டி

கொண்டு வந்தானடி காட்டன் பிடி

அதை கூத்தாடி கூத்தாடி

வயலில் போட்டு விதைத்தாண்டி!

ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ,ஜிக்கான்!
 ஜிக்கான், ஜிகு ஜிக்கான் ஜிக்கான்!

மழை பேஞ்சு வயலெல்லாம் தண்ணி,

மச்சான் ஏர்ப்பூட்டி உழுதாரே எண்ணி!

பிடி காட்டனுக்கு இல்லடா போட்டி

அதனால வச்சானே விலையத்தான் கூட்டி!

ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான்  ஜிக்கான், ஜிகு ஜிக்கான், ஜிக்கான்!

ராவுனும் பகலென்னும் உழைச்சு

கடன் வாங்கி விதை விதைச்சாண்டி!

கடனுக்கு ஏறுதடா வட்டி

பிடி போட்டவனுக்கோ கிழியுதடா வேட்டி!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி,அவன்

நாளாறு மாதமாய் மான்சாண்டோவை வேண்டி!

ஜிகு ஜிக்கான் ,ஜிகு ஜிக்கான் ஜிக்கான்!
 ஜிக்கான் ஜிகு ஜிக்கான்,ஜிகு ஜிக்கான்!

ஹி...ஹி வருங்காலத்தில் பிடி பருத்தி போட்ட விவசாயிகள் எல்லாம்  நொந்து நூடுல்ஸ் ஆகி வெந்து வெம்பிப்போய் " BT -ANTHEM"என இந்த பாட்டை பாடினாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை!

இந்த பாட்டும் விக்கிப்பீடியாவில் இருக்கும்னு சிலப்பேரு நினைச்சிக்கலாம், இது அக்கால பழைய பாடலை ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு ரீ - மிக்ஸ் செய்து "" BT -ANTHEM" ஆக உருவாக்கி இருக்கேன் ,நம்ம சமூகத்துக்கு ஏதோ என்னால முடிஞ்ச "கலைச்சேவை"எப்பூடி!

இடைக்குறிப்பு:

விக்கிப்பீடியாவில் எல்லாமே இருக்கு ,அது எங்களுக்கு தெரியாதா என நினைக்கும் அறிவு சீவிகள் வந்தவழியே ரிடர்ன் அடிச்சு விக்கிப்பீடியா தளத்தில் சென்று தேடிப்படித்துக்கொள்ளலாம், நாம் விக்கி முதல் ஏனைய தளங்களிலும் தகவல் வேட்டையாடி இயன்றவரை  எளிய தமிழில் சில  கருத்துக்களை பதிவு செய்து வருகிறோம்,ஏதேனும் புதிதாக அறிந்துக்கொள்ள ஆர்வமும் ,நேரமும் உள்ளவர்கள் மேற்கொண்டு தொடரலாம்!

BT- COTTON:மாயையும்,உண்மையும்!

முந்தையப்பதிவில் பிடி காட்டன் உள்ளே வந்தது, அதற்கு தோன்றிய எதிர்ப்புகளும் ,பின்னர் அவை எவ்வாறு தணிந்தது, பிடி பருத்தியின் இன்றைய சாகுபடி நிலவரம், மேலும் ,சுற்றுச்சூழலுக்கும்,பல்லுயிர் பெருக்கத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசப்பட்டதை அறிவீர்கள், அப்பதிவை படிக்கத் தவறியவர்கள் சோம்பல் படாமல் ஒரு முறைப்படித்துவிட்டு தொடர்ந்தால் சில விவரங்களை புரிந்துக்கொள்ள எளிதாக இருக்கும்.

"Bt COTTON"- ஒரு மாற்றுப்பார்வை -1.

 இப்பதிவில் முந்தைய பதிவில் லேசாக தொட்டுச்செல்லப்பட்ட சில விவரங்களையும் விரிவான "FLASH BACK"கில் காணலாம்,மேலும் புதிய விவரங்களும் இனி அடுத்துக் காண்போம்

விதை தயாரிப்பும்,காப்புரிமையும்:"FLASH BACK" 


பருத்தியின் பூர்வீகம் சிந்து சமவெளிப்பகுதி என அறியப்படுகிறது ,இந்தியர்கள் கி.மு 2000-3000 கால இடைவெளியில் இருந்தே பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு நூல் நூற்கவும் ஆடை நெய்யவும் கற்றிருந்தார்கள் என வரலாறு சொல்கிறது.

பந்தாக கம்பளி நூல் காய்க்கும் மரம் இந்தியாவில் உள்ளது என "ஹிரோடட்டஸ்"பருத்தியினை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து பாராசிகம் போய் எகிப்து என உலகமெங்கும் பரவியுள்ளது. தென்னமெரிக்காவிற்கும் சென்றுள்ளது,மயன்களும்,இன்காக்களும் பருத்தி ஆடையே அணிந்துள்ளர்.

பருத்தி பயிரு வச்சது நாமலா இருந்தாலும் பேரு வச்சது அரபியர்களே, காட்டன் என்ற சொல்  AL -QUT(U)N" என்ற அரபிச்சொல்லில் இருந்து உருவானது ,அப்படி எனில் நேர்த்தியான துணி அல்லது முழுத்துணி ஆகும்.

அக்காலத்தில் அரேபியர்கள் மூலமே பருத்தி வியாபரம் நடந்ததால், அவர்கள் அப்பெயரில் விற்றுள்ளார்கள் அதுவே நிலைத்துள்ளது.


முற்காலத்தில் விதை தயாரிப்பாளர்கள் என தனியே சிறப்பான நிறுவப்பட்ட ஒரு அமைப்பாக இல்லை, விவசாயிகளே பாரம்பரியமாக தாங்கள் விளைவித்தவற்றில் ஒரு பகுதியை விதைக்கு என எடுத்து வைத்துக்கொண்டு பயன்ப்படுத்தி வந்தார்கள்.

காலப்போக்கில் தொடர்ந்து ஒரே பாரம்பரிய வகையினை பயிரிட்டு வந்தமையால் இயற்கையாக ஏற்படும் கலப்பு மகரந்த சேர்க்கை, மேலும் ஒரே பயிர் தொடர் விவசாயம் ஆகியவற்றால் விதைகளின் தூய்மை பாதிக்கப்பட்டு உற்பத்தி திறன் குறையலாயிற்று, எனவே உற்பத்தியை பெருக்க மேம்படுத்தப்பட்ட விதைகளை (High yield hibreeds)அறிமுகப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனை தனிநபர்கள் செய்ய இயலாது எனவே அரசே முன்னின்று மேம்பட்ட விதைகளை உற்பத்தி செய்ய ஆய்வுகள் மேற்கொண்டது, உடனடியாக பெருமளவு விதை உற்பத்தி செய்ய இயலாது என்பதால் சர்வதேச விதை ஆய்வு மையங்களில் இருந்து இறக்குமதி செய்து உள்நாட்டில் அறிமுகப்படுத்தியது, ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ,இறக்குமதி செய்யப்பட்ட விதைகள் என்றாலும் அவற்றிற்கு காப்புரிமை என எதுவும் இல்லை, ஒரு முறை விதைத்து அறுவடை செய்தபின் ,விளைச்சலில் இருந்தே அடுத்த சாகுபடிக்கு விதை உருவாக்கிக்கொள்ளலாம், அதற்கு தடை ஏதும் இல்லை,இது அக்காலம்.

மேலும் அரசு வேளாண் ஆய்வு மையங்கள், பல்கலைகள் மூலம் அதிக மகசூல் கொடுக்கும் புதிய மேம்பட்ட விதைகள், மேலும் கலப்பின விதைகள் என உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிற்று ,அவற்றிற்கும் காப்புரிமை இல்லை, ஒரு முறை வாங்கினால் போதும் காலமெல்லாம் பயன்ப்படுத்திக்கொள்ளலாம்,'royalty free seeds"

ஒவ்வொரு புதிய விதைகளும்,கலப்பின விதைகளும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றதாக இருந்தன ,எனவே அவை மட்டும் அக்குறிப்பிட்ட பகுதிகளில் பரவலாக பயன்ப்பாட்டில் இருந்து வேருன்றின, அக்குறிப்பிட்ட விதைகள் அப்பகுதிகளுக்கான விதைகளாகவும் அறியப்பட்டன.


காலங்கள் உருண்டோடின புதிய விவசாயிகள் நிறைய பெருகினர், சாகுபடி பரப்ப்பு விரிந்தது ,விதை தேவைகளும் அதிகரித்தது, சிலர் முன்னரே பயிரிட்டவர்களிடம் வாங்கி விதைத்தனர், ஆனாலும் எல்லாருக்கும் விதைக்கிடைக்காத நிலை உருவாயிற்று, அப்பொழுது தான் விதைகளை உற்பத்தி செய்து தனியாக விற்கலாம்,அதற்கும் ஒரு சந்தை இருக்கிறது என்பது உணரப்பட்டது.

எனவே சில புத்திசாலி விவசாயிகள் அல்லது தொழில்முனைப்பு கொண்டோர் விதைக்கென பண்ணைகள் உருவாக்கி ,ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் வகைகளையும் பயிரிட்டு விதை பயிராக விற்கலானர், மேலும் புதிய ரகம் அறிமுகப்படுத்தப்ப்பட்டதும் மூல விதைகளை வாங்கி கலப்பினம் ஆகிவிடாமல் "தூய்மை பேணீ"விதைகளாக விற்கவும் செய்தார்கள், விதைகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்து சான்றுகள் வழங்கும் பழக்கமும் உருவாயிற்று, இவற்றினை 'சான்றளிக்கப்பட்ட விதைகள்"என்றார்கள். ஆய்வு மையங்கள் உருவாக்கும் விதைகள் "BREEder seed"ஆகும்.

விதை வகைகள்:

BREEDER SEED- ஆய்வு மையங்கள்,வேளாண் பல்கலைகழங்களில் உருவாக்கப்படுவது.

FOUNDATION SEED- பிரீடர்  விதைகளை பயிரிட்டு ,விதை உற்பத்தி மையங்களில் உருவாக்கப்படுவது.

CERTIFIED SEED- ஃபவுண்டேஷன் விதைகளை பயிரிட்டு உருவாக்கப்படுவது.

TRUTHFULLY LABLED SEED- சான்றளிக்கப்பட்ட  அல்லது ஃபவுண்டேஷன் விதைகளை பயிரிட்டு உருவாக்கப்படுவது, இவையே விவசாயிகளுக்கு பெருமளவு விதைகளாக விற்கப்படுகிறது.

சான்றளிக்கப்பட்ட விதைகளும் விவசாயிகளுக்கு பயிரிட விற்கப்படும் விதையே ,ஆனால் விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும் ஏன் எனில் ஒரு மத்திய விதை சான்றளீக்கும் நிறுவனத்தால் "சான்றளிக்கப்பட வேண்டும்"மேலும் தரமும் கூடுதலாக இருக்கும்.

ட்ருத்ஃபுல்லி லேபிள்டு விதை என்பது சான்றளிக்கப்பட்ட விதை தரத்தில் தயாரிக்கப்பட்டு ஆனால் அரசு சான்று பெறாமல் ,விதை தயாரிப்பு நிறுவனத்தாலேயே "இது நல்ல விதை"என உறுதி அளிக்கப்பட்ட ஒன்று, கொஞ்சம் முளைப்பு திறன் & தூய்மையின் தரம் குறைவாக இருக்கலாம்,எனவே விலை கம்மியாக இருக்கும்.இவ்வகையே விவசாயிகளுக்கு அதிகம் விற்கப்படுகிறது.

இவ்வாறு விதை உற்பத்தி என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பாக உருவாயிற்று,ஆனால் அப்பொழுதும் "காப்புரிமை"என்ற ஒன்று பெயரளவில் இன்னார் தான் தயாரிச்சவர் என்ற "கிரெடிட் "கொடுக்க மட்டுமே ,ராயல்டி வழக்கம் உருவாகவில்லை, எல்லாமே "ஓபன் சோர்ஸ்"தான்.

கி.பி 1988 இல் உலக வர்த்தக ஒப்பதங்களின் காரணமாக இந்தியாவில் பன்னாட்டு விதை தயாரிப்பாளர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நுழைந்தார்கள்.2001 இல் உலக வர்த்தக மையத்தின் வழிக்காட்டுதல் அல்லது கட்டாயப்படுத்தல் காரணமாக, உருகுவே மாநாட்டுக்கு பின்னர் விதை காப்புரிமை ஒப்பந்தத்தில் இந்திய கை ஒப்பமிட்டது.

இதன் மூலம் விவசாயிகள் அல்லது இந்திய நிறுவனங்கள், தன்னார்வ குழுக்கள் வைத்துள்ள ,பாரம்பரிய விதைகளையும் ஒரு ரகமாக பதிவு செய்து காப்புரிமை கோரலாம் என சொல்லப்பட்டாலும்,வழக்கம் போல இந்தியாவில் எந்த விவசாயி போய் விதைக்காப்புரிமை வாங்க போகிறான்,பெரும்பாலும் அப்படி கோரப்படவேயில்லை, முன்னணியில் இருந்த தனியார் நிறுவனங்கள் அது வரையில் சந்தைப்படுத்திய விதை ரகங்களை அவர்களின் பெயரில் பதிவு செய்துக்கொண்டது தான் நடந்தது.

இப்பவும் ஒரு விவசாயி தனது விதையினை தான் மட்டுமே பயிரிடுகிறேன் ,தனித்துவமானது என சமர்ப்பித்து ,அதற்கு எதிர்ப்பு இல்லை எனில் காப்புரிமை சான்று பெறலாம்.

தற்சமயம் விதைகள் எல்லாம் காப்புரிமையாக்கப்பட்டு , விதைகளின் விலையும் உயர்த்தப்பட்ட நிலையில் ,விதை வாங்கும் விவசாயிகளை காக்கவும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விதை நிறுவனங்கள் அளித்த உத்தரவாதத்திற்கு ஏற்ப உற்பத்தி செய்யவில்லை எனில் இழப்பீடு பெற்று தர ஒரு அமைப்பினை "Birsa Agriculture University at Kanke"உருவாக்கியுள்ளது,இவ்வமைப்பில் சேர்ந்து இழப்பீடு பெறலாம். தற்சமயம் ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், ஒடிஷா, சத்தீஷ்கர், அந்தமான் தீவுகள் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சுட்டி:

http://articles.timesofindia.indiatimes.com/2012-08-04/ranchi/33034499_1_protection-of-plant-varieties-claim-compensation-branch-office

இதில் கவனிக்க தக்கது என்னவெனில் காப்புரிமை வரும் வரையில் இந்திய தனியார் விதை உற்பத்தியாளர்கள் யாரும் பீரிடர் விதை ஆய்வில் ஈடுபட்டதாகவோ, அல்லது தயாரித்ததாகவோ அறியப்படவில்லை, ஆனால் ஆய்வு செய்து விதைகள்ள் உருவாக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டு பெரும்பாலும் அவர்கள் பிரீடர் விதைகளை வாங்கி தான் உற்பத்தியில் ஈடுபட்டு வந்தார்கள்,சிலர் பேக் கிராசிங் செய்து ஒரு வகையாக உருவாக்கி வைத்திருந்தார்கள்,ஆனால் பல மடங்கு விதைகளாக்கி விவசாயிகளுக்கு விற்கும் போது ஒரு "டிரேட் நேம்"போட்டு விற்பது வழக்கம், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சில குறிப்பிட்ட விதைகள் சில குறிப்பிட்ட விதை தயாரிப்பாளர்களின் "டிரேட் நேம்"பிராபர்ட்டியாகவும் ஆகிவிட்டது.

உதாரணமாக , கி.பி.1963 இல் டெல்லியில் நடந்த விவசாயக்கண்காட்சியில் 100 கிராம் Pusa Saoni bhendi (lady's finger) விதையை சாம்பிளாக வாங்கி வந்து அதனை வளர்த்து பல மடங்கு விதைகளாக்கி தான் முதன் முதலில்  மாகிகோ  விதை விற்பனையை ஆரம்பித்தது. பின்னர் அவர்களின் டிரேட் நேம் பிராபர்ட்டியாகவும் ஆகிவிட்டது.

இப்படி காப்புரிமை இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக விதை கிடைக்கும் சூழல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் உருவாகும் காலம் வரையில் தான் இருந்தது, விதைக்காப்புரிமை என்ற கொள்கையை தூக்கிப்பிடிக்க காரணமே பன்னாட்டு நிறுவனங்களின் "மரபணு மாற்ற ஆய்வுகளே'ஆகும்.

எதுக்கு இந்த வரலாறு என சலிப்படையலாம், ஆனால்  விதைகள் உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏன் பலத்த போட்டியிடுகின்றன என்பதை புரிந்துக்கொள்ள இந்த அடிப்படை தகவல்கள் உதவும். ஏன் எனில் காப்புரிமை என்ற பெயரில் கிடைக்கும் ராயல்டி தொகை என்பது நோகாமல் நோம்பு கும்பிடும் ஒரு நுட்பம் ஆகும், ஒரு முறை தயாரித்து விட்டால் போதும் அப்புறம் தொடர்ந்து ராயல்டி ராஜலக்‌ஷ்மி வாசக்கதவை தட்டி துட்டக்கொட்டுவாள் :-))

மேலும் இந்தியா எப்பொழுதுமே விவசாய உற்பத்தியில் முன்னணியில் உள்ள ,விதை தேவை அதிகம் உள்ள நாடு ஆகும், இங்க மார்க்கெட்டினை பிடித்து விட்டால் ,அப்புறம் வாழ்நாளெல்லாம் கவலையே இல்லை, நாம ஒரு தங்க முட்டையிடும் வாத்து ஆவோம்.

இந்தியாவில்  எப்போவோ யாரோ தயாரித்த பாரம்பரிய விதைகளின்  காப்புரிமை எல்லாம் மாநில வாரியாக பல தனியார்கள் கைகளில் சிக்கிய நிலையில், பல சர்வதேச விதை நிறுவனங்களும் இந்தியாவில் நுழைந்து செயல்ப்பட ஆரம்பித்தந்தன ,  அவர்களின் கலப்பின விதைகளையும் நம்ம ஊர் விதை வியாபாரிகளே விநியோகம் செய்து வந்தார்கள், ஆனால் 2001 க்கு முன்னர் ராயல்டி என்ற பிரச்சினை இல்லாமல் கமிஷன் அடிப்படையில் வியாபாரம் நடந்தது, மேலும் விவசாயிகளும் நினைத்தால் அவர்களே சாகுபடியில் இருந்து விதைகளாக உற்பத்தி செய்துக்கொள்ளலாம் இந்நிலையில் காப்புரிமை என்பது உறுதியானதும் ஏற்கனவே ஆய்வுகளை முடித்து விட்டு காத்திருந்த சர்வதேச விதை  தாதா மான்சான்டோ வியாபார களத்துக்குள் வருகிறார். தனது பிடி தொழில் நுட்ப விதைகளை தனியாக விற்கப்பார்க்க , ஏற்கனவே கமிஷனில் விதை விற்றுக்கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அதன் கூட்டாளிகளான இந்திய வியாபாரிகளுக்கும் சிக்கல், பிடி விதையை பூச்சியே தாக்காது, பூச்சி மருந்து வேண்டாம் என சொல்லி விற்றுவிட்டால்,நம்ம விதை விற்காதே எனவே , பீடி வந்தால் நாடே அழிந்துவிடும் என முதலில் எதிர்ப்பை கிளப்பிவிட்டு ஆரம்பத்தில் கன ஜோராக எதிர்ப்பரசியல் செய்ய வைத்தார்கள். இதற்கு மற்ற பன்னாட்டு விதை நிறுவனங்களும் உடந்தை. சர்வதேச சந்தையிலும் பிடி தயாரிக்காத நிறுவனங்கள்,பிடி தயாரிக்கும் நிறுவனங்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டே தான் இருக்கின்றன.

இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு விதை நிறுவனங்கள்;பிடி யுகம்!






இப்போ திரைக்கதையில் ஒரு டிவிஸ்ட் ஆக மோன்சான்டோ மகாராஷ்ராவை சேர்ந்த மாகி கோவின் மூல நிறுவனத்தின் 26% பங்குகளை வாங்கி முதலீடு செய்வதோடு அல்லாமல்,மரபணு மாற்று விதைகளுக்கென்றே பிரத்யோகமா 50:50 மூலதன பங்கில் "மாகிகோ- மோன்சான்டோ  பயோ டெக் இந்தியா"என உள்நாட்டு கூட்டு நிறுவனமாக அவதாரம் எடுத்து விடுகிறது. மகாராஷ்ட்ராவை பிடிக்க காரணம் ,அம்மாநிலம் தான் இந்தியாவிலே அதிக பருத்தி உற்பத்தி செய்யும் ,மாநிலமாகும், அதோடு இல்லாமல் மற்ற உள்நாட்டு வியாபாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தி மற்ற பன்னாட்டு நிறுவனங்களை விட்டுவிட்டு வந்துவிடுங்கள், எங்க பிடியை விற்றால் நல்ல மார்ஜினில் லாபம் வரும் வகையில் ஒப்பந்தம் போடலாம் என பேசி மடித்துவிட்டது.

தற்போதைய நிலையில் 450 கிராம் பிடி பருத்தி விதை பாக்கெட்டின் விலை சுமார் 980 ரூ, இதற்கு ராயல்டி கட்டணமாக 225 ரூவை மோன்சாண்டோவிற்கு உள்ளூர் தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டும், மிச்ச தொகை முழுவதும் நம்ம ஆட்களுக்கு.

முன்னர் மிக உயர்வான வழக்கமான கலப்பின பருத்தி விதைகளின் விலை ரூ  400-500 மேல் எக்காலத்திலும் போனதில்லை. எனவே அவற்றினை விற்கும் போது பெர்சேன்டேஜில் கமிஷன் பெரிதாக கிடைக்கவில்லை, இப்பொழுது பிடி பருத்திக்கு இரண்டு மடங்கில் விலை , மார்ஜினும் அதிகம் என்பதால் வியாபாரிகளும் மோன்சான்டோவை ஏகமாக ஆதரிக்க துவ்வங்கிவிட்டார்கள்.

தற்சமயம் சுமார் 150 நிறுவனங்கள், மான்சான்டோ உடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு 600 வகையான பெயர்களில் பிடி பருத்தி விதைகளை விற்று படுத்தி எடுக்கிறார்கள் இந்திய விவசாயத்தை!

இப்படித்தான் சுமார் பத்தாண்டுகளில் 94.75% பருத்தி சாகுபடி பரப்பினை மோன்சான்டோ விதைகளே ஆக்ரமித்தது.   ஆண்டுக்கு சுமார் 4 கோடி விதை பாக்கெட்டுகள் ,அதாவது சுமார் நான்காயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, அமெரிக்காவில் கூட மோன்சான்டோவிற்கு இவ்வளவு பெரிய சந்தையில்லை.

உலக அளவில் பல நாடுகளிலும் எதிர்ப்புகள், வழக்குகள்,நஷ்ட ஈடுகள் என அடிவாங்கிக்கொண்டு , அதன் பங்கு சந்தை மதிப்பு கூட சரிய ஆரம்பித்துள்ளது ,ஆனால் இந்தியாவில் பலமாக காலூன்றி சக்கைப்போடு போடுவதால் நட்டத்தையும் தாங்க முடிகிறது, இந்திய வருவாய் இல்லை எனில் இன்நேரம் மூடுவிழாக்கூட கண்டிருக்கலாம்.



மேலும் மோன்சான்டோ இந்தியாவில் நுழைந்த காலத்தில் உலக அளவில் 50 நிறுவனங்கள் பிடி பருத்தி நுட்பத்தினை கையில் வைத்திருந்தன, இன்று சுமார் 150 நிறுவனங்களுக்கு அது சாத்தியம்,ஆனால் வேறு எந்த நிறுவனத்திற்கும் இந்தியாவில் அனுமதி அளிக்காமல் மோன்சான்டோவிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது, இன்று வரையில் வேறு யாரும் நுழைய விடாமலும் பார்த்துக்கொள்ளப்படுகிறது, மகாராஷ்ட்ரா நிறுவனத்தின் பின் புலமும்,சில அரசியல் சக்திகளுமே "மான்சான்டோவிற்கு "இத்தகைய தனிசிறப்பு சலுகையை வழங்கி வரக்காரணமாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளது,இதனைப்பற்றி வெளிப்படையாக"Centre for Cellular and Molecular Biology (CCMB) former director Pushpa M Bhargava"என்பவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

செய்தி:

//He wanted to know why the central government allowed only Monsanto to produce the Bt seed when there were more than 50 seed companies that had the capacity to do so.

He appealed to the farmer leaders and farmers to be cautious about the usage of Bt seed as it would not only damage the crops but the environment as well.//

சுட்டி:

 http://articles.timesofindia.indiatimes.com/2002-04-29/hyderabad/27136416_1_bt-seed-bt-cotton-pushpa-m-bhargava



இம்முறையினால் மோன்சான்டோவிற்கு கொள்ளை லாபம் எப்படி எனில் மாகிஹோ மூலம் மட்டுமே சுய தயாரிப்பு பிடி விதைகள் ,பிற தயாரிப்பாளர்களுக்கு பிரீடர் சீட் மட்டும் கொடுக்கும்,அதனை ஏற்கனவே காப்புரிமை பதிவு செய்து வைத்துள்ள இந்திய பருத்தி விதைகளுடன் கலப்பினம் செய்து புதிய "பிடி ரகமாக "மாற்றிக்கொள்ள வேண்டும் தொழில்நுட்ப உதவி மட்டுமே அளிக்கும், பின்னர் அதில் இருந்து லேபிள்டு சீட் உற்பத்தி செய்து விற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு பாக்கெட்டு 225 ரூ ராயல்டி கொடுத்து விட வேண்டும்.

இதில் உள்ள தந்திரம் என்னவெனில் மான்சான்டோ வசம் காப்புரிமையே இல்லாத விதைகளிலும் பிடியை புகுத்தி அவற்றை பிடி காப்புரிமை என சொந்தம் கொண்டாடிக்கொள்வதாகும், சில காலம் போனபின்னர் பிடி கலக்காத இந்திய விதையே இல்லாத சூழலில் நம்ம விதை தயாரிப்பாளர்களுக்கு "விதை என சொல்லி 'விற்க ஒரு மூலப்பொருளே இல்லாமல் போய்விடும்,எல்லாமே மோன்சான்டோவின் காப்புரிமை வளையத்தில் சிக்கி இருக்கும்.

விதை உற்பத்தியில் அரசின் மெத்தனம்:



உணவு தானிய விதைகளை "high volume, low value seeds"என்கிறார்கள் ,அப்படி எனில் மிக அதிக விதைகள் உற்பத்தி செய்ய வேண்டும் ,ஆனால் விலை குறைவாக விற்கப்படுபவை, இவற்றில் நிறைய லாபம் கிடைக்காது. பருத்தி போன்ற பணப்பயிர்களின் விதைகளை "low volume ,high value  seeds"என்கிறார்கள் , அதாவது குறைவான அளவு விதை உற்பத்தி ,ஆனால் அதிக விலைக்கு விற்கப்படுவை,எனவே லாபம் அதிகம் கிடைக்கும்.

இதனாலே தனியார் நிறுவனங்கள் பருத்தி,பிடி பருத்தி விதை உற்பத்தி மற்றும் விற்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இவர்களுக்கு மறைமுகமாக அரசு எந்திரமும் ஒத்துழைக்கிறது, தற்பொழுதெல்லாம் அரசு விதை நிறுவனங்களோ, வேளாண் பல்கலைகளோ பருத்தி விதை உற்பத்தியில் கவனம் செலுத்துவதையே குறைத்துக்கொண்டன,பல இடங்களில் விதை உற்பத்தி மையங்களை மூடவும் செய்துவிட்டார்கள்.

கோவை மாவட்டம்,பொங்கலூரில் 57 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மாநில அரசு விதைப்பண்ணை இயங்கி வந்தது, பல வகை சான்றளிக்கப்பட்ட பருத்தி  ஹைபிரிட் விதைகளை உற்பத்தி செய்து பெருக்கி மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்து வெற்றிகரமாகவே இயங்கியது.காலப்போக்கில் தனியார் விதை விற்பனையாளர்களுக்கு சாதகமாக அரசாலேயே ஓரங்கட்டப்பட்டு இன்று பாழடைந்து கிடைக்கிறது, அரசுக்கு விதை உற்பத்தியில் உள்ள ஆர்வத்திற்கு இதுவே சான்று!

சுட்டி:

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/efforts-to-revive-57yearold-seed-farm/article4417172.ece

மரபணு மாசு :

இவ்வாறு திட்டமிட்டு மரபணு மாற்றத்தினை அனைத்திலும் புகுத்துவதை "மரபணு சூழல் சீர்க்கேடு"என்கிறார்கள். எப்படி காற்றில் கரியமிலவாயு கலப்பது சுற்று சூழல் சீர்க்கேடோ அப்படியே மரபணு கலப்பாக அனைத்தையும் மாற்றுவதையும் சீர்க்கேடு என்கிறார்கள், பழைய பாரம்பரிய மூல விதைகளே இல்லாத நிலையில் இச்சீர்கேடு திரும்ப சரி செய்ய இயலா நிலையை அடையவும் கூடும், எனவே தான் பாரம்பரிய விதைகளை காக்க வேண்டும் என பல இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.



செய்தி:

Monsanto is a ticking time bomb for U.S. agriculture

As the USDA has now admitted, Monsanto's GMO experiments from 1998 - 2005 were held in open wheat fields. The genetically engineered wheat escaped and found its way into commercial wheat fields in Oregon (and possibly 15 other states), causing self-replicating genetic pollution that now taints the entire U.S. wheat industr//

சுட்டி:

http://www.naturalnews.com/040572_japan_ge_wheat_genetic_pollution.html

பாரம்பரிய விதை வங்கி:

இவ்வாறு மரபணு மாசு செய்வதன் இன்னொரு உள்நோக்கம் என்னவெனில் ,பிற்காலத்தில் மரபணு மாற்றிய பயிர்களை விதைக்காத விவசாயிகளின் வயலில் இருக்கும் பயிர்களின் விதையும் எங்களுடையதே என சொல்லி ராயல்டி கேட்டு மிரட்டலாம்!

இந்தியாவிலும் பிடி இல்லாத பருத்தி விதைகளை பாதுகாத்து பயிரிட சில தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

வட கர்நாடக மாநிலம், மகரி என்ற கிராமத்தினை சேர்ந்த விவசாயி "Nagappa Nimbegundi"(52) என்பவர் பிடி பருத்தியில் ஊடுபயிராக காய்கறிகளை பயிரிட்டால் சரியாக விளையாததை கண்டு , சாதாரண பருத்தி பயீரிட முயன்றுப்பார்க்கலாம் என நினைத்த பொழுது விதைகளே கிடைக்கவில்லை என்பதை அறிது பின்னார் தேடிப்பார்த்து விதைகள் வாங்கி பயிரிட்டுள்ளார், அப்பொழுது தான் பிடி பரவலால் பாரம்பரிய விதைகள் அழியும் நிலையில் உள்ளது என உணர்ந்து ,இந்தியா முழுவதும் சென்று 13 பழமையான பருத்தி வகைகளையும், 11 பிடி அல்லாத வகைகளையும் கண்டுப்பிடித்து சேகரித்து , பாரம்பரிய விதை வங்கியினை உருவாக்கியுள்ளார்.

செய்தி:

//W DELHI: For 52-year-old Nagappa Nimbegundi, a farmer from Makari village in North Karnataka, this Independence Day was special. After three years of relentless efforts, he has managed to revive 13 varieties of indigenous cotton and 11 other varieties of non-Bt cotton in his farm.

The seed bank that he is developing is of significance as 90% of cotton production in India has been taken over by Bt cotton, a genetically modified variety developed by an American company. Indigenous varieties have become virtually non-existent and are difficult to find even at research institutions.//

சுட்டி:

http://articles.timesofindia.indiatimes.com/2013-08-16/india/41416828_1_bt-cotton-seed-companies-bengal-desi

இது போன்று மேலும் பல தன்னார்வலர்கள் சுய முயற்சியில் பல பாரம்பரிய விதைகளை மீட்டு பயிரிட்டு ,பாரம்பரிய விதை வங்கிகளை நடத்துகிறார்கள்.


மேலும் பிடி பருத்தியின் மூலம் பிற தாவரங்களிலும் பிடி கலப்பினம் இயற்கையாக நேரிடலாம், இதனால் பொதுவாக தாவர உயிர்ச்சூழலில் "மரபணு மாசு"ஏற்படலாம்.
அரிசியில் "மரபணு மாசு"ஏற்படுத்திவிட்டதாகா "பேயர்"நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கப்பட்டு ,750 மில்லியன் டாலர்கள்,நஷ்ட ஈடு பெறப்பட்டுள்ளது.

ஆனால் இம்மாதிரி நம்ம நாட்டில் எளிதில் வழக்கு நடத்தி நட்ட ஈடு பெற முடியாது என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக போய்விட்டது!

செய்தி:

while in 2006 a large part of the U.S. long-grain rice crop was contaminated by an experimental strain from Bayer CropScience , prompting import bans in Europe and Japan.

The company agreed in court in 2011 to pay $750 million to growers as compensation.//

சுட்டி:

http://www.dailymail.co.uk/news/article-2333381/GM-wheat-crops-America-facing-wheat-export-crisis-Europe-Japan-lead-way-rejecting-genetically-modified-crops.html

#அமெரிக்காவில் இவ்வாறு கோதுமையில் அனுமதியின்றி மரபணு கலப்பினை செய்துவிட்டதாக "மோன்சான்டோ"மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


//The U.S. Judicial Panel on Multidistrict Litigation announced that at least 16 lawsuits will be sent to U.S. District Judge Kathryn Vratil in Kansas City for pretrial evidence gathering.
Lawsuits started to be filed in June after an Oregon farmer found wheat that would not die in his field. After the wheat was tested, it was discovered that it contained a gene that allowed it to withstand Monsanto’s herbicide glyphosate.
Monsanto had previously field tested a Roundup Ready wheat variety 15 years prior. It remains unknown how the GM variety got into the field since trials haven’t been conducted for many years after Monsanto abandoned the project after trading countries would not accept such wheat.
The GM wheat discovery this year caused multiple wheat importers to stop importing wheat from the United States for several weeks, dropping the price of U.S. wheat.//

சுட்டி:

http://www.agprofessional.com/news/GM-wheat-lawsuits-to-be-consolidated-in-Kansas-City-228392511.html


அமெரிக்க அரசும் மரபணு கோதுமையை பொது வயலில் பயிரிட அனுமதியே தரவில்லை என சொல்லியுள்ளது, அமெரிக்க கோதுமையில் மரபணு கலப்பு இருக்கலாம் என சந்தேகித்து ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவை அமெரிக்க கோதுமை இறக்குமதியை தடையும் செய்துள்ளது.

# ஹங்கேரியில் அரசுக்கே தெரியாமல் 1000 ஏக்கரில்  மோன்சான்டோ மரபணு மாற்ற மக்காசோளத்தினை பயிரிட்டுள்ளது கண்டறியப்பட்டு அரசால் அழிக்கப்பட்டு , ஒட்டுமொத்தமாக தடையும் விதித்துள்ளார்கள், இதெல்லாம் 2011 இலேயே நடந்துவிட்டது.



செய்தி:

Almost 1000 acres of maize found to have been grown with genetically modified seeds have been destroyed throughout Hungary deputy state secretary of the Ministry of Rural Development Lajos Bognar said. The GMO maize has been ploughed under, said Lajos Bognar, but pollen has not spread from the maize, he added.

Unlike several EU members, GMO seeds are banned in Hungary. The checks will continue despite the fact that seed traders are obliged to make sure that their products are GMO free, Bognar said.//

சுட்டி;

http://www.foodfirst.org/en/Hungary+destroys+GMO+corn

#
இதன் எதிரொலியாக இந்திய அரசும் அமெரிக்காவில் இருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை இறக்குமதி செய்ய தடை விதித்து விட்டது. ஏன் எனில் பெரும்பாலும் "அறிவிக்கப்படாமல் மரபணு தானியங்களை"பதப்படுத்தப்பட்ட உணவில் கலப்பது "அமெரிக்க வியாபார  தந்திரமாகும்". கண்டிப்பாக மரபணு தானியங்கள் பற்றி உணவு பாக்கெட் லேபிளில் குறிப்பிட வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் விதி இருக்கு,ஆனால் அமெரிக்காவில் அது கட்டாயமில்லை. அவ்வாறு கட்டாயமாக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

செய்தி:
//No import nod for GM processed food items till March 2014

NEW DELHI: The Union environment ministry has issued an order keeping in abeyance the controversial August, 2007 notification, which allows import of genetically modified (GM) processed food items into India without its prior permission, till March 31, 2014.//

சுட்டி:

http://articles.timesofindia.indiatimes.com/2013-10-25/india/43394778_1_gm-food-crops-ministry-final-order

உலகெங்குமே மரபணு மாற்று தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்புகள் உள்ள நிலையில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடு தேவையே இல்லாமல் முழு அளவில் "மரபணு மாற்றத்தொழில்நுட்பத்தினை "பின்ப்பற்ற என்ன தேவை?
மரபணு மாற்றுத்தொழில் நுட்பம் வந்தால் தான் உணவுப்பஞ்சம் தீரும்,அனைவருக்கும் உணவு மலிவாக கிடைக்கும் என்கிறார்கள்,ஆனால் இத்தொழில்நுட்பமோ உற்பத்தியை பெருக்கும் நோக்கிலேயே வடிவமைக்கப்படவில்லை, பூச்சிக்கொல்லியாகவும்,"கிளைப்போசைட், ரவுண்ட் அப்"போன்ற களைக்கொல்லி தாங்கு சக்தியை உருவாக்கவுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் உற்பத்தியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவோ, ஊட்டச்சத்து மிக்கதாகவோ உணவுப்பொருட்கள் மாறவேயில்லை என்பதே நிதர்சனம், தொடர்ந்து அவற்றையும் காண்போம்.
-------------------------

விதை நிறுவனங்களின் அறம்:

இந்தியாவில் பருத்தி சாகுபடியில் மாகாராஷ்ட்ரா,குஜராத்,ஆந்திரா,கர்நாடகா ,தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால் விதை உற்பத்தியில் ஆந்திர மாநிலமே முன்னணியில் உள்ளது, இந்தியாவின் விதை உற்பத்தி தலைநகரம் என அழைக்கப்படுகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளின் நிலங்களில் விதை உற்பத்தியில் ஈடுபடுகின்றன, மலிவான கூலியில் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தியுள்ளன.

இதில் பெரிய கொடுமை என்னவெனில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் "குழந்தை தொழிலாளிகள்"ஆகும். சுமார் 6 முதல் 16 வயதிற்குற்பட்ட சிறார்களை,அதிலும் குறிப்பாக பெண் சிறார்களை கிராமங்களில் இருந்து பிடித்து வந்து பண்ணையில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்து கொத்தடிமைகளாக வேலை வாங்குகிறார்கள், தினசரி சம்பளம் வெறும் 20 ரூபாய்களே ஆனால் வேலை நேரமோ 16 மணி நேரத்திற்கு குறையாத அளவில்.



பருத்தி சாகுபடி என்பது மிக அதிகமாக பூச்சி மருந்து,களைக்கொல்லி என புழங்கும் இடம் அவற்றின் ஊடே பணி புரிவதால் பல சிறார்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.

ஆந்திராவில் மட்டும் பன்னாட்டு நிறுவன சார்பாக ஒப்பந்த தொழிலார்களாக உள்ள சிறார்களின் எண்ணிக்கை நிறுவனங்கள் வாரியாக.

Hindustan Lever Ltd.- 2,500 ஏக்கர்- 22,500 சிறார்கள்.

Syngenta - 650 ஏக்கர் - 5,850சிறார்கள்.

Advanta -300 ஏக்கர் - 2,700 சிறார்கள்

Mahyco-Minsanto -1,700 ஏக்கர்- 15,300 சிறார்கள்

Proagro- 200 எக்கர் - 1,800,சிறார்கள்

Total ஏக்கர் -5350

மொத்த சிறார்கள் - 48,150.

பன்னாட்டு விதை நிறுவனங்கள் லாபத்திற்காக விவசாயிகளின் இயல்பான விதை உரிமைகளை மட்டும் பறிக்கவில்லை, சட்டத்திற்கு புறம்பாக குழந்தை தொழிலாளர்களையும் பயன்ப்படுத்தி வருகின்றன, ஆனால் அவர்களை நேரடியாக குற்றம் சட்டமுடியாத படி இதனை எல்லாம் ஒப்பந்த விவசாயிகளைக்கொண்டு நடத்துகின்றன, சட்டப்படி அவர்களுக்கும் ,இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நழுவி விடுவார்கள்.



சுட்டி:

கீழ்கண்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தளத்தில் மேலதிக தகவல்கள் உள்ளன.

http://www.indianet.nl/cotssec2.html

மரபணு மாற்றத்தின் யதார்த்த நிலை:

ஒரு மரபணு மாற்றம் எனப்படுவது ஒரு மூல உயிரியில் இருந்து தேவைப்படும் மரபணுவை மட்டும் வெட்டி , தேவைப்படும் உயிரியில் ஒட்டுவதாகும்.

வெட்டுவது கூட சரியாக வெட்டிவிடலாம்,ஆனால் ஒட்டும் இடத்தில் சரியாக தேவையான இடத்தில் ஒட்ட இயலாது,தோராயமாகவே ஒரு இடத்தில் நுழைக்க முடியும், அவ்விடம் உண்மையில் நமக்கு தேவையான மாற்றத்தினை தரக்கூடிய மரபணு தொடர் வரிசையாக இருக்கும் என சொல்லவும் முடியாது. காரணம் ஜீனோம் சீக்கவன்சில் அறியப்பட்ட மரபணுத்தொடர்களை விட அறியப்படாத "ஜங்க்"எனச்சொல்லப்படும் மரபணுத்தொடர்களே அதிகம் உள்ளது.

இதன் விளைவாக மரபணு மாற்றம் உரிய விளைவை "உருவாக்கப்பட்ட உயிரியில்"தரும் என சொல்ல முடியாது, நூற்றுக்கு 90 சதவீதம் போல மரபணு மாற்ற வினை தோல்வியாகவே அமையும், வெற்றிகரமாக நடந்தவையும் சிறப்பான விளைவை தருமா என்பதும் கேள்விக்குறியே.

# மேலும் எல்லா உயிரியிலும் என்னவென்று அறியாத 'ஜன்க் டி.என்.ஏ"நிறைய உள்ளன, இவற்றுடன் பிடி மரபணு வினைப்புரிந்தால் என்னவாகும் என யாருக்கும் தெரியாது, ஒரு வேளை விரும்பத்தகாத விளைவுகளையும் உருவாக்கலாம்.

பெரும்பாலும் "ஆபரேஷன் சக்சஸ்,பேஷன்ட் டெட்" கதை தான்!

# மிக நுண்ணிய மரபணுவில் ,தோராயமாக மரபணு மாற்றம் செய்யப்படுவது கண்ணை மூடிக்கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்வது போலத்தான்.

# மரபணு மாற்ற உயிரியில் ஒரு குறிப்பிட்ட பண்பினை உருவாக்கி தொடர்ந்து அதனையே பயிர் செய்வதன் மூலம், ஒரே வகையான நோய்,பூச்சி என்ற நிலை உருவாகி, அதன் எதிர்ப்பு தன்மையும் குறைந்து ,பின்னர் சாதாரண பூச்சி,நோய் தாக்குதலுக்கே கடும் விளைவை தரக்கூடும்.

எனவே எதிர்ப்பு தன்மை குறைந்த ஒரு உயிரி சூழல் உருவாகிவிடும்.

# மரபணு மாற்றத்தின் போது , பேக்ட்ரீயா, மற்றும் பூஞ்சைகள் தொற்றினை தாவரங்கள் தாக்கு பிடிக்க வேண்டும் என ஆன்டி பயாடிக் ரசாயனங்கள் பயன்ப்படுத்தப்படும், எனவே மரபணு மாற்ற பயிரில் உருவாகும் நுண்ணுயிர்களும் ஆன்டி பயாடிக் எதிர்ப்பை வளர்த்துக்கொள்ளும், எனவே மரபணு மாற்ற பயிர்கள் மூலம் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் ,ஆண்டி பயாடிக் மருந்து கொடுத்தாலும் மனிதருக்கு நோய்கள் குணமாகாது.

# ஒரு பூச்சி மருந்து ,பூச்சியினை கொல்கிறது, அதே மருந்தை  மனிதர்கள் உட்கொண்டால் அவர்களும் இறப்பார்கள் என்பது உண்மை.

அதே போல பிடி டாக்சின் புரதமான கிரை-3ab உட்கொண்டால் ,காய் துளைப்பான் இறக்கிறது.

இப்பொழுது கிரை 3ab  டாக்சின் கொண்ட அதே தாவரப்பகுதியை மனிதன் உண்டால்,அதில் உள்ள நஞ்சு மனிதனை பாதிக்காதா?  ஒரு பூச்சியை கொல்லும் எனில் அது மனிதனையும் கொல்லும்,  அல்லது பாதிப்பாவது கொடுக்கும் என்பதே நிதர்சனம்.

எலி மருந்து வைத்து எலியை கொல்கிறோம்,  விஷம் தோய்ந்த அவ்வெலியை பூனை சாப்பிட்டால் பூனைக்கு நஞ்சு போகாதா?

இங்கே தாவரத்திலேயே தோய்ந்த பிடி டாக்சின் புரதமும் அப்படியானதே.

# பிடி டாக்சின் புரதமானது மனித செரிமான அமைப்பால் சிதைக்கப்பட இயலாத ஒரு புரதமாகும், எனவே உயிரினை கொல்கிறதோ இல்லையோ ஒவ்வாமையை பெரும்பாலும் உருவாக்கிவிடும்.

உணவில் பிடி நஞ்சு: பிடி பருத்திப்பால் அபாயம்!

கனடாவில் கருவுற்ற பெண்களின் இரத்த மாதிரியில் பிடி டாக்சின் புரதம் இருந்துள்ளது, மேலும் கருவில் இருக்கும் குழந்தைகளின் ரத்தத்திலும் பிடி டாக்சின் புரதம் இருந்துள்ளது.

அவர்களை விசாரித்த போது அவர்கள் ,மரபணு மாற்றப்பட்ட சோயா பீன், உருளை, மக்காச்சோளம்,பருத்தி எண்ணையிலான உணவை உண்பது தெரிய வந்துள்ளது,எனவே மரபணு விதையில் இருந்து பிடி டாக்சின்கள் உடலுக்குள் சென்றுள்ளது உறுதியாகிறது. இவ்வாய்வு முடிவுகளை "the journal Reproductive Toxicology இலும் வெளியாக தேர்வு செய்யப்பட்டதாம்.

நமது செரிமான அமைப்புகளால் செரிக்கப்படாத பிடி டாக்சின்கள் ரத்தத்தில் கலந்து அப்படியே அழியா நிலையில் பிளாஸ்டிக் போல  உடலில் சுற்றி வந்துக்கொண்டிருந்துள்ளது.

வழக்கமாக தாவரத்தின் மீது செலுத்தப்படும் பூச்சிக்கொல்லியின் எச்சம் அதன் விதைகளிலேயே அதிகம் சேகரமாகும், அதே போல பிடி டாக்சின்களில் எச்சமும் பிடி பருத்தியின் விதையில் தான் அதிகம் இருக்கிறதாம்.



பருத்தி எண்ணையாவது சமைக்கும் போது நன்கு கொதிக்க வைக்கப்படுகிறது,அப்படியும் பிடி டாக்சின் சிதையவில்லை, நம் நாட்டிலோ பருத்திப்பால் என பருத்திக்கொட்டையில் இருந்து எடுத்து அருந்துகிறோம்,அவை அந்த அளவு முழுக்க வேகவைப்பதோ சூடுப்படுத்தப்படுவதோ இல்லை எனவே மிக நன்றாக பிடி டாக்சின்கள் அழியாமல் முழு வடிவில் இருக்கும், அவற்றை தொடர்ந்து பருகினால் பிடிடாக்சின்கள் உடலில் சிறுக சிறுக சேர்ந்து ஒரு காலத்தில்"chronic poison'"ஆகி பெரும் பின் விளைவை உண்டாக்கலாம். எனவே பெரும்பான்மை பிடி பருத்தி பயிரிடும் இக்காலத்தில்  "பிடி பருத்திப்பால்"தான் கிடைக்கும் அதனைக்குடிப்பதும் அபாயமான ஒன்றாகிவிட்டது எனலாம். பிடி பருத்தி மூலம் செய்யப்படும் அல்வாவுக்கும் இதே நிலை தான்.

வருங்காலத்தில் இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய உணவு என அறிவிக்கப்படும் நிலை கூட வரலாம்.

பிடி டாக்சின் புரதம் என்பது விஷத்தன்மையே இல்லாத ஒன்றாகவே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும்  ,அவை உடலுக்கு தேவையில்லாத ஒரு பொருள்,  பிளாஸ்டிக் குப்பைகள் போல ரத்தத்தில்  சேர்ந்து அழியாமல் தொடர்ந்து குவிந்துக்கொண்டே இருந்தால் ஒரு எல்லையில் கடும் விளைவை உண்டாக்க நிச்சயம் வாய்ப்புண்டு.

# அதே போல பிடி பருத்தி விதைகள் மாட்டிற்கு தீவனமாக அளிக்கப்படுகிறது ,மாட்டின் ஜீரண மண்டலத்தாலும் பிடி டாக்சின் புரதம் செரிக்கப்படுவதில்லை,  அழியாத பிடி டாக்சின் புரதம் மாட்டின் பாலின் மூலம் மீண்டும் மனிதர்களுக்கே வந்து சேரும் வாய்ப்புள்ளது. இப்படி பல வகையிலும் தொடர்ந்து பிடி நஞ்சை நம் உடலில் சேர்த்துக்கொண்டு போனால் எதிர்காலத்தில் அனைவருமே நோயோடு வாழ்வதை தவிர வேறு வழியில்லை, தவணை முறையில் மரணம் எனலாம்!


பிடி பருத்தியின் கிரை டாக்சின் புரதத்தால்  பருத்திப்பால்  மற்றும் மாட்டுப்பால் உற்பத்தி நஞ்சாவது குறித்து இது வரையில் வெகுஜன ஊடகம் எதுவுமே கண்டுக்கொள்ளவில்லை, மரபணு மாற்ற உணவால் பிடி புரதம் ரத்தத்தில் கலந்து விடுவதை வைத்து ,பிடி பருத்திப்பால்,மற்றும் மாட்டுப்பால் நஞ்சாக வாய்ப்புள்ளதை கணித்துள்ளேன்,இனி வருங்காலத்தில் வெகுஜன ஊடகங்கள் இதனை காப்பி அடிச்சு புதுசா கண்டுப்பிடிச்சா போல சொன்னா அடியேனின் தீர்க்க தரிசனத்தினையும்  நினைவு கூரவும் ...ஹி ...ஹி சும்மா ஒரு வெளம்பரம்!

மேலும் சர்க்கரை வியாதி, ஆண்மை இழப்பு போன்றவற்றை எலிகளில் ஏற்படுத்தியுள்ளதை சில ஆய்வக பரிசோதனை முடிவுகள் உறுதி செய்கின்றன.

செய்தி:

//Scientists from the University of Sherbrooke, Canada, have detected the insecticidal protein, Cry1Ab, circulating in the blood of pregnant as well as non-pregnant women.
They have also detected the toxin in fetal blood, implying it could pass on to the next generation. The research paper has been peer-reviewed and accepted for publication in the journal Reproductive Toxicology. The study covered 30 pregnant women and 39 women who had come for tubectomy at the Centre Hospitalier Universitaire de Sherbrooke (CHUS) in Quebec.
None of them had worked or lived with a spouse working in contact with pesticides.
They were all consuming typical Canadian diet that included GM foods such as soybeans, corn and potatoes. Blood samples were taken before delivery for pregnant women and at tubal ligation for non-pregnant women. Umbilical cord blood sampling was done after birth.


Read more at: http://indiatoday.intoday.in/story/toxin-from-gm-crops-found-in-human-blood/1/137728.html//

# மரபணு மாற்ற பயிர்களால் பூச்சி மருந்து பயன்ப்பாடு குறைந்துள்ளதா?

இந்தியாவில் பிடி பருத்தி அறிமுகம் ஆகி சுமார் பத்தாண்டுகள் ஆகிறது, பிடி நுட்பத்தால் பூச்சி மருந்து பயன்ப்பாடு குறையும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படும் எனப்பொதுவாக சொல்லப்படுவதால், அதன் உண்மை தன்மை அறிய மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் ,இணை இயக்குனர்  Dr. Kesavraj Kranthi தலைமையில் ஒரு ஆய்வினை மேற்கொண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.

அவர்களின் ஆய்வு கணிப்பு என்னவெனில் எதிர்ப்பார்த்த அளவு பூச்சி மருந்து பயன்பாடு குறையவில்லை, மேலும் பல புதிய செகன்டரி காட்டன் பெஸ்ட்கள் அதிகமாகியுள்ளது என்பதாகும்.

படம்:


சுட்டி:

சுட்டியில் உள்ள பிடிஎஃப் படித்தால் முழு அறிக்கையின் விவரம்ம் கிடைக்கும்.

படத்தில் பார்த்தால் தெரியும்,

பருத்திக்கும்,மற்ற பயிர்களுக்கும் பயன்ப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் ஒப்பீடு ,

ஆண்டு-2004

மொத்த பருத்தியில் பிடி பருத்தி சதவீதம் - 5.59

பூச்சிக்கொல்லி மதிப்பு: 1032 கோடிகள்.

பூஞ்சை கொல்லி - 6 கோடி.

களைக்கொள்ளி- 4 கோடி.

பருத்திக்கு மட்டும் மொத்தம்= 1040 கோடிகள்.

ஒட்டு மொத்த விவசாய பூச்சிக்கொல்லி பயன்பாட்டின் மதிப்பு =2455 கோடிகள்.

 இப்பொழுது பிடி காட்டன் சாகுபடி அதிகமாக நடக்கும் ஆண்டினை காண்போம்,

ஆண்டு - 2010

பிடி பருத்தி சதவிகிதம்- 90.67%

பூச்சிக்கொல்லி- 884 கோடி,

பூஞ்சைக்கொல்லி -67 கோடி,

களைக்கொல்லி - 87 கோடி.

பருத்திக்கு மட்டும்மொத்தம்- 1038 கோடிகள்.

ஒட்டு மொத்தமாக அனைத்து பயிர்களுக்குமான செலவு= 4283 கோடிகள்.


மேற்கண்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், பிடி பருத்தி குறைவாக பயிரிட்ட 2004 காலத்தில் 1040 கோடிகள் செலவாகியுள்ளது, அதே சமயம், பிடி பருத்தி பருத்தி  90.45 சதவீதம் இருந்த போது 1038 கோடிகள் செலவாகியுள்ளது.

பிடி பரவலான பின் ஏற்பட்ட பூச்சிக்கொல்லி பயன்ப்பாட்டு அளவில் ஏற்பட்ட மாற்றம் என்பது வெறும் 2 கோடி ரூபாய்கள் மதிப்பளவில்  தான்!

நம்ம பிடி ஆதரவு விஞ்'சாணிகள்"பூச்சிக்கொல்லி செலவு குறைவு என சொன்னது எப்படி எனில், நேரடியாக "பூச்சிக்கொல்லிக்கு"மட்டும் ஆன செலவை வைத்தே, மேலும் மற்றப்பயிர்களுக்கு செலவான பூச்சிக்கொல்லிகள் அளவு கூடியதை ஒப்பிட்டு சதவீதத்தில் பருத்திக்கு குறைந்துவிட்டது என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆனால் 2004 ஐ விட 2010 இல் அதிகமாக பூஞ்சைக்கொல்லியும்,களைக்கொள்ளிக்கும் செலவாகியுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால் கிட்டத்தட்ட சமம் எனும் நிலை,ஏனெனில் பிடி பருத்திக்கு பூஞ்சை எதிர்ப்பு தன்மை குறைவு என்பதால் அதன் செலவு கூடியுள்ளது.

களைகள் அதிகம் இருந்தால் பிடி விளையாது,ஆனால் சுதேசி பருத்திகள் ஓரளவு களைகளை சமாளிக்கும் ,எனவே களைக்கொல்லியே தேவைப்படாது.

பூச்சிக்கொல்லி செலவை கொஞ்சம் குறைத்து மற்ற ரசாயன செலவையே பிடி பருத்தி அதிகரித்துள்ளது தெளிவாகிறது.

எனவே விவசாயிகளுக்கு  பூச்சிக்கொல்லி செலவு குறைந்து பண ஆதாயமும் இல்லை, சுற்று சூழல் பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.

பிடி பருத்தி போட்டதால் விளைச்சல் பெருகிவிட்டது நல்ல லாபம் என்கிறார்களே அதிலாவது உண்மை உள்ளதா எனப்பார்க்கலாம்.

(தற்சமயம் ஓரளவு லாபம் அளிப்பதாக உள்ளது ஆனால் அது நீடித்த ஒன்றல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

பிடி பருத்தி விளைச்சல்:

பிடி பருத்தி சாகுபடியால் விளைச்சல் பல மடங்கு உயர்ந்துள்ளது என பொதுவாக சொல்லப்படுவது உண்மையல்ல, ஒட்டு மொத்தமாக பருத்தி உற்பத்தி அதிகம் ஆனது உண்மை ஆனால்  அது பிடி பருத்தியால் அல்ல, மொத்த சாகுபடி பரப்பு அதிகரிப்பால் மட்டுமே.

காண்க படம்.




http://www.business-standard.com/article/companies/seed-companies-reap-rich-harvest-on-bt-cotton-wave-112022300038_1.html

ஆண்டு- 1950-51 -

 பரப்பளவு - 5.8 மில்லியன் ஹெக்டேர்.

மொத்த உற்பத்தி- 3.4 மில்லியன் பேல்கள்.

ஒரு ஹெக்டே விளைச்சல்- 99 கி.கி

அக்காலக்கட்டத்திற்கு குறைவு என தோன்றலாம்,ஆனால் அதுவே உலக அளவில் பெரிய உற்பத்தி ஆகும், நாம் 1800 களிலேயே இங்கிலாந்துக்கு லட்சம் பேல்கள் பருத்தி ஏற்றுமதி செய்தவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியில் பருத்தி உற்பத்தியில் இந்தியா அப்போது அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இருந்தது, அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பின் இங்கிலாந்தின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்தது இந்தியாவே.

பிரிட்டீஷார் தங்கள் தொழில் நலனுக்காக இந்தியாவில் துணி உற்பத்தி நடக்காமல் பார்த்துக்கொண்டு மூலப்பொருட்களான பருத்தி மற்றும் நூல் உற்பத்தியை பெருக்கினார்கள்.

இதனால் தான் இந்தியாவில் அப்பொழுதே நிறைய நூற்பாலைகள் பெருகின, அதுவும் மும்பையில் மிக அதிகம்,எனவே இந்தியாவின் மான்செஸ்டர் எனப்பட்டது, கோவைப்ப்பகுதியிலும் நூற்பாலைகள் பெருகியதால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்பட்டது.

சரி பழங்கதை போகட்டும், பிடி கதைக்கு வருவோம்,அதான் பிடி சாமியின் மயிர் கூச்சறிய செய்யும் திகில் கதையை விட பிரமாதமாக இருக்கும் அவ்வ்!



பி.டி பருத்திலாம் வந்த 2004 -5 ஆண்டு காலத்தினை பார்ப்போம்,

பி.டிப்பருத்தியின் சதவீதம் 5.59.

மொத்த பரப்பளவு- 8.78 மி.ஹெக்டேர்.

மொத்த உற்பத்தி - 24.3 மி.பேல்கள்.

ஒரு ஹெக்டேர் விளைச்சல்- 470 கி.கி

மொத்த உற்பத்தியினை வைத்து கூடி இருக்கிறது, மேலும் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி திறனும் 470 கி.கி என உயர்ந்துள்ளது, இது பிடி பருத்தியினால் என சொல்ல முடியாது, ஏன் என்னில் 2004 இல் பி.டி பருத்தி வெறும் 5.59 சதமே சாகுபடியில் இருக்கு.

சரி இப்போ 2012 ஆம் ஆண்டுக்கான நிலவரத்தினை காண்போம்.

பி.டி பருத்தி சதவீதம் - 94.75%

மொத்த பரப்பு- 12.19 மி.ஹெக்டேர்கள்.

மொத்த உற்பத்தி - 34.5 மில்லியன் பேல்கள்.

உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு - 481 கி.கி.

இப்போவும் உற்பத்தி கூட இருக்குனு சொல்லலாம்,ஆனால் இதெல்லாம் மொத்த சாகுபடி பரப்பு உயர்வால் தான், ஏன் எனில் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி என பார்த்தால் தெரியும், 2004 இல் 5.59% ஆக பிடி  இருக்கும் போது 470 கி.கி,இப்பொழுது 94.5% இருக்கும் போது 481 கி.கி தான் அதாவது பிடி சாகுபடி அதிகரிப்பால் ஒரு ஹெக்டேருக்கு வெறும் 11 கிலோ உற்பத்தி தான் அதிகரித்துள்ளது.

எப்படியோ அதிகரித்துள்ளதே என சொல்வீர்கள் ஆனால் விவசாய பொருளாதாரமே அறியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும், ஏன் ஏனில் ஒரு பாக்கெட் பாரம்பரிய விதை என்பது 400-500 ரூக்கு வாங்கி பயிரிடும் போது 470 கிலோ உற்பத்தி, ஆனால் இப்பொழுதோ சுமார் 980 ரூக்கு பிடி பருத்தி விதை வாங்கி பயிரிட வேண்டியுள்ளது, அதாவது விதை செலவு  இரட்டிப்பு ஆகியுள்ளது ,மேலும் சுற்றுச்சூழல், நுகர்வோர் நலன் ,விதையுரிமை என அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது, ஒரு ஹெக்டேருக்கு 11 கிலோ உற்பத்தியினை அதிகரிக்க இவ்வளவு பெரிய அபாயத்தினை எதிர்க்கொண்டு பயிரிட வேண்டுமா?

இவ்வுற்பத்தியை மேம்படுத்தப்பட்ட கலப்பின பாரம்பரிய விதைகளாலேயே எட்ட முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

மேலும் 2004 இல் இருந்து பருத்தி உற்பத்தியினை கவனித்து வந்தால் தெரியும்,

2007 -521 கி.கி

2008- 554

2009- 524

2010 -503

2011- 511

2012- 480.கி.கி

ஆரம்பத்தில் கொஞ்சம் உயர்ந்த உற்பத்தி படிப்படியாக சரிய துவங்கி மெதுவாக உற்பத்தி திறன் குறைந்து வருவதை காணலாம், பிடி பருத்தி இல்லாத காலத்தின் போது இருந்த உற்பத்தி திறனை நோக்கி பிடி பருத்தியின் உற்பத்தி சரிந்து செல்வதாக வேளாண் பொரூளாதார வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.

எனவே பிடி பருத்தி என்பது உற்பத்திக்கு கிடைத்த மாபெரும் வரம், பூச்சிகளுக்கு எமன் என்பதெல்லாம் 'பிரச்சார மாயைகள்"என்பது தெளிவாகும்.

பிடி அல்லது மரபணு மாற்றத்தினால் பெரும் பலன்கள் உருவாகும் என்பதெல்லாம் வெற்று காகித அறிக்கைகளே, உண்மையில் பெரும் பலன் என்பதெல்லாம் இல்லை எல்லாம், பெரும் பன்னாட்டு விதை நிறுவனங்கள் சந்தைப்பிடிக்க கிளப்பிவிடும் கட்டுக்கதைகளே என்பது தெளிவாகி இருக்கும், இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது சந்தர்ப்பம் வாய்க்கும் போது மீண்டும் தொடர்வேன்!

(இவன திருத்தவே முடியாது போல ,இப்படி பெருசா எழுதி தலைய பிச்சுக்க வைக்கிறானே... அவ்வ்)

------------------------------

பின்குறிப்பு:

# இன்னும் பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை, பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் ,திருத்தம் செய்யப்படும்.

# சுட்டிகள் முதல் அனைத்தையும் முழுவதும் படித்தபின் , ஏதேனும் விவாதம் இருப்பின் உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம், முழுவதும் படிக்காமல் முன் முடிவுடன் விவாதம் செய்ய முற்படுவதை தவிர்க்கவும். அடியேன் விஞ்சானியெல்லாம் இல்லை, ஏதோ வாசிப்பின் வாயிலாக உருவான புரிதலை பகிர்ந்துக்கொண்டுள்ளேன், கருத்துப்பிழை, சொற்பிழை இருப்பின் எவ்வளவு இருக்கோ அவ்வளவு குறைச்சுக்கிட்டு கருத்து சொல்லலாம் அவ்வ்!

# மேலும் எமது முந்தைய விவசாயம் சார்ந்த இடுகைகளின் சுட்டியும் அளித்துள்ளேன் ,விருப்பம் இருப்பின் வாசிக்கவும்.

என்னோட இந்த விவசாயப்பதிவுகளையும் பாருங்க,




#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!

1) விவசாயி படும் பாடு-1

2)விவசாயி படும் பாடு-2

இந்தப்பதிவுகளையும் பார்க்கவும்.

1)பஞ்ச கவ்யம்

2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1

3)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2

4)நடவு எந்திரம்

5) ஒருங்கிணைந்த விவசாயம்
-------------------------------

தரவுகள்:

 சுட்டிகள் அனைத்தும் பதிவினூடாக அளிக்கப்பட்டுள்ளது , எனினும் உங்களின் மேலான பார்வைக்கு மீண்டும் பட்டியலிடப்படுகிறது.

# http://articles.timesofindia.indiatimes.com/2013-08-16/india/41416828_1_bt-cotton-seed-companies-bengal-desi

# http://articles.timesofindia.indiatimes.com/2011-05-17/nagpur/29551789_1_bt-cotton-seeds-price-hike-bg-ii

# http://articles.timesofindia.indiatimes.com/2002-04-29/hyderabad/27136416_1_bt-seed-bt-cotton-pushpa-m-bhargava

# http://articles.timesofindia.indiatimes.com/keyword/seed-companies

# http://articles.timesofindia.indiatimes.com/2012-06-02/hyderabad/31982969_1_bt-cotton-seed-ankur-seeds-seed-companies

# http://articles.timesofindia.indiatimes.com/2012-08-04/ranchi/33034499_1_protection-of-plant-varieties-claim-compensation-branch-office

# http://thealternative.in/beat/india-after-gandhi-monsanto-raj-bt-cotton/

# http://www.indianet.nl/cotssec2.html

# http://www.mindfully.org/Industry/2003/Monsanto-Unilever-Child-Labour17may03.htm

# http://www.globalissues.org/article/214/stress-on-the-environment-society-and-resources

# http://agrariancrisis.in/2012/06/28/pesticide-use-in-bt-cotton-dr-kesavraj-kranthi/

# http://www.ota.com/organic/environment/cotton_environment.html

# http://ejfoundation.org/sites/default/files/public/the_deadly_chemicals_in_cotton.pdf

# http://www.business-standard.com/article/markets/shortage-of-bt-cotton-seeds-may-hit-2011-12-production-able-111021500188_1.html

# http://www.seedbuzz.com/knowledge-center/article/impact-of-bt-cotton-seeds-on-indian-agriculture

# http://articles.economictimes.indiatimes.com/2012-06-11/news/32175116_1_cotton-seed-bollgard-ii-bt-cotton

# http://articles.timesofindia.indiatimes.com/2013-05-21/aurangabad/39417570_1_bt-cotton-seeds-seed-companies-farmers

# http://www.business-standard.com/article/markets/shortage-of-bt-cotton-seeds-may-hit-2011-12-production-able-111021500188_1.html

# http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/glut-triggers-price-war-among-bt-hybrid-cotton-seed-makers/article4686541.ece

http://www.thehindu.com/sci-tech/agriculture/article3222647.ece

மற்றும் நமது அபிமான "விக்கிப்பீடியா &  கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-----------------------------------------------------------------------

தமிழ்ப்புரட்சி வேந்தர் செயமோகர்!

$
0
0
(இவன் தமிழ் படிச்சா குளு..குளுனு இருக்கு ஹி...ஹி)


ஆசான் செயமோகரு பல மயிர்க்கூச்செறியும் உள்ளொளி புறப்பாடு  கிளப்பும் சமகால நவீன மாயதந்திர மெய்யியல், உபமெய்யியல் உட்ப்பொதிந்த இலக்கியம் படைக்கும் மாபெரும் இலக்கிய சமையல் கலைஞர் என்பதை மறுக்க இவ்வாழி சூழ் உலகில் யாருக்கும் திராணியோ தெம்போ இல்லை என்பதை நாத்திகத்தையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு ஆசானுக்காக ,சோட்டாணிக்கரை பகவதியம்மன் சாட்சியாக சூலத்துல தேங்கா உடைச்சு சாம வேதம் ஓதி உரத்துச்சொல்லக்கூட அடியேன் தயார்.

ஷ்ப்பா முடியல ... இப்பவே கண்ணக்கட்டுதேனு யாரும் ஓடிப்போயிராதிங்க, ஹி...ஹி எத்தினி நாளைக்கு தான் மோன்சான்டோ ,பவண்டோனு பேசிட்டு இருக்கிறது நாமளும் கொஞ்சம் எலக்கியம் பேசி ... எலக்கியவியாதியா மெட்டாமார்பாசிஸ் ஆகலாம்னு ஒரு அல்ப ஆசை தான் அவ்வ்!

சரிங்க்ணா நெம்ப டெங்க்ஸன் ஆவாம மேக்கொண்டு படிங்க்ணா...

 இங்கீலீப்பீசு பத்திரிக்க அச்சடிச்ச  இந்து அச்சாபீசு தமிலு வளக்கனே வேல மெனக்கெட்டு தமிலுல ஒரு பத்திரிக்கை அச்சடித்து விக்க ஆரம்பிச்சதும் ...தான் அவுங்க கொண்டையில சே மண்டையில ஒரு பலுப்பு எரிய ஆரம்பிச்சு இருக்கும் போல , தமில இங்கீலீப்பீசு எயுத்துல எழுதிக்கினு இருந்தா என்னாதுக்கு நாம தனியா தமிழு பத்திரிக்க அச்சடிக்க போறோம், ஆனா இந்த பொயப்பத்த தமிலு மக்க விடாம தமிலுளவே எயுதிக்கினு படிச்சிக்கினு இருக்கறதால தானே நமக்கு இம்புட்டு கஸ்டம்னு நினைச்சிருப்பாய்ங்க போல,  செய மோகர கூப்பிட்டு ...இந்த மாரி...இந்த மாரி ஒரு நெலமை அதனால நீங்க அந்த மாரி ...அந்த மாரி ஒரு கட்டுரைய எயுதிக்கொடுங்க ... செமத்தியா கவனிக்கிறோம்னு  சொல்லிருப்பாங்க போல ,ஆசான் ஆச்சே சொம்மாவே கெரகம் எடுத்து ஆடுவார் ... தி இந்து(தமிலு) வே கூப்டு சொன்னதும் டண்டனக்கா டனக்குனக்கானு ஒரு கெதக்களியே ஆடிப்புட்டாரு எயுத்துல :-))

மோன்சான்டோ பிடி பருத்தியை விட செயமோகன்டோ பிடி(வாத) தமிழ் பருத்தி ரொம்ப டேஞ்சரா கீதுப்பா , தமிலுக்கு என்னாத்துக்கு தனி எலுத்து அதாங்க் இங்லீப்பீசு கீதுல்ல அதுலவே எயுதிட்டு போலாம், இங்லீப்பீசுல 26 எயுத்து தான் கீது ஆனாங்காட்டி தமிலுல பாக்கச்சொல்லோ 247 எயுத்து வச்சு கொலையா கொல்லுறய்ங்க படிக்கிற பச்ச கொயந்தய்ங்க இன்னா பாடு படுது தெர்தாப்பா ...ஆக்காங் ஒனக்கு எங்கே தெர்ய போவுது நீ நாலு எயுத்து பட்சிருந்தா தானேனு கொமட்டுல குத்தி கும்டி அடுப்பு கணக்கா பொகையுறாருப்பா அவ்வ்!

மெட்ராசு தமில் பேசிக்கினு ,தஞ்சாவூர் -கடலூர் கலந்த தமிலுல எயுதிக்கினு ... நடுவால இங்கிலீப்பீசுல பீட்டர் வுட்டுக்கினு எம்புட்டு வேலைய நானு செய்ய வேண்டியதிருக்கு எனக்கே ரொம்ப குஷ்டமா ச்சே கஸ்டமாயிருக்குப்பா ...பேயாம ஞானும் ஆசான் செயமோகரு வழியில் சுலுவா இங்கிலீப்பீசு லெட்டரில் தமிலு எயுதினு போயிடலமானு ஆசயா இருக்குபா  அப்பாலிக்கா தி சோ கால்டு தமிலு வெறியர்கள் என்ன தமிலு எனத்துரோவினு சொல்லி கல்லக்கொண்டு எறிஞ்சா இன்னாப்பண்றதுனு நெனைச்சாலே அடிவவுத்துல தண்ணியில்லாம போவுது அவ்வ்!

எனக்கு இன்னா டவுட்டுன்னா ஆசான் செயமோகரு தமிலு நாட்ட விட மலையாளக்கரையில நெம்ப ஃபேமசாம்...இதெப்படி ஒனக்கு தெரியும்னுலாம் கேட்கப்படாது அத அவரே சொல்லிக்கீரார் அவ்வ்!

ஆகவே மகாசனங்களே எனுக்கு ஒன் இஸ்மால் டவுட்டு வந்துடுச்சு, ஆசான் இந்த அரிய தத்துவத்தை ஏன் மலையாள மொழில செய்ய சொல்லி மலையாளப்பத்திரிக்கையில எயுதுலனு ?

ஹி...ஹி மலையாளத்துல கண்டியும் எய்தி இருந்தார்னு வச்சிக்கோ இன்நேரம் கஞ்சிக்காச்சி கயுவி ஊத்தியிருப்பாங்க :-))

செரி மலயாளத்துல எயுதினாத்தான் கஞ்சிக்காச்சுவாங்க ,ஆசான் தான் ஆறுமாசத்துக்கு ஒருக்கா டெலிபோன் டைரக்டரி போல பொஸ்தவம் எயுதுறாரே அதையாச்சும் இப்பிடி பொரட்சியா இங்கிலீப்பிசு லெட்டரில் எயுதி முன்னோட்டங்காட்டியிருக்கலாம்ல.... சும்மாவா அப்பிடி ...டெலிபோன் கும்பெனில கம்பி கட்டினவர் ஆச்சே!

 ஹி...ஹி அப்பிடிலாம் எயுதுனா இப்ப கெடைக்கிற லைப்ரரி ஆர்டர் 1500 பொஸ்தவுமும் கேண்ஜலாகிடும்னு ஆசானுக்கு தெர்யும்ல...கூடவே சுத்திட்டிருக்க கைப்புள்ளிங்க கூட ஒரு புக்கும் வாங்காது... அப்பாலிக்கா சுண்டல் மடிக்க எடக்கு தான் போடனும்னு தெரிஞ்சு தான் உசாரா நமக்கு அட்வைசு கொடுக்கார்... சொல்லுதல் யார்க்கும் எளியவாம்னு தாடிக்கார தாத்தா அன்னிக்கே இதத்தான் சொல்லிட்டு செலையா நிக்கார் குமரிலனு ...நாவர்க்கோயில்க்காரருக்கு தெரியாமலா இருக்கும் அவ்வ்!

செரிப்போவட்டும் காசுக்கு விக்குற புக்குல எல்லாம் வெசப்பரிச்ச செய்ய முடியாது ,பொஸ்தவ கும்பெனி கோச்சுக்கும்னு வச்சிக்கலாம்.. எணையத்துல சொம்மா எயுதுக்கினு கீறார் அதுலவாச்சும் இதமாரி பண்ணிக்கீறாரானு பார்த்தா அதுவும் இல்ல... ஆசானாலேயே செய்ய  முடியாத, புடிக்காத ஒன்ன எங்கள மாரி அரடிக்கெட்டுக்கள செஞ்சு பாக்க சொல்றிங்களே ,இது எந்த ஊரு நாயம்?

இதுல கெல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணக்கா ... தமில் ஆராய்ச்சிலாம் செஞ்சி ... இப்படி எயுதினா சரியாத்தான் வருங்கீறார்... அத பாருங்களேன்..

//மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது.//

நெம்ப நல்லா ஆய்ந்துக்கீறார்..எறா ஆயுறவங்க கூட இம்புட்டு சொத்தமா சோலிய செய்யமாட்டாங்க அவ்வ்!

"க"என ஒலி வர எளமையிலே பழக்குகிறோமாம், தமிலே படிக்காம தமிலுல எய்தினா இப்புடித்தான் தோனும், தமிலு ஒரு எலக்கண மொழி... எல்லாத்துக்கும் எலக்கணம் வச்சிக்கீது... எண் எலக்கணம்,எழுத்திலக்கணம், புணர்ச்சி விதி னு ஏகப்பட்டது கீது... புணர்ச்சிவிதினா வேறதெவும் நெனைச்சிப்புடாதிங்க அப்பாலிக்க அல்டிமேட் கதை கணக்காகிடும் அவ்வ்!

நம்ம தமிலுல ஒரு எழுத்து உருவாகிறதுக்கு கூட எலக்கணம் இருக்கு, இப்பிடி ...இப்பிடினு சொல்லிக்கீறாங்க...

க்+அ = க னு பிரிச்சு காட்டி ..."க"இப்படி தான் வருதுனு சொல்லி "க"ஒலியை உள்வாங்க வைப்பாங்கோ... சொம்மா "A"தான் "A" , A for Apple னு சொல்லிட்டு எயுத்த சொல்லித்தர மாட்டாங்கோ.

இங்கிலீப்பீசுல தமில் போல சாப்ஜாடா அப்படி சொல்லித்தரவும் வய்யே இல்ல, அதுல எலுத்தோட "ஒலி உச்சரிப்புக்கும்"சொல்லோட ஒலி உச்சரிப்புக்குமே தொடர்பேயில்லாம புட்டுக்கினு நிக்கும்.

"CAR" = கார்(kaar)

"CARE"=கேர் (kaer)

"CA"என்ற ரெண்டெலுத்து ஒரே மாதிரி அடுத்தடுத்து ரெண்டு சொல்லிலும் வந்தாலும் ஒரெடுத்துல "கார்"னும் இன்னொரு எட்த்தில "கேர்'னும் படிக்கணும் , இப்படி "ஒலி உச்சரிப்பு"எப்படி மாறுதுனு அடையாளங்காட்ட ஒரு சுட்டி ,சட்டினு எதுவும் உடனே சிக்காது ...படிக்கச்சொல்லவே இப்பிடி..இப்பிடி சொல்லவோணோம்னு "மண்டையில புகுத்தி "வச்சத்தான் உண்டு.

அதான் கடசில ஒரு "ஈ"உக்காந்திருக்கே அத வச்சு ஒலி உச்சரிப்பு அடையாளம் பார்க்கலாம்னு சொன்னா மன்டையில போடுவேன் ... "ஈ"கடசீல தான கீது அது எப்படி முதல்ல வரச்சொல்ல ஒலி மாறுபாட காட்டும்?

ஏன்னா தமிலு எழுத்தொலிக்கு முக்கியம் கொடுக்க மொழி, இங்கிலீப்பீசு சொல் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, ஏதோ ஒரு  இஸ்பெல்லிங்க கூட எயுதிட்டு இத இப்படிக்கா உச்சரிக்கணும்னு வாத்தியாருங்க நம்மள "மனப்பாடம்"தான் செய்ய வைக்க முடியும், ஒலித்திரிபுக்கு எலுத்து அடிப்படையில காரணமே சொல்ல முடியாது.

அதனால தான் நம்மாளுங்க  இங்கிலிப்பீசு பேசச்சொல்லோ "புரநவுண்சியேஷன்"ல தப்பு பண்ணிடுறது,ஆனா கரிக்ட்டா இஸ்பெல்லிங்க் எல்லாம் எயுதிடுவாங்க.

ஹி...ஹி.. இஸ்பெல்லிங்க்,இஸ்கோல் ..ஐஸ்லேன்ட் எல்லாம் இப்படிக்கா "S"எஸ்னு சொல்லி ஒலிய கொடுக்கபோய் வரது. வெள்ளக்காரய்ங்க படிக்க சொல்ல இங்கிலீப்பீசுல எழுத்தின் ஒலி வடிவத்தை பின் தள்ளிட்டு "சொல்லின்"ஒலி வடிவம்னு "கட்டமைச்சு"சொல்லிக்கொடுத்திடுவாங்க எனவே அவங்களுக்கு அது எளிது,நமக்கு தான் நொறத்தள்ளும் அவ்வ்!

அதனால ஆசான் சொல்லுறாப்போல இங்கிலீப்பீசு லெட்டரில் எலுதினா ரொம்ப சுலுவாகிடும் என்பதல்லாம் கப்சா!

எலுத்துக்குனு இல்ல, ரெண்டு சொல்லு பக்கம் பக்கமா வந்து ஜாயின்ட் அடிக்க சொல்லக்கூட இப்படி ஒன்னா ஒட்டி இன்னொரு எலுத்தா மாறி அதுக்கு ஏத்தாப்போல உச்சரிக்கிற "புணர்ச்சி"விதிலாம் தமிலுல இருக்கு, இங்கிலீப்பீசுல அப்படிலாம் இல்லாம எல்லா எலுத்தும் தனியா நிக்கும் ,ஆனா சேத்து சொல்லறப்போ இன்னொரு ஒலி வடிவதை நம்ம மனப்பாடம் செய்யனும் ... அதாவது தமிலுல ஒவ்வொரு எலுத்தா எலுத்துக்கூட்டி அதே ஒலில சொல்லிக்கிட்டே ஒரு சொல்ல சொல்லி முடிச்சாலும் "சொல்லின் ஒலி வடிவமும்"அதாவே வரும்.

அ+ம்+மா = அம்மா +இ+ங்+கே =இங்கே + வா +வா ,

பிரிச்சு சொல்லிப்படிச்சுட்டு அப்படியே ,

சேர்த்து படிச்சு பாருங்க = அம்மா இங்கே வா வா என அயகா சொல்ல முடியும்!

எலுத்தா படிக்கும் போது சொல்லுற அதே ஒலில சொல்லாவும் சொல்லலாம், எனவே புரநவுண்சியேஷன் கொயப்பமே வராது.

ஆனால் இங்கிலீப்பீசுல அப்படிலாம் இல்ல எல்லா எலுத்தும் தனித்தனியா நிக்கும், எலுத்தெலுத்தா சொல்லிட்டு அதே ஒலில சொல்லலாம்னு பார்த்தா சொல்ல முடியாது அவ்வ்!

புள்ளி வச்ச எலுத்து புள்ளி வைக்காத எலுத்து , குறில் ,நெடில் என எதுமே கெடையாது எல்லாம் இப்படித்தான் சொல்லனும்னு "சொல்லை"சொல்லும் போதே"திணிக்கனும்"அவ்வ்! இப்படி இதான் உண்மை,அப்படித்தான் சொல்லணும் அப்படியே ஏத்துக்கிட்டு படினு சொல்லுறது "AXIOM" * என்ற வகையில நம் மண்டையில ஏத்துறதாகும்.

*"An axiom, or postulate, is a premise or starting point of reasoning. As classically conceived, an axiom is a premise so evident as to be accepted as true without controversy"

புணர்ச்சி,உணர்ச்சி... ஒரு மண்ணும் கெடையாது... சொல்லித்தரவங்க தான் எல்லாத்தையும் சொல்லித்தரணும் அது எப்படினு கேள்விக்கேட்டா விளக்கமே இருக்காது. கூட்டு குடும்பமாக சொல்லில் தான் எல்லாத்தையும் வச்சிருப்பாங்க, எழுதுக்குனு ஒன்னியும் இல்லை.

தமிலு எழுத்து, எண் என எல்லாம் பிரிச்சு மேய்ஞ்சி எலக்கணம் போட்டு எளிதாக உள்வாங்க வழி செய்த மொழி ,இது போல ஒலகத்துலவே வெகு சில மொழிங்க தான் இருக்கு.

சீன,சப்பானிய மொழிலாம் படங்காட்டி விளக்கும் மொழி ,அதாவது ரொம்ப எலுத்துக்குனு மெனக்கெடுவதேயில்லை, வூடுனு எழுதினா வூடு படத்தையே சின்னதா வரிஞ்சாப்போல எயுதிடுவாங்க அவ்வ்!

நம்ம தமிலு மட்டும் இப்படி பிரிச்சி மேய்ஞ்சி வச்சிருக்காங்க என்றால் அந்த அளவுக்கு அந்தக்காலத்திலயே ஆய்ந்து அடிப்படை அலகா பிரிச்சு எப்படி வேண்டுமானாலும் "வரி வடிவில்"கொண்டு வர வசதியாக இருக்கத்தான்... அதனால தான் தமிலுல முன்னால பின்னால எப்படி வேண்டுமானாலும் வார்த்தைய தூக்கிப்போட்டு ஒரே மீனிங்க கொண்டு வரது ரொம்ப சுலுவா செய்ய முடியும்.

இதனால தான் நம்ம தமிலுல 2000 வருசத்துக்கு முன்னமே எலக்கியம் எயுதிக்கீறாங்க அதுவும் எப்புடி ... ஓசை நயம் இருக்கும், ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் இயைபு இருக்கும், சந்தம் இருக்கும், ஒரு இசை போல ஒலிக்கும், கவிதை போல இனிக்கும், ஆனால் ஆழமான பொருளையும் தரும்.

மத்த மொழிலவும் 2000 வருசம் முந்திய படைப்புகள் இருக்கலாம் ஆனால் அவற்றில் எல்லாம் இத்தப்போல மொழிக்கட்டமைப்பு கூறுகள் இருக்காது சொம்மா ஒரு கதைய சொல்லிட்டு போவும்.

சொம்மாவா சொன்னார் பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்"னு!

இப்படி எலுத்துக்குலாம் எலக்கணம் போட்டு ,ஒரு மொழியில என்னவெல்லாம் செப்படி வித்தைக்காட்டலாமோ அதுக்குலாம் வழி வாய்க்கா செஞ்சி வச்சிட்டு 2000 வர்சம் முன்னமே நம்ம முன்னோர்கள் போயிட்டாங்க, இப்போ 13 வருசமா கம்பியூட்டர்ல தமில இங்கிலிபீசுல தட்டுறேன் எனக்கு ஒன்னும் வித்தியாசமே தெரியலைனு சொல்லுறாரே ஆசான், அத டிரான்ஸ்லிட்டரேஷன் மொழிப்பெயர்ப்புக்கு ஒரு ஒரு எலுத்துக்கும் என்ன மாதிரி எலுத்துனு எவனோ வடிவமைச்சதால தானே,

இங்கிலீபீசுல எல்லா தமிலு எழுத்தின் ஒலிக்கும் "இங்கிலீப்பீசு லெட்டர் காம்பினேஷன்"இல்லைனு இன்னும் கூடவா தெரிஞ்சிக்கலை ,அப்படி இல்லாத சொல்லுக்குலாம் சும்மா குன்சா இப்படி எலுதினா அப்படி "டிரான்சிலிட்டரேட் செய்யனும்"னு நம்மாளுங்க தான் "டிசைன்"செய்திருக்காங்க, சும்மா "அம்மா இங்கே வா வா"னு இருக்கிறத இங்கிலீபீசுல எலுதினா ஒலி எப்படி வருதோ அப்படியே தமிலுலவும் வருதுன்னு அடிச்சு வுடக்கூடாது.

ஹி...ஹி அடுத்த வரி "ஆசை முத்தம் தா தா"னு ஏன் எயுதாம போனார்?  அவருங்கண்டியும் எயுதி இருந்தார் இன்னேரம் ,டப்பா டான்ஸ் ஆடியிருக்கும் ,அவ்வ்!

"ஏகபோகம்னு"இங்கிலீபீசுல எலுதினா அப்படியே தமில் ஒலி வடிவத்துல தான் இருக்கானு செக் செய்து சொல்லுங்க பார்ப்போம் :-))

நம்மாளுங்க இப்படி இங்லீப்பீசு லெட்டர சேர்த்துக்க , நீக்கிக்க ,அப்பாலிக்க டைப்படிச்சா அதுக்கு இப்படி தமில் சொல்லு வராப்போல மென்பொருள் எலுதிட்டோம்னு சொல்லிக்கொடுத்தது தப்பா போச்சு அவ்வ்!

#//பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா?//

ஹி...ஹி அப்புறம் , தமிழுல நெடில் வரச்சொல்ல ரெண்டு "a"போடுறாப்போல car க்கு ரெண்டு "a" போட்டு "kaar"னு எலுதி இங்கிலீப்பீசு டீச்சர்க்கிட்டே ஒதைத்தான் வாங்குவான்.

# ஆங்கிலமே பிராதன மொழியாக புழங்கி வரும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட மாணவர்கள் இன்னொரு மொழிக்கற்க வேண்டும் என "அறிவுறுத்தி"மதிப்பெண் கிரெடிட் கொடுக்கிறார்கள், இதனால் அமெரிக்க குழந்தைகள், ஸ்பானிஷ்,,சீனம், ஃபிரெஞ்ச் என எடுத்துப்படிக்கவும் செய்கிறார்கள், தமிழில் ஆர்வம் உள்ள தமிழ்ப்பெற்றோர்கள் வீட்டில் தமிழும் பேசிய மாரி ஆச்சு குழந்தைக்கு அந்நிய மொழி கிரெடிட் வாங்கிக்கொடுத்த மாரியும் ஆச்சுனு தமிழையே பள்ளியில் அந்நிய மொழி(இரண்டாவது மொழி) என பதியவும் செய்கிறார்கள்.

அப்போ வெள்ளைக்காரனுக்கு தெரியதா ரெண்டு மொழி படிக்க வச்சா குழந்தைகள் கஷ்டப்படும்னு? உண்மையில் ரெண்டு மொழி படிச்சா மொழி ஒப்பீட்டின் மூலம் மொழிக்கற்றல் திறன் கூடவே செய்யும்!

அவர்களை விட எல்லாம் பெரியவர் நம்ம ஆசான் செயமோகர் ஏன்னா அவர் ஒரு வில்லேஜ் மொழிஞானி :-))

# # தமிழே படிக்காம,தமிழ் எழுத்துருவே தெரியாம,தமிழ்வாசிக்க தெரியாத ஒரு தலைமுறை ஒன்னு உருவாகிட்டு இருக்கு,அவங்களை எல்லாம் வாசிக்க வைக்கனும்னா ,வருங்காலத்திலும் தமிழில் நல்ல நூல்கள் வரவேண்டுமெனில் 'தமிங்கிலீஷ்"எழுத்துரு தான் அருமருந்து என்கிறார்,

தமிழே வாசிக்கத்தெரியாதவங்களுக்கு தமிழ் வொக்காபுலரி (சொல்லறிவு)மட்டும் இருக்குமா?

பேச்சு வழக்கில் சில நூறு தமிழ்ச்சொற்கள் மட்டுமே பயன்ப்படுத்திட்டு இருப்பாங்க, வாசிக்கும் போது தான் பலப்புதிய சொற்களும் அறிமுகம் ஆகும், தமிழ வாசிச்சுட்டு இருக்கும் நம்ம மக்களுக்கே திருக்குறள் புரிய ஒரு விளக்க உரைத்தேவைப்படுது, காரணம் என்னனா நாம மொழியில இருக்க பல சொற்களை பயன்ப்படுத்தாம விட்டதால் அதன் பொருள் என்னனு தெரியாம போயிடுச்சு, தமிழ் எழுத படிக்க  தெரிஞ்சவங்க எல்லாம் அதனால தான் பல சங்க இலக்கியங்கள், ஏன் சில நூற்றாண்டுக்கு முன் வந்த இலக்கியங்கள் கூட படிச்சு புரிஞ்சுக்க கஷ்டப்படுறாங்க., தமிழ் நல்லா தெரிந்தவங்களோட நிலைமையே இதான், அப்படி இருக்கும் போது தமிழ் அட்சர சுத்தமாக தெரியாதவங்க எப்படி 'டிரான்ஸ்லிட்டரேஷனில்"இருந்தால் மட்டும் படிச்சு புரிஞ்சுப்பாங்களா?, ஒவ்வொரு சொல்லுக்கும் தமிழ் - தமிழ் அகராதி தேவைப்படும், அப்படி மெனக்கெட்டு படிப்பாங்களா என்ன?

ஆங்கிலத்தில் இப்படி ஏகப்பட மொழிக்கலப்பு இருப்பதால் ,ஆங்கில எழுத்துருக்களை வாசிக்க தெரிஞ்சாலும் பொருள் புரிய ஆங்கில அகராதி தேவைப்படுது, அமெரிக்கன், பிரிட்டீஷ் என அம்மக்களுக்கும் அகராதி தேவைப்படுது, நாம் பெரும்பாலும் தமிழ் -தமிழ் அகராதி இல்லாமலே சமகால தமிழ் இலக்கிய படைப்புகளை படிச்சிடுவோம், அப்படி சமகால தமிழில் புரியிறாப்போல எழுதினால் மட்டுமே போணியாகும் ,அத விட்டுட்டு யாருக்கும் புரியாம எழுதிட்டு ,எழுத்துரு மாற்றினால் எல்லாரும் வாசிப்பாங்கனு சொல்வதெல்லாம் ,மொழியின் பயன்ப்பாட்டுவியல் புரியாத கத்துக்குட்டித்தனம்!

எனவே தமிழே படிக்காத,தமிழ் 'வோகாபுலரி(சொல்லறிவு)"இல்லாத ஒருத்தன் அகராதி வச்சு "டிரான்ஸ்லிட்டரேஷன் தமிழ்"படைப்பை  படிச்சு புரிஞ்சுக்க விரும்ப மாட்டான் ,அதுக்கு பேசாம நேரடியாக நல்லா புரியுற இங்கிலீஷ் புக்க படிக்கலாம்னு போயிடுவான் அவ்வ்! இப்போ ஆசான் புக்கு கூட சரியா விக்காம போக காரணம் மக்களுக்கு தமிழ் வாசிக்க மறந்து போனதால் இல்லை, என்னா சொல்ல வரார்னே பிரியலை, அதுக்கு ஒருத்தங்க "அருஞ்சொற்பொருள்"விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு அவ்வ்!


#//இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். தென்னக மொழிகளைப் பிரிப்பது அவற்றின் வேறுபட்ட எழுத்துருக்கள்தான். மற்றபடி அவை 70% ஒன்றே.//

மிகச்சில நாட்களில் என்றால் ஒரு வாரம் ,பத்துநாள் போதுமா?

ஆசானுக்கு இங்கிலீப்பீசு நல்லாதெரியும் தானே ,அப்போ ஃபிரென்ச்,ஜெர்மன் ,ஸ்பானிஷ், எல்லாம் ஒரு சில நாட்களில் வாசிக்க கத்து இருக்கலாமே அவ்வ்!

ஆசான் ஆசைப்படுறா போல தமிழ் வரிவடிவம் தேவையில்லைனு நம்ம முன்னோர்களும் நெனைச்சிருந்தால் இன்னேரம் எல்லாரும் தேவநகரில இந்திப்போல தான் எயுதிக்கினு இருந்திருப்போம், ஒரு வேளை ஆரம்பத்துல எல்லாம் தேவநகரில எயுதுங்க, இந்திய மொழிகள் பல்வேறு இருந்தாலும் எல்லாம் வாசிக்க பழகிடும், மொழி வழியா இணைஞ்சி ஒருங்கிணைந்த அகன்ற பாரதம் உருவாகிடும்னு  சொல்ல தான்  ஆசைப்பட்டிருப்பாரோனு நினைக்கிறேன் ,ஏற்கனவே இந்துத்வா நாத்தம் அதிகம் அடிக்குதுனு பொலந்துக்கிட்டு இருக்காங்க எனவே பேசாம இங்கிலீப்பீசுனு சொல்லி ஆரம்பிப்போம் எதுக்கு அன்னிய மொழியின் வரிவடிவம்னு சொல்லிட்டு எவனாவது டீவில விவாதம் ஆரம்பிச்சு கூப்பிடுவாங்க  அங்கே போய் அப்போ சுதேசமான மொழி தேவநகரி அதை வச்சிக்கிட்டா என்னனு  திரிய பத்த வைக்கலாம்னு ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருப்பார் ஏமான் :-))
------------------------

இந்திய மொழிகள் அந்நிய தாக்கத்தினை எப்படி சமாளித்தது?

மலேசியாவில் , லத்தின்(ஆங்கில) எழுத்து வடிவில் மலாய் மொழியை எழுதுகிறார்கள் ,அதே போல தமிழில் செய்தால் என்ன எனவும் ஆசான் கேட்கிறார்,அதற்கு மலேசிய வரலாறும் கொஞ்சம் பார்க்க வேண்டும்,

மலேசியாவை எப்படி ஆங்கிலேயர்கள் பிடித்தார்கள் என்பதை விளக்கும் ஒரு வரலாற்று நூல், சிங்கப்பூரை நிர்மாணம் செய்தவரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம்,

(சிங்கப்பூரை உருவாக்கிய தாமஸ் ஸ்டாம்ஃபோர்ட் ரேபேல்ஸ்)

அந்நூல்,

Sir Thomas Stamford Raffles
Kt., LL.D., F.R.S.
Founder of Singapore
1819

By
J. A. Bethune Cook
Author of " Sunny Singapore,"
" Apa Suka, Tuan,"

மலேயா(மலாக்கா) தீபக்கற்பத்தில் அப்பொழுது பெரும்பாலும் வசித்தவர்கள் ,இந்து, புத்தமத பழங்குடியின மக்களே, அவர்களில் பட்டாக்கா பகுதியை சார்ந்த சில இனக்குழுக்களுக்கு நரமாமிசம் சாப்பிடும் வழக்கு கூட இருந்துள்ளது, இப்பொழுது மலேசியா சிங்கப்பூரில் இருப்பவர்கள் எல்லாரும் பூர்வீக மக்களே அல்ல, அக்காலத்தில் பழங்குடியின மக்கள் பலரை கொன்றுவிட்டு சீன வழி வந்தவர்களை குடியேற்றினார்கள்,அப்படி குடியேற்றப்பட்டவர்களில் இந்தியர்களும் அடக்கம்.

முதலில் உள்ள புகுந்தது போர்ச்சுகீசியர்கள் தான் சுமார் 50 பேரை வச்சிக்கிட்டே ,கொஞ்சம் இடங்கொடுங்க வியாபாரம் செய்துட்டு போயிடுவோம்னு சொல்லிட்டு முகாம் போட்டு  ,நைட் கோட்டை சுவர் ஏறிக்குதித்து எல்லாரையும் கொன்று மலேசியாவை
(மலாக்கா) புடிச்ச கதை தெரிய வரும்:-((

கம்போடியாவை ஆண்ட ஶ்ரீவிஜயா வழிவந்த மன்னர்கள் தான் மலேயாவை ஆண்டது, அவனை ராஜேந்திரச்சோழன் வென்றதுலாம் வெள்ளைக்கரன் வரும்  முன்னரே நடந்தது, அப்போவே இந்து மதம்,புத்த மதம் பரவி இருந்தது, இடத்திற்கு ஏற்ப ,pallava grantham,bali,brahmi,malay,ஜரவானிஸ்,சீனம் கலந்து பேசிக்கொண்டிருந்தார்கள், எழுத பெரும்பாலும் பல்லவ கிரந்தம், பிரம்மி ,native Rencong script,வடிவே பயன்ப்பாட்டில் இருந்தது.,பின்னர் டச்சு மற்றும் வெள்ளையர் காலனி அமைத்து ,இந்திய &சீனர்களை,குடியேற்றி இன்னும் பல்குழு இனமக்களாக மாற்றிய  நிலையில்,வெள்ளையருக்கு முன்னரே இஸ்லாமும் உள்ள புகுந்திருந்தாலும், வெள்ளையர்களின் சமகாலத்தில் நன்கு பரவி  ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இஸ்லாமிய பரவலின் போது அரபிய எழுத்தில் மலாய் மொழியை எழுதிய முறைக்கு jawi என்று பெயர் .மக்களிடையே மத மற்றும் இன அடிப்படையில் ஒற்றுமை இல்லாத நிலையில் வெள்ளைக்காரன் எல்லாத்திலவும் ஆங்கிலம் புகுத்தி ,லிபிலவும் ஆங்கிலம் புகுத்திட்டான். இப்பவும் மலேசியாவில் அரபி வடிவ ஜாவியும் புழக்கத்தில் உள்ளது, தேர்வுகளையும் அம்மொழியில் எழுதலாம்.

இலத்தின் எழுத்து ஆதிக்கம் செலுத்த காரணம் எந்த இனக்குழுவோட மொழியின் லிபியையும் முன்னிலைப்படுத்த மற்ற இனக்குழுக்கள் விரும்பாததே. மேலும் மலேசியாவில் பூர்வீக மொழியில் பெரியளவு இலக்கியம் ,கல்விலாம் அப்போ வளவே இல்லை, வெள்ளைக்காரன் காலத்தில் தான் நாடே முழுசா உருவாச்சு எனவே ,வெள்ளைக்காரன் என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டார்கள்,இந்தியாவில் அப்படியில்லையே!

அதக்காலத்தில இந்தப்பக்கம் பர்மாவில இருந்து மலேயா,சிங்கப்பூர், ஜாவா,சுமத்தரா, வியட்நாம்,கம்போடியா என எல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமா மலாக்கா தீவுக்கூட்டம்னு தான் குறிப்பிட்டார்கள், மொத்தமா 20 லட்சம் மக்கள் தொகை தான்,காலனி ஆட்சி அமைந்து ஓரளவு ,நவீன மலேசியா,சிங்கப்பூர் உருவான பின் மக்கள் தொகை வெறும் 100 ஆண்டுகளில் வேகமா வளர்ந்து 3.5 கோடி ஆச்சாம்,  ஆனால் இந்தியாவில வெள்ளைக்காரன் வரும் போதே கோடிக்கணக்கில் மக்களும், பல மொழிகளும்,அதுக்கு இலக்கணமும் இருந்துச்சு.எனவே ஆட்சிப்புடிக்க வந்தவர்களால் ரொம்ப ஆதிக்கம் செலுத்தி மாற்ற முடியலை,மொழி வளமும் வளர்ச்சியும் இல்லாத மலாய் மொழி  ஆங்கில எழுத்துருக்கு மாறியதை  உதாரணம் காட்டி பழமையான   தமிழை இப்போ மாற்றஞ்செய்ய துடிக்கிறார் ஆசான் அவ்வ்.

தமிழ் மொழி என்று இல்லை எந்த இந்திய மொழியையும் வெள்ளைக்காரர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை, காரணம் பெரும்பாலான மக்களுக்கு அக்காலத்திலேயே வட்டார மொழி அறிவு பெருகி இருந்தது,மேலும் நிர்வாகமும் மொழி சார்ந்து இருந்தது. மேலும் வளமான இலக்கிய் வளம், ஏன் அறிவியல் நூல்களுமே உண்டு,பூர்வீக மொழி கல்வி கட்டமைப்பு எல்லாம் இருந்தது. உலகின் மிக பழமையான பல்கலைகழகமே நாளந்தாவில் இருந்தது என்னும் போது இந்தியாவில் எப்படி வெள்ளைக்காரன் லிபிய புகுத்த முடியும்?

மிக நீண்ட காலம் ஆண்ட முகமதிய ஆட்சியாளர்களாலேயே இந்திய முழுக்க "அரபிய "லிபிய கொண்டு வர முடியவில்லை.  நிர்வாக மொழி என அரண்மனையில் பாரசீகமும் மக்களிடையே அந்தந்த வட்டார மொழியுமே செல்லுபடியாச்சு.

இதற்கு மிக முக்கியமான காரணம் என்னவெனில் இந்திய மக்களுக்கு மொழி,இனம் ,மதம் என்றால் கொஞ்சம் பெருமிதம் உண்டு, எனவே தன்மானம் பொத்துக்கிட்டு வந்துடும், என்ன தான் அடிமையா இருந்தாலும் எப்படி அதுல இன்னொருத்தன் கைய வைக்கலாம்னு கிளம்பிடுவாங்க, இல்லைனா இந்தி திணிப்புனு சொல்லி எல்லாம் ஆட்சிய புடிக்க முடியுமா?

இது ஏதோ தென்னாட்டுல நடக்கிற கூத்து,நம்மாட்கள் தான் உணர்ச்சி வசப்படுறாங்கனுலாம் சொல்லிட முடியாது, காந்தி ,தீவிரமாக மேற்கத்திய கல்வியை எதிர்த்தும்,பலாகங்காதர திலகர்  மத உணர்வை முன்னிறுத்தி பிள்ளையார் கையில தூக்கிட்டு மொழி, இனம்,மத உணர்வை  பயன்ப்படுத்தி தான் வெள்ளையனை எதிர்த்து போராட மக்களை திரட்டினாங்க, ஆனால் என்னமோ அவங்க எல்லாம் அரசியல் போராட்டம் மட்டுமே நடத்தி சாதிச்சுட்டதாவும், நாம தான் மொழி வெறியர்களாகிட்டாப்போலவும் முற்போக்கு இலக்கியவியாதிகள் கற்பித்துக்கொண்டு ,ஆங்கிலத்தில் எழுத வைப்பதை புரட்சினு நினைக்கிறாங்க அவ்வ்
---------------------------------------

தமிங்கிலீஷ் தட்டச்சு எளிதாக்குகிறதா தமிழை?


(Tamil-99 keyboard layout)

நேரடியாக இக்கேள்விக்கு பதில் எளிதாக்குகிறது எனலாம்,அப்புறம் என்ன அதையே பயன்ப்படுத்துகிறோம்,அதையே "கற்றலுக்கும்"எழுத்துருவாக'பயன்ப்படுத்திவிட்டு போய்விடலாமே என செயமோகத்தனமாக முடிவுக்கு வருவதற்கு முன்னர் சற்றே சிந்திக்க சில குறிப்புகள்,

ammaa= அம்மா ,எனஃபொனடிக்அடிப்படையில் தட்டச்சு செய்வதை டிரான்ஸ்லிட்டரேஷன் தட்டச்சு என்பார்கள், ஆனால் இம்முறை எளிதாக தெரிந்தாலும் ,நமது உழைப்பை உறிஞ்சக்கூடியது,
எப்படி எனில் நேரடி தமிழ் விசைப்பலகை இருக்குமெனில் 3 விசை அழுத்தங்களில் "அ+ம்+மா"என முடிக்கும் வேலைக்கு , "a+m+m+a+a"என அடிக்க "5"விசை அழுத்தங்களை நாம் கொடுக்க வேண்டியதிருக்கு.

எனவே இம்முறை மிகச்சிறிய  தமிழ் தட்டச்சு வேலைக்கு தான் பயன்ப்படும்,  பின்நவீன எலக்கியவியாதிகள் போல சுமார் 500 பக்கங்கள் தட்டச்சு செய்ய வேண்டுமெனில் ... தமிங்கிலீஷில் தட்டச்சு செய்வதற்குள் விரல் எல்லாம் ஓரங்க்குலம் தேய்ந்து போனாலும் போய்விடக்கூடும் அவ்வ்!

தொழில்முறையில் தமிழ் தட்டச்சு செய்ய TAM,TAB,TASCI, போன்ற விசைப்பலகை லே அவுட்டினைத்தான் பயன்ப்படுத்துகிறார்கள், இவற்றில் பல "கீ"களுக்கு நேரடியாக தமிழ்ச்சொற்கள் ஒதுக்கப்பட்டிருக்கும், எனவே "க"த என எல்லாம் அடிக்க தமிங்கிலீஷ் தட்டச்சு போல ரெண்டு மூன்று ஆங்கில எழுத்தை அடிச்சு நேரம் செலவிட தேவையிருக்காது,மேலும் SHIFT, CTRL  போன்றவற்றை எல்லா எழுத்துக்கும் புடிச்சு அமுக்கிட்டிருக்க வேண்டாம். எனவே நேரமும் ,உழைப்பும் மிச்சம் ஆகும்.

அதாவது இப்பொழுது தமிங்கிலீஷில் தட்டச்சு செய்யும் நாம எல்லாம் சுமார் 100 எழுத்துக்கள் கொண்ட ஒரு தமிழ் பத்தியை தட்டச்ச 200-300 ஆங்கில எழுத்துக்களை அமுக்கிக்கொண்டிருக்கிறோம் அவ்வ்!

இது போல ஏகப்பட்ட எழுத்துக்களை அமுக்கி ஒரு படைப்பை உருவாகுவதற்குள் அயர்ச்சி அடைந்து ,ஸ்ஸ்ப்பாடா என நொறைத்தள்ளிடும், இதெல்லாம் பொழுதுப்போக்காக தமிழில் விளையாடுபவர்களுக்கு தான் பயன்ப்படும், நீண்ட காலப்பயன்ப்பாட்டுக்கு 'தலைவலி போய் திருகு வலியை கொடுக்க வல்ல தட்டச்சு என்பதே உண்மை.

தொழில்முறை தமிழ் தட்டச்சு போன்று மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து விசைப்பலகை அழுத்தல்களை குறைத்து தட்டச்சு செய்வதை எளிமையாக்க ஒருங்குறியில் உருவான ஒரு விசைப்பலகை அமைப்பு இல்லையா எனக்கேட்கலாம், இருக்கு!

உண்மையான இணையத்தமிழ் ஆர்வலகள் பலர் கூடி"தமிழ்-99"என ஒரு தமிழ்விசைப்பலகை அமைப்பினை உருவாக்கியுள்ளார்கள், அதுவே எளிய ,சிறந்த கணினித்தமிழ் உள்ளீடு அமைப்பாகும். இம்முறையில் எழுத்துக்கள் உருவாக்கம் தமிழ் எழுத்திலக்கண முறைப்படியே அமையும்,தமிழ் எழுத்துக்கள் ,தமிழ் எழுத்துக்களாகவே மனதில் பதியும்,எனவே நமக்கும் தமிழ் அறிவு மட்டுப்படாது.

தமிங்கீலீஷ் தட்டச்சு எளிமையாக ,வேகமாக தட்டச்சு செய்ய உதவுவது போல தெரிவதே ஒரு பிரமை தான், நமது நேரத்தையும்,உழைப்பையும், ஏன் தமிழ் சிந்தனையையும் மட்டுப்படுத்தக்கூடியதே அம்முறை.

பீட்சா, பர்கர் எல்லாம் உணவு தான் ,சாப்பிட்டால் பல் சுலுக்குவதில்லை, ரொம்ப எளிதாக சமைக்கக்கூட தேவையில்லாமல் ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே கொண்டு வந்திடுவாங்க, இன்னும் கொஞ்ச நாள் போனால் சந்தை பிடிக்க ஊட்டிவிட்டுக்கூட போவாங்க!!!, அடடே ரொம்ப எளிதாக இருக்கே என மூன்று வேளையும் சாப்பிடக்கூட நமக்கு ஆசையாக இருக்கலாம்,ஆனால் அதையே மூன்று வேலையும் முக்கினால்'ஜங்க் புட்"உடம்புக்கு ஒத்துக்காது தவிர்க்கணும் என மருத்துவர்கள் முதல் பொதுவான உடல்நல விரும்பிகள் வரை சொல்வதேன்?

எனக்கென்னமோ ஆசானுக்கு டாம்,டேப் ,டாஸ்கி முறையில் ஶ்ரீலிபியில் தட்டச்சு செய்து புத்தகம் உருவாக்கி கொடுப்பவர் "ஏமானே ,ஒரு பக்கத்துக்கு கொஞ்சம் பைசாவ கூட்டிக்கொடுங்க , விலைவாசிலாம் ஏறிப்போச்சுங்க ஏமானேனு"கேட்டிருப்பாரோ, என்னவோ?, எனவே எதுக்கு இந்த முறைலாம் பேசாம "தமிங்கிலீஷ்"தட்டச்சு போலவே கற்பது முதல் எல்லாத்தையும் மாத்திட்டால் பதிப்பகத்துறையிலும் தமிங்கிலீஷ் முறையே முழுக்க பயன்ப்பாட்டிற்கு வந்திடும் ,அப்பாலிக்கா நாமே தெனம் 10 பக்கம்னு தட்டச்சு செய்து  ஒரு 500 பக்கம் பொஸ்தவத்த வெளியிட்டுவிடலாம் காசு மிச்சம் ஆகிடும்னு நினைச்சிருக்கலாம் , கணக்கு பண்ணாமல் எதுலவும் கமிட் ஆக மாட்டார் நம்ம ஏமான் அவ்வ்!

வேகமாக சோர்வின்றி,நிறைய தட்டச்சு செய்ய வேண்டுமெனில் தமிழ் -99 முறையே சிறப்பானது, அதுக்குறித்து மேலும் அறிய,

சுட்டிகள்:

# http://tamil99.org/

# http://blog.ravidreams.net/tamil99/

# http://blog.ravidreams.net/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

ஒரு முழுமையான மொழி என்பது எழுத்துருவும், வாசிப்பும்(பேச்சு ,ஒலி) எனக்கொண்டிருக்க வேண்டும், எனவே அதில் சீர் திருத்தம் என செய்யப்பட்டால் ,இரண்டுக்கும் நன்மை பயக்க வேண்டும்,ஒரு மொழிக்கென சிறப்பாக தனித்து உருவாகியுள்ள எழுத்தை அழித்துவிட்டு செய்ய முற்படும் சீர்திருத்தம் மேம்பாடே அல்ல ,பின்நோக்கி செல்வது ஆகும்,

 ஒரு மொழி என்பது முதலில் ஒலி வடிவாக தோன்றி பின்னர் ஒலிக்குறிப்புக்கு "வடிவக்குறிப்பாக"எழுத்துருப்பெறும், இவ்வாறு நிகழ பலக்காலம் ஆகும். ஒரு மனிதக்கூட்டம் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்து புழங்கி வந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும், நாடோடி மொழிகளுக்கே எழுத்து வடிவம் இல்லாமல் , ஒலிவடிவத்தில் இருக்கும், அப்படி எழுத நினைத்தாலும் சென்ற இடமெல்லாம் உள்ள எழுத்தில் எழுதிக்கொள்ளத்தான் முடியும்,தமிழ் நீடித்து நின்று வளர்ந்த மொழி மண்ணோடும், கலாச்சாரத்தோடும் இணைந்த மொழி, தமிங்கிலீஷில் எழுதினால் அம்மொழி தமிழ் மண்ணுக்கு சொந்தமென சொல்லும் உரிமையை தான் இழக்க நேரிடும்!

தமிழ் மொழியில் நீட்டலும் ,மழித்தலும் செய்து சீர்த்திருத்தம் செய்ய நினைத்தால் இம்மொழியின் "உட்க்கூறுகளை"கொண்டு தானே செய்ய வேண்டுமே ஒழிய ,இன்னொரு மொழியின் உட்க்கூற்றினை பிடுங்கி இங்கே நடுவதல்ல!

ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற விட்டாலும் பின்னர் கைவலிக்குறைக்கும் முறை, ஆரம்பத்தில் இதுல கொஞ்சம் நாள் வண்டி ஓட்டிவிட்டு , அப்புறம் மறந்துப்போச்சேனு விட்டுப்புட்டேன், இனிமே ஆசான் செயமோகர் புண்ணியத்துல மீண்டும் தமிழ் -99 கரைக்கு ஒதுங்கிடலாம்னு பார்க்கிறேன் அவ்வ்!
------------------------------

தமிழ் மொழியின் அச்சு வரி வடிவ வரலாறு!

இப்போ கொஞ்சம் பழங்கதையும் பார்ப்போம்,

#  இந்தியாவுக்கு கடல் வழி கண்டுப்பிடிச்சு வந்த முதல் ஐரோப்பியரான வாஸ்கோடகாமா  கி.பி 1498 இல் கோழிக்கோட்டிற்கு வந்தார். வாஸ்கொட காமாவுக்கு வழி ஒன்னும் தானா தெரியலை ,அப்போ மலபார் பகுதியில் இருந்து ,அரேபியா வழியா போன ஒரு இஸ்லாமிய வியாபாரி தான் , எங்கோ நடுவில் கடல்பயணத்தின் போது ,வாஸ்கோடகாமை சந்தித்து வழிக்காட்டி உதவியபடியே சொந்த ஊருக்கும் திரும்பினார்னும் சொல்வாங்க.

எப்படியோ வந்து சேர்ந்த அவர் சும்மா ஒன்னியும் வரலை வரும் போதே மொழி வல்லுனர்கள் எல்லாம் கூட்டாந்தார் ,அவங்கலாம் இந்திய மொழிய ஆராய்ந்து கத்துக்க ஆரம்பிச்சாங்க ,அப்படிக்கத்துக்கிட்ட மொத இந்திய மொழியே "மலபார்"என அப்பொழுது சொல்லப்பட்ட மலபார் தமிழ் தான்.

அதுக்கு காரணம் கோழிக்கோடு பகுதில கரையேறியது,ஆனால் அதே நேரம் கோவாவிலும் ஒரு கூடாரம் போட்டாச்சு.

படம்:



St Francis Church கி.பி.1510இல் கட்டப்பட்டது இங்கு தான் கி.பி.1524 இல் இறந்த வாஸ்கோட காமாவின் உடல் புதைக்கப்பட்டு, பின்னர்,கி.பி 1538இல் தோண்டியெடுக்கப்பட்டு போர்ச்சுகல்லுக்கே மீண்டும் கொண்டு செல்லப்பட்டது, இப்பொழுது ஒரு நினைவு மண்டபம் மட்டும் உள்ளது.

மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்:
சுட்டி:

http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church


(தம்பிரான் வணக்கம் அட்டை-வலப்பக்கமா குந்திக்கிறவர் தான் ஹென்றி)

Henrique Henriques (1520-1600) என்ற போர்ச்சுக்கீசிய மொழி ஆய்வாளர் , தமிழை கத்துக்கிட்டு , போர்ச்சுகல்- தமிழ் அகராதிய ,(Cartilha – First Tamil book 1554) லத்தின் வரிவடிவில் சிறு புத்தகமாக கி.பி 1554 இல் லிஸ்பனில்  Vincente de Nazareth, Jorge Carvalho and Thoma da Cruz ஆகியோர் மூலம் அச்சடித்தார். இவர் அப்பொழுது தூத்துக்குடி அருகே ஒரு தமிழ் பல்கலைகழகம் கூட அமைக்க வேண்டும் என ,போச்சுக்கல் அரசுக்கு பரிந்துறையும் செய்தாராம்.




(Cartilha – First Tamil book 1554)

இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சு வடிவம் கண்ட முதல் மொழி தமிழ் ஆகும்.

அதன் பின்னர்,கி.பி 1556 இல் இந்தியாவின் முதல் அச்சகம் , தற்போதைய கேரளாவில், கொல்லம் அருகே அம்பளக்காடுஎனுமிடத்தில் அமைக்கப்பட்டது என்கிறார்கள். ஒரு சிலர் கோவாவில் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.

பின்னர் கி.பி 1557 இல் Juan Gonsalves. என்ற ஸ்பானிஷ் பாதிரி ,தமிழுக்கான முதல் "அச்சு எழுத்துக்களை செதுக்கி"உருவாக்கினார்.



இவ்வெழுத்துக்களை வைத்து Henrique Henriques  கொல்லத்தில் உருவாக்கப்பட்ட அச்சகத்தில்தம்பிரான் வணக்கம்என்ற முதல் தமிழ் (மலபார் தமிழ்)அச்சு புத்தகத்தினை அச்சிட்டு வெளியிட்டார்.

இந்நூல்"‘Doctrina Christam en Lingua Malauar Tamul "என இலத்தின் வரிவடிவில் வந்த நூலின் மொழிப்பெயர்ப்பு, கிருத்துவ வழிப்பாட்டு பாடல்கள் பிரேயர்கள் கொண்டது.


அதன் பின்னர் 1559 இல் மலையாள மொழியும் தமிழும்(மலபார் மலையாளம்) கலந்த Doctrina Christam’ alias ‘Kiricittiyani vanakkam’ என்று மொழிப்பெயர்க்கப்பட்ட நூலும் அச்சடிக்கப்பட்டது.

பின்னர் 1586 இல் தூத்துக்குடி புன்னக்காயலில் ஒரு அச்சகம் அமைக்கப்பட்டு ‘Flos Sanctorum’ (Punitar varalaru of 669 pages)புனிதர் வரலாறு என்ற நூல் அச்சடிக்கப்பட்டது, இந்நூல் தான்  முதன் முதலில் தமிழ்நாட்டில் அச்சடிக்கப்பட்ட நூல் ஆகும்.

(‘Flos Sanctorum’ (Punitar varalaru -தமிழ்,of 669 pages)


(‘Flos Sanctorum’ (Punitar varalaru of 669 pages,ஜெர்மானிய மொழிப்பெயர்ப்பு-1672)

நாடு பிடிக்க ,மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள் நினைச்சிருந்தால் இங்க இருக்கவங்களை தாஜா செய்து "லத்தின் வரி வடிவில்"எழுத,படிக்க சொல்லிட்டு போயிருக்கலாம்,ஆனால் அப்படி செய்யாமல் உள்ளூர் மொழியின் மொழி வரி வடிவத்தை மாற்ற விருப்பமில்லாமல் ,நம்ம ஊரு மொழிய கத்துக்கிட்டு,அதுக்கு"type casting "உருவாக்கி,புத்தகம் அச்சடித்து அப்புறமாத்தான் தன் சுயநலத்தையும் காட்டினான், ஆனால் நம்ம ஆசானோ இங்கனக்குள்ள குந்திக்கிட்டு 13 வருசமா டிரான்ஸ்லிட்டரேஷனில் டைப்படிக்கிறேன் நல்லாத்தான் இருக்கு , எல்லாரும் அப்படியே எழுதுங்கடானு"இவரே தமிழின் ஏகபோக பிரதிநிதி"போல தீர்ப்பு எழுதுறார் அவ்வ்!

என்ன கொடுமை சார் இது!
----------------------------

பின்குறிப்பு:

# தப்புத்தப்பா தமிழில் எழுதி தமிழைக்கொலை பண்ணிட்டேன் என பொங்கிட்டு  ,பிழை  திருத்தம் சொல்ல வராதிங்க ,ச்சும்மா தமாசுக்கு வேண்டும்னே மெட்ராஸ் பாஷைய கலந்துக்கட்டி எழுதினேன் :-))

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

# https://tidsskrift.dk/index.php/fundogforskning/article/view/1298/2076

# http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church

# http://karkanirka.org/2010/04/14/first_tamil_book/

# http://pazhayathu.blogspot.in/2009/11/first-printing-press-in-indiathe.html

# http://www.nathansholidayhome.com/sightseeing-in-and-around-fort-kochi/

மற்றும் தி இந்து, விக்கிப்பீடியா, & கூகிள் ,இணையத்தளங்கள்,நன்றி!
-------------------------

தமிழின் நவீனத்துவம்.

$
0
0
(அழகின் நவீனத்துவம் ...ஹி...ஹி)

"பாஷை , வெறும் சொற்களில் மட்டும் தங்கி நிற்கிற ஒன்றல்ல,சொற்கள் தம்முடைய ஸ்தூல நிலையில் வெறும் சப்தம் தான். அவற்றுக்குக் கிடைக்கும் அர்த்தம், அவற்றை உபயோகிக்கிற ஒப்புதல்களை இயல்புப்படுத்துதல் ஆகும்.

ஒரே சப்தம் ,ஒரு மொழியில் பெறும் பொருள் வழக்கை இன்னொரு மொழியில் கொள்வதில்லை, இதனால் தான் இயல்பான ஒப்புதல் என்பது"வழங்கப்படுதல்"என்ற நிலைமைக்கு சார்பாகி,"வழக்கொழிந்த சொற்கள்"என்று ஒரு பகுதியை பிரித்து விடுகிறது. இதன் தவிர்க்க முடியாமையை ஏற்காத உள்ளங்கள், உயிர்த்தன்மையற்றதாகவே இருக்கும்.

உபயோகம்தான் மொழியின் இயக்கம்,- உயிர்  - என்று கொள்ளும் போது ,"வலிந்து ஏற்கும் உபயோகத்தை அல்ல",இயக்கத்தின் இயற்கை ஏந்தி வரும் உபயோகத்தையே நாம் ஏற்கவேண்டும். வழக்கொழிந்த சொற்கள் இந்த இயக்கத்தின் இயற்கையினின்றும் பின் தங்கிவிட்டவை. இதனாலாயே ,பழந்தமிழ் சொற்களை மீண்டும் உபயோகிப்பதென்ற தனித்தமிழ் இயக்கம் ,இயற்கை தன்மையோ உயிரோ அற்று ,நவீன அனுபவங்களையும் சந்திக்க இயலாமல் நின்றுவிடுகிறது.

இயக்கத்தின் இயற்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதால், பிறமொழிச்சொற்கள் இன்றைய தமிழில் நவீனமான விஷயங்களையும் அனுபவங்களையும் சொல்ல உதவுகின்றன. தமிழின் நவீன - அதாவது இன்றைய காலத்தில்  - படைப்பியக்கம், வழக்கொழிந்த சொற்கள் மூலம் அல்ல ,இயங்கும் சொற்களின் மூலமாக மட்டுமே சாத்தியமாகிறது.

மொழியின் ஸ்தூலமான சொற்களின் விஷயத்தில் 'தூய்மை பாராட்டியவர்கள், சிந்தனை அனுபவம் என்பவற்றால் உந்தப்படவில்லை ,இவர்களது எழுத்துக்களில் ,பழம்பெருமை, பொதுப்புத்தியை மீறாத ஒழுக்கவியல், இவற்றை "அழகாக"கூறுவதாக எண்ணிக்கையாளப்பட்ட சொல்ஜோடனை ஆகியவைதாம் இருந்தன., இருக்கின்றன.

இவர்களது சமகாலத்திய சிருஷ்டி,கர்த்தாக்களிடமோ ,வாழ்வின் உண்மைத்தன்மைகளும் சமூகவரம்புகள், ஒழுக்கங்கள்,நீதி அநீதிகள் ஆகியவற்றை அனுபவசாத்தியத்தின் தளத்தில் நிறுத்திச்செய்கின்ற விசாரணைகளும் ,இவற்றை எவ்விதமான உள்ளம் சந்திக்கிறதோ, அதன் பாத்திர இயல்புக்கு ஏற்ற மொழிப்பிரயயோகத்தில் எழுதப்பட்டன.

கருத்தைப் பிரதானமாக வைத்துப் புதுமைப்பித்தன் எழுதியவை இந்தவகை இயக்கத்தின் சிகரமாகும். புதுமைப்பித்தனின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களது தமிழ் , இதனாலாயே ஜீவத்துடிப்புள்ள தமிழ் என்றாகிறது.

இன்னொரு புறம், பரவலான வாசகத்தேவைகளையும் வியாபாரத்தையும் இலக்காக்கி, "கல்கி"ரா.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எழுதியவை. ஆழமற்ற சில்லறைத்தளம் ஒன்றில் தமிழ் எழுத்தைச் செயல்பட  வைத்துள்ளன.இதை பத்திரிக்கைத்தமிழ் என்று அதன் உடனடிப்பரிவர்த்தனைக்காக ஏற்றுக்கொள்ளும் போதே, இதன் இயல்பான வெகுஜனத்தன்மையை இலக்கிய இயக்கத்தின் தன்மைகளிலிருந்து பிரித்துக் கண்டுக்கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வெளியீட்டைப் பொறுத்தவரையில் கூட தனித்தமிழ் ,சிருஷ்டி, வியாபாரம் என்ற மூன்று தளங்களும் சுத்தமாகப் பிரிந்து நிற்கின்றன. தனித்தமிழ் இயக்கத்தில் அரசியலின் பாமரத்தன்மையும், சிருஷ்டி இயக்கத்தில் முதிர்ந்து புடமிடப்பட்ட செம்மையும், வியாபார எழுத்தில் கவர்ச்சித்தன்மையும் , உணர்ச்சி வெளியீட்டை நிர்ணயித்துள்ளன.ஒரு வகையில் உணர்ச்சி வெளியீட்டுத் தளத்திலேயே முதன்மையாக இந்த மூன்று தமிழ்களின் குணங்களும் பிணங்க ஆரம்பித்து ,அனுபவம்,சிந்தனை, ஆகிய துறைகளில் இந்தப்பிணக்கு இவற்றிடையே நீடிக்கிறது என்றும் கூறலாம்.
-------------------

தமிழ்ப் பழமை வழிபாடு எவ்வளவுக்குப் பாமரத்தனமானதோ , அவ்வளவு பாமரத்தனம் தான் மேலுள்ள வகையான சமஸ்கிருத மனோபாவமும் இரண்டுமே இந்தியத்தின் சாபக்கேடான ஜாதியத்தில் வேருன்றிப்பிறந்தவை. எனது உனர்வின் நவீனத்துவம் இத்தகைய விஷநிலத்தில் இருந்து  விளைந்த ஒன்றல்ல. இந்த விஷநில விளைச்சல்களுக்கு நான் தனித்தமிழ் இயக்கத்தை விமர்சித்த பார்வை உபயோகமாகிவிட இதனால் இடமற்றுவிடுகிறது. எனது முன்னோடியான புதுமைப்பித்தனைப் பொறுத்தும் இதையே கண்டுக்கொள்ள வேண்டும். சமஸ்கிருத சநாதனத்துக்கு "உபயோகமாக"ஒரு வெளிப்படையான தீவிர நிலையாக என் நேர்ப்பேச்சுக்கள் தென்ப்பட்டுள்ளன.

--------------------------

ஒரு மொழியின் சிறப்பு ,அதன் உபயோகத்தைச் சார்ந்தது, கிரீசின் பரிபாலான காலத்தைத் தொடர்ந்து ரோம சாம்ராஜ்யத்தில், கிரீசின் மொழியான கிரேக்கம் தான் உயர்ந்ததாக கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த கணிப்பை புறந்தள்ளியவர்கள் ரோமின் லத்தீன் கவிஞர்கள், நாடகாசிரியர்கள், தொடர்ந்து ஐரோப்பாவில் பேக்கனின் காலம் வரை, லத்தீன் உயர்ந்த உபயோகங்களைப்பெற்றுள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் , லத்தீனையன்றிச் சுயமொழியையே ,சிருஷ்டிகளுக்கும் ,இதர படைப்புகளுக்கும் உபயோகிக்கிற விழிப்பு ஏற்படலாயிற்று .

இதன் அடிப்படை, சுய அனுபவத்தினை - தர்சனத்தை - தனது மன இயக்கத்துடன் நெருங்கித்துடிக்கிற ஒரு சுய மொழியில் தரும் இயற்கையாகும். ஆங்கிலத்தை ,பிரெஞ்சை, ஜெர்மனை ,ரஷ்யனை விட லத்தீன் உயர்வானது என்றோ லத்தீனை விட கிரீக் உயர்ந்தது என்றோ ஐரோப்பிய நகரங்களின் வாடகை ரூம்களில் லத்தீனியப்பூணூல் ,கிரேக்கப்பூணூல் அணிந்த சநாதனிகள் பேசிக்கொண்டு காலங்கழிப்பதை நாம் காண முடியாது. ஆனால் தமிழை விடச் சமஸ்கிருதம் உயர்ந்தது, தமிழ் காட்டுமிராண்டி பாஷை என என்று அவங்க பெரியாரே சொல்கிறாரே என்று கதை அளக்கும் நவீன சநாதனிகளை நான் கண்டிருக்கிறேன், - நமது பாரதத்துச் சென்னை நகர் வாடகை ரூம்களில் இவர்களது குழுக்கள் 'நவீன இலக்கிய இயக்கங்களாக"க்கூட முனைப்புப் பெற்றுள்ளன

ஒரு மொழியை விட இன்னொரு மொழி உயர்வானது என்று கூறுவதை விட மொழிகளின் உபயோக சாத்தியத்தைப்பற்றிப்பேசுவதே பொறுந்தும். தமிழ் இன்றைய மொழி , அதாவது நான் தமிழ் பழமைவாதத்தை நிராகரித்துக் கூறுவது இது.இன்றைய மொழி எனும் பொழுது, அது பழந்தமிழாக அன்றி ,"சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழியின் சொற்களைக்கூட ஜீரணித்துத் தமிழாக இயங்குகிறது"என்பதையே அர்த்தம் கொள்கிறேன். இந்த ஜீரணிப்புக்கு ஏற்றவகையாக, தனது பிரயோகக் கட்டுமானங்களைப்புதுப்பித்து நிற்கிற உரம் தமிழுக்கு இருக்கிறது; சமஸ்கிருதத்துக்கு இல்லை, உதாரணமாக அது இன்றைய அனுபவங்களைச் சரளமாக பரிவர்த்தனை செய்யக்கூடிய இயற்கை வளர்ச்சியை சமஸ்கிருதம் அடையவில்லை.

---------------------

அக உலக கலைஞர்கள்:

'அகநானூறு போன்ற துணுக்குக் கவிதைகளில் செய்யப்பட்ட மன உலகப் பரிசோதனைகள், தமிழிலக்கியத்தின் இடைக்கால இருளின் முன் மறுப்பட்டுவிட்டன. இன்று ஒரு புது விழிப்பு ஏற்பட்ட பிறகும், அது முழுதாக உணரப்படவில்லை ,காரணம், அந்த இடைக்காலத்தின் பின்பு வந்துள்ள தமிழ்ப்பண்டிதப்படிப்பு எதுவும் அந்த அக உலக ஓட்டத்தை எட்டவில்லை,எனினும் இயல்பிலேயே சுரணையுள்ள படைப்பாளிகள் அதை உணர்ந்துக்கொண்டார்கள்.

அதனால் தான் புதுமைப்பித்தன் அன்று மவுனியிடம் சொன்னார், 'அகநானூற்றின் மன உலகம் இந்தப்பண்டிதர்களுக்குத் தெரிந்திருந்தால் இன்று உன் கதைகளையும், என் கதைகளையும் புரியவில்லை, தெளிவில்லை என்று இவர்கள் சொல்ல மாட்டார்கள்.

.....

தமிழ் பண்டிதர்கள் போனாலும் போனார்கள் ,இன்று இங்கிலீஷ் பண்டிதர்கள் அவர்கள் இடத்தைப்பிடித்துக் கொண்டார்கள். பாஷை என்னவானாலும் பண்டிதர் பண்டிதர் தான் என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள். இங்கிலீஷ் இலக்கிய பரிச்சயம் என்ற போர்வை ,இவர்களது குறுகிய பார்வைகளுக்குப் போர்வையிடுகிறது. இங்கிலீஷ் மணமே தெரியாத வெற்றிலை கடைக்காரர்களும், ஜவுளிக்கடைக்காரர்களும் உணர்ந்து ரஸிக்கிற எழுத்தை ,இவர்கள் தங்கள் பாண்டித்யத்தின் மேடையில் நின்று விசிறிவிடுகிறார்கள்.

--------------------

மேற்சொன்ன எழுத்து விவரணங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் அடியேனது அல்ல ...ஹி...ஹி அதான் எங்களுக்கு தெரியுமே ... உனக்கு விக்கிப்பீடியாவை காப்பி அடிச்சு மொழிப்பெயர்த்து எழுதத்தானே வரும், இது போல முதல் தரமான இலக்கிய சம்பாஷணைகள் எல்லாம் செய்ய வராதேனு ,மனசுக்குள்ள நீங்க சொல்லுற அந்த "மைண்ட் வாய்ஸ்'எனக்கும் கேட்குது அவ்வ்!

(கவிஞர்.தருமு சிவராம் என்கிற பிரமீள்)

சுமார் கி.பி 1960 களில் எழுத்தாளர் மற்றும் படைப்பாளியுமான மறைந்த, சி.சு.செல்லப்பாஅவர்கள் நடத்திவந்த "எழுத்து "என்ற இலக்கிய தரமான தமிழ் பத்திரிக்கையில் நவீன புனைவாளர்,கவிஞர், கட்டுரையாசிரியர் ,இலக்கிய விமர்சகருமான  மறைந்த"தருமு அரூப் சிவராம்"என்கிற பிரமீள் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு "தமிழின் நவீனத்துவம்"என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது, வெளியீடு நற்றிணை பதிப்பகம், (விலை 140 ரூ).



தருமு அரூப்  சிவராம்(கி.பி 1939-1997) , இலங்கை திருகோணமலையில் பிறந்து , தமது 20 ஆம் வயதுகளின் தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு வந்து , நவீன தமிழ்ப்படைப்புலகில் சல சலப்பை உண்டு பண்ணும் பல படைப்புகளை தந்தவர்.  இக்காலத்திலும் பின்நவீனத்துவ படைப்பாளிகளின் ஆதர்சமாக விளங்கக்கூடியவர். நவீன தமிழிலக்கியத்தின் நடமாடும் துன்பியல் சின்னமாக அக்காலத்தில் அலைந்து திரிந்து கி.பி 1997 இல் வேலூர் அருகே கரடிக்குடி எனும்  இடத்தில் அநாதரவாக  இயற்கை எய்தினார்.

சு.ரா அவர்களின் சமகாலத்தவர், நட்பாக இருந்து ,பின் பூசலாக மாறி போட்டுக்கொண்ட இலக்கிய சண்டைகள் பற்றி எழுத்துலகில் மர்மக்கதை போல ஒரு அத்தியாயம் இன்னும் ஓடிக்கொண்டிருப்பது சிறப்பு! இந்த கட்டுரையில் கூட "ஜவுளிக்கடை முதலாளிகள்'என ஊமக்குத்தாக குத்தியிருப்பது சு.ராவையே :-))

எதுக்கு இந்த பழங்கதைய இப்போ பேசிட்டு ,இதெல்லாம் இலக்கியவியாதிகள் சமாச்சாரமாயிற்றே ... வடை சுடுற எடத்தில வவ்வாலுக்கு என்ன வேலைனு கேட்கலாம் , மேட்டர் இருக்கே,  தற்காலத்தில் தமிழை நவீனப்படுத்தவும் ,சாஸ்வதமாக நிலைத்திருக்க செய்யவும் லத்தின் லிபியில் தமிழ் எழுதப்பட வேண்டும் போன்ற செயமோகத்தனமான ஆலோசனைகளுக்கு , இக்கட்டுரையில் ஒரு பதில் உள்ளது, எனவே தான் அடியேன் சிரமம் பாராது அந்நூலில் இருந்து எடுத்தாண்டுள்ளேன்( டேய் ...காப்பி அடிச்சுட்டு என்னா பேச்சு பேசுற அவ்வ்)

# தருமு சிவராம் அவர்கள் , ஆரம்பத்தில் தனித்தமிழ் இயக்கத்தில் ஆர்வமுடன்  பங்கேற்றுவிட்டு , தனித்தமிழ் என்பது சிருஷ்டி எழுத்துக்களுக்கு தடையாக இருக்கும் என பின்னர் முடிவெடுத்து , தனித்தமிழ் இயக்கத்தினை விமர்சித்து அதற்கு எதிராக செயலாற்றியவர், அப்போ தமிழின துரோகியானு அவசரப்பட்டு 'ரப்பர் ஸ்ஸ்டாம்ப்"எடுக்காதிங்க அவ்வ்!

 தமிழ் புதிய சொற்களை சுவீகரித்துக்கொள்ள வேண்டும், அப்படி இருந்தும் தமிழ் - தமிழாகவே நிலைத்திருக்கும் , தமிழே சிறப்பான நவீனப்படைப்பிலக்கிய மொழி என்பதே அவரின் பார்வையாகும்.

அவரின் பலக்கருத்துக்கள் சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும் இருக்கும், இக்கட்டுரைத்தொகுப்பிலும் அத்தகைய முரண்கள் உள்ளன.

# நவீன படைப்பாளிகள் அக உலகத்தர்சனத்தின் அடிப்படையில் எழுதுபவர்கள், மொழி அடிப்படையில் வெற்று வார்த்தை கோர்வைகளாக பார்க்காமல் 'அவற்றில் உள்ள "மீ மொழி" (meta language)யை வாசகன் கண்டுக்கொண்டால்  அக உலக தர்சனம் கிட்டும் என்கிறார். அக உலக தர்சனத்தினை காண கைய புடிச்சு அழைத்து செல்வது மட்டுமே எழுத்தாளனின் வேலை ,வாசகனுக்கு அங்கே என்ன அனுபவம் கிடைக்கும், தர்சனத்தின் முடிவென்ன என்பதெல்லாம் அல்லவாம்!

ஆனால் அக உணர்வுகளின் வெளிப்பாட்டை "பழந்தமிழ் அதாவது தனித்தமிழ்'வெளிப்படுத்தாது என்பதே அவரின் குறைப்பாடு,ஆனால் புதுமைப்பித்தன் ,மவுனியிடம் ,அகநானூற்றின் அக உணர்வு நிலையை தான் உதாரணம் காட்டி நவீன எழுத்தாளர்களின் அக உணர்ச்சி படைப்புக்களை ஒப்பீட்டு பேசியுள்ளார் எனக்குறிப்பிடுகிறார், எனவே பழந்தமிழிலும் அக உலக தர்சனம் காட்டக்கூடிய எழுத்துக்கள் இருந்துள்ளது,ஆனால் நம்ம நவீன எழுத்தாள மக்களுக்கு தான் "பழந்தமிழ் சொல்லறிவு"மட்டுப்பட்டு விட்டமையால் , அக உலக பார்வையில் பழந்தமிழில் எழுத இயலாமல் போச்சு, ஆகவே குறைபாடு என்பது மொழியில் இல்லை அதனை பிரயோகிப்பவரிடம் தான் உள்ளது என்பதை எளிதாக உணரலாம்.

# 1960 களில் அக உலகப்பார்வையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எழுத்துக்களே மேன்மையானது , மற்றவை எல்லாம் சில்லறை வியாபார எழுத்துக்கள் என குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார். கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தியின் எழுத்துக்களை எல்லாம் அப்படித்தான் ஒதுக்கி தள்ளுகிறார்.

இதில் கவனிக்கத்தக்கது என்னவெனில் இருவருமே தனித்தமிழ் என்ற "கான்செப்ட்"டை விரும்பாதவர்கள். ஆனால் தருமு சிவராமுக்கு கல்கியின் எழுத்துக்கள் 'வர்த்தக பரிவர்த்தனை ,சில்லறை எழுத்துக்களாகவே"பட்டிருக்கு.

ஆனால் தருமு சிவராம் ,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தினை விட தமிழ் மேலான மொழி எனவும் கருத்தாக்கம் கொண்டவர், இதனை அவரது விமர்சனக்கட்டுரைகளில் பல இடங்களில் காணலாம்.

நிகழ்காலத்தில் செயமோகர் போன்றவர்களும் தமிழில் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது , எனவே இலத்தின் எழுத்துருவில் பதிப்பிக்கணும் என்கிறார், உண்மையில் வாசிக்கும் பழக்கம் , புத்தக விற்பனை குறைவாக இருக்கானா ,அப்படிலாம் இல்லை, பல நூல்கள் நல்லாத்தான் விற்பனை ஆகிட்டிருக்கு. அப்புறம் ஏன் இப்படியான புலம்பல்கள் என்றால் ,எல்லாம் அவரவர் படைப்புக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்தே "கணிப்பு"சொல்கிறார்கள், போதாக்குறைக்கு அதை வச்சே ஒட்டு மொத்தமாக தமிழுக்கே ஒரு புதிய மாற்றம் வேண்டும் என்கிறார்கள்.

தருமு சிவராமால் சில்லறை எழுத்து என புறம் தள்ளப்பட்ட கல்கியின் படைப்புகள் இன்றும் புத்தக சந்தையில் அதிகம் விற்பனையாகி ,தமிழ் வாசகர்களின் இடையே வாசிக்கும் பழக்கத்தை தூண்டுகிறது என்பது மிக ஆச்சர்யமான ஒரு முரண் நகை.



சில்லறை எழுத்தோ அல்லது அக உலக உணர்ச்சிகளை காட்டும் உன்னத சிருஷ்டி எழுத்தோ , ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் தமிழ் படைப்புலகில் இருந்துக்கொண்டுதானுள்ளது, அதனதன் சந்தைக்கு எவ்வித பங்கமும் இல்லை, ஆனால் இந்த அறிவு சீவி எழுத்தாளர்கள் தான் எல்லாக்காலத்திலும் ஏதேனும் ஒரு முறைப்பாட்டுடன் புலம்பி வந்துள்ளார்கள், அது இன்றும் செயமோகனத்தனமாக தொடர்வது காலத்தின் கட்டாயம் அவ்வ்!

நாம் கூட ,பொன்னியின் செல்வன் முழுத்தொகுதி - 240 ரூ (மலிவுப்பதிப்பு), சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - 240 ரூ(மலிவுப் பதிப்பு)ஆகியவற்றை புத்தக சந்தையில் வாங்கினேன், ஒவ்வொரு புத்தகமும் சுமார் 500 பக்கங்கள், அதுவும் ஏ-4 அளவில், கெட்டி அட்டையுடன் உள்ளது. கொடுத்த காசுக்கு மதிப்பு ,மீண்டும் படிக்கவும் தூண்டுகிறது.  எனவே தமிழன்(ஹி..ஹி அடியேனே) இப்பவும் தமிழில்  படிக்க ஆர்வமாத்தான் உள்ளான் , அவனுக்கு புரியும் படியும், நியாயமான விலையிலும் புத்தகங்கள் வந்தால் , ஆர்வத்துடன் வாங்கிப்படிக்கவே செய்வான்,ஆனால் அதை எல்லாம் விட்டுப்புட்டு தலகாணி சைசில் புரியாத வார்த்தை ஜோடனைகளில் எழுதிவிட்டு , 500 ரூபானு விலை வச்சால் எப்படி வாசிக்க முன்வருவான்?



எனவே உத்தம படைப்பாளிகள் தங்களுக்கான சந்தை என்ன , வாசகர்கள் யார் என உணர்ந்து அதற்கேற்ப படைப்புகளை செம்மையாக வழங்க முனைப்புக்காட்டினால் படைப்புலகில் அழியாப்புகழ் கிடைக்கும் என்பதே யதார்த்தம்!
-----------------------------------------

பின்குறிப்பு;

# எலக்கியம் பத்திலாம் அதிகம் பேசாமல் வாசிக்க மட்டுமே விரும்புவேன் ,ஆனால் இந்த எலக்கியவியாதிகள் கடைசீல என்னையும் எலக்கியம் பேச வச்சிடுறாங்களே அவ்வ்!

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கிப்பீடியா, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!

# கவிஞர் பிரமீள் குறித்து இணையத்தில் காணக்கிடைத்த சில கட்டுரைகளின் சுட்டிகள்,

# http://maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=158&Itemid=34

# http://solvanam.com/?p=24488

# http://www.blog.beingmohandoss.com/2007/10/blog-post_30.html

# http://ravisrinivas.blogspot.in/2008/07/blog-post_03.html

நன்றி!


கற்றது தமிழ்-6

$
0
0
(சூடானம்மிணி...ஹி...ஹி!)

2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவாக்கப்பட்டு பயன்ப்பாட்டிலும் இருந்துள்ளன,காலப்போக்கில் இயல்பு வாழ்க்கையில் மக்களின் அலட்சியத்தினால் பலச்சொற்கள் பயன்ப்படுத்தாமல் விடப்பட்டதால் ,வழக்கொழிந்து போன நிலையில் , தமிழில் பல சொற்கள் இல்லை எனவே  அவற்றை எல்லாம் பிற மொழியில் இருந்து கடன் வாங்க வேண்டிய நிலை நிலவுவது போன்று ஒரு மாயை உருவாகிவிட்டது, எனவே பழந்தமிழ் சொற்கள் அல்லது அக்கால சொற்களை முடிந்தவரையில் தேடிப்பார்த்து தொகுக்கலாம் என அவ்வப்போது இணையத்தில் துழாவி வருவது வாடிக்கை ,அப்படி கிடைக்கப்பெற்ற சில அக்கால சொற்களின் தொகுப்பை இப்பதிவில் காணலாம்.

சூடாமணி நிகண்டு:

வீரமண்டல புருடர் என்ற சமணத்துறவி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் பல தமிழ்ச்சொற்களுக்கு உள்ள இணைச்சொற்களை தொகுத்து சூடாமணி நிகண்டு என்ற நூலாக வெளியிட்டுள்ளார். நிகண்டு என்பதற்கு உரிச்சொல் பனுவல் என்ற பெயரும் உண்டு, இவை அகரமுதலிகளுக்கு முன்னோடியாக கருதப்படுகின்றன. ஒரு சொல்லுக்கு பலப்பொருள் விளக்கம் அளிக்க வல்ல நூலாகும்.

சூடாமணி நிகண்டில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளின் பல்வகை பெயர்களை மட்டும் தொகுத்து "தமிழம்"என்ற இணையத்தளத்தில் வழங்கியுள்ளார்கள், மேலும் புதிய சொற்கள்,பொதுப்பெயர்கள்,படங்கள் இணைத்து அதனை மேலும் மேம்படுத்தி  பகிர்ந்துள்ளேன்.

மூல நூல் புராஜெக்ட் மதுரை இணையத்தளத்திலும் உள்ளது.

விலங்கின் பெயர்த் தொகுதி மற்றும் அவயங்கள் பெயர்கள்:

#சிங்கத்தின் பெயர்
(சிங்கம் டபுளாவும் வரும்!)

வயப்போத்து, சீயம், அறுகு, கேசரி, பூட்கை, மிருகராசன், வயமா, மடங்கல், கண்டீரவம், பஞ்சானனம்.

யானையாளியின் பெயர்

யாளி, அறுகு, பூட்கை

#புலியின் பெயர்


(கணக்குல படிக்காமலே பட்டம் வாங்கியவர்)

வல்லியம், வயமா, சித்திரகாயம், வெல்லுமா, உழுவை, பாய்மா, வியாக்கிரம், தாக்கு, வேங்கை, குயவரி, சார்த்தூலம், புல், புண்டரீகம், கொடுவரி,

#யானையின் பெயர்

(ஆனை ஆனை அழகர் ஆனை)

தும்பி, மாதங்கம், தூங்கல், தோல், கறையடி, எறும்பி, உம்பல், வாரணம், புழைக்கை, ஒருத்தல், வல்லிலங்கு, நாகம், கும்பி, நால்வாய், பூட்கை, குஞ்சரம், கரேணு, அத்தி, வேழம், உவா, கரி, கயம், களிறு, கைம்மா,
சிந்துரம், வயமா, இபம், புகர்முகம், தந்தி, மதாவளம், தந்தாவளம், வழுவை, ஆம்பல், மந்தமா, மருண்மா, மதகயம், போதகம்,

யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்

யூதநாதன்

(தலைவா! (ஹி...ஹி ஆனால் பெரும்பாலும் யானைக்கூட்டத்துக்கு பெண் யானைகள் தான் தலைமையாம் அவ்வ்)

மதகயத்தின் பெயர்

மதோற்கடம்

யானைவாலின் பெயர்

தாலவட்டம்

யானைவானுனியின் பெயர்

வேசகம்

யானைமுதுகின் பெயர்

மஞ்சு

யானை மத்தகத்தின் பெயர்

மதகம், கும்பம்,

யானை மதம் பாய்சுவட்டின் பெயர்

கரடம்

யானைக் கைந்நுதியின் பெயர்

புட்கரம்

யானைமதத்தின் பெயர்

ஸ்ரீ கடம், கடாம், தானம்

யானைக்கொம்பின் நடுவின் பெயர்

பிரதிமானம்- இரு தந்தங்கள் இடையே தெரியும் முகத்தின் அளவு.

யானைத் தந்தத்தின் பெயர்

கோடு, எயிறு

யானைக்கடைக்கண்ணின் பெயர்

நிரியாணம்

யானைச் செவியடியின் பெயர்

குளிகை

யானைக் கவுளின் பெயர்

கதுப்பு

யானைத் துதிக்கையுமிழ்நீரின் பெயர்

விலாழி

யானைப் பல்லடியின் பெயர்

கரீரம்

யானைமுன்காலின் பெயர்

காத்திரம்

யானைப்பின்காலின் பெயர்

அபரம்

யானைத் துதிக்கையின் பெயர்

தொண்டை, தொண்டலம், சுண்டை

யானைப் பிடியின் பெயர்

வடவை, அத்தினி, கரிணி

யானைத்திரளின் பெயர்


(போவாமா ஊர்கோலம் ...காடெங்கும்...)
கடகம்

#யானைக்கன்றின் பெயர்

கயந்தலை, போதகம், துடியடி, களபம், கயமுனி

யானைபடுகுழியின் பெயர்

பயம்பு

யானை நோயின் பெயர்

பாகலம்

##குதிரையின் பெயர்


(சிட்டாப்பறக்கும் செவலைக்குதிரை)

பரி, தூகம், பாடலம்., கிள்ளை, பாய்மா, துரகதம், வாசி, உன்னி, தூசி, கந்தருவம், கற்கி, அரி, அயம், இவுளி, மா, அச்சுவம், புரவி, கோரம், குரகதம், கோணம், கொக்கு, கொய்யுளை, சடிலம், கோடை
கத்துகம், கனவட்டம், பத்திரி, துரங்கம், குந்தம், அத்திரி,

குதிரை மயிரின் பெயர்

மேசகம், சுவல், குசை

குதிரைக்குளம்பின் பெயர்

குரம், குரச்சை

குதிரை போமார்க்கத்தின் பெயர்

மாதிகம்

#பசுவின் பெயர்
(புல்லுக்கொடுத்தா பாலு கொடுக்கும்)

கூலம், கோ, குடம், சுரபி, ஆ, நிரை, தேனு, பெற்றம்

தெய்வப்பசுவின் பெயர்

கபிலை, தேனு

மலட்டுப்பசுவின் பெயர்

வசை

ஈன்றபசுவின் பெயர்

வற்சலை

பசுவின் கன்றின் பெயர்

வற்சம்

ஒரீற்றுப்பசுவின் பெயர்

கிட்டி

நற்பசுவின் பெயர்

பத்திரை

பசுவின் முலைப் பெயர்

சுரை

உதைகாற்பசுவின் பெயர்

சுதை

முலை மடியின் பெயர்

செருத்தல், ஆபீனம்

பசுக்கூட்டத்தின் பெயர்



நிரை, தொறு, காலி, கோட்டம், காலேயம்

எருத்தின் பெயர்
(முன்னால பாயும் முரட்டுக்காளை )

பாறல், சே, பெற்றம், பூணி, பாண்டில், கொட்டியம், இறால், ஏறு, மூரி, புல்லம்,

எருத்தின் முரிப்பின் பெயர்

இமில்

பேரெருத்தின் பெயர்

பாறல், பகடு, தூர்வகம்

இடபத்தின் பெயர்

ஏறு, உக்கம், நரை, நந்தி, கூளி

பொதியெருத்தின் பெயர்

தூர்வகம், துரியம்

எருமையின் பெயர்

காரான், வடவை, மேதி, சைரிபம், கவரி, காரா, மூரி, மகிடம்

எருமையாண் பெயர்

கடா, பகடு

மலட்டெருமையின் பெயர்

மை

#ஆட்டின் பெயர்


(ஆத்தா ஆடு வளத்தா பேரு வைக்கலையே அவ்வ்- ஜமுனாபாரி ஆடு)

அருணம், செம்மறி, மோத்தை, அசம், உதள், உடு, கொச்சை, துருவை, ஏழகம், வற்காலி, துள்ளல், பள்ளை, வெள்ளை, வருடை, மேடம், கடா, மை, மறி, வெறி, கொறி, சாகம், புருவை, தகர்

செம்மறியாட்டின் பெயர்

துருவை, மை, கொறி

செம்மறியாட்டாணின் பெயர்

தகர், கடா, திண்ணகம், ஏழகம், கம்பளம்

ஆட்டுக்குட்டியின் பெயர்

குட்டன், சோரன், மறி, பறழ்

வெள்ளாட்டின் பெயர்

வெள்ளை

வெள்ளாட்டாணின் பெயர்

செச்சை, சாகம், மோத்தை

#வரையாட்டின் பெயர்




(தமிழ்நாட்டு "தேசிய விலங்கு")

சரபம், வருடை,கேளையாடு,சருகு மான்

#பன்றியின் பெயர்

கேழல், அரி, குரோடம், கிரி, கிடி, கிருட்டி, ஏனம், மோழல், இருளி, வல்லுளி, களிறு, மைம்மா, கோட்டுமா, போத்திரி, வராகம், கோலம், குகரம், எறுழி

#முட்பன்றியின் பெயர்

சல்லியம், முளவுமா, எய், சல்லகம்



(கவுண்டரின் வளர்ப்பு!)

*முட்பன்றி முள்ளின் பெயர்

சலம், சவலம்

#கரடியின் பெயர்
(இங்கே யாருப்பா டீ.ஆர் வரச்சொல்லு ஒரு கைப்பார்க்கிறேன்)

பல்லுகம், உளியம், எண்கு, பல்லுகம், எலு, பல்லம், குடாவடி


#மானின் பெயர்


(அந்த "மானை"ப்பாருங்கள் அழகு!)

அரிணம், சாரங்கம், நல்லி, உழை, பிணை, குனம், மிருகம், மறி, குரங்கம், ஏணம்

#கவரிமா(ன்) பெயர்.


"மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்"


மயிர் நீப்பின் உயிர் வாழா "கவரிமா"எனத்தான் வள்ளுவர் சொல்லி இருக்கார் ,மான் என்றல்ல,கவரிமான் என ஒரு மானே இல்லியாம்.

கவரி - மயிர், மா- பெரிய விலங்கு.

இதன் அடிப்படையில் "கவரி"மா என சொல்லப்படுவது திபெத்திய "யாக்"வகை மாடு ஆகும்.வயதாகி மயிர் உதிர்ந்துவிட்டால் குளிர் தாங்காமல் யாக் இறந்துவிடும்,அதை தான் திருவள்ளுவர் ஒப்பிட்டு இருக்கனும். வள்ளுவர் திபெத்துக்குலாம் போயிருப்பாரா?

(எந்த குறளும் எனக்கு தெரியாது "குளிர்"தான் தெரியும் அவ்வ்)

படகம், பட்டம், மனமா, எகின்

#சாமரத்தின் பெயர்

பவரி, சீகரம், கவரிமா(ன்) வகை


#காட்டுபசு,எருதுவின் பெயர்




கவயமா, கவயல்,ஆமா,கடமா,காட்டா,மரை,காட்டேணி,காட்டுப்போத்து.


#கத்தூரிமானின் பெயர்


(இந்திய கஸ்த்தூரி மான்)

துருக்கம், நானம், மான்மதம், நரந்தம்.

(இமயமலை கஸ்த்தூரி மான்)


(கஸ்தூரி மான்குட்டி கண்ணீரை ஏன் சிந்துதாம்?)

வாசனை திரவியம் கஸ்தூரிக்காக பெருமளவு வேட்டையாடப்பட்டுவிட்டதால் அழியும் நிலையில் உள்ள அரிய இனமான் ஆக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

#கலைமானின் பெயர்(blackbuck)





கரும் இரலை, வச்சயம், புல்வாய், கருமான்

#  வெள்ளை வெளிமான் பெயர்




வெள்ளை இரலை,புல்வாய்,ஏணம்,சூனம், உழை மான்.

#கழுதையின் பெயர்

வாலேயம், கர்த்தபம், காளவாய், அத்திரி, கோகு, வேசரி, கரம்

#கோவேறு கழுதையின் பெயர்


(கற்பூர வாசனை தேடுறரோ?)

வேசரி

#ஒட்டகத்தின் பெயர்


(இந்தியனெல்லைப்பாதுகாப்பு ராணுவத்தின் ஒட்டகப்படை)

தாசேரம், அத்திரி, நெடுங்கழுத்தல்

#நரியின் பெயர்

(ஓடுற(வேக) நரியில ஒரு நரி குள்ளநரித்தான் ஆ ஜிங் ஜக்கா ஜிங்!)

ஒரி, கோமாயு, ஊளன், ஒண்டன், இகலன், சம்பு, பூரிமாயன், குரோட்டா, சிருகாலன்

#கீரியின் பெயர்

காத்திரி, நகுலம், தீர்வை

#குரங்கின் பெயர்

வலிமுகம், கடுவன், வானரம், அரி, மந்தி, பிலவங்கம், கோகிலம், கோடாரம், யூகம், மர்க்கடம், நாகம், கவி,

கருங்குரங்கின் பெயர்

காருகம், யூகம்


#அனுமன் குரங்கின் பெயர்




முசு,ஒரி, கோலாங்கூலம், மைம்முகன், கள்வன், கலை

#நாயின் பெயர்


(கொஞ்சம் ஸ்சூனு விரட்டிட்டு போறது  அவ்வ்)

சூரன், முடுவல், பாசி, புரோகதி, சுனகன், குக்கல், கூரன், எகினன், அக்கன், குரைமுகன், ஞமலி, ஞாளி, சாரமேயன், கணங்கன், சுவர்

பெண்ணாயின் பெயர்

முடுவல்

செந்நாயின்(cuon alpinus) பெயர்

(செவப்பா இருக்கிறதால பொய் சொல்லாது அவ்வ்)

விருகம், கொக்கு

#பூனையின் பெயர்


(வேட்டையில் காட்டுப்பூனை)

வெருகு, அலவன், ஓதி, விடாரகம், விலாளம், பூசை, மார்ச்சாலம், பாக்கன், இற்புலி


#நாவியின் பெயர்

மறுவி



#ஒந்தியின் பெயர்


,பச்சோந்தி,சாயானதம், சரடம், காமரூபி, தண்டு, ஓமான், ஓதி, கோம்பி, முசலி, ஒத்தி,


#எலியின் பெயர்

சிகரி, ஆகு, இரும்பன்

#மூஞ்சூற்றின் பெயர்

சுவவு, சுண்டன், சுசுந்தரி


#காரெலியின் பெயர்

கருப்பை

#பெருச்சாளியின் பெயர்

களதம், துந்துளம், ஆகு, முடுடிகம், உந்துரு

#அணிலின் பெயர்


(ஹி...ஹி ஜில்லா விட்டு ஜில்லா வந்த அணில்)

வரிப்புறம், வெளில்

#உடும்பின் பெயர்

தடி, முசலி, கோதா,

#முயலின் பெயர்

சசம்

#பாம்பின் பெயர்

அரவு, கட்செவி, போகி, அகி, அரி, வியாளம், சர்ப்பம், உரகம், பன்னகம், நாகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பாந்தள், அங்கதம், பணி,

சாரைப்பாம்பின் பெயர்

அண்டம், இராசிலம்

மண்டலப் பாம்பின் பெயர்

கோளகல்

கண்குத்திப் பாம்பின் பெயர்

மாலுதானன்

பெரும்பாம்பின் பெயர்

மாசுணம், பாந்தள்

நாகத்தின் பெயர்

மூர்க்கன்

கருவழலைப் பாம்பின் பெயர்

இராசமாநாகம்

பறவை நாகத்தின் பெயர்

குக்குடசர்ப்பம்

பாம்பின் படத்தின் பெயர்

பணம், பை,

படப் பொறியின் பெயர்

உத்தி, துத்தி

பாம்பின் நச்சுப் பல்லின் பெயர்

தட்டம்

பாம்புயிர்ப்பின் பெயர்

அதட்டம்


#மயிலின் பெயர்

(அழகு மயிலாட  அபிநயங்கள் கூடும்)


சிகி, ஞமலி, தோகை, சிகாவளம், சிகண்டி, மஞ்ஞை, ஓகரம், மயூரம், பிணிமுகம், கலாபி, நவிரம், பீலி, கேகயம்

மயிற்பீலியின் பெயர்

சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, தோகை, தொங்கல், தூவி

மயிற்குரலின் பெயர்

அகவல், ஆலல், ஏங்கல்

இறகின் முள்ளின் பெயர்

முருந்து.

# அன்னத்தின் பொதுப்பெயர்


(அன்னமே மதுக்கிண்ணமே அவ்வ்)

எகினம், ஓதிமம், மராளம், விகங்கம், வக்கிராங்கம்


அன்னச்சிறகின் பெயர்

தூவி

* அன்னப்பறவை ,பாலும் ,நீரும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து பருகும் என சொல்லப்படுவதெல்லாம் ச்சும்மாச்சுக்கும் "கப்சா'அல்லது அப்படியான பறவை இல்லை,அழிந்து போயிருக்கலாம்,தற்சமயம் உள்ளதெல்லாம் "வாத்து"வகை அன்னங்களே.

#சாதகப்புள்ளின் பெயர்


(பாடும்வானம்பாடி...பாட வா நீ...)

சாரங்கம்,வானம்பாடி,சாதகப்பட்சி(பறவை),நெல்குருவி.

#எண்காற்புள்ளின் பெயர்.
(கிரீஷ்-4 இல் கிராபிக்ஸ் செய்தாலும் செய்வாங்க ...ஹி..ஹி)


சிம்புள், வாருண்டம், வருடை, சம்பரம், துரோணம், சரபம்,வெம்பறவை,கண்டப்புள், கண்டபேரண்டம், கருடப் பறவை ,இது ஒரு இதிகாசப்பறவை,இயல்பில் இல்லை.சிவன் சரபப்பறவை அவதாரம் எடுத்து நரசிம்மவதாரத்தை அடக்கினார் என புராணம் சொல்கிறது.

வெட்டுக்கிளிக்கும் இப்பெயர் உண்டு.


#கருடன் பெயர்


(கருடா சவுக்கியமா?)

கலுழன், வைனன், வைனதேயன், பன்னகவைரி, தார்க்கியன், பறவைவேந்தன், உவனம்


#கழுகின் பெயர்
(நீலகிரி "இரவுக்கழுகு"ஜீவில ரகசிய ரிப்போர்ட்டரா வேலை! அவ்வ்)

புண்டரம், கங்கம், எருவை, பவணை, உவணம், சகுந்தம்,

#பருந்தின் பெயர்


(பாறு-நீலகிரி வல்லூறு -Gyps indicus)

சேனம், பாரசிகை, பாறு, கங்கம்

# அசுணமாவின் பெயர்

கேகயம்(மயில் அல்லது பருந்து/வல்லூறு)

#கிளியின் பெயர்.


(பழம் கொடுத்து வளர்த்த கிளி கச்சேரிக்கு வருமா?)

சாரு, அரி, வன்னி, தத்தை, சுகம், கிள்ளை, கீரம், சுவாகதம், அவந்திகை

மலபார் நீலக்கிளி.
(மலபார் என்றாலே அழகு தான்...ஹி...ஹி)

#கருங்கிளியின் பெயர்

(கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..)

கீரம், கிள்ளை

#சக்கரவாகப்புள்ளின் பெயர்


(பறவையின் சிறகில் பாஸ்போர்ட் இல்லை ...)

நேமிப்புள், கோகம், யானைக்குருகு(பறக்கக்கூடிய அன்னமும் சக்ரவாகமே,நிலமுகி வகையே)


#நிலாமுகியின் பெயர்


(லக லக ....சந்திரமுகி!)

சகோரம்,அன்னம்,சக்கரவாகம்,(brahmany goose- swan)

#செம்போத்தின் பெயர்




குக்கில்

#குயிலின் பெயர்


(இந்திய பொது குயில்)

கோகிலம், களகண்டம், கோரகை, பிகம், பரபுட்டம்

கருங்குயில்.

(கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வரியா..வரியா)

மாங்குயில்.


(மாங்குயிலே ...பூங்குயிலே சேதி ஒன்னு கேளு..)


செண்பக்குயில்.

இந்தக்குயிலைத்தான் பூங்குயில்னு சொல்லுறாங்களோ?


(பூங்குயிலே பாட்டுஓன்னு பாடு)

#மைனாவின் பெயர்
(மஞ்சக்காட்டு "மைனர்"மைனா)

பூவை, சாரிகை,நாகணவாய்ப்புள்(மைனா.)

# கரிச்சான் குருவியின் பெயர்


வலியன்,கஞ்சனம், கிகினி, வயவன், கஞ்சரீடம், பாரத்துவாசம்,கரிக்குருவி,கரிச்சான்,கயவாய்,ஆனைச்சாத்து.

#காரிப்பிள்ளையின் பெயர்

வஞ்சுளன், வயவன், வயான்



#மீன்கொத்தியின் பெயர்(king fisher)


(மோர் கூட குடிக்காத என்ன பீர் பாட்டிலில் எதுக்குய்யா போட்டாங்க அவ்வ்)

கிச்சிலி,சிநல், கவுதம், பொன்வாய்ப்புள், தித்திரி


#ஆந்தையின் பெயர்.

இருடி, பிங்கலை, கின்னரம்

ஆந்தை எனப்பொதுவாக அழைக்கப்படுகிறது.

(இந்திய பொது ஆந்தை -bubo bengalensis)

மண்ணில் குழித்தோண்டி வலையமைத்து வாழும் ஆந்தை மண்ணாந்தை எனப்படும் அல்லது குழி ஆந்தை.

(நாங்க எவ்ளோ ஸ்மார்ட் ஆனால் மடத்தனத்துக்கு எவனோ மண்ணாந்தைனு சொல்லிட்டானே அவ்வ்)


#கோட்டான் பெயர்




கூகை, உலூகம், குடிஞை, குரால்

* கூகை,கோட்டான் இரண்டுமே நீண்ட ஒலி எழுப்பி "கூவும்- கூகை"ஆகும்,ஆனால் தலையில் கொம்பு போல (கொம்பு- கோடு) உள்ளது "கோட்டான் ஆகும்.

#கூகையின் பெயர்








பெரும்புள், கெளசிகம், ஊமன்

#கோழியின் பெயர்.


(கொண்டை சேவல் கூவக்கிளம்பிட்டார் ..இனிமே விடிஞ்சிடும் அவ்வ்)

குருகு, காலாயுதம், குக்குடம், ஆண்டலைப்புள், வாரணம்

#வரகுக்கோழி.

அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது.


(வறுத்து சாப்பிட்டே வரகுக்கோழியை காலிப்பண்ணிட்டாங்களே அவ்வ்)

#காட்டுக்கோழி.

சேவல்.
(கொக்கரக்கோ சேவல்)

பெண் காட்டுக்கோழி.


நீர்ச்சேவல்கோழி.

(தரைமேல் பிறக்க வைத்தான் தண்ணீரில் நடக்க விட்டான் அவ்வ்)

ஏசுக்கோழி:


(இலை மலர்ந்தால் ஈழம் வரைக்குமே நடப்பேன் அவ்வ்)


தாமரை இலைகளின் மேல் நடக்க வல்லது ,தொலைவில் இருந்து பார்க்கும் போது தண்ணீர் மேல் நடப்பது போல தெரிவதால் அபூர்வ சக்திக்கொண்டது என்ற பொருளில் "கிருத்து (அ) ஏசுக்கோழி என அழைப்பர்.

தாமரைக்கோழி எனப்பொதுவாக அழைக்கப்படுகிறது.

#ஊர்க்குருவியின் பெயர்


(சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?)


சிட்டுக்குருவி,குலிங்கம், சடகம், புலிங்கம்


நெற்குருவி:

(நல்லவேளை இன்னும் பிடி நெல் வரலை அவ்வ்)



#கானங்கோழியின் பெயர்.


(கண்ணியில சிக்காதய்யா காணாங்கோழி)

கலிங்கம், கம்புள்

#காடையின் பெயர்

(கடாய் ஃப்ரை காடைஇதானா அவ்வ்)

குறும்பூழ்.

#சிவலின்(ஒரு வகை கவுதாரி) பெயர்




கோரசம், புல், இதல்

#கவுதாரியின் பெயர்

சிரவம்,கதுவாலி,

#பகண்டையின் பெயர்


சில்லை,சிவப்புக்குருவி.

#பொய்யாப்புள்ளின் பெயர்
(எனக்கு பொய் சொல்லப்புடிக்காது அதனால தான் இன்னும் "பிலாக்"ஆரம்பிக்கலை அவ்வ்))

சலாங்கு,ஒரு வகை அன்னம்.(அ)நீர்க்கோழி.



#புறாப் பொதுப் பெயர்

தூதுணம், கபோதம், களரவம்

மரகதப்புறா(emerald dove)

(தமிழ்நாட்டின் "தேசிய பறவை")

#கரும்புறாவின் பெயர்

பாராவதம், கபோதம்


#மாடப்புறாவின் பெயர்


(மயக்கும் மாடப்புறா )

கன்மேய்வு, காளபதம்

#உள்ளான் பெயர்
(நெடுங்கால் உள்ளான்- பிரியாணி ரெடி)


(குட்டைக்கால் உள்ளான்-Common Sandpiper )
உள்ளல்

#தூக்கணங்குருவியின் பெயர்


(தூக்குனா குருவி ...எறக்குனா அருவி!)

சிதகம்

#சம்பங்கோழியின் பெயர்


கம்புள்,காட்டுக்கோழி,காட்டுகவுதாரி.


#நீர்வாழ் பறவையின் பொதுப்பெயர்

உன்னம், கிராமம், உற்குரோசம், கின்னரம்


#அன்றிலின் பெயர்


(ஒன்னு இங்கே இருக்கு ,இன்னொன்னு எங்க?)
கவுஞ்சம்

#கொக்கின் பொதுப்பெயர்

குரண்டம், வாலாகம், பகம்.


#கொய்யடி நாரையின்(grey heron) பெயர்




குருகு, வண்டானம்,சாம்பல் நாரை.

"வண்டானம்"என்ற ஊர் தூத்துக்குடி அருகே உள்ளது ,வண்டானம் உலகநாதப்பிள்ளை.சிதம்பரம் என்பதே "வ.உ.சி"யின் முழுப்பெயர். கடற்கரையோர ஊர் என்பதால் இவ்வகை நாரைகள் அங்கு நிறையக்காணப்பட்டதால் அவ்வூருக்கு பெயர் வதிருக்கலாமோ?

#பொருநாரையின்(greater adjutant- (Leptoptilos dubius) பெயர்


(பெரியண்ணன்)

பிதா, போதா

சிறு பொருநாரை-Lesser Adjutant (Leptoptilos javanicus)


(சின்ன தம்பி)

சிறு போதா, சிறு பிதா.

# பெரும் பூநாரை.(Greater Flamingo)




சிறு பூநாரை: Lesser Flamingo :





#செங்கால்நாரை.

 சங்கப்பாடலில் "நாரைவிடு தூது"ஆக பாடல்ப்பெற்றது செங்கால் நாரை. சத்திமுத்து  என்ற ஊரின் பெயரால் அறியப்படும் புலவர் ,தன் மனைவிக்கு தூதாக செங்கால் நாரையை அனுப்புவதாக பாடிய பாடல் புகழ்ப்பெற்ற ஒன்று.

"நாராய் நாராய் செங்கால் நாராய்


பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்

நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி

வடதிசைக்கேகுவீராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

"எங்கோன் மாறன்வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

இப்பாடலை தற்செயலாகக்கேட்ட பாண்டிய மன்னன் "வழுதி மாறன்"பரிசில் அளித்து ,புலவரின் துயர் துடைத்தானாம்.



(காம்ளான் குடிச்சு நானும் பூநாரை போல உசரமா ஆகிக்காட்டுறேன்)


purple heron- செந்நாரை.

(இது மேக்கப் இல்லிங்ணா எல்லாம் ஒரிஜினல்)

செந்நீலநாரை எனவும் அழைப்பதுண்டு.

#வெள்ளை நாரையின் பெயர்


(கிரேன் பாக்கு கம்பெனி ஓனர்)

சாரசம்

#கருநாரையின் பெயர்


(ஃபேர்&லவ்லி போட்டு நானும் வெள்ளையாகி காட்டுறேன்)

சிகரி


மடையான் -I(ndian Pond Heron )


 (எந்த மடையனோ எனக்கு போய் மடையானு பேரு வச்சிட்டனே ...அவன)

குருட்டு கொக்கு,குளக்கொக்கு.

#கரை கொக்கு.(reef heron)

(வளரும் கொக்கு இவன் அப்படியே சாப்பிடுவான் அவ்வ்)

#நீர்க்காக்கையின் பெயர்


(எவ்ளோ "தண்ணி"யிலும் தள்ளாடாத "தண்ணீர்"காகம்)

அர்க்கம், காரண்டம்

ஆலாப்பறவை(seagull)




கடல் புறா, வலசை பறவை.

#வண்டின் பெயர்

அரி, அளி, ஞிமிறு, மந்தி, அறுபதம், சிலீமுகம்,சஞ்சரிகம், சரகம், சஞ்சானிகம், சுரும்பு, கீடம், பிரமரம், மா, கீதம், பிருங்கம்,பிரசம், புள், புண்டரீகம், தும்பி, மதுபம்

பெண்வண்டின் பெயர்

கரும்புள், கேசவம், தேன்

ஆண்வண்டின் பெயர்

சுரும்பு, மதுகரம், தும்பி

#வீட்டு வவ்வால். பெயர்

ஆலாலம்,துருஞ்சில்.

#வாவலின் பெயர்(ஹி..ஹி வவ்வால்)


அஞ்சலிகை

.#கரையான்-ஈசல் பெயர்




ஈயல், மூதா,இந்திரகோபம்.

#தேனீயின் பெயர்

சரகம், பிரசம்

#சிள் விட்டின்(cricket) பெயர்




சிதடி, சில்லிகை, சில்லை, சிமிலி

#விட்டிற் பறவையின் பெயர்




சலபம், பதங்கம்,வெட்டுக்கிளி.


#விலாங்கின் பெயர்

பூழ்

#அளம்பின்(கொசு) பெயர்

நிலத்தி

#மின்மினியின் பெயர்

கச்சோதம்

#கொதுகின்(சிறு கொசு) பெயர்




கொசு,மசகம், துள்ளல், அசவல்,உலங்கு,ஒலுங்கு,சுள்ளான்,முஞல்,நுளம்பு.

#முதலையின் பெயர்



இடங்கர், சிஞ்சுமாரம், வள்மீன், கராம்

ஆண்முதலையின் பெயர்

சாரம்

#ஆமையின் பெயர்


(அரிய வகை கிரீன் ரிட்லி ஆமை)

கூர்மம், உறுப்படக்கி, கச்சபம், கமடம்

#பெண்ணாமையின் பெயர்

துளி

#விலாங்கின் பெயர்

நூறை

#கிளிஞ்சலின் பெயர்

ஏரல், எருந்து, ஊரல்

#இறால்மீனின் பெயர்

இறவு

#ஆரான்மீனின் பெயர்

ஆரல்

#கெண்டை மீனின் பெயர்

சபரம், சேல்

#நத்தையின் பெயர்

கருநந்து, நாகு

#அட்டையின் பெயர்

உரு

#மீன் பொதுப்பெயர்

மயிலை, மற்சம், பழல்

#பல்லியின் பெயர்

புள்ளி, கெவுளி, கோகிலம்

#நாகாவண்டின் பெயர்

நொள்ளை


#சிலந்தியின் பெயர்

,காலந்தி,உலூதை(எறும்புக்கும் இப்பெயருண்டு)

#எறும்பின் பெயர்

பிலஞ்சுலோபம், பிபீலிகை

#பூநாகம் பெயர்

நாங்கூழி

#செல்லின் பெயர்

சிதலை, கறையான்

#தேளின் பெயர்

நளிவிடம், தெறுக்கால், துட்டன், விருச்சிகம்,

#நண்டின் பெயர்


அலவன்,களவன், குளிரம், நள்ளி, கவைத்தாள், கர்க்கடகம்,வானரப்பகை,

#மரப்புழுவின் பெயர்

உசு,உளு(கொசுவுக்கும் இப்பெயர் உண்டு)

#தவளையின் பெயர்

மண்டூகம், தேரை, அரி, நுணலை, நீகம், பேகம்,

#புழுவின் பெயர்

கிருமி, பொட்டு

#புழுவின் பெயர்

கீடம்,,உலண்டு கோற்புழு

#மலைத்தேனியின் பெயர்

பிரசம்,கோற்றேன்,கோற்றேனி

#தேன்கூட்டின் பெயர்

இறால்.

#நாகத்தின் பெயர்

கரடம், வாயசம், அரிட்டம், கரும்பிள்ளை, கொடி,

------------------------------------------------

இதர உறுப்புகள் மற்றும் பண்புகளின் பெயர்:

விலங்கினாண்பெயர்

கடுவன், மா, ஒருத்தல், போத்து, கலை, தகர், களிறு, சே, பகடு, உம்பல், ஏறு, ஓரி

கடுவனென்னும் பெயர்

குரங்கு, பூஞை, இரண்டுக்குமாம்

மாவென்னும் பெயர்

யானை, பன்றி, புரவி

ஒருத்தலென்னும் பெயர்

கரடி, புல்வாய், மான், யானை, கவுரி, எருமை, பன்றி, புலி, மரை

போத்தென்னும் பெயர்

மரை, பசு, புலி, பூஞை, புல்வாய்

கலையென்னும் பெயர்

முசு, மான்

தகரென்னும் பெயர்

துரவாடு, வேழம், யாளி, சுறா

களிறென்னும் பெயர்

நரி, சுறவு, பன்றி

சேவென்னும் பெயர்

குதிரை, பெற்றம், புல்வாய்

பகடென்னும் பெயர்

எருமை, யானை, பெற்றம்

உம்பலென்னும் பெயர்

இபம்

ஏறென்னும் பெயர்

ஆன், எருமை, பன்றி, கவரி, சங்கு, மான், மரை, புல்வாய், சுறவு

ஓரியென்னும் பெயர்

நரி, முசு

விலங்கின் பெண்பாற்பெயர்

பிடி, பிணை, பெட்டை, மந்தி, பிணா, ஆ, நாகு, பாட்டி

பிடியென்னும் பெயர்

குஞ்சரம், கவரி, ஒட்டகம்,

பிணையென்னும் பெயர்

உழை, புல்வாய், நாய், வராகம்,

பெட்டை யென்னும் பெயர்

ஒட்டகம், கழுதை, வாசி, சிங்கம், மரை

மந்தியென்னும் பெயர்

முசு, ஊகம், குரங்கு

பிணாவென்னும் பெயர்

புல்வாய், நாய், பன்றி

ஆவென்னும் பெயர்

எருமை, பெற்றம், மரை

நாகென்னும் பெயர்

எருமை, மரை, பெற்றம், நீர்ச்சாதி

பாட்டியென்னும் பெயர்

நரி, பன்றி, நாய்

பிணாப்பெண்ணென்னும் பெயர்கள்

பெண்பாலெவற்றிற்குமாம்

விலங்கின் பிள்ளைப பெயர்

பறழ், பிள்ளை, குழலி, குட்டி, பார்ப்பு, குருளை, கன்று, மறி, போதகம்

பறழ் குருளை குட்டியென்னும் பெயர்கள்

புலி, முயல், வராகம், நரி, நாய்

பிள்ளை யென்னும் பெயர்

நாயொழிந்தவற்றிற்காம்

மறியென்னும் பெயர்

ஆடு, அழுங்கு, மான், குதிரை

பறழ், பிள்ளை, குழலி, குட்டி, பார்ப்பென்னும் பெயர்கள்

குரங்கு முதன் மரக்கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளைகட்காம்

கன்றென்னும் பெயர்

கடமை, மான், எருமை, பெற்றம், கவயம், ஒட்டகம், யானை, பரி, மரை, கராம், கவரி

குழலியென்னும் பெயர்

கடமை, மான், எருமை, யானை

போதகமென்னும் பெயர்

புலி, சிங்கம், யானை

பறழ் குட்டி பிள்ளை யென்னும் பெயர்கள்

கீரி, பூனை, முயல், அணில்

பறழ் குட்டி யென்னும் பெயர்கள்

பாக்கன், அணில்

பறழ் பிள்ளையென்னும் பெயர்கள்

பார்ப்பு, தவழ்சாதி

குருளைகன்றென்னும் பெயர்கள்

மான்

குழவிகுருளை யென்னும் பெயர்கள்

யாளி

குழலிகுருளை யென்னும் பெயர்கள்

முசு

விலங்கின் பொதுப்பெயர்

மா, மான், மிருகம், குரங்கு

விலங்கின் கூட்டத்தின் பெயர்

சாலம், வியூகம், யூதம், குலம், விருந்தம், கணம்

விலங்கின் வாலின் பெயர்

கூலம், வேசகம், தோகை, இலாங்கூலம், வாலதி

விலங்கின் வாற்கீழிடத்தின் பெயர்

வெருகம்

விலங்கின் கொம்பின் பெயர்

மருப்பு, சிருங்கம், கோடு, உலவை, விடாணம்

கொம்பில்லா விலங்கின் பெயர்

குமரம்

தோலின் பெயர்

கிருத்தி, புறணி, போர்வை, அதள், ஒலியல், தொக்கு, துருத்தி, சருமம், பச்சை, துவக்கு, உரி, வடகம்

ஊனின் பெயர்

தசை, புலால், புலவு, புண், தடி, புளிதம், தூ, பிசிதம், வள்ளுரம், விடக்கு

புலாலின் பெயர்

முடை, ஊழ்த்தல், பூதி, தசை

பசுவினிறைச்சியின் பெயர்

வள்ளுரம்

இரத்தத்தின் பெயர்

எருவை, நெய்த்தோர், சோரி, உதிரம், புண்ணீர், குருதி, செம்பால், புலானீர், சோணிதம், செந்நீர், சுடுவன்கறை

கொழுப்பின் பெயர்

நிணம், விளர், விழுக்கு

கருப்பத்தின் பெயர்

கரு, சினை, பீள், சூல், வயாவு

வழும்பின் பெயர்

வழுக்கு

ஈரலின் பெயர்

ஈருள்

முடையின் பெயர்

புலவு, ஊத்தை

மாசின் பெயர்

மலம்

உண்மாசின் பெயர்

உபமலம்


மயிலும் ஏழாலுமல்லனவாகிய புள்ளினாண்பெயர்

சேவல்

கோழி கூகைகளின் பெண் பெயர்

அளகு

பறவைப்பெண்ணின் பெயர்

பெடை, பெட்டை, பேடை

புட்பொதுவின் பெயர்

லிகங்கம், ஆசுகி, வீ, விகிரம், குடிஞை, பக்கி, சகுந்தம், பத்திரி, பதங்கம், பிணிமுகம், சுகம், பறவை, பதகம், போகில், குரீஇ, வயானம்

இறகின் பெயர்

சிறகு, சதனம், வாசம், சிறை, பிஞ்சம், கூரல், பக்கம், பறை, சதம், தூவி, தோகை, பத்திரம், குரல், கூழை, இறை

முட்டையின் பெயர்

அரிட்டம், கோசம், அண்டம், சினை

பறவைக் குஞ்சின் பெயர்

பிள்ளை, பார்ப்பு

பறவை மூக்கின் பெயர்

சுச்சு, சுவவு, துண்டம், அலகு

புட்சிறகடித்துப் புடைத்தலின் பெயர்

ஓசனித்தல்

புள்ளீட்டத்தினோசையின் பெயர்

துழனி

பறவைக் கூட்டத்தின் பெயர்

தொழுதி

மகாமீனின் பெயர்

கலை, சுறா, மீனேறு

பெருமீனின் பெயர்

யானை மீன், திமி

யானைமீனை விழுங்குமீனின் பெயர்

திமிங்கிலம்

திமிங்கிலத்தை விழுங்குமீனின் பெயர்

திமிங்கிலகிலம்

சங்கின் பெயர்

நந்து, சுத்தி, நாகு, வளை, கம்பு, கோடு, வாரணம், வண்டு, இடம்புரி, வெள்ளை

வலம்புரிச் சங்கின் பெயர்

கொக்கரை

சலஞ்சலத்தின் பெயர்

பணிலம்

இடம்புரி

இப்பியாயிரஞசூழ்ந்தது

வலம்புரி

இடம்புரிச் சங்காயிரஞ் சூழ்ந்தது

சஞ்சலம்

வலம்புரியாயிரஞ் சூழ்ந்தது

பாஞ்சசன்னியம்

சலஞ்சலங்களாயிரஞ் சூழ்ந்தது

-------------------------

தொடர்புடைய சில பழையப்பதிவுகள்:

வனவிலங்குகளின் அறிவியல்ப்பெயர்கள்-1

#அறிவியல்ப்பெயர்கள்-1

வன விலங்குகளின் அறிவியல்பெயர்கள்-2

#அறிவியல்ப்பெயர்கள்-2


காணாமல் போகும் நாட்டுக்காளைகள்.

#காளை-1

#காளை-2


-------------------------
பின்குறிப்பு;

#முடிந்த வரையில் படங்கள் இணைத்துள்ளேன், பிறப்படங்கள் கிடைப்பதைப்பொறுத்து  இணைக்கப்படும்.


# பிறகு பிழை திருத்தம் &விளக்கம், மேம்பாடு செய்யப்படும்.

# http://www.thamizham.net/pezhi/sangam/nikandu03-u8.htm

# http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0118.html

# பிடிஎஃப் கோப்பாக வேண்டுவோர் நூலகம் இணையத்தளத்தில் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம்.

http://noolaham.net/project/48/4782/4782.pdf

நன்றி!


தகவல் மற்றும் படங்கள்,

விக்கி & கூகிள் இணையத்தளங்கள்,நன்றி!
---------------------------------------------

Viewing all 110 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>